Monday, December 3, 2007

சர்வதேச ஊனமுற்றோர் தினம் .
----------------------------------------
ஒவ்வொரு நாளும் வியக்கிறேன்

உன் ஊனமுற்ற கால்களால்
தவழ்ந்து நீ நடப்பதை இங்கே

உடம்பில் ஊனமானாலும்
கவலையின்றிதைரியமாக
உன் பணியை செய்யும் நீ எங்கே??
அனைத்துமிருந்தும் குறைபடும் நான் எங்கே?

ஊனமுற்றவர்க்கு இரக்கம் மட்டும் படாமல்
அவர்தம் தேவையை சரிசெய்வதும் எம்பங்கே!!

எதுலும் குறை குற்றம் பார்ப்போர் இவரிடம்
நமக்கிடைத்த ஆசீர்வாதத்தை உணர முடியும் அங்கே

ஊனம் என்பது உடம்பில் மட்டும் இல்லை
மனதில் இருந்தால் அதுதான் பெரும் தொல்லை
பெரியோர் அனுபவத்தில் தந்திட்ட ஒவ்வொரு சொல்லை
மனிதநேயம் கொண்டு வாழும் வாழ்க்கையே இன்பத்தின் எல்லை!
யுத்தம் எமது வருத்தம்!
=====================
நித்தம் ஒரு போராட்டம்,

புத்தம் புது பிரச்சனைகள்,
சத்தமில்லா அழுகைகள்,
ரத்தம் உறையும் காட்சிகள்,
இத்தனையும் இனிய இலங்கையிலே..

பெத்தவர் ஒருபக்கம் வருந்திடவே,
மத்தவர் உறவினரானாராம்,
எத்தனை வசதிகள் வெளிநாட்டிலிருந்தும்,
அத்தனை தாய் மண்ணுக்கீடாகுமா?

பெற்றுக்கொண்டது போதாதென்போர்,
செத்துப்பிழைத்த அவரிடமிருந்து,
ஒத்துக்கொள்வோம் அவர் வாழ்க்கை கடினத்தை..
கத்துக்கொள்வோம் வாழ்க்கை பயணத்தை!..

---------சமர்ப்பணம் என் இனிய இலங்கைத்தமிழ் தோழர்,தோழியருக்கு!.
வெட்கி வேதனைப்பட்டு அவர் வலியுணர்கிறேன். =========================================
படிப்பை பற்றி பேசிய போது தம்பி வெட்கப்பட,.

ரொம்ப வெட்கப்படாதே பின் அழைத்துச்செல்வர்
கூத்தாண்டவர் கோவிலுக்கே கூவாகத்திருவிழாவுக்கு
என நான் கூற அவன் சிரிக்க !ஒரு கணம் எனை மறந்தேன்.

பின்னிரவு தான் வலியுணர்ந்தேன் தூக்கமின்றி..
நகைச்சுவை என நினைத்து பேசிடலாம் அச்சமின்றி.
வெளிநாட்டில் எவரும் அவரை நினைப்பதில்லை துச்சமாக
நானோ என் பிள்ளையோ பிறந்துணர்ந்திருக்கலாம் மிச்சத்தை.
எவர் உறைப்பர் அவர் சலுகை, தேவை, துயரத்தின் உச்சத்தை???
மன்னிப்பாயா கடவுளே?. இவ்வாழ்க்கையில் நீர் எனக்களித்த பிச்சையை!!!..

இக்கவிதை அத்தோழர்களுக்கு சமர்ப்பணம்.
நட்பு புரிந்தும் புரியாத போது..
=========================
அன்பாய் சில நேரம், நகைச்சுவையாய் பல விஷயம்,

அதிகாரமாய் விவாதிப்பு,இவற்றில் தெரியாத உன் நட்பு,
அதிக காரமாய் உன் கோபத்தில் ஆழமாய் தெரிகிறதே!.
வியக்கிறேன் நான்...

அருகிருந்தும் , அடிக்கடி பேசிக்கொண்டும்,
அடிவிழாத குறையாக உளரும்போதும் தேடாத என் நட்பு,
உன் பிரிவில் தேடுகிறதே !. உன் நலம் பற்றி எண்ணுகிறதே!
வியக்கிறாய் நீ..

நல்ல நட்பில் புரிதல் இல்லையெனின், பிரிதல் நலம் என நீ நினைத்தாய்..

நல்ல நட்பு பிரிந்தாலும், புரிதல் தரும், தூய்மையான அன்பு, என்கிறேன் நான்.
--
கடைக்குட்டியின் கதை (3) - இதென்ன புது சோதனை!! ==============================================
மருத்துவரை சந்திக்க கேள்விகளோடு மகன் கிளம்ப

35 வயதுக்குமேல் குழந்தைபேறுக்கு பரிசோதனை பரிந்துறைக்க
( டொளன் சிண்ட்ரோம் பரிசோதனை )
உருவமில்லாத கருவாயினும் உணர்ச்சியுண்டு என நான் மறுக்க,
மூளை வளர்ச்சி குறைய வாய்ப்பதிகமென மருத்துவர் விளக்க,
எதுவாயினும் படைப்பவன் தருவான் அதற்கான தெம்பு என முடித்தேன்..

மிகுந்த உற்சாகமாய் வந்த கணவரும் மகனும் கலக்கமாய்,
கலகலப்பை தொலைத்துவிட்டு கலங்கிய கண்களுமாய்,
அட! இது ஒரு சின்ன விஷயம் இது வேதனையா?
நம் கடவுள் நம்பிக்கைக்கு வந்த சோதனை மட்டுமே என அவர்களை திருப்திபடுத்தி முடித்துவிட்டாலும், என் குழப்பம் ஆரம்பித்தது..

RH -ve , ஜெஸ்டேஷனல் டயாப்டீஸ், அதிக வயது,வேலைப்பழுவின் சுமை என பலவிருந்தாலும், வயற்றில் ஒரு அதிசய சுமை, ஆனந்தப்பட்டேன். அம்மாமேல் கை போட்டு ,கால் போட்டு கோழிக்குஞ்சாய் தூங்கும் மகன், தனியே எனை படுக்கவிட்டு அன்று முதல் தனிமையிலவன்,
அவன் நினைப்பில் ,அரவணைப்பின்றி தூக்கத்தை நான் தொலைத்தேன்.

------------மருத்துவ பரிசோதனை பற்றி தவரேதும் இல்லை.. எனக்கு அந்த கருவில் ஊசியை செலுத்தி அதனை வலிக்கச்செய்வதற்கு பதில் ஆயுசுக்கும் மன வளர்ச்சி குன்றிய குழந்தையை வளர்த்துக்கொள்ளலாம் என்பது என் எண்ணம்....
----------உங்கள் எண்ணங்களை வரவேற்கிறேன்,..............
தாய்லாந்தில் கார்த்திகை - (லாய் க்ரதோங்-loy kratong)
லாய் க்ரதோங் ஒரு முக்கியமான திருவிழா .வருடாவருடம் , பன்னிரண்டாம் மாதம் முழு நிலவன்று கொண்டாடுவர்.
அந்திசாயும் வேளையில் அனைத்து மக்களும் க்ரதங்கை யும், அதில் மெழுகுவத்தியும், ஊது பத்தியும் மலர்களால் அலங்கரித்து, மனதில் வேண்டுதலுடன் அதை ஆறு, அல்லது, குழம், இவற்றில் பணம் வைத்து விட்டு ,விட்டு வருவர்... லாய் க்ரதோங் - என்றால் , லாய் - மிதப்பது ..க்ரதோங் - வாழை இலையால் தாமரை வடிவில் செய்யப்பட்டது.
கேள்வியும் பதிலும்..
================
தினம் ஒரு கனவு!. வேளைக்கொரு கேள்வி!.

இரவு படுக்குமுன் பரமனிடம், சில பல்லவி!

வீட்டை அலங்கரிக்க , கைவளை ,கால்கொலுசு பூட்ட,
பூச்சூட ஒரு பெண் தேவதை கேட்டு நான் மன்றாட!,

கிரிக்கெட், கால்பந்து, விளையாட ,சண்டைபோட ,
நீச்சலடிக்க அம்மாவிடம் கலாட்டா பண்ண தம்பியை அவன் கேட்க!,

மன்றாடி முடிந்ததும் சந்தேகமாய் கேட்கிறானய்யா ஒரு கேள்வி.?..
இருவர் ஜெபத்திலும் இறைவன் யாருக்கு சாய்ப்பான் செவி?
மடியில் அமர்த்தி குழந்தையிடம் தான் கேட்பான் இறைவன் முதலில்...!!

அப்படியென்றால் வீணாக நீங்கள் வேண்டாது,
கலராக குழந்தை கேளுங்கள் , நான் கறுப்பென
பள்ளியில் பட்ட கஷ்டம் தம்பி பட வேண்டாமே
என மடக்குகின்றான் என் பதிலில்..!!

பெற்றோரைவிட படைத்தவனையே நம்பு ஜெபம் மூலம், என் வளர்த்துவிட்டேனே கடவுளே பதில் உண்டு உன்னிடம்..

என உறங்கச்செல்கையில் அம்மா பிளீஸ் இன்னொரு கேள்வி?
தம்பிவந்ததும் யாரை துளியாவது அதிகம் நேசிப்பீர்கள்?
குழந்தைக்கே ஏன் நமக்கும் இன்றும் அன்பில் உள்ள போட்டி குணம்..

நீதானடா செல்லம், என இப்போதைக்கு சொல்லி வைத்தேன்,
கடைக்குட்டி விவரம் அறிந்து இக்கேள்வியை கேட்கும் வரை...

-------முதல் குழந்தையின் கேள்விகளுக்கு விடை சரியா?., அல்லது, நீங்கள் என்ன சொல்லியிருப்பீர்கள் சொல்லுங்கள்,

Tuesday, November 6, 2007








கடைக்குட்டியின் கதை- பாகம் 1

-------------------------------------------

உதித்த அதிசயம்..

===============

பத்து வருடம் கழித்து,

பத்து மாதம் குடியிருக்க,

தவப்புதல்வனாம் தலைமகனின்,

இரண்டு வருட பிரார்த்தனைக்குபின்,

வேண்டுதலோடு ,அவதரித்தாய்..


பத்துமாதமென்ன பத்துவருடமாயினும்,

பத்திரமாய் தாங்கியிருப்பேன்!

.தலைக்குழந்தை கருவுற்றால்கணவரே தாயுமாவார்; புதிதல்ல!.

ஆனால் தம்பி வருவான் என்ற நம்பிக்கையில்,

என் தங்கமகன் நீயே எனக்கு தகப்பனானாய்.


அம்மா மருந்தெடுத்தீங்களா என ஒரு கண்டிப்பு!.

இனிப்பு சேக்காதீங்க டாக்டரிடம் சொல்வேன் என புன்சிரிப்பு!.

தம்பியோ?,தங்கையோ? பத்திரமாய் வரணும் என பரிதவிப்பு!.

அவன் அன்புத்தொல்லை தாங்கமுடியாத ஒரு பாதுகாப்பு!..


----------- தொடரும்..

search engine









யாரிவள்????????

===============
ஒவ்வொரு நாளும் உனை பார்க்காமல் கழியாது.

எனக்கு ஒரு சந்தேகமா , குழப்பமா நீ இருப்பாய்.

வேலை பல இருந்தாலும், உன், நினைப்பு நீங்காது

கவலையோடு வந்தால் நொடிப்பொழிதில் செய்துகுடுப்பாய்..

என் புகழ் அனைத்தும் உன்னையே சேரும்.

உன்னைவிட்டு என்னால் இருக்கவே முடியாது....

ஆனால் உனக்கது பற்றி கவலையில்லை!.









தீபாவளி வெடிகள்!!!

=================
பென்சில் வெடியில் ஆரம்பித்து, சண்டையும் சரமாய் வெடித்துவிட்டது..

விருட்டென்று அலுவல் சென்றுவிட்டார் தடித்த வார்த்தையுடன்,

தனியே இவளும், அணுகுண்டாய் குமுறினாள், கடிதத்தில் திட்டிதீர்த்தாள்.

பேசவோ, அழவோ கூடாது இனி என வீராப்பு , வெறுப்புடன்,

உண்ணாமல் உறங்காமல் தரைசக்கரமாய் தன்னையே தண்டித்தாள்.


மாலைதிரும்பினார் வெடிக்காத புஸ்வானம் போல் காட்டிக்கொண்டு,

அழக்கூடாதுன்னு நினைக்கும்போதே வருது கண்ணீர் முட்டிக்கொண்டு,
பரிமார விடாது கைபற்றினார் முகம் பார்த்துக்கொண்டு.

ஒத்திகையனைத்தும் வீணாகுது மனம் இழக்கம்கொண்டு.


ஏறுவானேன் பின் இறங்குவானேன் ?.. என்னால் முடியாது

என முறைத்தாள் கடிந்துகொண்டு.

அதுதான் பெண்ணே உன் கவர்ச்சி , போற்றினான்

கண்களால் மன்னிப்பு கேட்டுக்கொண்டு...


கடிதத்தை வாசித்து உன் அன்னைக்கு இதை அனுப்பவா??

என விளையாடினான் சிரித்துக்கொண்டு...

ஐயோ வேண்டாம் ! தடுத்த இரும்புக் கரங்களை

பிடித்துக் கெஞ்சினாள் மன்றாடிக்கொண்டு!!


வரட்டு கவுரவம், வீராப்பு தோல்வியோடு ராக்கெட்டாய்

வெளியேறியது பயந்துகொண்டு...

ஜெயித்தது நானே என காதல் மத்தாப்பாய்

சிதறியது வெட்கிக்கொண்டு.!








யாரிவன்???.
===========


மாட்டிக்கொண்டேன், இன்று..வசமாக..
பெரிய அழகனாயிருந்தாலும் என் கவலை அதுவல்ல.


உன் பார்வை சரியில்லை என்று எத்தனை நாள் விலகி சென்றேன்...
நீ இருக்கும் திசை கூட வரமாட்டேனே!.


எல்லாருக்கும் உன்னை பத்தி தெரியும்..

ஆனால் அவர்களுக்கு உன்னைப்பற்றி கவலையில்லை.


நீயும் அவர்களிடம் நல்லவன்போல் பாசாங்கு செய்கிராய்..

அவர்களுக்கு உறுதுணையாகி விடுகிறாய் சில சமயம்..


என்னை அப்படி முறைத்து பார்க்காதே!..

தாங்க முடியாது அழுதுவிடுவேன், அசிங்கமாயிருக்கும்!.


நான் போகும் பாதை குறுக்கே நின்று என்ன விளையாட்டிது?

இன்று ஒரு நாள் மட்டும் வழி விட்டு விலகிவிடு,


உனக்கு இன்று வேலையில்லை என்றால் எனக்கென்ன?

என்க்கு அலுவல் செல்ல வேண்டும் புரிந்துகொள்!...









பெத்த கடன்.


உன் பிஞ்சு பாதம் பட்டு என் நெஞ்சு நிறைந்தது அன்று.
என் அஞ்சு பேரப்பிள்ளைகளின் பாதம் வேண்டி நெஞ்சு வலிக்குது இன்று.
என் கல்லறையிலாவது வந்து ஏறிவிளையாடச் சொல்,காத்திருப்பேன் என்றும்!.

Wednesday, October 31, 2007





மீண்டும் மீண்டும்!!!

=================


தென்றலாய் நுழைந்து ,

மண்வாசனை முகர்ந்து ,

குயில்களின் ஓசை பிடித்து ,

மர இலைகள் சலசலத்து,

தூரலில் ஆரம்பித்து,

வேகமெடுத்து புயலாய் மாறி,

சுனாமியாய் அனைத்தையும் எடுத்துச்சென்றாய் ,

படிப்பினை விட்டுச்சென்றாய்!!.


எல்லாம் முடிந்தது என்றிருந்த வேளையில்,

மீண்டும் தென்றலா????????
இது வரமா ? சாபமா?.

கெடுப்பினையா? கொடுப்பினையா?


இல்லையில்லை இதுதான் வாழ்க்கை!......

Friday, October 12, 2007





கல்லைக் கண்டா....................!!!!


காதலித்தபோது வேலையைக் காணோம்.

வேலைகிடைத்தபோது காதலியைக் காணோம்.!


குழந்தை கொஞ்ச நேரம் காணோம்.

வளர்ந்தான் அவனும் நேசம் காணோம்!


உறவினர் மகிழ செல்வம் காணோம்

செல்வம் வந்ததும் உறவுகள் காணோம்!


இளமையில் விவேகம் பொறுமை காணோம்

முதுமையில் வேகம் உடல்நலம் காணோம்!


வாழ்க்கையில் எப்போதும் ஏதாவது காணோம்

இழந்ததை நினைத்தால் இன்பத்தை காணோம்!

Tuesday, October 2, 2007






ஒரு வாழ்க்கை!

=============
ஒரு பாடல் மனதை ஆறுதல்படுத்தும்!.

ஒரு நட்ஷத்திரம் கப்பலை வழிநடத்தும்!

ஒரு மரம் தான் தோப்புக்கு வழிவகுக்கும்!.


ஒரு புன்னகை நட்பை ஆரம்பிக்கும்!.

ஒரு வார்த்தை அதை ஆழ்ப்படுத்தும்!.

ஒரு ஓட்டு நாட்டின் தலைவரை தேர்ந்தெடுக்கும்!.


ஒரு சூரியக்கதிர், உலகையே வெளிச்சமாக்கும்!

ஒரு மெழுகுவத்தி வீட்டின் இருளை நீக்கும்!.

ஒரு எட்டு தான் பயணத்தை தொடங்கும்!.


ஒரு சிரிப்பு சோகத்தையே கலைக்கும்!

ஒரு நம்பிக்கை வாழ்வையே வழிநடத்தும்!.


ஆகையால்,

உனக்கு ஒரு வாழ்க்கை கிடைத்திருக்கு,

அதனை நன்றாக அமைக்க ஒரு மனதுமிருக்கு!.

பிரச்சனை, கவலையை ஓரமாக ஒதுக்கிவிடு!

ஒரு நிமிடம், ஒரு நொடி என் வாழ்ந்துவிடு!

Monday, September 24, 2007



காலமெல்லாம் காத்திருப்பு ..
=======================

பத்து மாதம் முடிந்த பின்னும் வெளிவர காத்திருந்தாள்.
பெண் என் தெரிந்ததும் அரளிக்கு காத்திருந்தாள்.

தம்பியுடன் பள்ளி செல்ல தவமாய் காத்திருந்தாள்.
கேள்வி ஞானம் மூலமாய் அறிவுபெற காத்திருந்தாள்.

பிஞ்சான பூ பின் கனியாக காத்திருந்தாள்.
கனியான்பின் திரு மணமாக காத்திருந்தாள்.

ஊரார் குறை சொல்ல தாயாக காத்திருந்தாள்.
பிரசவ வலியிலும் குழந்தை கொஞ்ச காத்திருந்தாள்.

விட்டுச் சென்ற மாமன் வீடு திரும்ப காத்திருந்தாள்.
கஷ்டப்பட்டு வளர்த்த மகன் சிறப்பு பெற காத்திருந்தாள்.

அயல்நாடு தொலைபேசி அழைப்புக்கு காத்திருந்தாள்.
பேரப்பிள்ளை விளையாட ஊஞ்சலோடு காத்திருந்தாள்.

மகளாகி, தமக்கயாகி ,தாரமாகி, தாயுமாகி, காத்திருந்தவள்,
பாட்டியாகி தள்ளாத வயதினிலே கண்மூட காத்திருக்கிறாள்.


இணையத்து மாமா!.......
===================

அம்மா அடித்தால் அரவணைத்துக் கதை சொல்ல பாட்டி இல்லை
அப்பாவின் கோபத்தை தடுத்து சிரிப்பூட்ட செல்ல தாத்தா இல்லை

விதவிதமாய் சமைத்து ஒளித்து தர அத்தை இல்லை!
வித்தைகள் வாழ்க்கை முறை கத்துத்தர மாமன் இல்லை!

அன்போடு வீட்டுப்பாடம் சொல்லித்தர அக்கா இல்லை!
அடிச்சுப் பிடிச்சு பங்கு போட விளையாட அண்ணன் இல்லை!

ஊசிபோட்டால் வலிக்காது கண்ணுனு சொல்ல சித்தி இல்லை!
வலித்தாலும் ஆண்பிள்ளை அழாது ராசானு சொல்ல சித்தப்பா இல்லை!

விடுமுறை விட்டதும் காத்திருந்து தூக்கிச் செல்ல பெரியம்மா இல்லை!வயல்வெளி வாய்க்காலில் மீன் பிடிக்க கத்துதர பெரியப்பா இல்லை! ..

நீச்சல், சைக்கிள், தமிழ் சொல்லித்தர தமிழ் நண்பன் இல்லை!
மொத்தத்தில் இருப்பதுபோலிருந்தாலும் அன்பு செலுத்த ஆளிங்கில்லை!.

அம்மா சொன்னாள் கவலைப்படாதே எல்லோத்துக்கும் சேர்த்து இருக்கிறான்யா உன் இணையத்து மாமன்,ஈடிணையின்றியே!.

-------------------------------------------------------------..

என் இணைய சகோதரர்களுக்கு இக்கவி சமர்ப்பணம்.!

Friday, September 21, 2007












ஆயுள் கைதி
============

முகம் பார்த்தாய் முன்னரிவிப்பின்றி.!!
மனதில் நுழைந்தாய் அனுமதியின்றி !!
திருடியும் சென்றாய் மறுப்புமின்றி. !!
வாடிக்கொண்டிருக்கிறேன் பசியுமின்றி !!

விழித்திருக்கிறேன் தூக்கமின்றி !!
காத்திருக்கிறேன் பதிலின்றி. !!
கைதுசெய்வேன் கேள்வியின்றி. !!
மணமுடிப்பேன் பிரச்சனையின்றி.!!!!!

ஆயுளுக்கும் என் அன்பில் திணறி,
மாட்டிக்கொள்வாய் விடுதலையின்றி.!!!!!






எது அழகு.
=========

முற்றம் தொழிக்கும் முத்தம்மா
முகத்தின் வியற்வை அழகம்மா.!

செருப்பு தைக்கும் சின்னப்பா,
சிரிப்பே உனக்கும் அழகப்பா !.

கோவில் சுத்தம் செய்பவரும்,
நாவில் நல்லவை சொல்பவரும்,

செல்வம் செழிக்க இருந்தாலும்,
செழிப்பாய் பகிர்ந்து கொள்பவரும்,

இல்லை என சொல்லாத அன்னையரும்,
கல்வி கருமமாய் தந்த ஆசானும்,
பல்லை கடித்து பணம் சேர்த்து,
பாதுகாக்கும் தந்தையரும்,

விலை மாதுவை காப்பாற்ற,
விலை கொடுக்கும் உடன்பிறப்பும்,

எப்படி வியப்பேன் இந்த அழகை?.
செப்படி தோழி நீ புரிந்தால்.!

புர அழகை பார்ப்பவர் மட்டும்
மறந்தும் அழகாக முடியாது.

பார்ப்பவர் உள்ளத்தில் உள்ளதே,தவிர,
காண்பவர் கண்ணில் வெறும் மாயையடி.!
நெருங்காதே தோழி....( தோழனே! )
==============================

சாதி, சமயம், அந்தஸ்து
பார்த்து பழகும் மனிதருக்கிடையில்,
கோழ் சொல்லும் வீணருக்கிடையில்,
என்ன வேலை என்ன சம்பளம்,
என்ன கார், என்ன வீடு,
என்று ஆராயும் பண்பற்றவரிடமிருந்து,
வித்தியாசமாக, தவமின்றி கிடைத்தாய்
என் தாயான உயிர் தோழி ...( தோழா! )

என் வெற்றிகளை, பாராட்டுகளை,
ஏற்றுக்கொள்ள பலருண்டு.
என் சந்தோக்ஷத்தை பகிர்ந்துகொள்ள,
எனக்கொரு கூடுமுண்டு.
என்னை விமர்சிக்க, சோதிக்க
எனை சுற்றி கூட்டமுண்டு,
கூட இருந்து குழிபரித்த நண்பர்,
என நினைத்த நயவஞ்சகர்கள்,
நாடாமலே இங்குண்டு.

ஆனால் என் கஷ்டங்கள், தோல்விகள்,
பிரச்சனைகள், எதனையும் பகிர்ந்து கொள்ளாமலே,
பார்த்த மாத்திரத்தில் புரிந்து கொண்டு,
அன்னமாய் எனை அணைத்தாய் அன்புத் தோழி ...( தோழா! )

ஆசான் , பெற்றோர் கற்றுத்தராததை,
கடல் கடந்த வாழ்வு கற்றுத்தந்தது. பசுமரத்தாணியான மனது,பல விஷயம் புரிந்த போது பாராங்கல்லாகிப்போனது.
பல கஷ்டம் பார்த்த பலமான மனது,உன்னை சில நிமிடம் பார்த்ததும் பலவீனமடைகிறது.
சவால்களை எதிர் நோக்கியிருக்கும் எனக்கு,

உன் கருணையை பாரட்ட முடியாமல்
உன் அன்பை ஏற்க முடியாமல் ,
நீ காயப்படுவாயோ என் கவலைபடுகிறது.

தலைப்பிரசவமும், அடுத்து வந்த
தனிப்பிரசவமும் , கொடுக்காத
வலியையும், கண்ணீரையும்,
என்றோ ஒரு நாள் நடக்கப் போகும்
உன் பிரிவு பற்றி நினைத்த மாத்திரத்தில் கொடுக்கிறதே.

ஆகையால் என் அருமைத் தோழி ,( தோழா! )
என்னை நெருங்காதே.... உன் அன்பால் என்னைக் கொல்லாதே!! கோழையாக்காதே.!!!!!
என்னை விட்டு விலகி நில்.
நான் இப்படியே இருந்து விடுகிறேன்...







நடிப்பு
======

உன்னை நான் வெறுப்பதுபோல் நடிக்கிறேன்.
என்னை நீ அப்படியாவது வெறுக்க வேண்டும்.

வெறுத்து நல்ல கவி படைப்பாய்,
காதல் மறந்து அறிவை பெருக்குவாய்,
கனவினின்று விழித்தெழுவாய்.,
நிழலிலிருந்து நிஜமுணர்வாய்.,
நீ வாழ்ந்து பிறரை வாழ வைப்பாய்.

என்னுள் இன்னும் காதல் இருந்தாலும்,
நீ வாழ்க்கையை காதலிக்கும் வரை ,
என் வாழ்வில் இந்த காதலை ,
நடிப்பேன் வெறுப்பது போல்..

என்னால் உன்னை ஒரு குழந்தை போல் ஆக்கி,
என்பின்னால் ஓடி வர செய்ய முடியும்.
அதுவா காதல்?, வேண்டாம் எனக்கு அது !

உன்னை ஒரு வீரனாக்கி உன்
பின்னால் உலகம் ஓடி வரச்செய்வேன்.
அதுதான் என் காதலின் வெற்றி.

அப்போது நீ சொல்வாய், என் வெற்றிக்குப் பின்னால்
ஒரு பெண்ணின் வெறுப்பு இருந்தது என்று.
சிரித்துக் கொள்வேன், இல்லையடா, அதுஎன் காதல் என்று.

சிலருக்கு காதல் வெறும் நடிப்பு, விளையாட்டு,
எனக்கோ உன்னிடம் நடிப்பதே காதல்.

புரிந்து கொள்ள வேண்டாம் நீ,
புரிந்தால் தோற்று விடுவோம் நாம்!

இந்த சுகமான வலி மட்டும் போதும்,
என் நடிப்புக்கு பரிசாக........








தாய்மை


========



பள்ளி திரும்பிய மகனிடம் கேட்டேன்,
இன்று எப்படி என்று?


not bad என்றான்.
விளயாட்டு?



interesting என்றான்.
படிப்பு ?



so boring என்றான்.
வந்தது எரிச்சல் அடக்கிக் கொண்டேன்.



நண்பர் ?.
oh shit என்றான்.



விட்டேன் ஒர் அரை.
அம்மா என்றான்.



அணைத்துக் கொண்டேன் ,
மகனயும், மொழியையும் சேர்த்து ,
தாயல்லவா அவள்.





















காட்டிக் கொடுக்கும் கண்கள்!
==========================

எனக்கு உன் மேல் அன்பு இல்லை
என ஆயிரம் முறை கை எழுதினாலும்,

உன்னிடம் காதல் இல்லை
என உதடுகள் மறுதலித்தாலும்,

கனவிலும் உன்னை பார்ப்பதை தவிர்ப்பேன்,
காட்டிக் கொடுக்கும் என் கண்கள்
காலமெலாம் என்னிடம் இருக்கும் வரை..






கவலைப்படாதே சகோதரா.!!
==========================

ம்மா செய்த இனிப்புகளை ,
சையுடன் எடுத்து வந்து,

டைவெளியின்றி சாப்பிட்டு,
டிணையின்றி ருசித்துவிட்டு,

வகையோடு சவாலயும்,
ரார் வியக்கச் செய்திடலாம்.

ண்ணம் எதிலும் உண்பதிலே,
ற்றம் கொண்டு ருசிப்பதிலே,

யம் இதிலே எதற்காக,

ல்லிபிச்சாண்டி சொல்லாமல்,
டிடுவான் பயம் கொள்ளாமல்,

வை கூட அசந்திடுவாள்,
தே குண்டாய் ஆனதற்கு.!!!!!


காதல் விடுதலை.

================

காத்திருக்க வேண்டாம்,

காசு செலவழிக்க வேண்டாம்,

பாடல் கேட்க வேண்டாம்,

பாத்துருக வேண்டாம்,

வேலை ஒழுங்கா நடக்கும்,

இனி வேஷம் தேவை இல்லை..

நண்பர் குழுவில் கலந்தே,

சில நல்ல விஷயம் அறிவேன்.

மறந்து போன உறவுகளை,

மனதில் மீண்டும் சுமப்பேன்.

என்னாச்சுன்னு யோசிக்கிறீங்க!.

எதுக்காச்சுன்னு பேசிக்கிறீங்க!.

ஒண்ணுமில்ல காதல் முடிஞ்சிருச்சி!.

ஒருவழியா விடுதலை கிடைச்சாச்சு!..

Thursday, September 20, 2007

Wednesday, September 19, 2007

புன்னகையே உன் விலை என்ன?