Wednesday, April 27, 2011

ஏழை என்ற இளக்காரம்?.

http://timesofindia.indiatimes.com/city/chennai/Chennai-school-urges-parents-to-protest-against-RTE/articleshow/8085252.cms

மேலே உள்ள சுட்டியில் ஏழைகள் வசதியான பள்ளியில் ஒதுக்கீடு முறையில் கல்வி கற்கும் உரிமையை மறுக்க ஒரு பள்ளி அழைப்பதாக செய்தி..

Admitting poor students may bring down discipline and the quality of education and also demoralize teachers, says Sri Sankara Senior Secondary School.


ஏழைகள் எல்லாரும் மொத்தமா நாடு முழுக்க வேலை நிறுத்தம் செய்தா என்னய்யா பண்ணுவீங்க?.. முட்டாள்கள்.

ஏழை என்றால் ஒழுக்கமில்லைனு உங்களுக்கு யார் சொல்லித்தந்தா.?

In a circular issued to students by the Adyar-based school, principal Subala Ananthanarayanan has linked a student's performance to his/her economic status and asked parents to protest against the Right To Education Act.

ஒழுக்கத்த சொல்லித்தரவேண்டிய உங்ககிட்டயே ஒழுக்கமில்லையே..

வன்மையாக கண்டிக்கத்தக்கது..

எத்தனை துணிவு..?.. இதை சொல்ல?..

டிசிப்பிளீன் னா எது?,.. இந்த இங்கிலிபீசுல கெட்ட வார்த்தை பேசிட்டு அது சரின்னு அர்த்தம் சொல்ற கேவலமா?..

இல்ல பெரிய படிப்பு படிச்சுட்டு வொயிட்காலர் பிராடுதனம் , லாபியிங் பணறதா?..
குடிச்சுட்டு வேகமா கார் ஓட்டி பாதசாரிகளை கொல்வதா?.. ஈவ் டீஸிங் செய்து தற்கொலைக்கு தூண்டுவதா?.. எழுத்தில் விபச்சாரம் செய்வதா?..ரேகிங் ல் மாணவனை துண்டு துண்டாக வெட்டுவதா?.. நீதிக்கு 15 வருடம் காத்திருக்க வைப்பதா?.. எதை சொல்லுவோம் டிசிப்ளின் என.?..



ஆமா அது தெரியாதுதான் ஏழைகளுக்கு.

"All this will make all schools perform exactly like government schools in quality and discipline. //

குவாலிட்டியா?.. மாநில ரேங்க் எடுக்குது அரசு பள்ளிகள்..

(http://www.dinamalar.com/News_detail.asp?Id=19020, http://www.dinamalar.com/news_detail.asp?Id=215485 : குரோம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பிரின்டிங் டெக்னாலஜி, மருத்துவ ஆய்வகம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் மாநில அளவில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது,http://article.wn.com/view/WNAT7d5d8a4fa74cee7b251d08ec41ba41d9/ தாமரன்கோட்டை அரசு பள்ளி மாணவி மாநில அளவில் சாதனை.http://silakurippugal.blogspot.com/2008/06/blog-post.html ).

இந்த மாணவ/மாணவிகள் ஆசிரியர்கள் கேள்விப்பட்டால் எத்தனை வருத்தம் வரும்.. இதைவிட கேவலப்படுத்த முடியுமா இவர்கள் உழைப்பை..???

Is this why we have admitted our children in this or any good school?" the circular asks.

குட் ஸ்கூல் கு அர்த்தம்/அளவுகோல் என்னென்ன?.. காமிராவில் சக மாணவியை படம் பிடித்து இணையத்தில் போடும் பிள்ளைகள் படிக்கும் பள்ளியா?..போதை மருந்துக்கு அடிமையாகும் குழந்தைகள் படிக்கும் பள்ளியோ.?.

இதை சொல்பவர் வீட்டில் சமையல்காரர், தோட்டக்காரர் , ஓட்டுனர், இவர்களெல்லாம் ஒழுக்கமற்றவர்களா?.. அப்படி இருந்தால் இவர்களால் இன்று இப்படி பேசமுடியுமா?..

கல்வி என்பது என்ன?..

அறிவியலும், பூகோளமும் , பொருளாதாரம் பற்றி படிப்பது மட்டுமா?.. வாழ்வில் பணம் சம்பாதித்து வெற்றி பெற்று பின் மன அமைதியின்றி வாழ்நாளெல்லாம் மருத்துவரே கதி என அலைவதா?..

நல்ல கல்வி வாழ்க்கைக்கான பாடமாக இருக்கணும்.. உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் சக மனிதனை மனிதத்தன்மையோடு நேசிக்க, அவனும் சுவாசிக்க வழி வகுக்குமாறு கல்வி இருக்கணும்..

முரண்களை ஏற்றத்தாழ்வுகளை ஏற்கும் பக்குவம் சொல்லித்தருவதாக அல்லவா இருக்கணும்.?

சிறு வயதிலேயே பிரிவினையை போதிக்கும் கூடங்களை மூடிவிட்டால்தான் என்ன?..

ஜப்பானில் சுனாமி வந்தா பதறாம இருக்கிறார்கள்.. ஏன்.. எப்படி வந்தது அந்த பொறுமை..?. பெருந்தன்மை..?.. எப்படியும் மண்ணுக்குள் போக போறோம்.. இப்பவோ எப்பவோ.. என வாழ்நாள் முழுதும் குழந்தைப்பருவத்திலிருந்தே தயார்படுத்தப்படுகின்றனர்.. வாழும் நாட்களில் நம்மால் முடிந்ததை சக மனிதருக்கு செய்யணும் என்ற ஆவல் அங்கே பழக்கப்படுத்தப்படுகிறது..


நம்மூர் தமிழர்கள் மலேஷியாவில் கழிப்பறை சுத்தம் செய்யும் வேலை செய்வதை பார்த்தேன்.. மகிழ்ச்சியாக , மரியாதையாக நடத்தப்படுவதாக சொல்கிறார்கள்.. நம் நாட்டில்.?.. எப்ப இந்த மாற்றம் வரும்.. யார் செய்யப்போகிறார்கள்..?

டிஸ்கவரி சேனலில் , காட்டில் ஒருவன் அகப்பட்டுக்கொண்டால் பாம்பை தின்று ஓடையில் ஓடும் நீர் குடித்து, மரணித்த ஒட்டகக்கறியை பிச்சி எடுத்து தின்பதாக காண்பிக்கின்றார்கள்.. ஆக மரணிக்கும் சூழல் வந்தால் அடுத்தவனை கொன்றாவது நாம் பிழைக்கணும் எனும் என்ணமுள்ள அல்ப மனிதர்களே நாம்.. ஆனால் நாகரீகம் என்ற பேரில் பல விதங்களில் மனிதன் முன்னேற்றம் அடைந்தாலும், எண்ணம் இன்னும் கீழ்த்தரமான சக மனிதனை பிரித்து பார்க்கும் விதமாக அல்லவா போய்க்கொண்டிருக்கிறது..

எத்தனை மதம் வந்தாலும், நான் மதவாதி என சொல்லத்தான் பெருமைப்பட்டுக்கொள்கிறோமே தவிர அதிலுள்ள நல்ல விஷயங்கள் நம் கண்ணில் படாமலே இருப்பது விந்தைதான்..

யோகா , ஆன்மீக சொற்பொழிவெல்லாம் யார் கேட்கிறார்கள் னு கவனித்துள்ளீர்களா?.. ஏழைகளின் யோகா, ஆன்மீகம் எது?.. ஏன் அவர்கள் மகிழ்ச்சியாக வயல் வேலையோ மற்ற வேலையோ ஈடுபாட்டுடன் செய்கிறார்கள் வெள்லந்தி மனதோடு.?.. ஏனெனில் அடுத்தவனை கெடுத்து , போட்டுக்கொடுத்து வாழ்க்கையில் எப்படி முன்னேற என்ற எண்ணம் அவர்களை அரிப்பதில்லை.. தெளிவா இருக்காங்க.. இன்னிக்கு செத்தா நாளைக்கு பால் னு தெரியுது.. உயர்தர சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதில்லை..ஆனாலும் எதையும் ஏற்கும் பக்குவம் அவர்களிடமல்லவா இருக்கிறது..

கிலோமீட்டர் கணக்கில் நடக்க முடியும்.,. ஆனா நாம் வீட்டுக்குள்ளேயே மெஷின் வாங்கி வைத்து அதே நடையை வெட்டியாக நடக்கிறோம்.. உலகத்தை அவர்கள் சுமக்கிறார்கள்.. நம்மைப்போன்றவர் நவீன உபகரணங்களால் பாரமாக்குகின்றோம்..மின்சாரம் இல்லாமல் நம்மால் இருக்கவே முடியாது.. அவர்களுக்கு அப்படியில்லை.. எச்சூழலிலும் வாழ முடியும்.. யார் பலசாலி?.. யாரிடமய்யா ஒழுக்கம் அதிகமிருக்குது.?..

பசிக்காக ஏழை திருடுகிறான்.. ஏழைப்பெண் பாலியல் தொழில் செய்கிறாள்.. படித்தவன் பெரிய அளவில் ஊழல் செய்கிறான்.. சீதாம்மா தன் எழுத்தில் சொன்னது போல சில பணக்காரன் ( அந்த காலத்திலேயே ) கார் கீயை மாற்றிக்கொள்கிறான்.. சினிமாவில் பெண்ணை போகப்பொருளாய் காண்பிப்பது , உடை குறைய குறைய அவளுக்கு பணத்தை புகழை அள்ளி அள்ளிக்கொடுப்பது மேல்தட்டு நாகரீகம்..???. அப்படித்தானே?.


ஏழைகளில் சேற்றில் கைவைக்காமல் நாம் சோற்றில் கை வைக்க முடியாது என்பதை ஒவ்வொரு முறை உண்ணும்போதும் எண்ணணும் என குழந்தைகளை பழக்குவோம்.. இனியாவது நாமும் திருந்துவோம், இதுவரை எப்படி இருந்தாலும்..

சுத்தப்படுத்தும் வேலையில் அவர்கள் இல்லையென்றால் நாடே நாறிவிடும் என்ற நியாபகமிருக்கட்டும் நமக்கு..

நல்லவர் கெட்டவர் எல்லா நாட்டிலும், இனத்திலும் , உண்டு.. அதுக்கு ஏழை என்ற அப்பத்தமான காரணம் சொல்லும் அருவருப்பை களைவோம்.. பணக்காரரிலும் நல்லவர் உண்டு.. பணக்காரர் எல்லாம் கெட்டவர் என ஏழை ஒதுக்குவதில்லையே..

*சக மனிதனை சமமாக பாவிக்காத, மனிதத்தனமை வளர்க்காத எந்த நாடும் அந்த மக்களும் , இல்லாமலே போகட்டும்*..


போலித்தனத்திலிருந்து இனியாவது வெளிவந்து சக மனிதனை நேசித்து ஒடுக்கப்பட்டவர்களுக்கு வாழ்நாளில் ஏதாவது செய்தோம் என்ற மன நிறைவோடு மரணிப்போம்.. அப்போது யோகம் , தியானம் ஆன்மீகம் எதுவும் நமக்கு தேவையிராது...

( செய்தி பார்த்த அவசரத்தில் எழுதியது.. தவறிருப்பின் மன்னிக்கவும்..தயவுசெய்து அலுவலிலிருந்து பின்னூட்டம் தவிர்ப்போம்.. நன்றிகள்.)

லேட்டஸ்ட் செய்தி -




படம் .: நன்றி கூகுள்..

Thursday, April 21, 2011

தத்தெடுத்தல்..:




குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் ஏன் 10 வருடமெல்லாம் காத்திருக்கிறார்கள் என அதிசயப்பட்டதுண்டு..( என் குடும்பத்திலும் )

எப்படி அந்த அன்பை சேமித்து வைத்திருப்பார்கள் பல்லாண்டுகள் வலியோடு , சுமை, ஏக்கத்தோடு ...?

திருமணத்தோடு யோசிப்பேன், " ஒருவேளை என் உறவினர்கள் மாதிரி குழந்தை இல்லாவிட்டால் உடனே தத்தெடுக்கணும் " என..

ஆளாளுக்கு பல காரணம் சொல்வார்கள்.. குழந்தை ஜீன் எப்படியோ, நோய் எப்படியோ, குணம் , குலம் எப்படியோ...


ஏன் அன்பு செலுத்த இவையெல்லாம் சப்பை காரணங்களாய்.?.. ஆனால் இத்தகைய காரணங்கள் சொல்பவர்கள் தத்தெடுக்காமல் இருப்பதே நல்லதும்.. அந்த குழந்தைகள் தப்பிக்கும்..

முன்பின் அறிமுகமற்றவரிடம் நட்பு , பாசம் வருது .?.. ஆனால் ஏதுமறியாத பச்சைக்குழந்தையிடம் அன்பு , பாசம் வராதா?..

கொஞ்ச நாள் வாழ்ந்திட்டு மண்ணுக்குள்ள போற நமக்கு ரிஷிமூலம், நதீமூலம்னு சொல்லி வாழும் நாட்களை அனுபவிக்காமல் கட்டுக்கதை சொல்லி நரகமாக்கியவர்களை என்ன சொல்ல..?

ஆகவே காத்திருக்காதீர்கள் , தத்து குழந்தையிடம் அன்பு செலுத்த .. இல்லையில்லை , அன்பை பன்மடங்கு அனுபவிக்க..


( ஏன் சொல்ல மாட்டீங்க.. நீங்க தத்தெடுக்கவா செய்தீர்கள் என்றால் , மனதளவில் நான் எப்பவோ தயார்.. ஆனால் வாய்ப்பில்லை.. அவ்வளவே.. )

என்னுடைய உறவினர் பெண்ணுக்கு தத்தெடுக்க ஆசை. ஆனால் கணவரின் ஆணாதிக்கம் தடுத்தது.. :(.. (இருவரும் ஒரே தினம் மரணமும்.... )

வாயில்லா பூச்சிகளாய் வாழ்ந்திருக்கிறார்களே பெண்கள்... ???

வாரிசு இல்லையென்றால் அதிலென்ன வெட்கம் , கேவலம் , ஏமாற்றம்..?.. அன்பு செலுத்த , பெற முடிந்தும் அன்பில்லாத வாழ்வுதான் வெட்கப்படவேண்டியது...வருந்தவேண்டியது..

பெற்ற குழந்தைகளை போட்டிகள் என தொலைக்காட்சியில் வருத்துவதும் , குடித்துவிட்டு வந்து பிள்ளைகள் முன்பு சண்டையிடுவதும்தான் கேவலம்.. வருத்தம் எல்லாம்..

ஊனமுற்ற குழந்தை என்றாலோ , மன நலம தவறிய குழந்தை என்றாலோ கூட நம்மால் துளியும் வித்யாசப்படுத்தி பார்க்காமல் , சொல்லப்போனால் இன்னும் அதிகமாக அன்பு செலுத்த முடிந்த நம்மால் ஏன் பரிதாபத்துக்குறிய பச்சிழங்குழந்தைகளை தத்தெடுக்க முடிவதில்லை.. நம் மேல் மட்டும் குற்றமில்லை.. நாம் அப்படி பழக்கப்பட்டிருக்கோம் இச்சமூகத்தில்.. விசாலமான மனதை வளர்க்காமல் குறுகிய மனப்பான்மையோடு வளர்க்கப்பட்டிருக்கிறோம்..


தாய்லாந்தில் நமக்கு பிடித்தமான குழந்தை, ஆணோ, பெண்ணோ பெற்றுக்கொள்ள லட்சக்கணக்கில் பல நாடுகளிலிருந்து வந்து செலவழிக்கிறார்கள்.. ஏன் இந்த பேராசை.. இப்படியான பேராசை சூழலுக்குள் தள்ளப்படுவது மிகப்பரிய கொடுமையும் , மனச்சுமையுமல்லவா பெண்ணுக்கு.. ???..


குழந்தையின்மை என்பது மிக சகஜமாக பார்க்கப்படவேண்டிய விஷயம்..

எல்லாரும் மருத்துவமனை , கோவிலுக்குள் படையெடுக்காமல் தத்தெடுக்க ஆரம்பித்தால் அதைவிட வேறு சிறப்பான ஆன்மீகம் , நற்செயல் மகிழ்ச்சி என்ன இருக்க முடியும்..

இதை எந்த ஆன்மீகவாதியும் , சோசியக்காரனும், மருத்துவரும் கூட சொல்வதில்லையா?.. குழந்தை வரம் கேட்டு வருபவர்களிடம்.. ?.

உலக மஹா படிப்பு படித்ததால் மருத்துவதுறையின் முன்னேற்றத்தால் ஒரு குழந்தையை பெற முடியும்தான்.. ஆனால் செலவே இல்லாமல் அன்பை பெற வழி இருக்கும்போது ..?.




யோசிக்கலாமே.. ..நமக்கு தெரிந்தவர்களுக்கு ஆதரவும் துணிவும் கொடுக்கலாமே.. சமூக பார்வையை அலட்சியப்படுத்தவும், அதோடு சமூகத்தில் மாற்றம் கொண்டு வரவும் செய்யலாமே, வாழப்போகிற இந்த சில ஆண்டுகளில்..

போலித்தனமான கற்பிதங்களிலிருந்து வெளியே வந்து ஒரு முன்மாதிரியாக இருக்கலாமே..?..அதற்கான தெம்பை , எதையும் துணிவாக சந்திக்கும் ஆற்றலை கொடுப்போமே..

எங்க ஊரில் ஒரு பெண்மணி தன்னுடைய ஆறாவது பிரசவத்துக்காக என் அக்கா அனுமதிக்கப்பட்ட அறையின் அடுத்த அறையில் இருந்தார்..5 குழந்தைகள் இறந்தபின்.. சொந்தத்தில் திருமணம்.. குழந்தை 6 மாதம் மேல் கர்ப்பத்தில் தங்குவதில்லை.. ஆக 4ம் மாதம் முதல் மருத்துவமனையே கதி..

ஒரு நாள் இரவு நாங்கள் தூங்கிக்கொண்டிருக்கும்போது சலசலப்பு..

பிரசவ வலி வந்தது.. 6 மாதத்திலேயே.. நாங்களும் கூட சேர்ந்து நகம் கடிக்க , சிறிது நேரத்திலேயே , குழந்தை இறந்த தகவல்.. மற்ற எல்லோரையும் விடுவோம்.. அந்த தாய்.?.. குழந்தை பெறும் இயந்திரம்..?.. படைத்தால் இயந்திரத்துக்கு வெற்றி .. இல்லையென்றால் இயந்திரம் வீண்.. ?.. அப்படித்தானே?.. 6 முறை கர்ப்பம் தரித்து , லட்சம் கனவுகள் கண்டு, பயத்தில் நாட்களை ஆடாமல் அசையாமல் கழித்து..???

ஏன் இந்த முட்டாள்தனமான எதிர்பார்ப்புகள்..?...சமூகத்தில் கட்டுடைக்க வேண்டியவற்றில் இதுவும் முக்கியமான ஒன்று..

சுமந்து பெறுவதால் மட்டுமே ஒருவர் தாய் ஆகவோ, தன் ரத்த உறவு என்பதால் மட்டுமே ஒருவர் தந்தை ஆகிடவோ முடியாது..

உலகிலுள்ள அனைத்து குழந்தைகளையும் நேசிக்க முடிந்தவர்கள் மட்டுமே பெற்றோர் என்ற சொல்லுக்கு அருகதையுள்ளவர்கள்.. மற்றவர்கள் வெறும் பேராசைகொண்ட சுயநலவாதிகள் மட்டுமே.. ( என்னையும் சேர்த்துதான் )

இதன் இன்னொரு வடிவம் வாடகைத்தாய்.. ஆரம்பத்தில் நானும் அதை சிறப்பென கருதி வேலாயி எனும் தொடர்கதை எழுதியதுண்டு..

யோசித்து பார்த்தால் , அதென்ன அப்படி ஒரு பிடிவாதம் , நம் வாரிசே உருவாகணும் என.. ?.. நாம் , நம் ஜீன்கள் , நம் சந்ததியினர் மட்டும் எந்தளவில் உசத்தி?.. யார் மதிப்பீடு செய்ய..?..

அப்படி ஒரு வாரிசை உருவாக்கிட , ஒரு ஏழைத்தாயின் உணர்ச்சிகளை அல்லவா விலை பேசுகிறோம்?.. அவருக்கல்லவா வாழ்நாள் முழுதும் குற்ற உணர்ச்சியை தருகிறோம்?.. யோசிப்பது கூட இல்லை .. நமக்கு காரியம் ஆனால் போதும்.. என்று பழகிவிடுகிறோம்.. அதை சமூகமும் ஏற்று நம்மை திட்டுவதற்கு பதில் விழா எடுத்து மாபெரும் வெற்றியாக அங்கீகரிக்கிறது... இது ஒரு வகை நுகர்வு கலாச்சாரமாய் மாறி வருகிறது.. அதிலும் இந்திய வாடகைத்தாய்கள் கம்மி விலையில்..:((!!

குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை மட்டுமல்ல , ஒரு மகிழ்ச்சி, ஒரு நம்பிக்கை , வாழ்க்கையை முழுமையாக பொறுமையாக கற்பது போன்ற பல விஷயம் இருக்கிறது.. அந்த வாழ்வானது எல்லாருக்கும் மிக எளிமையான வழியில் கிடைக்கட்டும் , அனுபவிக்கட்டும்.. பெற்றால் தான் பிள்ளை என்ற பழைய குருட்டுத்தனமான நம்பிக்கையை உடைத்தெறிந்து விடுதலை தருவோம், பல குடும்பத்துக்கு , முக்கியமா பெண்களுக்கு...


வெளிநாடுகளில் அன்பு செலுத்த பிராணிகளை கூட பிள்ளைகள் போல் வளர்க்க ஆரம்பித்துவிட்டனர்..இப்ப நம் நாட்டிலும் அந்த பேஷன் வந்தாச்சு.. நாம் மட்டும் இன்னும் பிடிவாதமாய் பெட்ரமாக்ஸே வேணும் னு இருந்தா எப்படி?..




சரி குழந்தைகளை மட்டும்தான் தத்தெடுக்கணுமா..? இல்லை.. முதியோர் இல்லங்களில் இருக்கும் முதியோரை கூட தத்தெடுக்கலாம்.. உங்களால் வீட்டுக்கு அழைத்து வந்து கவனிக்க முடியாதுதான்.. ஆனால் மாதம் ஒருமுறை சென்று பேசிவிட்டு கூட வரலாம்.. முடிந்தால் பண உதவியும்.. சமீபத்தில் தெருவில் வீசப்பட்ட முதியோர்களை பார்த்து மிகுந்த வேதனையும் அதிர்ச்சியுமடைந்தேன்.. யாரை குற்றம் சொல்ல?.. பிள்ளைகளால் பராமரிக்க முடியாமல்தானே இந்த நிலைமை.?..

இது பற்றி எழுதிய தத்து குழந்தை கதை

சென்னையில் மட்டும் பணம் செலுத்தி கவனிக்கும் முதியோர் இல்லமே நூற்றி இருபத்தைத்துக்கு மேலாம்.. . இலவச இல்லங்கள் தனி.. இப்ப இது ஒரு புது வகை தொழில்..நல்லவை இல்லாமல் இல்லை.. ஆனால் இதைத்தான் நம் கலாச்சாரம் என கொண்டாடுகிறோமா?.. இதற்குத்தான் தியாகம் செய்து , உடல் வருத்தி வளர்த்தார்களா ..?


இன்னொரு தத்தெடுத்தல் நலிந்த கிராமங்களை.. அது பற்றி பிறகு பார்ப்போம்..

( விசாரித்து பார்த்ததில் , தத்தெடுப்பதும் கூட அத்தனை எளிதல்லவாம்.. அப்படியானால் ஏன் இத்தனை அனாதை இல்லங்கள்..??..தத்தெடுப்பதை எளிமைப்படுத்தணும்.. தன் சொந்தக்காலில் நிற்க முடிந்தவர் , ஆணோ , பெண்ணோ , நன்றாக வளர்க்க முடியுமானால் , குறிப்பிட்ட வருடங்கள் கண்காணிப்போடு தத்தெடுக்க அனுமதிக்கணும்..அதே போல் ஓரின சேர்க்கை தம்பதியினருக்கும்.. சரி இதை தனியா பேசணும்.. இன்னும் அதை ஏற்கும் பக்குவம் நம் மக்களிடம் இல்லை என்பதே வேதனை .. )


நம்மையறியாமல் நம்மீது திணிக்கப்பட்டுள்ள பல்வகை கற்பிதங்களை இனியாவது தடுக்கணும்..கலாச்சாரம் , பண்பாடு என்ற போர்வையில் சகஜமாக்கப்பட்ட மனித நேயமற்ற செயல்களை ஊக்குவிப்பதை தடுக்கணும்..


லஞ்சம் வாங்கியாவது பங்களா வீடும், காரும் இருந்தாத்தான் மதிப்பு என்றளவில் நம் பார்வை பழக்கப்பட்டுள்ளது..

எளிமை வாழ்வே கேலிக்குறியது.. தோல்வியாக கணக்கிடப்படுகிறது..

அடுத்தவர்களை திருப்தி படுத்த பல போலி சந்தோஷங்களை காண்பிக்க வேண்டியுள்ளது.. அதற்கு குழந்தைகளையும் பலியாக்குகின்றோம், தேவையற்றவைகளை படிக்க சொல்லி..ஆடி, பாட சொல்லி., அடுத்தவரோடு எதிலும் போட்டி போட சொல்லி..

தத்தெடுக்க சில சட்ட திட்டங்கள் பர்றி தகவல்கள் இங்கே..

http://www.indiaparenting.com/adoption/4_1347/adoption-rules-in-india.html http://en.wikipedia.org/wiki/Christian_law_of_adoption_in_India http://www.indiachildren.com/adoption/laws.htm

( தத்தெடுக்க நான் வழிகாட்டியல்ல. எனக்கு தகுதியுமில்லை என்ற குற்ற உணர்வுடனே இந்தப்பதிவு.... )


//Adoption means you grew in your mommy's heart instead of her tummy // "Our children are not ours because they share our genes... they are ours because we have had the audacity to envision them. That, at the end of the day...or long sleepless night, is how love really works." Author: உன்க்னொவ்ன்



படம்.: நன்றி கூகுள்


.

Saturday, April 9, 2011

அன்னா ஹசாரேவுக்கு நன்றி/மரியாதை செலுத்த நான் என்ன செய்யணும்?






யார் இந்த அன்னா ஹசாரே.?.

நன்றி இட்லிவடை
அன்னா பற்றிய வாழ்க்கை குறிப்பு ( இன்று டைம்ஸ் நாளிதழில் தழுவி எழுதியது நன்றி: யதிராஜ் )

எவ்வித உடமைகளோ, குடும்பமோ,வங்கியிருப்புக்களோ இல்லாத முற்றும் துறந்தவர். 10 x 10 அளவேயுள்ள ஒரு சிறிய அறையில்தான் வசிக்கிறார். கதராடை மட்டுமே உடுத்துவார்.

இந்த 71 வயது இளைஞர் பிரச்சனைகளுக்காக எண்ணற்ற போராட்டங்களையும், பயணங்களையும், உண்ணா விரதங்களையும் மேற்கொண்டுள்ளார்.

மரணத்தைப் பற்றி நான் பயப்படவில்லை. என்னுடைய உயிரிழப்பால் கவலைப்பட எனக்கென்று உற்றார் எவரும் இல்லை, தவிர தேச நன்மைக்காக ஏதேனும் செய்யும்பொழுது உயிர்விடுவதையே நான் பெருமையாக நினைக்கிறேன் என்கிறார் இவர்.

அன்னாவோ பந்தங்களிலிருந்து எப்பொழுதும் தள்ளியே நிற்பதென்று உறுதி பூண்டுள்ளார்.

தனது சேமிப்பு அனைத்தையும் கிராமத்தின் வளர்ச்சிப் பணிகளுக்காக அற்பணித்த ஹஸாரே, மக்களிடம் குடிப்பழக்கத்தை விட்டொழிக்க வேண்டுமென பிரமாணமெடுத்துக் கொள்ளச் செய்தததோடு மட்டுமல்லாமல், குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையையு வற்புறுத்தி, சிறிய குடும்பத்தின் நன்மைகளைப் பிரச்சாரம் செய்தார்.

கிராமத்தினரை சுய தொழில் புரிய தூண்டிய ஹஸாரே, மழை நீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தி கால்வாய்களையும், நீர் நிலைகளையும் ஏற்படுத்தச் செய்தார். இதன் மூலம் தண்ணீர் பிரச்சனை பெருமளவில் குறைந்ததோடு மட்டுமல்லாமல், தரிசு நிலங்கள் மேம்படவும் உதவின.

இவர் செய்த சாதனைகள் மூலம், இந்திரா ப்ரியதர்ஷினி வ்ருக்ஷமித்ரா, க்ருஷி பூஷணா, பத்மஸ்ரீ, பத்ம பூஷன், மகஸேசே,கேர் இண்டர்நேஷனல் ஆஃப் த யூஎஸ்ஏ, ட்ரான்ஸ்பேரன்ஸி இண்டர்நேஷனல் போன்ற விருதுகள் இவரைத் தேடி வந்து குவிந்தன. தென் கொரிய அரசாங்கம் கூட இவரது சாதனைகளுக்காக இவரைக் கவுரவித்தது.

--------

இப்படி அற்புதமா போகுது இவரைப்பற்றிய செய்தி.. ஆனால் நடப்பதென்ன?.

மத்திய அரசு பணிந்தது: உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்கிறார் ஹசாரே.!!!!!!!

காந்தீயம் வென்றுவிட்டது ..

--------------------

இந்தியருக்கு மட்டும் வருடம்பூராவும் ஏப்ரல் ஃபூல் ஏன்.?..

திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்கும். - அதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுக்கிற மாதிரி நடிக்கும்..

-
அன்னா ஹசாரே ஏழை.

அவர் மாசற்றவரே.. மிக நல்லவரே.. ஆனால் அவர் என்ன செய்திருக்கலாம?..

இந்த போராட்டத்தில் எனக்கு ஆதரவு தரும் அனைவரும் என்னைப்போல அப்பழுக்கற்றவராக மட்டுமே இருக்கவேண்டும் என்றல்லவா சொல்லியிருக்கணும்?..அது எத்தனை முக்கியம்..?




அவருக்காக மெழுகுவத்தி ஏந்தும்போது,



வாழ்நாளில் ஊழல் செய்தவன் , துணை போனவன், அடுத்தவன் உழைப்பை சுரண்டியவன் , அடுத்தவன் வாழ்வை அழித்தவன் , மிரட்டியவன், மிரட்டல் வந்ததா கதறி பொய் சொன்னவன் , அதுக்கு தொண போனவன் ,சாதீ ய மும்முரமா வளர்ப்பவன் , பெண்களை இழிவுபடுத்துபவன் , ஆபாசத்தை வளர்த்தெடுத்து சிறார் கொலைக்கு துணை போறவன், எப்பவும் கெட்ட வார்த்தை மட்டுமே பேசி சமூகத்தை கழிப்பிடமாக்குபவன் , மதவெறி பிடித்தவன் , வன்முறை செய்பவன், அதற்கு துணை போகிறவன் கையெல்லாம் பொசுங்கி போற மாதிரி இருந்தா எத்தனை நல்லா இருக்கும்.. :)))) ( ன்/ள் போட்டுக்கலாம் )

எத்தனை பேரால் மெழுகுவத்தி ஏந்த முடியும்னு தெரிஞ்சிருக்குமே..

என் கையும் பொசுங்கியிருக்குமே..:)..எப்பவோ நானும் லஞ்சத்துக்கு துணை போயிருக்கேனே..அவ்வ்..


அன்பின் அண்ணா ஹசாரே,

அடுத்த முறை உண்ணாவிரதம் இருக்கும்போது உங்களை ஆதரிப்பவர்களும் உங்களைப்போல மாசற்றவராக மட்டுமே இருக்கணும் என வேண்டுகோளை மறக்காமல் சொல்லிடுங்கள்..( இல்லையென்றால் உங்களோடு சேர்ந்து உங்கள் போராட்டத்தையே அசிங்கப்படுத்துகிறோம் திருடர்களாகிய நாங்கள் )


ஊழல் என்ற பூதம் ஏதோ அரசிடம் மட்டுமே இருப்பதுபோல ஊடகம் பூச்சாண்டி காண்பிப்பதும் , அதை விரட்ட , மக்கள் படையெடுப்பதும் பங்கெடுக்கும் எமக்குள்ளே குறுகுறுப்பை தருது..

எங்ககிட்டே குடியிருக்கும் பேயை யார் விரட்டுவது.?..

உங்களிடம் உள்ள சக்தி அரசை திருத்துவதாக மட்டுமல்லாமல் , பொதுமக்களுக்கும் ஒரு பாடமாக இருந்தால் நன்று..


வேர் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் பலவிதத்தில் பரவியிருக்கு.. தாமிரபரணி தண்ணீரை கொக்கோ கோலா எடுத்தா கண்டுக்க மாட்டோம்,. ஏன்னா அதை பற்றி எடுத்து சொல்ல இன்னொரு காந்தியோ அன்னா ஹசாராவோ தேவை நமக்கு.. இவர் போராட்டம் ஒரு சட்டம் ஏற்ற தான்.. அப்படியென்றால் இதுவரை இருக்கும் சட்டங்கள் பயன்படவில்லை என்றுதானே அர்த்தம்.. அதை நேர்வழியில் செலுத்த எந்த அன்னா ஹசாரா வர காத்திருப்போம்..?

நாம் அன்றாடம் கண்டுகொள்ளவேண்டிய கலங்க வேண்டிய பிரச்னை ஆயிரம் நம்மைசுற்றி இருக்கிறது.. எப்பவும் ஒரு அன்னா ஹசாரேவுக்காக நாம் காத்திருக்கோம்.. அவர் எடுத்த காரியம் வெற்றி பெற்றதும் மறந்திடுவோம்.. எங்கேயோ ஏதோ வெற்றி பெற்றதாகவும் அதில் பங்கெடுத்ததற்காக நம்மை நாமே பாராட்டி ஏமாற்றிக்கொள்வோம்..


ஊழல்வாதி பிறப்பதில்லை.. நம்மிலிருந்துதான் உருவாகிறான்.. அன்னா ஹசாரேக்கு ஆதரவு தெரிவிக்குமுன் நம்மை சுயபரிசோதனை செய்துகொண்டு இனி பங்கெடுப்போம்.. அதையே அன்னா ஹசாரே போன்றோரும் எதிர்பார்ப்பதோடு அழுத்தமும் தரணும்.. இல்லையென்றால் இது பத்தோடு பதினொன்று அவ்வளவே.. நாட்டை திருத்த கூட வேண்டாம்.. முதலில் அன்னா ஹசாராவைப்போல் நம்மால் மாற முடியுமா என எண்ணிப்பார்த்துக்கொள்வோமே.. அப்போது அந்த மெழுகுவத்திக்கும் ஒரு வெளிச்சம் இருக்குமே..

இங்குதான் நாம் தவறு செய்கிறோம்.. போராட்டத்தின் அர்த்தமே நமக்கு தெரியவில்லை.. எங்கோ நடக்கும் போராட்டத்துக்கு ஊடகத்தின் ஆதரவு இருப்பதால் மட்டுமே நாம் ஆதரவு தெரிவிப்பதோடு நின்றிடக்கூடாது.. அன்றாட வாழ்க்கையில் போராட பழக்கணும் குழந்தைகளை , சாதி வெறி, மத வெறி, பெண்ணடிமை , லஞ்சம் , ஊழல், சமூக விரோத செயல்கள் , ஏற்றத்தாழ்வு, திருநங்கை வாழ்வு, வன்முறை, இப்படி பலப்பல.. இதை செய்ய நாள் நட்சத்திரம், துணைக்கு ஆட்படை எண்ணி காத்திருக்க தேவையில்லை. சகஜமாக்கப்படணும் கேள்விகள் கேட்கணும்..தினமும்..

நம் வீட்டில் இருந்து ஆரம்பிக்கலாம்.. நம் நட்பிடம் தவறு என்றால் சொல்ல துணியணும்.. நம் கட்சி என்றாலும் நம் ஊர் , நம் இனம் , நம் மொழி என்றாலும் தவறை தவறு என எடுத்து சொல்ல துணிவை வள்:அர்க்கணும்.. இழிவுகளை பாராட்டுகளாக எடுக்க பழகணும்.. இல்லை நான் என் சொந்த பந்தங்களிலெல்லாம் தட்டி கேட்டால் விலக்கிடுவார்கள் , அதனால் நான் அரசை மட்டுமே கேட்பேன் , நானும் திருந்த மாட்டேன் என்றால் தயவுசெய்து அப்படியான நாடகத்தனமான ஆதரவு தருவதை விட நாடு எக்கேடும் கெட்டுப்போகட்டும் என விட்டுடுங்கள்..

மதுரையில் திரு.சகாயம் அவர்கள் பல சிக்கலில் மாட்டியுள்ளார்.. ஒரு நல்ல மனிதரை நல்லது செய்ய விடாமல் தடுக்கிறார்கள்.. நாம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கிறோம். ஒன்றும் செய்ய முடியவில்லை.. அவருக்காக போராடலாமா?.. பயம் வருகிறதல்லவா?..

இதுதான் நாம்.. அதனால், காந்தியம் வென்றுவிட்டது , என நம்மை நாமே இப்படி ஒவ்வொரு முறையும் ஏமாற்றிக்கொள்ள பழகிவிட்டோம்..

சமூகத்தில் உள்ள அனைத்து விரோதப்போக்குக்காகவும் , மனிதத்தன்மையற்ற செயலுக்காகவும் போராடணும், அன்றாடம்..நின்றுவிட்டால் மூழ்கிடுவோம்.. இது ஓடும் தண்ணீர் .. இடைவிடாமல் எதிர்நீச்சல் தேவை நமக்கு.. நம்மைப்பார்த்து பின்னால் வருபவர்களும் பழகிடட்டும்..

மெரீனா பீச்சுக்கு போக கூட தேவையில்லை.. கணினி முன் உட்கார்ந்தே உங்கள் கோபமான எழுத்தால் போராடலாம் நாகரீகத்தோடு.. மக்களிடையே உண்மை எது பொய் எது என விழிப்புணர்ச்சி கொண்டு வர போராடலாம்..

போராட்டம் என்பது வருடத்திற்கொருமுறை வரும் திருவிழா அல்ல கூட்டம் கூட்ட , பங்கெடுத்து மகிழ..



( போராட்டத்தில் பங்கெடுத்தவர்களை காயப்படுத்தவோ அவமானப்படுத்தவோ இந்த பதிவு அல்ல...அவர்கள் பங்கெடுப்புக்கு என் வாழ்த்து, பாராட்டு ஒரு பக்கமுண்டுதான்.. ஆனால் போராட்டம் என்றால் என்ன என புரியாமல் இருக்கிறோமே என்ற வருத்ததில் சில கருத்துகளை பகிர மட்டுமே.. புரிவோம்.. பங்கெடுப்போம் தினமுமே.. )

அன்னா ஹசாரேவுக்கு நன்றி/மரியாதை செலுத்த நான் என்ன செய்யணும்?..
-----------------------------------------------------------------------------------------------------------------

பதில் : நான் அன்னா ஹசாரே போல் சிறிதளவாவது மாறனும்..





படம் : நன்றி கூகுள்..





Saturday, April 2, 2011

நடிகையும் ஒரு பெண் என மதிப்போம்..






நான் சமீபத்தில் படித்த கமெண்ட் சில எனக்கு ஏற்படுத்திய எரிச்சலை வலியோடு பகிர்ந்துகொள்கிறேன்..

யார் எழுதியது என்பது நமக்கு தேவையில்லை.. தெரியாமலே இவை பழக்கப்படுத்தியிருக்கலாம்.. இது தவறு என சொல்வதும் நம் கடமை அவ்வளவே.. கமெண்ட் நாலு பேர் கூட சேர்ந்து அடிக்கும்போது சுகமாத்தான் இருக்கும்.. ஆனால் அது நம் வீட்டு பெண்ணா இருந்தால் அடிப்போமா என எண்ணிப்பார்ப்போம்..

-------------------------

வடிவேலு அம்பிகாவை வச்சிருந்த கதையெல்லாம் மேடையில் நாறுமோ? :-)

அம்பிகா கதை மட்டும் இல்லை... ஷ்ரேயா கதை எல்லாம் கூட வெளி வரும்.

மதுரைக்குத் தி.மு.க. அனுப்பிவைத்த பிரசார பீரங்கி குஷ்பு!

XXXX : சிங்கிள் பேரலா மல்ட்டி பேரலா?...

அடுத்து கனிமொழியையும் ராசாவையும் இணைத்து..

அப்புரம் குஷ்பூவின் பழைய நீச்சலுடை படம் போட்டு அவரை இழிவுபடுத்துதல்..

ஜெயா அம்மையாரையும் நடிகை என்ற பார்வையில் அசிங்கப்படுத்துவது..

--------------------------------------------------

என்ன ஒரு ஆர்வம்??...இவர்களுக்கெல்லாம்.?..அப்பப்பா.. ஒரு நொடி அந்த பெண்களை நம் வீட்டு பெண்களாய் எண்ணியிருந்தால்..?..

அடுத்தவர் அந்தரங்கத்தை பொதுவில் அலச ஆர்வமுள்ளவர்கள் அதே ஒழுக்கமற்றவர்களாய் இருப்பார்கள்..

இது ஒரு கீழ்த்தரமான உத்தி..

நன்றாக நியாபகம் வைத்துக்கொள்வோம் , நாம் எல்லோரும் அதே சூழலில் , முக்கியமா நம் வீட்டு பெண்களும் அதே சூழலில் இருந்தால் அதையே செய்திருப்போம் என நினைவில் கொள்ளுவோம்..

( நாளை நம் வீட்டு குழந்தையும் இதே போல செய்ய மாட்டார் என எத்தனை பேர் நிச்சயமா சொல்வீர்கள்..?. எதுவும் நடக்கும்.. யார் கையிலும் இல்லை .)

அம்பிகாவை தொடர்பு படுத்தி அசிங்கப்படுத்தவேண்டி
யதன் நோக்கம்.?

நடிகை என்றால் என்னவேணா பேசலாம்னா பேசுபவர் அப்படியானவரே என்னைப்பொறுத்தவரையில்..

இதுக்கு பலத்த எதிர்ப்போ, கும்மியோ, கண்டனமோ தெரிவித்தாலும் இதுவே என் பதில்..

பாலியல் தொழிலை விட இப்படியான பேச்சுகள்தான் சமூகத்தின் முக்கியமான சீர்கேடு . இப்படி பேசுபவர்களை விட பாலியல் தொழிலாளிகளும், நடிகைகளும் உயர்ந்தவர்கள் என்னைப்பொறுத்தவரையில்..


யாரும் திருந்தணும்னு கட்டாயப்படுத்தல்.. ஆனால் இதுதான் என் கருத்து..

அரசை , ஊழலை , விமர்சிக்கணும்தான். மக்களுக்கு அவர்கள் தவறை வெளிச்சம் போட்டும் காண்பிக்கணும்தான்.. ஆனால் இதுவல்ல வழி.. அவர்களுக்கும் நமக்கும் வித்யாசமே இல்லை..உடனே மாற்றம் வர , கோபம் வர வழி தேடாமல் நிரந்தரமாக நம் நாடும் சமூகம் நல்லதொரு சூழல் அமைக்க பாடுபடலாம்.. எடுத்தேன் கவிழ்த்தேன் என்பதை விட்டு.. அது நீண்ட கால பயனளிக்காது. ..



எது சரி எது தவறு என்று கூட தெரியாத அளவுக்கு தமிழர்கள் சிலர் , பொதுவாழ்க்கையில் ஈடுபட்ட பெண்களை, முக்கியமா நடிகைகளை , அவர்களின் அந்தரங்கங்களை பொதுவெளியில் அலசுவது மிக சர்வ சாதாரணமாக போய்விட்டது..ஆனா அதே பெண்களிடம் ஆட்டோகிராப் வாங்கவோ , குத்துவிளக்கு ஏற்றவோ க்யூவிலும் நிற்போம்..புகைப்படம் எடுப்போம்.

அதுமட்டுமா அந்த நடிகையின் படத்தை போட்டு ஹிட்ஸ் சேர்ப்போம். ஓட்டு பிச்சை எடுப்போம்.. ஏன்னா நாம நல்லவர்கள்....

அதெப்படி வெளிநாடு வாழ் தமிழர்கள் கூட வெளிநாட்டில் பெண்கள் எவ்வாறு மதிக்கப்படுகின்றனர் என பார்த்தபின்பும் , தனிமனித உரிமைகள் அதற்கான சட்டங்கள் பற்றி அறிந்த பின்னும் , தமிழரோடான பேச்சில் தம்மை மறந்து , அந்தரங்க அலசலில் இத்தனை ஆர்வம் காட்டுகின்றனர்..?

அருவருப்பா இருக்கு.. :((((((((..

இவர்களெல்லாம் நாட்டை திருத்த போறாய்ங்களாம்.. போங்க போங்க போய் மொதல்ல உங்களை நீங்க திருத்திக்கோங்க.. அப்புரம் நாட்ட திருத்த வாங்க..


திருந்தவே மாட்டாங்க சில ஆணாதிக்கவாதிகள் , தன் வீட்டு கதவை அந்த பிரச்னை தட்டும் வரை.. திருந்தவாவது , சீக்கிரம் அதே சூழல் அவரவர் குடும்பத்தில் வரட்டும் என மட்டும் வாழ்த்துவோம்..:)

உடனே கேட்கத்தோணும், உங்க வாரிசுகளுக்கு வந்தால் பரவாயில்லையா?..

நிச்சயமாக .. ஏனெனில் நான் பாலியல் தொழிலாளிகளின் வாழ்வு மேம்படத்தப்படணும் என பல வருடம் முன்பே பேச ஆரம்பிச்சாச்சு..

1. அத்தொழில் முற்றிலுமாக ஒழிக்கப்படணும்.

2. முடியாத பட்சத்தில் அவர்களுக்கு அங்கீகாரம் கொடுத்து கெளரவமாக நடத்தப்படணும்...

ஏன்னா, உலகிலேயே மிகவும் பரிதாபத்துக்குறிய , மனமும் உடலும் தினம் செத்து பிழைக்கும் தொழில் அது..

ஒன்ணு அவர்கள் வலியை உணரணும்.. அல்லது தம் வாரிசுகள் அதை அனுபவிப்பதன் மூலமே அறியணும்.. இது எனக்கும் பொருந்தும்..


( இதுக்கு ஒரு 100 பேராவது ( ஆணாதிக்கவியாதிகள் ) எதிரியாகணும் எனக்கு .. ).

நடிகைக்கும், பாலியல் தொழிலாளிக்கும் , அரசியலில் ஈடுபடும் பெண்களுக்கும் குடும்பம், குழந்தைகள் இருக்கு.. ஒன்றுமேயறியாத அக்குழந்தைகளை பலிகடா ஆக்கி மன உளைச்சல் தரும் மன நோயாளிகளே அந்தப்பாவம் உங்கள் வாரிசுக்கு வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்..

அப்படி பேசுபவர்களுக்கு ஆதரவு தந்து அக்குற்றத்தை வளர்க்க உதவாதீர்கள்...தவறு என துணிவாக எடுத்து சொல்ல தயங்காதீர்கள்..


தேர்தல் நேரமென்பதால் எப்படியாவது அடுத்தவரை இழிவுபடுத்தியே தான் பெரியவனாக காண்பித்துக்கொள்ள கட்சியினர் தான் அடித்துக்கொள்கின்றனர் என்றால் பதிவுலகிலும் ..



இது வளர்ச்சி அல்ல வீழ்ச்சி நோக்கி போய்க்கொண்டிருக்கிறோம் என்பதற்கான சான்று ..


படம் : நன்றி கூகுள்..


.