Friday, December 4, 2009

கிறுஸ்மஸ் மரமும் குழந்தைகளும் கேக்கும்..






கிறுஸ்மஸ் பண்டிகை வருகின்றபோதே அந்த குளிரும், கிறுஸ்மஸ் மெல்லிசை பாடல்களும் ஊரெங்கும் அலங்கார விளக்குகளும் மனதில் விவரிக்க முடியாத ஒரு குழந்தைத்தனமான மகிழ்ச்சியை நம்மில் கொண்டு வருகின்றன...

ஒவ்வொரு முறையும் ஊருக்கு செல்வதிலேயே குறியாய் இருப்பதால் சாமான்கள் பட்டியலிட்டு யார் யாருக்கு என்னென்ன வாங்கிடணும் என அலைந்து திரிந்து
வாங்குவதே இன்னொரு மகிழ்ச்சி..

கிறுஸ்மஸ் என்றாலும் பகிர்தல்தானே?
அலுவலில் வேலை அதிகமாய் இருந்தாலும் இம்முறை கிறுஸ்மஸ் மரம் அலங்கரிக்கணுமா என கேள்வியாய் இருந்தது..

பெரியவருக்கு தேர்வு நேரம் ..
சரி அவனை தொந்தரவு படுத்தாமல் நாமே வைத்திடலாம் என அலாமாரியின் மேலுள்ள கிறுஸ்மஸ் மரத்தையும் அலங்கார பொருள்கள் உள்ள பெட்டியையும் எடுத்து வந்து பிரிப்பதற்குள் சின்னவர் குதூகலத்தோடு வந்து ஒவ்வொன்றாய் வெளியில் எடுத்து பரப்ப ஆரம்பித்தார்..

சரி இனி அவருக்கு ஒரு வேலையை கொடுத்தால்தான் நாம் ஒழுங்காக மரத்தை விரிக்க முடியும் என நினைத்து நான்
மரத்தை ஒழுங்குபடுத்த படுத்த அலங்கார தோரணங்களை மரத்தில் மாட்ட சொன்னேன்..

அவரும் அவர் விருப்பப்படி மாட்டவும் அது கீழே விழவும் ஓடி சென்று பிடிக்கவுமாய் ஒருவழியாய் குழந்தையின் கைவண்ணத்தில்
மரம் தயாரானது. இப்ப விளக்கு போடணும்...

எல்லா விளக்குகளையும் எடுத்து வைப்பதற்குள் அப்பா வரவும் சரியாய் இருந்தது...
வந்ததுமே குழந்தையின் உற்சாகத்தில் அவரும் உற்சாகமாய் ஒவ்வொரு சீரியல் பல்புகளை எடுத்து பரிசோதனை செய்து அதை மரத்தில் மாட்டினார்..

4 செட் சரியாக இருந்தது முக்கியமான இசையோடான விளக்கு மட்டும் எரியவில்லை..
அதுதான் விலையும் அதிகம்.. நீளமும்.. அதை போட்டாலே பளிச்சென உற்சாகம் வரும்... எரியவில்லை என்றதும் உடனே குப்பையில் போட்டார் .

நமக்குதான் மனசு கேட்காது .. உபயோகமில்லை என தெரிந்தாலும் பெண்களுக்கு
உடனே கடாசிவிட மனம் வருவதில்லை எதையும் எப்போதும்...ஏனோ.?

ஒருவழியாக கிறுஸ்மஸ் மரம் ரெடியாகி வீட்டின் விளக்கெல்லாம் அணைத்துவிட்டு பாடலும்
போட்டு ரசித்தாகிவிட்டது...

அடுத்து கேக் செய்ய உட்கார்ந்தால் ரகசியமாக செய்யலாம் என சமையலரைக்குள் நுழைந்தால் வாலு போல பின்னாலே
தொடர்கிறார்கள் வால்கள் இரண்டும்..

" அம்மா என்ன செய்ய போறீங்க..?"


" ஒண்ணுமில்லை சஸ்பென்ஸ்.."

மாவு பட்டர் எல்லாம் சேர்த்து ஓவனில் வைக்க அறைக்கு வெளியே எடுத்து வரும்போது
ஆளாளுக்கு வந்து கரண்டியை வைத்து கிண்ட ஆரம்பித்துவிட்டார்கள்..
முதலில் கத்த தோன்றியது.." சும்மா இருங்கள் "என்று.


அப்புரம் சரி அவர்களும் பங்கெடுக்கட்டும் என விட்டால் மாவை வேகமாக கிண்டி விழிம்பெல்லாம் வழிந்து....


சரி சரி விலகுங்கள் , உங்களுக்கென இன்னொரு நாள் தனியாக கேக் செய்யலாம் என சொல்லி விலக்கிவிட்டால் ,
கேக் பொங்குதா என முகத்தை ஓவன் கிட்ட வைத்து பார்த்து .

.கடைசியில் கேக் வந்தது கொஞ்சம் கடினமாகவே..


( ரொம்ப கிண்டினா இப்படித்தான்..:( )

அடுத்து டிசம்பர் 5ம்தேதி செல்லவிருக்கும் கிறுஸ்மஸ் நாடகத்துக்கும் சிறிது ஒத்திகை பார்த்தோம்.


கிறிஸ்து பிறப்பு குறித்த நாடகம்..

பெரியவர் நாடகத்தை வாசிப்பவர்..
சின்னவர் ஆடு மேய்ப்பாளராய்..


அதற்கேற்ற உடையை போட சொன்னால் மாட்டேன் நான் ஜீன்ஸ் தான் போடுவேன் என அடம்பண்ண.
ஒருவழியாய் அதற்கொரு கதை சொல்லி சமாதனப்படுத்தி நாடக ஒத்திகையும் முடிந்தது..

இப்படியாக கிறுஸ்மஸ் ஆரம்பித்தது இங்கு...

Saturday, November 14, 2009

சந்தீப்பின் சந்திப்பு




சந்தீப்பின் சந்திப்பு

வாரக்கடைசி இரு நாட்கள் உங்களோடு செலவிட வருவான் சந்தீப் என ஒரு மாதம்
முன்பே காகிதம் அனுப்பிவிட்டார்கள் பள்ளியில்.

அவனோடு சனி, ஞாயிறு இரு தினங்கள் செலவழித்து அதை பற்றி புகைப்படத்தோடு
சில வரிகளும் எழுதி ஆல்பம் ஒன்றில் ஒட்டணும். பின் பள்ளியில் அவனோடு
கழித்த அந்த இரு நாட்களைப்பற்றி சுவாரஸ்யமாக சொல்லணுமாம்.


காத்திருந்த சந்தீப் நேற்று வந்துவிட்டான்.

வீட்டுக்குள் நுழையும்போதே, , " அம்மா உங்களுக்கு ஒரு அதிசயம்
காத்திருக்கின்றது கண்டுபிடியுங்கள் பார்ப்போம் " என மாலைப்பொழுதை
இனிமையான புதிரோடு வரவேற்ற குழந்தை.

நானும் ஐன்ஸ்டீன் அளவு யோசித்து ஒண்ணும் முடியாமல் உதட்டைப்பிதுக்கிய
பொழுது, சட்டென்று முதுகுக்கு பின்னாலிருந்து வந்தான் சந்தீப்..

வாவ், என மிகப்பெரிய ஆச்சர்யத்தோடு சந்தீப்பை தழுவி நலம் விசாரித்து
முடிப்பதற்குள் , சந்தீப்புடனான பிரயாணங்களுக்கு திட்டமும் கூடவே
சொல்லப்பட ஆச்சர்ய விழிகள் இப்போது பயத்தில்..

சந்தீப்பை உடனே நீச்சல் குளத்துக்கு அழைத்து சென்றனர்.

முடிந்து வந்ததுமே, வாராந்திர சாமான் வாங்க செல்லும் மாலுக்கு அழைத்து சென்றோம்.

சந்தீப்பை எங்கு உட்கார சொல்வது முன் சீட்டிலா பின் சீட்டிலா என்ற
கருத்தாய்வுகள் தொடர்ந்து முன் சீட்டிலேயே அமர்ந்தான்.

சந்தீப் வந்ததால் இன்று மட்டும் ஐஸ்கிர்ரிம் வாங்கிக்கொள்கிறேனே என
கெஞ்சும்போது என்ன சொல்ல ?. பெரியவன் எனக்கும் வாங்கிக்கவா என கேட்க,
க்ர்ர்ர்ர்ர்ர், வேண்டாம் நீ வாங்கினால் எனக்கும் ஆசை வந்திடும் , என
தடுப்பதை பார்த்து சந்தீப் யோசித்திருக்கலாம்.

வீடு வந்ததும் , கொஞ்சம் விளையாட்டு , பின் ,இப்ப சந்தீப்பை எங்கு தூங்க
சொல்வது?... யார்கூட?..

தன்கூடவே படுத்துக்கொள்ளணும் என குழந்தை சொல்ல சந்தீப்புக்காக இடம்
ஒதுக்கப்பட்டது..

காலை எழுந்ததுமே ஒவ்வொருவராக வந்து சந்தீப்புக்கு காலை வணக்கம்
சொல்லவும், சந்தீப்புக்கு வெட்கம் போல.

பெரியவர் , சந்தீப்ப்பிடம் வழியனுப்பிவிட்டு பள்ளிக்கு செல்ல நானும்
சின்னவரும் சந்தீப்புடன் மார்கெட் சென்று வந்தோம்.. சீட் பெல்ட்
போட்டதிலிருந்து திரும்ப வீடு வந்து சேரும் வரை சந்தீப்பின் கேள்விகளாய்
குழந்தை கேட்க, ஒரே கதாகலாட்சேபம் தான்.

சில பதில்களில் திருப்தியடையாதபோது நான் சிறிது எரிச்சல்பட்டுவிட,
சந்தீப் முன் எரிச்சல்பட்டதுக்கு ரொம்பவே அவமானப்பட்டார் குழந்தை.

பின் இருவரிடமும் மன்னிப்பு கேட்கவேண்டியதாயிற்று.

வந்து உணவருந்திவிட்டு, சிறிது நேரம் ஆங்கில வார்த்தை கொண்ட சீட்டுகள்
விளையாடிவிட்டு, தூங்கிவிட்டனர் இருவருமே சோபாவில்.

அப்பாடா ஒருவழியாய் போன மாத ஆ.வி படிக்க நேரம் கிடைத்ததென்று நான் படிக்க
உட்கார, தூக்கத்தினூடையே, " அம்மா, சாயங்காலம் தயாராக இருங்கள்,
சந்தீப்பை பூங்கா அழைத்து சென்று ஊஞ்சலில் விரைவா ஆட்டிவிடணும் " என
சொல்லிவிட்டு, மீண்டும் தூங்க....ஆச்சர்யத்தில் நான்..

கவனமாக சந்தீப்போடு எடுத்த படங்களை பெரியவர் வந்து பார்த்து கமெண்ட் அடிக்க ,

இதோ கிளம்பிக்கொண்டிருக்கிறேன் பூங்காவுக்கு சந்தீப்போடு..

சந்தீப் யாரென புரிந்தீர்கள்தானே..?


சிறுவர்தின பதிவு..

Wednesday, November 11, 2009

காவ் சாம் லாய் யாட் - 300 சிகர மலைகள்...












தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலிருந்து சுமார் 400 கிமீ தொலைவில் உள்ளது காவ் சாம் லாய் யோட் ( 300 சிகரம் கொண்ட மலை ) .கடற்கரையை ஒட்டி அமைந்திருப்பதே இந்த இயற்கை பூங்காவுக்கான விசேச அழகும்.

மலைகளில்
காணப்படும் சுண்ணாம்புகல் பாறைகளால் கடற்கரையே வெண்மையாக காட்சியளிக்குது.
குகைகளுக்குள்ளே இந்த சுண்ணாம்புக்கல் வடிந்து அழகிய சிற்பமாக வடிவெடுத்து பார்ப்பவரை கொள்ளைகொள்ளச்செய்கிறது.

இங்கேயே சதுப்பு நிலமும், அலையாத்திக்காடுகளும் இருந்தாலும் முக்கியமானது தம் ப்ரயா நக்கோன் ( Tham Phraya Nahon) என்கிற மலைக்குகைதான்.. சுமார் 1.5 கிமீ செங்குத்தான மலை மீது ஏறி இறங்கி மலையின் அடுத்த பக்கம் செல்லலாம் அல்லது நடக்க , ஏற விரும்பாதவர்கள் , படகில் அடுத்த கறைக்கு செல்லலாம்..

மலைமீது
ஏற்பவர்கள் மலை உச்சியில் கடல் சூழ்ந்த இடங்களையும் , குட்டி குட்டியாய் தெரியும் படகுகளையும் கண்டு
வியக்கலாம்..
ஆனாலும்
கொஞ்சம் ஆபத்தானது மலையேற்றம்..



கரணம்
தப்பினால் மரணம் என்பதுபோல , கொஞ்சம் பயத்தில் ஆடினாலும் விழ வாய்ப்புள்ளது.


இந்த
சதுப்பு நிலக்காடுகளை தேடி பல பறவைகள் குடிபெயர்ந்து சரணாலயம் போல் ஆனது..கிட்டத்தட்ட 100 சதுர கிமீ.அளவு கொண்டது இந்த பூங்கா..
மலையின் அந்தப்பக்கம் அடைந்ததும் மீண்டும் செங்குத்தான பயணம் சுமார் 500 மீட்டர்..

முதல்
மலையிலாவது சிமெண்டால் ஆன பாதையும் கம்பியும் போட்டு ஏற நடக்க வசதியாக இருக்கும்.
ஆனால் இந்தப்பாதை இய்றகையாகவே கற்களால் அமைக்கப்பட்டுள்ளது..

முதல்
சிலபடிகளில் கால் வைத்ததுமே மூலிகைகளின் வாசனை நாசியை துளைக்கின்றது..
கிட்டத்தட்ட நார்த்தாங்காய் இலையின் மணம் . அல்லது லெமன் கிராஸ் எனப்படும் செடியின் மணம்.. , வெகு சுகமாக இருக்குது..

தினம் பெய்த மழையில் படிகளில் உள்ள மண் ஈரம் பிடித்து பிசுபிசுப்பாக வழுக்காகவும் இருந்தது.
நல்ல காலணி அணிந்திருந்தால் நடப்பதும் ஏறுவதும் எளிது. அல்லது காலை பதம் பார்க்கும் கற்கள்..

கிட்டத்தட்ட டார்சான் வாழ்ந்த காடுகள் போல செடிகளும் கொடிகளும் சுர்றிலும் சூழ அதை விலக்கி நடக்கணும்.. சின சின்ன ஒளிக்கீற்றுகள் அம்மர இடுக்கிலிருந்து எட்டிப்பார்ப்பதும் ,, பறவை, பூச்சிகளின் சத்தங்களும் , நலம் விசாரிப்பது போன்றதொரு அழகு..

பாதி தூரம் ஏறியதுமே தாகம் எடுக்கிறது.. மேலே சென்றவர் கீழே இறங்கிவர நம் ஆயாசத்தை பார்த்து அவர்களாகவே தண்ணீர் வேணுமா என கேட்க , மறுக்கமுடியவில்லைதான். இறுதியாக உட்கார்ந்து உட்கார்ந்து ஒருவழியாக குகைகளை சென்றடைந்ததும் , பிரமிப்பூட்டும் அந்த குகையும் அதன் உச்சியில் இருந்து விழும் ஒளியும், நடந்து வந்த அலுப்பை மறக்க செய்கிறது. காவலர் ஒருவர் தண்ணீர் தருகிறார் அனைவருக்கும் சிறு தொகை பராமரிப்புக்காய் பெற்றுக்கொண்டு...

வெளிநாட்டினர் கைக்குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு சிறுஅவர் சிறுமிகளை நடத்திக்கொண்டு வெகு லாவகமாய், ஆர்வமாய் செல்வதை பார்த்தாலே நமக்கும் ஆர்வம் தொற்றிக்கொள்ளுது. குகையின் நடுவில் புத்தர் கோவில் உள்ளது.. அதனை சுற்றி வித்யாசமான பெரிய பெரிய பாறைகளும்..


தாய்லாந்து வந்தால் பார்க்க வேண்டிய குகைக்கோவில்.

Friday, October 16, 2009

ஆமா, நானும் புகை பிடிக்கிறேன்






விடியற்காலையில் ஆதவன் வருகையை
விழிவைத்து பார்த்து ரசிக்கையில் விரைவாய் நாசி ஏறுது கீழ்வீட்டிலிறுந்து
விழுங்குவது போல் சிகெரெட் புகை


ஆமாம் நானும் புகை பிடிக்கிறேன்.


அரக்க பரக்க அலுவல் செல்ல

அள்ளிபோட்டதை வாயில் மெல்ல

அருகே புகை வர , பிடிக்கிறேன்

அஞ்சு பைசா செலவில்லாமல்


ஆமாம் நானும் புகை பிடிக்கிறேன்.


மனம் மகிழ சினிமாவுக்கு போனா
மப்போடு மனிதன் பின்னாலிருக்க

மயக்கமாய் வருது புகை நெளிந்து

மன்றாடினேன் , புகை பலமாய் வருது.


ஆமாம் நானும் புகை பிடித்தேன் விரும்பாமலே..



( கீழ் வீட்டில் இருந்து புகை வருது பால்கனி வழியே. புகைபிடிப்பவனை திட்ட முடியாமல் அவசரமாய் ஒரு கவிதை..:)) )

பாசிவ் ஸ்மோகிங் தான் அதிக ஆபத்தும்.. தயவுசெய்து நிறுத்துங்க மக்களே...:)

தெளிவு.. ( குட்டிக்கதை )



house.jpg


ஊருக்கு போகிற மகிழ்ச்சியேதுமில்லாமல் பெட்டியை கடமைக்காக அடுக்கிக்கொண்டிருந்தார் கதிரேசன்.

ஒரு வார காலமாக சுறுசுறுப்பு ஏதுமில்லாததை கவனித்திருந்தான் ஹமீது..

கேட்கணும்னு நினைத்தாலும் தன்னை விட வயதிலும் பதவியிலும் பெரியவராய் இருப்பதால்

வாய் வரை வந்ததை தள்ளிப்போட்டே வந்தான்..ஆனால் இப்ப கேட்டே விடுவது என கேட்டான்.

" கதிரண்ணா , நானும் பாக்குறேன் ஒரு வார காலமா ஊருக்கு போற உசாரில்லாம இருக்கிறீகளே.. ஏன் ணா?.."

" அதொண்ணுமில்லப்பா.. சம்பாதிப்பது மட்டுமே நம்ம பொழப்புன்னு ஆயி போச்சு..கடைசி வரை இதான் போல.."

வெறுமையோடு சொன்னார்..

" அதுக்கேண்ணா வருந்தணும்.. நம்ம குடும்பம் நல்லா இருப்பது பெருமைதானே நமக்கு.. அதுக்கு சின்ன தியாகம்னு நெனச்சுக்கோங்க.."

" அப்படித்தான் நெனச்சு 15 வருசம் ஓட்டிட்டேன்.. ஆனா ஒவ்வோரு முறையும் ஊருக்கு போய்விட்டு வரும்போது அங்க நடக்கிற ஆடம்பரமும், அவங்க எதிர்பார்ப்பும்

எனக்கு கவலை அளிக்குது.. பணம் என்பது தேவைக்குத்தான் என்ற நிலை மாறி, விட்டா நாய்க்குட்டிக்கு தங்க பிஸ்கட் போட்டாலும் போடுவாங்க போல..இதைவிட சுற்றியிருக்கும் பொய் சொந்தங்களும்..ம்..ம். என்ன சொல்ல..."

"சரி ணா , அப்ப நான் சொல்றத கேளுங்க.."

கலங்கலாய் தெரிந்த மேகத்தை வருத்தமாய் பார்த்து விமானத்தின் ஜன்னலை மூடினார் தூங்கிட..

-------------------------------------------------------------------

விமான நிலையத்திலிருந்து இறங்கியதுமே விளங்கிப்போச்சு தன்னை வரவேற்க கால் டாக்ஸி மாட்டுமே வந்திருப்பதை..

நேராக வீட்டுக்கு போனதும் மனைவியும் குழந்தைகளையும் தவிர்த்து எப்போதுமிருக்கும் சொந்த பந்த கூட்டம் யாரும் இல்லை..

நிம்மதியாயிருந்தது.. ஆனாலும் காண்பித்துக்கொள்ளவில்லை..

குளித்து ,உணவருந்தி முடித்ததுமே மனைவியிடம் இருந்து வெடுக்கென கேள்வி வந்தது..

" வேலை போயாச்சு..அப்ப இனி என்ன செய்வதாய் உத்தேசம்?.. எங்க அப்பா கேக்க சொன்னாங்க.."

பதிலேதும் பேசவில்லை. கை கழுவிவிட்டு சென்றார்.

பெரியவனும் சின்னவளும் மலங்க மலங்க விழித்தார்கள்.. அப்பாவிடம் சகஜமாக எப்போதும் போல்
சிரித்து பேசலாமா , இல்லை அம்மா திட்டுவாளா என..

அவர்களுக்கு வாங்கி வந்த பொருள்களையும் தயக்கத்துடனே வாங்கி சிரிப்பை நன்றியாக உதிர்த்துவிட்டு சென்றார்கள்..

2 நாள் மெளனமாக கழிந்தது ,தொலைபேசி அழைப்புகள் கூட இல்லாது.. வித்யாசமாயிருந்தது..

முன்பெல்லாம் விருந்துண்ண பெரிய கால்ஷீட் தயாராகும்.. கூடவே ஊர்சுற்ற கார்களும் வேன்களுமாய் களைகட்டும்.....

சாயங்காலமாய் காலாற நடந்து வரலாம் என தெருவில் நடந்தால் தினமும் பார்ப்பவரை பார்ப்பதுபோல் கடமைக்காக

புன்சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டு சென்றார்கள்...தையல் கடை திருமால் மட்டும் மாறவில்லை.. அவன் கடையில் உட்கார்ந்து ஊர் நிலவரம் தெரிந்துகோண்டார்...

எங்கே வேலை கேட்டு தன்னிடம் வருவானோ என்ற பயம் சந்திக்கும் அனைவரின் முகத்திலும் படர்ந்திருந்தது..

ஒரு வாரம் கழித்தே மச்சினனும் மாமனாரும் வந்தார்கள்... அன்று மட்டும் விசேடமாய் கறிக்குழம்பு வாசம் அடித்தது வீட்டினுள்..

ஏற்கனவே திட்டமிட்டபடி அவர்களுக்கு சாதகமாய் வியாபாரத்தில் வந்து கலந்துகொள்ள வேண்டினார்கள்..

அதுவும் கூட தான் அனுப்பிய பணத்தில் வந்த வியாபாரம் என்பதை பேச்சிலும் தவறி உணர்த்திடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தார்கள்..

தான் ஆசையோடு கட்டி குடியிருக்கும் வீட்டை விற்றுவிட்டு மாமனார் ஊரில் வந்து வாடகைக்கு வீடெடுத்து குடியிருக்க இலவச அறிவுறையும் வழங்கினார்கள்..

தன் முன் பேசவோ உட்காரவோ அஞ்சிய மைத்துணன் எல்லாம் இப்ப அறிவுறை அள்ளி வழங்கும் பெரிய மனிதனாக்கப்பட்டான்...தன் மனைவியாலேயே..

எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டார் கதிரேசன்..

படிப்பில் நாட்டம் காட்டாத மனைவி இப்போது பிள்ளைகளை எதிர்கால பயம் குறித்து மிரட்டி படிக்க வைத்தாள்..

கழுத்தில் ஏறியிருந்த கனமான நகைகளும் தலையில் உள்ள கனங்களும் இந்த ஒரு மாதத்தில் வெகுவாக குறைந்திருந்தது...

வருடாவருடம் இருப்பதுபோல் பேருக்கு கூட விருந்தாளியில்லை, கல்யாண வீடோ, திருவிழாக்களோ , ஷாப்பிங்கோ இல்லை..

மறுநாள் காலை வேலை தேடுவதாக சொல்லிவிட்டு 2 நாள் கழித்தே திரும்பி வந்தார்..

வந்ததும் இனியும் தன் விடுமுறை 2 வாரமே இருப்பதால் குடும்பத்தினரை வருத்திடக்கூடது என எண்ணியவராய், மனைவி பிள்ளைகளை அழைத்தார்.

வருமானம் தரக்கூடிய 2 தோட்டங்களையும் , அதனோடு அமைந்த வீட்டையும் விலை பேசியிருப்பதை காண்பித்தார்..

" இப்ப எதுக்கு இது " என அவசரப்பட்டு பேச முனைந்த மனைவியை செய்கையால் அமர்த்தினார்.

அருகிலுள்ள ஊனமுற்றோர் மற்றும் முதியோர் இல்லத்துக்கு மாதாமாதம் தான் பணம் அனுப்புவதாய் வாக்களித்த பத்திரத்தையும் காண்பித்தார்.

இவருக்கென்ன பித்து பிடித்ததா என எரிச்சலோடு உள்ளே செல்ல எண்ணிய மனைவி கையை பிடித்து அமர வைத்தார்..

மெதுவாக விளக்க ஆரம்பித்தார்..

ஒவ்வொரு முறையும் பணத்தோடு பொருளோடு வரும் தமக்கு கிடைத்த போலி மரியாதையையும், தன் இல்லத்தில் நிரம்பி வழிந்த

போலியானவர்களையும் அவர்கள் நடவடிக்கையையும் , தற்போது வேலையின்றி வந்ததால் ஏற்பட்டுள்ள மாற்றத்தையும் ஒப்பிட்டார்..

பிள்ளைகளுக்கு பொறுப்பை பற்றி நிதர்சனமாய் எடுத்துச்சொன்னார்..

மனைவியின் ஆடம்பரம் தேவையற்றதாகவும் , தற்போது ரசிக்கவோ , மதிக்கவோ ஆளில்லாமல் போனதையும் சுட்டிக்காட்டினார்..

நிஜமான மகிழ்ச்சியை ஊனமுற்றோர் , முதியோர் இல்லம் சென்று எப்படியெல்லாம் பெருக்கிக்கொள்ளலாம் என மென்மையாக சொன்னார்.. அதில் நம் எல்லோருக்கும் கடமை இருப்பதையும் எடுத்துரைத்தார்..

பொட்டில் அடித்தாற்போல் இருந்தது குடும்பத்தினருக்கு..

தான் மீண்டும் அதே வேலைக்கு வெளீநாட்டுக்கு செல்வதாக கூறினார்..

தாம் ஏமாற்றப்பட்டதை அறிந்தாலும் எல்லாம் நன்மைக்கே என்பதை கொஞ்சம் கோபத்தை காட்டிவிட்டு புரிந்துகொண்டாள் மனைவி..

அந்த நாளும் வந்தது... மனைவி கலங்கிய கண்களோடு ,

" பணம் மட்டுமே இருந்தா போதும்னு நினைத்திருந்தேன்.. இப்பத்தான் நிஜமான வாழ்வுக்கான அர்த்ததை சொல்லித்தந்தீர்களே, இன்னும் பணம்

சம்பாதிக்க நீங்க போய்த்தான் ஆகணுமா..? நம்மிடம் இருப்பதை வைத்து எளிமையாகவே நான் இல்லறம் நடத்துவேனே இனி.. தயவு செய்து போகவேண்டாமே"

என கெஞ்சினாள்..

வாழ்நாளில் முதன்முறையாக மனைவியிடமிருந்து இப்படி ஓர் வார்த்தையைக்கேட்டு மனமகிழ்ந்தார் கதிரேசன்..

தன் பொறுப்புகளை மற்றொருவரிடம் கொடுத்துவிட்டு முறைப்படி வேலையிலிருந்து விடைபெற்றுக்கொண்டு வருவதாக சொல்லி விடை பெற்றார் .

சிறுவனாயிருந்தாலும் ஹமீது சொன்ன யோசனை , வலிகள் பல தந்தாலும் எத்தனை தெளிவை தந்துள்ளது என எண்ணியவாறே

நிறைந்த மனதோடு விமானத்தின் ஜன்னலில் கடக்கும் மேகங்களை குழந்தையின் மகிழ்வோடு ரசிக்க ஆரம்பித்தார் முதன்முறையாக....

?ui=2&view=att&th=1245b7df79420677&attid=0.1&disp=attd&realattid=ii_1245b7df79420677&zw

Wednesday, September 16, 2009

செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும்....பாகம் 2

பாகம் - 2
--------------


அடுத்து நாம் சொல்ல வேண்டிய பழக்கவழக்கத்தை கதை மூலம் எப்படி சொல்லலாம் என பார்ப்போம்..

குழந்தைகளுக்கு பிடித்தமான ஒன்று கதைகள்.. இதில்தான் பல சூட்சமம் அடங்கியிருக்குது என்பது பல பெற்றோருக்கு

தெரியவில்லை...அப்பா தொலைக்காட்சியிலும், அண்ணா , அக்கா வீட்டுப்பாடத்திலும், அன்னை சமையல் அறையிலும் இருக்கும்போது

குழந்தைக்கு என்ன செய்வதென்றே தெரியாது.. ஒருவேளை விளையாட்டு சாமானோடு விளையாடலாம்... ஆனால் அதுக்கும் துணை தேவைப்படும்.

அப்போது குடும்பத்தினர் யாரையாவது வம்பிழுக்கும் அவருக்குண்டான வேலையை செய்ய விடாமல்..அண்ணா அக்காவோடு சண்டை பிடிக்கும்..படிக்க விடாமல்..

இத்தகைய நேரத்தில்தான் குழந்தைக்கான லஞ்சமாக பயன்படுகிறது கதைகள்...

குழந்தையிடம், பக்குவமாக சொல்லணும், " நீ இந்த க்ரையான்ஸ் அல்லது கலர் பென்சில் வைத்து இந்த தாள் முழுவதும் படம் வரைவாயாம்...

நாமெல்லோரும் வேலை முடித்ததும் படுக்க செல்லும்போது உனக்கான அழகான கதை ஒன்று தயாராகிக்கொண்டு இருக்குது என் மூளையில்.." என குழந்தையின் கண்களைப்பார்த்து மிக உற்சாகமாக சொல்லிடணும்..

அப்போதே ஆர்வத்தை தூண்டி விட்டு திசை திருப்பிடலாம்.. விலங்குகள் பிடிக்காத குழந்தைகளே இருக்க மாட்டார்கள்..

அதற்கேற்றவாறு . " இன்று என்ன கதை தெரியுமா..? யாரைப்பற்றி தெரியுமா?.. பூனைக்குட்டி பள்ளிக்கூடம் சென்ற கதை " என்றோ ,

" எலியார் நீச்சல் படித்த கதை " என்றோ குழந்தையின் செயலோடு ஒப்பிட்டோ கதை சொல்வதாய் ஆர்வத்தை தூண்டிவிடலாம்..

குழந்தையின் கவனம் முழுதும் இப்போதே கேட்கப்போகின்ற கதையில்.. இப்போதே அவர் எலியாரைப்பற்றியோ பூனையாரைப்பற்றியோ கற்பனை

செய்ய ஆரம்பித்திருப்பார்... நீங்கள் சமையலறையில் இருக்கும்போதே இடையில் வந்து சொல்வார், " அம்மா , அந்த எலிக்கு நான் ஒரு பேர் வைத்துள்ளேனாக்கும்"

என்று.. அது சம்பந்தமான படங்களை கூட நீங்கள் தாளில் வரைந்துகொடுத்து கலர் செய்ய சொல்லலாம்...

வேலையெல்லாம் முடிந்து படுக்க செல்லும் நேரம் சொன்னது போல் குழந்தையின் கதை சொல்லும் நேரம்..பொன்னான பொழுது..

நீங்கள் சொல்லப்போகும் கதையிலேயே உங்கள் குழந்தைக்கான அத்தனை நல்ல பழக்க வழக்கங்களையும் , அவர்களுக்கு

பிடித்தமான விலங்குகளின் பாத்திரப்படைப்பில் ஏற்றி, சுவையாக்கி பறிமாறிடணும்...

கதையில் உங்கள் குழந்தை பேசும் அனைத்தையுமே பூனை, எலிகள் பேசும்..

குழந்தைகள் செய்யும் சேட்டை குழப்படி அனஇத்தும் விலங்குகள் செய்திடும்..

அதை கேட்டு குழந்தைகள் வெட்கச்சிரிப்பு ஒன்றை பரிசளிப்பார்கள்...

இடையிடையே கேள்வி கேட்டு அவர்களின் கற்பனை , ஆர்வம் எந்தளவு இருக்கிறது என பார்த்துக்கொள்ளலாம்..

அதுவே நீங்கள் கதையை யோசிப்பதற்கான இடைவேளையாகவும் எடுத்துக்கொள்ளலாம்..

விலங்குகள் செய்யும் சின்ன தவறுகள், சேட்டைகள், அதன் பாதிப்புகள், அதற்கான சின்ன தண்டனைகள் , அவைகள்

மீண்டும் நல்ல வழிக்கு மாறுதல் என்று கதையிலேயே வாழ்க்கைக்குண்டான அனைத்தையும் சொல்லிடலாம்...

முக்கியமாக பாவனைகள் , கை, விரல்கள் கொண்டும் முக மாற்றத்தோடும் விளக்கிடணும்..

குழந்தையின் கைகளை பிடித்துக்கொண்டே " எலி இப்படி நடந்து சென்றது" என கைகளில் நம் விரல்களைக்கொண்டு நடக்க செய்யலாம்..

அடக்க மாட்டாமல் சிரிப்பார்கள்...:)

அது அப்படியே குழந்தை மனதில் பதியும்..

குழந்தையே இடையிடையே கமெண்ட அடிக்கும்... அய்யோ பூனை ரொம்ப சேட்டைதான்.. அதானால்தான் அது கீழே விழுந்தது கை ஒடிந்தது..மருத்துவரிடம் சென்றது

என்றோ, எலியார், யாருக்கும் கொடுக்காமல் தான் மட்டுமே வைத்துக்கொண்டதால் அதற்கு யாரும் உதவவில்லை என்றும் குழந்தையே

நல்லது கெட்டதை பிரித்து பார்க்கும்...

மேலும் தூங்கும் பொழுது இனிமையாக பெற்றோரின் அரவணைப்பில் கற்பனையோடு தூங்கும்...

இதனை குடும்பத்தினர் யாரும் செய்யலாம்.. பாசப்பிணைப்பு அதிகமாகும்...கட்டுப்பாட்டுக்கு
ள் வரும் குழந்தை...

மாதத்தில் ஒரு நாள் நாம் சொன்ன கதையை அண்ணா அக்காவுக்கு குழந்தையை தன் மொழியில் சொல்ல சொல்லணும்..

அதை கேட்பது இன்னும் இனிமை...அந்த குழந்தையின் முக பாவனைகள் பார்ப்பதே ஒரு அழகு...

நம் குழந்தைக்கு மட்டுமல்ல அக்கம் பக்கம் உள்ள குழந்தைக்கும் நீங்கள் கதை சொல்வீர்களானால் நீங்கள் தான் ஹீரோ, ஹீரோயின்..

நீங்கள் சொல்வதையெல்லாம் கேட்பார்கள் குழந்தைகள்...

கதை சொல்வதை சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைக்கும் சொல்லலாம்.. அந்த நேரம் தட்டில் உள்ள காய்கறிகளையே கதாநாயகனாக்கிடலாம்..

அது இன்னும் சுவாரஸ்யாமகும்...அதே நேரம் காய்கறி சாப்பிடுவதால் குழந்தைக்கு என்ன பலம் கிடைக்கும் என்பதையும் விளக்கி , பலசாலி ஆகிவிட்டதாய் பிரம்மிக்க வைக்கலாம்..

சாப்பிடுமுன் எளிதாக தூக்கிய குழந்தையை சாப்பிட்ட பின் "தூக்கவே முடியலையே . நீ எவ்வளவு பலசாலி " என சொல்லி ஆச்சர்யப்பட வைக்கணும்..

சாப்ப்பிட்டு முடித்ததும் தட்டில் உள்ள கழிவுகளை குப்பை கூடையில் கொட்டவும் தண்ணீர் ஊற்றி அலம்பவும் கற்று தரலாம்..( அது அவ்வலு சிறப்பாக செய்யாவிட்டாலும் பரவாயில்லை.)

அவ்வேலையை செய்ததும் குழந்தையை குடும்பத்தார் முன்பு மெச்சி உச்சி முகர்ந்து பாராட்டிடணும்...குழந்தையும் குடும்பத்தில் ஒரு முக்கியமான

பெரிய மனிதர் என காண்பிப்பது தன்னம்பிக்கையை வளர்க்கும் ...

அடுத்து வீட்டிலேயெ சின்ன சின்ன வேலைகள், பொறுப்புகள் எப்படி கொடுக்கலாம் , விருந்தினர் வந்தால் எவ்வாறு நடக்கணும் என்பதை கவனிப்போம்..

Monday, September 14, 2009

படித்ததில் பிடித்தது..

http://www.heartmath.org/
Experience the Planetary Shift on an Uptilt

A planetary shift is under way. Many sense this shift internally and we perceive that time is accelerating. It’s hard to keep up. We’re constantly bombarded by an ever-increasing number of choices. Emotions peak and ebb to extremes in the span of hours, even minutes. Uncertainty seems to be on the rise about our personal direction and the world’s.

Amid the stress and chaos, concern mounts over climate change, rising oil prices, economic instability and global insecurity, but people are coming together. A momentum is building among those who want to give back to society and take care of each other and our planet. Social networking is bringing these people together and there is an energetic sparkle in the air and a sense of hope that something new will emerge.


Scientific research shows these flickers of hope are qualities of the heart and spirit. The heart feelings of happiness, care and compassion are enhanced by:

  • Spiritual practices like meditation and prayer that connect us to something greater than ourselves.
  • Heart connection with others, close friendships within and outside the family.
  • Gathering with others frequently for uplifting purposes: church, social causes, etc.

We call these actions that help nurture us emotionally, mentally, physically and spiritually aspects of heart-based living. As the planetary shift continues and people experience greater stress, overstimulation, overload, stress-induced physical and mental health problems, the imperative to shift toward heart-based living increases.

As life’s pace continues to accelerate, we’ll be presented with even more choices and have less time to make them. The good news is that when we approach our choices with sincere heart intent it’s easier to access the energy required to shift quickly into the most beneficial mental and emotional states.

– When a person feels stress, overwhelm, anxiety, uncertainty and fear, the heart is sending chaotic and incoherent signals to the brain/mind, triggering stressful responses. The higher cortical functions are inhibited, meaning the heart and brain are out of alignment, so solutions to personal or world problems elude us.

Incoherence & CoherenceCollectively, these negative emotions are registered in the heart and brain’s electromagnetic fields, generating a global stress and incoherence wave that goes out to those around us and around the globe. Stress and incoherence are intensified by instant massmedia reports – the natural disasters, social upheaval, economic turmoil and more.

– When you feel genuine hope, care and compassion, your heart is sending harmonious and coherent signals to the brain/ mind, replacing feelings of separation with a sense of connection. The heart and brain are aligned and in sync. The higher cortical functions are enhanced, facilitating objective, sober assessment and intuitive perception. You perceive more wholeness, and solutions to problems are more apparent.

Collectively, positive emotions such as hope, care, compassion and appreciation generate a global coherence wave whose electromagnet field goes out to those around us and across the globe. Increasing heart alignment and focusing on heart-based living have the potential to create a global coherence wave to facilitate new solutions for the world’s problems.

More than ever people need to understand the physiology of coherence that underlies heart-based principles and the science behind global coherence. Click here to learn more about global coherence and the Global Coherence Initiative.


Tips for Heart-Based Living
  1. Positive feelings such as genuine care and appreciation add greater texture and richness to our lives: Sunsets are more beautiful, spring days feel fresher, and even food seems to taste better.

    Practice genuine appreciation for everything in your life, especially anything you may take for granted. Increasing heartfelt positive emotions like care and appreciation helps you move through difficult times with greater ease, security and grace. When you’re not aligned with your heart, the textures and richness of life can quickly diminish.
  2. Is my care producing or reducing stress? Be aware of how you feel about an issue at hand, place your focus in the heart area and breathe in a positive feeling or attitude. Be objective, as if the issue or problem is someone else’s. Relax in the heart area and become neutral about the issue, allowing your heart intelligence to offer new perspectives and possibilities.

    You can increase the potency of your care and intentions and the effectiveness of your choices and actions. Listening to what your heart prompts you to do can make your caring more effective. Excessive care, or overcare related to an issue or situation can create stress and negative emotions, so it is important for your care to be balanced.
  3. Negative projections actually are negative thoughts and feelings about you, someone else or the future. Say you’re planning to meet someone with whom you have a hard time communicating. Instead of projecting judgment or anxiety, generate appreciation, care and calm. You’ll enter the meeting with a more balanced and intuitive perspective.

Friday, August 28, 2009

செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும்....பாகம் 1

அன்று ஒரு பெரிய கடைக்கு சென்ற போது கவனித்தேன்

" பேபி , இதை எடுக்காதே .."

" பேபி , உனக்கு எத்தனை முறை சொல்வது?"

" பேபி....சொன்ன பேச்சு கேள்.."

" பேபி.................."

இப்படியாக அந்த அன்னை மிக அதிக தடவை குழந்தையை கண்டித்து கொண்டிருந்தாள்.

குழந்தையோ அதை சட்டையே செய்யாது தன் சேட்டையை தொடருது..

குழந்தை வளர்ப்பு என்பது மிக பெரிய சவால் ஒன்றுமில்லை..

சில திட்டங்கள், சில கண்டிப்புகள் ,சில பாராட்டுகள் , சில மணி நேரம் போதுமானவை..

பிடிவாதம் பிடிக்கும் குழந்தையை சிறிது நேரம் அலட்சியப்படுத்தினால் போதும்..

நாம் செய்யாதே என்ற செயலை மீண்டும் மீண்டும் செய்வார்களாயின் ,

" இதை அடுத்த முறை நீ செய்தால் நீ தனியாக நிற்க வைக்கப்படுவாய், அல்லது ஏதாவது சின்ன

தண்டனை சிறிது நேரமாவது ( 10 நிமிடம் - அதிகமாய் 30 நிமிடம் வயதை பொறுத்து ) கொடுக்கலாம்

அந்த தண்டனை எப்படி இருக்கணும்.?..பேச்சில் ஏதும் திட்டாமல், செயலில் திட்டவட்டமாக இருப்பாதாக காண்பிக்கணும்..

ஒருவேளை குழந்தை மின்சார தொடர்புடைய சாதனங்களோடு விளையாடுது என வைப்போம்.

நாம் சொல்ல சொல்ல ஆர்வம்தான் கூடும் குழந்தைக்கு..

அவர்களுக்கு அதனால் வரப்போகும் பாதிப்பு ஒருபோதும் விளங்குவதில்லை..அனுபவித்ததில்
லை..

அந்த நேரம் அவர்கள் தொடும்போது , அதிகமாய் பேசாமல்,

" நான் சொல்லியபடி நீ கேட்கவில்லை அதனால் நீ இப்ப தனியாக இருக்கவேண்டிய சமயம் " என மட்டும் அழுத்தம் திருத்தமாக

குழந்தையின் கண்ணை பார்த்து சொல்லி குழந்தைக்கு தண்டனை தரவேண்டும்.. நேரத்தையும் சொல்லிடலாம் ஒரு புன்னகையோடே..

அடம்பிடிக்கும் குழந்தையும் பெற்றோரின் கண்டிப்பை புரிந்துகொள்ளும்..தண்டனை நேரம் முடிந்ததும் சரியாக விடுவிக்கணும்..

ஒரே பொருளுக்கு இரு குழந்தை சண்டை போடுமானால் , யார் பக்கம் நியாயம் என்றெல்லாம் யொசிக்க வேண்டாம் ,

அந்த பொருளை சிரித்துக்கொண்டே வாங்கி சென்றிடணும்..

இப்ப குழந்தை புரிவார் , நாம் சண்டையிடாமலாவது விளையாடி இருக்கலாம் , அம்மா வரை பிரச்னை இனி கொண்டு செல்லக்கூடாது என.

அல்லது இருவரும் சமாதானமாய் விளையாடுவதாய் சொன்னால் மீண்டும் தரலாம்..

கத்தும் குழந்தையை கண்ணை பார்த்துக்கொண்டே பொறுமையாய் காதை மூடிக்கணும்..

குழந்தை கத்துவதை நிறுத்தினால் மட்டுமே அன்னை கவனிப்பாள் என புரியணும் குழந்தைக்கு...

அடிப்பதோ, அன்னை மேலும் கத்துவதோ எடுபடாது வீணும்..தவிர்த்தலே நன்று..

இதே போல் வெளியில் செல்லும் போதோ, காரில் செல்லும்போதோ

தேவையற்ற நடவடிக்கை செய்தால் அதற்கான தண்டனை எது எனவும், நல்லபடியாக நடந்தால் அதற்கான பரிசு

என்ன எனவும் முன்கூட்டியே அறிவித்திடணும்..

தண்டனை கொடுக்க மறந்தாலும் மறக்கலாம், ஆனால் ஒருபோதும் பரிசை, பாராட்டை கொடுக்க மறந்துவிடாதீர்கள்..

அப்படியே மறந்தாலும் உடனே மன்னிப்பு கேட்டிடுங்கள் குழந்தையிடம்..

நாம் எப்படி நம்மிடம் குழந்தைகள் நடக்க வேண்டும் என நினைக்கின்றோமோ அவ்வாறே நாம் அவர்களிடம் நடந்துகொள்ளணும்

ஈகோ ஏதுமின்றி.. எப்போதும் மன்னிப்பும் , தயவுசெய்து என்றும் சொல்ல பழகிக்கணும்..

சின்ன சின்ன உதவிகள் குழந்தை செய்யும்போது நன்றி சொல்லி அவர்களை பாராட்டுவது , கொஞ்சுவது

அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்..அதுவே பெற்றோரின் கண்டிப்பான சமயத்துக்கும் மதிப்பளிக்கும்.

அடுத்து நாம் சொல்ல வேண்டிய பழக்கவழக்கத்தை கதை மூலம் எப்படி சொல்லலாம் என பார்ப்போம்..

******************************தொடரும் *********************

Tuesday, August 25, 2009

குழந்தையின் கும்மி.தொடர்ச்சி..













அம்மா
, அப்பா கூட ஒத்தையா ரெட்டையா மாதிரி கைக்குள் சின்ன குட்டி ரப்பர் பந்தை
ஒளித்து வைத்துக்கொண்டு விளையாடுவான்..

நாம கரீட்டா சொல்லணும் எந்த கைக்குள் பந்து இருக்குன்னு..
தப்பா சொல்லிட்டா ஒரே ஜாலிதான் போங்க...

இல்லையே னு சொல்லி இன்னொரு கையை திறப்பார்..
நம்ம ஆச்சர்யப்படணும், அதிசயப்படணும் , ணும்..ணும்...

ஆனா இதெல்லாம் அப்பாக்கு மட்டும் தான்..

என் முன்னால கையை நீட்டி காண்பிக்கும்போதே நான் , " பிங்கி பிங்கி பாங்கி..." சொல்ல ஆரம்பிப்பேன் ராகத்தோட..

சொல்லி முடித்தும் என்னால எளிதா முடிவெடுக்க முடியாம திணறுவேனாம்..பயத்தோட..


அந்த பிஞ்சு மனசு கேக்குமா.?.. அம்மா தோக்கலாமா..?


பந்து இருக்கும் கையை மட்டும் என் விரல் தொடும்படி வெகு அருகில் நீட்டுவார்..
நான் அதை சரியா தொடணும்.

தொட்டதும் ஒரே குஷி...
ஹே.. அம்மா சரியா சொல்லிட்டாங்க.. னு..

நான் வேணுமுன்னே தப்பா தொட்டாலோ , உடனே முகத்தை சோகமா வெச்சுக்கணும்.


அதுக்கு வருகிற ஆறுதல் இருக்கே...அப்பப்பா..
"

பரவால்ல மா.. நெக்ஸ்ட் டைம் நீங்கதான் வின்.."னு கன்னத்தை வருடி கேட்காமலே முத்தம் கொடுத்து..


இதுக்காகவே தோத்து போகலாம்தான்..



பார்த்துக்கொண்டிருக்கும் அப்பாவோ , " நான் தோற்றபோது எனக்கு மட்டும் முத்தம் தரல நீ.?"

" பாவம் அம்மா.. அவங்க கேர்ல்.. கேர்ல்ஸ் ஆர் ஸாப்ட்.." னு சொல்லி தப்பிச்சுடுவார்..


இத்தனைக்கும் அந்த பந்து விரல்களுக்கிடையில், என்னைப்பார் என் அழகைப்பார் னு பளீச் கலரில் மின்னிக்கொண்டிருக்கும்...என்பதை நான் சொல்லித்தான் தெரியணுமா?..

அடுத்து தட்டாமாலை சுற்றணும் ..அலுவல் விட்டு வீடு நுழைந்ததும்..
ஒருவாட்டி சுற்றி முடிந்ததுமே , யார் யார் எங்க இருக்கா னு தெரியாது..வீடே சுற்றிக்கொண்டிருக்கும்..

ஆனா சின்னவர் அலட்டிக்கொள்ளாமல், இன்னொருவாட்டி ன்னு சொல்லி சொல்லி 10 முறையாவது சுற்ற வெச்சுட்டு , " வேண்டாம் தலை சுற்றும் " னு சொன்னா , " இல்ல பரவால்ல , ஒண்ணும் செய்யலை" னு சொன்னா என்ன செய்ய..

தலை அவருக்கா சுற்றும் நமக்குல்லா சுற்றும்...அத பத்தி அவருக்கு என்ன கவலை .. அதானே?..

---------------------------------------------


ஷாப்பிங் சென்ற போது ஒவ்வொரு ரேக் இடையில் சென்று அடிக்கடி காணாமல் போவான்..


ஆனா நம்ம கிட்ட வந்து ,
" ஏன் டேனியை காணாம போட்டீங்க..?" னு அதட்டல்..

" காணாம போடுறதுக்கு நீ என்ன சாமானா?.. எங்க காணாம போய்டீங்க னு சொல்லணும் . சரியா.?"


----------------------------------------------


" அப்பா உன்னை பேர் சொல்லிதானே கூப்பிடுறாங்க..?"
" ஆமா." நான்.. "
அப்ப நீங்க ஏன் அப்பாவை பேர் சொல்லி கூப்பிடல.?"


" அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.." நல்ல கேள்வி...
---------------------------------------------

காரில் சென்ற போது ஒரு பூனை அடிபட்டு குற்றுயிராய் கிடந்தது...
நான் பார்த்துவிட்டு சட்டென்று அடுத்த லேனுக்கு மாறினேன்
அலறி..பின்னால் வந்த கார் முழுதுமாய் ஏறி சென்றது..

அதை முன்சீட்டில் உட்கார்ந்து பார்த்தவனுக்கு தாங்க முடியாத கோபமும் சோகமும்..
எத்தனையோ பேச்சு கொடுத்து மாற்ற பார்த்தாலும் முடியவில்லை.

" ஏன் அந்த பூனை அடிபட்டது?.."


" அது ஒடி விளையாடும்போது ரோட்டுக்கு வந்தது..தெரியாமல்."


" அந்த கார் ஓட்டின ஆள் லூஸா..?"

" அப்படியெல்லாம் பேசக்கூடாது மா. அது ஏன் குறுக்கே வந்தது..?"

" அவர் பிரேக் போடலாமே..?"
"ம்.."

" ஏன் செத்தது..?.. இப்ப என்னாகும் செத்ததும்..? "


" பரவால்ல அது செத்ததும் ஜீஸஸ் கிட்ட போயிருக்கும்...அவர் பாத்துப்பார் இனி.."

" எனக்கு ஒரு செத்த புஸி கேட் வாங்கித்தாங்க.."
" அட .. அதெப்படி..." கொஞ்ச நேர யோசனைக்குப்பின் ,

" ம்.சரி அலுவலில் சொல்லி வைக்கிறேன் .. வந்ததும் வாங்கித்தருகிறேன்.." இப்ப தினமும் கேட்கும் கேள்வி

" செத்த புஸி கேட் எப்ப வரும்..?"

"அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.."

*********************************தொடரும்*******************************************

மீன் பிடித்தலும் பிள்ளை வளர்ப்பும்..- பாகம் 2

மீன் பிடித்தலும் பிள்ளை வளர்ப்பும்..- பாகம் 2


ஒருவழியாக அந்த நண்பர் முன்னால் பைக்கில் செல்ல நாங்கள் பின்தொடர்ந்தோம்..

பின்தொடர்வது எம்புட்டு ரிஸ்க் அதுவும் ஹைவேயில்.?

அவர் பாட்டுக்கு சிக்னல் கிராஸ் பண்ணிவிட்டால் அவரை தேடோ தேடுன்னு ஆளாளுக்கு

ஒட்டகச்சிவிங்கி போல கழுத்தை நீட்டி " அதோ அவர்தான் நீல சட்டை.."

" இல்லை இங்கே போறார் " னு கன்னா பின்னான்னு லேன் மாறி மன்னிப்பு கேட்டு அசடு வழிந்து

ஒருவழியா போனால் நாங்க ஏற்கனவே சென்றுள்ள ஒரு பெரிய விளையாட்டு மால் பக்கம்..

இத மொதல்லே சொல்லிருக்கப்டாதா?.. இங்க சந்திச்சுருக்கலாமே..

அத தாண்டி இப்ப சிட்டிக்கு வெளியே சென்றார் சுமார் 10 கிமீ..

அட இதுதான் நான் ஓட்டுனர் உரிமம் வாங்கிய இடம் .. இதுவும் எனக்கு தெரியுமே...ப்ச்ச்...

அப்புரம் சின்ன சின்ன சந்துக்குள் புகுந்து ஒரு கடை முன் நிப்பாட்டினார்.. மீனுக்கான உணவு வாங்க...

ஒருவழியாக அந்த மீன் பிடிக்கும் இடம் அடைந்தோம்...

ஆங்காங்கே உப்பளம் போல தண்ணீர் தேக்கி வைத்து மீன் வளர்க்கிறார்கள் .. பெரிய பாத்தி கட்டி, தென்னை மர நிழலில் குடில் ( குடிசை )

போட்டுள்ளார்கள்.. அங்கே குடும்பம் குடும்பமாய் வந்து அமர்ந்து மீன் பிடிக்கின்றார்கள்..பெரிய பெரிய கார்களில் வந்து..

பார்த்ததும் ஆச்சர்யம்.. கார் பார்க் செய்ய இடமில்லாத அளவுக்கு கார்கள்... அட இப்படி கூட பொழுது போக்குவார்களா என்ன?..

ஒவ்வொரு தோட்டத்திலும் ஸ்பீக்கர் வைத்து மென்மையான இசையோடு பாடல்கள் வேறு..

தென்னை தோப்பில் அடிக்கும் காற்றுக்கு படுத்தால் தூக்கம் வந்துடும் .. அவ்வளவு சுகம்..( ஐயா கொஞ்சம் படுக்கலாம் னு பார்த்தாரே.. விடல்லையே..)

வரப்போரம் பல பூச்செடிகள், கத்திரி , மிளகாய் கீரை என பாத்தி போட்டிருந்தார்கள் வேறு..

முதலில் நுழையும்போது இவர் கடிந்து கொண்டார்தான்.. ஏன் இப்படிப்பட்ட இடங்களுக்கு வரணுமா என..

நாம் வளராத சூழ்நிலையா...?வாய்க்கால், வரப்பு என...

அதுக்கில்லை , இவர்களுக்கு புதிதாக பழகும்போது ஒத்துக்கொள்ளாதே என்ற கவலை.. ( சொன்னதுபோல்

வீடு வந்தததுமே தொடர்ந்து இருவருக்கும் வயற்று வலி..மருத்துவமனை, வாந்தி..இத்யாதி.)

தன்னுடைய உபகரணங்களை எடுத்து வைத்து அவர்கள் இருவரும் ஒரு குடிலில் செட்டில் ஆனார்கள்..

நாங்களும் அமர்ந்தோம்.. ஒரு நடை போய்விட்டு வந்து..

ஆனா எல்லோரும் ( சுமார் 50 பேர் ) பொறுமையா ஏதும் பேசாமல் மீன் பிடிப்பதை

பார்த்தால் எனக்கு சிரிப்பாய் வருது.. என்னாலையும் டேனியாலும் இப்படி சும்மா உட்காரெல்லாம் முடியாதே..

பெரியவன் புரிந்துகொண்டான்.. " அம்மா நீங்க அந்த மால் க்கு தம்பியை கூட்டி சென்று விளையாட வையுங்கள்..

சாயங்காலமா வந்து என்னை கூட்டி செல்லுங்கள் என்று..

எங்களுக்கு பயம். அவனை தனியே அந்த ஆளோடு விட்டு செல்ல..

நல்ல அன்பானவராய் தான் தெரியுது.. பொதுவாகவே தாய் மக்கள் குழந்தைகளை

மிக நேசிப்பவர்கள்.. இருப்பினும் நாமும் கவனமாய் இருக்கணுமே..

தொலைபேசியை கொடுத்துவிட்டு பாதி மனதாக வெளி வந்தோம்..அடிக்கடி தொலைபேசச்சொல்லி..

அங்கேயே உணவு விடுதியும் இருக்கு..அதனால் உணவு பிரச்னையில்லை..

கிளம்பி வரும்போது அவர் சொன்னார் அருகில் ஒரு குரங்கு தோப்பு இருப்பதாக..

அதை பார்த்துவிட்டு செல்ல கிளம்பினோம்..

அப்பதான் முருங்கை மரம் ரோட்டோரமாய் கண்ணில் பட்டது...

மின்னலைக்கண்ட பிரகாசம்.. அடடா.. எத்தனை நாளாச்சு முருங்கை கீரை சாப்பிட்டு...

ஆனா இது யாருக்கு சொந்தம்..? ஆள் அரவமே இல்லையே.. ரோட்டில் இருக்கு.

பறிக்கலாமா கூடாதா என பல கேள்விகள்.. ஆனா கண்டிப்பா பறிக்கணும்னு மனம் சொல்லுது..

இங்கு முருங்கை கீரை சாப்பிட மாட்டார்கள்.. மார்க்கெட்டிலும் கிடைக்காது...

எனக்கோ எங்க வீட்டு மரம் நியாபகத்துக்கு வந்துவிட்டது.. அதுவும் அம்மா கை பக்குவ சமையல் வாசனையும்..

விட முடியுமா?.. வண்டியை ஓரமாக நிப்பாட்டி அக்காம் பக்கம் பார்த்தா ஒருவரையும் காணோம்..

சரி அப்படியே வந்தாலும் பணம் தரலாம் என முடிவோடு பறிக்க சொன்னேன்..

ஒரு ஐஸ் வண்டி வந்தது அவனிடம் கேட்டோம்.. பரிச்சுக்கோங்க என்றான்..

( அதனால அவன்கிட்ட நன்றியோடு ஐஸ் வாங்க வேண்டியதா போச்சு பாருங்க..)

அவரோ ஒரு சின்ன கொப்பை பறித்துவிட்டு சட்டென்று காரி ஏறி உட்கார.,

" அட இம்புட்டுதானா ?"

" பத்தாதா?. நீ உனக்கு மட்டும் கேட்கிறாய இல்லை உன் தோழிகளுக்குமா..?"

" அதெல்லாம் உங்களுக்கெதுக்கு..? கூட கொஞ்சம் பறிச்சா என்னவாம்..?"

" ம். என்னை மாட்டிவிடாம இருக்க மாட்ட.. " னு சொன்னாலும், ஏதோ வைர நகையே வாங்கி தருவது போல்

ரொம்ப பெருமையா பறிச்சுட்டார்..கொஞ்சம் அகத்து கீரையும் கிடைத்தது..

முருங்கை காயெல்லாம் முற்றி போய் இருக்க பரிதாபமாக பார்த்தேன்..

பேருக்கு 4 காய் மட்டும் கிடைத்தது..:(

அதை முடித்து குரங்கு பார்க்க சென்றோம்..அதோடு விளையாடிவிட்டு

மால் போய் குழந்தையை விளையாட விட்டு, உணவருந்திவிட்டு .. ( இப்ப தூக்கம் வருது..)

இதுல இடையில் அரைமணிக்கொருமுறை ரன்னிங் கமெண்ட்ரியாய் மீன் வந்துச்சா, னு விசாரிப்பு வேற..

சரியாக மணி 4 க்கு திரும்பி வந்தோம்..அவர்களுக்கும் உணவு வாங்கிக்கொண்டு.

மகன் மகிழ்ச்சியா சொன்னார் " அம்மா 3 மீன் பிடிச்சேன்" னு..


( யார் அதிகமா மீன் பிடிக்காங்காளோ அவர்களுக்கு பரிசும் உண்டாம்.. )

அப்பாடா வந்த வேலை நல்லபடியா முடிந்ததே..

இல்லாவிட்டால் அடுத்த நாட்டில் மீன் கிடைக்கும் அங்கே போகலாம்னு ஒரு புது பிளான் போடாமல் இருந்தானே..

மீனையும் அழகாக ஒரு பையில் நீரோடு போட்டு தந்தார்கள்..

கொடுத்த காசுக்கு ஏதோ..

அவன் மகிழ்ச்சியா அதை உள்ளே வைக்க போனான்..

நான் கத்தினேன்.." அதையேன் கொண்டு வார..? அத அவர்கிட்டயே கொடுத்திடு." னு

அவனுக்கு அதிர்ச்சி..

அட அது என்ன நீரோ அதெல்லாம் வேண்டாம்னு விளக்கம் அளித்ததும் ஏற்றான்.

ஆனாலும் கொஞ்சம் வருத்தம் அவனுக்கு..

திரும்ப வரும்போதும் முருங்கை கண்ணில் பட்டதே.. பக்கத்து வீட்டு

தோழிக்கு" என வாய் எடுப்பதற்குள் மகன் அட்வைஸ் ஆரம்பித்துவிட்டான்..

" அம்மா தப்பு " என..

ஆசையை அடக்கிக்கொண்டு , சோகமா ஒரு பார்வை மட்டும் பார்த்துவிட்டு

திரும்பினோம்..


அடுத்த 2 நாள் அகத்து கீரை சமையல்..முருங்கைக்காய் சாம்பாரோடு.

ஆனா முருங்கை கீரை வரவே இல்லை.. 4 வது நாள் கேட்டால்,

" பாபி அந்த கீரை வாடி விட்டது தூக்கி போட்டேன் " னு வேலையாள் குண்டை போட்டா பாருங்க..

அதிர்ச்சியில் என் முகத்தை பார்த்தவர்,

" சரி விடு நான் அலுவலில் இருந்து வரும்போது ஒரு இடத்தில் பார்த்தேன் எப்படியாவது கேட்டு வாங்கி வருகிறேன்"

என
.

தோழிக்கு போன் பேசினால் ,

" கவலை படாதீங்க நான் ஒரு ரகசிய இடம் பார்த்து வெச்சுருக்கேன் .
உங்களை கூட்டி செல்கிறேன் . ஆனா யார்கிட்டயும் சொல்லிடாதீங்க " என

முருங்கைக்கு வந்த மவுசைப்பார்த்தீங்களா.?

எப்படியோ ஒரு வழியா மீன் பிடிக்க கத்துகிட்டான்...

இனி படிக்காட்டி எனக்கு திட்ட ஒரு வாக்கியம் கிடைச்சாச்சு..

மாடு மேய்க்க போக சொல்லாட்டியும் , நீ மீன் பிடிக்க தான் லாயக்குன்னு திட்டலாம் பாருங்க..


ஆனா ஒரு நாள் முழுதும் பொறுமையாய் தவம் போல மீன் பிடிப்பதை பார்ப்பதே ஆச்சர்யமாய் தான் இருக்கு.. நானெல்லாம்.. ம்ஹூம் .விடு ஜூட்...

மீன் பிடித்தலும் பிள்ளை வளர்ப்பும். 1


நகர்ப்புற வாழ்க்கையில் எவ்வளவு இழக்கிறோம் என்பது கிராமப்புரத்தில் வாழ்ந்தவர்களுக்கே புரியும்..

விசாலமான தெருக்கள் , அருகிலேயே வாய்க்கால் , அதைத்தாண்டி வயல்வெளி , தோப்புகள் , என இயற்கையோடு குளிர்ச்சியாய் ஒன்றி வாழ்ந்தவருக்கு செயற்கையாய் கான்கிரீட் காடுகளின் வெப்பத்தில் , குழந்தை வளர்ப்பென்பது ஒரு சவாலாகவே இருந்து வருகின்றது..

இங்கு வீட்டை ஒட்டியே பிரமாண்டமான சவ் பிரயா ( Chao-phraya )ஆறு அமைதியாக கப்பல்களையும் சுமந்து கொண்டு அசடுகள் ஏதுமின்றி ரம்மியமாக
பாய்ந்தோடுவதை பார்ப்பதே மிகச்சிறந்த பொழுதுபோக்கு..

எனக்கு
இரவு வந்தால் அதன் மீது பட்டுத்தெறிக்கும் விளக்கொளிகள் , நிலவு ஒரு சங்கீதம்..

பார்க்கும்போதே அதில் குதித்து நீந்தி அக்கறை சென்றிடமாட்டோமா என ஆவல் பிறக்கும்.


குட்டி குட்டி விசைப்படகுகள் மட்டுமே சீறிக்கொண்டு செல்வதும் , சில பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்லும் கொஞ்சம் பெரிய படகுகளும்
கப்பலில் வந்து சரக்குகள் இறக்கி வைக்கும் குடோன்களும் , ஆற்றின் அக்கறையில் இருந்து பாடலோடு எமை எழுப்பும் புத்த கோவில்களும் ஏதோ கனவு போல் தோன்றுவதோடு இக்காட்சியை பார்க்கும் ஒவ்வோரு பொழுதும் மறக்காது நன்றி செலுத்த தோணும் படைத்தவனுக்கு.

சரி ஏன் இவ்வளவு பில்டப் என கேட்டால் , ?
இப்படி ஒரு ஆறு பக்கம் இருக்கும்போது யாருக்குத்தான் மீன் பிடிக்க ஆசை வராது..?

வரக்கூடாதே என நான் தவித்திருந்த வேளையில் வந்துவிட்டது அந்த மீன்பிடிக்கும் கம்புகள் கடையில் மகன் கண்ணில் பட்டதுமே..


தொடர்ந்து 2 வாரம் தொணதொணப்புகள், கெஞ்சல்கள், கொஞ்சல்கள், மிரட்டல்கள், பேசாவிரதங்கள்... அப்பப்பா..
கணவர் பதில் எப்போதும் ரெடியாக "நோ" :)) ஒருவழியாக வாங்கியாகிவிட்டது..

வீடு வந்து பார்த்ததும் தான் அதன் கைப்பிடி உடைந்து போயிருப்பது தெரிந்தது..( அப்பாகிட்ட சொல்லலையே..)
சரி என தாமே வேறொரு கடைக்கு சென்று தனியே வாங்கி வருவதாக சொன்னார் மகன்..

எங்குமே தனியாக ( பள்ளி தவிர ) செல்லத்துணியாதவன் மீன் பிடிக்க என்றதும் தனியாக பஸ் ஏறி செல்வதென்றால்..?.

பயத்தோடு அனுப்பி வைத்தேன் .மகிழ்வோடு வாங்கியும் வந்தாச்சு...
சாயங்காலமாய் அருகில் உள்ள கறைக்கு சென்று மீன்பிடிப்பவரோடு இவனும் உட்கார்ந்துகொண்டான்..

முதலில் அப்பாவை மட்டும் அழைத்து சென்றான்.. 3 மணி நேரம் செலவிட்டும் ஒரு மீனும் மாட்டவில்லை.

ஆனால் அதற்குள் அங்குள்ளவர்களோடு நட்பாகி பல விஷயம் தெரிந்துகொண்டானாம்.. ( பின்ன , முள்ளில் புழுவை மாட்ட ஆள் வேண்டாமா?.. அதை தொடமாட்டாராம்..:).

அப்பா தான் செய்யணும் )


இப்படியே அடுத்த 3 நாளும் சென்றும் பொறுமையாக நாள் முடுதும் அமர்ந்தும் மீன் கிடைத்தபாடில்லை..


நாங்களும் ஒரு நாள் இரவு நிலா வெளிச்சத்தில் க்உடும்பத்தோடு சென்றோம்.. ம்ஹூம். எல்லோருக்கும் கிடைக்குது ஒன்றோ இரண்டோ ஆனால் இவனுக்கு மட்டும் கிட்டவில்லை..

அதற்குள் அங்குள்ள ஒருவர் இவன் மேல் பரிதாபம் கொண்டு நகர் விட்டு வெளியே ஓரிடத்தில்
மீன் பிடிக்க என்றே பொழுதுபோக்க பல இடங்கள் கடற்கரையை ஒட்டி இருப்பதாகவும் தானே அழைத்து செல்வதாகவும் சொல்ல அடுத்த கெஞ்சல் ஆரம்பமானது..

பள்ளி விடுமுறை தானே என நான் கொஞ்சம் விட்டுக்கொடுத்தாலும் மொத்தமாக இப்படி ஈடுபடுவது ஏற்கமுடியவில்லைதான்.
அதற்குள் கூகிளில் தேடி தாய்லாந்தில் மீன் பிடிக்கும் இடங்களையும் வித்தைகளையும் கற்றதுதான் மிச்சம்.

வீட்டுக்குள் நுழைந்ததுமே பேச்சு மீன் பற்றியதாகத்தான் இருக்கும்.
( அடேய் நெல்லைக்கு போகும்போது மாமா , மச்சான்ஸ் கிட்ட சொல்லப்டாதா ஜாலியா செய்வாங்களே, என்னை ஏண்டாப்பா படுத்துற..? )

என் வாயில் இருந்து சரி என சம்மதம் சொல்லும்வரை என்னை ஒரு வேலை செய்யவிடாமல் பின் தொடர்கிறான்.எல்லா அறைக்கும். இதுக்கு தம்பியையும் துணைக்கு அழைத்துக்கொண்டு.. ( அம்மா , சிங்கு பாவம் மா , பிளீஸ் மா- தம்பியார்.)

ஒருவழியா கடந்த ஞாயிறன்று சர்ச்சுக்கு கூட போகாமல் அந்த நண்பர் வழிகாட்ட நாங்கள் பின்தொடர்ந்தோம் அவரை , மீன் பிடிக்கும் இடத்துக்கு..

-------------------தொடரும்..--
--------------------------------------------------------

ஒதுக்கப்பட்ட கல் - பாகம் 15முற்றும்

ஒதுக்கப்பட்ட கல் - பாகம் 15.


மாடிப்படியேறி சென்ற மலரை உள்ளே வர விடாமல் கதவை தாளிட்டுக்கொண்டான் ராஜ்.

" ராஜ் இதென்ன பிடிவாதம் சின்ன குழந்தைபோல்.? எவ்வளவு பெரிய கம்பெனி நிர்வாகி நீங்கள்.?"

" ஆமா . எல்லாம் எதுக்காக மலர்..?.. இந்த பணம் , பதவி எல்லாம் எதுக்காக..?.. என் சொந்த வாழ்க்கையில் நான் தோற்றுவிட்டேனே..நீ என் அன்பை புரிஞ்சுக்கிற மாதிரி நான் நடந்துக்கலையே?."

" அய்யோ இல்லை ராஜ்..உங்க மேல எந்த தப்புமில்ல.. என்னோட எண்ணமே வேறு.. சரி. இப்ப கதவை திறங்க முதலில்.."

அவள் மீண்டும் மீண்டும் வற்புறுத்தியதால் கதவை திறந்தான்..

இருவரும் மெளனமாக இருந்தனர்..சிறிது நேரம்...

" என்னை தயவுசெய்து கட்டாயப்படுத்தாதீங்க , செத்துருவேன்னு மிரட்டாதீங்க.. நாம நிதானமா பேச வேண்டிய விஷயம் இது ..ஒத்திபோடலாம்.. சரி இப்ப வாங்க கீழே போகலாம்.."

" அப்ப என்னையும் கட்டாயப்படுத்தவோ என் சாவை தடுக்கவோ வேண்டாம்.. அந்த உரிமையும் யாருக்குமில்லை.." எங்கோ பார்த்துக்கொண்டே கூறினான் விரக்தியாக...

சிரிப்பும் எரிச்சலும் ஒரே நேரத்தில் மலருக்கு..

" எப்படி புரிய வைக்க இவர்களுக்கு.. நான் தோற்கத்தான் செய்யணும் போல.." என எண்ணினாள்..

மீண்டும் நீண்ட மெளனம் நிலவியது..

------------------------------
-----------------------------------

2 ஆண்டுகள் கழித்து...

மாடியில் ஒரு குழந்தையுடன் ராஜும், கீழே அண்ணியார் ஒரு குழந்தையுடனும் இருக்க , வாசலில் கார் வந்து நிற்கிறது.

" வாங்க வாங்க... மலர் இதோ ரெடி ஆயிட்டா.. ஒரு 10 நிமிஷம்..உள்ளே வாங்க.."

" இரட்டைக்குழந்தைக்கு அம்மா அவள்.. எனக்கு புரியாதா அவளின் வேலைகள்,..? சரி ஐயா எப்படி இருக்கிறார்..?" நளினா..

" நீங்களே போய் பாருங்களேன் ..மாடியில்.."

கையில் குழந்தையையும் வாங்கிக் கொஞ்சிக்கொண்டே படியேறினாள்...

கோப்புகளுடன் அமர்ந்திருந்தவர் , இவள் வருகையை பார்த்ததும் எழுந்தார்..

கண்களோடு பேசிக்கொண்டே நலம் விசாரித்தனர் இருவரும் .

அதிக காதலில் , பாசத்தில் ஏதும் பேச விரும்பாமல் கொஞ்ச நேரம் மெளனமே நிலவியது..

காற்றில் பரவிய காந்த அலைகளிலேயே எண்ணங்களின் வாயிலாக இருவர் மனமும் பேசிக்கொண்டது..

" அப்ப நான் கிளம்பவா.." மனமேயில்லாமல்..

" ம்.இனி அடுத்து எப்ப..?"

" நீங்க கொஞ்சம் வெளியேயும் வரணும் .. இப்படி அடைஞ்சு கிடைக்காமல்.. மகன் ராகவ் பெரிய கம்பெனி ஆரம்பித்துள்ளான்.. அவனுக்கு உங்க அறிவுறைகள் , ஆசிகள் தரணும்.."

" எப்பவும் உண்டு.. அவன் திருமணத்துக்கு வருவேன் கட்டாயம்.. அதான் என் குடும்பத்தையே உங்கள் இருவர் வசமும் ஒப்படைத்துள்ளேனே.... நீயும் மலரும் இந்த குடும்பத்தை மட்டுமல்ல, நம் சமுதாயத்தையும் செழிக்க வைப்பது குறித்து மட்டில்லா மகிழ்ச்சி எனக்கு..." சொல்லிவிட்டு குழந்தையை வாங்கி முத்தம் ஒன்றை கொடுத்து மகிழ்ந்தார்..

" நீங்க போட்ட கோடு எல்லாம்.. நாங்க உங்க வேலையாட்கள் அவ்வளவுதான்.." என்றாள் நளினா தன்னடக்கத்தோடு..

" நான் உள்ளே வரலாமா..?" கேட்டாள் மலர்..

மலர் நுழைந்ததுமே அமைதியாய் இருந்த இடம் கலகலப்பாய் ஆனது..

" உனக்கெதுக்கம்மா அனுமதியெல்லாம்..உன் அனுமதிக்காக இந்த நாடே காத்திருக்கையில்..பத்திரிக்கை துறையே பயம் கொள்ளுது உன் பேர் சொன்னால்.." சிரித்தார்..

" எல்லாம் உங்க ஆசீர்வாதம் அண்ணா.." என அவரின் பாதம் தொட்டு வணங்கினாள்..குழந்தையையும் வாங்கிக்கொண்டு.


பின் இருவருமாய் குழந்தையை கொடுத்துவிட்டு காரில் கிளம்பி சென்றனர் சமூக சேவை செய்ய..

குடும்பமே வந்து வழியனுப்பியது மகிழ்வோடு.

விதியின் வசத்தால் சமூகத்தால் ஒதுக்கப்பட்ட கல் இன்று சமுதாயத்தின் மூலைக்கல்லானது விடாமுயற்சியால் , நல்லெண்ணத்தால்...

--------------------------------------முற்றும்------------------------------------------------

ஒதுக்கப்பட்ட கல் - பாகம் - 14.

ஒதுக்கப்பட்ட கல் - பாகம் - 14.



சிறுநீரக தானம் நளினாதான் வழங்கியுள்ளாள் என தெரிந்ததும் பலவகையான கேள்விகள் அதிர்ச்சிகள்..

அவர்கள் இருவரிடையேயான உத்தமமான அன்பை கண்டு பிரமித்துபோனாள்...

வாழ்க்கையின் மேலுள்ள பிடிமானம் அதிகரித்தது...

தன் நாவலின் இறுதிக்கட்ட பேட்டியை எடுத்துக்கொண்டாள் மலர்...நளினாவின் ஒவ்வொரு வார்த்தையும் அர்த்தம் பொருந்தியனவாக அனுபவ

வார்த்தைகளாக இருந்தன...

" பாலியல் தொழில் அங்கீகரிக்கப்படவேண்டும்.. அப்படி செய்யும்போது பலவித பிரச்னைகள் குறைய வாய்ப்பிருப்பதாகவும் , கற்பழிப்பு போன்ற

சம்பவங்கள் குறையலாம் என்பதை கேட்டதும் மலருக்கு மருத்துப்பேச தோன்றியது...ஆனால் சில சந்தேகம் மட்டுமே கேட்டாள்..

மேலும் ஒரு மனைவி நினைத்தால் மட்டும் தன் துணையை இப்படியான இடங்களுக்கு செல்வதை ஒருபோதும் நிறுத்திட முடியாது..

ஆனால் குறைக்கலாம்....என்னதான் ஆணுக்கும் பெண்ணுக்கும் உணர்ச்சிகள் ஒன்று என வாதிட்டாலும், சந்தர்ப்பம் கிடைத்தாலும்

பெண்கள் இப்படி செல்வார்களா , மாட்டார்கள்தானே ?..என்றும் வாதிட்டார்..

அதிலிருந்து என்ன தெரிகிறது ஆணுக்கு இது அவசியமான ஒன்று ஆதி காலந்தொட்டே...

பல வெளிநாடுகளில் இருப்பதுபோல வெளிப்படையாக இருந்துவிட்டால் பொதுஜனங்களின் மத்தியில் பாலியியல் தொந்தரவுகள் கணிசமாக குறையும்...

பல நாடுகளில் இதில் ஈடுபடும் பெண்களே, தாதாக்களிடமிருந்து விடுதலை பெற்று சில காலம் இத்தொழிலுக்குப்பின்,

தமக்கென ஒரு வாழ்வை அமைத்துக்கொள்கின்றனர்..குழந்தை
களை உயர்கல்வி படிக்க வைக்கின்றனர் முற்றிலுமாக விடுதலை கிடைக்குது..

யாரும் இவன்/ள் பெற்றோர் ஒரு பாலியல் தொழிலாளி என மோசமான பார்வை பார்ப்பதில்லை...

அந்த நிலைமை வரணூம் இங்கும்...

....ஆனால் இங்கு எதிராக இருப்பது வருத்தத்துக்குறியது..

இப்ப பல சமூக அமைப்புகள் இதை குறித்து பல கவுன்சிலிங் நடத்தி மறுவாழ்வு தருகிறார்கள்... இருப்பினும் அது நிரந்தரமல்ல..

இத்தொழிலுக்கு யாரும் வரக்கூடாது.. ஆனால் சூழ்நிலையால் வந்தாலும் அவர்களையும் மனிதராக கருதி மனிதாபிமானத்தோடு நடத்தப்படவேண்டும்..."

இன்னும் பல விஷயங்களையும் கேட்டுக்கொண்டு விடை பெற்றவளிடம், பூங்கொத்து ஒன்றை நீட்டினான் ராகவ்..

" நன்றி " என மட்டும் எவ்வித உணர்ச்சியும் இல்லாது சொல்லிவிட்டு பெற்றுக்கொண்டாள்...

அவள் புன்னகையையே சம்மதம்னு ராகவ் தவறாக புரிந்துகொண்டான்....இன்னிக்கு எப்படியாவது அம்மாகிட்ட பேசணும் னு முடிவுசெய்தான்..

மலரோ, தன் கல்யாண நாள் இன்று , அது ராகவுக்கு தெரிந்திருக்குமோ ?..நான் தான் கொண்டாட வில்லையே...சரி அது முக்கியமில்லை..

வருங்கால முதலாளி.. அவ்வளவே என் எண்ணிவிட்டு ஆட்டோ ஒன்றை கைகாட்டி நிப்பாட்டினாள்..

தொலைபேசி அழைப்பு...

" உனக்காக இங்க, உங்க அண்ணியார் வீட்டில் எல்லோரும் காத்திருக்கோம்.. நீ எங்கம்மா இருக்க?." அம்மா

" எதுக்கும்மா.."

" என்ன கேள்வி இது.. வேலையில உன் திருமண நாள் கூட மறந்துடணுமா.. "

" எதுக்கும்மா இதெல்லாம்.. எனக்கு பிடிக்காதுன்னு உங்க எல்லாருக்கும் தெரியுமே..."

பல உறையாடலுக்கு பின் ஆட்டோவை வீடு நோக்கி திரும்ப சொன்னாள்....

உள்ளே சென்றவளுக்கு அதிர்ச்சியாக எல்லா உறவினரும் கூடி இருக்க , நடு மேசையில் பெரிய கேக் ஒன்று வைக்கப்பட்டிருந்தது..

சாதாரண சுடிதாரில் இருந்தவளை அழகான கிளிப்பச்சையில் மஞ்சள் பார்டர் போட்ட சேலை கொடுத்து கட்டி வரச்சொன்னார் அண்ணியார்...

சக்கர நாற்காலியில் அவர் கணவரும்..புன்னகையோடு..பக்கத்தில் குழந்தைகள் தட்டில் , மிட்டாய் , பூ , பழங்களோடு...

இந்த வாரம் எப்படியாவது சொல்லிடணும் தனக்கு இத்திருமண வாழ்வில் விருப்பமில்லை னு என எண்ணிக்கொண்டிருந்தவளுக்கு மேலும் அதிர்ச்சியாய்..

ஏதோ கல்யாண வீடு போல களை கட்டிக்கொண்டிருந்தது....ஒரு பக்கம் சமையலும்...

" நம்ம வீட்டுல விசேஷம் நடத்தி சொந்தங்களை அழைத்து வெகு நாளாயிற்று.. அதான் இந்த ஏற்பாடு...மேலும் கம்பெனி நிர்வாகத்தை இனி தம்பியின் பொறுப்பில்

இன்றிலிருந்து முழுவதுமாய்.." என அவர் சொல்லவும் அப்பொதுதான் கணவரை தேடினாள்...

அவரோ முக்கியமான புள்ளிகளுடன் அடுத்த அறையில் பேசிக்கொண்டிருந்தான்...இவளைப்பார்த்ததும் புன்னகையோடு அருகில் வந்தான்...

" வாழ்த்துகள்.. "

" ம்.." கண்ணாலேயே கேட்கிறாள் " இதெல்லாம் உங்க வேலைதானா..?" னு

அண்ணியார் தந்த புடவையையும் வாங்காமல் , தவிர்த்ததும் எல்லோருக்குமே ஒருமாதிரியாகிவிட்டது...

அம்மா ஒடி வந்து திட்டினார் போட்டார் மெதுவாக..

எப்படி சொல்ல என்ன வார்த்தை பேச, யாரெல்லாம் புண்படப்போகிறார்கள் என மனதில் ஒரு முன்னோட்டம் மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தாள்..

இவள் ஏதாகிலும் பிரச்னை பண்ணிடுவாளோன்னு பயந்து அப்பாவே,

" சரி அவ ரொம்ப அலுப்புல வந்திருப்பா, முதலில் கேக் வெட்டட்டும்.. விருந்தினர்கள் சாப்பிட நேரமாச்சு.. "

" ஹ். ஆமா.. நான் ஒரு அவசர வேலையாய் மறுபடி செல்லணும்.. மன்னிக்கணும் எல்லோரும்..."

ராஜுக்கு கோபம் வந்தது..

" என்ன பேசுற நீ.. நமக்காக , நம்மை ஆசிர்வாதம் பண்ண வந்திருக்காங்க.. நீ என்னன்னா..கிளம்புறேன்னு சொல்ற...?" கொஞ்சம் அதட்டலாய்...

இப்ப அவளுக்கும் எரிச்சல் வர ஆரம்பித்தது...


" எனக்கே தெரியாம என்னை எதுவும் கேட்காம ஏன் இப்படி செய்தீங்க.. எனக்கு இந்த திருமண வாழ்க்கையே பிடிக்கல.." னு சொல்லிட்டு அழ ஆரம்பித்தாள்

எல்லோரையுமே வீணா காயப்படுத்துறோமேன்னு தெரிந்து...

எல்லோருமே அதிர்ச்சி அடைந்தார்கள்...

" எனக்கு ராஜ் மேல எந்த கோபமுமில்ல.. ஆனா நான் சமுதாயத்துக்காக செய்ய வேண்டிய காரியம் பல இருக்கு... சிலருக்கு மட்டுமே அந்த வரம் இருக்கு.. அதில் நானுமொருத்தி.."

" சும்மா அதிகப்பிரசங்கியாட்டம் பேசாதே.." அம்மா...கைபிடித்து அழுத்தினாள்...

" அய்யோ அம்மா. உனக்கு ஒண்ணும் புரியாது.. உனக்கு வீடு மட்டும்தான் உலகம்.. எனக்கு உலகம்தான் வீடு..".. கையை விடுவித்துக்கொண்டு..

" சரி இப்ப என்னதான்மா சொல்ற.." அன்போடு கேட்கிறார், அண்ணியரின் கணவர்...

" அண்ணா, ராஜுக்கு வேறு திருமணம் செய்யுங்க..." னு சொல்லி அவர் நாற்காலி பக்கம் முட்டிக்கால் போட்டு கெஞ்சுபவள்போல்.




இதை கேட்ட ராஜ் இடி விழுந்தவன் போல, அப்படியே நெற்றியில் கைவைத்துக்கொண்டு

" என்னை அவமானப்படுத்தும் எண்ணம்தானே மலர்..? "னு சொல்லிவிட்டு ,


மாடிப்படி ஏறி உள்ளே சென்றான்.., அவள் அக்கா, " ராஜ், ராஜ்..இருப்பா.. " என்று கத்திக்கொண்டே

பின்னாலேயே...

" ஏம்மா நல்லா யோசித்துதான் பேசுறியா...?.. அதை இப்ப பேசணுமா என்ன..?" அப்பா..

" ஆமாப்பா, வேற வழியில்லை.. எத்தனை நாள் மனதுக்குள்ளேயே வைத்து புழுங்க..?ராஜ் ரொம்ப நல்லவர்... அவர் பொறுப்பான வேலைகள் நிறைய காத்திருக்கு... அவருக்கு அனுசரணையா, அவரை அன்பா பாத்துக்குற மாதிரி

ஒரு பெண் இருந்தா போதும்... ஆனா என்னோட எண்ணங்கள்லாம் நம்ம சமுதாயத்தின் மீதே இருக்கு..இதுக்கு என்னாலான உதவிகளை செய்யணும்...என் ஆயுசுக்குள்.."

" ஏம்மா எது வேணுமானாலும் தாராளமா நீ இப்படியே செய்யலாமே.. நான் உதவுறேன் உனக்கு.." அண்ணியாரின் கணவர்..

" இல்லண்ணா, ஒரு சாதாராண பெண்ணாய் , குழந்தை குடும்பம்னு என் வாழ்க்கை இருக்காது.. நான் முழுவதுமாய் சேவையில் ஈடுபடணும்னா , எனக்கு திருமண வாழ்க்கை ஒத்து வராது..

இதை கேட்டுகொண்டே வெளியே கோபமாய் வந்த ராஜ் மாடியிலேயே நின்று கத்தினான்...

" நீ இல்லாட்டி நான் செத்துருவேன் தெரிஞ்சுக்கோ... "

எல்லோரும் மேலே பார்க்க , மலர் கண்ணீரை துடைத்துக்கொண்டு நிதானமாக படியேறினாள்....ஒரு குழந்தையை சமாதானப்படுத்தும் விதமாய்.


அடுத்த தொடரில் முடியும்...