Tuesday, August 26, 2008




பிடிக்கும் உன்னை பிடிக்கும்..:-))

" அட அவளேதான் வந்துட்டா... அவ கார்தான் ,. அதே சிவப்பு நிற மாருதி..."
இன்னிக்கு எப்படியாவது முந்திட வேண்டியதுதான்... தினமும் சரியாக 7.45 க்கு வந்திடுறா...?.. கொஞ்சம் குண்டாயிருந்தாலும் ஆப்பிள் மாதிரி கன்னங்கள் அழகாத்தானிருக்கு...
ஆனா அந்த தலை அலங்காரமும் அதில் உள்ள பூவும் தான் பிடிக்கவில்லை... சே சே, என்ன ரசனையோ...??.

அடுத்த சிக்னலில் அவள் வண்டிக்கு முன்னால் வந்து கிரீச்சுட்டு வந்து நின்னாச்சு... ஆனாலும் அவளை பார்க்காத மாதிரியே பார்த்தும் விட்டான்...அது அவனுக்கு மட்டும் கைவந்த கலையோ??... அட ஆமா அவளும் என்னைத்தான் பார்க்கிறாள்... பார்க்காத மாதிரி..புன்னகைக்கிறாளா என்ன?. இலை அவள் வாயே அப்படித்தானா?..

" வ‌ந்துட்டானா?.. ஆளைப்பாரு, அவ‌னும் அவ‌ன் பொருத்த‌மில்லாத ஷுவும், சாக்ஸூம்...அதென்ன‌ எண்ணெய் க‌டை சொந்த‌க்கார‌னா?.. த‌லையில் இப்ப‌டி வ‌ழியுது முக‌த்தின் அச‌டுக்கு போட்டியாக‌...?????
" அடிக்க‌டி கைக்க‌டிகார‌த்தை ஸ்டைலாய் பார்த்துக்கொள்கிறான்.. ஹிஹி... ரொம்ப‌த்தான்..."

' பெரிய சூப்பர்மேன் னு நினைப்பு.. சட்டை பட்டனை ஒழுங்கா போட்டா என்னவாம்... கையில் என்ன வளையலா இல்லை வளையமா?.. பம்பிளிமாஸ் மாதிரி.. கன்னம்...ஹிஹி...அழகாய்தானிருக்கான்..."
சிக்ன‌ல் போட்ட‌தும் ஒரே சீராக‌ ப‌க்க‌த்தில் போகுது அவ‌ள‌து மாருதியும் , பைக்கும்...
ரோஸ் நிற‌ உத‌டுக‌ள்... லிப்ஸ்டிக்கா இல்லை இய‌ற்கையிலேயே அப்படித்தானா?..
யோசித்துக்கொண்டிருக்கும்போதே வ‌ண்டி ப‌ள்ள‌த்தில் ஏறி இற‌ங்கிய‌தில் உடையில் த‌ண்ணீர் தெறித்துவிட‌, உட‌னே அவ‌ளைத்தான் பார்க்க‌த்தோணுது...
வாயை மூடிக்கொண்டு க‌ண்க‌ளால் சிரித்தாலும் க‌ன்ன‌க்குழி காண்பித்து கொடுத்துவிடுகிற‌தே...
இப்ப‌ என்ன‌ சிரிப்பு வேண்டிகிட‌க்கு... ?.. கைகுட்டை எடுத்து துடைத்துக்கொள்கிறான், முக‌த்தில் வ‌ழிந்த‌ அச‌டை...

ச‌ரி அடுத்த‌ சிக்ன‌லில் திரும்பி விடுவாள்.. ஆமா அவள் பேர் என்ன‌வாயிருக்கும்?... ப‌த்மா, தேவி, திவ்யா?... என்ன‌ இது என்ன‌வா இருந்தா என்ன‌.. ராட்ச‌சி....
" அட‌ இன்னிக்கு என்ன‌ ஆச்ச‌ர்ய‌மா சிக்ன‌லில் திரும்பாம‌ல் நேரே வ‌ருகிறாள்?..அதுவும் இன்னிக்கு பார்த்தா?... ம் இருக்க‌ட்டும்.. என்னை ஃபாலோ ப‌ண்ணுகிறாயா?...
ச‌ரி நான் திரும்ப‌ப்போகிறேன்... என் இட‌ம் வ‌ந்துவிட்ட‌து... கைய‌சைத்து டாட்டா காண்பிக்க‌ணும் போல் ஒர் உண‌ர்வு...
என்ன‌ ஆச்ச‌ர்ய‌ம், அவ‌ள் கைய‌சைக்கிறாள்... என‌க்கா, இல்லை என் பின்னால் யாருக்காவ‌தா?.. இல்லை என‌க்குத்தான்.. இப்ப‌ ரொம்ப‌வே அழ‌காய் தெரிகிறாள்..
என்ன‌ இது நான் நுழையும் காம்ப‌வுண்டில் அவ‌ளும் நுழைகிறாள்....
ம்.ம்.. எ...எ...எ.ன்னைப்பார்த்து ம‌றுப‌டியும் சிரிக்கிறாள்.. நான் ஏன் இன்னும் முகத்தை க‌டுக‌டுன்னு வெச்சுக்க‌ணும்..... என் உடடயைப்பற்றி இப்ப கவலைப்பட வேண்டாம்...

இனி தினமும் உன்னை இங்கு சந்திக்கப்போகிறேன் .. எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்குது..?

நானும் சிரிக்க‌ப்போகிறேன் என் அப்பாவின் தோளில் சாய்ந்துகொண்டு...உன்னைப்போல‌வே...நீயும் எல்கேஜி யா..?