Wednesday, December 15, 2010

அம்மா புராணம் - 3 -போதையிலிருந்து மீட்ட மணமகன்..




அம்மாவோட தோழிகளை பார்த்தாலே புரியும் அம்மாவோட ரசனை..எல்லாரிடத்திலும் சமமாக பழகினாலும் , துணிச்சலான பெண்மணிகளே அம்மாவின் தோழிகள்..
இப்படி பலர் இருந்தாலும் இன்று நான் சொல்லப்போவது டெல்லியம்மா பற்றி.டெல்லி அம்மா என்ற பெயர் எப்படி வந்தது?.. புரிந்திருக்கும்..ஆம். டெல்லியில் கிட்டத்தட்ட 40 வருடம் வாழ்க்கை நடத்திவிட்டு ஊர்பக்கம் வந்தவர்கள்..

மிக அழகானவர்.. வட நாட்டு பெண்மணியை போல தோற்றம்..அவர் கணவர் ராணுவத்தில் மிக உயர்ந்த பதவியில்..அதன்மூலம் இவர்களுக்கு அன்னை இந்திராகாந்தியின் பழக்கம் கிடைத்தது.. பல வருடம் அவருக்கு உதவியாளராகவும் இருந்துள்ளார்.. தனிப்பட்ட முறையில்.. எங்களிடம் அந்த புகைப்படங்களை காண்பிப்பார்.. சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தியோடும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்..இப்படி மிகப்பெரிய ஆட்களோடு பழகி , தம் குழந்தைகளையும் மிகப்பெரிய பள்ளியில் சேர்த்து கல்வி கொடுத்தார்.. அதில் கடைசி மகன் கல்வியோடு போதைக்கும் அடிமையானார்..அதிலிருந்து மீட்டு பின் பிடிவாதமாய் சொந்த ஊருக்கு அழைத்து வந்தார்..

அந்த பையன் கணினியில் அப்பவே கெட்டிக்காரர்.. ( 17 வருடம் முன்பு ) .என் அண்ணனும் கணினி என்பதால் இருவரும் நட்பாயினர்.. ( கணினியையே கட்டிகிட்டு அழுவார்கள் எந்நேரமும் ).இப்ப அந்தம்மா தன் மகனுக்கு பெண் பார்க்கிறார் தன் சாதியில்.. ( என்கே போய் வாழ்ந்தாலும் இந்த சாதி விடமாட்டேங்குது பாருங்க..).

நல்ல விஷயங்கள் உடனே பரவுதோ இல்லையோ கெட்ட விஷயங்கள் தீ மாதிரி பரவிடுமே.. அந்த பையனின் போதை பழக்கம் ஊர் முழுக்க தெரிந்தது..யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை.. இத்தனைக்கும் ஏகப்பட்ட சொத்துக்கள்.. அந்தம்மாவும் தனக்கு சம்பந்தம் கொஞ்சம் பெரிய இடமாக இருக்கணும் என தேடினார்கள்.. மகனுக்கும் அவன் பேசும் நுனிநாக்கு ஆங்கிலத்துக்கும் ஏற்ற பெண் இருக்கணும் என்ற ஆசையும்..மிக நல்ல மரியாதையான பையன் தான் அவர்.. எங்க வீட்டுக்கு வரும்போது அமைதியாக அண்ணணுக்காக காத்திருப்பார்.. வசதியானவர் என்ற எந்த பந்தாவும் இல்லாமல்...ஆனா அவர் அம்மா நல்லாவே பந்தா காட்டுவார்.. இரண்டு தெரு தள்ளியிருந்து எங்க வீட்டுக்கு அம்மாவிடம் பேச வரணும் என்றாலும் காரில்தான் வருவார்.. டிரைவார் காத்திருந்து கூட்டிசெல்வார்..

இப்ப இன்னொரு தோழியின் மகளை பேசி முடிக்க எங்க வீட்டில் வைத்து பேச்சு நடக்கும்.. அந்த தோழி மலைக்காரம்மா.. ( மூணாறில் எஸ்டேட் இருப்பதால் இப்பெயர் .)
அவர்கள் வீட்டு பெண்களும் மிக அழகும் கலரும்.. வசதியும்.. படிப்புதான் குறைவு...இப்ப என்ன பிரச்னைன்னா, சீர் , பணம் ஏதும் தரமாட்டேன் என பெண் வீட்டார் சொல்கிறார்கள்.. ( வலிய வந்தமையால் )..இப்படி இழுபறி நடந்துகொண்டிருந்தபோது அந்த பெண்ணுக்கு வேறொரு பண்ணையார் வீட்டில் அழகுக்காக விரும்பி நிச்சயம் செய்துவிட்டார்கள்..

அப்பதான் அம்மா சொன்னார்கள் , " பையன் போதை பழக்கம் எல்லாரும் அறிந்தமையால் பயப்படுவார்கள்.. ஏன் ஒரு ஏழை பெண்ணுக்கு வாழ்வளிக்க கூடாது ?." .அந்தம்மா முதலில் ஒத்துக்கொள்ளவில்லை.. அவர் மகனிடம் என் அம்மா பேசியபோது அவர் மிக தயாராய் இருந்தார்.. தன் அம்மாவையும் சம்மதிக்க வைப்பதாகவும் , " நீங்க சொல்ற எந்த பெண்ணையும் நான் கட்டிக்கிறேன் மா. " என்றார்.. கடைசியில் அந்தம்மாவும் சம்மதித்தார்கள்.. இப்பதான் அம்மாவுக்கு பிரச்னை.. வேலியில் போற ஓணானை -----------//

அக்கம்பக்கம் இருந்த ஏழைப்பெண்கள் லிஸ்ட் எடுத்து அழைத்து மெதுவா கேட்டுப்பார்த்தார்கள்.. டெல்லி என்றதுமே பலர் வேண்டாமென சொல்லிவிட்டார்கள்..இப்ப கடைசியில் இருப்பது சில வீடுகள் தள்ளியிருக்கும் ஒரு குடும்பம்.. வசதியிருந்து நொடித்தவர்கள்.. 8 பெண்கள் ஒரே பையன்.. ஒவ்வொரு பெண்ணையும் கறையேத்த மிக கஷ்டப்பட்டது அக்குடும்பம்..அவர்கள் சண்டையிட்ட குடும்பம் எங்களோடு மிக நெருக்கம் என்பதால் எங்களிடமும் பேசமாட்டார்கள்..ஆனாலும் அம்மாவுக்கு அந்த குடும்பம் மீதும் , பெண் குழந்தைகள் மீதும் ஒருவித பாசம் /மரியாதை உண்டு...என்னிடம் சொல்லி அனுப்பினார்கள் அந்தம்மாவை எங்க வீட்டுக்கு வர சொல்லி.. நான் போய் சொன்னதும் வேண்டா வெறுப்பாக வந்தார்கள்.. அம்மா விபரமாக எல்லாவற்றையும் எடுத்து சொல்லி , " நான் கட்டாயப்படுத்தவில்லை.. நீங்க யோசிச்சு சொல்லுங்க .. " னு சொன்னார்கள்..


அவர்கள் முதலில் வேண்டாம்னு சொல்ல , பின் அவர்கள் மூத்த மகள் வந்து மேலும் பேசி விப்ரம் கேட்டு அறைகுறையாக சம்மதித்தார்கள் பெண் பார்க்க..உடனே எங்க அண்ணியோட நகையை எடுத்து சென்று அப்பெண்ணுக்கு போட்டு அலங்கரித்தோம்.. மாப்பிள்ளையும் அவர் அம்மாவும் வந்து பார்த்து பிடித்துவிட்டது..பெண் அதிகம் படிக்கவில்லை.. 10ம் வகுப்பு மட்டுமே..சுமாரான அழகுதான்..( இதை சொல்வது ஊர் உலக பார்வைக்காக மட்டுமே . என் பார்வை அல்ல.. திட்டிராதீங்க.. :)) )

சம்மதம் தெரிவிக்கும் வகையில் மாப்பிள்ளை வீட்டார் ஒரு நகை , சில புடவைகள் பரிசாக பெண்ணுக்கு தந்தார்கள்.. பெரிய ஹோட்டலில் அந்த வாரமே திருமணமும் நடந்தது... பலர் விமர்சித்தார்கள் எதிர்மறையாக.. எங்கம்மா அந்த பையனிடம் சத்தியம் வாங்கினார்கள்.. என் பெண்ணை கொடுத்தது போல கொடுத்துள்ளேன்.. நீ ந்ல்லா வாழ்க்கை நடத்தி காண்பிக்கணும் என.. அந்த பையன் கண்ணீரோடு சத்தியம் செய்தார்..

திருமணம் முடிந்த சில தினங்களில் டெல்லிக்கு விமானத்தில் சென்றார்கள்.. அடுத்த வருடத்தில் மாமியார் போன்ற மிக அழகான பெண் குழந்தை பெற்று மாமியார் மனதிலும் நீங்க இடம் பிடித்தார் அப்பெண்.. இப்பல்லாம் வருடந்தோறும் விமானத்தில் தனியே குழந்தையோடு வருவார்..( இன்று ஒரு நடிகையைப்போன்ற மிக அழகிய வாலிப பெண் . அதே நுனிநாக்கு ஆங்கிலமும் அப்பாவைப்போல ) . எங்கேயோ போய் விட்டாள் அந்த கிராமத்து பெண்... இப்பவும் எந்த அவசரம் என்றாலும் அம்மாவை வந்து பார்த்து " அம்மா இது நீங்க கொடுத்த வாழ்வு " என வணங்கிவிட்டு செல்வாராம்....


ஊரே பழியை போட்டது அம்மா மேல்.. இது எப்படி நல்லா வாழ முடியும் என சவால் விட்டது.. அதுவும் வேறு ஜாதியினர்.. அன்று பழியெல்லாம் தனி ஆளாக அம்மா ஏற்றுக்கொண்டார்.. இன்று அக்குடும்பமே மகிழ்ச்சியில்...அம்மா எங்களுக்கு எப்பவும் இப்படி செய் , அப்படி நட என சொன்னதில்லை.. சொல்ல நேரமிருந்ததில்லை எனலாம். ஆனால் அவர் வாழ்க்கையை பார்த்தே கற்கலாம்..அவர் துணிவை, அடுத்தவருக்காக பழி ஏற்றுக்கொண்டும் செய்யும் நற்செயல்களை...நிஜமான அக்கறை இருந்தால் மட்டுமே முடியும்.. பெண் குழந்தைகளுக்கு முக்கிய தேவை கல்வியும் துணிவும் என நினைப்பவர்..




(புராணத்துக்கு தேவையில்லாதது : ஜனாதிபதி திரு.வெங்கட்ராமன் அவர்கள் தூத்துக்குடி வந்தபோது டெல்லியம்மாவுடன் எங்க அம்மாவும் சென்று சந்தித்தது அப்போதுதான்... அப்பதான் டெல்லியம்மாவின் மரியாதையை முழுதாக கண்டார் அம்மா..டெல்லியம்மா கெஸ்ட் ஹவுஸ் குள் நுழைந்ததுமே காவலர்கள் சல்யூட் அடிக்குமளவுக்கு பிரசித்தி...அவர் கணவர் பற்றி எனக்கு தெரியவில்லை.. அரசியல் பிரமுகர்கள் பலரும் பரிச்சயமுண்டு..)

இப்படி கம்பீரமான பெண்"மணிகளை" எமக்கு அறிமுகப்படுத்த தவறியதில்லை அம்மா... )

-

அடுத்து ஒரு எமோஷனல் காதல் பிளாக்மெயில் பற்றி நேரமிருப்பின் எழுதுவேன்.. அல்லது அடுத்த வருடம் வந்து தொடருவேன்.. விடுமுறைக்குப்பின்...

பதிவுலகினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்..



அம்மா புராணம் - 2 படிக்க
அம்மா புராணம் - 1 படிக்க



படம் : நன்றி கூகுள்..





.

Thursday, December 9, 2010

இணைய நட்பு - வருமுன் காப்பது..2






































அக்கம்
பக்கம் உள்ளவரிடம் பேசாதவர், நல்ல விதமாய் நட்பு பாராட்ட முடியாதவர்கள் கூட இணையத்தில் எளிதாக நட்பு பாராட்ட முடிகிறது..

எல்லோருக்குமான சம உரிமை இங்கே உள்ளது.. தத்தம் திறமைகளை எவ்வித தயக்கமுமின்றி வெளிப்படுத்தி பாராட்டும் ஊக்கமும் பெற முடிகிறது..

அண்டை வீட்டுக்காரர்களுக்கு , ஒரு துரும்பை கூட எடுத்து உதவ முடியாதவரெல்ல்லாம் இணையத்தில் நல்ல மனிதராய் நடிக்க முடிகிறது..

குழந்தை , குடும்பம் என மிகவும் அன்பான நிறைவான சூழலில் , ஏன் ஆச்சாரமான சூழலில் இருப்பவரும் கூட நட்பை தேடி இணையம் வருகிறார்கள்..

அதைவிட நான் அதிகமாக கண்டது புகழ் விரும்பிகள்..

எல்லோருக்கும் புகழ் பிடிக்கும்தான்.. இதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை.. சிலருக்கு அது ஊக்கம் , அங்கீகாரம்.. அந்தளவில் அது ஆரோக்கியமானதே..

ஆனால் அதையும் தாண்டி தகுதியற்ற புகழை தேடும்போதுதான் ஆபத்தாக வந்து முடியும்..

எப்படி இந்த தகுதியற்ற புகழை அடைய விரும்புவார்கள்.?

ஓட்டு போடுங்க என பிச்சை கேட்பது.. இதில் கூட சமூகத்துக்கு தேவையான விஷ்யங்களை சொல்லி அது பரவவேண்டும் என நல்லெண்ணத்தில் ஓட்டு கேட்பவர்களை இங்கே சொல்லவில்லை.. ஆனால் உப்பு பெறாத விஷயத்துக்கெல்லாம் ஓட்டு பிச்சை கேட்பதும் , பின்னூட்ட மொய் எழுதுவதுமாய்...


ஜாலியாக சகாக்கள் சேர்ந்து கும்மி அடிக்கட்டும் அதுவும் தவறில்லை.. ஆனால் சிலர் தகுதியற்ற , சமூக விரோத பதிவுகளை போட்டு கூட்டம் சேர்த்துவிட்டு தன்னை பெரிய தலைவராக நினைத்துக்கொண்டு கருத்து சொல்லும்போது தான் தாங்க முடிவதில்லை...

ஆக இங்கே தற்போது நிலவும் இந்த சூழல்/கூட்டம் ஆரோக்கியமானதல்ல என்பது என் கருத்து...


இப்ப சில விஷயம் பெண்கள் குறித்து.. இது தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்குவதற்கல்ல. ஒரு விழிப்புணர்வுக்கு மட்டுமே..


பொதுவெளியில் நாம் என்ன உடையில் செல்வோமோ , அந்த உடையில் உள்ள படங்களை மட்டுமே உங்கள் முக புத்தகத்திலோ அல்லது பதிவிலோ போடுங்கள்..

சில மாதம் முன்பு ஒரு பெண்ணின் நைட்டி போட்ட படம் தினமும் வந்து என் முகபத்தகத்தில் தொந்தரவு கொடுத்தது..

அவர் அந்த படத்தை அறிந்தோ அறியாமலோ போட்டிருக்கலாம்.. இல்லை அது அவருக்கு ஒரு பெரிய விஷயமாக/தவறாக இல்லாமல் கூட இருக்கலாம்..

எதையும் எதிர்நோக்கும் துணிவு மிக்கவராயும் இருக்கலாம்..

ஆனால் பார்ப்பவர்கள் எல்லாரும் அவர் மன நிலையில் இருப்பார்கள் என சொல்ல முடியாதே?..

அதே போல்தான் சில ஆபாச கவிதைகளும்..

மணிமேகலை எழுதுகிறார் என்றால் அவரால் எதிர்கொள்ள முடியும்..

முத்தக்கவிதை எழுதும் சில தோழியர் , அவர் வாழும் நாட்டில் இது சகஜமாக இருக்கலாம்.. ( நான் வாழும் நாடு போல )

அவர்கள் குடும்பத்தினரும் அதனை அங்கீகரிக்கலாம்..

ஆனால் பொதுவில் அப்படி ஒரு கவிதை எவ்வாறு உள்வாங்கிக்கொள்ளப்படுகிறது என்பதையும் கணக்கில் கொள்ளணும்..

அதே போல சில பின்னூட்டங்கள் மூலமும் சில பெண்கள் தம்மை வெளிப்படுத்திக்கொள்வதுண்டு..

ஆக இதை வைத்தே ஒரு ஆண் எளிதாக இவர்களை எடைபோட முடிகிறது..

சாந்தம் வழியும் சர்வ லெக்ஷனம்;
காந்தமாய் கவரும் கண்களில் அன்புமழை;
பொன்னகைப் பூட்டிய பளிங்கு கழுத்தை
புன்னகைக் காட்டிய பவள இதழ்கள்
வெல்லும் வண்ணம் வார்த்து எடுத்த---

இப்படி ஒரு வர்ணனை ஒரு பெண்ணிடம் முக புத்தகத்தில் .அவள் புகைப்படம்
பார்த்து.

அவரும் நன்றி சொல்கிறார் இக்கவிதைக்கு...

பளிங்கு கழுத்தை பவள இதழ்கள் போன்ற அசிங்க வர்ணணைகளை ஏன் பொதுவில் அனுமதிக்கின்றார்கள்..?..

முளையிலேயே கிள்ளி எறியவேண்டாமா?..

இல்லை அதை விரும்பினாலும் தனிமடலில் இருந்துவிட்டால் பரவாயில்லை.. அது அவர்கள் தனிமனித சொந்த விருப்பம்...மட்டுமே..

இது போதாதா சில ஆண்களுக்கு?..

இப்படியான பிரபலங்களை ஏன் பெண்கள் விரும்புகின்றார்கள் என்றுதான் புரிவதில்லை...

இவர்கள் கட்டாயம் மற்றவர்களுக்கு ஒரு தவறான முன்னுதாரணமும்..

ஒஹோ நாமும் இப்படி வழிசலை ஏற்றால் தான் நமக்கும் பிரபலமடைய முடியும் என்று எண்ண வைக்கின்றார்கள்..

பெண் என்பவள் கம்பீரமானவள்.. சக்தி வாய்ந்தவள்.. எவருக்கும் அஞ்சாத மன பலம் படைத்தவள்..தவறுகளை துணிந்து எதிர்ப்பவளாக ,விமர்சனங்களை எதிர்கொண்டு தாங்கி புன்னகைப்பவளாக இருக்கணும்..

அவள் இப்படி கவிதைகள் மூலம் போகபொருளாய் பலவீனப்படுத்தப்படுவது மிக

ஆரோக்கியமற்றது என்பது என் கருத்து...

சமீபத்தில் சேட்டைக்காரன் என்ற பதிவர் கூட பொதுவில் ஒரு விஷயம் சொல்லியிருந்தது எல்லாருக்கும் நினைவிருக்கும்..

அவரிடம் இரு பெண்கள் தவறாக நடப்பதாகவோ/பேசியதாகவோ... அதை அவர் நிரூபிக்கவும் தயார் என்றார்..


ஆக இப்படியான பெண்கள் நம் மத்தியில் இல்லை என்று சொல்ல முடியாது..

செய்வதை செய்துவிட்டு ஆண்களே மோசம் என பழி போடுவது எப்படி சரியாகும்.?

ஒரு ஆண் தவறாக பேச முயல்கிறான் என்பதை ஒரு வார்த்தையிலேயே /புகழ்ச்சியிலேயே மிக மிக எளிதாக கண்டுபிடிக்க முடியும்...

அதை அனுமதித்து விட்டு பின்பு அழுவதால் பிரயோசனமில்லை..

நான் இணையம் வந்த புதிதில் பலரும் இப்படியாக பேசியவர்தான்..முதலில் காம ரசம் சொட்டும் கவிதைகளை பகிர்ந்து நம் கருத்தை கேட்பார்கள்.. அல்லது சிலைகளுடைய புகைப்படம் அனுப்புவார்கள்.. அல்லது இருக்கவே இருக்கு ஓஷோவின் காம வரிகள்...

நாம் மரியாதை கருதி அமைதியாகவோ , ஒரு புன்னகையோடோ விலகுவோம்..

சிலர் மீண்டும் தொந்தரவு செய்யும்போது , எனக்கு இதிலெல்லாம் விருப்பமில்லை என மென்மையாக மறுக்கலாம்..

யாரும் யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை...

பின்பு நாம் அதை விரும்பாதவர் என தெரிந்தும் நல்ல விதமாய் மட்டுமே நட்போடு பழகுபவராய் மாறிப்போனதுண்டு..

ஆணிடம் காமம் குறித்தான் எண்ணம் பெண்ணை விட அதிகம்தான்.. மறுப்பதற்கில்லை...அது இயற்கை..

அதற்கு இடம் கொடுப்பதை பொறுத்தே இருக்கிறது , அதை தொடர்வதும் , விலகுவதும்..

ஆனால் அதை வைத்து மட்டுமே ஒருவன் அயோக்கியன் என்று சொல்லிவிட முடியாது..

பெண்களிடம் செல்லும் எல்லோரும் அயோக்கியருமல்ல.. செல்லாதவர் எல்லாரும் யோக்கியருமல்ல..

இதே தான் பெண்களுக்கும்..

20 வயதிலிருந்தே ஆணின் பார்வைகளை தாங்கியே வளர்ந்திருக்கோம்.. பெண் அங்கங்களை ரசிப்பவனாகவே படைக்கப்ப்ட்டிருக்கான் ஆண்..

ஆனால் எல்லா பெண்களையுமா எப்போதும் பார்க்கிறான்?.. அது காம வெறியனின் செயல் மட்டுமே..

அப்படி பார்ப்பவனும் , பெண்களையே ஏறெடுத்தும் பார்க்காமலேயே இருப்பவனும் மருத்துவ உதவி தேவைப்படுபவர்கள்..

மற்றபடி சாதாரணமாய் ரசிப்பவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதே.. அது நாகரீகமாக இருக்கும் பட்சத்தில் மட்டும்..

இதேதான் இனையத்திலும்...


ஆணுக்கு பெண்ணின் மீது ஒரு அன்பு, பாசம், தாய்மை ஏதோ ஒன்றின்மீதும் , பெண்ணுக்கு ஆணின் மீதும் ஒரு கண்காணிப்பு, பாதுகாப்பு , ஆறுதல் , துணிவு தரும் ஏதோ ஒன்றும் தேவைப்படுகிறது...

இவை வரம்பு மீறாதவரை இரு பக்கமும் வளர்ச்சியோடு இருக்கும்வரை ஆபத்துகள் ஏதுமில்லை.. எப்ப மற்றவர் மீது பொறாமை , பொஸசிவ்நெஸ்/ஆழுமை வர ஆரம்பிக்குதோ அப்போது அங்கேயே நட்போடு , எவ்வித கசப்புமின்றி பிரிவது அவசியம்..


பிரியணும்னு முடிவெடுப்பவர் பெண்ணாக இருக்கும் பட்சத்தில் மிக கவனமாக கையாளணும்...

தன் நிலைமையை விளக்கி ஆணுக்கான அவகாசம் /நேரம் கொடுத்து , அவர் இதுவரை செய்த நல்ல விஷயங்களுக்கு நன்றி செலுத்தி , அவர் காயப்பட்டிருந்தால் அதற்கான மன்னிப்போடு விலகணும்..

அந்த நட்புக்கு ஒரு குற்ற உணர்ச்சியை கொடுத்துவிடக்கூடாது.. தப்பு நம்மேலும்தான்..இதை ஏற்க கடினமென்றாலும்..

ஏன் இப்படி சொல்கிறேன் என்றால் நட்போடு இருக்கும்போது கண்டிப்பாக அவர் நல்ல விஷயம் செய்திருப்பார்.( ஒன்றாவது ) . அதை மறந்து தூக்கி எறிந்து விட்டு செல்ல வேண்டாம்..


அப்படி செல்லும்போதுதான் பழிவாங்கும் எண்ணம் வரும்..

இதையும் தாண்டி மென்மையாக பிரிந்தும் இப்படி பழிவாங்கும் எண்ணமிருந்தால் ஒண்ணும் கவலைப்படாது துணிந்து நிற்பதே வழி..

சில பல விஷமத்தனமான விமர்சனங்கள் நம்மீது பரப்பப்படும்.. எல்லாவற்றையும் ஏற்க பழகிக்கணும்.. ஏன்னா இது பொறாமை , போட்டிகள் நிறைந்த உலகமாச்சே..

நாம் நல்லவர்கள் , என்பதற்காக மட்டுமே நமக்கு நடப்பதெல்லாம் நல்லவையாக நடக்கணும் என்ற எவ்வித கட்டாயமுமில்லை..

ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு..

“Expecting the world to treat you fairly because you are a good person is a little like expecting a bull not to attack you because you are a vegetarian" Dennis Wholey

மேலும் ஒரு நல்ல நட்பு தப்பை சுட்டிக்காட்டக்கூடியதாய் இருக்கணும்.. தப்புகளை ஏற்றுக்கொள்வதாகவும் இருக்கணும்.. நட்பாய் இருக்கணும் என்ற ஒரே காரணத்துக்காக தப்புகளை கண்டும் காணாமல் இருக்க கூடாது..


நம் மனசாட்சிக்கு நாம் நல்லவர்களாய் இருந்தால் போதும்.. மற்றவர்களுக்காக அல்ல..அதே போல் நிரூபிக்க தேவையுமில்லை யாரிடமும்..

நம் குடும்பத்தினர் நம்மை நம்பணும்.. அவ்வளவே..

மேலும் திருமணமான பெண்கள் மற்றொரு ஆணோடு பேசுவதை நம் தமிழ்நாட்டு/இந்திய /சில சமயம் பல நாட்டு கலாச்சார ஆண்களால் உடனே ஏற்க முடியாதுதான்..

மெதுவாகத்தான் புரிய வைக்கணும்.. ஆனால் பெண் புரிந்துகொள்வாள் எளிதில்..

( என் வேலை நிமித்தம் என் பாஸ் கூட பல்வேறு ஊர்களுக்கு சென்று விடுதியில் தங்கி வருவேன்.. பல இரவு நேர வேலையும் எனக்கு.. இதையெல்லாம் பெருமையாக

அனுப்பி வைத்தாலும் , ஆயிரம் பேரோடு அலுவலில் கைகுலுக்கினாலும் ,20 வருடமாய் ஆண்களோடு ஆண் போலவே வேலை செய்தபோதும் , தன் கண் முன்னால் வேறொரு ஆண் கைகுலுக்குவதை ஜீரணிப்பது இன்னும் என் கணவருக்கு சங்கடம்தான்..அதிலும் வெளிநாட்டவர் என்றால் கூட பரவாயில்லை.. இந்தியர் என்றால் தான் ..:) ஏனெனில் நம் வளர்ப்பு அப்படி.. )


ஆக கணவரையும் புரிந்துகொள்ளணும்.. நாம் பேசும் அனைத்து நட்புகளையும் முடிந்தவரை அறிமுகப்படுத்திடணும்..

எனக்கு வெளிநாட்டில் இருந்து அழைப்பு வரும்போதெல்லாம் அவரும் சில சமயம் பேசுவார்..என் கல்லூரி தோழர்கள் என் வீட்டில் வந்து தங்கியதுமுண்டு..அவருக்கு பிடிக்கும் பட்சத்தில்..

பிடிக்காவிட்டால் ?.. வேறென்ன செய்ய புரியவைக்க முடியாவிட்டால் , புலம்பிக்கொண்டே விட்டுவிட வேண்டியதுதான்.. மற்றவரை மாற்றுவதை விட , நாம் மாறிக்கலாம் சில வேளை..

ஆண்களோடான எனது இருபது வருட வேலை அனுபவத்தில் ,நட்பு/காதல் பிரிவினால் அவர்கள் வருந்துவதையும், வலிகளை மனதுக்குள்ளே வைத்து அழுவதையும் கண்டுள்ளேன்.. பெண் புலம்பியாவது ஆறுதலடைவாள்.. ஆனால் ஆண் பூட்டி வைப்பான்..சிலரே வெளியில் சொலவ்தும்..


ஆண்களும் சில பெண் நட்புகள் , அல்லது காதலி பிரிந்துபோய்விட்டாளே என ஒருபோதும் கவலை கொள்ளாதீர்கள்..

காதலும் , அன்பும், நட்பும், இன்ன பிறவும் நம்மிடையேதான் இருக்கிரதேயன்றி பிறரிடம் இல்லை.. அதற்கு தகுதியானவர்கள் கிடைத்தே தீரும்...

நண்பர்கள் பிரிந்தாலும் அவர்களோடான அந்த நட்பு கால நினைவுகள் ஒருபோதும் பிரிவதில்லை.. அவை என்றென்றும் இனிமையாக இருக்கணும்..

நண்பர்களை நட்போடு பிரிய பழகுவோம்...



படம் : நன்றி கூகுள்..





--

Monday, December 6, 2010

இணைய நட்பு முழுதும் தீங்கானதா?..



























இணைய நட்பு முழுதும் தீங்கானதா?..

இன்று "

இது கண்டனம் அல்ல விழிப்புணர்வு....!"


என்ற ஒரு நல்ல விழிப்புணர்வு பதிவை கெளசல்யா போட்டிருந்தார்..நன்றி..

http://kousalya2010.blogspot.com/
----------

பெண்களின் பலவீனத்தை பயன்படுத்தி மன உளைச்சல் கொடுப்பதும் , மிரட்டுவதும் தொடற்கிறது.

எல்லாருக்குமே ஏதோ ஒரு நேரம் மனசு விட்டு பேச ஒரு நல்ல நட்பு வேண்டிதானிருக்கிறது..

குடும்ப விஷயங்களை கூட நம்பிக்கையானவர்களிடம் சொல்வதில் தப்பில்லை..

இதுவரை என்னிடம் சாட் செய்தவர்கள் நூற்றுக்கணக்கில்.. எத்தனை எத்தனை குடும்ப பிரச்னைகள்?...

ஒரு சகோதரன் குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலைக்கூட துணிந்த கதையுண்டு..

அந்த நேரத்தில் " எதைத்தின்னா பித்தம் தெளியும் ' என்ற கதையில் ஆறுதல் தேடி அலையத்தான் செய்யும் மனம்..

அந்த நண்பருக்கு அவரை விட கஷ்டத்தில் இருக்கும் நபர்களை பற்றி எடுத்து சொல்லவேண்டியிருந்தது..



நானும் பகிர்ந்து ஆறுதல் அடைந்துள்ளேன் மிக மிக நல்ல தோழி , நண்பர்களிடம்..

ஆக எல்லாருமே மோசம் இல்லை.. பழகும் போது அந்த நபர் அவர்கள் குடும்ப விபரம் தெரிந்து வைப்பதும் , அவர் குடும்பத்தினரிடம் எத்தகைய மரியாதை வைத்துள்ளார் என்பதையும் புரிந்துகொள்ளணும்..

என் நட்புகளை குடும்பத்தோடு அறிமுகம் செய்ய முடிந்தால் மட்டுமே தொடருவேன்..

வருடா வருடம் இந்தியா செல்லும்போது குடும்பத்தோடு சந்திப்பதுமுண்டு...

ஜொள்ளு விட வரும் நட்புகளிடமும் நீங்கள் தேடும் பெண் நான் இல்லை என சொன்னால் நிச்சயம் மரியாதையாக விலகிடுவதுண்டு.. அல்லது மன்னிப்புடன் நல்ல நட்பாக மாறுவதுமுண்டு... சில விஷயங்கள் நம் கையிலும்..கெட்டவர்களை கூட நல்லவர்களாய் மாற்றுவதும் கூட சில சமயம்..


இதில் சில கெட்டவரும் இருக்கலாம்.. என்னைப்பொறுத்தவரை 1000ல் ஒண்ணு அப்படி இருக்கும்..

ஆக எல்லோருமே மோசம் என எண்ண வேண்டியதில்லை..

எனக்கு பதிவுலகில் பிரச்னை என்றதும் உதவியதில் பலர் ஆண்கள் தான்..பெண்களுமுண்டென்றாலும்.. ( என் நன்றிகள் )

இதையும் மீறி தப்பு நடந்திருந்தாலும் ஒன்றும் பயப்பட வேண்டாம்..ஒரு அனுபவம் அவருக்கு.. மன உளைச்சலே வேண்டாம் என ஆறுதல் சொல்லுங்கள்.. துணிந்து பதிவுகளை எழுத சொல்லுங்கள்.. அதுவே சிறந்த மருந்தும்... ஓடி ஒளிவதே இத்தகைய கயவருக்கு வெற்றி.. அடுத்து வேறொரு பெண்ணுடன் ஆரம்பிப்பார்... ஆக அவர் யாரென்று பெண் பதிவர்களுக்காவது தெரியப்படுத்திடுங்கள்...


அதுவும் வெளிநாட்டில் இருக்கும்போது நட்பு கூடுதலாய் தேவைப்படலாம்..அனைவருக்குமே..

இதை " மித்ர மை பிரண்ட் " என்ற படம் கூட அழகாக சொல்லியிருக்கும்..


பெண்கள் கொஞ்சம் மென்மையானவர்கள் என நினைத்து இல்லாத குடும்ப கஷ்டத்தை சொல்லி பணம் கேட்பவரும் உண்டு..

ஒருமுறை ஒரு நண்பர் என்னிடம் அப்படி கேட்டபோது நான் அவர் அக்கவுண்ட் எண் , வேலை செய்யும் அட்ரஸ் கேட்டேன்.. கொடுத்தார்..

இப்ப கொஞ்ச நேரத்தில் பணம் போடுகிறேன் என்றேன்..

சிறிது நேரங்கழித்து என்ன போட்டாச்சா என்றார்..

இருங்க எங்க வீட்டு பசங்க சென்னையில் தான் பலர் இருக்காங்க அனுப்பி வைக்கிறேன் உங்க அலுவலகத்துக்கு என்று சொன்னதும் அழ ஆரம்பித்தார்

மன்னிச்சுடுங்க என் வேலை போயிடும் என.. மன்னித்துவிட்டேன்..

எந்த பிரச்னை என்றாலும் துணிவாக பதிவுலக நட்புகளை முக்கியமா பெண்களை நாடுங்கள்..

பெண் பதிவர் சந்திப்பும் அப்பப்ப நடத்திடுங்கள்.. அப்ப பயம் இருக்கும் இத்தகைய ஆண்களுக்கு..

அதுமட்டுமல்ல நாங்கள் அன்புடன் குழுமத்தில் இருந்த போது குறிப்பிட்ட ஒரு ஆணின் பெயரை கெடுக்க அவரைப்போலவே சாட் செய்து அதை பெண்கள் எல்லாருக்கும் அனுப்பியும் வைத்தார் ஒரு அனானி..

நாங்கள் அதிர்ச்சியடைந்தோம்..அதில் எல்லா பெண்களை பற்றியும் விமர்சிக்கப்பட்டிருந்தது.. பின் அவரை கூப்பிட்டு கேட்டபோது இது அவர் எதிரியின் வேலை என தெளிவுபடுத்தினார்..

ஆக சாட்களை கூட மாற்றி இப்படி அனானி பேரில் அனுப்பி துன்புறுத்துவது ...

பெண்களுக்கு மட்டும் பிரச்னை இல்லை .. பொறாமையால் சில ஆண்களுக்குமே பிரச்னை உண்டுதான்..

அப்பெண் பதிவர் எழுத தொடங்கட்டும் பிரச்னை முடிந்ததும்.

இணையம் மூலம் அறிமுகமான இரு பெண் நட்புகள் தாய்லாந்து வந்ததும் நாங்கள் ஊர் சுற்றிப்பார்த்ததும் நல்ல அனுபவங்கள்.. அதே போல நான் இந்தியா சென்ற போது எங்களை குடும்பத்தோடு கூடன்குளம் மின் நிலையம் அழைத்து சென்று சுற்றிக்காட்டிய முன்பின் அறிமுகமில்லாத நண்பர்..இப்படி பல விஷயங்களை சொல்லலாம்..



கயவர்களை மட்டும் களை எடுப்போம்.... நல்ல நட்புகளை ஆரோக்கியமாக வளர விடுவோம்...




( மேலேயுள்ள குழந்தைகள் படம் வாசகத்தோடு அளித்த நண்பர் க்கு மனமார்ந்த நன்றிகள்... )




படம் : நன்றி கூகுள்



..

Wednesday, December 1, 2010

மீண்டும் பெண்ணை பலியாக்குதல்...நந்தலாலா...




















படம் அருமையா எடுக்கப்பட்டிருக்கு..

குழந்தை , குமரனின் வலிகள் , அவர்கள் பயணங்கள் , சந்திக்கும் மனிதர்கள் , அவர்களின் நிலைகள் , சுவாரஸ்யமானவை..


வித்யாசமான படம்..

குத்துபாட்டு , அடி தடி நம்ப முடியாத பைட்டுகள் , சுவிஸ் பாடல்கள் இல்லாமல் இது போல படங்கள் கருத்தை , வலிகளை சொல்வதாய் பார்க்க நன்றே..


இசையும் கூடுதல் பலம் .

ஆனால் கரு.?

தமிழ் சினிமா யாருக்காக எடுக்கப்பட்டிருக்கோ அதில் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள்...

நான் எழுத நினைத்த விஷயங்களை மிக அழகாக இரு பதிவர்கள் ஏற்கனவே எழுதிவிட்டதால் , ( அதிலும் இவர்கள் ஆண்கள் என்பது மிக முக்கியமான விஷயம் )

அவர்கள் லிங் இங்கே..

அதெப்படி ஒரு பெண்ணின் பார்வையை ( வலிகளை ) எளிதில் சில ஆண்களால் மட்டுமே புரிய முடிகிறது?.

சிலருக்கு புரிந்தாலும் பயம்.. எங்கே ஆட்டு மந்தைகளின் கூட்டத்தை விட்டு விலக்கப்படுவார்களோ என.. ( அப்ப அவர் ஆணா னு கேக்கப்டாது )

சிலர் புரியவே மாட்டோம், இதுவே வசதியாகத்தான் இருக்கு.. இந்த பண்பாட்டிலேயே ( பெண் பலியாவதே ) இன்னும் ஒரு 1000 ஆண்டுகள் கடத்திடுவோம் னு பிடிவாதமாய்..


என் குடும்பத்தில் இதே போல இரு சகோதரர்கள் ( ஒருவர் அதிகம் படித்தமையால் , இன்னொருவர் விபத்தால் ) இருப்பதால் என்னால் அவர்கள் வலியை மிக எளிதாக புரிய முடிந்தது..

பெரிய சகோதரர் ( சித்தப்பா மகன் ) இன்னும் மருத்துவமனையில்..( விடுதி மாதிரி.. தன்வந்த்ரி ஹோம் ).. அசாம் ஐஐடியில் கைட் ன் அராஜகத்தால் , மூத்த மகன் என்ற வீட்டுப்பொறுப்பால் விட்டுவிட்டும் வர முடியாமல் , வருத்தங்களை மனசுக்குள் அமுக்கி...மனநிலை தவறியது..டாக்டர் பட்டம் வாங்கிய கையோடு.. )

வருடா வருடம் சென்று சந்திக்கும்போது அவன் அறைக்குள் என்னை பாதுகாப்பாக அழைத்து செல்லும்போது அப்படி ஒரு பயம் அப்பிக்கொள்ளும்...

அவன் அறையில் தங்கியிருந்த ஒரு வாலிபன் , குழந்தை போல் வந்து என்னை தொட்டு சென்றதும் கட்டில் மீதேறி மகிழ்ச்சியில் குதித்ததும் , உலக வாழ்வே வெறுக்க செய்த நிமிடங்கள் அவை.. விவரிக்க வார்த்தையில்லை...:(((

தம்பி ஒரு விபத்தில் பெங்களூரில் அடிபட்டு அறுவை சிகிச்சை செய்தும் மன நிலை குழந்தையாக மாறிப்போனது.. :(


இவ்வலிகள் எப்போதும் எந்த மனநிலை சரியில்லாதவரை பார்க்கும்போதும் என் சகோ வாய் எண்ண வைக்கும்...


ஏற்கனவே காயப்பட்டதால் கண்ணீர் வரவில்லை.. சகோதரர்கள் நியாபகம் மட்டுமே..

குழந்தை அம்மாவை தேடும் ஒவ்வொரு சொல்லும் வயற்றிலிருந்து தொண்டைக்கு கொண்டு வந்து அமிழ்ந்த வலியை விவரிக்க முடியாது...தான்..

ஏனோ கண்ணீர் வருவதில்லை இபோதெல்லாம்..:)

பாலியல் தொழிலாளியை வைத்து மட்டும் இன்னும் எத்தனை தரம் --------------------?...


வலிகளுக்காக பார்க்கலாம் ...முடிந்தால் ஒரு மனநோயாளியையும் சென்று .


இதோ நான் ரசித்த இரண்டு விமர்சனங்கள்..