
இந்த செவ்வாய் அன்று ஏற்கனவே எழுதியிருந்தேன் ஐடிசி க்கு சென்று அகதிகளை சந்தித்ததாக..
10 மணிக்கு வரிசையில் நின்று படிவம் நிரப்பி கொடுத்துவிட்டு அமர்ந்தால் எதிரே 2 வட இந்தியர் , ஒரு பாகிஸ்தான் பெண்மணி , 3 இஸ்லாமிய தாய் பெண்கள் ( கல்லூரி செல்லும்
பெண்களாயிருக்க கூடும்.. )
நான் சுவற்றை பார்த்து கொண்டு உட்கார்ந்திருந்ததால் எனக்கு பார்வையை செலுத்த வேறு வழியில்லை.. இவர்கள் 6 பேரையும் மாற்றி மாற்றி பார்த்தே ஆகவேண்டிய நிலைமை,..
அல்லது கண்ணை மூடிக்கொண்டு இருக்கணும்..
அந்த பாகிஸ்தான் பெண்மணி 6 அடி உயரம் , மெலிந்த தேகத்தோடு மிக அழகாக ஒரு மாடல் போல் இருந்தார்.. இஸ்லாமியர் என்பதன் அடையாளமாக
தலையில் துப்பட்டா மட்டுமே அனிந்திருந்தார்.. அது அவருக்கு மேலும் அழகூட்டியது என்றே சொல்லலாம்..
கால் மேல் கால் போட்டு மிக கம்பீரமாக அமர்ந்திருந்தார்.. ( கம்பீராமன பெண்மணிகள் எப்போதும் என்னை கவர்ந்திடுவார்கள்.:) )
கால் , கை விரல்களில் மிக பொருத்தமான நகப்பூச்சுகள்.. தன்னை அழகுபடுத்திக்கொள்ள எப்படி நேரம் செலவழிப்பார்கள் என்பது எப்போதுமே நான் வியப்பதுண்டு...
நான் செய்யாவிட்டாலும் அதை முழுமனதாய் ரசிப்பேன்.. இங்கே பார்க்கும் சில தாய் பெண்களை வைத்த கண் வாங்காமல் பார்த்த சம்பவமுண்டு..
கணவர் தான் " சைட் அடித்தது போதும் வா." என அழைத்து செல்லணும் அத்தனை அழகு பதுமைகள் பொருத்தமான அலங்காரத்தோடு , ஆப்பிள் கன்னங்களோடு
கன்ணை கவர்ந்ததுண்டு.. ( நல்லவேளை ஆணாய் பிறக்கவில்லை :)) ).. அதே போல திருநங்கைகளும் அத்தனை அழகு இங்கே...
அதே போல சிறுமிகளும் அவர்கள் உடுப்புகளும் தலை அலங்காரமும்..எப்போதும் ரசனைக்குறியவை..
காலில் அணியும் காலணியில் கூட பாருங்கள்.. பெண்களுக்கென்றால் அதில் கல் பதித்து , அழகான சம்க்கி , பூக்கள் கொண்டு அழகழகான வேலைப்பாடுகளுடன் .
ஒரு அலுவலில் , ஏன் காவல்துறை , நீதிமன்றம் , மருத்துவமனை போன்ற வெற்றிடமாக இருக்குமிடத்தில் கூட ஒரு பூந்தொட்டியையோ, பச்சை இலை செடிகளையோ வைத்து பாருங்கள்..
மனதுக்கு எத்தனை இதம்...
ஒரு பிரச்னையின் போது நாம் கேட்கும் மெல்லிய இசை?.. நல்ல திரைப்படம்./. கடற்கரையில் காலார நடை..?.
இப்படி ரசனைகள் நம் மனதினை மாற்றும் வல்லமை படைத்தவை..
"A THING OF BEAUTY IS JOY FOREVER " John Keats சொன்னது எத்தனை நிஜம்.?
அழகு படுத்திக்கொள்வது , அழகை ரசிப்பது அவரவர் விருப்பம்.. ஆனால் அதை வைத்து மட்டுமே எடைபோடுவதுதான் தவறான விஷயம்..
இப்படி இருக்க , எனக்கு மிக வேதனை தந்த விஷயம் என் முன்னால் அமர்ந்திருந்த அந்த 3 இஸ்லாமிய வாலிப பெண்கள்..
தலையில் வெள்ளை முக்காடு..
உடம்பு முழுதும் கருப்பு அங்கி போன்ற உடை..
கைகளுக்கும் , விரல்களுக்கும் கூட கருப்பு துணியால் மூடி, கால்களுக்கு சாக்ஸ் போட்டு கருப்பு ஷூ போட்டு மூடி...:(
கண்களை தவிர வேறெதுவும் காணமுடியாது..
ஏற்கனவே தாய் மக்கள் பேசுவது சத்தமே கேட்காது..ரகசியம் பேசுவது போல மிக மென்மையான சங்கீத மொழியில் பேசுவர்..
இப்ப அங்கியினுள் பேசுவது ?.
அதில் ஒரு பெண் உணவருந்த ஆரம்பித்தார்.. கை விரல் வரை இருந்த அந்த தலை முக்காடானது , அவர் சாப்பிட மிக இடைஞ்சலாக வந்து வந்து விழுது சாப்பாட்டின் மேல்..
அதை பொருட்படுத்தாது ஒரு கவளம் எடுத்து வாயில் போட மற்றொரு கையால் அந்த துணியை பிடித்துக்கொள்ள , இப்படியே ஒவ்வொரு வாய்க்கும் அவர் செய்வது பார்க்க கஷ்டமாயிருந்தது..
தண்ணீர் குடிக்கவும் அந்த பாட்டிலை துணிக்குள் எடுத்து சென்று கஷ்டப்பட்டே குடிக்கணும்..
அவர்களுக்கு அது பழகிப்போன ஒன்றுதான் இல்லையென சொல்லவில்லை..
ஆனால் இந்த நூற்றாண்டிலும் இப்படி ஒரு பழக்கவழக்கத்தை வைத்து பெண்களை கஷ்டப்படுத்துவதை பார்த்தால் மிக வருத்தமாக உள்ளது..
எனக்கு தெரிந்த ஒரு இஸ்லாமிய பெண் வெளிநாடு சென்று படிக்கும்போது விரும்பிய உடை , ஏன் ஜீன்ஸ் கூட அணிவார்.. விரும்பிய அணிகலனும் அப்பப்ப உள்ள பேஷன் பொருந்த்து.
ஆனால் ஊருக்கு வந்துவிட்டால் கருப்பு அங்கியில் முடங்கி விடுவார்.
எத்தனை எத்தனை ஆசைகளை விருப்பங்களை மற்றவருக்காக அவர் இருக்கும் சமூகத்துக்காக விட்டுக்கொடுக்கவேண்டியுள்ளது?..
இது போல எத்தனை பெண்கள் தம் ஆசைகளை துறந்து துறவி வாழ்க்கை வாழ்ந்துகொண்டுள்ளார்கள்..?
கிடைத்துள்ளது ஒரு வாழ்க்கை .. அதில் பலதரப்பட்ட கட்டுப்பாடோடு உயிர் இருந்தும் பிணமாய் வாழ்ந்துகொண்டு ?..
இதில் திருமணம் செய்து வைத்துவிட்டு வெளிநாடு செல்வார் கணவர்.. , ஆயுசுக்கும் தொலைக்காட்சியை பார்த்து அதில் வரும் காதல் பாட்டுகளை கற்பனை செய்துகொண்டு
2 ஆண்டுக்கு ஒருமுறை கூடிக்கொண்டு , ஒரு நாடகமான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு...?????.. நல்லபெயர் எடுக்கவா?...
கடவுள்னு ஒருத்தர் இருப்பாரென்றால் அவருக்கு நம் மனம் புரியாதா?.. மனதளவில் நாம் சரியாக இருந்தால் போதாதா?..
இதை யோசித்துக்கொண்டிருக்கும்போதே அப்பெண்களில் ஒருத்தி வந்து தாய் பாஷையில் அந்த படிவம் நிரப்பிட உதவி கேட்டார்..
அப்பதான் அந்த கண்களை சந்தித்தேன்.. அதிலேயே தெரியுது அவள் தாழ்ச்சி , புன்னகை...
உலகமெங்கும் பெண்ணுக்கு மட்டும் ஏன் இந்த கட்டுப்பாடு?..
அப்படியானால் இஸ்லாமிய பெண்ணை தவிர மற்ற பெண்களை ஆண்கள் பார்க்கலாம் என்ற சமரசமா?..
இல்லை மற்ற பெண்களை பார்க்கும்போது கண்களை மூடிக்கொண்டு பேசுவார்களா?..
கண்களுக்கு கடிவாளம் போடலாம் ... மனதுக்கு... கற்பனைக்கு எப்படி போடுவது?..
யாரை ஏமாற்றுகிறோம்?.. யாருக்காக...
ஒரு இஸ்லாமிய பெண்ணை என்னை போன்ற மற்றொரு பெண் ரசித்து பார்க்க கூடாதா?..
ஒரு பாகிஸ்தான் பெண்மணி கம்பீரமாக இருப்பதாய் மகிழும் நான் , எனக்கு முன்னுதாரணமாய் எடுத்துக்கொள்ளும் நான் இப்படி புர்காவினால் எத்தனை பெண்களை இழந்துள்ளேன்.?
பாராட்டு எல்லோருக்குமே பிடிக்கும்.. புர்காவுக்குள் புழுங்கும் பெண்கள் மட்டும் விதிவிலக்காய் இருக்கணுமா?..
நடமாடும் சிறை கைதிகளாய் தோன்றினார்கள் எனக்கு...
உலகில் அடுத்து ஒரு மிகப்பெரிய மாற்றமோ, புரட்சியோ வருமென்றால் அது இந்த புர்காவிலிருந்து விடுதலையாக இருக்கணும் என்பது என் பேராசை..
நான் அணிவது என்னை நான் ரசிக்க, எனக்கு உற்சாகம் கொள்ளவே.. அதே உற்சாகம் அனைவருக்கும் கிடக்கணுமே..
நான் ரசித்தவகைகளை , நான் அனுபவித்து உடுத்தியவகைளை , நான் விரும்பிய நிறங்களை , இந்த சகோதிரிகளும் அணியும் காலம் எப்போது வரும்..
வரணும்.. வரும்...
யாரையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னிப்புகள்..
ஆனால் அதைவிட நான் அதிகம் காய்ப்படுகிறேன் ஒவ்வொரு முறை புர்காவினுள் ஒரு கைதியாக ஒரு பெண்ணை , சக மனுஷியை பார்க்கும்போது...:((
படம் : நன்றி கூகுள்..