Monday, December 6, 2010

இணைய நட்பு முழுதும் தீங்கானதா?..



























இணைய நட்பு முழுதும் தீங்கானதா?..

இன்று "

இது கண்டனம் அல்ல விழிப்புணர்வு....!"


என்ற ஒரு நல்ல விழிப்புணர்வு பதிவை கெளசல்யா போட்டிருந்தார்..நன்றி..

http://kousalya2010.blogspot.com/
----------

பெண்களின் பலவீனத்தை பயன்படுத்தி மன உளைச்சல் கொடுப்பதும் , மிரட்டுவதும் தொடற்கிறது.

எல்லாருக்குமே ஏதோ ஒரு நேரம் மனசு விட்டு பேச ஒரு நல்ல நட்பு வேண்டிதானிருக்கிறது..

குடும்ப விஷயங்களை கூட நம்பிக்கையானவர்களிடம் சொல்வதில் தப்பில்லை..

இதுவரை என்னிடம் சாட் செய்தவர்கள் நூற்றுக்கணக்கில்.. எத்தனை எத்தனை குடும்ப பிரச்னைகள்?...

ஒரு சகோதரன் குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலைக்கூட துணிந்த கதையுண்டு..

அந்த நேரத்தில் " எதைத்தின்னா பித்தம் தெளியும் ' என்ற கதையில் ஆறுதல் தேடி அலையத்தான் செய்யும் மனம்..

அந்த நண்பருக்கு அவரை விட கஷ்டத்தில் இருக்கும் நபர்களை பற்றி எடுத்து சொல்லவேண்டியிருந்தது..



நானும் பகிர்ந்து ஆறுதல் அடைந்துள்ளேன் மிக மிக நல்ல தோழி , நண்பர்களிடம்..

ஆக எல்லாருமே மோசம் இல்லை.. பழகும் போது அந்த நபர் அவர்கள் குடும்ப விபரம் தெரிந்து வைப்பதும் , அவர் குடும்பத்தினரிடம் எத்தகைய மரியாதை வைத்துள்ளார் என்பதையும் புரிந்துகொள்ளணும்..

என் நட்புகளை குடும்பத்தோடு அறிமுகம் செய்ய முடிந்தால் மட்டுமே தொடருவேன்..

வருடா வருடம் இந்தியா செல்லும்போது குடும்பத்தோடு சந்திப்பதுமுண்டு...

ஜொள்ளு விட வரும் நட்புகளிடமும் நீங்கள் தேடும் பெண் நான் இல்லை என சொன்னால் நிச்சயம் மரியாதையாக விலகிடுவதுண்டு.. அல்லது மன்னிப்புடன் நல்ல நட்பாக மாறுவதுமுண்டு... சில விஷயங்கள் நம் கையிலும்..கெட்டவர்களை கூட நல்லவர்களாய் மாற்றுவதும் கூட சில சமயம்..


இதில் சில கெட்டவரும் இருக்கலாம்.. என்னைப்பொறுத்தவரை 1000ல் ஒண்ணு அப்படி இருக்கும்..

ஆக எல்லோருமே மோசம் என எண்ண வேண்டியதில்லை..

எனக்கு பதிவுலகில் பிரச்னை என்றதும் உதவியதில் பலர் ஆண்கள் தான்..பெண்களுமுண்டென்றாலும்.. ( என் நன்றிகள் )

இதையும் மீறி தப்பு நடந்திருந்தாலும் ஒன்றும் பயப்பட வேண்டாம்..ஒரு அனுபவம் அவருக்கு.. மன உளைச்சலே வேண்டாம் என ஆறுதல் சொல்லுங்கள்.. துணிந்து பதிவுகளை எழுத சொல்லுங்கள்.. அதுவே சிறந்த மருந்தும்... ஓடி ஒளிவதே இத்தகைய கயவருக்கு வெற்றி.. அடுத்து வேறொரு பெண்ணுடன் ஆரம்பிப்பார்... ஆக அவர் யாரென்று பெண் பதிவர்களுக்காவது தெரியப்படுத்திடுங்கள்...


அதுவும் வெளிநாட்டில் இருக்கும்போது நட்பு கூடுதலாய் தேவைப்படலாம்..அனைவருக்குமே..

இதை " மித்ர மை பிரண்ட் " என்ற படம் கூட அழகாக சொல்லியிருக்கும்..


பெண்கள் கொஞ்சம் மென்மையானவர்கள் என நினைத்து இல்லாத குடும்ப கஷ்டத்தை சொல்லி பணம் கேட்பவரும் உண்டு..

ஒருமுறை ஒரு நண்பர் என்னிடம் அப்படி கேட்டபோது நான் அவர் அக்கவுண்ட் எண் , வேலை செய்யும் அட்ரஸ் கேட்டேன்.. கொடுத்தார்..

இப்ப கொஞ்ச நேரத்தில் பணம் போடுகிறேன் என்றேன்..

சிறிது நேரங்கழித்து என்ன போட்டாச்சா என்றார்..

இருங்க எங்க வீட்டு பசங்க சென்னையில் தான் பலர் இருக்காங்க அனுப்பி வைக்கிறேன் உங்க அலுவலகத்துக்கு என்று சொன்னதும் அழ ஆரம்பித்தார்

மன்னிச்சுடுங்க என் வேலை போயிடும் என.. மன்னித்துவிட்டேன்..

எந்த பிரச்னை என்றாலும் துணிவாக பதிவுலக நட்புகளை முக்கியமா பெண்களை நாடுங்கள்..

பெண் பதிவர் சந்திப்பும் அப்பப்ப நடத்திடுங்கள்.. அப்ப பயம் இருக்கும் இத்தகைய ஆண்களுக்கு..

அதுமட்டுமல்ல நாங்கள் அன்புடன் குழுமத்தில் இருந்த போது குறிப்பிட்ட ஒரு ஆணின் பெயரை கெடுக்க அவரைப்போலவே சாட் செய்து அதை பெண்கள் எல்லாருக்கும் அனுப்பியும் வைத்தார் ஒரு அனானி..

நாங்கள் அதிர்ச்சியடைந்தோம்..அதில் எல்லா பெண்களை பற்றியும் விமர்சிக்கப்பட்டிருந்தது.. பின் அவரை கூப்பிட்டு கேட்டபோது இது அவர் எதிரியின் வேலை என தெளிவுபடுத்தினார்..

ஆக சாட்களை கூட மாற்றி இப்படி அனானி பேரில் அனுப்பி துன்புறுத்துவது ...

பெண்களுக்கு மட்டும் பிரச்னை இல்லை .. பொறாமையால் சில ஆண்களுக்குமே பிரச்னை உண்டுதான்..

அப்பெண் பதிவர் எழுத தொடங்கட்டும் பிரச்னை முடிந்ததும்.

இணையம் மூலம் அறிமுகமான இரு பெண் நட்புகள் தாய்லாந்து வந்ததும் நாங்கள் ஊர் சுற்றிப்பார்த்ததும் நல்ல அனுபவங்கள்.. அதே போல நான் இந்தியா சென்ற போது எங்களை குடும்பத்தோடு கூடன்குளம் மின் நிலையம் அழைத்து சென்று சுற்றிக்காட்டிய முன்பின் அறிமுகமில்லாத நண்பர்..இப்படி பல விஷயங்களை சொல்லலாம்..



கயவர்களை மட்டும் களை எடுப்போம்.... நல்ல நட்புகளை ஆரோக்கியமாக வளர விடுவோம்...




( மேலேயுள்ள குழந்தைகள் படம் வாசகத்தோடு அளித்த நண்பர் க்கு மனமார்ந்த நன்றிகள்... )




படம் : நன்றி கூகுள்



..