Wednesday, September 17, 2008

மடல் பார்த்ததும் அதிர்ச்சியும் கோபமும் வந்தாலும் அவனுடைய அதிகாரமான அன்பும், அக்கறையும் இதமாகவே இருக்குது வெறுத்துப்போன மனதுக்கு.
இருந்தாலும் அவனைப்பற்றி எனக்கு என்ன தெரியும்.. முன்பின் பார்த்ததில்லை..எப்படி நம்புவது?.குழம்பித்தான் போகிறாள்.
சரி முதலில் அவன் வருவதை தடுக்க வேண்டும்.. மடலுக்கு பதில் அனுப்ப முயல ,சரி சேட்டில் சொல்லிடலாம்..
" மது நீங்க ரொம்ப அவசரப்படுறீங்க..நல்ல நட்புன்னு நினைத்தேன் ஆனா இதென்ன புதுசா?.. காதலா?.. சே.."
" ஹஹ. எப்படி நீ பிணமானதும் , நிதானமா ஒரு பூமாலை வாங்கி வரவா?.ஹலோ ஒரு பெண்ணை காப்பாத்த காதலிக்கணும்னு அவசியமில்லை..
நான் உங்களை இப்பவும் காதலிக்கவில்லையே ஹி ஹி...."
" போதும் கிண்டல்.. சீரியஸா சொல்றேன்.. தலையிடவேண்டாம் என் விஷயத்தை நானே பார்த்துக்கொள்கிறேன்..இன்னும் பிரச்னையை அதிகமாக்காமல்
இருந்தால் சரிதான்... இதுவரை நீங்கள் செய்த உதவிகளுக்கு ரொம்ப நன்றி.. இனி நீங்க யாரோ.. நான் யாரோ.."
"....."
" பை.."
"....."
" என்ன பதிலேயில்லை?.."
" அதான் சொல்லிட்டீங்களே..நான் யாரோன்னு... ஆனா உங்களை விடுவிப்பதில் என் முடிவில் மாற்றமில்லை... பேசுவதை மட்டும் நானும் நிப்பாட்டிக்கொள்கிறேன்.."
" என்ன சொல்றீங்க?.. "
" தெரில .. இப்ப ஒண்ணும் சொல்வதற்கில்லை... பை..."
" மது.. இருக்கீங்களா?.. "
" மதூஊ.. ப்ச்.. என்னாச்சு.."
நாளை வந்துடுவானோ?.. ஒருவேளை நான் இத்தனை கண்டிப்போடு பேசியிருக்கக்கூடாதோ.. சே. என்ன பேச, எப்படி புரியவைக்கன்னு தெரியாம குழப்பிட்டேனோ?.
பயந்து பயந்து ஒன்றும் சாப்பிடாமல், காய்ச்சல் வந்துவிட்டது ..
இதற்கப்புரம் வழக்கம்போல் 2 முடிவுகள்..




--------------------------------------------------------------------------------------------------------------------------------------

முடிவு 1.: ( மதியே..!!!!)
காய்ச்சலில் ஒன்றுமே தோன்றாமல் அப்படியே ஸ்வெட்டரை , குல்லாவை போட்டுக்கொண்டு பால்கனியில் உட்கார்ந்து தூங்கிவிட்டாள்..
திடீரென்று 2 கார் ஹாரன் ஓசை கேட்டு சட்டென்று விழித்தாள்...
கீழே பார்த்தால்..
" யாரது .. விது கூட... ஒரு பெண்மணி.. ஓஹ் அந்த நடனக்காரி.. அடுத்த காரில் 2 ஆட்களுடன்...அ...து அ.....து...."
" கணினி சொல்லித்தரும் அலுவலகத்தின் இணையப்பக்கத்தில் பார்த்த மாதிரி... அப்போ.. இது மதுவா...????????????"
அப்படியே மயக்கம் வரும்போல் இருக்கிறது...
என்ன நடக்கப்போகுதோ அய்யோ கடவுளே.. நான் இன்னிக்கு காலி...எப்படி கொல்லப்போகிறானோ?.. அதுக்கு முன்னால் நான் பெற்றோரிடம் பேசணுமா..?."
இவள் படியிறங்க , இறங்க ஆயிரம் எண்ணங்கள், மண்டைக்குள் ஏறுது...
சரி முதலில் மன்னிப்பு கேட்டு பார்ப்போம்... அவன் வந்ததும்..
அதற்குள் காலிங் பெல் இம்சிக்க,
தூக்குக்கயிறுக்கு செல்வது போல், மெதுவாக அடிமேல் அடி எடுத்து நடக்கிறாள்...பாதி உயிர் பயத்திலேயே போய்விட்டது..
கண்கட்டிய பசி மயக்கத்தில் கண்களை மூடிக்கொண்டு கடவுளை மட்டும் எண்ணிக்கொண்டு, கதவைத் திறந்தவள்,
அப்படியே அந்த ஷூவின் காலில் விழுந்து கதற ஆரம்பித்தாள்... மன்னியுங்கள் என்று..
மெதுவாக இரு கரம் அவளது தோளைத்தொட,
அடுத்து எங்கு அடிக்கப்போகிறானோ, எங்கே அப்படி போய் விழுவோமோ என்று வலிமை இழந்தவளாய் எண்ணும்போதே, அவளை நிற்கவைத்து ஆதரவாய் அணைக்க முற்பட்டது... கரங்கள்..
அப்போதுதான் தடுமாறி விலகி, முகம் பார்த்து திடுக்கிடுகிறாள்...
" ஒன்றும் பயப்பட வேண்டாம் என கண்ணாலும் , சைகையாலும் அவளை அமைதிப்படுத்துகிறான் மது...
அவளையறியாமல் அவன் கைகளை இறுக பற்றிக்கொள்கிறாள் குழந்தையைப்போல்...
அதற்குள் வெளியே பார்க்க, விதுவின் பெண் உதவியாளர் விதுவின் கைபிடித்து ஏதோ பேசிக்கொண்டிருக்க, இந்தப்பக்கமே திரும்பாமல் விது தோல்வியில்.
அவமானமாய் வெறித்துப்பார்த்துக்கொண்டிருக்கிறான் எங்கேயோ..
" தேவையானதை எடுத்துக்கொள் .நாம் உடனே இந்தியா கிளம்புகிறோம், போலீஸ் பாதுகாப்போடு...எல்லாருக்கும் தெரியப்படுத்தியாச்சு.."
அடுத்த அரை மணிநேரத்தில் விமான நிலைய சாலையில் மது வண்டி ஓட்டிக்கொண்டே தொலைபேசியில் பேசிக்கொண்டே, தேவையான கடிதங்களை புரட்டிக்கொண்டே,
பின் இருக்கையில் இருக்கும் ரதியிடம்,
" இப்ப பரவாயில்லையா நீ...?.. பதட்டமில்லையே..."
" ம்.. நன்றாகவே இருக்கிறேன்.. மிக்க நன்றி..உதவிக்கு."
".நன்றில்லா.............ம் வேண்டாம்.. ஒரு உதவி செய்வீங்களா?."
" ஒஹ் கண்டிப்பா.. சொல்லுங்க செய்கிறேன்.."
" கண்டிப்பா?."
"ம்.ம். கண்டிப்பா.."
" இந்த காதல் னு சொல்றாங்களே.. அப்படீன்னா என்னதான்னு எனக்கு தெரியலை.. ஒரு பெண் தேவையாம்...நீங்க கொஞ்சம் உதவுங்களேன் அந்த புத்தகத்தை படிக்க.:-))."
"..."
" என்ன பதிலே காணோம்?.."
"இல்ல உங்களை எத வெச்சு எப்படி அடிக்கலாம் னு .யோசிக்கிறேன்......ஹஹ"
பனிபொழிய ஆரம்பித்த அந்த இடத்திலேயே வண்டியை நிப்பாட்டினான்.... புன்னகையோடு பின் இருக்கையின் கதவை திறந்து கைகளை நீட்ட........

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
முடிவு 2.: ( விதியே..!!)
இரவு வழக்கம்போல மனைவியை அணைக்க முற்பட்ட விது அவள் போர்வைக்குள் காய்ச்சலில் நடுங்குவது தெரிந்தது...
" ஏய் மாத்திரை ஏதாவது போட்டியா என்ன?.."
பதிலேயில்லை.. சரி தூங்கட்டும் என விட்டுவிட்டான்... சலிப்போடு..இருந்தவனை ரதியின் குரல் தூக்கிப்போட்டது..
" பிளீஸ் மது வராதீங்க வீட்டுக்கு.. அவர் என்னை கொன்னே போட்டுடுவார்.. மடலிலேயே பேசிக்கொள்ளலாம்.. பொறுங்க..பிளீஸ்..பிளீஸ்.."
தூக்கத்தில் காய்ச்சலில் உளறுகிறாள்..
முதலில் கோபப்பட்டவன், பின் நிதானமாக கவனிக்க ஆரம்பித்தான்.. கலக்கத்தோடு மடல் பார்க்க கணினியில் நுழைந்தான்...
தானாகாவே லாகின் போட்டு வைத்திருந்தாள் பேதைப்பெண்....
ஒவ்வொன்றாக அவளுடைய சாட் டினை கடந்த 6 மாத காலமாக பேசியதை வாசிக்க வாசிக்க, அவனுள் மிருக வெறி வந்தது..
ஆனால் கடைசியில் அவள் போக விரும்பாமல் தன்னுடனே இருக்க நினைத்ததை எண்ணிப்பார்த்து மிகுந்த ஆச்சர்யப்பட்டான்..
இத்தனை கொடுமை பண்ணியிருந்தும் இன்னும் நான் திருந்துவேன் என்ற நம்பிக்கையோடு இருக்கிறாளே.. இவளுக்குதான் என்ன துணிச்சல்..
சே நான் எவ்வளவு கேவலமானவன்.. கூண்டு திறந்தும் பறக்க விரும்பாத அன்னப்பறவை...
முதல்முறையாக அவள் அருகில் வந்து மென்மையாக அவள் நெற்றியில் முத்தமிட்டு, அவளுக்கு வேண்டிய மருந்தையும் நீரையும் எடுத்து வந்து
அருகில் அமர்ந்து அவளை கைத்தாங்கலாக எழுப்பி தோளில் சாய்த்து மருந்து கொடுத்தான்... சிறிது நேரத்தில் சுய நினைவு வந்தவளாய், தன் கண்ணை
கசக்கி கசக்கி கனவா, நினைவா என பார்த்துக்கொண்டாள்..
" ரதி.. பயப்படாதே மா. என்னை மன்னித்துக்கொள்.. உன்னிடம் எவ்வளவு கேவலாமாக நடந்துகொண்டேன்...இனி ஆயுசுக்கும் நாந்தான் உனக்கு கடமைப்பட்டுள்ள அடிமை.. என்னை குறித்து எனக்கே வெக்கமாயிருக்கு... "
" அய்யோ என்னாச்சு என்ன சொல்றீங்க.. நான் ஏதாவது தப்பா.."
அவள் வாயைப்பொத்தினான்...
" தப்பெல்லாம் என் மேலதான்.. இப்பவும் நீ விரும்பினால் மதுவிடம் நீ செல்லலாம்..எனக்கு தண்டனையாக..."
கண்ணீர் முட்டிக்கொண்டு வர அவன் வாயைப்பொத்தி விட்டு அவனை அணைத்துக்கொண்டு ஒரு குழந்தையாக அவன் மடியில் தஞ்சமடைந்தாள்...
வெளியே முதல் பனி மழை மென்மையாக பொழியத்தொடங்கியது...........
மெதுவாக போர்வை போத்தி பால்கனிக்கு அழைத்துச்சென்றான் மெளனத்தில் காட்சிகள் மட்டும் பேச..

*****************************************முற்றும்*******************************************************************