

கடைக்குட்டியின் கதை- பாகம் 1
-------------------------------------------
உதித்த அதிசயம்..
===============
பத்து வருடம் கழித்து,
பத்து மாதம் குடியிருக்க,
தவப்புதல்வனாம் தலைமகனின்,
இரண்டு வருட பிரார்த்தனைக்குபின்,
வேண்டுதலோடு ,அவதரித்தாய்..
பத்துமாதமென்ன பத்துவருடமாயினும்,
பத்திரமாய் தாங்கியிருப்பேன்!
.தலைக்குழந்தை கருவுற்றால்கணவரே தாயுமாவார்; புதிதல்ல!.
ஆனால் தம்பி வருவான் என்ற நம்பிக்கையில்,
என் தங்கமகன் நீயே எனக்கு தகப்பனானாய்.
அம்மா மருந்தெடுத்தீங்களா என ஒரு கண்டிப்பு!.
இனிப்பு சேக்காதீங்க டாக்டரிடம் சொல்வேன் என புன்சிரிப்பு!.
தம்பியோ?,தங்கையோ? பத்திரமாய் வரணும் என பரிதவிப்பு!.
அவன் அன்புத்தொல்லை தாங்கமுடியாத ஒரு பாதுகாப்பு!..
----------- தொடரும்..