Thursday, August 14, 2008



பாஸ்கர்: ம். அப்ப எப்ப வார விமானத்துல??கூட யார் வாரா?
அஞ்சலி: ம். கெளம்பியாச்சு.. நாளை காலை அங்கே இருப்பேன்.. எப்படா உன்னை பார்க்கப்போறோம்னு இருக்குடா..ம். பேபி வருவாங்க..அங்க எப்படி?
பாஸ்கர்.. : அதேதான் இங்கயும்... போட்டோ கூட பாக்கல... ரொம்ப ஆர்வமாயிருக்கு,..ம். கூட சின்னா வரலாம்.
அஞ்சு: ம்.. ஹிஹி.


********************************************************************************************************************************"தாத்தா


என்ன இது காலையிலேயே விமான நிலையம் போகணும்னு சொல்லிட்டு தண்டால் எடுத்துட்டு இருக்கீங்க... "
"படவா மெதுவா பேசு... தாத்தான்னு கூப்பிடாதன்னு எத்னி தடவை சொல்றது... கால் மி சின்னா..பாஸ்கி..ஐ வில் ஜாயின் யூ இன் 5 மின்."
" ச‌ரி அப்ப‌ நான் ஸ்லோக‌த்தை சொல்லிட்டு வர‌ட்டா?.."
" வ‌ராதே .. அப்ப‌டியே போய் உன் வேஷ்டி குர்தாவை க‌ழ‌ட்டிட்டு ஜீன்ஸ் போட்டுட்டு வா.."
" தாத்தா , சாரி, சின்னா. என்ன‌ இது... இந்த‌ சென்னை வெயிலுக்கு இதுதான் இத‌மா இருக்கு..."
" ந‌ல்லாத்தேன் வ‌ள‌ர்த்திருக்கா உன் அம்மா, அதான் என் ம‌க‌ள்... அதுவும் டெல்லியிலிருந்துகொண்டு.."
" ம். ந‌ல்ல‌வேளை த‌ப்பிச்சேன்... உங்க‌கிட்ட‌ வ‌ள‌ராம‌ல்..:-))) "
"..ம்.. என்ன‌ முன‌குற‌?... ச‌த்த‌மாத்தான் சொல்ற‌து... அதான் ஏழு க‌ழுத‌ வ‌ய‌சாகியும் க‌ல்யாண‌ம் வேண்டாங்கிற‌..."
" அய்யோ தாத்தா க‌ல்யாண‌த்த‌ ம‌ட்டும் ப‌த்தி பேசாதீங்கோ...ஆமா அதென்ன‌ இப்ப‌டி கொட்டுறேள் த‌ண்ணியை?"
" அட‌ அது சென்டுடா .. நீ இன்னும் ஜ‌வ்வாது போட்டுட்டு இரு... "
" தாத்தா இதென்ன‌ ஜீன்ஸ் இப்ப‌டி கிளிச‌லா?.. அய்யோ நான் வ‌ர‌மாட்டேன்பா உங்க‌ளோட‌.."
" டேய் க‌ரும‌ம் பிடிச்ச‌வ‌னே...லைஃப்ப‌ எஞ்சாய் ப‌ண்ண‌ க‌த்துக்கோடா... க‌ண்ணு வெக்காத‌..."
" அச‌த்துரீங்க‌ தாத்தா.. ஆனா அந்த‌ க‌ருப்பு க‌ண்ணாடிதான்.."
" டேய் கால் மீ சின்னா...டேய் அந்த செருப்பை போட்டுட்டு வந்து என் மானத்தை வாங்காத..."
" ஒகே..ஒகே.. சின்னா, இப்ப‌ உங்க‌ள‌பாத்தா என் த‌ம்பியாட்ட‌ம் தான் இருக்கு... ரிபோக் ஷோ என்ன‌, டிஷ‌ர்ட் என்ன‌, ...ஆனா பாத்து க‌ண்ணு ம‌ண்ணு தெரியாம‌ யார் மேலயாவ‌து மோதிராதீங்க‌...என‌க்கு அவ‌மான‌ம்..."
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍***************************************************************************************************************************************
தாத்தா சீக்கிர‌ம் உன் தோழ‌ர்க‌ளை அழைத்துக்கொண்டு வ‌ந்து சேருங்க‌.. நான் ம‌ஹாப‌லிபுர‌ம் போக‌ணும் , ஆராய்ச்சிக்கு..."

" அடேய் பாஸ்கி, தோழர் இல்லைடா, தோழி...ஹி ஹி ஹி.."

" அய்யே.. இது வேறயா?.."

" நீ இந்த அட்டையை வைத்துக்கொண்டு இங்கே நில்... நான் அந்தப்பக்கமா போய் பார்க்கிறேன்.."
அட்டையில் அஞ்சுவின் பேரைப்பார்த்த‌ப‌டி புன்சிரிப்புட‌ன் வ‌ருகிறார் பாட்டி ம‌ட்டும் த‌னியே.
" ஹ‌லோ என் பேர் பேபி.. நீங்க‌தான் பாஸ்க‌ரா?.."
" ஹ‌.. ஆமா ஆமா.. இருங்க‌ சின்னா வ‌ந்துடுவார் இப்ப‌..."
" வாங்க‌ த‌ம்பி , நாம் கொஞ்ச‌ம் பேசுவோம் ஓர‌மாய் போய்.."
யாருமில்லை என்ப‌தை உறுதி செய்துகொண்டு, சட்டை காலரை பிடித்து,
" ஏண்டா ர‌ஸ்க‌ல், என் பேத்திகூட‌வா சேட்டிங் ப‌ண்ற‌ .. நான் யார் தெரியுமா?.. அந்த‌ கால கராத்தே வீராங்க‌னையாக்கும்..."
க‌ராத்தேயை இல‌வ‌ச‌மா போட்டு காட்டுறாங்க‌ பாட்டிய‌ம்மா.அம்மா, அய்யோ னு அல‌ற‌ தான் முடியுது... பேச‌ விட்டாதானே???
அத‌ற்குள் தாத்தாவின் கைபிடித்து சிரித்து பேசிய‌படி ரொம்ப‌ பாச‌மாக‌ ம‌ஞ்சு வ‌ந்து பார்த்து, அதிர்கிறார்க‌ள் இருவ‌ரும்...
" அய்யோ பாட்டி என்ன‌ இது இங்க‌யுமா?" மெல்ல‌ கைபிடித்து தூக்கி ம‌ன்னிப்பு கேட்கிறாள்..
"அவனை ஏன் அடிக்கீங்க?.."கூலிங் கிளாஸை கூலா கழற்றிக்கொண்டே..சின்னா.
" ம். என் பேத்திகிட்ட சாட்டிங் பண்றான், திருமணம் பண்ணிப்பானாம்... சே சே.. "
" அய்யோ பாஸ்க‌ருக்கு எதுவும் தெரியாதுங்க‌.. நான்தான் அவ‌ன் பேரில் சேட் ப‌ண்ணிய‌து..அவ‌ன் திரும‌ண‌மே வேண்டாமென்றும் ப‌த்தாம்ப‌ச‌லித்த‌ன‌மாய் இருப்ப‌தாலும்...நான்தான் ல‌ண்ட‌ன் பெண் பார்த்தேன்..." கொஞ்சம் தள்ளியே நின்றுகொண்டார்.கவனமாய்.
" ஆமா.. இத‌ப்ப‌ற்றி ம‌ஞ்சு கூட‌ ஒண்ணும் சொல்ல‌லையே...?அவதான் என்கூட இஷ்டமா பேசினா??" சின்னா
" ஆமா .. அவ‌ளுக்கும் ஒண்ணும் தெரியாது .. அவ‌ள்பேரில் சேட் ப‌ண்ணிய‌து நான்தான்... அவ‌ளும் த‌மிழ்நாடு , கலாச்சாரம் , இந்தியா ,சுதந்திர தினம் னு திரியுர‌வ‌...க‌ல்யாண‌ம் வேண்டாம்னு.."
" அட‌.." என்று பாஸ்க‌ரும், ம‌ஞ்சுவும் ஒருவ‌ரை ஒருவ‌ர் பார்த்துக்கொள்ள‌, பார்வையை மீட்டெடுக்க முடியாமல்.
மாட்டிக்கொண்ட‌ பாட்டிக்கும் தாத்தாவுக்கும் வெட்க‌ம் க‌ல‌ந்த‌ சிரிப்பு...

" ச‌ரி இனியாவ‌து நீங்க‌ இர‌ண்டு பேரும் உங்க‌ ஒரிஜின‌ல் பேரில் சேட் ப‌ண்ணுங்க‌" ம‌ஞ்சு.
" அய்யோ அப்ப‌ நீங்க‌?.. " கோர‌ஸாக‌ வ‌ருத்த‌த்துட‌ன் பேபியும், சின்னாவும்...
" ம். இனி சேட்டிங் தேவையில்லைனு நினைக்கிறேன்...( மஞ்சுவை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே) தேங்ஸ்டா தாத்தா , சாரி சின்னா..." பாஸ்கி.




**********************************************************************************************************************************************