
இந்த புதிய பக்கம் மூலம் உலகில்
நடக்கும் சின்ன சின்ன செய்திகள் பதிவாக தொடரும்..
ஜகார்தா - இந்தோனேஷியா :
இந்தோனேஷிய
காவல்துறையினர் அக்மாமூல் முக்மினின் என்ற 24 வயது இளைஞரை விலங்குகள் சரணாலய புலியை கொன்றமைக்காக கைது செய்தனர்..
மிக பாதுகாக்கப்படவேண்டிய விலங்கினமான புலியை கொன்று அதன் தோலை எடுத்தமைக்காக குறைந்த பட்சம் 5 வருடம் சிறைத்தண்டனையும் 4 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவார்..
சரணாலயம் மூடியபின்பு புலி உணவில் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது..
கோலாலம்பூர் - மலேஷியா :
நூறாண்டுகளுக்கும் மேல் பழமையான சிறைச்சாலை ஒன்று நாட்டின்
அபிவிருத்திக்காக இடம் தேவைப்படுவதால் இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது..
இதனை வரலாற்றாய்வாளர்கள் எதிர்க்கின்றனர்..
கோலாலம்பூரின் முக்கிய பகுதியில் அமைந்திருக்கும் " புடு" எனும் சிறைச்சாலை 115 வருடம் பழமை வாய்ந்தது..சுற்றுலா தளமாகவும் ,வரலாற்று சிறப்புமிக்க இடமாகவும் விளங்கி வந்தது..
இதன் 394 நீள சுவர் நேற்று இடிக்கப்பட்டு மிகப்பெரிய உணவு விடுதிகளும்,
அடுக்ககங்களும் கட்ட அரசு சார்ந்த கட்டட துறையினர் திட்டமிட்டுள்ளனர்..
சிறை ஒருபோதும் வரலாற்று தலமாகாது என்பதும் , பெருமைப்படக்கூடிய இடமுமல்ல என்பதும் அரசின் முடிவு..
கொசுறு..:
வெலிங்டன் - நியூஸிலாந்து :
மிக அழகான யுவதி ஒருத்தி நேரே அருகில் திறந்திருந்த
வீட்டுக்குள் சென்று வீட்டிலுள்ள நன்றாக மது அருந்திவிட்டு , உணவும் உண்டு விட்டு , உடைகளையும் போட்டுக்கொண்டு , படுக்கையில் படுத்து உறங்கிவிட்டார்..
வீட்டு ஓனர் , காவல்துறைக்கு அறிவிக்க , காவலர் கையும் களவுமாய் பிடித்தனர்..
விசாரித்ததில் , அன்று என்ன நடந்ததென்றே தெரியவில்லையாம்...!!!!!
நஷ்ட ஈடாக 50,000 ரூபாய் பணமும், நன்னடத்தைக்காக வீட்டு காவலில்
வைக்கும்படியும் தண்டனை பெற்றுள்ளார்..
தொடரும்....