Monday, September 20, 2010

தெய்வக்குழந்தைகள்..












தெய்வக்குழந்தைகள்
..

வாரம்தோறும் எங்கு போகிறோமோ இல்லையோ பூங்காவுக்கு அழைத்து சென்று சருக்கு , ஊஞ்சல் , பந்து , சைக்கிள் என ஆடி ஓடி

ஓய்ந்து போய் வரணும்..

பெரியவர் முதலிலேயே சென்றிடுவார் சைக்கிளில்...கூடை பந்து விளையாட...

நாங்க பின்னாலே சென்று விளையாடிவிட்டு வரும்போது சைக்கிளை ஓரிடத்தில் நிப்பாட்டி விட்டு எம்கூட வருவார்..

நம் ஊரில் இப்படி சைக்கிளை பூட்டி வைத்தாலும் மீண்டும் இருக்குமா என்பது சந்தேகம்.

இங்கு எத்தனை நாளானாலும் அப்படியே இருக்கும்..



சரி இப்ப என்ன விஷயம்னா , பூங்காவுக்கு அழைத்து செல்வதென்பது நம் குழந்தைகளை விளையாட வைக்க மட்டுமல்ல. தாய் மக்கள் குடும்பத்தோடு வந்து குழந்தைகலோடு விளையாடி மகிழ்வதை காணவும்தான்.


குழந்தையோடு
குழந்தையாக , பெற்றோர் இருவரும் , பந்து , இறகுப்பந்து , சைக்கிள் என சிரித்துக்கொண்டே விளையாடுவதை பார்க்கும்போது ஒரு மகிழ்ச்சி
நம்மையும் தொற்றிக்கொள்ளும் இலவசமாக...

சின்னவர்
பூங்கா செல்லும்போது எல்லாவற்றையும் அள்ளி போடுவார்..
கிரிக்கெட் மட்டை , ஹாக்கி மட்டை , பந்துகள் 4 , ரிங், பூமராங் , ரோலர் ஸ்கேட்டிங் சைக்கிள்.. சப்பு சவருன்னு எல்லாம் ..

என்னமோ
அத்தனையையும் விளையாடிவிடுவது போல..


முதலில்
கிரிக்கெட் விளையாட ஆரம்பிப்பார்.. அவர் எப்பவும் பேட்ஸ்மேன்.. நாந்தான் பவுலிங்..
பந்தை சரியா அடிச்சுட்டா ஒரு பெருமிதமா சிரிப்பு சிரிப்பார்.. அப்பா கை தட்டணும்.. ஆனா பந்தை அடிக்க முடியலையோ , அம்மாவுக்கு பந்தை சரியா போட முடியலைன்னு பிராது வந்திடும்...

கிரிக்கெட்
விளையாடுவதை அதிசயமாக சுற்றி உட்கார்ந்து தாய் மக்கள் ( முக்கியமா பசங்க ) பார்ப்பாங்க..
தாய் மக்களுக்கு பிடிச்சது கால்பந்து தான்..

எங்கே
பார்த்தாலும் அதுதான் இங்கே பிரபலம்..


இவன்
அடிக்க அடிக்க அந்த பசங்க ஹோ னு சத்தம் போட்டு ஊக்குவிப்பார்கள் கை தட்டி.. கேட்கணுமா பெருமை முகத்தில் வழியும்..:)


அடுத்து
கால்பாந்து .. நான் கொஞ்சம் வேகமா அடிச்சாலோ , இல்லை வேறு பக்கம் அடித்தாலோ கோபம் வந்திடும்..
முகத்தை தூக்கி வைத்துக்கொள்வார், கை இரண்டையும் கட்டிக்கொண்டு.. இதை பார்த்து அந்த தாய் பசங்க விழுந்து விழுந்து சிரிப்பார்கள்..

ஏனெனில்
தாய் மக்களுக்கு கோபம் னா என்னன்னே தெரியாது அது நம்ம இந்திய சொத்தல்லவா?..


அவன்
கோபமும் அவன் முக கோணலும் அவர்களுக்கு பயங்கர சிரிப்பை வரவழைக்கும்..


அதே
போல ஊசி போடும்போதும் இங்குள்ள குழந்தைகள் அப்படி ஒண்ணும் பெரிதாக அழுவதில்லை..
வலியில் கண்ணீர் வந்தாலும் கத்துவதெல்லாமில்லை.. ஆனா இவன் ஊசி போடுமுன்னே ஊரை கூட்டுவான்...

என்னை
வெளியே போக சொல்லி 10 பேர் சேர்ந்து கட்டிபிடித்து அமுக்கி ஊசி போடணும்..
அப்பவும் விழுந்து விழுந்து சிரிப்பாங்க... அடக்க மாட்டாமல்.. ஏதோ ஏலியனை பார்த்ததுபோல்...:)

கீழே
வழுக்கி விழுந்தாலும் முதலில் சிரிப்புத்தான்.. விழுந்தவனும் சிரிச்சுக்குவான்..
வந்த புதிதில் என்னடா இது சரியான லூஸுப்பசங்களா இருப்பாய்ங்களோன்னு நினைத்ததுண்டு.. இப்ப அதிலும் நாங்களும் ...

முக்கியமா சொல்ல வந்த விஷயத்தை விட்டு வண்டி எங்கோ போய்விட்டது..

அருமையான விஷயம் என்னவென்றால் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை அழைத்து வருவார்கள்.. அக்குழந்தையை அவர்கள் குடும்பத்தினர் மட்டுமல்ல எல்லோருமே சேர்ந்து கொஞ்சி மகிழ்ந்து விளையாடுவார்கள்..

ஆக
ஒரு மனவளர்ச்சி குழந்தை இருந்தால் இங்கே தெய்வமாக கொண்டாடப்படுகிறது ..

அக்குழந்தையை எல்லா குழந்தையும் போல சாதாரணமாக விளையாட விடுவார்கள்.. இப்படி செய்வதால் சில நாளில் அக்குழந்தைகள் சாதாரண நிலைமைக்கு வருவதுமுண்டாம்..

எங்க
ஆலயத்தில் இப்படி ஒரு பெண் உண்டு..
அவருக்கு பிரசங்கம் நடக்கும்போது ம் நன்மை( நற்கருணை ) எடுக்கும் போதும் வரிசை ஒழுங்கு படுத்தும் வேலை கொடுத்துள்ளார்கள். அவர் மிக அழகாக புன்னகையோடு அதை செய்வார்..

ஆலய
வேலைகள் செய்வது எல்லோருமே வாலண்டியர்ஸ் தான்..


இப்படியான பொறுப்புகள் கொடுக்கும்போது அவர்கள் பெரும் முக்கியத்துவமே அவர்களை முன்னேறவைக்கும்... தாமும் மற்றவர்போல் சாதாரணம் என்ற எண்ணம் வரும்.. சங்கோஜமில்லாமல் பழக முடியும்.. ஒரு போட்டி வரும்..

எளிதில் கற்றும்கொள்வார்கள்..

சின்னவர் விளையாடும்போது அவனிடம் வந்து அக்குழந்தை பந்து கேட்டது.. இவர் கொஞ்சம் வெட்கப்பட்டுக்கொண்டே கொடுக்க , அதை வாங்கி திரும்ப இவனிடமே எறிய , இவனை விளையாட அழைத்தது..

நாங்கள்
ஊக்குவிக்கவும் இவரும் அக்குழந்தைக்கேற்றார்போல சிறிது நேரம் விளையாடினார்..


அப்பதான்
நாம் எத்தனை பாக்கியம் செய்திருக்கோம்னு புரியுது..இதை கூட இப்படி சொல்லிக்கொள்ளலாமான்னு தெரியலை..


அதே
போலொரு குழந்தை கிடைத்திருந்தாலும் நான் மனமுவந்து ஏற்றிருப்பேன் .. அதுவேறு விஷயம்..

( என் பிரசவத்தின்போது இதுபோல ஒரு குழந்தை பிறக்க வாய்ப்பிருக்கிறதென்றும் ( Down syndrome ) என்னிடம் மருத்துவர் சொன்னதும் அதற்கான பரிசோதனை செய்யவே மாட்டேன் என பிடிவாதம் பண்ணியதுமுண்டு. அப்பரிசோதனை கருவில் இருக்கும் குழந்தையை சேதப்படுத்தும் வாய்ப்பு அதிகமாம்.... )


இருப்பினும் அக்குழந்தைகளை கவனிப்பதென்பது நிச்சயமாக சவாலான விஷயம்.. தனி அர்ப்பணிப்பு தேவை..அதிக பொறுமையும்..

அது
நிச்சயமா என்னிடம் இருக்குமான்னு சந்தேகம்தான்..


கிளம்பும்போது
அக்குழந்தையிடம் பந்தை கொடுத்துவிட்டு வணக்கம் சொல்ல சொல்கின்றனர்..
அப்போதும் அவர்கள் முகத்தில் சந்தோஷமான புன்னகை.. நன்றியும்...

குழந்தையின் முகத்திலும் ஒரு உறவினை கண்ட மகிழ்ச்சி.. அக்குழந்தையும் இருகரம் கூப்பி மிக அழகான " ஸ்வாதிகாப் " ( வணக்கம் ) என சிரம் தாழ்த்தி சொன்னது..

மகன்
வரும்போது கேட்கின்றார் " அம்மா என்னாச்சு அந்த குழந்தைக்கு ?."


" அவர்கள் கடவுளின் மிக விசேஷமான செல்லக்குழந்தைகள்.. " என விளக்க ஆரம்பித்தேன்..

ஆக
பூங்கா செல்வதென்பது விளையாட்டு மட்டுமல்ல படிப்பினையும் ஆகிறது குழந்தைகளுக்கு...


இது
போன்ற சம்பவங்கள் நாம் பெற்ற ஆசீர்வாதங்களை எண்ண வைப்பதோடு நாம் இன்னும் செய்யவேண்டிய நல்ல விஷயங்களை
குறித்து நியாபகப்படுத்தி ஒரு குற்ற உணர்ச்சியை தந்திடுகிறதுதான்...



படம் : நன்றி கூகுள்.