Tuesday, September 28, 2010

நுணலும் தன் வாயால் கெடும்.. - எத்தனை நிஜம்.?

































புனைவு, புரளி என பலியாக்குதல் தொடர்ச்சியாக

Rumor travels faster, but it don't stay put as long as truth Will ரோகேர்ஸ்


//தம்பி உனக்கு வேணுமா ? பணம் எல்லாம் தர வேணாம் சும்மாவே தரேன் . நீ பார்த்திருக்கியா அவள் போட்டோ . நீ பார்க்கணுமா ? இரு இப்பவே அனுப்பி வைக்கிறேன் .எப்படி ...............இருக்கா பார்த்தியா ? இவளுக்கு போய் யாராவது சப்போர்ட் பண்ணி பேசுவாங்களா ?//


மேலே சொல்லியிருப்பற்கே ஆதாரம் கேட்டு தில் இல்லை. பாவம் இருந்தால் தானே அவரும் கொடுப்பார். ஆனால் என்னைப் பற்றி வக்கிரத்தோடு பொய்களை அள்ளி வீசுவதில்தான் எவ்வளவு ஆனந்தம்!

//இப்படிப் பேசியிருக்கிறார். என்ன வன்மம் & வக்கிரம் என்று பாருங்கள். ஒருவரின் புறத்தோற்றத்தைப் பார்த்துத்தான் அவருக்கு ஆதரவாக மற்றவர்கள் வருவார்கள் என்றால் உலகத்தில் யாருக்குமே ஆதரவாளர்கள் கிடைத்திருக்க மாட்டார்கள். பதிவர் சாந்தியின் புகைப்படத்தை பார்த்துவிட்டா வினவும் மாதவராஜும் அவருக்கு ஆதரவு தெரிவித்தார்கள்? இல்லை மதாரின் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு அவருக்கு யாரும் ஆதரவு தெரிவிக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் தான் இவர் மதாரின் புகைப்படத்தை அனைவருக்கும் அனுப்பி வைத்தாரா?//

http://pithatralkal.blogspot.com/2010/09/blog-post_26.html#links


"அரவிந்த் அவ போட்டோ பார்த்து இருப்பானா "


http://mathar-itsallaboutmine.blogspot.com/2010/09/blog-post_24.html




இது எவ்வ‌ள‌வு கேவ‌ல‌மான‌ வார்த்தைக‌ள். நான் புனைவில் அடைந்த ம‌ன‌ க‌ஷ்ட‌த்தை விட‌ இதில் தான் அதிக‌மாக‌ உண‌ர்ந்தேன். எவ்வ‌ள‌வு கீழ்த்த‌ர‌மான‌ வார்த்தைக‌ள். பெண்தானே என்ன‌ வேண்டுமானாலும் எழுத‌லாம் என்ற‌ ம‌னோபாவ‌ம்.




ஒரு கொலையை விட ஒரு கற்பழிப்பைவிட ஒரு குடும்பத்தையே , இனத்தையே, ஏன் சமூகத்தையே அழிக்க வல்லது இந்த ஆதாரமற்ற புரளிகள்.


ஈரம் படத்தில் புரளியால் ஒரு பெண் கொலைசெய்யப்படுவதையும் பின்னர் அப்பெண் பழிவாங்குவதையும் பார்க்கலாம்.


பொதுவெளியில் மிக துணிவாக ஆதாரமற்ற தகவலை போட்டு என்னை அசிங்கப்படுத்தியிருக்கும் இது ஒன்றே போதும் இவர்கள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க...இதை சட்டத்துறை வல்லுனர்களும் கவனித்துக்கொண்டுதான் இருக்கின்றனர்..


இது ஒன்றே சொல்லும் முகிலன் எத்தனை பெரிய பொய்யன் என்று..முதலில் புனைவே எழுதவில்லை என பொய் சொன்னவர் , இப்ப இதை..

ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் பல இடங்களில் சொல்லி அதை உண்மையாக்கிடுவது..



ஒரு பொய்யை மறைக்க மீண்டும் மீண்டும் பொய்கள்..



அதை நம்பி பல பின்னூட்டங்களும்...

வதந்திகள் எங்கே கொண்டு சேர்க்கும் ..

அதனால் விளையும் கெடுதல்கள் என்னென்ன?..

இவர்கள் தன் சொந்த லாபத்துக்காக யாரையும் எப்பொழுதும் காயப்படுத்தி அதில் மகிழ்ந்து வாழ்க்கையை ஓட்டக்கூடியவர்கள்.

பொய்யினால் வரப்போகும் பாதிப்புகள் பற்றி எவ்வித அக்கறையுமில்லை..

நான்கு பேர் சேர்ந்தார்போல் பின்னூட்டம் இட்டால் , ஆஹா நமக்கு ஆதரவு உள்ளது என நினைப்பது..

அந்த பின்னூட்டம் போட்டவர்களையும் ஏமாத்தி அவர்கள் அனைவரின் நேரத்தையும் செலவழித்து ஜோடனையான ஒரு புனைவையோ,புரளியோ செய்து

மகிழ்வதில் அப்படி என்ன லாபம்.?

தம்முடைய ஆளுமையை காண்பிக்க வேறு வழியே இல்லையா?..

இணையத்தில் எத்தனை எத்தனை கருத்துகள் குமிந்து கிடக்கின்றது நன்றாக வாசிக்கலாம் .. கருத்துகள் பகிரலாம்..

அதை விட்டு ஒருவரை கூட்டமாக சேர்ந்து தாக்குவதையே குறிக்கோளாக கொண்டு செயல்படுவது மிக கேவலமான கண்டிக்கத்தக்க செயலும்.

நாமும் முன்னேறி நம்மோடு கூட சேர்ந்தவர்களும் முன்னேறும்படி செய்யலாமே ஆக்கபூர்வமாக.?.


எத்தனை எத்தனை கருத்தாடல்கள் செய்துள்ளேன்..எத்தனை எத்தனை விரைவான வாசிப்புகள்..

எத்தனை மாற்றுப்பார்வைகளை உள்வாங்கிக்கொண்டேன்...

எத்தனை பேருக்கு ஊக்கம் அளித்துள்ளேன் ..?


எனக்கென நான் பிளாகில் நேரம் ஒதுக்கி ஓட்டோ , பின்னூட்டமோ வாங்க எண்ணாமல் , ஒரு கூட்டு முயற்சியாக செய்திருக்கிறேன்..

பொது நல எண்ணம் வந்தால் இதுபோன்ற ஆதாரமற்ற புரளி பேசுவதும் , வக்கிர புனைவெழுதுவதும் ஒருபோதும் நடக்காது..

போட்டி இருக்கலாம்.. ஆனால் பொறாமை இருக்கக்கூடாது..


அறிவை தேடுபவர் தனியே நிற்பார்.. கூட்டம் கூட்டிக்கொண்டு அடிதடி நடத்த மாட்டார்..

இந்த பிரச்னையில் எனக்கு முன்பின் அறிமுகமில்லாத பலர் உதவினார்கள் என்றால் , நியாயத்தை மட்டுமே பார்க்க முடிந்தது அவர்களால்.


எல்லோரும் எல்லோரின் எழுத்தையும் பின்னூட்டத்தையும், டிவீட்டர், பஸ் , என எல்லா இடங்களிலும் கவனித்துக்கொண்டும் உள்வாங்கிக்கொண்டும்தான் இருக்கிறார்கள்..


ஆக நாடகத்தனமான போலிகள் இங்கே எடுபடுவதில்லை...

பொய் விரைவாக உலகம் சுற்றி வந்தாலும் உண்மை அடிவாங்கிக்கொண்டாவது மெல்ல தன்னை நிலைநிறுத்தும்...


புரளி பேசுபவரை மிக எளிதாக கண்டுகொள்ளலாம்.. இதில் முக்கியமா அவர்களை அப்படி பேச சொல்லி தூண்டுபவர் முக்கிய பங்கு வகிக்கிறார்.

தன்னால் செய்ய முடியாத அழிவு செயல்களை இவர்களை செய்ய வைத்து சாதித்து இன்பம் காண்பவர்.



இங்கே யாரவர்கள் என தனியாக சொல்லவேண்டியதில்லை.. அனைவருக்குமே புரியும்..

ஒரு பெண்ணாக தன்னை முன்னுறுத்திக்கொண்டு அலங்கோலத்துடன் அழுதால் எல்லாரும் ஓடி வந்து துக்கம் விசாரிப்பார்கள்தான்..

ஆனால் அதில் கொஞ்சமாவது உண்மை இருக்கணுமே...
மதாரை முன்வைத்து என்மீது ஏராளமான பொய்களை புனைவை விட கேவலமாக அள்ளி வீசினார்கள். நான் ஒரு பெண் என்பதால் இன்னொரு பெண்ணை வைத்து என்னை கீழ்த்தரமாக சித்தரிக்க முயன்றார்கள். நான் சொன்னதாக பல விசயங்களை கற்பனை செய்து பரப்புகிறார்கள்.

சரி, உங்களால் முடிந்தது இதுதானே, தாராளமாக செய்யுங்கள், என்னை கேவலப்படுத்தித்தான் மகிழ்ச்சி அடைய முடியுமென்றால் மதார் தாராளமாக செய்யட்டும். ஆனால் அவரும் ஒரு பெண் என்ற முறையில் இந்த கூட்டத்தின் சதிகளை என்றாவது உணர்வார் என்று நம்புகிறேன்.


இப்படி இவர்கள் தொடர்ந்து எய்த அம்புகள் அனைத்தும் அவர்களுக்கே திரும்பிவிட்டது..


இனியாவது திருந்துவார்கள் என நம்புகிறேன்..

ஆகையால் முழுமனதோடு மன்னிப்பும் வழங்குகின்றேன்...

இந்த மன்னிப்புதான் மிக சிறந்த தண்டனை...

இந்த மன்னிப்பும் இனியும் காரணம் தேடி தம் நேரத்தை வீணாக்குவதோடு பதிவுலக்கினர் அனைவரின் நேரத்தையும் வீணாக்குவதால்...


ஆனால் இந்த பொய்யை நம்பி இவர்களுக்கு பின்னூட்டம் போட்டவர்களுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள் இவர்கள்.?

அவர்களின் நேரத்தை வீணடித்து அவர்களை வருத்தப்பட செய்தமைக்கு.?


ஆக்கபூர்வமாக நாம் வாசிக்கவேண்டியது எழுதவேண்டியது , கருத்துகள் பகிர எவ்வளவோ உள்ளன...

ஆரோக்கியமான போட்டிகள் உருவாகட்டும்.. இப்படி பொறாமையால் தம்மையும் அசிங்கப்படுத்தி மற்றவரையும் அசிங்கப்படுத்தி நிற்க வேண்டாம்...

வினவிடம் ஒரு பிரச்னை என சென்றால் எடுத்தோம் கவிழ்த்தொம் என அவர்கள் ஏதும் விசாரிக்காமல் போட்டுவிடுவதில்லை..

குழுமத்தில் நடந்தது என்ன என பலரிடம் விசரித்துள்ளார்கள்.. என்னைப்பற்றி என் எழுத்தை பற்றி அறிந்துள்ளார்கள்..

மிக நேரமையாக கொள்கைக்காக மட்டுமே செயல்படும் வினவு போன்றவரை விமர்சிப்பது மலையின் மீது சிறு கற்கள் எறிவதுதான்..

எறியப்பட்ட கற்கள்தான் சுக்கு நூறாக உடைந்து போகும்.. உடைந்து போனதையும் கண்டோம் இப்போது...

இப்பவும் சொல்கிறேன் எனக்கு எதிரிகள் யாருமல்ல...

ஆனால் என் எழுத்தை வைத்து என்னை எதிரியாக கருதுபவர்களை நான் ஒண்ணும் சொல்வதற்கில்லை..

எனக்கு இப்பிரச்னையில் ஆதரவளித்தவர்களை நான் முன்பே அறிந்ததில்லை..பழக்கமுமில்லை.. ஆனால் எதிராக கருத்தாடியதுண்டு..


ஆனால் அவர்களும் இப்பிரச்னையில் நியாயத்துக்காக என் பக்கம் நின்றது நியாயம் எப்போதும் வெல்லும் என்று நிரூபித்தது..

நாளையே எமக்குள் கருத்தாடலில் வித்யாசங்களும் வரலாம்..

இப்படி பலரும் எனக்காக தம் பொன்னான நேரத்தை வீணாக்கியமைக்கு மனதார வருந்துகிறேன்...

நல்ல கருத்துகள் எங்கிருந்தாலும் முகதாட்சண்யம் பாராது ஊக்கமளிக்கலாம்.

அதைவிடுத்து நட்புக்காக துணை போனால் இதுதான் நிகழும்...என்பது பலருக்கான படிப்பினை..

நட்பை தேடாமல் , நல்ல விஷயங்களை தேடினால் நல்ல நட்புகள் தாமாகவே அமையும்..இதுவே என் அனுபவம்..

இப்பிரச்னையின் மூலம் பல மன வருத்தங்கள் வந்தாலும் , பல நல்ல மனதுகளை கண்டுகொண்டேன்.. நல்ல விஷயம் பல கற்றேன்..

எந்த மிரட்டலுக்கும் வதந்திக்கும் பயப்படாமல் துணிந்து நில்லுங்கள்.. குனியகுனியதான் குட்ட முடியும்..

நமக்கான நல்லவர்கள் பலருண்டு இங்கே..

இப்பிரச்னை குறித்து இதுவே என் கடைசி மடலாக இருக்கணும்..

இனியும் கத்துபவர்கள் கத்தட்டும்.. நாம் நம் சமூக முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவோம்..

வினவுக்கும் அனைத்து நட்புகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..



----------------------

படம்: நன்றி கூகுள்.