Friday, September 21, 2007







எது அழகு.
=========

முற்றம் தொழிக்கும் முத்தம்மா
முகத்தின் வியற்வை அழகம்மா.!

செருப்பு தைக்கும் சின்னப்பா,
சிரிப்பே உனக்கும் அழகப்பா !.

கோவில் சுத்தம் செய்பவரும்,
நாவில் நல்லவை சொல்பவரும்,

செல்வம் செழிக்க இருந்தாலும்,
செழிப்பாய் பகிர்ந்து கொள்பவரும்,

இல்லை என சொல்லாத அன்னையரும்,
கல்வி கருமமாய் தந்த ஆசானும்,
பல்லை கடித்து பணம் சேர்த்து,
பாதுகாக்கும் தந்தையரும்,

விலை மாதுவை காப்பாற்ற,
விலை கொடுக்கும் உடன்பிறப்பும்,

எப்படி வியப்பேன் இந்த அழகை?.
செப்படி தோழி நீ புரிந்தால்.!

புர அழகை பார்ப்பவர் மட்டும்
மறந்தும் அழகாக முடியாது.

பார்ப்பவர் உள்ளத்தில் உள்ளதே,தவிர,
காண்பவர் கண்ணில் வெறும் மாயையடி.!

No comments: