Thursday, June 17, 2010

சிறை சந்திப்பு - தவறை உணர்தல்..-2










அந்த
பாகிஸ்தானிய இஸ்லாமியர் கூறியதை அப்படியே இங்கு பதிகிறேன்.

" நான் அடிக்கடி கார்மெண்ட் விஷயமாக பாங்காக் வழியாக ஹாங்-காங் செல்வதுண்டு. அப்படி ஒருமுறை செல்லும்போது என் விசா முடிவடைய நான் ஹாங்-காங் விமான நிலையத்திலிருந்து பாங்காக் டிடென்ஷன் செண்டருக்கு அனுப்பப்பட்டேன்..

அங்கு
ஒருநாள் இருந்துவிட்டு என்னை அதிகாரிகள் மீண்டும் விமான நிலையம் அனுப்பினர்..
நான் மீண்டும் பாகிஸ்தானுக்கு தான் அனுப்ப போகிறார்கள் போலும் என நிம்மதியாக இருந்தேன்..

திடீரெனெ
2 அதிகாரிகள் வந்து என் பேக்-பேக் பையை பரிசோதனையிட்டு
அதிலிருந்து சுமார் 200 கிராம் எடையுள்ள போதை மருந்தினை எடுத்தனர்..எனக்கு அதிர்ச்சியும் ஆச்சர்யமும்..

என்ன
நடக்கிறது என நான் புரிவதற்குள் , ஏதும் பேசாமல்
என்னை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.. நான் ஹாங்-காங்கிலிருந்து வந்ததையும் டிடென்ஷன் செண்டரில் வைக்கப்பட்டதையும் எடுத்து சொல்லியும் யாரும் செவி மடுப்பதாயில்லை..

பிடிக்கணும்
னா பல சோதனைகளை தாண்டி வந்த போதே என்னை
பிடித்திருக்கலாமே. அல்லது நான் அப்படி போதை பொருள் கடத்தணும்னா , அதை என் லக்கேஜில் வைத்திருப்பேனேயொழிய கேரி லக்கேஜிலா வைப்பேன்..எல்லாரும் பார்க்கும்படி?..

எனக்காக
ஆஜரான அரசாங்க வக்கிலோ ஆமா, சரி என்ற இரு வார்த்தையை தவிர ஏதும்
பேசவில்லை.. எனக்கு தண்டனை குறைந்த பட்சம் 15 வருடம் என தெரியும்..

ஆனால்
இவர்களோ , ஃப்ர்ஸ்ட் டிகிரி, செகண்ட் டிகிரி, தேர்ட் டிகிரி என என்னெல்லாம் போட முடியுமோ அத்தனையையும் போட்டு 100 வருடம் தண்டனை என சொல்லிவிட்டனர்..கேட்டதும் அப்படியே பிரமை பிடித்தவனானேன்.. உலகமே இருண்டது..

கொஞ்சம்
வசதியான சூழலில் வளர்ந்து பழக்கப்பட்ட நான்
கைதிக்கான உடையணிந்து கூட்டத்தோடு அடைக்கப்பட்டேன்.. சிறைக்குள் பல விதமான குற்றவாளிகள்.. முரடர்கள்.. என பல்வேறு நாட்டினர்...

சிலர்
வெறி வந்து சண்டையிடுவதுண்டு.. அலறுவதுண்டு..மனசிதைவில் கத்தி ஆர்ப்பாட்டம் செய்வதுண்டு.. இதெல்லாம் கண்டு ஆடிப்போனேன்..

நல்லவேளை
எனக்கு திருமணம் ஆகவில்லை.. ஆனாலும் என் சகோதர
சகோதிரிகளுடனும் அவர்கள் பிள்ளைகளுடனும் குடும்பமாக வாழ்ந்து வந்தேன்..குடும்பத்தின் மூத்த மகன் நான்..

இஸ்லாமிய
முறைப்படி வளர்க்கப்பட்டேன்..
என் பெற்றோர் , குடும்பத்தார் 5 முறை தொழுகை செய்பவர்கள்..நாங்கள் சொந்தமாக ஆடை தயாரிக்கும் நிறுவனம் வைத்திருந்தோம்..அடிக்கடி வெளிநாடு செல்வதால் என் பெற்றோரை அதிகமா நான் கவனிக்கவில்லையோ என்ற மனக்குறை எப்போதும் எனக்குண்டு.. ஆனால் என் தம்பியை பாராட்டணும்.

அமெரிக்காவில்
20 வருடம்
இருந்துவிட்டு பாகிஸ்தான் வந்து என் அன்னையை கவனித்துக்கொண்டார் அப்பாவின் மறைவுக்குப்பின்.. அந்த பாவம்தான் எனக்கு இத்தண்டனையை தந்திருக்கணும் என நானே என்னை சமாதானப்படுத்திக்கொண்டேன்.. எனக்கு தண்டனை வழங்கும் காலம் பாகிஸ்தானுக்கும் தாய்லாந்துக்கும் ஒப்பந்தம் ஏதும் இல்லை..

ஆனால்
2 வருடம் கழித்து அந்த நல்ல விஷயமும் நடந்தது.. ட்ரீட்டி
மூலம் என் தண்டனை காலம் 30 வருடமாக குறைக்கப்பட்டது.. அதன்பின் ஒவ்வொரு வருடமும் தாய்லாந்து அரசரின் பிறந்த நாள் மன்னிப்பு என சொல்லி 15 வருடத்துக்கு தண்டனையை குறைத்தார்கள்..

இப்பதான்
கொஞ்சம்
வாழ்க்கையில், பிடிமானமும் நம்பிக்கையும் வந்தது.. பின்பு நன்னடத்தை காரணமாக என்னை இந்த வருடம் ( 11 ஆண்டுக்கு பின் ) விடுவிப்பதாக சொல்லியுள்ளனர்...காகித வேலைகள் முடிவடைந்ததும் என்னை பாகிஸ்தான் அனுப்பிடுவார்கள்..

முதலில்
என் குடும்பத்தாருக்கு கடிதம் போட்டேன்.. பதிலில்லை.. ஒருவேளை காவலர்கள்
முறையாக கடிதத்தை தரவில்லையோ என்ற எண்ணமுமுண்டு...

நல்லவேளை
எனக்கு சர்ச் மூலம் அறிமுகமானார் பிரிட்டனிலுள்ள தோழி ஒருத்தி..
அவர் திருமணமானவர்.. குழந்தைகள் இரண்டு..அற்புதமான பெண்மணி..

எனக்கு
வருடந்தோறும் 100 டாலர் அனுப்புவார்.. என்னைப்போல பலருக்கும்
அனுப்புவாராம்.. அவர் மூலம் என் குடும்பத்தாரை தொடர்பு கொண்டேன் பின்பு.. அதன்பின் யாரையும் தொந்தரவு படுத்த விரும்பவில்லை.. என்னால் அவர்களுக்கேதும் பிரச்னையும் வந்திடக்கூடாது..

சிறைக்குள்ளே அவர்கள் கொடுக்கும் உணவைதான் உண்ணணும்.. ஒரு கடை உண்டு.. அதில் கோக் , பெப்ஸி போன்ற பானங்கள் , பண்டங்கள் இருக்கும்.. ஆனால் விலை அதிகம்..

ஒரு கோக் வாங்க நான் ரொட்டி போட்டு விற்று தான் வாங்க முடியும்.. ஆக, கோக் குடிப்பது என்பது எமக்கு அதிகமான ஆடம்பரம்..மேற்படி தனிப்பட்ட செலவுகளை நம் காசில்தான் பார்த்துக்கொள்ளணும்..

என்னைப்போல் சொந்தம் ஏதும் இல்லாதவர்களை இப்படி உங்களைப்போல சர்ச் மூலமா வந்து பார்ப்பார்கள்.. அது எங்களுக்கு மிகுந்த உற்சாகமும் , ஆறுதலும்..

என்
தந்தையின் நிலமொன்று அரசு எடுத்தது.. ஏக்கர் கணக்கில்.. அது குறித்து கோர்ட்டில்
கேஸ் நடந்தது.. என்னாயிற்று என தெரியவில்லை.. என்னிடம்தான் பவர் ஆஃப் அட்டார்னி இருக்கிறது.. நான் சென்றுதான் குடும்பத்தார்க்கு சில விஷயங்களை செய்யணும்..

ஒருவேளை
அவர்கள் என்னை ஏற்காவிட்டால் என்ன செய்வது என நான் என் மனதை
திடப்படுத்திக்கொண்டிருக்கிறேன்..

சிறையில்
நாங்கள் 6.30 திறந்து விடப்படுவோம் ..பின்பு மதியம் 3 மணிக்கு
அடைக்கப்படுவோம்.. காலை 6.30 மணிக்கு சமையலறை சென்று நானும் சிலரும் பரோட்டா போடுவோம்.. நான் கறி பரோட்டா போடுவதில் வல்லுனர் .. இதை கவனித்த பிரிட்டன் கைதி ஒருவர், நான் விடுதலையானதும் கேமரூன் எனும் தீவில் எனக்கு ஒரு சின்ன உணவகம் அமைத்து தருவதாக சொல்லியுள்ளார்..

என்
குடும்பத்தார் என்னை நிராகரிக்கும்பட்சத்தில் அங்கு சென்று ஒரு புது வாழ்க்கையை
தொடங்கலாம் என்றுள்ளேன்..

உங்க
கூட வந்திருக்காங்களே அந்த சிங்கம் போன்ற சிங்களப்பெண்மணி, அவர்தான்
எனக்கு கேமரூன் தீவு பற்றி இணையத்தில் தகவல் எடுத்து அனுப்புவார் புத்தகம் போல.. நான் படித்துக்கொண்டிருக்கிறேன்..

சிறைக்குள் நூலகம் இருக்கிறது.. பல விதமான புத்தகங்கள்.. வாசிக்கவோ எழுதவோ நேரமின்று சுற்றிக்கொண்டிருந்த எனக்கு இங்கு அதுதான் முழுநேர வேலை.. அறையில் தொலைக்காட்சி உள்ளது உலக செய்திகள் அறிவேன்.. பகலில் டேபிள் டென்னிஸ் விளையாடுவேன்..

நான்
பாகிஸ்தானில் டென்னிஸ்
விளையாடியுள்ளேன்..மற்றவர்கள் , முக்கியமா தாய் காரர்கள் கால்பந்து ஆர்வமாய் விளையாடுவார்கள்..

தாய்லாந்து கைதிகளுக்கு மட்டுமே தையல் தொழில் கற்றுத்தந்து சம்பாதிக்கவும் வழி செய்கிறார்கள்.. வெளிநாட்டு கைதிகளுக்கு வேலை ஏதும் இல்லை.. எங்கள் குடும்பம் தையைல் தொழிலில் இருந்ததால் எனக்கு மிக ஆர்வமாய் இருக்கும் அதை காண..

இரவு எழுந்து எழுத தோணும் எழுதுவேன்..
ஒருமுறை நான் தூங்கிக்கொண்டிருந்த போது திடீரென சில வார்த்தைகள் எழுத்து வடிவில் வந்து போனது..

எனக்கு அது புரியவில்லை.. ஆனால் உடனே காகிதம் எடுத்து எழுத தூண்டியது.. எழுதும்போது " நான் உன்னை மன்னித்தேன் .. எப்பவும் நேசிக்கிறேன்... " என்று என் அன்னை சொல்வது போல இருந்தது.. அதுவே எனக்கு மிகப்பெரிய விடுதலையாக இருந்தது...

இத்தனை
நடந்தும் நான் மனதளவில் துணிவா இருப்பதற்கு இறை பற்றே காரணம்.."


இவர்
பேசிக்கொண்டிருக்கும்போதெ பல கைதிகள் இவரிடம் வந்து கட்டியணைத்து
அன்பை தெரிவித்துக்கொள்கின்றனர்... விடுதலை ஆகப்போவது குறித்து ஒருபக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் குடும்பத்தார் வரவேற்பை குறித்து கலக்கத்தோடு காத்திருக்கிறார்...

நான்
எடுத்து வளர்த்த குழந்தைகள்
எல்லாம் இப்ப திருமணமாகி பிள்ளைகள் இருக்கிறதாம்... என் சகோதர சகோதிரிகள் தாத்தா , பாட்டி ஆகிவிட்டனர் என சிரிக்கிறார்..

எல்லாம்
நன்றாகவே நடக்கும் என வாழ்த்தி விடைபெற்றோம்..
அவர் குற்றம் செய்தாரா, இல்லையா என்பது கடவுளுக்கே வெளிச்சம்.. அதை சட்டமும் பார்த்துக்கொள்ளட்டும்.. எமது வேலை குற்றத்தை மனதார உணர்ந்த/உணர வைக்க ஒரு மனித மனத்துக்கு மனிதாபிமானத்தோடு ஆறுதலளிப்பது மட்டுமே...

எல்லாம் நன்றாகவே நடக்கும் என வாழ்த்தி விடைபெற்றோம்..

அடுத்து டிடென்ஷன் செண்டரிலுள்ள கைதிகள் ( குற்றமிழைத்தவர்கள் அல்ல , விசா , பாஸ்போர்ட் இல்லாதவர்கள் ) முக்கியமா இலான்கை
அகதிகள் பற்றி பார்க்கலாம்...

(பொன்னான நேரத்தை அவசியம் இருந்தாலொழிய பின்னூட்டத்தில் செலவழிக்க வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.. எழுதுவது என் திருப்திக்கும் , சில செய்திகளை தர மட்டுமே... )