Friday, February 29, 2008

முடிவு - 2 . பாகம் - 17- கல்யாணத் தேன் நிலா. =============================================
மதுவுக்கு அலுவலகத்துக்கு செல்வதே மிகவும் சோதனையாக உள்ளது .. வீட்டுக்கு வந்தால் ரகு.. அனேகமாக இந்த வாரத்துக்குள் பிரிவு உறுதி....

எந்த வித முன்னேற்றமுமில்லை ... நிம்மதியில்லாமல் ஆனால் வெளியில் சிரித்த முகத்துடனே...அதிக மனச்சுமை ஆளை வாட்டுது...
உடம்புக்கு முடியாமல் விடுப்பு எடுக்கிறாள்.., சரியாகிற மாதிரி தெரியவில்லை ஒரு வாரம்... ஆனால் வேந்தன் நம்பவில்லை.

அவள் வேண்டுமென்றேதான் வரவில்லை என்றே நினைக்கிறார்...
அவன் போன் நம்பர் வந்தாலே இவள் பதிலுரைக்காமல் யாரிடமாவது கொடுத்து பதில் சொல்கிறாள்...

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வேந்தனுக்கு மிகவும் வேதனையளிக்கிறது.. நம்மால் தான் மதுவுக்கு இந்த நிலைமை..வருத்ததுடன் நேராக ரகுவிடம் செல்கிறான்..ரகுவுக்கு அதிர்ச்சி..

" ரகு, என்னால மதுவோட நிலைமையை பார்க்க சகிக்க முடியலை...யார் சரி , யார் தவறுன்னு நான் பேச வரல....என்ன செய்தால் உங்களுக்கு விருப்பமோ அதை நான் செய்கிறேன்.. அவர்கள் 5 மனிக்குமேல் உங்கள் மனைவியாக உங்களுடன் இருப்பார்கள்... வீட்டிலேயே அலுவலகத்தை நான் அமைக்கிறேன்.. வெளிநாடு செல்லும் பொறுப்புகளை, மற்றும் அனைத்து அலைச்சல்களும் இனி நான் பார்த்துக்கொள்வேன்... கிட்டத்தட்ட வேலையை விட்டது போலவே... மதுவின், அறிவும், அன்பும் தான் எங்கள் தொழிலின் மிகப்பெரிய சொத்து... அதற்கு முதலில் மது சந்தோஷமாக இருக்கணும்.. அதுக்கு என்ன வேண்டுமோ அதை செய்ய நான் தயார்..."

ரகுவின் கைகளை பிடித்துக்கொண்டு..

" அய்யோ என்ன இது வேந்தன்.. இப்படியெல்லாம் ..." ரகு..

" நீங்கள் விருப்பப்பட்டால் மதுவுடன் கூட எங்கள் அலுவலகத்திலேயே வேலை செய்யலாம்..வெளிநாட்டு பயணம் இருவருமே செல்லலாம்... வழி இல்லாமலில்லை.. ரகு.. இதையெல்லாம் நான் ஏன் செய்ரேன்னா, நான் மதுவை விரும்பினேன், ரகு, ஆனால் அவள் மனது பூரா நீங்கதான் நீக்கமற நிறைந்துருக்கீங்க. அந்த அன்பு எனக்கு ஒருபோதும் கிடைக்காது கோடி கொடுத்தாலும்..என் ஆயுசுக்கும்.... ஆனா உங்ககூட சேர்த்துவைக்க என்னால் முடிந்ததை நான் பண்ணுவேன்..அதுவே என் சந்தோஷம்.."

ரகு யோசிக்கிறான்..

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

விவாகரத்து ஆக ஒரு வாரமுள்ளது.... ரகுவோ அன்னையிடம் தான் ஒரு பெண் பார்த்திருப்பதாக தெரிவிக்கிறான்... சாயங்காலம் பெண் வீட்டார் வருவதாகவும் சொல்கிறான்.. காதில் விழாததுபோல் காட்டிக்கொண்டாள் மது...அலுவலகமும் கிளம்பிவிட்டாள்..

சாயங்காலம் வீட்டுக்குள் வந்தால் , கீதாம்மா, அப்பா, நிஷா, டாக்டர், சுந்தர், எல்லோரும்... ஒஹோ, எல்லோரையும் கூப்பிட்டுள்ளாரோ, நல்லபிள்ளையாட்டம்... மரியாதைக்காக சிரித்து வரவேற்றுவிட்டு , மாடிக்கு செல்கிராள்..

" மது, நீயும் சீக்கிரம் வாம்மா.. நீ வந்துதான் சரி சொல்லணும்.."விசாலம் அம்மா.. நான் ஒரு பேச்சுக்கு ரகுவுக்கு பரிஞ்சா, ஏன் இப்படி, பெரியவங்களும்...

" இதோ...வரேன் மா.." கீழே வந்தால், ஆளாளுக்கு போட்டோவை வியந்து பேசுகிறார்கள்..

" பொண்ணு அழகுதான்.."

" கொஞ்சம் மூக்கு நீளம்.."

" சிரிச்ச முகம்.."

" ரெட்டை நாடியோ.??.. யோகக்காரி..." அய்யோ நிப்பாட்டமாட்டீர்களா என்றிருந்தது...மதுவுக்கு...

" மது நீயும் ஒருமுறை பார்த்துவிட்டு சம்மதம் சொல்லு...." ரகு... என்ன திமிர்... இருந்தாலும் எல்லோர் முன்னாலும் என்ன சொல்ல, தயங்கி.,

" ...ம்.. உ...ங்க....ளுக்கு ச....ரி......ன்னா, எ...ன.....க்கும்.. ர..கு.." " இல்ல ஒருமுறை பார்த்துவிடு..." நீட்டுகிறான் போட்டோவை...

வாங்கி பார்த்தவள்..,,ஒன்றுமே பேசமுடியாமல் , வெட்கமும், படபடப்பும் சேர்ந்துகொள்ள, கொஞ்சும் கோவத்துடன் , எல்லாரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு , வழிகிற புன்னகையுடன், நேராக சென்று, ரகுவின் சட்டயைப்பிடித்து முறைத்து, திட்டிவிட்டு செல்லமாக கோபித்துக்கொண்டு மாடி ஏறி சென்றுவிட்டாள்..... எல்லோரும் சிரிக்க , ரகுவும் மாடி ஏறுகின்றான்..

" நான் வேணுமின்னா துணைக்கு வரவா, மதுவை சமாதானப்படுத்த...?." டாக்டர்..சொல்லிக்கொண்டே மாடிப்படி ஏற முயல , எல்லாரும் அவரைப்பிடித்து இழுக்க,

----------------------------------------------------------------------------------------------------------

மது சமாதானமாகி புதுப்பெண் வெட்கத்தில் கீழே வர,

" இதுக்கெல்லாம் காரணம் யார்னு வெளியே பார் மது..." அங்கு அவள் அலுவலகம் அமைக்க பத்து எஞ்சினியர்களுடன் வேந்தன் மும்மரமாக... உள்ளே வருகிறார்..

' ரகு, எல்லாம் ரெடி, இன்னும் மூன்று மணி நேரத்தில் ஸ்விட்சர்லாந்து விமானம் கிளம்பிடும்...சீக்கிரம் கிளம்புங்க உங்க இரண்டாவது தேனிலவுக்கு... நேரமிருந்தா அப்படியே எங்கள் அலுவலக கண்காட்சியும் பார்த்து வாங்க...மது வந்ததும் எனக்கு பெண் பார்க்கும் வேலை இருக்கு, சீக்கிரம் .." என்று சிரித்துக்கொண்டே , டிக்கெட், பாஸ்போர்ட் அனைத்தையும் தருகிறார்.. இன்ப அதிர்ச்சியில் மது..

------------------------------------------------------------------------------------------------------------------------------

விமானத்துள், ரகுவுக்கு , மதுவுக்கு இருக்கை எண் , 18 A, 18 C .. ஒரே ஒரு ஆளுக்காக அனைவரும் காத்திருக்க, அப்ப்ப்ப்ப்பப்ப்பப்ப்பாபாபா..அலுத்துக்கொண்டே

" லொள்ளு தாங்க முடில ரசிகைங்ககிட்ட.." முனீஸ்.. விமானப்பணிப்பெண்கள், அவனிடம் ஆட்டோகிராப் வாங்குகின்றார்கள்..முனீஸ் இருக்கை எண்- 18 B முனீஸ் சீட்டை தேடி கண்டுபிடித்து ரகுவுக்கும் , மதுவுக்கும் நடுவில் வந்து அமர்கின்றான்.

" நீ.......யா.....????"''


" ரகு " " முனீஸ் " " மது "

இரக்கப்பட்டு, முனீஸ் இடம் மாறுகிறான்.......ரகுவின் பக்கத்தில்..

" முனீஸ் " " ரகு மது "

****************************************மு ற் று ம்....*****************************
பாகம் - 17- கல்யாணத் தேன் நிலா
=============================
மதுவுக்கு அலுவலகத்துக்கு செல்வதே மிகவும் சோதனையாக உள்ளது .. வீட்டுக்கு வந்தால் ரகு.. அனேகமாக இந்த வாரத்துக்குள் பிரிவு உறுதி....


எந்த வித முன்னேற்றமுமில்லை ... நிம்மதியில்லாமல் ஆனால் வெளியில் சிரித்த முகத்துடனே...அதிக மனச்சுமை ஆளை வாட்டுது...

உடம்புக்கு முடியாமல் விடுப்பு எடுக்கிறாள்.., சரியாகிற மாதிரி தெரியவில்லை ஒரு வாரம்... ஆனால் வேந்தன் நம்பவில்லை. அவள் வேண்டுமென்றேதான் வரவில்லை என்றே நினைக்கிறார்...

அவன் போன் நம்பர் வந்தாலே இவள் பதிலுரைக்காமல் யாரிடமாவது கொடுத்து பதில் சொல்கிறாள்... திடீரென்று பெரியவர் வீட்டிலிருந்து அழைப்பதாக ...மதுவும் செல்கிறாள்..

" எப்படிம்மா இருக்கே... எல்லா விஷயமும் எனக்குத் தெரிந்தது.. சந்தோஷப்படவா, வருந்தவான்னு தெரியலை... உன் விவாகரத்து என்னால் எவ்வளவோ முயன்றும் தடுக்க முடியவில்லை...எங்களால் உனக்கு எவ்வளவு கஷ்டம்.."

" அய்யா அப்படியெல்லாம் இல்லை.. எல்லாம் கடவுள் திட்டம் நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை.. நீங்கள் வருந்தாதீர்கள்.."

" எனக்கு இப்போது அடுத்த கவலை, வேந்தன்... உன்னிடம் பழகியதிலிருந்து குடியை விட்டவன், இப்போது மீண்டும் அதிகமாக..அருந்துகிறான். உன்னை சந்தித்தபின் தான் எத்தனை மாற்றம் அவனிடம்.எங்கள் இல்லமே ஒரு பூங்காவனமாக மாறியது அவன் கைவண்ணத்தில்.. அவன் திறமை வெளிவர ஆரம்பித்தது உன்னால்.இப்போது எல்லாம் மறுபடியும்..." வருந்துகிறார்.

' இப்ப என்னன்னா, அவன் நாளை மறுபடியும் அமெரிக்கா கிளம்புகின்றானாம்...."

" அய்யோ ஏன்..?.... என்ன இப்படி.. " பதறுகிறாள்...

" எல்லாம் உன் கையில்தான் உள்ளது மா. எனக்கு உன்னிடம் யாசிப்பது தவிர வேறு வழியில்லை... நீ எங்கள் மகளாக இந்த வீட்டுக்கு வரவேண்டும் . இப்போதைக்கு அவ்வளவே...."

" அய்யா என்ன இது.. பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிகிட்டு..." என்று பேசிக்கொண்டிருக்கும் போதே

" அதெல்லாம் தேவையில்லை அப்பா, என்னால் அவளுக்கு ஒரு தொந்தரவும் வேண்டாம்,, . அவளை கம்பெனிக்கு வரச்சொல்லுங்கள் மறுபடியும்... என்னை பார்க்கவோ , பேசவோ பிடிக்கவில்லையென்றால் நானே செல்கிறேன்.. அங்கிருந்தே அலுவல்களை கவனிக்கிறேன்..."

" வேந்தன் என்ன இது சிறுபிள்ளைத்தனமான பிடிவாதம்...நான் முடியாமல் இருந்ததால் பேசவில்லை.. சரி நாளை வருகிறேன் அலுவலுக்கு, அங்கு பேசிக்கொள்ளலாம்.. அய்யாவை குழப்ப வேண்டாம்..."

" நீங்கள் கவலைப்படாதீர்கள் அய்யா, மீண்டும் நாளை பார்க்கலாம்..." என்று வெளியே சென்றவளிடம் ஒரு புத்தகத்தை பரிசளிக்கிறார் வேந்தன்....

" நன்றி.. எல்லாத்துக்கும்.. அலுவல் சம்மந்தமாக என் உதவி எப்போதுமிருக்கும் உங்களுக்கு...வாழ்த்துகள்.." ஒரு பெருமூச்சுடன் ஏதும் பேச முடியாமல் விடைபெறுகிறாள்...

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

விவாகரத்து ஆகி ஒரு வாரமாகிவிட்டது... ரகுவோ அன்னையிடம் தான் ஒரு பெண் பார்த்திருப்பதாக தெரிவிக்கிறான்...

யாருக்கும் உடன்பாடில்லை.. மதுவுக்கோ அதை கேட்கக்கூடாது என்றாலும் மீண்டும் மீண்டும், அதுதான் நினைவுக்கு வருகிறது...

வெளிவேஷமிட்டாலும் உள்ளே வலிக்கிறதே... குழப்பத்திலிருந்தவளுக்கு தொலைபேசி அழைப்பு...பெரியவரிடமிருந்து...

" இதோ உடனே வருகிறேன் அய்யா" அங்கு சென்றால் வேந்தன் கிளம்பி ஏர்போர்ட்டுக்கு சென்றுவிட்டார்... போன் யாரும் பேச வேண்டாம் என்றும் தானே விமானம் கிளம்புமுன் பேசுவதாகவும் சொல்லிவிட்டதால் தொலைபேசி தொடர்பும் இல்லை..

வேறு வழியில்லை, அய்யாவையும் அழைத்துக்கொண்டு விரைவாக, ஏர்போர்ட் செல்கிறார்கள்..தடுத்து நிறுத்த , சிறப்பு அறிவிப்பு மூலம் வேந்தனை பெயர் சொல்லி அழைத்து வருவிக்கின்றார்கள். அப்போதும் தூரத்திலிருந்தே தொலைபேசி மூலமாகவே பேசுகிறார்...

" என்னை தடுக்காதீங்க.. மது சம்மதம் சொன்னால் மட்டுமே திரும்புவேன்... நேரமாகிறது.."

" மொதல்ல வெளியே வாங்க வேந்தன் , பின்னர் பேசிக்கொள்ளலாம்...'"

" இல்ல மது.. எனக்கு நேரமில்லை இன்னும் 10 நிமிடத்துக்குள் நான் உள்ளே சென்றாகணும்.. "

" தயவுசெய்து திரும்பி வாருங்கள் , அய்யாவுக்காக.."

" மன்னிக்கணும், உன் சம்மதம் என்ற ஒருவார்த்தை தவிர நான் வரப்போவதில்லை.."

" அய்யோ.. ஏன் இப்படி ஒரு பிடிவாதம்.."

' சரி பை.. நேரமாச்சு..."

" கொஞ்சம் பொறுங்கள்.. "

' . ம். சீக்கிரம்..."

" சரி திரும்பி வாருங்கள்.."

" அப்படின்னா?.."

" அப்படின்னா.. சரின்னு அர்த்தம்.."

" சம்மதம் னு சொல்லு..."

"சரி. சரி. சம்மதம்.. போதுமா. மொதல்ல வெளியே வாங்க.." சிரித்துக்கொண்டே அருகில் வேந்தன் வந்ததும் மது,

" எனக்கு உங்களைப் புரிந்து கொள்ள கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் என்னுடன் இருந்து. பிறகு என் முடிவைச் சொல்கிறேன்' எனச் சொல்ல, அதற்கு வேந்தன் 'லேசா லேசா' இது ஒரு நல்ல முடிவுக்கு வரும் என்று சம்மதிக்கிறார்..

" நான் வெளியே வரமுடியாது.. நீதான் இப்ப உள்ள வரணும்.. நாம இரண்டு பேரும் இப்ப அடுத்த கண்காட்சிக்காக ஸ்விட்சர்லாந்து போகிறோம்...உன் பாஸ்போர்ட், விசா, டிக்கெட் எல்லாம் சரிபார்த்தாச்சு.. சீக்கிரம்... அங்கே பார்.."

அங்கு விசாலம் அம்மா, தன் குடும்பத்தார், நிஷா, சுந்தர், டாக்டர், சீதாம்மா, அனைவரும் மலர்ச்சியுடன் "உன் சந்தோஷம் தான் பெரிது மது" , " நீயில்லாமல் வாழ்வது லேசா என்பதுபோல் பார்த்து கையசைக்க,

" நேரமாச்சு, கிளம்பலாம், " என்று சொல்லிவிட்டு அனைவரிடமும் ,ஆசீர்வாதம் வாங்கிவிட்டு மதுவிடம் விசாலம் அம்மா,

" இதுவரை என் மருமகளான நீ , இன்று என் மகளாக சந்தோஷமாக அனுப்பி வைக்கிரேன் மா. சென்று வா மகளே " என்று அணைத்துக்கொள்கிறார்.

" மது, ஒண்ணும் கவலைப்பாடாதே.. வேந்தன் சரியில்லைன்னா, கவலையில்லை, இன்னும் நானும் ரெடியாதான் இருக்கேன் இன்னொரு கல்யாணத்துக்கு..." டாக்டர் சங்கர் ..

" அய்யோ அங்கிள். என்ன இது...நீங்களுமா " மது வெட்கப்பட , நேரமாச்சு மது என்று அவளை அழைத்துக்கொண்டு வேகமாக, சந்தோஷமாக ,குசும்பாக வேந்தன்...

------------------------------------------------------------------------------------------------- விமானத்துள், வேந்தனுக்கு , மதுவுக்கு இருக்கை எண் , 18 A, 18 C .. ஒரே ஒரு ஆளுக்காக அனைவரும் காத்திருக்க, அப்ப்ப்ப்ப்பப்ப்பப்ப்பாபாபா..அலுத்துக்கொண்டே

" லொள்ளு தாங்க முடில ரசிகைங்ககிட்ட.." முனீஸ்.. விமானப்பணிப்பெண்கள், அவனிடம் ஆட்டோகிராப் வாங்குகின்றார்கள்..

முனீஸ் இருக்கை எண்- 18 B முனீஸ் சீட்டை தேடி கண்டுபிடித்து வேந்தனுக்கும் , மதுவுக்கும் நடுவில் வந்து அமர்கின்றான்.

" நீ.......யா.....????"''

" வேந்தன் " " முனீஸ் " " மது "

*************************************மு ற் று ம்....*****************************
பாகம் - 16 - நீ காற்று நான் மழை என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்

காலையில் எழுந்ததும் கணினியில் மெயில் பார்த்தால் ரகுவிடமிருந்து... ஆசையுடன் திறந்தவளுக்கு ஒரு வரியில்,

" வேந்தனுடன் உன் மறுமணத்துக்கு ,எனக்கு சம்மதம்..."அடக்கமுடியா கோபம் ..போனில் அழைக்கிறாள் அவளே

"ரகு, உங்களுக்கு, என்னை பிடிக்கலைன்னு சொல்ல உரிமையுண்டு, என்கூட வாழமுடியாதுன்னு சொல்லவும் உரிமையுண்டு,என்னைத் திட்ட, அடிக்க,உதாசீனப்படுத்த எல்லாத்துக்கும் உரிமையுண்டு.. ஏன்னா இன்னும் உங்க மேல் பாசமிருக்கு எனக்கு. ஆனா எனக்கு மாப்பிள்ளை பார்க்க உங்களுக்கு உரிமையில்லை...என்னை மறுமணம் செய்ய சொல்ல நீங்க யார்....???...""அழுகைவந்துவிடும் என பயந்து போனை வைத்துவிடுகிறாள்.

முதன்முறையாக அசிங்கமான வெறுப்பும் வருகிறது ரகுமேல்..ரகுவோ, உனக்கு அப்படி என்னை பிடித்திருந்தால்தான் வேலையை எனக்காக விட்டிருப்பாயே என்று பிடிவாதமாக நினைக்கிறான்

.------------------------------------------------------------------------------------------------------------------------------------

பல நாட்களாக தன்னிடம் எதுவும் பேசாமல் தன்னை உதாசீனப்படுத்துவது வேந்தனுக்கு வருத்தமாயுள்ளது.. இன்று ரகுவுடன் மீட்டிங் வேறு.. ரகு வந்ததும் அவனிடம் சிறிது நேரம் பேசிவிட்டு, மதுவை ஒரு நிமிடம் தன்னுடைய அறைக்கு வருமாறு அழைக்கிறார்..

வேண்டாவெறுப்பாக அறைக்குள் சென்றவளுக்கு அதிர்ச்சி , ரகுவுடன் வேந்தன்..

" தயவுசெய்து, அமருங்கள்..." வேந்தன்..இருவரையும் மாறி மாறி முறைத்துவிட்டு, கதவை படாரென்று சாத்திவிட்டு கோபத்தை காண்பித்துவிட்டு பேசாமல் வெளியேறுகிறாள்..

ரகுவிடம் மன்னிப்பு கேட்டு அவன் சென்றதும், மதுவின் அறைக்கு கோபமாக வேந்தன் வருகிறார்..

அவள் தன் வேலையை தொடர்கிறாள்.

" ரகு ஏன் வந்தார் னு கூட தெரிஞ்சுக்காம , நீயா கற்பனை பண்ணிகிட்டு ,எங்களை அவமானப்படுத்தினா எப்படி?..""......" பதிலில்லை..வேலையை தொடர்கிறாள், அவரைக் கண்டுகொள்ளாமல்..

" ப்ரீத்தியை அமெரிக்காவுக்கு அனுப்பி சிறப்பு டென்னிஸ் பயிற்சி கொடுக்கும் விஷயமாக,நான்தான் வரச்சொன்னேன்.அதுக்கு உன் சம்மதம் அறியவே.."கணினியிலிருந்து பார்வையை வேந்தனிடம் செலுத்துகிறாள்.

வெட்கி, ஆச்சர்யத்துடன் , புருவம் உயர்த்தி .எழுகிறாள்..

" ஓ .. மன்னிக்கவும்..." சொன்ன மதுவுக்கு பதிலேதும் கூறாது வேந்தன் வெளியே செல்கிறார்..தன் மீதே வெறுப்பு வருகிறது..

எல்லாம் தப்பாக தெரிகிறதே...இருந்தாலும் என்னிடம் முன்னரே சொல்லியிருக்கலாமே..!

--------------------------------------------------------

வார இறுதி மீட்டிங் அறையில் கூட இருவருடன் வேந்தன் . மதுவின் விளக்க உரை முடிந்ததும் கேள்விகளால் துளைக்கிறார்..

அப்படியாவது தன்னிடம் அவள் பேசட்டும் என்றும், தன் கோபத்தை காட்டிவிட்டோம் என்றும், மனதுக்குள் சிரிப்பு..மற்ற இருவரையும் போகச்சொல்லிவிட்டு, மதுவை மட்டும் இருக்கச்சொல்கிறான், தனக்கு சில சந்தேகம் இருப்பதாக,

" ஏன் என்னிடம் பேசாமல் உதாசீனப்படுத்துகின்றாய்..நான் உன்னை கட்டாயப்படுத்தவில்லை..நீ சாதாரணமாக பேசலாமே..எனக்கு மிகவும்வருத்தமளிக்கிறது உன் செயல்...இப்படி தொடர்ந்தால் நான் சீக்கிரம் அமெரிக்கா செல்ல வேண்டிவரும்....' அமைதியாகவே எச்சரிக்கிறார்.

" நீயும் ரகுவும் பிரிவதென்பது முடிவானது... ஆனாலும் நான் உன்னை கட்டாயப்படுத்தவில்லை உடனே மறுமணத்துக்கு...என்னிடம் எப்போதும் போல் பேசு..."

------------------------------------------------------------------------------------------------------

மிகுந்த கலக்கத்துடன் மது.. அடுத்த வாரம் விவாகரத்து முடிவுக்கு வரும்..எந்த வித முன்னேற்றமுமில்லை.. பெண்ணின் பெற்றோர் கூட்டத்துக்காக பள்ளிக்குச் செல்கிறாள்... தூரத்தில் ரகுவும்...

இவளைப்பார்த்ததும், கன்னியாஸ்திரி வேகமாக வந்து கட்டி அணைத்துவிட்டு அழைத்துச் செல்கிறார்... பெண்ணையும் அழைத்துவரச்சொல்கிறார்... பெண் தூரத்தில் வரும்போதே ரகு ஆசையுடன் காத்திருக்க, பெண்ணோ, அப்பாவை பார்த்து சிரித்துவிட்டு அம்மாவை நோக்கியே வருகிறாள்..

மது பதருகிறாள்.. ' மொதல்ல அப்பாகிட்ட போம்மா .."

" அம்மா..ஒரு நிமிடம்..."

' நீ அப்பாகிட்ட பேசிவிட்டு என்னிடம் வாம்மா...அவர் வருத்தப்படுவார் இல்லயா?.." கன்னியாஸ்திரி இரக்கத்தோடு பார்க்கிறார் மதுவை...

" என்னுடைய சிறந்த மாணவி நீ.. அதேபோல் உன் மகளும்... ஆனால் உன் வாழ்க்கையில் இப்படி ஒரு சோதனை...கடவுள் ஆசீர்வதிப்பார். கவலைப்பாடாதே.."

கன்னியாஸ்திரி ரகுவையும் அழைத்து தன் அறைக்குள் சென்று குடும்பத்தோடு பேசுகிறார்...டென்னிஸ் பயிற்சி பற்றியும், வேந்தனின் பங்கெடுப்பு குறித்தும்..பின் ப்ரீத்தியை அனுப்பிவிட்டு சமாதானம் பண்ண முயலுகிறார்...

இதுவும் மதுவின் ஏற்பாடோ என்று ரகு நினைத்து..

' மன்னிக்கணும், சிஸ்டர், அதை குறித்து நான் எதுவும் பேசுவதற்கில்லை.. எல்லாம் உறுதி ஆன நிலையில்.."

இனி வழியேயில்லை என்று மதுவுக்கு புரிகிறது.... ஆண்களில் தான் எத்தனை வகை??.


***************************************************************அடுத்து கடைசி பாகத்துடன் முற்றும்..***************************

Wednesday, February 27, 2008

பாகம் - 15- நீ என் தோழியா இல்லை காதலியா?..

ஆஸ்திரேலியா பயணத்துக்குண்டான அனைத்து ஏற்பாடுகளுடன் 5 பேர் குழுமமாக ஏர்போர்ட்டில்.. மது பேண்ட் சட்டையில்.. முதல்முதலாக அவளை இந்த உடையில் பார்த்து, ரசிக்க, தன்னையே கட்டுப்படுத்துகிறார்..

அழகுக்காகவா விரும்புகிறேன்? இருந்தாலும் இடத்திற்கேற்ப ஆடை உடுத்தும் அழகு.. ரசிக்கிறார்தான் .

கடைசிவரை ரகுவுக்கு சொல்லிவிட்டு சொல்லலாம் என்றால் அவன் தொலைபேசியில் பதிலில்லை..

அன்று வேந்தனுடன் இந்த நிலைமையிலும் சிரித்து பேசியதை கூட தப்பாக எடுத்திருப்பானோ.. ??. பேசவே மாட்டேங்கிறார்..

கலக்கத்துடன் மது... அவள் கலக்கம் அறிந்து மிகவும் அனுசரணையாக வேந்தன், ஏர்போர்ட்டில் எல்லா வேலைகளையும் அவரே செய்கிறார், அவளை அமரச்செய்துவிட்டு...

-------------------------------------------------------------------------------------

ஆஸ்திரேலியாவில் பொருட்காட்சியில் இவர்கள் கம்பெனிக்கு ஒதுக்கப்பட்ட இடம் கிடைக்க ஒருவாரம் தள்ளிப்போடப்படுகிறது...

எல்லோரிடமும் போனிலேயே பேசி சரிசெய்கிறாள் மது..
அவள் வேகமும்,விடா முயற்சியும் கண்டு அதிசயிக்கிறார்...

ஒரு வாரம் இருப்பதால் ஊர் சுற்றிப்பார்க்கக்கட்டாயப்படுத்தி அவளையும் கூட்டிச்செல்கிறார்...அவளை சந்தோஷப்படுத்துவதிலேயே வேந்தன் குறியாயிருக்கிறார்..,,

ஆனாலும் அந்த சோகமான முகம் வேந்தனை வருத்துகின்றது....அவளைவிட்டு இனி ஒருநாள் கூட பிரிவது என்பது முடியாத காரியமாகிவிடுகின்றது வேந்தனுக்கு...

எல்லாம் நல்லபடியாக வெற்றிகரமாக முடிந்து ஏர்போர்ட்டில் விமானத்துக்காக காத்திருக்கையில் மது மெதுவாக அவரின் திருமணப்பேச்சை ஆரம்பிக்கின்றாள்.

" சரி மறுமணம் பற்றி என்ன முடிவு.. அய்யாவிடம் நான் என்ன சொல்லட்டும்..?"

" ம்.. ஹி... ஹி.." சிரிப்பை மட்டுமே பதிலாக ..

" சொல்லுங்கள். வேந்தன், என்ன உங்கள் பதில் " ஆம். " தானே..?"

" அப்படியே வைத்துக்கொள்ளுங்கள்..."

" உண்மையாகவா...???" மிகுந்த சந்தோஷத்துடன் மது துள்ளிக்குதிக்காத குறைதான்..

-----------------------------------------------------------

புகை படங்களை பார்க்கிறார்..கோவமாய் வருகிறது ..

" மது , என்ன இது..போட்டோக்கள்.."

" மன்னிக்கவும்..சொல்ல மறந்துட்டேன் வேந்தன்.. நான் பார்த்துள்ள பெண்ணின் படங்கள்.."

" நான்.. உங்ககிட்ட.. சரி சாயங்காலம் அலுவலகம் முடிந்ததும் வாருங்கள்.. பேசணும்..."கோபமாக வைத்தான் போனை..

மதுவோ சந்தோஷமாக அவன் அறைக்குள் நுழைய,புன்னகைகூட புரியாமல், வேந்தன் குழப்பத்தில்., எப்படி ஆரம்பிக்க என்று தெரியாமல்.

" கொஞ்சம் , உணவருந்துங்கள் மது ,அதிக நேரமாகலாம், பின்பு பேசலாம்.." ஏதோ குழப்பம் போல என்று மரியாதைக்காக சாப்பிடுகிறாள்..

அங்கும் இங்கும் நடக்கிறான் ..கொஞ்சநாள் தள்ளிப்போடலாம் என்றால் நீ அவசரப்படுகிறாயே..வேறு வழியில்லை.. சொல்லியாகணும் உன் பெண்பார்க்கும் வேகத்தைத் தடுக்க.

" மது , யாரை கேட்டுட்டு எனக்கு, பெண் பார்க்கிறாய்..?"

" ஏன் , உங்களுக்கு சம்மதம்தானே, மறுமணத்துக்கு..?"

" ஆமாம்.. ஆனா நான் ஏற்கனவே பெண் பார்த்தாச்சு.. அவள்தான் சம்மதிக்கணும்...அவளுக்கே தெரியாது."

" ஓ. என் வேலை சுலபம் இப்போது.. சொல்லுங்கள் யாரென்று, அவர்களை சம்மதிக்க வைப்பது என் பொறுப்பு.." சந்தோஷமாக..

அய்யோ, உனக்கு எப்படி நான் புரியவைப்பேன்.. நீ எப்படி எடுத்துக்கொள்வாயோ என்று நினைத்தாலே பயமாயிருக்கு..

"சொல்லுங்கள் , சீக்கிரம்..." நிதானமாக காபியை அருந்திக்கொண்டே மது..வேந்தன் ஜன்னல் புறமாக திரும்பிக்கொண்டு, அவளை, பார்க்க தைரியமற்று,

" மது, நான் சொல்லப்போற விஷயத்துக்கு நீ அதிர்ச்சி அடையவேண்டாம்.. அவசரமுமில்லை, கட்டாயமுமில்லை.. ஆனால் தயவுசெய்து கோபப்படாமல் நிதானமாக என்னை பேச மட்டும் விடு.."

காபி கிண்ணத்தை கையிலெடுத்து, நெற்றியை சுருக்கி ஒன்றுமே புரியாதவளாய், எழுந்து நிற்கிறாள்..கூர்மையாக அவன் சொல்வதை கேட்கும் ஆவலுடன்..

" சொல்லுங்கள், வேந்தன்...நிதானமாகவே இருக்கிறேன்..", வேந்தனோ ,ஜன்னல் திரைச்சீலைகளை விலக்கிக்கொண்டு,

"...ம்...ம்ம்.."..கைகளால் நெற்றியை அழுத்தி தேய்க்கிறான்...

" சொல்லுங்கள் , சீக்கிரம்.."சட்டென்று திரும்பி, அவள் கண்களைப்பார்த்து,

" நீதான் என் மனதில் இருக்கும் அந்த மகாராணி , மது...

"கையிலிருந்த கோப்பை நழுவி கீழேவிழுவதுகூட தெரியாதவளாய், அதிர்ச்சியும், கோபமும், வெறுப்புமாய், வேந்தனை நேருக்கு நேர் பார்க்க,

" நான் உன்னை கட்டாயப்படுத்தல , மது.. ஆனா மறுமணம் நடந்தா அது உன்கூடமட்டும்தான்.. இல்லாட்டி நான் இப்படியே இருந்துகொள்கிறேன்..எனக்கு பெண் பார்க்காதே..உன்னை நான் விரும்ப மட்டும் அனுமதிகொடு..உன் நிலைமை அனைத்தும் எனக்கு, அப்பாவுக்கு எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்..நம்ம கம்பெனிக்காக நீ செய்துள்ள தியாகம் மிகப்பெரிது..உனக்கு சேவை செய்ய, எங்களுக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடு...ஆனால் உன் விவாகரத்து ஆன பின்னே..மட்டும்தான்.."

" வேந்தன், என் நிலைமை ,புரியாமல் பேசுகின்றீர்கள்.. நான் திருமண வாழ்க்கைக்கே லாயக்கில்லாமல் தான் இந்த முடிவுக்கு வந்துள்ளேன்.."

" எனக்கும் . அதேதான் மது.. தாம்பத்யம் தான் முக்கியம் என்றால் பத்து வருடம் வீணாக்கியிருக்கமாட்டேன்..தாம்பத்யம் எனக்கு தேவையில்லை மது..எனக்கு ஆயுசுக்கும் ஒரு நல்ல தோழியாக என்னுடனே இருக்கணும் .நீ!. அவ்வளவே..நீ என் கம்பெனிக்கு சேவை செய்.. நான் உனக்கு சேவை செய்ய எனக்கு அனுமதி தா...உடனே அல்ல.. நான் காத்திருக்கிறேன்..நாம் இருவரும் இணைந்து இந்த வேலையை தொடர்வோம்.."

" அப்படி நான் சம்மதிக்கலை என்றால்..?" அழுத்தமாக...

"நான் கட்டாயப்படுத்தமாட்டேன், நான் மறுபடியும் அமெரிக்கா திரும்பிச்செல்வேன் ஆயுசுக்கும்.." புன்னகைக்கிறான்..

" என்ன , மிரட்டுறீங்களா?."


" நோ. நோ.. அது உன் விருப்பம்...என்னால் மனதில் ஆசை வளர்த்துகிட்டு, போலியா உன்னிடம் பழகமுடியாது, மது..நீ தனிமையில் கஷ்டப்படுவதை பார்க்கவும் முடியாது."

"அதுக்காக சொந்தத்தை , அப்பாவை , கம்பெனியை விட்டு செல்லும் அளவிற்கு, முடிவெடுப்பீர்களா?..உங்கள் மேலுள்ள மரியாதை குறைகிறது வேந்தன்.."

" பாத்தியா, மது, என்னைவிட என் அப்பாமேல் , கம்பெனிமேல் உனக்குதான் எவ்வளவு அக்கறை..இதுக்குத்தான் எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சுருக்கு.."

"பேச்சை மாத்தவேண்டாம்.. என் முடிவில் மாற்றமில்லை.. வயதான காலத்தில் பெரியவர்களுக்கு வேதனை தராதீங்க...நான் கிளம்புறேன்.."

"எல்லோருக்கும் சம்மதமே.. ஏன் உன் மாமியார், பிள்ளைகள், டாக்டர், சுந்தர், நிஷா, சீதாம்மா, எல்லோரும் வந்து இது குறித்து ஏற்கனவே பேசியாச்சு மது.. உன்னிடம் பேச தான் தயக்கம் ..."

"ஓ. எனக்கு தெரியாமல் இவ்வளவு நடந்துள்ளதா..சரி நான் உடனே போகணும்...இனி பேச விருப்பமில்லை.."

" சரி நான்தான் உன்னைக்கொண்டுவந்து விடணும்.. ஓட்டுனரை அனுப்பிவிட்டேன்"

இருவரும் காரில் ஒன்றுமே பேசவில்லை.. மெளனத்தை போக்க பாட்டு போடுகிறான்...

" லேசா லேசா, நீயில்லாமல் வாழ்வது லேசா " என்ற பாடல்.. மாத்துகிறான்

" ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுத்துகின்றதே.." மாத்துகிறான்..சிரிப்பாக வருகின்றது அவனுக்கு.. நேரம் காலம் தெரியாமல்.. ஒரே காதல் பாட்டு.. அவள் கோபத்தை அதிகரிக்கவேண்டாம் என்று சிரித்துக்கொண்டே குசும்பாக அணைக்கிறார் வேந்தன்..

வீட்டில் இறக்கி விடும்போது ஒரு பார்சல் தருகிறான்.. வீட்டிற்கு சென்று திறந்து பார்க்கும்படி...நல்லவேளை ரகு வெளியூர் சென்றுள்ளான்.

குளித்து, சாப்பிட்டு, அம்மாவிடம் பேசிவிட்டு மாடியில் சென்று பார்சலை பிரித்துபார்த்தால், ஆஸ்திரேலியாவில், ஒவ்வொரு பொழுதும் அவன் எழுதியகவிதைத்தொகுப்பும் போட்டோக்களும் மதுவையும் இயற்கையும் பற்றியே..எப்ப எழுதினார், எப்ப எடுத்தார்...

பெருமூச்சுடன் வாசிக்க ஆரம்பித்தாள்..யாருக்கோ எழுதியதாக நினைத்து எழுத்தை, திறமையை, ரசித்தாள்..
பாகம் -14

குழந்தைகளிடம் பக்குவமாய் தாத்தாவும் பாட்டி முன்னிலையில் ரகுவும் , மதுவும் எடுத்துச்சொல்கிறார்கள்.. 11 வயது மகள் புரிந்துகொள்கிறாள்.. அப்பாவின் மேல் அதிக பிரியமும், மரியாதையும் கொண்ட அவள் முதன்முறையாக அப்பாவை கொஞ்சம் வெறுக்கிறாள்..
கோபப்படுகிறாள்... அம்மாவை அதிகமாக நேசிக்கிறாள்..அதையும் மது சரி செய்கிறாள்..
தன் மேலும் தப்பு இருக்கு என்றும் , அப்பாவின் முடிவும் அவர்பொறுத்த மட்டில் சரியே என்று பெண்ணிடம் விளக்குகின்றாள்..


பெண் ஹாஸ்டலில் விரும்பி சேர்கிறாள், தன் படிப்பு மற்றும் டென்னிஸ் விளையாட்டின் நிமித்தம்..5 வயது பையனுக்குத்தான் ஒன்றுமே புரியவில்லை.....தாத்தா பாட்டியிடம் , வேலையாட்களிடம் வளர்ந்தவன்..

ரகுவிற்கு ,யாரும் தனக்கு சப்போர்ட் பண்ணவில்லை என்றிருந்தாலும் , தடுக்கவில்லை என்று திருப்தி.. தன் அருமை பெண் தன்னிடம் பேசவிரும்பவில்லையே என்பது மட்டும் வருத்தம்.. மறு கல்யாணத்திற்கு பெண்பார்க்க சொல்லிவைக்கிறான்..

-------------------------------------------------------------------------------------------------------------------

எல்லாரும் தன்மேல் பரிதாபப்படுவது மதுவுக்கு பிடிக்கவில்லை... சந்தோஷப்படுத்தவேண்டி, பையனின் பிறந்த நாளுக்கு , தன் வீட்டாரையும், நிஷா, சுந்தர், டாக்டர் சங்கர் ,சீதாம்மா , எல்லோரையும் அழைக்கிறாள்....
விழா முடியும் போது , எல்லோரும் முன்பு போல் ரகுவிடம் அன்பாக பேசவேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறாள்..

" நான் ஒரு அதிர்ஷ்டசாலி.. எதிர்பார்க்காத அழகான திருமண வாழ்க்கை, பரிசாக அருமையான குழந்தைகள், அன்பான மாமா, அத்தை, உறவுகள் கிடைத்தது...இந்த உறவுகள் எப்பவும் மாறாது...இதை தக்க வைக்காதது என் தவறே..முடிந்தால் நானே நல்ல பெண் பார்த்து வைப்பேன் ரகுவுக்கு " என்கிறாள்..

ரகுவை எல்லாரும் ஒருமாதிரியாக பார்க்க, அதற்கும் மது தான் காரணம் போல் எழுந்து உள்ளே சென்றுவிடுகிறான்...ரகுவிடம் அனைவரும் சமாதானம் பண்ண முயல, அவனோ மது வேலையை விடுவது ஒன்றே தீர்வு, மறுபேச்சுக்கே இடமில்லை என திட்டவட்டமாக கூறுகின்றான்.

" ரகுவும் பாவம்.. வருடத்தில் பாதி நாட்கள் நான் பயணத்தில்.. எல்லா அலுவலக பார்ட்டிகளுக்கும் தனியாக செல்கிறார்.. வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னேறியவர்...அவரை கூட இருந்து கவனிக்க கண்டிப்பா ஒரு துணை தேவை.. அவர் முடிவு தவறில்லை...."ஒருபக்கம் மதுமேல் பாவமாக இருக்கிறது.. ஆனாலும் அவள் பிடிவாதத்தினால் கஷ்டப்படட்டும் என்றே தோன்றுகிறது , ரகுவுக்கு..

"நான் என்ன குறை வைத்தேன் அவளுக்கு.. வேலையை விட்டுவிட்டு என்னையும் வீட்டையும் கவனிக்கலாமே.. பார்க்கலாம் அவளா வருவாளா என்று.."தப்புக்கணக்கு போடுகிறான், இன்னும் அவளை முழுவதும் புரிந்துகொள்ளாமல் ...

விசாலம் அம்மாவுக்கு மது , ரகுவை விட்டுக்கொடுக்காமல் பேசியது ஆறுதலாயிருந்தது..
" எல்லாத்தையும் உன் தலையிலேயே போட்டுக்கொள்கிறாயே மா.?..என்னவோம்மா, ஊருக்கு உன் சேவை தேவையாயிருக்கு... என் சேவை உனக்கு எப்போதுமிருக்கும்...." கண்கலங்க,


" அம்மா இப்ப நான் தெளிவா இருக்கேன்.. இனி நாம் யாரும் கலங்கத் தேவையில்லை.. கடவுள் நல்ல வாழ்க்கை , வசதி , நல்ல மனிதர்கள்கொடுத்துள்ளார் என்று திருப்தியோடிருப்போம் மா.." நிதானமாக சொல்லிக்கொண்டிருக்க தொலைபேசி அழைக்கிறது...

" மது , உன் குழந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.. உன்னிடம் பேசலாமா?.."வேந்தன்.." நன்றி.. தாராளமா சொல்லுங்களேன்..."

" அடுத்த வாரம் ஆஸ்திரேலியா செல்ல உனக்கொண்ணும் தடையில்லையே.. முக்கியமான தொழில் பொருட்காட்சி.. நாமும் பங்கேற்கிறோம்.."

" சரி வேந்தன்.. உங்கள் விருப்பப்படியே செய்யுங்கள்..." நிம்மதியாக இருந்தது... கொஞ்சம் பிரச்சனைகளை மறக்கலாம்...

எனக்காக எவ்வளவு செய்த கம்பெனி.. ஆரம்பகாலத்தில் , பரமுவின் குடும்பத்துக்காக, ரகுவிற்குத் தெரியாமல் உதவ, பின்னர், பரமுவின் கணவருக்கு தன் கிளை கம்பெனியில் வேலை வாங்கியது, அப்பாவின் மருத்துவச்செலவுகள், இப்படி எத்தனையோ... அதற்கெல்லாம் நன்றியோடு இருக்க சந்தர்ப்பம் கிடைத்ததற்காக கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொண்டாள்..

-------------------------------------------------------------------------------------------------------------------------

ஆஸ்திரேலியா செல்லுமுன் பெரியவர் மதுவிடம்

"அம்மா மது, நம் கம்பெனிக்கு காண்டிராக்ட் வரும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.. ஏனெனில் போவது இரண்டு புலிகளாச்சே.."சிரித்தார்

" ஆனால் முக்கியமான வேலை, வரும்போது வேந்தன் மறுமணத்துக்கு ரெடியா இருக்கணும்.. அது உன்னால்தான் முடியும் மா.. உன்னிடம் மட்டும் தான் மனம் விட்டு பேசுகிறான்..."

" கண்டிப்பாக செய்கிறேன் அய்யா.. பெண் மட்டும் நீங்க பாருங்க.. மத்ததை நான் பார்த்துக்கொள்கிறேன்..." சந்தோஷமாக சொல்கிறாள்..
---------------------------------------------------------

மறுநாள் மது அலுவலகம் வரவில்லை.. துடித்துப்போகிறான் வேந்தன்...விசாரித்து டாக்டர் சங்கரைக் காணச் செல்கிறான்...இருவருக்கும் பிடித்துப் போகவே, மதுவின் பெண் ப்ரீத்தியை காண அவள் பள்ளிக்குச்செல்கிறார்கள்...அவள் சிறந்த டென்னிஸ் வீராங்கனை என்று வேந்தன் கேள்விப்பட்டதும்,

" உன்னை ஒரு சானியா போல் ஆக்க என்னால் முடியும் .. நீ தயாரா.. நானும் டென்னிஸ் வீரன் தான்.. விளையாட்டுன்னா எனக்கு ரொம்ப இஷ்டம்..."

' ரொம்ப மகிழ்ச்சி அங்கிள்...அம்மாவிடம் சொல்லணும்..." ப்ரீத்தி பின் சாயங்காலம் மதுவிடம் ப்ரீத்தி கூறியபோது ஆச்சர்ய பட்டு போகிறாள்..

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கம்பெனி மீட்டிங் நட்சத்திர ஹோட்டலில்..அதுகுறித்து விவாதித்து ,சிரித்து பேசிக்கொண்டே வேந்தனும் , மதுவும் ,சுற்றும் படிகளில்( escalators??) மேலே வர, அடுத்த படிகளில் ரகு கீழே இறங்கி வருகிறான்..நேருக்கு நேர்.. அவள் சிரித்து பேசி வருவது அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை .கண்டுகொள்ளாமல் செல்கிறான்..

' ரகு, ரகு..." என்று கூப்பிடுகிறாள்.. ஓடிச்சென்று வேந்தனிடம் அறிமுகப்படுத்த ரகுவின் கையை பிடிக்கிறாள்.. அவனோ கையை உதறிவிட்டு வேகமாக நடக்கிறான்...அதிக ஏமாற்றத்திலும், வேந்தன்முன் நடந்ததாலும் வெட்கி வேதனைப்படுகிறாள்...

புரிந்து கொண்டு அவளைத் தனியாக அழைத்துச்சென்று ஒன்றும் தெரியாதவர், பார்க்காதவர் போல் ,எதுவும் கேட்காமல்

' பரவாயில்லை , அவர் ரொம்ப பிஸியாயிருக்கலாம்..இன்னொருமுறை பார்த்துக்கொள்ளலாம்..." புன்னகையோடு பேச்சை மாத்துகிறார் அலுவலக விஷயத்தில்.

----------------------------------------------------------------------------------------------------------------

அன்றே டாக்டருடன் அவரது இல்லத்தில் ரகுவை சந்தித்து பேசுகிறர் வேந்தன்..

***********************************************************************************தொடரும்...
பாகம் - 13- எனதுயிரே, எனதுயிரே....

சுந்தருக்கு ரகுவே போன் செய்து விவரம் கூறி தான் இன்னொரு பெண் தேடுவதாகவும், அவள் வேலைக்கு செல்லவேண்டாம் தன்னையும் , குடும்பத்தையும் மட்டும் கவனிப்பவளாய் இருக்கட்டும் என்கிறான்...
சுந்தர் கோபப்பட்டு திட்டுகிறான்...தயவுசெய்து இன்மேல் என்னிடம் மது பற்றி எதுவும் பேசாதே என்கிறான்..ரகுவின் கோவம் அதிகமாகுது..

யாருமே என்னை புரிஞ்சுக்க மாட்டீங்க..எல்லோருமே மதுவுக்கு பரிஞ்சுகிட்டு வாங்க ....திட்டி போனை வைக்கிறான்.

-----------------------------------------------------------------------------------------------------
டாகடர் சங்கர் , சுந்தர், நிஷா மூவரும் ரகுவை அழைத்துப் பேசுகின்றனர்..


" புரியுது ரகு.. உங்க நிலைமை... வாழ்க்கையில ஒரு நிலைமையில் எல்லோருக்கும் இப்படித்தான் ரகு..
இப்ப பாருங்க.. நான் இங்கே தனிமையா மருத்துவமும், கோவிலும் என்று , என் மனைவியோ,மாறி மாறி அமெரிக்காவிலுள்ள மகள், மருமகளுக்கு, பேரக்குழந்தைக்கு ஆயாவா....நானும் உங்கள மாதிரி சிக்குன்னு ஒரு சின்னப்பெண்ணை கல்யாணம் பண்ணலாம்னு நினைக்கிறேன்...என்ன சொல்ரீ[றீ]ங்க....??.."" சிரிக்கிறார்...டாக்டர்..


" அண்ணா எப்பவுமே விளையாட்டுதானா?..." நிஷா, சுந்தர்...

" விளையாட்டா எடுத்தாதான் பிரச்சனை இல்லையே.. பாரு இந்த மதுவை, ஊருக்கு சேவை செய்யறாளாம்...எதுக்கு, சிறந்த பெண்மணி பரிசு வாங்கவா?.. பேசாமல் கணவனையும் குடும்பத்தையும் பார்த்துக்கொண்டு எல்லா பெண்களையும் போலவருடம் ஒருமுறை ஊர்சுற்றிவிட்டு ஜாலியா இருப்பதை விட்டுட்டு...பைத்தியக்கார பொண்ணு....."

ரகு குழம்புகிறான்.. என்ன சொல்றார் இவர்...?..நமக்கு பரிந்து பேசுற மாதிரி திட்டுகின்றாரா?..

" சரி முடிவா என்ன சொல்ரீ[றீ]ங்க..?.." டாக்டர்

" பிரிவுதான் முடிவு .. இப்போதைக்கு....." சொல்லிவிட்டு எழுந்து செல்கிறான்.. ரகு.,.. அவன் போக்கை வித்தியாசமாக பார்க்கிறார்கள்..

வருத்தமாக தோளை குலுக்கி கையை விரிக்கிறார் டாக்டர்..இருந்தாலும் பின்னர் யோசிப்பான் ரகு கவலைப்படாதீர்கள் என்கிறார்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

மலைப்பயணம் மிகவும் இனிமையாக அமைந்ததால் ஆஸ்திரேலியா பயணத்தை மதுவுடன் செல்ல திட்டமிடுகிறான் வேந்தன்.., மதுவின் விவாகரத்து உறுதி என்ற நிலையில்..மதுவோ அய்யாவிடம் எப்படியும் வேந்தனை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கலாம் என்று பெரியவரிடம் சொல்ல அவர் சந்தோஷப்படுகிறார்...

" எல்லாம் உன் கையில்தான் இருக்கும்மா.."
" அது என் கடமையும் அய்யா..."


----------------------------------------------------------------------------------------------------------------------------

வீட்டில் ரகுவும் , மதுவும் பேசாமல் இருப்பது விசாலம் அம்மாவுக்கு கொஞ்சமாய் புரிகிறது....இன்று எப்படியும் கேட்கணும்..

" அம்மா சாப்பாடு எடுத்து வையுங்கள்...." ரகு

" மது என்னன்னு பாரம்மா... அதான் மது வந்தாச்சே..."மது வருகிறாள்..

" இல்ல நீங்க வாங்க.. இல்லாட்டி நான் போகிறேன்.." ரகு

" என்னம்மா நடக்குது இங்க...." கலக்கத்துடன் அம்மா

"அது வேற ஒண்ணுமில்லம்மா....வந்து.." பயத்துடன் மது

" நான் சொல்றேன்மா..." ரகு

கண்களால் கெஞ்சுகிறாள் மது அவனருகில் வந்து...

" அம்மா..." என்று ரகு ஆரம்பிக்க , ரகுவின் கையை அழுத்தமாக பிடித்து கெஞ்சுகிறாள்..

" ஒண்ணும் இல்லம்மா கொஞ்சம் மனஸ்தாபம்.. அவ்வளவே..." சமாளிக்கிறாள்...

" இல்.....லை...அம்மா, நானும் மதுவும் பிரியலாம்னு ..."

" என்னடா சொல்ற?.. மது என்னம்மா இதெல்லாம்.. என் வயத்துல நெருப்ப அள்ளிக்கொட்றாப்ல.."தலையில் கைவத்து அப்படியே உட்காருகிறார்...

மது அம்மாவைக் கட்டிப்பிடித்து அழுகிறாள்...ரகு வெளியேறுகிறான்..கோபமாய் வருகிறது ரகுமேல் மதுவுக்கு..

என்ன ஒரு கல்நெஞ்சம்.. வயதானவர்களிடம் பக்குவமாகச்சொல்லாமல்..

" அம்மா நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க..."

" போதும் மா உங்க நாடகம்.. எதுவானாலும் என்னை ஒரு மனுஷீன்னு நினைத்து என்னையும் கலந்துக்கோங்க மா.."

" ரகுவிற்கு அதிகாரம் கொடுத்து பாதி நான் கெடுத்தேன்.. நீ அவனுக்கு அன்பும் , பணிவும் கொடுத்து முழுவதுமா கெடுத்துட்டேம்மா.."

" எல்லாம் நல்ல படியாக நடக்கும் னு எனக்கு தைரியம் சொல்லுங்கம்மா.. எப்பவும் போல.. .இப்பல்லாம் நான் ரொம்ப கோழையாயிடுவேன் போல் இருக்கும்மா."அணைத்துக்கொள்கிறார் மதுவை.,..பரிதாபப்பட்டு..

" ஒண்ணும் கவலைப்படாதேம்மா.. உன் எண்ணத்துக்கும் நீ பண்ற சேவைக்கும் அவனுக்கு , பைத்தியக்காரனுக்கு கொடுத்து வைக்கலைன்னு நினைச்சுக்கோ.." ஆறுதலளிக்கிறார்...

இருந்தாலும் அழுது முடித்ததும் புது தெம்பு பெறுகிறாள்.. தான் இனி அழக்கூடாது என்றும் முடிவெடுக்கிறாள்..
பாகம் - 12

மறுநாள் அலுவலகம் வந்த வேந்தன் காதுக்கு மதுவின் விவாகரத்து விஷயம் மூத்த வக்கீலின் மூலம் எட்டுகிறது..
அதிர்ச்சியாயிருந்தாலும், அதுபற்றி தெரியாதவர்போல் காட்டிக்கொண்டார்... அவள் மேல் கரிசனம் கூடியது... இவ்வளவு பிரச்சனைக்கு
நடுவில் அலுவலக வேலைகளையும் கருத்தாக செய்கிறாளே...


அவளுக்கு முடிந்த அளவு உறுதுணையாக இருக்க நினைத்தான்..
அடுத்த வார பயணத்தை ஒத்திப்போட கூட வேண்டாமென்கிறாள்...
வேந்தன் பயணத்தில் மதுவும் கலந்து கொள்ள, சுகமாகவே இருக்கு ...அவளுக்காக, அவளுக்கு பிடித்த எழுத்தாளர் புத்தகம் ஒன்றினை பரிசாக அளிக்கிறார்.. அவளுக்கு சந்தோஷம்.. அதை வைத்து பேசுகிறார்கள் மலை பயணத்தின்போதே...திடீரென்று..கார் நின்றது...


" அய்யா எதோ வண்டியில் பிரச்சனை..கொஞ்சநேரம் இருங்கள் .என்னவென்று பார்க்கிறேன்.."

" மொதல்லே பார்க்கக்கூடாதா .." என்று சொல்லிவிட்டு கீழிறங்கினால் அழகிய வயல் சூழ்ந்த கால்வாயோடு பசுமையான இடம்..அள்ளிச்செல்கிறது மனதை அந்த இடத்தின் ரம்மியம்...

இருவரும் காலார நடக்கின்றார்கள்.. தன்னைப்பற்றியும் அமெரிக்க வாழ்க்கை பற்றியும் மது கேட்காமலே பகிர்கிறார் வேந்தன்..

"உங்களைப்பற்றி விருப்பமிருந்தால்......"

மதுவும் தன் ஆசைக்கணவரைப்பற்றி சொல்கிறார்...முடிவில் ஒரு பெருமூச்சு...கண்களில் கலக்கம்.. சமாளிக்கிறாள்..

மெளனம்... வேந்தனுக்கு அவளை தைரியப்படுத்தவும் , சமாதானப்படுத்தவும் ஆசை.. ஆனால் எப்படி சொல்வது தனக்குத் தெரியுமென்று..?

"நீங்கள் இனி எனக்கு ஒரு நல்ல தோழி... என்ன உதவியோ என்னிடம் தயங்காமல் கேளுங்கள்.. உங்களுக்குச் செய்வது என் கடமைபோல.."

" கண்டிப்பா சார்..."

" இன்னும் சார் தானா..?.. தயவுசெய்து வேந்தன் என்றே சொல்லுங்கள் மது.."

" சரி...நீங்களும் இனி என்னை ஒருமையில் அழைக்கலாம் அப்படியென்றால்..."
"சரி மது..."


" ஏன் இன்னொரு திருமணம் பண்ணக்கூடாது..."

" நீங்களுமா... என்னவோ தோணவில்லை.. என் மனதுக்கு பிடித்த அப்படி ஒரு பெண் இதுவரை கிடைக்கவில்லை..."

" அது என்ன "அப்படி ஒர் பெண்..?. எப்படியாம்...?" கிண்டலாக மது அவர் மனதை நோட்டம்விட்டு அப்படி ஓர் பெண் தேடலாம் என்ற நோக்கில்...
"எப்படின்னா................ம்...........ம்........ம்..........உங்களைப்போல....''


" விளையாட்டு வேண்டாம் .. உண்மையா சொல்லுங்கள்.. அமெரிக்காவில் படித்தவர்... அதுபோலவா..."

" உண்மையாகத்தான் சொல்கிறேன்..நான் பெண்களிடமே குறைவாக பேசுவேன்.. ஏனோ உங்களிடம்தான் இவ்வளவு பேசியுள்ளேன்...அதனால்தான் சொல்கிறேன், உங்களைப்போல் ஒரு பெண் என்று.."

" சரி பார்க்கிறேன்.. " என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு காரில் மேற்கொண்டு பயணத்தை தொடர..

வேந்தனுக்கு சந்தோஷம் நம் விருப்பத்தை தெரிவித்துவிட்டோம் என்று...மதுவுக்கோ, அட எவ்வளவு எளிமையா தன் விருப்பத்தை சொல்கிறார்.. நல்ல பெண்ணாக பார்க்கணும் என்று மனதினுள்..

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வேந்தனும் மதுவும் மலையில் உள்ள தொழிலாளர்களுடன் அவர்களின் குடியிருப்பு தோட்டத்திலேயே கூட்டம் வைத்துள்ளனர்..


மது சாதாரணமாக ஒரு பாறையின் மீது அமர்ந்து அவர்களின் நலன் விசாரிப்பதும், அவர்களோடு வித்தியாசமில்லாது பழகுவதும், அவள் மீது மதிப்பும் , மரியாதையும் கூடுகிறது...

" ஏன் மது, இங்குள்ளவர்களுக்கு விளையாடுவதற்கு நல்ல முறையில் மைதானம் ஒன்று அமைத்துத் தரணும்." ஆச்சர்யத்துடன் மது..

" செய்யலாமே, வேந்தன்.. எனக்குத் தோணவில்லை பாருங்கள்..." சந்தோஷப்படுகிறாள், அவனின் முழுமையான பங்கேற்பு குறித்து...

ரகுவுடன் ஒரே வீட்டில் எதிரிகள் போல் பேசாமல் வாழும் நரகத்தை மறந்தாள் சிறிது.. தொழிலாளர்களுடன் உணவு உண்டபின் ரம்மியமான எஸ்டேட்டை சுற்றிப்பார்க்கின்றனர் இருவரும்..

அதிக குளிர்.. மதுவோ சாதாரண காட்டன் புடவையில்.. தன் மேல்கோட்டை தருகிறான் வேந்தன்..

" நீங்கள் குளிர் தாங்கமாட்டீர்கள்.. தயவுசெய்து..." அவன் கரிசனம் பெரியவர் போன்றே உள்ளது.. என்ன அவர் இவளை திட்டுவார் சம்மதிக்க வைக்க..பிடிவாதமும் அவருக்கு..

அழகாக மறுக்கிறாள்.., தனக்கு இந்த குளிர் பிடிக்குமென்று....சிரித்துகொள்கிறார் அவள் சமாளிப்பதை ..
இரவு தான் கொடுமையாக உள்ளது . விசாலம் அம்மா, குழந்தைகளுடன் பேசியதும் , தூங்கலாம் என்றால் நினைவுகள் வாட்டுது..

ஏன் ரகு இப்படி என்னிடம் பேசாமல்....??? நடந்துகொண்டே இருந்தவள் வெளியே வேந்தன் நடப்பதைப் பார்க்கிறாள்..

"என்ன தூங்கவில்லையா?... " " இல்லை.. தூக்கம் வரலை.. உங்களுக்கு?" " எனக்கும்தான்... "
" சரி பேசிக்கொண்டிருக்கலாமே... "அப்படியே மேஜை மேல் உற்சாக பானம் இருப்பதை கண்டு முகம் மாறுவதை பார்க்கிறார்..

" இது அமெரிக்கா இல்லையே. தவிர்க்கலாமே..உடல்நலத்துக்கு நல்லதில்லையே..."

" உங்களுக்கு பிடிக்கலைன்னா வேண்டாம்" என்று எடுத்துச்செல்ல சொல்கிறார், வேலையாளிடம்..அவளின் அக்கறை குறித்து மகிழ்கிறார்..

தன்னை யாரும் இதுவரை சொன்னதில்லை... மதுவுக்கோ அவர்மேல் மரியாதை கூடுகிறது, பானத்தை தான் சொன்னதும் தவிர்த்ததால்..

இருவரும் நேரம்போவது தெரியாமல் பேசிக்கொண்டிருக்க,,பின் தூங்க சென்றனர். தூங்கும்போது பழைய நினைவுகளில் மீண்டும் ரகுவுடன் முதன்முறையாக திருமணம் முடிந்து தேனிலவுக்கு வந்தது ,ஞாபகம் வந்து தூக்கத்தை தொலைத்தாள்.... அதேபோல் வேந்தனும் தூங்க மனமின்றி...........

*************************************************************************************************தொடரும்...

பாகம் - 11

நிஷா வேதனை தாங்கமுடியாமல், ரகுவின் தோழன், சுந்தருக்கும் டாக்டர் சங்கருக்கும், சொல்லிவிட்டாள்...அனைவருக்கும் அதிர்ச்சி.. ஆனால் இது குடும்ப விஷயம் ..
அவர்கள் விரும்பினாலன்றி நாம் தலையிடவேண்டாம் என்றும், சுந்தர் மட்டும் நயமாக பேசி பிரச்சனை என்ன என்று அறிவதாக ஏற்பாடு..மது இது அறிந்து முதலில் வருத்தப்பட்டாலும், பின்னர் ஒத்துக்கொண்டாள்..

ஆனால் அவன் போக்கில் விடுங்கள் சில நாள்கள் , எனக்காக மறந்தும் சப்போர்ட்டாக பேச வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டாள்.

கீதாம்மாவுக்கு கோபமும் வருத்தமும்.. , தன்னிடம் கூட சொல்லாமல் நம் பெண் மறைத்துவிட்டாளே.. ஏன் கணவன் சொன்னால் வேலையை விட வேண்டியதுதானே?.. ஆனால் மதுவின் தந்தைக்கோ, தன் மகள் எது செய்தாலும் சரியாக இருக்கும், அவளிடம் யாரும் எதுவும் அதுபற்றி பேசவோ , கேட்கவோ கூடாது என தடைபோட்டார்..

ஏனெனில் அவன் கோபம் இவளுக்குத்தானே தெரியும்...இப்படித்தான் பரமு விசயத்தில்..,

* * * * * * * * *

"என்ன தைரியம் இருந்தால் ஒரு வேலையில்லாதவனை , அடுத்த மதத்தவனை திருமணம் செய்வேன் என்று சொல்லுவாய்..?"

" அண்ணா அவரைத் தவிர யாரையும் என்னால் நினைத்துகூட பார்க்க முடியாது..நான்கு வருட காதல். நல்ல படிப்பு..நல்ல வேலை கிடடக்கும் சீக்கிரம். நீயும்தானே. அண்ணியை....?"

" அப்படியென்ன பெரிய காதல்.. நான் காதலித்தேன் என்றால் தகுதியோடு, முறைப்படி , எல்லோருடைய விருப்பத்தோடும்., பெருமைபடும்படியாக..."

" பரமுவுக்கும் நாமே நடத்திவைக்கலாமே.. சின்ன பிள்ளை தெரியாமல் நடந்துவிட்டது...இப்ப வேறு வழியில்லையே.." கெஞ்சுகிறாள் மது..

" நீ கொஞ்சம் பேசாமல் இருக்கிறாயா?. இது என் குடும்ப விஷயம்...நீதான் இதுக்கு முழு ஆதரவா..?.என் தங்கை நல்லா இருக்கணும்னு நினைக்கிறது தப்பா...?. மது இனி இதில் யார் தலையிட்டாலும் எனக்கும் அவர்களுக்கும் எந்த உறவுமில்லை..மது ,நீ உள்ளே போ"மது வெறுப்புடன் உள்ளே செல்கிறாள்..

" பரமு, நான் பார்க்கும் மாப்பிள்ளையை தான் நீ கல்யாணம் செய்யவேண்டும்.. மீறினால் எனக்கும் உனக்கும் இனி உறவில்லை.."

" என் மகன் சொல்வதே நானும் .. ஏன் இந்த தலைக்குனிவு எனக்கு... நல்லாதானே வளர்த்தோம் உன்னை..?.." அப்பா.

விசாலம் அம்மா, பரமுவும் அழ, தன் அறைக்கு , ரகு சென்றபின் அழைத்துச்செல்கிறாள்... பரமுவோ பிடிவாதமாக இருக்கிறாள்,செத்துவிடுவேனென்று.. அவளை நன்றாகத் திட்டிவிட்டு, சரி பைத்தியமாக ஏதும் செய்துவிடாதே, நான் முடித்துவைக்கிறேன் என்கிறாள்..

அதேபோல் அந்த வாரமே விசாலம் அம்மா, பரமுவை அழைத்துக்கொண்டு ,கோயிலில் வைத்து திருமணத்தையும் முடித்துவிட்டுவீட்டுக்கு திரும்புகிறாள், புயலை எதிர்பார்த்து...

" அங்கேயே நில்..உள்ள ஒரு அடி எடுத்து வைக்கக்கூடாது... எவ்வளவு சொல்லியும் என் பேச்சை மீறி..."

" சரி.. உள்ளே வந்து என்ன வேணாலும் பண்ணுங்க... வெளியில் நான்கு பேர் பார்ப்பாங்க..." அவள் சொல்லிக்கொண்டே உள்ளே செல்கிறாள், அம்மாவின் கையைப் பிடித்தபடி...அம்மா சமையலைறையில் புகுந்து கொண்டார்கள்..

" இப்ப என்ன அவள் செத்தாக்கூட பரவாயில்லை, ஆனால் உங்க மானம் தான் பெரிது இல்லையா மாமா?."

" அப்படித்தான் வெச்சுக்கோ.. எங்களைப்பொறுத்த வரையில் அவள் செத்துவிட்டாள்..... இனி நீயும் அவளுக்கு பரிந்துகிட்டு இந்த வீட்டில் இருக்க முடியாது.."அவளுக்கு உள்ளுக்குள் சிரிப்பாய் வந்தாலும், வெளியே காண்பிக்காமல்,

" அதுக்கெல்லாம் நானும் தயாராத்தான் இருக்கேன்... தங்கை , மகள் செத்தாலும் பரவாயில்லைன்னு நினைக்கிற மனுஷங்களோட இனி நான் இருக்க முடியாதுப்பா..." துணி மணிகளை எடுத்து வேகமாக பெட்டிக்குள் திணிக்கிறாள்...

"சரி. சரி.. நீ உள்ளே போம்மா.. அப்புறமா பேசிக்கொள்ளலாம்..." மாமா பயப்படுகிறார்...விசாலம் அம்மாவுக்கு இது நாடகம்தான் என்று தெரிந்ததால் அவர்,

" சரிம்மா, போகுமுன் ஒரு வாய் சாப்பிட்டு போகலாம்.. இரு இப்பவே சமைக்கிறேன் "என்கிறார்..

மது குழந்தையை கூப்பிட்டு, " கிளம்புடா, தாத்தா வீட்டுக்கு போகலாம்...இனி அங்குதான் நீ படிக்கப்போற.."சந்தடி சாக்கில் குழந்தையையும் இணைக்க,

" என் பெண்ணை எங்கே கூட்டிப்போற..?. அவள் என்கூடதான் இருப்பா..."பெண்மேல் அதிகம் பிரியம் ரகுவுக்கு..

" வேண்டாம்மா .. சொன்னா கேளு... ரகு நீ இப்போ உள்ளே போ.. " கொஞ்சம் அதட்டலாய் மாமா..இருபது நிமிடம் கழித்து பெட்டியுடன் மது வெளிவர, எல்லோரும் அதிர்ச்சியில்..
" எங்க போற..?"
"......" அழுகிற மாதிரி மது நல்லாவே நடிக்க.."
உள்ளே ..போ.."குழந்தை ஒரு கையில் , பெட்டி மறு கையில் எடுக்க,

" உள்ளே போ என்று சொன்னேன்..." பெட்டி எடுத்து அவளையும் இழுத்துக்கொண்டு உள்ளே சென்று சமாதானப்படுத்துகின்றான்...
" எனக்கு ஏதோ கோவம்.. அதுக்காக உடனே போய்விடுவாயா?...நீ பண்ணின காரியம் இருக்கே... சரி சரி... மறுபடியும் வேதாளம் ஏறிவிடும்..எல்லாரும் தப்பு பண்ணிட்டு என்னை தண்டியுங்க....ஆனா இனி பரமு பற்றி யாரும் பேசக்கூடாது .." சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டான்...

உள்ளே வந்த விசாலம் அம்மா, கதவை அடைத்துவிட்டு, மதுவை கட்டிப்பிடித்து அழுதார்... மது சிரிக்கிறாள்..

" அம்மா என் நடிப்பு எப்படி..இனி மாப்பிள்ளைக்கு நல்ல வேலை கிடைக்கும்வரை ரகுவுக்குத் தெரியாமல் நாம் உதவணும்..?"
" என்னமோ மா. ரகுவை, மாமாவை உன்னால்தான் சமாளிக்க முடியும்...நான் செய்த புண்ணியம் நீ கிடைத்தது.."

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆனால் 10 வருடம் முன் உள்ள கோபம் வேறு. இப்போது வேறு .. அப்போது ரகு மதுவின் பின்னால் பூனைகுட்டி போல , எப்போதும் அவளுடன்.. ஆனால் இப்போது பிரிவு சகஜமான ஒன்று.. இப்போது பேசுவதே அபூர்வம்..
*************************************************************************தொடரும்...******************************************************

Saturday, February 23, 2008


பாகம் - 10

மறுபடியும் அலுவலகம் வந்தவளை வேந்தன் தொலைபேசியில்..
" இன்று முக்கிய ஆலோசனை.உள்ளது... எங்கள் வீட்டில் இரவு விருந்தில் கலந்து கொள்ள முடியுமா?"
சரி என்கிறாள்.. வேறு வழியில்லை..


மாலை சென்றதும் பெறியவரை சந்திக்க அவரது அறைக்கு அழைத்துச்செல்லப்படுகிறாள்.
" இப்பதான் மா உன்மேல என் மகனுக்கு நம்பிக்கை வந்திருக்கு. எனக்கு ரொம்ப சந்தோஷம்..
" அவன கூட்டிட்டு நம்ம எஸ்டேட் எல்லாம் சுத்தி காண்பித்து விவரங்கள் தரணும் மா. அவன் ரொம்ப
நல்ல மனதுக்காரன் மா..என் மத்த பையன்கள் போல் அவனுக்கு சுயநலமில்லாதவன்.. "


" சரி ஐயா. "
" அம்மா மது அப்படியே அவனுக்கு இன்னொரு திருமணம் செய்ய நீதான் அவன் மனதை மாற்றணும்."
" ஹிஹி.. சரி அய்யா.."
அதற்குள் வேந்தனும் வந்து கலந்து கொள்கிறார்...எல்லா விஷயத்தையும் கலந்தாலோசிக்கின்றனர்.
சாப்பிட அழைப்பு வந்ததும், பெரியவர் எழும்ப முயல, மது கை கொடுத்து தூக்குகின்றாள்..


அவள் கை பிடித்தே நடந்தும் வருகிறார்.. வேந்தனுக்கு ஆச்சர்யம்.. யாரையும் அனுமதிக்காத அப்பா,
மதுவுக்கு மட்டும் ...அவள் அலட்டிக்கொள்ளாமல் அக்கறை கொள்ளும் விதமோ இன்னும் அருமையாயுள்ளது..
வேலை ஆட்கள் பலர் இருந்தாலும் மதுவே பார்த்து பார்த்து பரிமாறுகிறாள், தந்தைக்கு...
மறுபடி தனக்கும் இப்படி ஒருத்தி அமைந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று நினைக்கிறார்..
அப்பாவிடம் உரிமையோடு நடந்தாலும் தன்னிடம் மிக அளந்தே பேசுகிறாள்...


நாம் அவளிடம் கொஞ்சம்
கடுமையாக நடந்துகொண்டோமோ என்று நினைத்து , இனி அவளிடம் நல்ல நட்பு பாராட்ட
வேண்டும் என்று நினைக்கிறார்.... சசல அலுவலக கோப்புகளை பார்க்க மாடிக்கு அழைத்துச்செல்கிறான் வேந்தன்..

அங்கு அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் கோப்பைகளை , புத்தகங்களை, பெயிண்டிங்குகளை அதிசயத்துடன் பார்க்கிறாள்..

" இவையெல்லாம்.."

" ஆமா என் இள்மைக்காலத்தில் எனக்கு கிடைத்தவை.. புத்தகங்கள் என் தோழன்... தோட்டக்கலை, பெயிண்டிங் , இப்படி பல பொழுதுபோக்கு.."

புத்தகம் , எழுத்தாளர் பற்றி பேசுகிறார்கள்.. சந்தோஷமாக சிறு குழந்தைபோல புகைப்படங்கள் , எல்லாவற்றையும் காண்பிக்கிறார்.. இருவரும் கொஞ்ச நேரம் தத்தம் கவலை மறந்து பேசுகின்றனர்.


வேந்தனுக்கு ஆச்சர்யம்.. இதுவரை தனிமை விரும்பியாயிருந்த அவர் வாழ்க்கையில் இரண்டாவது முறையாக ஒரு பெண் தன் மனதை அலைக்களிப்பதை தவிர்க்க முடியாமல் தவிக்கிறார்.

மதுவுக்கு வேந்தன் நட்புமுறை பாராட்டுவது அலுவலகத்து பொறுப்புக்கு எளிதாகப்படுகிறது..மேலும் அய்யா சொன்னதுபோல் திருமணம் பற்றி அவரிடம் பேச ஏதுவாயிருக்கும் என நினைக்கிறாள்..

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

விருந்து முடிந்து வீட்டுக்குப்போகும் போது இன்று இரவு எப்படி போகுமோ , விசாலம் அம்மாவுக்கு தெரியுமோ, என்னாகுமோ என்று கலங்குகின்றாள்..அப்படியேதுமில்லை..

படுக்கும்போது மறுபடியும் ரகு ,

" ஏதாவது சொல்லணுமா.."

"..ம்.."

"என்ன.."

" யாருக்கும் இன்னும் கொஞ்ச நாள் தெரியவேண்டாம்.. அவர்கள் தாங்க மாட்டார்கள்.."

"..ம்.." அவன் சென்றுவிட மனசு கனத்தது..அலுப்பு அதிகமானதால் தலைவலியுடன் தூங்கியும் விட்டாள்..

--------------------------------------------------------------------

மறுநாள் சனிக்கிழமை.. விசாலம் அம்மா மகள் பரமுவை பார்க்க செல்வார்கள்.. சிலசமயம் மதுவும் கூட.
மதுவைக்கேட்கலாம் என்று சென்றவருக்கு நல்ல காய்ச்சலில் மது முனகிக்கொண்டிருப்பது தெரிகிறது...

" என்னம்மா ..இது.. எப்போதிருந்து ..எனக்குத்தெரியாதே.." பதருகிறார்..

மாத்திரை கொடுத்து வருடுகிறார்.. ரகு வருகிறான் ..

" அம்மா ., கிளம்புறேன்.."

" மதுவுக்கு காய்ச்சல்னு என்கிட்ட சொல்லக்கூடாதப்பா?..."

முழிக்கிறான் ரகு..

" இல்லம்மா , அவருக்கும் தெரியாது.. நான் சொல்லல..."

" வித்தியாசமாக உணர்கிறார்.. ரகு எப்பவும் பதருவானே..

" என்னமோ மா , நல்ல பொண்ணு, இப்படி காய்ச்சல் அடிக்குது...வேலை வேலைன்னு..."

"அதேதான் நானும் சொல்றேன் வேலைதான் அவளுக்கு முக்கியம்..மனுஷாள் இல்ல.."

" சரி இப்போ அவள குழப்பிட்டு இருக்காம டாக்டர்கிட்ட கூட்டிட்டு போ.."

" இல்லம்மா வேண்டாம். சரியாயிடும் ஓய்வு எடுத்தா... நீங்க கிளம்புங்க கோவிலுக்கு.."

அம்மா சென்றதும் , " ஏதவது உதவி வேணுமா "

" வேண்டாம் .. நன்றி.."

" இந்த திமிருக்கொண்ணும் குறைவில்லை.." எரிச்சலாய் போகிறான்..

புரியவில்லை , இவளுக்கு, வேறு என்ன சொல்லணும்னு எதிர்பார்க்கிறான்...

ஆனாலும் அவன் பேசிய , திட்டிய 2 வார்த்தை ஆறுதலாயிருந்தது.. என் ரகு கோபப்பட்டாலும் என்னிடம்தான் இருப்பான் என்ற தெம்பு வந்தது... அது பொய் என்று தெரியாமல்..

Friday, February 22, 2008

லேசா லேசா பாகம் 9


இதோ கதைச் சுருக்கம்!

ரகு, மது, வேந்தன் என மூவர்.ரகு மதுவைக் காதலித்து மனைவியாக்கி, இப்போது விவாக ரத்து கோரும் நிலையில்! லண்டனில் இருந்து திரும்பிய, வேந்தன் கம்பெனியில் பணி புரியும் மதுவுக்கு இது அதிர்ச்சி அளிக்கிறது.வெள்ளைக்காரப் பெண்ணை மணந்து முறிவு பெற்று, இப்போது பெண்களை வெறுக்கும் வேந்தன்மது, ரகு இவர்களது காதல் நினைவுகள் இந்த பதிவுகளில்!தனக்குக் கீழே பனிபுரியும் மதுவைத் தான் மணக்க விரும்புவதாக ரகு சொல்ல, குழம்பிய நிலையில் இருக்கும் மதுவைப் பெண் பார்க்க ரகு வருகிறான், மதுவின் தந்தை, அவர்கள் குடும்ப டாக்டர் துணையுடன்! .ரகுவின் அம்மா விசாலம், மதுவையே பெண்ணாகக் கருதும் ஒருவர்,மதுவை திருமணத்துக்கு ரகுவிடம் பேசி மனதை மாற்ற அவன் கைபற்ற அவனோ விலக, பழைய ஞாபகம் சுவைக்கிறது.. அவன் கரம் பற்றிய முதல் பொழுதுகள்..மன்மத காதலுக்கு போட்ட விதைகள்... முன் 'ஜொள்ளிட்ட' முனீஸ் இவர்களும் ஒரு ஓரத்தில்... இக்கதையில்! இனி கதையை மேலே படியுங்கள்!:))))))))))).

பாகம் - 9

வேந்தன் மதுவைப்பற்றிய குழப்பத்திலேயே இருந்தான்... அவளை அப்பா சொல்வதுபோல்
உண்மையாக புரிந்துகொள்ளணும்.... பார்க்கலாம் திருப்பூர் ஆலை விஷயத்தில் என்ன சொல்கிறாள்
என்று... ஏற்கனவே அதை மூடிவிட்டு வேறு நல்ல தொழில் ஆரம்பிக்க புராஜக்ட் எல்லாம் ரெடி..
அப்பாவிடமும் விளக்கம் கொடுத்து சம்மதமும் அனேகமாக பெற்றாலும் , இறுதி கூட்டம் வரும் புதனன்று
கூட்டம் ஆரம்பித்தது.. எல்லாரும் பேசி முடித்ததும் வழக்கம்போல் பெரியவர்


" உன் கருத்து என்னம்மா..?.."
" எனக்கு முழு சம்மதம் , அந்த தொழிற்சாலையை மூடுவதற்கு அய்யா..."
வேந்தனுக்கு அதிர்ச்சி... அவளை மடக்கிவிடலாம் என்று எண்ணியவருக்கு ..
" அந்த பகுதி மக்கள் இந்த களிவு நீராலும், காற்றும் மாசு பட்டுள்ளது.. மூடுவேதே நல்லது..."
வேந்தனுக்கு ஒண்ணும் புரியவில்லை,, அவள் சிந்தனையே வேறாக இருக்கிறதே..



முதல் முறையாக அவள் மேல் மரியாதை வருகிறது...அவளும் அப்பாவும் சாதாரணமாக சிரித்துக்கொண்டு
வெளியே செல்கிறார்கள்.... அப்பாவிடமும் அவளைப்பற்றி சொன்னதும் மத்த எஸ்டேட்களையும் அவளுடன் சேர்ந்து
பார்த்து அவளிடமிருந்து விவரம் கற்றுகொள்ளுமாறு அறிவுறுத்துகிறார்.
அடுத்த வாரமே அதற்கான ஏற்பாடுகளை செய்கிறார் வேந்தன்...மனதுக்குள் மது நினைப்பு..



--------------------------------------------------------------------------------------------------------------------------
அலுவலகத்துக்கு வந்த பின் எப்போதும் வீடு பற்றிய நினைப்பே இருக்காது மதுவுக்கு.. அன்று
மண்டையை குழப்புகிறது ரகுவின் நேற்றைய செயல்...இருந்தாலும் நாம் தாழ்ந்து போகலாம்,..
என் மேலும் நிறய தப்பு இருக்குதே.. ஒரு மனைவியின் கடமையை நான் முழுதாக செய்யவில்லையே..



அவன் கோபம் நியாமானதே.. பேசினால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைக்கையில் தொலைபேசி அழைக்கிறது..
" நான் ரகு பேசுரேன்.."
" சொல்லுங்கப்பா.." சந்தோஷமாக...
" இன்னிக்கு சாயங்காலம் வக்கீல் அலுவலகத்தில் 3 மணிக்கு சந்திக்கணும்..."
" எதுக்கு ரகு.."


" நம்ம பிரிவு பற்றி முடிவெடுக்க..."
" ........."
" என்ன வர முடியுமா , இல்ல.."
" ரகு.. நான் சொல்ரத ..."


" ஜஸ்ட் டெல் மி, முடியுமா, முடியாதா..."
" சரி.ப்...பா.."


பிரமை பிடித்தவள் போல் மது தலையில் கைவத்து அப்படியே மேஜையில் தலை சாய்த்தாள்..

" மே ஐ கம் இன்.." வேந்தன்...

" சார்.. நீங்க.. ..சொன்னீங்கன்னா நானே வந்திருப்பேனே..."
" நன்றி. இன்றைய முடிவுக்கு.. அடுத்த வாரம் எஸ்டேட் போக நேரமுண்டா உங்களுக்கு..."


" போகலாமே..."

" நன்றி வருகிறேன்..."

எல்லாவற்றையும் மூடிவிட்டு, யோசிக்கிறாள்... ரகு என் மேல ஏன் இவ்வளவு கோவம்?..

சரி என்னை விவாகரத்து பண்ணிவிட்டு என்ன பண்ணப்போரீங்க?.. மறுமணமா?... எப்படி முடியும் ரகு....

என்னை உங்கள் மனதிலிருந்து நீக்குவது அவ்வளவு எளிதா...?. இல்லை நடிக்கிறீர்களா?..
ஏன் இவ்வளவு அவசரம், அனக்கேதும் அவகாசம் குடுக்காமல், என்னிடம் பேச விரும்பாமல்..


என்னை தண்டிப்பது மட்டுமே உங்கள் நோக்கமாகத் தெரியுது.. கண்டிப்பா இன்னொரு திருமணத்துக்கு
நீங்கள் தயாரில்லை என்று எனக்குத் தெரியாதா?. சிரிப்புதான் வருகிறது.. ஆனாலும் நான் என்ன செய்தாலும்
உங்கள் வேகம் அதிகரிக்குமே தவிர குறையாது...


முள் மேல் விழுந்த சேலை, மெதுவாகத்தான்
எடுக்கணும்.. யாருக்கும் காயமின்றி.. ஆனால் நான் மிகவும் தளர்வாய் ஆகிவிடுகிறேனே, உம்
ஆதரவின்றி.. என்னைத்தவிர்ப்பது தாங்க முடியாத கொடுமையாக உள்ளதே.. யாரிடமும் பகிர கூட முடியாதே..


எல்லாரும் உன்னைத்திட்டி உன் கோவந்தான் அதிகரிக்கும் என்மேல்.. மனதுக்குள்ளேயே வைப்பது அதனினும் கொடுமை..
" நிஷா, நான் சொல்லப்போர விஷயத்தை கேட்டுக்கோ, ஆனா யாரிடமும் , முக்கியமா, எங்க வீட்டுக்கும்,
அவர் வீட்டுக்கும் தெரியக்கூடாது...மனச்சுமை இறக்கத்தான் உன்னிடம்...நீ உடனே பயப்படாதே .. சரியா?.."


" அய்யோ என்ன விஷயம் னு சொல்லு சீக்கிரம்... இப்பவே பயமாயிருக்கு.."
" ரகு என்னை பிரிய விரும்புகிறார்..."
" பைத்தியாமா என்ன அவருக்கு.. நான் பேசுகிறேன் இப்பவே...விளையாடுவாராயிருக்கும்..."


" சொன்னேன்ன்ல, அவசரப்படாதே.... பார்க்கலாம் கடவுள் சித்தம் என்னன்னு..."
" எவ்வளவு பெரிய விஷயத்தை சொல்லிட்டு..." அழுகிறாள்..நிஷா.


" நீ ஏன் அழுகிறாய்.. ச்ச். நீ எனக்கு தைரியம் சொல்லுவாய் என்று நினைத்தால்... மொதல்ல
அழுரதை நிப்பாட்டு... எனக்கும் அழுகைவருது.........."
"........."
"..........."
" சரி பெரியவ என்ன பண்ணுகினறாள்..." பேச்சை மாற்றிவிட்டு, மது சாப்பிட பிடிக்காமல் காஃபி
மட்டும் குடித்துவிட்டு அலுவலக வேலைகளில் மூழ்குகிறாள்..
--------------------------------------------------------------------------------------------------------------------------


மாலை 3..00 மணி..

ரகுவும் மதுவும், ஒரே அறையில் காத்திருக்கிறார்கள்...ரகுவாகப்பேசட்டும்.. என்று மது.. அவளைப்
பார்த்தாலே பேசவேண்டிவரும் என்று செய்திதாளில் ரகு...


என்ன ஒரு அசிங்கமான சூழல்.... வக்கீல் அழைத்து விசாரித்து 6 மாதமாவது இருவரும் தனியாக
இருக்குமாறு சொல்கிறார்... இருவரும் விரும்பிதானே பிரிகிறீர்கள் என்று கேட்கிறார்..
இல்லை என்று சொல்லகூட மதுவுக்கு முடியவில்லை.. ரகு அங்கேயே கத்த ஆரம்பித்துவிடுவான்..


கோவத்தின் உச்சியிலிருக்கான்... இப்போதைக்கு அவன் வழி சென்று நிதானமாக செயல்படுவோம்
என்று பிரம்மையில் எல்லாவற்றுக்கும் தலையாட்டுகிறாள்... அவளுக்கு கவலையெல்லாம் எப்படி விசாலம் அம்மாவிடமும்
பிள்ளைகளிடமும் மறைப்பது என்பதுதான்..


இப்போது முதல்முறையாக கோவம் வருகிறது அவளுக்கு
அவளின் இயலாமை குறித்து...எல்லா பேப்பரிலும் வெறியோடு கண்ணீரோடு உஅதட்டைக்கடித்துக்கொண்டு
கையெழுத்து போட்டுவிட்டு ரகுவை திரும்பி கூட பார்க்காமல் வெளியேற,
" மது .. .."


"...."

" மது... இப்ப பேசலாம்....."

" இனி என்ன பேச ரகு...சந்தோஷம்தானே...." கண்ணீருடன் சிரித்துக்கொண்டே கேட்டுவிட்டு
காரில் ஏறி செல்கிறாள்....


காரில் குலுங்கி குலுங்கி முதல் முறையாக அழுகிறாள்.......

---------------------------------------------------------------------------------------------

மறுபடியும் அலுவலகம் வந்தவளை வேந்தன் தொலைபேசியில்..

" இன்று முக்கிய ஆலோசனை.உள்ளது... எங்கள் வீட்டில் இரவு விருந்தில் கலந்து கொள்ள முடியுமா?"

---------------------------------------------------------------------------தொடரும்........

Thursday, February 21, 2008

லேசா லேசா நீயில்லாமல் பாகம் - 8
================================


வேந்தன் அப்பாவின் அழைப்பின் பேரில் அவரைக் காணச் செல்கிறான்..


" என்னப்பா உன் மலைப்பயணமெல்லாம் சிறப்புதானே..?"

" ஆமாப்பா. உங்கள் உடல்நலம்...?"

" எனக்கென்னப்பா.. எப்பவும் இளமைதான் மனதில்.. உடம்புக்கென்ன . எனக்கு கவலையெல்லாம் உன்னைப்பற்றிதான்..

நீ ஏன் இன்னொரு திருமணம் செய்து குழந்தை, குட்டின்னு, நல்லமுறையில் இருக்கலாமே...உன் தனிமை எனக்கு
பயமளிக்கிறதே..."


" ஹாஹாஹா. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.. எனக்கு நல்ல பொழுதுபோக்குகள், புத்தகங்கள், என்று நிறய உள்ளதே.

இன்னொரு திருமணம் பற்றி பேச்சுக்கே இடமில்லை அப்பா.. அது குறித்து நீங்கள் வருந்தாதீர்கள், தயவுசெய்து அது பற்றி
பேசவும் வேண்டாமே....என்னுடைய வாழ்க்கை இனி இந்த தொழில் முன்னேற்றத்தில்தான்...திருப்தியும் கூட...
ஆனால் என்ன என் அலுவல் இந்த மதுகோட இருப்பது மட்டுமே கொஞ்சம் சிக்கலாய் உள்ளது"சிரித்துக்கொண்டே கூற,


" இல்லை இல்லை, உனக்கு அவளைப்பற்றி அதிகம் தெரியாது... அவளைவிட புத்திசாலிகளை பார்த்திருப்பாய்.. மறுக்கவில்லை..
ஆனால் அவளுடைய மனிதத்தன்மையுள்ள செயல்பாடுகளும், கடின உழைப்பும், அனுசரித்துப்போகும் குணமும், வித்தியாசமானவை .."


" நீ வேணா பாரேன், கொஞ்ச நாளில் உனக்கும் புரியும்..."

" ..ம்...சரி..."என்று மட்டும் தலையசைத்தான்..." அப்பா வயதானவர் .. திருத்த முடியாது என்று நினைத்துக்கொண்டு..

இருவருமே கொஞ்சம் கனத்த மனதுடன் விடைபெறுகிறார்கள்..
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
ரகுவின் முடிவு விளையாட்டாகவே இருக்கும் , நாம் ஒன்றும் பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று தன்னையே சமாதானப்படுத்திக்கொண்டாள்.
என்ன இருந்தாலும் என் கணவ்ர் தானே, எத்தனை எத்தனை பிரச்சனைகளை கடந்து வந்துள்ளோம் இருவரும்... எத்தனை முறை ஆறுதலாய்
தந்தையாய் , அண்ணனாய், நல்ல தோழனாய் துணை இருந்தான் ரகு... தன் பிரசவத்தின் போது ஒரு தாய்க்கும் மேலாக பாசம் காட்டி பார்த்தாரே..
என்ன ரகுவுக்கு குழந்தை போல் கோவம் வரும் அடிக்கடி.. அதுவும் பின் சரியாகிவிடும்...சகஜம் தானே...


இன்று நாமே சென்று வலிய
அவனுடைய பிரச்சனை பற்றி கேட்க வேண்டும்... அலுவலகத்தில் மலையளவு பிரச்சனை வந்த போது சமாளிக்கவில்லையா?..
ரகுவின் தங்கை, திருமண பிரச்சனை எவ்வளவு பெரியது.. நடத்தினோமே...


தனக்குத்தானே தைரியப்படுத்திக்கொண்டு, கடவுளிடம் வேண்டிக்கொண்டு
அன்று இரவு படுக்குமுன் பேசிட தயாரானாள்..


ரகு கணினியில் மும்மரமாயிருந்தான்...

எப்படி அணுகுவது , ஆரம்பிப்பது என்று தயக்கம்.. பொறுத்து பொறுத்து அறைமணிநேரமாகுது... இதயம் வேகமாகத்துடிக்குது...
தன்மேல் நம்பிக்கை குறையுது.. பயம் வருது..


இறுதியில் குழந்தைபோல் ஆகுது மனம்... மெதுவாக அவனருகில் சென்று அவன் கையை மட்டும் பிடிக்க அவளைப்பாராமலே கையை மட்டும் தருகிறான்..

முதல் தோல்வியாய் படுகிறது அவளுக்கு...

10 நிமிடத்துக்குப்பின் அவன் கையை தானாகவே விடுவித்துக்கொள்கிறான்...
இரண்டாவது தோல்வி..


இருந்தாலும் மனம் தளராமல்,

" ரகு நாம் இப்போது பேசலாமா , சிறிது நேரம்.."

".." பதிலில்லை..

" ரகு..."

" ம்.."

" எனக்காக கொஞ்ச நேரம்..."

" எனக்கு நேரமில்லை... என்னைத்தொந்தரவு செய்யாதே தயவுசெய்து...."
கடினமாக...வருகிறது...

ஏமாற்றத்தில் அதிர்ந்துதான் போகிறாள்....என்னுடைய உரிமைகள் இழக்கின்றேனே ...சுயபச்சாதபம் வருமுன் தூங்கிவிடலாம்
என்றெண்ணி கீதையில் இரண்டு வரி வாசித்துவிட்டு படுக்கச்செல்கிறாள்...இதே கைகள் முதன்முதலில் பற்றியபோது..


---------------------------------------------------------------------------------------------------------------------------------
ரகு நிச்சயம் முடிந்ததும் கீதாம்மாவிடம் மதுவைப்பற்றி மேலும் தெரிந்துகொண்டு, அவள் மேலே என்ன செய்யவேண்டும் என்று
பேசிவிட்டு, தினமும் சாயங்காலம் தான் கொண்டுவந்துவிடுவதற்கு சம்மதம் பெறுகிறான்...


அடுத்த நாள் அலுவலகத்தில் இருவரும் சந்திக்கும் போது இருவருக்குமே பேச வரவில்லை... முதல் நாளே ஒருவழியாக சமாதனாமாகிவிட்டாள்
மது.. குறை என்று சொல்ல ஒன்றுமேயில்லை.. எல்லோருக்கும் சந்தோஷம்..


தன் ஒருத்தியின் பிடிவாதத்தை விட்டுக்கொடுப்பதில் தவறில்லை..
டாக்டரிடம் மட்டும் நேரம் கிடைத்தால் சண்டைபிடிக்கணும் என்று சிரித்துக்கொண்டாள்..


ரகுவிடம் தொலைபேசியில் தயவுசெய்து அலுவலகத்தில் யாருக்கும் சீக்கிரம் தெரியவேண்டாம் என்று கேட்டுக்கொண்டாள்..

"அப்படின்னா நீ முனீஸ் கிட்ட பேசாதே " என்று கண்டிஷன் போடுகிறான் ரகு... சிரித்துக்கொண்டார்கள் இருவரும்...

சாயங்காலம் மிக மகிழ்ச்சியாக அவளை அழைத்துக்கொண்டு செல்லும்போதும் மெளனமே நிலவ...எப்படி ஆரம்பிக்க,

என்ன பேச .. தெரியவில்லை இருவருக்கும்... வெட்கம் ..

" காஃபி ஷாப் போகலாமா..?.."

" வேண்டாம் சார்.. அம்மா தேடுவாங்க..."

" சாரா..?.. என்ன இது.. ரகுன்னு சொல்லு.."

" எனக்கு வராது.."

" வரணும்.." அழுத்தமாக...

" வேண்டாம் .. சார்.. அப்புரம் சொல்ரேனே.."

" நொ. இப்ப சொல்லணும்.."

" சொ.. ல்......லு . கால் மி ரகு.."

" அப்போ நான் இறங்கி போயிடுவேன்.."

" அப்பா . இதுக்கொண்ணும் குறைவில்லை.."

" ஒகே. ஒகே.. . ஆனா இனி ரகுன்னு தான் கூப்பிடணும் சரியா.."

தலையாட்டிவைக்கிறாள்..அதற்குள் அவள் வீடு வந்ததும்.. கை நீட்டுகிறான் ரகு..

பதரித்தான் போகிறாள்..அப்படியே இருக்கையில் சாய்கிறாள்..பார்வை வெளியே பார்த்துக்கொண்டு..

என்ன இது இப்படி கஷ்டப்படுத்துகிறானே....

" ..ம் .." மறுபடியும் இவள் கை கேட்கிறான்...

பெண்ணின் தயக்கம் , பயம் அறியாயோ ரகு,.. அதுவும் என் வீட்டருகில்...

" என் வீடு வந்துவிட்டது.. நான் போகணும்..."

" தெரியும்.. கைகொடுத்தா என்ன குறை...சீக்கிரம்...இல்லாட்டி போக மு..டி..யா..து..."

என்னவோ செய்கிறது பலமிழந்து..." நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள்.." வெளியில் பார்த்துக்கொண்டு,
அவனைப்பார்க்க முடியாமல். முதன்முறையாக மென்மையாக அவள் கரம் பற்றுகின்றான் ரகு...


அவன் விரல்கள் , கண்கள் , ஆயிரம் கவிதைகள் , கதைகள் சொல்லுது அவனின் காதல்...

அவளின் கண்களிலோ கண்ணீர்.. போதும் அவளை இனிமேலும் தர்மசங்கடத்தில் ஆளாக்கக்குடாது என்று..

விடுதலை கொடுக்கிறான்....இப்போது அவளுக்கு விட மனமில்லை... இவனல்லவோ என் துணைவன்...

மென்மையானவன்...முதன் முறையாக காதல்வயப்படுகிறாள் மது...

-----------------------------------------------------------------------------தொடரும்......


Wednesday, February 20, 2008

பாகம்- 7 .சுந்தரி கண்ணால் ஒரு சேதி.....
===================================
அப்பா சொன்னதும் எரிச்சலாய் வந்தது.... நான் ஏதாவது செய்தால் ரகு இன்னும் வேகமாக காரியத்தில்
செயல்படுத்துகின்றாரே.....


" என்னப்பா இது அதுக்குள்ளேயேவா?.."

" இல்லம்மா நாளை நல்ல நாள். அதைவிட்டால் இன்னும் 1 மாதம் ஆகும்...அதான் சரின்னு சொல்லிட்டேன்.."

" சரிப்பா ஆனால் முடிவே பண்ணிவிடாதீர்கள்"
சொல்லிவிட்டு தன் அறைக்கு சென்றவளின் காதுகளில்
ரகுவின் வார்த்தைகள் தொந்தரவு தந்தது...

"நிஷா இனி என் தங்கைதான்"... என்ன நல்ல மனசு..

."நீதான் என் மனைவி, அதில் எந்த மாற்றமுமில்லை.".. என்ன தைரியம்...ஆனாலும் எனக்கு சம்மதமில்லையே...

------------------------------------------------------------------------------------
வீடே கலகலப்பாயிருந்தது... அண்ணா குடும்பத்தினர் குழந்தைகளோடு வந்தது மதுவுக்கு குதூகலம்..


பெண் பார்க்க வருகிறார்கள் என்பதை மறந்து விளையாடிக்கொண்டிருந்தாள்...
கீதாம்மாவும் அவர் மருமகள் ஷைலஜாவும் மைசூர்பாக் செய்வதில் பிஸியாக இருந்தார்கள்.


அவர்களோடு சமூக ஆர்வலரான எதிர்வீட்டு சீதாம்மாவும் கலந்துகொண்டார்கள்..

அப்பாவும் சூர்யா அண்ணாவும் வீட்டை ஒழுங்குபடுத்தினார்கள்....

முதலில் வந்தது டாக்டர்... வந்ததுமே கலகலப்பாகிவிட்டது வீடு... அடுத்து நிஷா தன் குழந்தைகளுடன்..

வந்ததும் மதுவுக்கு அலங்காரம் பண்ண ஆரம்பித்தாள்.. அவளோ ஒரே பிடிவாதம் , சாதரண புடவை போதுமென்று..

" அடி கண்ணே, இதுவும் பெண்ணுக்கு முக்கியமான முதல் நாளோல்லியோ..." சீதாம்மா..

" எனக்குதான் அந்த சந்தர்ப்பம் இல்லை, உன் மூலமாவது நிறைவேத்திக்கிறேன் பா.." நிஷா..

" என்னை என்ன பாடு படுத்தின. ம். இப்ப நீ பட்டுப்புடவை கட்டியே ஆகணும்.. கூட என்ன நகைகளையும்
போட்டுக்கணும்..." மன்னி சைலஜா...


கீதாம்மா புன்னகைத்துக்கொண்டார்.தான் தப்பித்தோம், தன் வேலை சுலபமாயிற்றென்று..

6 மணிக்கு ரகு , சுந்தர் தன் மனைவி , 2 பசங்களுடன், ரகுவின் தங்கை பரமேஸ்வரி, விசாலம் அம்மா, அப்பா.

அனைவரும் வந்ததும் டாக்டர் பாட்டுபாடி வரவேற்றார்...

" அடியே என் கள்ளி, மாப்பிள்ளை ரொம்ப அழகுடி.. உனக்கு வேண்டாம்னா சொல்லு நான் ரெடி." என்று சீதாம்மா

வேறு சிரிக்க வைத்துக்கொண்டிருக்க, மற்ற அனைவரும் மாப்பிள்ளையை ஜன்னல் வழியாக பார்க்க போட்டி
போட்டுக்கொண்டிருந்தனர்..அனைவருக்கும் பஜ்ஜி சொஜ்ஜி மைசூர்பாக்குடன் பரிமாறப்பட்டது...


" பெண்ண கூட்டிண்டு வாங்கோ " டாக்டர் சங்கர்...

சுந்தர் நிமிர்ந்து உட்கார்ந்தார்..." நீங்க ஏன் நிமிர்ந்து உக்காருரீங்க.. மாப்பிள்ளை நீங்கன்னு தப்பா நெனச்சுக்கப்போறா.."

எல்லாரும் சிரிக்க, அழகாக அம்சமாக காபி தட்டுடன் மது குனிந்த தலையுடன், அதிக வெட்கத்தோடு
நடை மறந்து, யாரையும் பார்க்கும் சக்தியின்றி , மல்லிகைப்பூக்கள் ஜிமிக்கியோடு போட்டிபோட்டு
தோளிலாட, பட்டுப்புடவை சரசரக்க வருகிறாள்..


நிசப்தம்..பார்த்த மாத்திரத்தில் ரகுவுக்கு, கவிதை தோன்றுகிறது...

"ஆயிரம் முறை அலுவலகத்தில்
வேலை கருத்தோடு பார்த்தாலும் ,
கோபத்தில் நீ முறைத்தாலும் ,
அன்னநடையில் உன் வெட்கத்தாலும்,
புதுஅனுபவத்தின் பயத்தாலும்,
தேவதை உன் அலங்காரத்திலும்
அள்ளிச்செல்கிறாயே என் மனதை கள்ளியே"

மெய்மறந்து புதிதாகப்பார்ப்பவன் போல் மயங்குகிறான்...

காபி கொடுப்பதற்குள் தடுமாறித்தான் போகிறாள் பேதை..விசாலம் அம்மா தன் அருகில் அமரச்செய்கிறார்.
அதற்குள் சின்னஞ்சிறு குழந்தைகள் , மதுவிடம் ஓடிவந்து ,


" ஏன் சாமி மாதிரி இவ்வளவு நகை போட்டிருக்க?.."

" நீ மட்டும் நிறய பூ வெச்சுருக்க".. என்று மடியில் ஏற முயலுகிறது மற்றொன்று..
அவளின் தர்மசங்கடத்தை ரசிக்கிறான் ரகு...


ஷைலஜா , சீதாம்மா, கீதாம்மா , எல்லோருக்கும் ரகுவைபற்றி ரொம்ப திருப்தி..

அதேபோல் " அண்ணா எனக்கு ஒகே" பரமேஸ்வரி..." எனக்கும் தான்" விசாலம் அம்மா.
விரல்களோடு விளையாடிக்கொண்டிருந்த மதுவிடம் " என்னம்மா நீ ஏதாவது பேசணுமா" டாக்டர்..


இல்லை என தலையாட்டுகிறாள்..

" பெண்ணை பாட்டுபாட சொல்லணுமா..இல்லாட்டி நான் பாடவா " சிரிக்கிறார்கள் அனைவரும்...

" நீங்க எதாவது பெண்கிட்ட பேசணுமா மாப்பிள்ளை சார்.?." டாக்டர்...சங்கர்.

" பேசணும் , பெண்கிட்ட இல்லை, ஆனால் அவள் அம்மாவிடம்..." ரகு

எல்லோரும் ஆச்சர்யப்பட , கீதாம்மா ரொம்ப வெட்கப்படுகிறார் , மதுவைவிட..

சரி அதுக்குமுன்னால் தட்டு மாத்திக்கொள்ளலாம் என்றதும் தான் விபரீதம் புரிகிறது மதுவுக்கு...

" எதுக்கும் என் பெண்ணிடம் ஒரு வார்த்தை.."மதுவின் அப்பா

" ஹாஹாஹா. மது என் பெண். என் பேச்சை என்று தட்டியிருக்கிறாள்..இல்லம்மா..?.. தட்டை எடுங்க" டாக்டர் சங்கர்.கட்டளையிருகிறார்..

.மது யோசிப்பதற்குள் எல்லாம் முடிந்தது.. நல்லபடியாக..

ரகு கீதாம்மாவை தொடர்கிறான்...............................................

-------------------------------------------------------------------------------தொடரும்....