Friday, July 10, 2009

கெட்டிமேளம்...



கெட்டிமேளம்...

" ஹேய் மதி , மீட் மை பிரண்ட் விஷ்ணு.. பெங்களூர்ல இருக்கான் பொட்டி தட்டிட்டு.. ஐயா ஸ்டேட்ஸ்ல தான் இருந்தாரு.. கல்யாணம் முடிஞ்ச கையோடு இங்க செட்டில் ஆயிட்டாரு.."

நரேன் அறிமுகப்படுத்தினான் நன் நண்பர்களை., தன் வருங்காலத்திடம்...
" டேய், என்ன கல்யாணம் முடிஞ்சதும் திரும்ப அமெரிக்காவா..?" ஸ்ரீராம்...

" ஆமாடா. அங்கேயே செட்டில் ஆயிடலாம்னு இருக்கேன்... பட் ஆல்சோ மதியோட விருப்பம் பொறுத்தும்.. அவங்க குடும்பம் ரொம்பவே ஆச்சாரம்...அவங்க பேரண்ட்ஸ் என்ன சொல்றாங்களோ..."

" டேய் , உன்னையே சுத்தி சுத்தி வந்தாளே ரீமா..என்னாச்சுடா..?..செம ஸ்மார்ட் கேர்ல் யு நோ?.. ஐபிஎம் ல இருந்ததா சொன்னா போன முறை லண்டன் ல மீட் பண்ணினேன்.."

" ம். ஷி இஸ் அ குட் பிரண்ட் டா. நான் நேரா சொல்லிட்டேன் எனக்கு அவ மேல பிரியம் இல்லேன்னு... ஷி வாஸ் ஷாக்ட் யு நோ.. மொதல்ல..."



" அப்புரம்.."

" ஹே , என்ன கதயா சொல்லிட்டிருக்கேன்... அவள நான் ரிஜக்ட் பண்ணுவேன்னு அவ கனவுலேயும் நெனக்கலயாம்..."

" சவுண்ட்ஸ் இண்ட்ரெஸ்டிங்.. மேலே சொல்லு.."


" ஏன் நீ புரோபோஸ் பண்ண போறியா...ஷி இஸ் செட்டில்ட் ஆல்ரெடி.."

" அடச்சே.. சரி லூஸ்ல விடு..ஜஸ்ட் க்யூரியஸ்.. அவ்ளோதான்.."

" நரேன், நாளியாச்சு.. இன்னுமா ரெடி ஆகிட்டிருக்க?. கமான் க்விக்..." அம்மா கீழேயிருந்து...



" டேய் பார்ட்டி எப்ப தரப்போற..? ஹனிமூன் எங்கே... ?" துளைத்து எடுத்துக்கொண்டிருந்தனர் தோழ, தோழியர்..

" ஹலோ மொதல்ல நல்லபடியா திருமணம் முடியணுமேன்னு நானே கலவரமா இருக்கேன்... உங்களுக்கு ஜாலியா..?"

" ஹேய் வாட்ஸ் த பிராப்ளம் மேன்..?" அமெரிக்க கருப்பரின நண்பன்..சுருள் முடியோடு , பானையை கவுத்தாற்போல..

" அடேய் , உன் இங்கிலீஸை ஒடப்புல போட... நீ மேடைக்கு பக்கத்துல வந்துராத...நீந்தான் பிராப்ளமா இருப்பேடா ..

" வீட்டு வேலையாள் முருகன் நரேனின் அமெரிக்க நண்பரை பார்த்து
கமெண்ட் விட்டான்.. எல்லோரும் சிரிக்க....

" மது ஆர் யு ரெடி... ? " " இல்லடா.. எனக்கு இந்த புடவை கட்ட வரலடா.."

" ஹேய் லூஸு.. எத்னி வாட்டி சொன்னேன் பழகிக்கோ ன்னு...ஆர்த்தி கொஞ்சம் ஹெல்ப் பண்ணேன்...நீயெல்லாம் ஒரு பிரண்டா..?"

" போடா.. அதெல்லாம் பியூட்டி பார்லர் ப்ரிட்டி கேர்ல்ஸ் வந்திருக்காங்க அவங்க கிட்ட சொல்லு.. ஓவர் வேலை செஞ்சா ஓல்டா காமிக்கும் என் மேக்கப்..மைண்ட் இட்.."


------------------------------
------------------------------

" பொண்ண அழச்சுண்டு வாங்கோ... " புரொகிதர் சத்தம் போட்டார்..

" மெதுவா இறங்கு.. சேலை தடுக்கிடாம...." ஆர்த்தி..

" ம். ஆர்த்தி நீ எதுக்கும் தள்ளியே இரு.. நரேன் மறந்து போய் உன் கழுத்துல கட்டிட போறான்..." பிரதாப்...

" நோ , பிராதாப்... தாலி சமாச்சாரெமெல்லாம் கிடையாது .. ஒன்லி மோதிரம் மட்டும்தான்..." "அப்ப எதுக்கு ஹோமம், மந்திரம் எல்லாம்..?"


" அதெல்லாம் அப்பாவோட பிடிவாதத்துக்காக.. காதல் கல்யாணம்னாலும் மொறப்படி நடக்கணும்னு சொன்னார் நல்ல நாள்ல.. கொஞ்சம் விட்டுக்கொடுத்தேன்..ஒரே பையனாச்சே..."

" செத்த சீக்கிரம் வாங்கோ."
எல்லா மந்திரமும் சொன்னதும் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டார்கள்...

பெத்தவா காலில் விழுந்து நமஸ்காரம் பண்ணிக்கோங்கோ...
தடால்னு மது புரோகிதர் காலில் விழ, தடுமாறினார் புரோகிதர்..



" என் காலில் இல்லேம்மா.. பெத்தவா காலில்...

" மது சரியாத்தான் விழுந்திருக்கான் மாமா.. ஆசீர்வாதம் பண்ணுங்கோ...


"
அதிர்ச்சியானார் புரோகிதர்...

" சாரி மாமா.. நானும் மதுவும் கல்லூரி நாட்களிலேயே நண்பர்கள்..நான் அமெரிக்கா போயும் கூட என்னால் மதுவை மறக்க முடியலை... யாரையும் திரும்பி கூட பார்க்க முடில.."

" சாரி அப்பா.. நானும் உங்க கிட்ட சொல்ல பயந்துட்டு..."


"இதிலென்ன இருக்கு நாம என்ன 2010 லா இருக்கோம்?.. 2050 ல இருக்கோம்... இதுக்கு ஏன் தயக்கம்... ஏன்கிட்ட முன்னமே சொல்லிருக்கப்டாதா .?"

" ஐ லவ் யூ சோ மச் அப்பா.." கட்டியணைத்தான் மதியழகன்...

" டேய் போதும்... என்னை தப்பா நெனச்சிடப்போறாங்க.. எதுக்கும் கேப் விட்டு தள்ளியே நில்லு,."

-------------------------------------------------------------

ஆதரவுமில்லை எதிர்ப்புமில்லை.. இப்படியும் நடக்கலாம் என்று ஒரு நகைச்சுவை கற்பனையே... ( கும்மிராதீங்க..)