Monday, August 30, 2010

இன்னா செய்தாரை - குட்டிக்கதை..
































" டேய் , எப்படியாவது போட்டுத்தள்ளணும்டா." .. ரிச்சி


" ஆமாண்டா. சாதாரண வக்கீல் பொட்டச்சிக்கு என்ன இம்புட்டு திமிரு.?" பீட்டர்

" நாம யாருன்னு காட்டணும்டா.." சாம்..

" பெரிய நீதிபதின்னு இவளுக்கு நெனப்பு.. ஒழுங்க புள்ள குட்டிய பார்த்துட்டு இருக்க முடியாதோ?..
எல்லார் தப்பையும் தட்டி கேட்பாளாம்.. தட்டி வெச்சா அடங்குவா.."

" இப்படி நம்மள ஒட்டு மொத்தமா நஷ்ட ஈடு வழங்க வெச்சுட்டாளே டா.."


" அவளுகளுக்கு ஆதரவு கொடுக்கிறானுங்க பாரு ************** அவனுங்கள சொல்லணும்.."

" என்ன புரளி சொன்னாலும் அசர மாட்டேங்காளடா.. "

" கெழவி டா.. அவள போய்.. சீ தூ... "
கேவலமாய் பேசி தங்களுக்குள்ளே சிரித்து ஆற்றாமையை தீர்த்துக்கொண்டனர்..

--------------------------------------------------------------


" டேய் தெரியுமா சேதி.. இன்னிக்கு நாம படிச்ச பள்ளிக்கு வராளாம்.. என்னமோ விருதெல்லாம் கொடுக்க போறாளாம்... "

" நம்ம பள்ளி யில் இவளுக்கென்ன வேலை..? .. படுபாவி.. சும்மா விடக்கூடாது டா.. பிளான் சொல்லு.."

" கெளம்புடா நாமளும் போவோம்.. போகும்போது சொல்றேன் என் பிளானை.."


------------------------------------------------------------

பல்வேறு
சிறப்பு நிகழ்ச்சிகள் , விளையாட்டுக்கு பின் பரிசளிப்பும் விருதும் ..

" நல்லொழுக்க விருது " ரிச்சி " என்ற முன்னாள் மாணவர் பெயரால் வழங்கப்படுகிறது.. "

கைதட்டல்.


சிறந்த சமூக சேவை விருது " பீட்டர் " என்ற முன்னாள் மாணவர் பெயரால் வழங்கப்படுகிறது..
"

கைதட்டல்.


சிறந்த
மாணவன் விருது " சாம்" என்ற முன்னாள் மாணவர் பெயரால் வழங்கப்படுகிறது..



பலத்த கைதட்டல்.



பின்
அந்த பெண் வக்கீல் பேசுகையில் ,

அந்த 3 மாணவரையும் வாழ்நாள் முழுதும் எல்லோரும் நினைவு கூறும் வகையில் தான்
இவ்விருதுகளை அறிவித்ததாக சொன்னார்..

கையிலுள்ள கத்திகளை அங்கேயே போட்டுவிட்டு வெட்கி தலைகுனிந்து மன்னிப்பு கேட்க கூட தகுதியின்றி வெளியேறினார்கள் , ரிச்சி, பீட்டர் , மற்றும் சாம்...

ஆனால் அடுத்த விருதுக்கு தம்மால் இயன்ற உதவியை செய்யணும் என்ற தீர்மானத்தோடு...

-------------------------------------------------------------------------------
நன்றி படம்: கூகுள்



( சமீபத்திய பிரச்னையில் பின்னூட்டம் இட்டவர்களும், தனிமடல் அனுப்பியவர்களுக்கும் நன்றி சொல்ல மறந்திருந்தால் என் மன்னிப்புகள்..

அறிமுகமில்லாத நட்புகளின் ஆறுதல் அளவிடமுடியாதது.. தங்கள் அன்புக்கு மிக்க நன்றி
..)

Saturday, August 28, 2010

உதவியே உபத்திரமாய் மாறியதுண்டா?..அனுபவங்கள்




























We must accept finite disappointment, but we must never lose infinite hope. - Martin Luther King, Jr.


அப்பதான்
இரண்டாவது குழந்தை பிறந்து 4 மாதம்..


பெரியவனும்
அவன் நண்பனும் பள்ளி முடிந்ததும் வேகமாய் வந்து குழந்தையை போட்டி போட்டு கொஞ்சுவார்கள்.


பெரியவன்
4 ம் வகுப்பும் அவன் நண்பன் 5ம் வகுப்பும்..


அவன்
நண்பனோ ஒரே பிள்ளை.. ஆக அவனுக்கு குழந்தைன்னா ரொம்ப இஷ்டம் . தினம் வந்திடுவான்..


அப்ப்டி
ஒருநாள் பள்ளி முடிந்ததும் நண்பன் என் மகனிடம் , "வா கடைக்கு சென்று மிட்டாய் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு போவோம்" னு சொல்ல
என் மகனோ,

" அம்மா தேடுவாங்க.. திட்டுவாங்க "


" பக்கத்தில்தானே. லாபியில் பையை வைத்துவிட்டு , ஓடி போய் வாங்கி வருவோம்."


மறுக்க
முடியாமல் சென்றுள்ளான் இவனும்.
அங்கே சென்றதும் நண்பன் ஒரு பிஸ்கட் எடுத்து கால்சட்டைக்குள் போட்டானாம்.

அதை
கையும் களவுமாய் கடைக்காரன் பிடித்துவிட்டான்.
கூட சென்ற என் மகனையும் பிடித்து வைத்துவிட்டு எனக்கும் அவன் வீட்டுக்கும் தகவல் வந்தது.

அங்கே
சென்றதும், " உங்க பையன் ஒன்றும் செய்யலை. அவன் நண்பந்தான் பிடிபட்டான் " என்றார்கள்.
"நீங்கள் உங்க குழந்தையை அழைத்து செல்லலாம் ..அந்த பையன் எங்க முதலாளி வரும்வரை இருக்கணும்.."

யார் செய்தா என்ன?.. இருவருமே என் குழந்தைகள் போலத்தானே .. வித்யாசம் ஏதுமில்லையே என் மனதில்.. மென்மையா அந்த பையனிடம் விசாரித்தேன்.. " நான் எடுத்தது உண்மைதான். ஆனால் விளையாட்டுக்குத்தான் அப்படி செய்தேன் " என அழுதான்.

அதைப்பார்த்து
அன்னையும் அழ, எனக்கு மிகவும் பரிதாபமாக போய்விட்டது.
ஒரு பிஸ்கட் வாங்க முடியாத நிலைமையில் இங்கு யாருமே இல்லை என சொல்லலாம்.

சொல்லப்போனால்
அந்த பிஸ்கட் எல்லாம் குழந்தைகள் உண்ண கட்டாயப்படுத்தணும்..
அப்படி சாக்லேட் , பிஸ்கெட் என வெறுக்குமளவுக்கு அவரவர் வீட்டில் இருக்கும்.

ஆனா
சிறு குழந்தைகளுக்கு திருட்டும் ஒரு விளையாட்டு..
அதிலுள்ள சீரியஸ்நெஸ் , பாதிப்பு புரிவதில்லை.

அதற்குள்ளே
அந்த பையனின் தகப்பனார் எனக்கு போன் செய்து .
" என் மனைவிக்கு தாய் பாஷை தெரியாது.. தயவுசெய்து உதவிடுங்கள் " என்றார்.

" இதிலென்ன இருக்கு.. கண்டிப்பா இருப்பேன். கவலைப்படாதீங்க " னு சொல்லிட்டு காத்திருந்தோம்.

இதனிடையில்
வீட்டில் 4 மாத குழந்தையை கவனித்துக்கொண்டிருந்த வேலையாள் வீடு திரும்பும் வேளை.
அவள் டையப்பர் போடாமல் குழந்தையை கீழே என்கிட்ட வந்து கொடுத்துவிட்டு சென்றாள்.

அந்தக்கடையின் உள்ளே வைத்தே அழுத குழந்தைக்கு பாலும் கொடுத்தேன்..

ஏனெனில்
அந்த பையனின் அம்மா ஒரே அழுகை பயத்தில்..தன் பிள்ளையை கைது செய்வார்களோ என..
" அட அப்படியெல்லாம் ஒண்ணும் நடக்காது.. னு நான் தைரியம் சொல்லிக்கொண்டேயிருந்தேன்..

(இதற்கிடையில் நம் தமிழ்ப்பெண் ஒருத்தி கூட இருந்து இத்தனையையும் கவனித்துக்கொண்டே இருந்தாள். அப்பப்ப தொலைபேசி மூலம் மற்றவர்களுக்கும் கமெண்ட்ரி கொடுத்துக்கொண்டும் இருந்துள்ளாள். அதை பின்பு சொல்கிறேன். )

பின்பு
காவலர் வந்தனர்..
அழும் பையனை ஒருவர் அணைத்துக்கொண்டார் , சிரித்துக்கொண்டே..

காவலர்
மட்டுமல்ல இங்கு அனைவருமே குழந்தைகள் மேல் பாசம் கொண்டவர்கள்..
குழந்தைகளை கொண்டாடும் நாடு இது..

அதற்குள்
அந்த பையனின் தகப்பன் வந்துவிட்டார்..
வந்ததும் எனக்கு நன்றி சொல்வார் என பார்த்தால் , யார் யாருக்கோ போன் போட்டு தன்னுடைய பலத்தை நிரூபித்துக்கொண்டிருந்தார்.

கடைசியில்
35 பாட் ( தாய்லாந்து பணம் ) பிஸ்கட்டுக்கு 4000 பாட் பைன் கட்ட முடிவானது..
அந்த நேரம் பார்த்து என் கணவரும் வர, அந்த பையனின் அப்பா , என் கணவரிடம், " நாம் இருவரும் சேர்ந்து இந்த தொகையை கட்டிவிடுவோம்" என சொல்ல.

ஏதும்
கேட்காமல் என் கணவரும் 2000 பாட் கொடுத்துவிட ,
எனக்கோ அதிக கோபம்.. " ஏன் கொடுத்தீங்க " னு நான் கேட்க , " பிரச்னையை வளர்க்க கூடாது . விட்டுத்தள்ளு .. " னு எளிதா சொல்ல..

" என்ன சொல்றீங்க நீங்க.. பணம் பெரிதல்ல.. ஆனா நம்ம பையன் செய்த குற்றம் போல ஆனதே.. அதைவிட அந்த மனிதர் நான் இத்தனை நேரம் அவர் மனைவிக்கு துணையாக நின்றதுக்கு ஒரு நன்றிகூட சொல்லவில்லை.. " என நடந்ததனைத்தையும் விளக்கினேன் கணவருக்கு..

அப்பதான்
தவறு செய்ததை உணர்ந்தார்.
உடனே போன் போட்டார் அவருக்கு.. அவர் மனைவி எடுத்ததும் என்னை பேச சொன்னார். " நான் நினைத்திருந்தால் என் மகனை உடனே அழைத்து வந்திருக்க முடியுமே.. உங்க பையனையும் என் மகனாய் நினைத்ததனால் மட்டுமே அங்கே நின்றேன், பச்சக்குழந்தையை வைத்துக்கொண்டு..தயவுசெய்து இனி யாரையும் இப்படி புண்படுத்திவிடாதீர்கள் "

உடனே
அவர் அழுதார்.. தான் செய்தது தவறுதான் என சொல்லிக்கொண்டிருக்கும்போதே கணவர் போன் பிடுங்கி ,
" நீங்க கடைக்காரரிடம் என் மகனுக்கு ஆதரவாய் பேசியதால்தான் பைன் கட்ட வேண்டிய சூழல்.. " னு அப்படியே என் மேல் பழியை போட்டார்.

உடனே
என் கணவர் போன் வாங்கி " என் மனைவிக்கு தேவையா .? நீங்க ஏன் உங்க மனைவிக்கு தாய் தெரியாது உதவுங்கன்னு கெஞ்சினீங்க.?
அதெல்லாம் தெரியாமல் எப்படி என்னிடம் 2000 பாட் கேட்டீர்கள் ?." என விளக்கம் கேட்டதும்,

இறுதியில்
மன்னிப்பு கேட்டுக்கொண்டு , அந்த 2000 பாட் உடனே அனுப்பி வைப்பதாகவும் தயவுசெய்து அடுக்ககத்தில் யாரிடமும் தன்
மகன் திருடி மாட்டிக்கொண்டதை சொல்லிவிடாதீர்கள் எனவும் கெஞ்சினார்..

உடனே நான் அவர் மனைவியிடம் போன் கொடுக்க சொல்லி , " இப்பவும் உங்க பையன் என் மகன் போலத்தான். அவன் மேல் எந்த தப்பும் பெரிதாய் எனக்கு தெரியலை.. குழந்தை அவன்.. ஆனா பெரியவங்க நீங்க செய்தது என்னால் மன்னித்தாலும் மறக்க முடியாது..தயவுசெய்து உங்க பாவப்பட்ட பணத்தை அனுப்பிடாதீங்க.. அதை கோவில் உண்டியலில் போட்டிடுங்க . அபிஷேக் எப்பவும் போல் என் வீட்டுக்கு வரலாம் " னு சொல்லி வைத்தேன்..

இத்தோடு முடிந்ததா?. அந்த தமிழ்ப்பெண் அடுக்ககத்தில் உள்ள எல்லாரிடமும் என் பையன் திருடி மாட்டி, நாங்க பைன் கட்டிய விபரத்தை சொல்லியுள்ளார்.

என்
மனது கஷ்டப்படும் னு யாரும் கேட்கலை.
ஆனால் இந்த தமிழ்ப்பெண் காலை கணவன் அலுவலகம் சென்றதும் வீடு வீடாய் சென்று ஒவ்வோரு வீட்டின் கதையையும் கேட்டு அடுத்த வீட்டுக்கு பறிமாறுவதே வேலை..

இப்படியே இங்குள்ள அனைவரையும் அழகாக பிரித்துவிட்டு அவள் மட்டும் எல்லோர் வீட்டுக்கும் நல்லவளாய் இருந்துள்ளாள். நான் வேலைக்கு செல்வதால் எனக்கு இது பற்றி ஏதும் தெரியாமல் இருந்தேன்.பல மாதம்.

நான் யார் வீட்டுக்கும் செல்வதில்லை.. என் வீட்டுக்கு கதை பேச என இதுவரை யாரும் வந்ததில்லை..15 வருடத்தில்..

அப்பவும்
அந்த தமிழ்ப்பெண் மாசமாய் இருக்கிறாள் என்று சில பலகாரமும் பழங்களும் வாங்கிக்கொண்டு பார்க்க சென்றேன்.
அப்ப அவள் இல்லாததால் பக்கத்து வீட்டு தமிழ் பெண்ணிடம் கொடுத்து கொடுக்க சொன்னபோது , அவர்கள் மெதுவாக விசாரித்தார்கள்...மகன் திருட்டு பற்றி..

அதிர்ச்சியானேன்.. அப்படியே அழகான ஒரு கதை.. சரி வாயும் வயிறுமாய் இருக்கிறாள் என விட்டுவிட்டேன். அப்புரம் மெதுவா ஒவ்வொருத்தரிடமா விசாரிக்கும்போது எல்லோரிடமும் என் மகனைப்பற்றி பொய் சொல்லியிருந்தாள்

எல்லோர் வீட்டு கதையும் முக்கியமா பிள்ளைகள் பற்றி சொன்னதும் எல்லோருக்கும் வருத்தம்,.

அதற்குள்
பிரசவத்துக்கு ஊருக்கும் சென்றுவிட்டாள்..
ஒருநாள் கட்டாயத்தின்பேரில் அவள் வீட்டுக்கு சென்று அவள் கணவனிடம் இது பற்றி மென்மையாக எடுத்து சொன்னோம். நல்ல மனிதர்.. இனிமேல் இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்வதாய் சொன்னார். ( அவர்தான் அந்தோணி பற்றி நான் எழுதியதும் உடனே வீல் சேருக்கு 5000 ரூபாய் அனுப்பி வைத்தார்..முதலில் )

அப்புரம்
மொத்தமா எல்லாரிடமும் சொன்னேன், இந்த கதை பேசும் பழக்கத்தை தயவுசெய்து விடுங்கள்.. வெளிநாட்டில் தனியே இருக்கோம்
முடிந்தால் ஒருவருக்கொருவர் ஆறுதலாய் இருப்போம் னு சொல்லி , இரு விழாக்கள் எடுத்து நடத்தினேன் ..

ஒன்று
குழந்தைகளுக்கான மாறுவேடப்போட்டி.. மற்றொன்று பெண்களுக்கான ஸ்மார்ட் மம் போட்டி..
அப்புரம் முழுதுமாக நான் உண்டு என் வேலையுண்டு என ஒதுங்கிக்கொண்டேன்..

எத்தனை
அடிபட்டாலும் உதவும் பழக்கத்தை விடப்போவதில்லை.. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்..
தவறு செய்கிறவர்கள் செய்துகொண்டே இருக்கட்டும்.. அதையும் தாங்க பழகிக்கணும்.. ..

நல்லவர்கள் பலரும் உலகில் இருக்காங்க என்ற நம்பிக்கையோடு நல்லவற்றை செய்வதை தொடரத்தான் வேணும்... அது மட்டுமே மனசுக்கு இதம்...

I don't at all like knowing what people say of me behind my back. It makes me far too conceited. Julchen Oscar Wilde quotes

It is necessary to help others, not only in our prayers, but in our daily lives. If we find we cannot help others, the least we can do is to desist from harming them.
Dalai Lama

Friday, August 27, 2010

புலித்திருட்டு லக்கேஜில்..

















2 மாத புலிக்குட்டி ஒன்றை குழந்தைகளுக்கான விளையாட்டு சாமான்களோடு கலந்து ஈரான் நாட்டுக்கு
எடுத்து செல்ல துணிந்த பெண்மணி , பாங்காக் சுவர்ணபூமி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக
அந்த புலிக்குட்டிக்கு மயக்க மருந்து கொடுத்து தூங்க வைத்துள்ளார்.
விளையாட்டு சாமான்களோடு இருக்கும்போது பஞ்சு வைத்து அடைத்த புலிக்குட்டி போன்ற தோற்றம் ஏற்படுத்த கலந்து வைத்துள்ளார்..

விமான
நிலையத்தில் ஸ்கேன் செய்யும் போது புலிக்குட்டி மூச்சு விடுவது தெரிந்துவிட்டது..


பெட்டியை
திறக்க சொல்லி பார்த்த போது மிக அழகான அந்த 2 மாத குட்டி அமைதியாக அரை தூக்கத்தில் இருந்துள்ளது.


உடனே அப்பெண்ணை கைது செய்து 4 வருட சிறை தண்டனையும் வழங்கியுள்ளார்கள்....

புலிகள் தற்போது அழிகின்ற சூழலில் இருப்பதால் மிகவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது..

வனவிலங்கு
அதிகாரிகள் புலிக்குட்டியை எடுத்து சென்று மிக பாதுகாப்பாக வைத்துள்ளனர்..


புலியை
கண்டுபிடித்து மீட்டது குறித்து பெருமகிழ்ச்சி கொண்டனர் அதிகாரிகள்..

சமூகத்தில் முதல் காலடி பதித்தது எப்போது?




























பெற்றோருக்கு பிள்ளைகள் எப்பவும் குழந்தைகள்தான்..அவர்கள் வளர்ந்து அவர்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்தாலும் கூட.

ஆனால் பிள்ளைகளை நாம் மட்டும் வளர்க்கவில்லை. சமூகமும் சூழலும் சேர்த்தே வளர்க்கின்றது..

பல வருடம் நாம் சொல்லிக்கொடுக்காததை சில நொடிகளில் கற்று விடுவார்கள் ., அது நல்லதோ கெட்டதோ..

நாம் அவர்கள் கூடவே பயணித்துக்கொண்டிருக்க முடியாது..

ஆனால் இதை செய்தால் , இப்படியான விளைவுகள் என சொல்லி தயார் படுத்திக்கொள்ளலாம்..

ஏன் இந்த பீடிகை.. சொல்கிறேன் நேற்றைய சம்பவத்தை..

இரவு படுக்க போகுமுன் தொண்டையில் கிச் கிச்..

அதற்கான மிட்டாய் மருந்தை ( அதாங்க லொசெஞ்சஸ் ) வாங்கி வர சொல்லி பெரியவன் அறைக்கு சென்றால் படுத்துவிட்டார்.

" அம்மா தூக்கம் வருது காலையிலேயே எழும்பணும் வேற. பிளீஸ்."

" ப்ளீஸ் மா."

என்னோட ப்ளீஸ் வென்றது.. சோம்பிக்கொண்டே சட்டையை போட்டுக்கொண்டு கீழே சென்றார்.

போய்வர அதிகபட்சம் 10-15 நிமிடமே..

ஆனா 30 நிமிடம் ஆகியும் திரும்பவில்லை..கொஞ்சம் பயம்.

45 நிமிடம்... பயம் அதிகரித்தது.. ( இங்கு பொறாமைக்காரர்கள் சிலருண்டு :) . எப்படியெல்லாம் யோசனை வருது பாருங்க. )

50 நிமிடம் - எழுந்துவிட்டேன் . " என்னாச்சு போனவனை காணோம்.. கொஞ்சம் போய் பார்த்துட்டு வாங்க.."

"சின்ன குழந்தையா . வருவான்.. " பதிலில் அமைதியானாலும் குழப்பம்..

பின் 1 மணி நேரம் கழித்து வந்தார்.. வரும்போதே அம்மா அம்மா னு .. சத்ததிலேயே புரிந்தேன் ஏதோ பிரச்னைதான் என.

" அம்மா, நம்ம தமிழர்களுக்கும் வெள்ளைக்காரனுக்கும் சண்டை நான் உதவினேன்..."

படுத்திருந்தவள் சடாரென்று எழுந்தேன்.

" என்னாச்சு மா.?"

ஒரு வெள்ளைக்காரன் நம் இந்தியர் வீட்டை திறந்துள்ளார்.. அதை தடுத்த நம் தமிழரை அடித்துவிட்டார்..அவரை பிடிக்க வந்த காவலரையும் தடுத்துள்ளார்.. பின் அவனை செக்யூரிட்டி தள்ளியதில் சுவர் மண்டையில் முட்டி ஒரே ரத்தம்..

அவர்கள் காவல் துறைக்கு சொல்லிவிட்டனர்.

நான் வெளியே நின்றேன் . கட்டடத்தை விட்டு வெளியே ஓடி அவன் தப்ப நினைக்கையில் தமிழ் அங்கிள் ஜாடை காட்ட நான் என் கைகளை

கொண்டு அவனை தடுத்து நிறுத்தினேன்.. "

14 வயதிலேயே 6 அடி வளர்ந்திட்டாயே னு கவலை படாத நாளில்லை.. :(

ஆனால் முதன்முறையாக அது உதவியிருப்பது கொஞ்சம் திருப்தியாயிருந்தது..

இந்தியாவாய் இருந்திருந்தால் கண்டிப்பாக மாமாவை போல் ராணுவத்துக்கு அனுப்பியிருப்பேனடா..

" உனக்கு பயமா இல்லையா பா.?.. "

" ஹ. விட்டா அவனை அப்படியே ஒரு கையில தூக்கிருவேன் மா."

உடனே சின்னவர் , " ஹேய் , அப்ப நீ ஹீரோ ஆயிட்டியா.?" ( தமிழ்பட பாதிப்பு என்னத்த சொல்ல.?:) )

" அம்மா உங்ககிட்ட சொல்லிட்டு போகத்தான் வந்தேன்.நீங்க பயப்படுவீங்கன்னு .. நான் திரும்ப போகணும்.."

" ஒண்ணும் போக வேண்டாம் உனக்கெதுக்கு வம்பெல்லாம்.பள்ளி செல்லும் வயதிலே.?" அப்பா.

" அம்மா , பிளீஸ்..அடி வாங்கியது என் தோழனின் அப்பா .. "

புன்னகைத்தேன்.. அதையே அனுமதியாக எடுத்துக்கொண்டு போனான்.. இந்த முறை மொபைலோடு..

" சரி நானும் போய் என்னன்னு பார்த்துட்டு வரேன் " கிளம்பினார் இவர் 10 நிமிடம் கழித்து..

போன மச்சான் திரும்பி வந்தார்... ஒருத்தரையும் காணோமாம்..:))



நிம்மதியா உறங்க சென்றேன்..

அடுத்த அரை மணி நேரம் கழித்து மகன் வந்தார்..

இந்த முறை அனைத்தையும் படம் பிடித்து எடுத்து வந்து விளக்க என் அருகே அமர்ந்தார்..( அதுக்குத்தான் மொபைலை எடுத்தார் போல )

" என்னாச்சு அப்பா வந்தாங்க.. காணோமாமே. "

" ஆமா அனைவரும் காவலர் வந்த வேன் அருகில் சென்றுவிட்டோம்.. பல தமிழர்கள் காவல்துறை சென்றுள்ளார்கள்..பலர் படம் எடுத்தனர்..

அங்கிள் என்னையும் கூப்பிட்டார்கள்.. அம்மா கிட்ட கேட்கலை னு சொன்னேன்."

சண்டையை படம் பிடித்து ஃப்ரீலான்ஸ் புகைப்படக்காரர் போல விளக்க ஆரம்பித்தார்..

இந்த துணிவெல்லாம் எங்கிருந்து வந்தது?..

இப்பத்தான் பிறந்து , என் மேல் கால் போட்டுக்கொண்டு படுத்து , யாராவது வந்தால் என் முதுகின் பின்னால் எட்டி பார்த்துக்கொண்டு ,

தம்பியோடு டாம்& ஜெரி பார்த்துக்கொண்டு சண்டையிட்டுக்கொண்டிருந்த பிள்ளை , வளர்ந்துட்டாரா?..

" சரி எப்படினாலும் நீ இதில் தலையிடுவதெல்லாம் தப்பு..உனக்கேதும் ஆனால்.?." அப்பா.

விவாதமாகப்போனது..

தடுத்தே ஆகணும்..

" உனக்கு அந்த பிரச்னையை ஹாண்டில் செய்வோம்னு நம்பிக்கை இருந்ததா.?.அவன் ஏதாவது

கைத்துப்பாக்கி வைத்திருந்து சுட்டா என்ன செய்வே?."

" அப்படி செய்யும் சூழல் இல்லை மா.. ஆனால் என்னுடைய பிரசன்ஸ் ( தமிழ்?? ) மிகவும் தேவைப்பட்டது என்பதை புரிந்தேன் "

" அப்ப சரி.. தப்பு நடக்கும் இடத்தில் நம்மால் முடிந்த ஆதரவு கொடுக்கவே செய்யணும்.. ஆனால் பல நேரம் நாம் காயப்படுவோம்.

அதுக்கும் தயாரா இருக்கணும். இருப்பியா.?"

" காயத்த பாத்தா முடியுமா மா.?"


நிறைவாய் இருந்தது.. என்னிடமுள்ள போராட்ட குணம், துணிவு , தெம்பு , கேரிங் இப்ப என் வாரிசில்..

சின்ன வயதிலிருந்தே சொல்லிவருவேன்.

" நமக்காக மட்டும் வாழ்வதில் பெரிதாய் ஏதும் சுவாரஸ்யமேயில்லை.. அடுத்தவருக்காக ஏதேனும் எதையும் எதிர்பாராது செய்து வாழ்வதிலேயே நிறைவு உண்டு என.."

சொல்வதை விட நாம் செயலிலும் வாழ்ந்து காட்டணும்..மிருகங்களோடு அன்பு செலுத்துவது, இயற்கையை மதிப்பது.. இவை செயலில் இருக்கணும்..

சம்மர் பள்ளி , பண்டிகை கொண்டாட்டங்கள் , சிறைச்சாலை, டிடென்ஷன் செண்டர் சந்திப்புகள் என தனியே நான் எடுத்து செய்யும்போதெல்லாம் " ஏம்மா உங்களுக்கு வேண்டாத வேலை "

னு சொன்ன பிள்ளை இன்று நான் சொல்லாமலேயே சமுகத்துக்கு உதவணும்னு முதல் படி ஏறியிருப்பது மகிழ்ச்சியை விட அதிக பொறுப்பை தந்துள்ளது .

இனம் , மொழி, மதம் என எல்லாம் தாண்டி மனிதநேயத்தோடு மட்டுமே வளர்க்கணும் இக்காலக்குழந்தைகளை..

"நாளை நீ வளர்ந்தபின் என்னை கவனிப்பதை விட முடியாத வயோதிகர்களை கவனித்தால் நான் மிக மகிழ்வேன் " என அடிக்கடி சொல்வேன்..

மேலும் ஏதாவது பெரிய வியாதி வந்தால் கூட எனக்காக ஏதும் செலவழிக்க கூடாது.. என் வாழ்க்கை நான் நிறைவாய் வாழ்ந்துவிட்ட திருப்தி இருக்கு..ஆக அந்த

செலவை கூட உபயோகமாய் செலவழிக்கணும் " என சொல்லிவைத்துள்ளேன்..

மனிதனுக்கு எப்போதும் திருப்தி ஏற்படுவதேயில்லை.. திருப்தி வேறு உழைப்பு வேறு.

உழைப்பு ஆயுசுக்கும் , இறுதி மூச்சுவரை செய்துகொண்டே இருக்கணும்.. ஆனால் திருப்தி என்பதை நாமாக வழவழைத்துக்கொள்ளவேண்டிய ஒன்று..

அந்த திருப்தி ஏற்படும்போதுதான் நமக்கு கிடைத்த சந்தர்ப்பங்களுக்கான நன்றி உணர்வு வரும்.. நன்றி உணர்வு வரும்போது மற்றவருக்காக ஏதாவது செய்யணும்னு தோணும்..

குழந்தைகள் நமக்கு கிடைத்த பொக்கிஷங்கள்.. நமக்கு ஓரளவுதான் உரிமை இருக்கின்றது அவர்கள் மேல்.

எல்லாவற்றையும் அட்வைஸ் சொல்லி வளர்க்க முடியாது. கவனிக்கின்றார்கள் நம்மை.. நம் போராட்டங்களை.. நம் வெற்றியை.. கடின உழைப்பை..

ஒவ்வொரு பிரச்னைகளையும் நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதே அவர்களுக்கான மறைமுக பயிற்சி..

பிரச்னைகளை அலசிடுங்கள் குழந்தைகளோடு..ஆனால் பயம்கொள்ளாமல்..

நாளைய உலகில் அவர்கள் சந்திக்க வேண்டிய மனிதர்கள் பல்தரப்பட்டனர்.. முக்கியமாக சைக்கோக்கள்., பொறாமைக்காரர்கள்....நல்லவர்களுக்கு சமமாக இருக்கின்றனர்..

செய்திகள் பார்க்க பழக்கணும். அதை விவாதிக்கவும் செய்யணும்..சில தினங்களுக்கு முன் பிலிப்பைன்சில் ஹாங்காங் சுற்றுலா பயணிகளை

ஹை-ஜேக் செய்த போராட்டத்தை நேரடி ஒளிபரப்பு செய்தார்கள்.. சுமார் 5 மணி நேரம் இடத்தை விட்டு அகலாமல் பார்த்தார்..

நம்க்கு பொறுமையில்லை..ஆனால் அதிலும் கற்கிறார்கள்.. எப்படியெல்லாம் காவலர் உடனடி நடவடிக்கைகள் எடுக்கிறார்கள் என..

நானும் மகனும் விரும்பி பார்ப்பது Fear factor எனும் தொடர்..

அதிலுள்ள உணவுகளை உண்பதை பார்த்து நான் முகம் சுழித்தாலும் மகன் இதிலென்ன இருக்கு என பார்ப்பார்..

மார்க்கெட்டில் உள்ள அனைத்தையும் சமைத்து தர சொல்லி கேட்கிறார். நமக்கோ உவ்வெ.. னு அருவருப்பாய் உள்ளது.

எங்கேயிருந்து கற்கிறார்கள்.. பள்ளியில் , நட்புகளிடமிருந்து..???

குடும்ப சூழல் 50% என்றால் வெளியில் 50% வளர்க்கப்படுகிறார்கள்..இது என்னைப்பொறுத்தவரை. இந்நாட்டைப்பொறுத்தவரை..

( மாறுபடலாம் மற்றவருக்கு )

நான் சமூக பிரச்னையில் காலடி எடுத்து வைத்தது எங்கள் NCC காம்ப்கள் மூலமாகத்தான்.

நீங்கள் முதலில் உங்களை இப்படி சமூக பிரச்னையில் இணைத்து எப்போது ..?

Wednesday, August 25, 2010

புனைவு எழுதுபவர் குறித்து...சட்டம்


இது தகவலுக்கு


திரவிய நடராஜன் ஐயா இத்தகைய புனைவு பற்றி

விரிவாக இங்கே எழுதியுள்ளார்கள்..

http://lawforus.blogspot.com/2010/07/blog-post_14.html


நன்றி-


பதிவுலக சண்டியருக்கு வைத்த ஆப்பு - இறுதிப்பகுதி.

சரி இப்பொழுது நமது கதாநாயகன் திரு கருப்பன் அவர்களின் திருவிளையாட லை பார்ப்போம். இவர் தன் வலைப்பக்கத்தில் (வேதாளம்), பதிவர் சுப்பனை பற்றி மிகவும் தரக்குறைவாகவும் ஆபாசமாகவும் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இது திரு கருப்பனை மிகவும் மன உளச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. அத்துடன் அவருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தியதுடன், அவரது கவுரவத்தை யும் பாதித்துள்ளது.

திரு சுப்பன் சென்னையை சார்ந்தவர். அவர் தன்னைப்பற்றி அவதூறாக எழுதிய பதிவை, பிளாக்கிலிருந்து ஒரு காப்பி எடுத்து கொள்கிறார். தன்னைப்பற்றி அவதூறாக பதிவு போட்ட கருப்பன் மீது நடவடிக்கை எடுக்க ஒரு புகார் மனுவை தயார் செய்து அத்துடன் பதிவின் காப்பியையும் இணைத்து சென்னையில் இருக்கும் சைபர் கிரைம் அலுவலகத்தில் பதிவு செய்கிறார்.

புகாரை பதிவு செய்த சைபர் கிரைம் போலீஸ். அதன் பின் தன்க்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, அந்த வலைப்பக்கத்தின் உரிமையாளர் யார்? அவர் வசிக்கும் முகவரி, நாடு முதலியவற்றை கண்டறிந்து, அவரின் மீது வழக்கை பதிவு செய்யும்.

Sec. 500.IPC
Punishment for defamation.
500. Punishment for defamation.--Whoever defames another shall be
punished with simple imprisonment for a term which may extend to two
years, or with fine, or with both.

மேலே குறிப்பிட்டுள்ள படி நீதிமன்றம் அவரின் குற்றச்செயல் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்பு இவற்றின் அடிப்படையில் அவருக்கு கீழ் கண்டவாறு தீர்ப்பு வழங்கும்

1. இரண்டு ஆண்டு வரையிலான சிறை தண்டனை
அல்லது
2. அபராதம் / நஷ்ட ஈடு
அல்லது
3. இவை இரண்டும் சேர்த்து.

புனைவுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் வாருங்கள்.- 2

தொடர்ச்சி -2
----------------


ஆரம்பத்திலிருந்தே ஆண்களோடான என் படிப்பு , என் கட்டட பொறியாளர் வேலை , அதன் பின் ஐடி வேலை எல்லாமே ஆண்களோடு மட்டும்தான்.

ஒரு நல்ல புரிதல் இருந்தது. சொல்லப்போனால் பெண்களை விட ஆண்களிடம் பழகுவது , கற்பது எளிதானது..

ஐடி வேலையில் தீயணைப்பு வீரனைப்போல எந்நேரமும் தயாராய் இருக்கணும் 24x7(x365 ).

இரவு நேர வேலைக்கு சென்று வந்தால் காதுபடவே ஏதோ பாலியல் தொழிலுக்கு சென்று வருவதை போல கிசுகிசு பேசும்

தமிழ்ப்பெண்கள் கூட்டம். ( பின்னர் அவர்கள் பிள்ளைகளுக்கு பாட விஷயமாக அணுகியதுமுண்டு )

வெளியூர் வேலை என்றால் பாஸ் கூட பயணம் செய்வது அவர் தங்கியிருக்கும் விடுதியில் தங்குவது என எப்பவோ நான் பெண் என்ற மன நிலை தாண்டியவள்.

42 வயதானவள்.. என் பிள்ளைகள் தமிழ் கலாச்சாரத்தில் வளர்க்கப்படவில்லை. நல்ல மனிதாபிமானமுள்ளவர்களாக மட்டுமே.

( மகனை வளர்த்தது ஈழத்தமிழ் சகோதர சகோதரிகள் பலர் )


99% நிர்வாணமான பெண்களோடு நீச்சல் குளத்தில் குளிக்க முடிந்த என் பிள்ளைக்கு தமிழ்படத்தை பார்க்க முடிவதில்லை.

எது ஆபாசம்.?..எது வக்கிரம்?..என புரிய முடியாத குழப்பும் சமூகத்தில் பெண்களை அடிமைப்படுத்தி போகப்பொருளாய் வைத்துள்ளோம்.

பெண் திறமையாயிருந்தால் இங்கு எடுபடாது..

அவள் சமையல் குறிப்புகளை மட்டுமே எழுதிவிட்டு நல்ல பிள்ளையாய் ஒதுங்கிடணும்..

தப்புகளை தட்டி கேட்கக்கூடாது. கேட்டால் அவளைப்பற்றி கதை கட்டுவோம். ஓட செய்வோம்..

[ ஒரு அப்பாவி பெண்ணிடம் " படுக்க வாரியா ' னு கேட்டான் கயவன் பதிவர் ஒருவன் . அவனை தட்டி கேட்டதிலிருந்து ஆரம்பித்தது இந்த துவேஷம்.)


இப்படி பல்வேறு தரப்பினரின் பிரச்னைகளை ஆழமாக அறிந்தவள்..

வாழ்க்கையின் பல பிரச்னைகள் எனக்கு துணிவையும் போராடும் சக்தியையும் தந்துள்ளது..

அதனால் மட்டுமே என்னால் ஒரு பாலியல் தொழிலாளியையும் , கொலைகாரனையும் சகோதர நேசத்துடன் பார்க்க முடிகிறது.

ஆனால் எனக்கே இப்படி ????.. !!!!!

ஆனால் இங்கு வலையுலகில் நடமாடும் சில நச்சு மனிதர்கள் அவர்களையெல்லாம் விட பன்மடங்கு கொடூரர்கள்..

இவர்களை சகித்துக்கொண்டோ, ஒதுங்கிக்கொண்டே போகலாம் தான்.

ஆனால் எத்தனை மன உளைச்சலை தருகிறது இவர்களின் நடவடிக்கைகள்..

எல்லாராலும் திரும்ப அடிக்க முடியாது என்கிற தைரியம்தானே?..

எல்லாரும் பொறுமையா செல்ல ஒரு காரணம் இருக்குது..குடும்பம் , வேலை இருக்குது என்ற இளக்காரம் தானே?..

" பூக்காரி" என்று எங்கு வாசித்தாலும் அந்த நியாபகம் வருதே வலி தருதே.வார்த்தைகள்...

அதனால் ஏற்பட்ட பின் விளைவுகள் .?. நமக்கு தெரியாமல் இருக்கலாம்.. ஆனால் அடி பட்டவருக்கு?...

சரி மன்னிப்போடு முடிந்தது என பார்த்தால் மன்னிப்பு கொடுத்ததுதான் தவறு என்பது போல இப்ப புதுசு புதுசா முளைக்கும் காரணம் ?..

அதைவிட என்னைப்பற்றிய அந்தரங்கங்களை வெளியிடுவதாய் மிரட்டல் வேறு..

என்னதான் செய்துவிடுவீர்கள் ?. உங்கள் நோக்கம் என்ன?.

என்னைப்பற்றிய தனிப்பட்ட விஷயத்தில் நுழையும் உரிமையை யார் கொடுத்தது ?..

நான் அப்படி என்ன கொடுமை செய்தேன்?.

மிஷ நரி என எழுதியதை கண்டித்தேனே அதற்காகவா?..

ஏழை எழுத்தாளர்களை எள்ளி " கெண்டைக்கால் மயிர் பிடுங்காதவன் " என நகையாடியதை கண்டித்தமைக்கா?

அருவருப்பான வக்கிரமான ஜோக்குகளை , கதைகளை பொதுவில் வாசிக்க நேர்ந்ததை சொன்னதற்கா.?( அதை பிரைவைட் வீயுவிற்கு வைக்கலாமே )


சமீபத்தில் என்னைப்பற்றி வந்த 2 புனைவு..


[[ மெனுவை எழுதி சர்வ் செய்த தாய்லாந்து பெண்ணிடம் வேறு வழியில்லாமல் தர.இப்படியே சாப்பிடும் போதெல்லாம் அவன் மராத்தி கவிதை ஒன்று ஒன்றாக அவளிடம் போக. அவள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு ஜான்சி அக்காவையும் கூப்பிட்டுக் கொண்டு வந்து விட்டாள்.
அவள் முப்பது நாளில் மராத்தி புத்தகம் வாங்கி படித்து அவனை காதலிக்க ஆரம்பித்து விட்டாளாம். அவளுக்கு முதலிலேயே அவன் தமிழ்ப்பிளாக்கன் என்று தெரிந்திருந்தால் தமிழ்
கற்றிருப்பேன்.இன்னும் முப்பது நாள் அவகாசம் தர சொல்ல சிபாரிசுக்கு ஜான்சி அக்காவை அழைத்து வர,மிரட்டத்தான் வந்தார்கள் என்று நினைத்து விட்ட முகிலனிடம் கூட
சொல்லாமல் கொள்ளாமல் ஓடி வந்து விட்டான்.மிரட்டல்களால் தான் அவன் ஓடி விட்டான் என்று முகிலன் எல்லோரிடமும் சொல்வி வைத்து விட்டார். தூரத்தில் இருந்து பார்த்தாலே
இதுதான் பிரச்சனை.எப்படி பேசியது காதில் விழும். இதுதான் இந்த தமிழ் சமுதாயத்தின் நிலை.
----------------------------------------------------------------------------
xxxxxxx பொண்ணுகளுக்கும் ராசியே இல்லை. இப்பிடித்தான் பாருங்க ஒரு தாய்லாந்து பொண்ணை ரொம்ப நாள் ரூட்டு விட்டுக்கிட்டு இருந்தாப்ல. அந்தப் பொண்ணு
போறப்ப வர்றப்ப எல்லாம் எதாவது கவிதை எழுதி அவ மேல் தூக்கி எறிவாப்ல. அதுவும் பொறுக்கிக்கிட்டு போயிரும். ஆனா ஒரு பதிலும் சொல்லாது.

ஒரு நா அந்தப்பொண்ணு ஜான்சி அக்காவைக் கூட்டிக்கிட்டு வந்திருச்சி. எனக்கும் ஷங்கருக்கும் அல்லு விட்டிருச்சி. ஏன்னா ஜான்சி அக்கா பயங்கரமான ஆளு.
ஜான்சி அக்கா கையில அரவிந்து இது வரைக்கும் எழுதுன கவிதைத் துண்டு எல்லாம் இருக்கு. வந்தவுக அரவிந்த விட்டு லெஃப்டு ரைட்டு வாங்கிட்டாங்க.
நான் என்.சி.சியில இருந்தவ. துப்பாக்கி சுடுறதுல ஃபர்ஸ்ட் பிரைஸ் வாங்கியிருக்கேன்.

]]

இதை குறித்து கருத்து சொல்ல அழைக்கிறேன்.. உங்கள் பெயர் பின்னூட்டத்தில் வராது....


இந்த மன உளைச்சல் இனி எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது...

புனைவுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் வாருங்கள்.- 1




புனைவுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் வாருங்கள்.

இணையத்தில் நுழையும்போது ஏதும் அறியாத வெகுளிச்சிறுமியாய் நான்..

என் 38 வயதில் நான் கற்றுக்கொள்ளாத விஷயங்களை நான் கடந்த 3 வருடத்தில் பன்மடங்கு கற்றுக்கொண்டேன்..

எத்தனை
நல்ல உள்ளங்கள் , ஆறுதல் தந்த இதயங்கள் , வழிநடத்திய ,
தமிழ் ஆர்வத்தை தூண்டிய நட்புகள்..?

தனிமை
காரணமாக தமிழில் பேசினால் நல்லா இருக்குமே என்ற ஒரே காரணத்துக்காக இணையத்தில் நுழைந்தவள் நான்.


அதுவரை
குடும்பம் , குழந்தைகள் , வேலை மட்டுமே என் உலகமாயிருந்தது பரந்து விரிந்தது.


எத்தனை குழுமங்கள் , எத்தனை விஷயங்கள் , எத்தனை பெரியவர்கள்...? வயது வித்தியாசமின்றி எல்லோரும் குழந்தை போல பழகி, நம்மையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்த , சிந்தனையை தூண்டிய ஆக்கபூர்வமான கருத்துகளை பறிமாறிக்கொண்டவை அளவிட முடியாதே..

முக்கியமா
சொல்லணும்னா , பாலர் பள்ளிக்கூடம் என்ற இழை அன்புடன் குழுமத்தில் ஆரம்பித்து 1000 தாண்டியும் ஓடிக்கொண்டே இருந்தது..
அதில் பங்கேற்ற சிறுவர்கள் யார் தெரியுமா?.. மதிப்பிற்குறிய சீனா ஐயா , கிரிஜா மணாளன் சார் , சக்தி ஐயா , சுரேஷ் அண்ணா, விசாலம் அம்மா , காந்தி அக்கா , தமிழ்த்தேனி ஐயா இப்படி எத்தனை அத்தனை பெரியவர்கள்..? ..

எங்கெங்கிருந்து
..
( அனைத்து நட்புகள் பெயரையும் குறிப்பிட இயலாமைக்கு மன்னியுங்கள் ). என்றும் நீங்கா இன்பம் தரும் நிகழ்வு அது..

அடுத்து முத்தமிழ் குழுமத்தில் என்னை வளர்த்த வேந்தன் ஐயா, சீதாம்மா , செல்வன் , ஷைலஜா அக்கா, கீதாக்கா, சிவா , காமேஷ் இன்றும் தொடற்கிறது தமிழமுதம் குழுமம் மூலம்..( இங்கும் அனைத்து நட்புகள் பெயரையும் குறிப்பிட இயலாமைக்கு மன்னியுங்கள் ).


நிற்க
..


இதெல்லாம்
ஏன் சொல்கிறேன் என்றால் இணையம் என்பது எனக்கு பாடசாலை... மிக அதிக பயனுள்ள இடம்.


1000 மடல்களை தாண்டி கருத்தாடல்கள் செய்த இடம்.. அதிகப்படியாக விரைவாக வாசிக்க கற்றுத்தந்த இடம்..
படிப்பதிலே போட்டியை வளர்த்த இடம்...

வேண்டாம்
என்று சொன்னாலும் வந்து குமிந்த நட்பு வட்டம்..

விடிகாலை
3 மணிக்கு விமானம் சென்னை வந்தாலும் குடும்பத்தோடு வந்து காத்துக்கிடந்த
நட்புகள்...

என் பிள்ளைகளோடு விளையாடிக்கொண்டே ரயிலில் கூட வந்த நட்புகள்..

என்னை பிரமிக்க மட்டுமல்ல திகைக்க , செய்தது செழிக்க செழிக்க தந்த அன்பு..

நான்
என்ன செய்தேன் அவர்கள் அன்பை பெற.?
மிஞ்சிப்போனால் கொஞ்சம் ஆறுதலாய் இருந்திருப்பேன் அவர்கள் பிரச்சனைக்கு..

வெளியில்
சிரித்து பேசும் பலருக்கு உள்ளே எத்தனை எத்தனை பூகம்பம் என அதிர்ச்சியடைந்துள்ளேன்..


இப்படி
பல சூழலில், சந்தர்ப்பங்களில் எழுத வரும் நட்புகளுக்கு வலையுலகில் இப்ப புதிதாக வந்துள்ளது தான் இந்த புனைவு என்ற சோதனை..


முக்கியமாய்
பெண்களுக்கு...


தொடரும்
.....

Tuesday, August 24, 2010

எதுவெல்லாம் இன்பம்.?..








































கற்பனை

செய்யதெரிந்தவருக்கு காதல் இன்பம்

தியாகம்

புரிய துணிந்தவருக்கு சாதலும் இன்பம்..

வாழ்வை

ருசிக்கத்தெரிந்தவருக்கே கடமை இன்பம்

சாவை

அஞ்சாதவனுக்கு சாதிக்க இன்பம்

வளர

நினைப்பவனுக்கு வலியும் இன்பம்

மன்னிக்க

எண்ணுபவனுக்கு மறதி இன்பம்

தனிமையானவனுக்கு

உரிமையோடான கண்டிப்பும் இன்பம்

அனுபவிக்க

தெரிந்தவனுக்கே துன்பமும் இன்பம்..

இன்னும் வளர்க்கலாம் ..................

நன்றி : படம் கூகுள்











Monday, August 23, 2010

குழந்தை பூஜா பற்றிய வதந்தி

நன்றி : http://www.hoax-slayer.com/105-17.ஷ்த்ம்ல்


Brief Analysis
The case described is real, but took place back in 2006. Police rescued her from her kidnapper at a railway station at Thiruvananthapuram, in the Indian state of Kerala. Although Pooja's parents have never been located, the child was later taken in by a couple in Thiruvananthapuram.


மேலும் வாசிக்க http://www.hoax-slayer.com/105-17.shtml

Detailed Analysis
Pooja
Police rescued four year old Pooja from a beggar at the Thiruvananthapuram railway station in April 2006
This widely circulated message details the case of four year old Indian girl, Pooja (sometimes "Puja") who was rescued by Kerala police from a kidnapper. According to the message, little Pooja was too young to give clear indications about her identity or the whereabouts of her family. The message asks that recipients forward the message on to as many people as possible in the hope that someone will be able to identify Poona's parents or other relatives.

Tuesday, August 17, 2010

எங்க வீட்டு குட்டியின் பள்ளி நகைச்சுவை..

























நன்றி : படங்கள் : கூகுள்


இந்த
பிளாக் ஆரம்பித்த போது தாய்லாந்து பெண்ணின் புன்னகை படம் போட்டு தந்தவரும், இப்ப அந்த படத்தை மாற்ற சொல்லி புதுப்படம் தந்தமைக்கும்,

தம்பி கண்ணனுக்கு விசேஷ நன்றி..


---------------------------------------------


சின்னவர் " அம்மா ஏன் எப்பா பார்த்தாலும் ஆக்டிவா இருக்கீங்க.?"

ஆமா உனக்கு பொண்ணு வந்து கல்யாணம் பண்ற வரை இப்படித்தான் "


உடனே அவர் , " அம்மா எனக்கு கேர்ல்ஸ் வேண்டாம் . அவுங்கள ரொம்ப டேக் கேர் பண்ணணும் . பாய்ஸ் தான் மேரி பண்ணிப்பேன்..பாய்ஸ் என்னையும் என் பைக்கையும் டேக் கேர் பண்ணுவாங்க.."

-----------------------------------------------

நேர்று தான் பள்ளி திறந்த முதல் நாள். புது பள்ளி..

" சரி சொல்லு வகுப்பில் எத்தனை பாய்ஸ் , எத்தனை கேர்ல்ஸ் , பேர் என்ன?.."

" நான் பாய்ஸ் பாக்கவேயில்லை... கேர்ல்ஸ் மட்டும்தான் பேசினாங்க.. ஐ திங் நான் ஹீரோ னு.. ( லீவுல தமிழ்ப்படம் பாக்காதே னு சொன்னா கேட்டாதானே?..படம் பக்கும்போதே அடுத்த சீன் சொல்லிடுவார்.. )

--------------------------------------------


கிண்டர்கார்டன் முடிந்து ஒன்றாம் வகுப்பு.. பல பாஷைகள் ஆரம்பிப்பார்கள்..


"அப்புரம் டீச்சர் என்ன சொன்னாங்க?"

டீச்சர் கேட்டாங்க "பஞ்சாபி அந்த பக்கம் போங்க,, ஹிந்தி இந்தப்பக்கம் போங்க , னு"

"சரி நீ எந்த பக்கம் போன?.."

நான் கேட்டேன் , " நான் தமிழ்நாடு எங்க போகணும்னு.?"




சிரிச்சு மாளல...,

அப்பாவியா ஏன் சிரிச்சீங்க ?..னு கேட்கிறார்..

----------------------------------

போன வாரம் காய்ச்சலுக்கு மருத்துவர் கிட்ட போனதும் , மருத்துவர் அவனிடம்

" எங்கெல்லாம் வலிக்குது"

" தலையில கொஞ்சம் சூடா இருக்கு.."

" அப்புரம்"

" தொண்டையில "

" எப்படி "

" இந்த எல்லோ சன் ( SUN) இருக்குல்ல அந்த மாதிரி ஹாட் ஆ இருக்கு.."

சீரியஸா இருந்த மருத்துவர் விவிசி..

------------------------------------------------------------------------



டீச்சர் என்னை குட் பாய் னு சொன்னாங்க.."

" அப்படியா , பரவால்லியே ,. முதல் நாளும் அதுவுமா.? ஆமா ஏன் அப்ப்டி சொன்னங்க?."

" நான் போய் முதல் சேர் உக்காந்தேன்.. அதை ஒரு பெண்ணுக்கு குடுக்க சொல்லிட்டு என்னை இரண்டாவதா உட்கார சொன்னாங்க.

நான் செய்தேன்.. அப்புரம் , முதலில் உட்கார்ந்த பெண்ணுக்கு போரடிச்சுது போல,.. நாந்தான் நாள் முழுக்க பேசி ஃபிரண்ட் ஆனேன்.."

" அவ்வ்வவ்வ்வ்"

----------------------------------------------------

Wednesday, August 11, 2010

பொண்ணுகளே இப்படித்தான் - குட்டிக்கதை





















"ரகு , என்னோட நண்பர் நவீன் சென்னைல இருக்கார். கூட படித்தவர் சொல்லிருக்கேனே.
அவர் நிச்சயமா உனக்கு ஒரு வேலை வாங்கி தரமுடியும்.."

" கூடப்படிச்சவங்கெல்லாம் இன்னுமா நியாபகம் வெச்சிருப்பாங்களா சுசி.?"

" எல்லாரும் போல அல்ல இவர். ரொம்ப உதவும் மனப்பான்மை அதிகம்.."

-----------------------------------------------------

" சார் கவலைய விடுங்க.. ஒரு வேலை வாங்கி தர முடிஞ்ச எனக்கு உங்க இருவரின் கல்யாணத்த நடத்த முடியாதா?."

" அப்படி இல்ல ரொம்ப தொந்தரவு செய்றேனோ னு.."

" சுசிக்காக என்ன வேணா செய்யலாம் சார்.. கடைசி வருஷம் புராஜக்ட் நேரம் என் அப்பாக்கு முடியாம போச்சு..
அப்ப சுசிதான் இழுத்து போட்டு என் புராஜக்டையும் முடிச்சு தந்தா. ரொம்ப குடுத்து வெச்சவங்க சார் நீங்க."

" ம். புரியுது.. ஆனா வீடு பாக்கணும் , அது இதுன்னு பெரிய வேலைகள் இருக்கே.. இரண்டு வீடுகளும் பகை எங்க காதலுக்கு ."

" கவலைய என்கிட்ட விடுங்க சார். நம்ம பசங்க இருக்காங்க.. எள்ளுன்னா எண்ணெயா நிப்பாங்க.. நீங்க சுசிய வர சொல்லுங்க,."

-------------------------------------------------

" சுசி நீ இப்போதைக்கு என் அக்கா வீட்டில் இரு.. எல்லாம் சரியானதும் நானும் சாரும் வந்து அழைத்து செல்கிறோம்."

" கஷ்டமா இருக்கு நவீன். எங்களால உனக்கு அதிக சிரமம்.. "

" ஏன் இப்படி தனித்து பேசுற சுசி.? . நீ என்னோட பெஸ்ட் பிரண்ட்.. உனக்கு செய்யாம யாருக்கு செய்ய.?"


" சார் , இந்தாங்க 20,000 ரூபாய் .. சம்பளம் வரும் வரை சமாளிங்க..மேற்கொண்டு ஏதும் வேணுமுன்னா தயங்காதீங்க.."

சுசிக்கு
கண்ணீர் வந்தது..ரகுவோ பிரமித்து போய் நின்றான்.

----------------------------------------------

" அழகான வீடு.. நவீன் நல்ல வீடா செலக்ட் செய்திருக்கான்... பாருங்க எனக்கு செடிகள் பிடிக்கும் னு எத்தனை செடி வாங்கி வெச்சிருக்கான்.?"


" இங்க பாரு .. சமையல் அறையில் பாத்திரங்கள் கூட..."


"ஆமா சுசி . கட்டில் மெத்தை , மேசை , நாற்காலி கூட அவனே வாங்கிட்டான் , நான் வேண்டாம்னு சொல்ல சொல்ல.."

" என்ன தங்கமான மனசு பாருங்க.. ஒரு கல்லூரி தோழிக்காக இத்தனை மெனக்கெட முடியுமா யாராச்சும்..? ரியலி ஐயம் ப்ரவுட் ஆஃப் ஹிம்.."

" ம்... சுசி அப்புரம் ஒரு முக்கியமான விஷயம்.."

" சொல்லு ரகு."


" ம். சொல்றேன்னு தப்பா நினைக்காதே.. இனி நவீன் கூட பேசுவதை குறைச்சுக்கோ.."

" என்ன சொல்ற ரகு.? "

" ஆமா.. இதுநாள் வரை நீ பழகியது வேற . இனி நீ என்னோட மனைவி .."

" சோ . வாட்.. என்ன பேசுற ரகு.. இவ்வளவு செஞ்சவனுக்கு நான் நன்றியோட இருக்க கூடாதா?"

" நன்றியோட இருக்க , நான் இருக்கேன்.. ஆயுசுக்கும் நண்பனா. ஆனா நீ மட்டும் குறைச்சுக்கோ னு சொல்றேன்."

" புரியல ரகு.. "


" நீயும் நவீனும் நட்பா இருப்பது எனக்கு பிடிக்கல னு புரிஞ்சுக்கோயேன்.. விளக்க முடியாது " சொல்லிவிட்டு உள்ளே சென்றான்.

----------------------------------------------------------------------------------

" சார் எப்படி இருக்கீங்க.. வீடுல்லாம் புடிச்சிருக்கா.?..
"

"ம். ரொம்ப நன்றி நவீன். நீங்க இல்லாட்டி எங்களால ஒண்ணுமே செய்திருக்க முடியாது.. வாழ்நாள் பூரா மறக்க மாட்டேன் இந்த உதவியை.."


" என்ன சார் பெரிய வார்த்தைல்லாம் சொல்லிட்டு... ஆமா சுசி எங்க.? . நல்லா ஒரு வெட்டு வெட்டலாம்னு வந்தேன்.."

" ஓஹ் . அதுவா.. உங்க கிட்ட ஒரு விஷயம் பேசணும் நவீன்.. "

" சொல்லுங்க சார்.."

" அது வந்து.. வந்து.. இப்ப கல்யாணம் ஆனதும் சுசி கொஞ்சம் தனிமையை விரும்புறார்போல தெரியுது..ஒருவேளை அவ பெற்றோரை பிரிந்ததால் இருக்கும்.."


" இருக்கும் இருக்கும் சார்..நல்லா பாத்துக்கோங்க அவளை .. நான் வரேன் சார்.."

" இருங்க நவீன் .. நீங்க எனக்கு பெஸ்ட் பிரண்ட் தான் இனி.. நாம சந்திப்போமே அலுவலகத்தில்;."


"பரவால்ல சார்.. ஏதாச்சும் உதவின்னா கூப்பிடுங்க "

----------------------------------------------------------

கனத்த
மனதோடு " இந்த பொண்ணுங்களே இப்படித்தான் " னு மனதுள் சொல்லிக்கொண்டே வெறுப்பாய் சென்றான்..


உதிர்ந்த
ஒரு துளி கண்ணீரை துடைத்தவளாய் நவீன் செல்வதை மாடியிலிருந்து பார்த்தாள் சுசி..

Friday, August 6, 2010

3d செய்தித்தாள் பாங்காக்கில்.. முதல்முறையாக



http://bangkokpost.newspaperdirect.com/epaper/viewer.aspx


செய்தித்துறையில், 64 வருடம் நிறைவடைவதை கொண்டாடும் பொருட்டு பாங்காக் போஸ்ட்

இன்று 3டி யில் படங்களை வெளியிட்டுள்ளது.


அதற்கான சிறப்பு கண்ணாடியையும் இலவசமாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.



40 பக்கம் கொண்ட செய்தித்தாளில் எழுத்துகள் அதே வடிவம் கொண்டிருந்தாலும் படங்களும் விளம்பரங்களும்

3டி யில் அமைந்திருப்பது மிக சிறப்பு..

இதற்கான சிறப்பு விலை ஏற்றம் ஏதுமில்லை..

நாட்டிலேயே முதல்முறையாக இப்படி 3டி படங்கள் அளித்து வாசகர்களோடு தான் சமீபத்தில் பெற்ற விருதினை கொண்டாடி மகிழ்கிறது.


படங்கள் பார்க்க : http://bangkokpost.newspaperdirect.com/epaper/viewer.aspx

Tuesday, August 3, 2010

நிஜமா நிழலா - சின்ன தொடர்..







பெண் பார்க்க செல்லும்போதே ஏகப்பட்ட கேள்விகள் ரகு மனதில்..

" அக்கா , பொண்ணு நேரில் பார்க்க அழகா இருப்பாளா.?"

" படிச்சதெல்லாம் கான்வெண்டில் தானே?.."

" ஆங்கிலம் சரளமா பேசுவாளா.?"


" மாடர்ன் உடை உடுத்துவாளா.?."


எல்லாவற்றையும்
பொறுமையா கேட்ட அவன் அக்கா,


" அதான் புகைப்படம் அனுப்பினேனே.. அதில் உன் கேள்விக்கான விடையும் இருக்கு..
கான்வெண்டில் படிச்சவ தான் நுனி நாக்கு ஆங்கிலம் பேசுபவள்தான்."

மனதுக்குள்
ஒரு வித கலக்கத்துடனே நகரத்திலுள்ள அந்த பெரிய உணவு விடுதிக்கு சென்றார்கள்...


கல
கல சிரிப்புடனே எல்லோரிடையேயும் பேசி சிரித்துக்கொண்டிருக்காளே அவளா பெண்?..


நடிகை
மீனா சாயலில் , கொஞ்சம் தெத்துப்பல்லோடு...பிங்க் நிற சேலையில்.. ஒடிசலாக..


கூட
ஜீன்ஸ் போட்டுக்கொண்டு மற்ற பெண்ணொருத்தி, அது அவள் தங்கையாக இருக்கணும்..


இன்னும்
கொஞ்சம் பருமனா ஆனா அழகா தோழி போல ஒரு பெண்.. அவள் அண்ணியாக இருக்கணும்..


அடுத்து
வயதான அம்மா. வேஷ்டி கட்டிய அப்பா, மரியாதை கலந்த பயத்தோடு தம்பியும் அண்ணனும்..
இவர்கள் வந்ததை பார்த்ததும் ஒரு வணக்கம் சொல்லிவிட்டு மிக சகஜமாக இருந்தாள்..

ரகுவுக்கு
இருந்த அளவு ஆர்வமேதுமில்லை...அவளிடம்...
அக்காவிடம் கண் ஜாடையிலேயே கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டான் அவள்தான் பெண் என்று.. பார்த்த மாத்திரத்திலேயே பிடித்துவிட்டது..

ஆனால்
அவளோ தன் அக்காவிடமும் அக்கா குழந்தை சுமி கிட்டயும் பேசுவதில்தான் ஆர்வம் காட்டினாள்.
எல்லோரும் அறிமுகப்படுத்திக்கொண்டு எதிரெதிர் அமர்ந்தார்கள்.. உணவு ஏதும் சுவையாக இல்லை ரகுவுக்கு..

ஆனால்
அவளோ ஒவ்வொன்றையும் ரசித்து விமர்சித்து அதை பற்றி தன் அண்ணியிடம்
கேட்டும் தெரிந்துகொண்டாள்.. தனியாக பேச அனுமதிக்கமாட்டார்களா என ஏங்கியவனை புரிந்தார்போல் , பெண்ணின் தகப்பனார் , அத்தானிடம் ,

" வேணும்னா தனியா பேசட்டுமே " என சொல்லிவிட்டு மற்றவர்களை அழைத்து சென்றார்.

எந்த
வித வெட்கமும் படாமல் , மிக சகஜமாக இருந்தவளிடம் , திக்கி திணறி ,


" உங்க ஹாபீஸ் என்ன.?"


அடுக்க
ஆரம்பித்தாள்... தோட்டக்கலையிலிருந்து , மிருகங்கள் , சேவை , அது இது என..


சப்பென்று
ஆனது..


பிரபல
ஆங்கில நாவல்களின் பெயரை, கவிஞர்களை பற்றி கேட்டான்..
ம்ஹூம்..

அதில்
ஆரவமில்லை என சொன்னாள் நேரடியாக..


அவள்
செல்லும் , செய்யும் ஷாப்பிங் பற்றி கேட்டதற்கும் ,


" எல்லாம் அம்மா அண்ணியே வாங்கி தருவார்கள் " என்றாள்.


" அப்ப மாப்பிள்ளையும் அப்படித்தானா?."

" ஆமாம்.."
நேரடி பதில் அதிர்ச்சியாய் இருந்தது அவனுக்கு..

" அப்ப அவங்களுக்கு பிடிச்சிருந்தா போதுமா?.. உனக்குன்னு ஏதும் ஆசைகள் எண்ணங்கள் இல்லையா.?"


" ம்................................. இல்லை.." னு யோசித்து சொன்னாள்..

" என்னைவிட அவங்க நல்லா பார்ப்பாங்க " னும் சொல்லி வைத்தாள் வெகுளியாக.

தான்
எதிர்பார்த்த மாடர்ன் பெண் அல்ல இவள் என புரிந்துகொண்டான்..
இவளை எப்படி அமெரிக்கா கூட்டி செல்வது..

" உனக்கு அமெரிக்கா வர விருப்பம்தானே?."


" ம்.. இல்ல.. ஆனா அப்பாக்கு சரின்னா எனக்கு ஒக்கே.."


அதிர்ந்தான்
..


" கட்டாயப்படுத்தினார்களா..?"

" நோ , நோ.... கல்யாணம் கட்டினா மாப்பிள்ளை கூட போகணும்தானே.. அது அயனாவரம்னா என்ன , அமெரிக்கா னா என்ன.?"

எவ்வளவு எளிதா எடுத்துக்குறா?..

தான்
எதிர்பார்த்தவை இல்லையென்றாலும், ஏனோ அவளின் வெகுளித்தனமான வெளிப்படையான பதில்கள், சிரிப்பு , அழகு பிடிச்சிருந்தது..


" உனக்கு ஏதாவது கேள்வி இருக்கா என்னிடம்?"


"ம்..ம்.. " யோசித்தாள்...
பின்பு கடக் என சிரித்தாள்...

" என்ன " னு கேட்டான்.

" ம்.. ஹஹ,.. இல்ல..நீங்க புகை பிடிப்பீங்களா.?."


சட்டென்று
என்ன சொல்ல னு தெரில அவனுக்கு.. ரெகுலரா பிடிக்காட்டியும் அவ்வப்போது குடித்ததுண்டு.. மதுவும் கூட.
ஒருவேளை உண்மையை சொல்லி அவளுக்கு பிடிக்காமல் போய்விட்டால்?.

" இல்ல எனக்கு அந்த பழக்கமில்ல "
அவள் அந்த பதிலை ஏற்றாளா னு ஒரே குழப்பமாய் இருந்தது அவள் பார்வை.

பேசி
முடிந்ததும் , அக்கா வந்து கல்யாணத்துக்கு நாள் குறித்துள்ளதாகவும் , அதில் ஒன்றை தேர்வு செய்யும்படியும் சொன்னார்.


அப்பவே
அவளை கூட அழைத்துக்கொண்டு சென்றுவிடலாமா என தோணியது ரகுவுக்கு...


--------------தொடரும்...