Monday, February 21, 2011

நடுநிசி நாய்கள் - வாங்க சைக்கோவாகலாம்.



நாய்கள் என்ன பாவம் செய்ததுன்னு தெரியலை.?.. நாய்கள் கிட்ட அன்பா இருந்து பார்த்துள்ளீர்களா?..

சரி எதாவது விலங்குகள் கிட்ட?.. அது ஒரு தொத்துவியாதிங்க.. பாடா படுத்திடும்..

இப்ப ஏன் சம்பந்தா சம்பந்தமில்லாம உளறல்னு நினைக்கிறீங்க..ஆமா உளறலாத்தான் தெரியுது நாட்டு நடப்புகள்..


நாளையிலே இருந்து மருத்துவமனைகள் எல்லாம் அறுவை சிகிச்சைகளை பொது மேடை போட்டு நடுத்தெருவிலேயே கண்ணாடி திரைக்குள் செய்யணும்..

அப்புரம் ,

எல்லா தாம்யத்யங்களும் கூட இதே போல நடுத்தெருவில்..

குப்பை கூளங்களை குப்பை தொட்டியில் கொட்டலாமா ?.. கூடவே கூடாது.. ஏன் காட்டில் குப்பை தொட்டிகள் இருக்கா என்ன?.. விலங்குகள் சுத்தம் செய்வதில்லையா?...

அப்புரம் முக்கியமா யாருமே உடை உடுத்த கூடாது...

என்னங்க பைத்தியமா உங்களுக்கு னு கேட்குறீங்க..

விடை: நான் என்னங்க வித்யாசமா சொல்லிட்டேன்.. வீட்டில் சின்னத்திரையில் இவையெல்லாம் தானே விளம்பரம் என்ற பேரில் விருந்தாக படைக்கின்றீர்கள்.?.. பொழுதுபோக்க , நல்ல விஷயம் கற்க என இருந்த சினிமாக்கள் சைக்கோ ஆவது எப்படி என பாடம் நடத்த ஆரம்பித்துவிட்டனர்..

அதனால் இனி எல்லோருமே விலங்காகிவிட்டால் பிரச்னையேயில்லைதானே?..

அன்பா , - அப்படீன்னா என்னங்க.. ?.. அதுவா அது வந்து என் வீட்டில் , என் குழந்தை குடும்பத்தாரிடம் மட்டும் நான் போட்டுகாட்டும் நாடகம்.. அத மாதிரி எல்லாரும் நாடகம் போட்டுக்குவோம்.. பொதுவுல வரும்போது ஒருவரை ஒருவர் வசவுகளால், ஆபாச படங்களால் , மறைமுக மிரட்டலால் , கிசுகிசுக்களால் கிட்டத்தட்ட ஒரு சைக்கோவாக மாறிவிட்டு , பின் வீட்டுக்குள் சென்றதும் நம் நாடகத்தை தொடரணும்...

யுத்தம் செய், என சொல்லி யுத்தம் செய்ய பழக்குவோம்.. மறந்துபோய்கூட பெண்ணை சுயமா எதிர்கொள்ளும்படி கராத்தேவோ, தற்காப்பு கலையோ கற்றுக்கொடுக்காமல் , அவளை ஒருவன் மானபங்கபடுத்தியபின், அவள் தூக்கில் தொங்கியபின் வீரம் வந்து கொலைசெய்ய ஆரம்பிப்போம்.. அதாங்க யுத்தம் செய்ய.. ஏன்னா அதுதான் வீரம் , அதுதான் அழகு.. .அதை வரிக்கு வரி பாராட்டிட்டோம்னா வாழ்நாள் சாதனை செய்த மகிழ்ச்சி.. அப்பாட..நமக்கெதுக்குங்க சமூக அக்கறையெல்லாம் . அத கவனிக்க ஏதாச்சும் இ.வா வேல வெட்டியில்லாம இருப்பாங்க கவனிச்சுக்குவாய்ங்க..( படத்த எப்படி மோசமா எடுத்த என்ன ?. அதான் கலெக்ஷன் ஒரு பங்க அனாத குழந்தைங்களுக்கு குடுக்கோம்ல.. வாய மூடுங்க.. )

என்னோட அல்ப கட்டுரையோ, கவிதையோ, பதிவோ மிக மோசமான பத்திரிக்கையில் வெளிவந்தா கூட போதும். அதுக்காக யார் காலைவேணா பிடிக்க ரெடியாயிருக்கேன்.. யாரை வேணா புகழ்வேன்.. எனக்கு புகழ் முக்கியம்..

எழுத்துகளில் பாலியல் தொழில் செய்கிறாரா?. அவரை தூக்கி பிடிக்காட்டி என்னை அந்த நல்ல?? கூட்டத்திலிருந்து ஒதுக்கி வைப்பாங்க.. அதாவது பரவாயில்லை.. கூட்டமா சேர்ந்து தண்ணி அடிக்கும்போது என்னை பற்றி பேசுவாங்க.. பயமா இருக்கு எதுக்கு வம்பு.. பேசாம தலையாட்டிட்டு போறேன்...ஊரோடு ஒத்துவாழ்னு பெரியவா சும்மாவா சொல்லிருக்காங்க.. பெரியவா சொன்னா பெருமாள் சொன்னாப்ல.. கன்னத்துல போட்டுக்குறேன் குவாட்டரும் குடிச்சிக்கிறேன்.. பின்ன ஒசி வேற..


அட அவர் பகுத்தறிவாதிய்யா.. ரொம்ப அறிவாளி..

அப்படியா அப்ப ஏன் அசிங்க அசிங்கமா பேசுறார்?..

ஹ அது அப்படித்தான்.. ஏன்னா அது ஒரு கெத்து பாருங்க.. ஒரு பய கிட்ட வரமாட்டான். கெட்ட வார்த்தைக்கு பயந்தே என்னை அறிவாளின்னு ஒத்துக்குவானா இல்லையா?..

இத பாருங்க ரொம்ப நியாயம் பேசுனீங்கன்னா , உங்க பக்கம் யாரும் திரும்பி கூட பார்க்க மாட்டாங்க அன்னந்தன்னி புழங்கமாட்டாங்க.. ஓஹ் . அப்படியா.. அப்ப நான் என்ன செய்யணும்.. ?.. பிடிக்குதோ பிடிக்கலையோ, தப்புன்னா தட்டி கேக்காம, எல்லா இடத்திலேயும் போய் நல்லபுள்ளையா அட்டெண்டன்ஸ் போட்டுரணும்.. அப்ப உங்களை முன்புறமா குறை சொல்ல மாட்டாங்க ( "1- அப்ப பின்புறமா ?".. "2- ஹலோ ரொம்ப கேள்வி கேட்டா..." " 1- அய்யோ சாரி இனி கேக்கல.. " ).


பெரியார் பெண்ணுரிமைன்னு சொன்னத சிலர் தப்பா புரிஞ்சுட்டாங்க போல.. பாலியல் சுதந்திரம்னு எண்ணி அதுக்கொருபக்கம் கிழி கிழி.. நோக்கமே மறந்து போச்சா இல்லை நோக்கமே இதுதானோ.?..


ஆட்சியில் இருந்துகொண்டு ஊழல்செய்து சிறை செல்வது கூட நட்சத்திர விடுதிக்கு சென்று ஏதோ பத்ம பூஷன் அவார்ட் ரேஞ்சுக்கு மதிப்பு போலவும் குழந்தைகள் மனதில் பதிய வைக்கிறோமே ...?.

ஆக மொத்தம் எவை எவை தடுக்கப்படணுமோ அவை அழகாக கூட்டமாக நிறைவேறிக்கொண்டேயிருக்குது.. சுயநலத்தோடு ஆங்காங்கே..

இதைவிடவா நடுநிசி நாய்கள் பயம் தந்துட போகுது..?.. என்ன மேலே சொன்னதுபோல இனி பொதுவெளியில் விலங்குகள் போல வாழ பழக்குது இத்தகைய அறிவார்ந்த , ஆழமான , கலைநயத்தோடான, கற்பனாசக்தி மிகுந்த , உயர்தர படங்கள்.. வாங்க சைக்கோவாகலாம்..

எல்லாத்தையும் சகிச்சுகிட்டு , தாங்கிகிட்டும் உங்களால அமைதியா இருக்க முடியுதுன்னா, பூர்வ ஜென்ம புண்ணியமா இருக்கலாம்.. அந்த புண்ணியாத்மாக்கள் வயோதிகர் இல்லங்களில் ( அனாதை, மனநிலை சரியில்லாதோர் இல்லம் ) இருந்தா ஒரு எட்டு போய் பார்த்துட்டு வரலாம்.. .. ஒருமுறை விசிட் செய்வது அவர்களுக்கு 100நாள் பலம் தரும்..அது முடியாதவங்க, தப்புகளை துணிவா தட்டி கேட்கலாம்.. ஆனா உலகின் மொத்த சாக்கடையும் உங்க மீது கொட்டப்படும்..


எங்கே யாரிடமிருந்து ?..


நடுநிசி நாய்கள் - ஜாக்கிரதை... நம்முள்...

ஆனா சமூகத்தையும், சக மனிதர்களையும் அதிகமா, ஆழமா நேசிப்பவராலேயே தப்புகளை துணிவா தட்டி துணிவா கேட்க முடியும்.. அப்ப நீங்க?..



எனது கண்டனங்கள் இப்படி படம் எடுத்து சமூகத்தை கெடுக்கும் அனைவருக்குமே..

( அதில் உழைத்திருக்கும் அனைவருக்கும் எனது அனுதாபங்களும் )

மீண்டும் ,


நாய்கள் கிட்ட அன்பா இருந்து பார்த்துள்ளீர்களா?..மனிதர்களை விட அன்பை கொட்டும்..

அவை மட்டுமல்ல எல்லா விலங்குகளையுமே அன்பால் கட்டிப்போட முடியும்போது மனிதர்கள் நாம் மட்டும் ஏன் இப்படி விசித்திரமாய் , விகாரமாய் ?...

அன்பும் கொட்டிக்கிடக்கு.. அள்ள தெரியாமல் , பகிர முடியாமல்... மென்மையை சொல்லும் படங்கள் எப்ப வரும்?..நம் குழந்தைகளுக்கு.?.










படம்: நன்றி கூகுள்..