Tuesday, November 6, 2007








யாரிவன்???.
===========


மாட்டிக்கொண்டேன், இன்று..வசமாக..
பெரிய அழகனாயிருந்தாலும் என் கவலை அதுவல்ல.


உன் பார்வை சரியில்லை என்று எத்தனை நாள் விலகி சென்றேன்...
நீ இருக்கும் திசை கூட வரமாட்டேனே!.


எல்லாருக்கும் உன்னை பத்தி தெரியும்..

ஆனால் அவர்களுக்கு உன்னைப்பற்றி கவலையில்லை.


நீயும் அவர்களிடம் நல்லவன்போல் பாசாங்கு செய்கிராய்..

அவர்களுக்கு உறுதுணையாகி விடுகிறாய் சில சமயம்..


என்னை அப்படி முறைத்து பார்க்காதே!..

தாங்க முடியாது அழுதுவிடுவேன், அசிங்கமாயிருக்கும்!.


நான் போகும் பாதை குறுக்கே நின்று என்ன விளையாட்டிது?

இன்று ஒரு நாள் மட்டும் வழி விட்டு விலகிவிடு,


உனக்கு இன்று வேலையில்லை என்றால் எனக்கென்ன?

என்க்கு அலுவல் செல்ல வேண்டும் புரிந்துகொள்!...

No comments: