Monday, December 3, 2007

கடைக்குட்டியின் கதை (3) - இதென்ன புது சோதனை!! ==============================================
மருத்துவரை சந்திக்க கேள்விகளோடு மகன் கிளம்ப

35 வயதுக்குமேல் குழந்தைபேறுக்கு பரிசோதனை பரிந்துறைக்க
( டொளன் சிண்ட்ரோம் பரிசோதனை )
உருவமில்லாத கருவாயினும் உணர்ச்சியுண்டு என நான் மறுக்க,
மூளை வளர்ச்சி குறைய வாய்ப்பதிகமென மருத்துவர் விளக்க,
எதுவாயினும் படைப்பவன் தருவான் அதற்கான தெம்பு என முடித்தேன்..

மிகுந்த உற்சாகமாய் வந்த கணவரும் மகனும் கலக்கமாய்,
கலகலப்பை தொலைத்துவிட்டு கலங்கிய கண்களுமாய்,
அட! இது ஒரு சின்ன விஷயம் இது வேதனையா?
நம் கடவுள் நம்பிக்கைக்கு வந்த சோதனை மட்டுமே என அவர்களை திருப்திபடுத்தி முடித்துவிட்டாலும், என் குழப்பம் ஆரம்பித்தது..

RH -ve , ஜெஸ்டேஷனல் டயாப்டீஸ், அதிக வயது,வேலைப்பழுவின் சுமை என பலவிருந்தாலும், வயற்றில் ஒரு அதிசய சுமை, ஆனந்தப்பட்டேன். அம்மாமேல் கை போட்டு ,கால் போட்டு கோழிக்குஞ்சாய் தூங்கும் மகன், தனியே எனை படுக்கவிட்டு அன்று முதல் தனிமையிலவன்,
அவன் நினைப்பில் ,அரவணைப்பின்றி தூக்கத்தை நான் தொலைத்தேன்.

------------மருத்துவ பரிசோதனை பற்றி தவரேதும் இல்லை.. எனக்கு அந்த கருவில் ஊசியை செலுத்தி அதனை வலிக்கச்செய்வதற்கு பதில் ஆயுசுக்கும் மன வளர்ச்சி குன்றிய குழந்தையை வளர்த்துக்கொள்ளலாம் என்பது என் எண்ணம்....
----------உங்கள் எண்ணங்களை வரவேற்கிறேன்,..............

1 comment:

Sundaram said...

Dear madam,

Please go with the medical opinion since it is good and important to both parents and children.It is better than taking a chance which may end in life long sufferings.

Sundaram