

மீண்டும் மீண்டும்!!!
=================
தென்றலாய் நுழைந்து ,
மண்வாசனை முகர்ந்து ,
குயில்களின் ஓசை பிடித்து ,
மர இலைகள் சலசலத்து,
தூரலில் ஆரம்பித்து,
வேகமெடுத்து புயலாய் மாறி,
சுனாமியாய் அனைத்தையும் எடுத்துச்சென்றாய் ,
படிப்பினை விட்டுச்சென்றாய்!!.
எல்லாம் முடிந்தது என்றிருந்த வேளையில்,
மீண்டும் தென்றலா????????
இது வரமா ? சாபமா?.
இது வரமா ? சாபமா?.
கெடுப்பினையா? கொடுப்பினையா?
இல்லையில்லை இதுதான் வாழ்க்கை!......