Wednesday, October 31, 2007





மீண்டும் மீண்டும்!!!

=================


தென்றலாய் நுழைந்து ,

மண்வாசனை முகர்ந்து ,

குயில்களின் ஓசை பிடித்து ,

மர இலைகள் சலசலத்து,

தூரலில் ஆரம்பித்து,

வேகமெடுத்து புயலாய் மாறி,

சுனாமியாய் அனைத்தையும் எடுத்துச்சென்றாய் ,

படிப்பினை விட்டுச்சென்றாய்!!.


எல்லாம் முடிந்தது என்றிருந்த வேளையில்,

மீண்டும் தென்றலா????????
இது வரமா ? சாபமா?.

கெடுப்பினையா? கொடுப்பினையா?


இல்லையில்லை இதுதான் வாழ்க்கை!......