Thursday, November 4, 2010

தீப ஒளி திருநாள்...










1. “Life is a festival only to the wise.”

Ralph Waldo Emerson

2. “You are invited to the festival of this world and your life is blessed”

Rabindranath Tagore


3. “Let no one judge you in food or in drink, or regarding a festival or a new moon or sabbaths”

Bible


4. “Revolution is the festival of the oppressed”

Germaine Greer


5. “The truth is that existence wants your life to become a festival...because when you are unhappy, you also throw unhappiness all around. ”

Rajneesh

பாருங்க ஒவ்வொருத்தர் பார்வையிலும் திருவிழா என்பது மாறுபடுகிறது...

சிலருக்கு கிரிக்கெட், ஃபுட்பால், இசை, நடன , சினிமா திருவிழாக்கள் வருடமுழுவதுமே..

ஏழைகளுக்கும் உழைக்கும் வர்க்கத்துக்கும் வருடமொருமுறை மட்டுமே..

போராடி பெறும் வெற்றியே திருவிழா சிலருக்கு..

எது எப்படியோ ,

பண்டிகை என்பது மகிழ்ச்சியை பரவவிடுவது பகிர்வதின் மூலம்..எனக்கு.( Christmas meant for sharing)

பட்டாசுகளும் , தீபாவளி விளக்கும் அலங்காரம் செய்யப்பட்டு வந்துள்ளது வீட்டுக்கு..தீபம் ஏற்றினால் அதன் அழகு போய்விடுமே என வருத்தமே மிச்சம்..

விளக்கில் கூட கல் , மணி வேலைப்பாடுகள் செய்வார்களா என்ன?..


மக்கள் அனைவரையும் பாரபட்சம் பாராது திருவிழாக்கள் ஒன்றிணைக்குமானால் தவறேயில்லை கொண்டாட்டங்கள்..

மகிழ்ச்சியான மனிதனால் எளிதில் சாதிக்க முடியும்...

முக்கியமா குழந்தைகள் பகிர ஆரம்பிப்பது இத்தகைய மகிழ்ச்சியான தருணங்களிலேதான்..

தன்னுடைய உழைப்பில் தன் குடும்பத்தை மகிழ்வித்த மகிழ்ச்சி குடும்ப தலைவன் தலைவிக்கு...


உற்றார் உறவினரை சந்திப்பதும் ஆசி பெறுவதும் அதன் மூலம் பெரியவர்களுக்கு மரியாதை , மதிப்பளித்து சந்தோஷப்படுத்துவதும் மன நிறைவான செயல்...

வெடிகள் வெடிப்பது ஒரு வகையில் கல்வி..அதில் நிறைய விஷயம் ஒளிந்துகிடக்கின்றது..

பயந்த குழந்தைக்கு நம்பிக்கையோடு தந்தை கைபிடித்து மத்தாப்பு கொழுத்தி பயம் போக்குவார்..

ஒரு பட்டாசு தயாரிப்பில் சம்பந்தப்பட்டுள்ள உழைப்பும் , வேதியியலும் அழகுணர்ச்சியும் , அதிசயமே குழந்தைக்கு.. அதோடு தீ விபத்து பற்றிய விழிப்புணர்ச்சியும் முதலுதவியும் கூட.. அதை எடுத்து சொல்வோம்..மறவாது...

இந்த முறை இஸ்லாமிய , புத்த மதத்தினரோடு , எம் கிறுஸ்தவ குழந்தைகள் பகிர்ந்து வெடிப்பார்கள்...

இங்கு சீன வெடிகள் குறைந்த விலையில் கிடைக்குது....

ஏனெனில் தலைநகரில் வெடி வெடிக்க தடை..அல்லது அபராதம் கட்டணும்..

ஊருக்கு ஒதுக்குபுறம் சென்று வெடிக்கணும்..

( வெடினா 1000 வாலா லாம் இல்லை.. மத்தாப்பு வகை மட்டுமே ).

முக்கிய விழாவின் போது ( புது வருடம் அரச விழா போன்று ) பொதுமக்கள் ஒன்று கூடும் இடங்களில் , அரசே மணிக்கணக்காய் வெடித்திருவிழா நடத்தும்.. அதை ஊரே வேடிக்கை பார்க்கும்..

சின்னாவருக்கு லியோனி என்ன பேசுறார் என புரியாவிட்டாலும் , லியோனியின் பாடி லேங்குவேஜ்+ குரல் விழுந்து விழுந்து சிரிப்பை வழவழைக்குது..நமக்கு அறுவை என தெரிவது குழந்தைக்கு இனிமை,..

நாமும் குழந்தையாக ரசிக்க பழகணுமோ?..


தீபத்திருநாளில் மகிழ்ச்சியை பகிர்ந்து பரப்பிட வாழ்த்துகள்..


( இதே நேரத்தில் குழந்தைகளை பலிகொடுத்து நிற்கும் கோவை குடும்பத்தார்க்கும், அம்பிகாவின் குடும்பத்தார்க்கும் , இன்னும் பலருக்கும் எம் ஆழ்ந்த அனுதாபங்கள்..

இத்தகைய விபத்துகள் இனி நேராமல் தடுக்க நம்மால் முடிந்ததை சமூகத்தில் கண்டிப்பாக செய்வோம் )


----------


படம் : நன்றி கூகுள்.