Monday, December 3, 2007

நட்பு புரிந்தும் புரியாத போது..
=========================
அன்பாய் சில நேரம், நகைச்சுவையாய் பல விஷயம்,

அதிகாரமாய் விவாதிப்பு,இவற்றில் தெரியாத உன் நட்பு,
அதிக காரமாய் உன் கோபத்தில் ஆழமாய் தெரிகிறதே!.
வியக்கிறேன் நான்...

அருகிருந்தும் , அடிக்கடி பேசிக்கொண்டும்,
அடிவிழாத குறையாக உளரும்போதும் தேடாத என் நட்பு,
உன் பிரிவில் தேடுகிறதே !. உன் நலம் பற்றி எண்ணுகிறதே!
வியக்கிறாய் நீ..

நல்ல நட்பில் புரிதல் இல்லையெனின், பிரிதல் நலம் என நீ நினைத்தாய்..

நல்ல நட்பு பிரிந்தாலும், புரிதல் தரும், தூய்மையான அன்பு, என்கிறேன் நான்.
--

No comments: