Saturday, June 19, 2010

மொக்கை என்பது யாதெனில்...




அவசரமான உலகம், போராட்டமான வாழ்க்கை , விதிக்கப்பட்ட வாழ்க்கை என வாழ்க்கையை வாழ்ந்து வருபவர்களுக்கு நகைச்சுவையை ரசிக்க நேரமின்றி மறத்துத்தான் போகிறது வாழ்க்கை..

எப்போதும்
சீரியஸாகவே இருப்பவரிடம் விளையாட்டாய் ஒரு நகைச்சுவை
சொல்லிப்பாருங்கள்.. கொலைவெறியோடு திருப்பி தாக்குவார்..

நாம்
கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவே மாட்டோம்..
நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்றுகூட விளக்கிட முடியாது..

ஏனெனில்
அவர் நிலைமை அப்படி..அவர் சூழல் அப்படி..

ஆராய்ச்சியாளார்கள் சொல்கிறார்கள் , நகைச்சுவையும் , மனம் விட்டு சிரிப்பதும் மகிழ்ச்சியையும் , உற்சாகத்தையும் கொடுப்பதோடு மனதுக்கும் அதன் வழியாக உடம்புக்கும் மிக நல்லது..எப்படி.?

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குது , நம் உடம்பின் நேர்மறை சக்தியை அதிகரிக்குது , வலிகளை குறைக்கின்றது...மேலும் மன அழுத்தத்தினால் ஏற்படும் அபாயத்தை வேறோடு அழிக்கின்றது..


நகைச்சுவை
ஒரு தொற்று நோய்.. இருமல், தும்மலை விட உடனே
பற்றிக்கொள்ளும்..அது முன்பின் தெரியாத மனிதரையும் இணைத்துவிடும் பசைகொண்டுள்ளது..

சீக்கிரமாகவும்
மிக எளிதாகவும் நம்மை ஒரு சமநிலைமைக்கு கொண்டு வருகின்றது..அடுத்த 45 வினாடிகளுக்கு அந்த புத்துணர்ச்சி நம் தசைகளை தளர்த்தி வலி குறைத்து வலிமையை அதிகரிக்கின்றது..


மனம்
விட்டு சிரிக்கும்போது நம் உடம்பில் எண்டார்ஃபின் என்ற நல்ல ஹார்மோன் சுரந்து வலி குறைப்பதோடு, முழு ஆரோக்கியத்தை வழங்குகின்றது..
அது மட்டுமா, ரத்த ஓட்டத்தை நாளங்களில் அதிகரித்து இருதயத்தை பலப்படுத்தி இருதய நோய் வராமல் தடுக்கின்றது..

உடற்பயிற்சி செய்ய முடியாத இருதய நோயாளிகள் கூட வயறு குலுங்க ( கவனிக்க தொப்பை குலுங்கணும் ) சிரிப்பது உடம்புக்குள்ளேயே ஒரு ஓட்டப்பயிற்சி செய்வதற்கு சமம்.. ( எதுக்கும் பாஸ் பக்கத்தில இருக்காரா னு பார்த்துட்டு சிரிங்க)


அது
மட்டுமா , வயறு குலுங்கும்போது சுவாசப்பையிலுள்ள காற்று உள்ளிழுப்பதைவிட அதிகமாய் வெளியேற்றப்படுகிறது.. இந்த சுற்றப்படுத்துதல் ஆழ்மூச்சுப்பயிற்சிக்கு சமம்..இது முக்கியமா எம்ஃபைசைமா , போன்ற சுவாச நோயுள்ளவர்களுக்கு மிகுந்த
பலன் தரும்..

ரத்த அழுத்தத்தை கட்டுப்பாடில் வைத்திருக்க ஆண்களைவிட பெண்களுக்கு அதிக பயனளிக்குது..

இது
பற்றி எழுத நிறைய விஷயங்கள் இருக்கு..நோய்கள் பற்றி, நேர்மறை எண்ணம் பற்றி , சிரிப்பு ஜீன்கள் னு லட்ச விஷயங்கள்.. என்ன எழுத தான் நேரமில்லை,.. ( மொக்கை வேற போடணுமே..நானும் கொஞ்சூண்டு சிரிக்கணுமே தினமும்.. )


சரி
மொக்கைக்கும் சிரிப்புக்கும் என்ன சம்பந்தம்னு கேட்கிறீங்களா, நகைச்சுவையின் ஆணி வேரே இந்த மொக்கை , கும்மி தானுங்க..

சிறப்பா நகைச்சுவை சொல்லும் கலை சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்.. ஆனால் மொக்கை/கும்மி போட எல்லாருக்கும் தெரியும்... மொக்கை போடும்போது ஈகோ அழிகிறது.. இழிவை கூட நகைச்சுவையாக ஏற்கமுடிகிறது.. அதிலுள்ள குற்றம் தவிர்த்து நகைச்சுவையை உணர முடிகிறது..



அதனால
இந்த சீரியஸ் கட்டுரையை இப்ப நிப்பாட்டிக்கிறேன்.. அட இதுவும்
மொக்கைதான் னு நீங்க நினைச்சா, வலிக்காம சிரிச்சுட்டு போங்க...

மொக்கை போடுங்க, முழுசா வாழுங்க...

முன்னேறுவதற்காக நேரம் செலவழிப்பதோடு நகைச்சுவைக்கென நேரம் ஒதுக்கிட பழக்கிக்கணும்.. அல்லது அப்படியான நட்போடு இருக்கவாவது பழகிக்கணும்... ஆனாலும் நகைச்சுவை என அதிகமா சிலர் காழ்ப்புணர்ச்சியோடு தாக்குதலையும் நடத்துவார்கள்.. அவர்களிடம் கவனமாயும் இருந்திடணும்..:)


மொக்கை
என்பது யாதெனில்...யாதொன்றும் தீமை இல்லாத சொல்..


----- தொடரும்...

( பொன்னான நேரத்தை பின்னூட்டமிடுவதில் செலவிடவேண்டாமே..)