Tuesday, November 30, 2010

இறுதிவரை லிவிங்-டுகெதர் - சிறுகதை..

































அமெரிக்காவில் இருந்து வந்த தொலைபேசி அழைப்புக்கு அடையாரிலிருந்து பேசினாள் ஷான் என

செல்லமாக முன்னாள் கணவனால் அழைக்கப்படும் ஷாந்தினி.

வழக்கமான விசாரிப்புக்கு பின் ,

" சொல்லு ஷிவா. என்ன தயங்குற .?"

" எனக்கே என் மேல் அவமானமா இருக்கு ஷாந்தினி.."

" ஹேய்.. என்ன இது.. நான் உன்னோட பெஸ்ட் பிரண்ட் னு நினைச்சு சொல்லு."

" ம்."

" எ.......ன்...........ன. சொல்லு.?"

" நா.........ன் கீர்த்தி கி.........ட்ட புரோபஸ் பண்ண...............லாம் னு இருக்................கேன்.."

" ஹேய்.. வாட் எ சர்ப்ரைஸ்... ஐம் வெரி ஹேப்பி பார் யு.."

" நிஜமா.?"

" இல்ல பொய்யா..:))"

" அதில்ல ஷான் , என்னமோ உனக்கு துரோகம் செய்ராப்ல தோணுது.."

" என்ன இது.?. நாம பிரிஞ்சு 4 வருஷம் ஆகுது.. இன் ஃபேக்ட். நானே உனக்கு நல்ல பொண்ணு பார்த்துட்டு இருந்தேன்.."

" அம்மா கிட்ட சொல்லவா.?"

" வேண்டாம் ஷிவா. அம்மா பழைய காலத்து ஆள்.. அவங்களால இதை உடனே ஏத்துக்க முடியாது..லீவ் இட் டு மி.."

" சரி நம்ம பையன் கிஷன் கிட்ட.?"

" ஷ்யூர்.. அவன் கிட்ட கண்டிப்பா சொல்லு.. ஹி வில் ஆல்சோ பி வெரி ஹேப்பி.. ஃபார் யூ.."

" ஷான் அதுக்கு முன்னால சில செட்டில்மெண்ட்ஸ் பண்ணிறலாம் னு நினைக்கிறேன்.. "

" வாட். " கொஞ்சம் எரிச்சலோடு.

" அதான் , உன் பேர்லயும், கிஷன் பேர்லயும் சொத்துக்கள் வாங்கலாம்னு..." முடிப்பதற்குள் ,

" டோண்ட் பி ரப்பிஷ். ஷிவா.. நீ தேவைக்கும் மேல செய்துட்ட.. உன்னோட அம்மாவை என்கூட வாழ அனுமதிச்சிருக்க..எனக்கு விருப்பமான

இந்த டீச்சிங் புரொபஷன் க்காக இந்த பள்ளி ஆரம்பிச்சு கொடுத்த . உன்னோட அறிவியல் ஆராய்ச்சிக்காக அமெரிக்காவில் இருக்க விருப்பம் உனக்கு..

எனக்கு நம்ம நாட்டுல வாழணும்னு ஆசை.. எல்லாத்துக்கும் அனுமதிச்ச.. அழகான நட்போட பிரிஞ்சோம்..

பிரிஞ்சதிலிருந்து உன் மேல மரியாதை கூடிட்டேதான் இருக்கு.. நம்ம மகனை ஒரு நல்ல தகப்பனா வளர்ப்பதைவிட , ஒரு மிகச்சிறந்த நண்பனா பார்க்கிற..

என்னை விட அதிகமா நீதான் அவன்கிட்ட அமெரிக்காவிலிருந்து தினமும் பேசுற..வழிநடத்துற. லிசன் பண்ற அவன் பிரச்னைகளை... "

" அதுக்கில்ல ஷான்.. நாளைக்கே எனக்கு இன்னொரு குழந்தை வந்தப்புரம் நான் செய்ய முடியுமோ இல்லையோ.?"

" ஸ்டாப் இட் ஷிவா.. ஏன் இப்படிலாம் திங்க் பண்ற..?.. நான் செய்வேன் உன் குழந்தைக்கு.. ஏன் நம்ம மகன் செய்வான் . அவனை அப்படித்தானே கொடுக்க சொல்லி பழக்கி வெச்சிருக்கோம்..

ஹி வில் எஞ்சாய் கிவ்விங்.பணம் நமக்குள் எப்பவாவது பிரச்னையா வருமா என்ன.? "


" சரி அம்மா கிட்ட எப்ப சொல்றது.?"

" உனக்கு ஒரு குழந்தை பிறக்கட்டும்.. அப்ப இந்தியாவுக்கு கூட்டிட்டு வருவல்ல.. அப்ப சொல்லிக்கலாம். கிஷனோட தம்பி, தங்கைன்னு.. சரியா..?.. "

" உன்னை மாதிரி ஒரு நல்ல மனைவியை இழந்தாலும் , ஒரு நல்ல தோழியா ஆயுசுக்கும் நீ இருப்பன்னு நினைக்கும்போதே என் வாழ்க்கை பூரணமா இருக்கு ஷான்.."

" நான் தான் உனக்கு நன்றி சொல்லணும் ஷிவா.. உன்னோட உறவுகளையெல்லாம் எனக்கு கொடுத்தியே.. நம்ம மகனுக்கு ஒரு நல்ல தோழனா , வழிகாட்டியா இருக்கியே.."

" இருந்தாலும் ஒரு கில்டி ஃபீலிங்.. ஷான்."

" நோ..நோ.. நெவர் ஃபீல் லைக் தட்.. உனக்கு துணை அவசியம் னு எனக்கு நல்லா தெரியும்.. உன்னோட முன்னேற்றத்துக்கு அது தேவை.. ஆனா எனக்கு அப்படியில்ல.. தம்பத்யம் எனக்கு

முக்கியமல்ல னு உனக்கும் தெரியும்... சோ.வாட் ஸ்டில் வி ஆர் லிவிங் டுகெதர் அஸ் குட் பிரண்ட்ஸ்.. இனி கீர்த்தியும் என்னோட தங்கைதான்.. விஷ் யு போத் ஆல் த பெஸ்ட் திங்ஸ் இன் லைஃப்...."

" சரி ஷான். பிலீஸ் , கொஞ்சம் பணம் மட்டுமாவது அனுப்பி வைக்கிறேனே.."

" இதப்பாரு . நீதானே சொல்வே, பொன்ணுங்கல்லாம் சொந்த கால் ல நிற்கணும். னு. என்னை அப்படி நிற்க வெச்சுட்டு இப்ப கையேந்த சொல்றியே நீயே.. வேண்டாம் ஷிவா.. ஏதாச்சும் டிரஸ்டுக்கு

அனுப்பி வை. நிறைய பணம் வெச்சிருந்தீன்னா.." சிரித்தாள்..

" உன் மேல மதிப்பும் மரியாதையும் கூடிட்டே இருக்கு ஷான்.. யு ஆர் எ வெரி டிஃப்ரண்ட் பெர்சன்.. உன்னை மாதிரி ஒரு பெண் குழந்தை பெற்று வளர்க்கும் ஆசை வந்துடுச்சு."

" ஐ ஃபீல் ஹானர்ட் ஷிவா..."

" கீர்த்தி என்ன செய்றாங்க.?.. எப்போ கல்யாணம்..?"

" அவங்க ஃப்ரீலான்ஸ் ஜர்னலிஸ்ட்.. திருமணம் இப்ப இல்ல.. இப்போதைக்கு லிவிங் டுகெதர் மட்டும் .கொஞ்சம் எனக்கு என்மேல பயம்தான். :) "


" எனக்கு உன் மேல அதிகமா நம்பிக்கை இருக்கு. நீ நிச்சயமா ஒரு நல்ல கணவனா இருப்ப னு .. கோ அஹெட்.. "




.


படம் : நன்றி கூகுள்..




.

Monday, November 29, 2010

லிவிங் டுகெதர் வலையுலக புரிதல்



































லிவிங் டுகெதர் பற்றிய அனேக பதிவுகள் வந்தது..

பல புரிதல்கள்.. பல புதிய பார்வைகள்.. புதிதாக கற்றுக்கொண்டவையும் ஏராளம்.

அதைவிட புதிதாக சந்தித்த அறிவுபூர்வமான வலைத்தளங்கள்.. இத்தனை நாள் பார்க்காமல் விட்டோமே என வருந்துமளவுக்கு..

சரி இப்ப என்ன சொல்ல வரே னு கேட்கிறீங்களா.?

பல பதிவுகளை படித்ததுமே அவர்கள் புரிதலை பார்த்து வியப்பும் ,சிரிப்பே வந்தது..:)

சரி போக போக புரிவார்கள் .

பலரின் புரிதல் இங்கே..


லிவிங் டுதெர்னா

1. ஆபாசம் அபச்சாரம் , கலியுகம்..கலாச்சார மீறல்...

2. காமத்துக்கு மட்டுமே.

3. மேல்நாட்டிலிருந்து அழிக்க வந்த ஆயுதம்

4. பணம் படைத்தவருக்கு மட்டுமே..

5. ஜோடி மாத்திகிட்டே இருக்கலாம்..

6. பாலியல் தொழில்..மாதிரி

7. குழந்தைகள் பற்றி அக்கறை இல்லாதவர்கள்..

8. எய்ட்ஸ் வரும்.

9. ஒருத்தனுக்கு ஒருத்தியல்ல../ஒருத்திக்கு ஒருத்தனல்ல.

10. சொந்த பந்தங்களை விட்டு விலகுதல்./விலக்குதல்..

11. மத விரோதம்.. /துரோகம் ..

12. பெண்ணாதிக்கம்..

13. திருமணம் என்பது சடங்கல்ல.. புனிதம்.. மேலே சொன்னவை திருமணத்தில் கிடையாது..






ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ப்பாஆஆஆஆஆஆஆஆஆ.. முடியல..

இப்படி ஒரு புரிதல் இருப்பதால் தான் அவர்களுக்கு கோபம் வந்துள்ளது என எண்ணியதும் பாவமா இருக்கு..


சிலர் விரைவில் புரியலாம்,.. சிலர் விடாப்பிடியாக நாங்க ஏன் புரியணும்.. அதெல்லாம் புரிஞ்சுக்கவே மாட்டோம் னு அடம் பிடிக்கலாம்..முயலுக்கு காலே இல்லைன்னு சொல்லலாம்..

பெண்ணுக்குரிய உரிமைகளையே கொடுக்க மறுக்கும் சில ஆணாதிக்கவாதிகள் , மதவாதிகள் இருக்கும்போது இதுவும் அதிசயமில்லை..

இன்னும் காதல் என்றாலே வெட்டி போடும் சமூகம் நம்மிடையே இருக்கு..

என் குடும்பத்திலேயே இந்த வருடம் தான் முதல் காதல் திருமணம் ( சாதி, மத வேறுபாட்டோடு ) பலத்த எதிர்ப்போடு நடந்துள்ளது...

ஏன் எதிர்க்கிறோம் னு பார்த்தா , நாம அடுத்தவங்கள கிண்டல் அடிச்சிருப்போம்.. இப்ப நம்ம டர்ன் வந்துட்டதே.. தாங்க முடியாதே...அதான் ரொம்ப தோல்வியா நினைப்பது...


நாம் இன்னும் அறிந்துகொள்ளவேண்டிய உளவியல் கூற்று அனேகம் உள்ளது.. குண்டு சட்டியில் குதிரை ஓட்டாமல் , "கற்போம் கற்பிப்போம்.."

---------------------------------------------------


என் குழந்தை சின்னவரிடம் ,

" பெரியவங்க சொன்னா கேட்கணும். அவங்களுக்கு நிறைய தெரியும் , அனுபவம் இருக்கும் இல்லையா.?."

" எனக்கும் நிறைய தெரியும்.. Parts of the Computer , CPU is the brain.. இப்படி எல்லாமே.. அது உங்களுக்கு தெரியுமா?.. "

" அவ்வ்வ்.. இதெல்லாம் யுகேஜி ல கத்துகிட்டியா.. நீ பெரிய ஆளு தாம்பா... "

" இப்ப புரிஞ்சுதா.. அதனால நான் சொல்றதையும் நீங்க கேளுங்க..."

" சரிங்க ஐயா..."

---------------------------------


கோச்சுக்கவா முடியும் குழந்தைகளிடம்?.....



--------------------------

கொஞ்சம் மெச்சூரிட்டி உடையவர்களுக்கு../அடைய விரும்புபவருக்கு மட்டும்...

http://www.psychologytoday.com/blog/sex-dawn/201003/anti-marriage-counseling


Readers with a more open-minded disposition might enjoy this interview with Dr. Perel.



படம் : நன்றி கூகுள்..






..

Sunday, November 28, 2010

பதிவுலக ச (சி )ங்கங்கள்



















நாட்டுல நல்ல மழை பொழிய ,

நாமெல்லாம் அகம் மகிழ ,

நாளெல்லாம் பதிவெழுத ,

நாலு பேரு பின்னூட்ட ,



இப்படியா ஓருலகம்

இணையத்தில் வந்ததய்யா

இதவெச்சு அரசியலில்

இப்போதே புரட்சிசெய்ய


ஆரம்பிப்போம் சங்கத்தினை

ஆளுக்கொரு பங்குபோட்டு

ஆர்ப்பரிப்போம் சிங்கங்களே

ஆட்டோ அனுப்ப மாட்டீகளே..


-------

பெருமதிப்பிறகும் மரியாதைக்கும் உரிய மக்களே , வேற்றுமையில் ஒற்றுமை காண

சங்கங்கள் ஆரம்பிக்க அழைக்கிறோம்...

எல்லோருக்கும் சம உரிமை..

ஆளாளுக்கு ஒரு சங்கம்.. ( காசா பணமா ?.. )

எனக்கு தெரிந்த கட்சி , சாரி சங்கம் பெயர் சொல்லுகிறேன் . நீங்களும் உங்களுக்கு தெரிந்த பெயர் சொல்லுங்கள்.

1, ஆன்மீக சங்கம்...

2. அதை எதிர்க்கும் சிங்கம்..சாரி சங்கம்.

3. பெண்ணுரிமை சங்கம்..

4. அதை எதிர்க்கும் ஆணாதிக்க சிங்கம்..

5. சினிமா மட்டுமே சங்கம்...

6. ஆபாச சங்கம்.

7. திமுக பதிவர் சங்கம்..

8. அதிமுக பதிவர் சங்கம்..

9. காங்கிரஸ் பதிவர் சங்கம்..

10. விஜயகாந்த் பதிவர் சங்கம்..

11. கட்சி மாறிட்டே இருப்போர் சங்கம்.

12. கலாச்சார சங்கம்.

13. அதை மாற்றுவோர் சங்கம்.

14. அம்மாக்கள் சங்கம்.

15. அப்பாக்கள் சங்கம்.

16.. வாலிபர் சங்கம்.

17. வயதான வாலிபர் சங்கம்..

18. இலக்கியவாதி சங்கம் .

19.அதை எப்போதும் விமர்சிக்கும் சங்கம்..

20. பஸ் , டீவிட்டர் முக புத்தக சங்கம்..

21. பெரியார் சங்கம்.

22. அதை தடுப்போர் சங்கம்..

23. கெட்ட வார்த்தை சங்கம்..

24. என் மதமே பெரிது சங்கம்.

25. எம்மதமும் சம்மதம் சங்கம்..

26. எதில் சேறணும்னு யோசிப்போர் சங்கம்..

27. ஆட்டு மந்தை சங்கம்..

28. நாந்தான் ஆடுமேய்ப்பேன் சங்கம்.

29. சந்திப்பு நடத்தும் சங்கம்..

30. சந்திப்பு முடிந்தபின் சிந்திப்போர் சங்கம்..





இப்போதைக்கு இவ்வளவுதான் நியாபகம் வந்தது.. மற்றதை நீங்க சொல்லுங்க...


( டிஸ்கி : யாரையும் காயப்படுத்த அல்ல.நகைச்சுவைக்கு மட்டுமே.. நிஜமாகவே நல்லது செய்ய நினைப்பவருண்டு.. அதற்கு குழுமம் ஆரம்பித்து அங்கிருந்து நல்ல பல விஷயங்களை தொடங்கலாம்...... )


படம் : நன்றி கூகுள்..




.

Saturday, November 27, 2010

மந்திர புன்னகை...பெண்ணை அவமானப்படுத்தும் படம்..

















நாம சினிமா பார்ப்பதே அரிது.. அதிலும் விமர்சனம் பண்ற ஆளில்லே..

ஆனா பார்த்து தொலைச்சிட்டோம்..



-----------------------------

ஒரு ஆண் எல்லா விதமான கெட்ட பழக்கம் கொண்டிருந்தாலும் , அவனை துரத்தி துரத்தி காதலித்து அவன் நோயை தீர்ப்பாளாம் ஒரு பெண் காதலினால்..

ஏன்.?

ஏன்னா அவள் தமிழ்நாட்டு பெண் அல்லவா?..

ஆனா இதே தவறுகளை செய்யும் ஒரு பெண்ணை இதே போல துரத்தி துரத்தி காதலித்து குணப்படுத்துவானா .?

அத விடுவோம்..

தவறில்லாத பெண் என்றாலே செய்வானா?.
..ஒரு இளிச்சவாயன் கணவன் செய்வானாம் , செய்தும் ஓடிப்போவாளாம்.... :))

காசில்லாமல் கல்யாணமே கேள்விக்குறியாகும் சமூகத்தில் , பெண் தான் ஆணை துரத்தி துரத்தி... ஓடி ஓடி சேவை செய்வாள்.. ஏன்னா அவள்தான் அடிமை.. அவள் மட்டும் தான்...

யோசிக்க கூட மாட்டோம்ல..:))

ஏன்னா தமிழ்நாட்டு ஆண் க்கு உள்ள சினிமா ஃபார்முலா மட்டுமல்ல , நிஜமும் ...:)



முக்கியமான சம்மரீஸ்

1. பாத்து பாத்து துணி துவைத்து போடுகிற கணவன் ,
தன்னை எப்பவும் எதுக்கும் பாராட்டிக்கொண்டே இருக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காக தான் மிக நேசிக்கும் பிள்ளையை கூட விட்டுட்டு காதலனுடன் ஓடிப்போவாராம் மனைவி..

-- அப்ப தமிழ்நாட்டுல ஒரு மனைவி கூட கணவனோட வாழ முடியாது.:)))


2. பெண் என்பவள் ஆணை சந்தோஷப்படுத்த மட்டுமே பிறந்தவள்..

அவள் பாலியல் தொழிலாளி னா திருமணத்துக்கு ஆசைப்படக்கூடாது.. ஆனா அவன் எல்லா பெண்களிடமும் செல்வான். எல்லா கெட்ட பழக்கமும் இருக்கும்.. ஆனா அதை பெருமையா சொல்வதற்கு பெயர் "* நேர்மை"*.. அந்த நேர்மைக்காகவே /மட்டுமே அவனை துரத்தி துரத்தி காதலிப்பாள் ..
ஏன்னா அதுக்கு பெயர் தான் அன்பு...:).. இத்தனைக்கும் மிக நல்ல குணமுடையவனை , தன்னை விடாப்பிடியாக காதலிப்பவனை ஒதுக்கிவிட்டு..:))))))))

3. கார் விற்க வருபவன் பெண் உடம்பை பார்த்து கார் வாங்கினால் தப்பேயில்லை.. ஏன்னா பெண் அதுக்கு மட்டும்தானே படைக்கப்பட்டுள்ளாள்..
.?...சோ டேக் இட் ஈஸி சேல்ஸ் பெண்களே..

4.அநாகரீகம் என்பதே நேர்மை.. குடித்துவிட்டு இரவோடு இரவாக காதலி வீட்டுக்கு சென்று எழுப்பி கேள்வி கேட்பதே நேர்மை.. தனக்கு கீழுள்ள இஞ்சீனியர் மனைவிக்கு போன் போட்டு தான் குடிப்பதையும் , தன் நட்புகள் கெட்டவர் என்பதை சொல்வதையும் தாங்கிக்கொள்ளும் பெண் நேர்மை.. அடடா நேர்மைக்கு என்ன ஒரு அற்புதமான விளக்கம்...?:)

5. 500 பேர் கூட படுத்தாலும் ஒருத்தனை மட்டுமே வந்து மருத்துவமனையில் பார்ப்பாள்.. ஏன்னா அவன் சேலை வாங்கி கொடுத்தானாம்... அடடா 499 ஆண்கள் இத்தனை மோசமானவர்களா?.. தெரியாதே.?.

6. ரொம்ப ரொம்ப நல்ல மனிதன் , மனைவி சென்றதும் குழந்தையை தவிக்க விட்டு தற்கொலை செய்வான்... ஏன்னா குழந்தையை விட கவுரத ரொம்ப
முக்கியம்... குழந்தை எப்படி போனா என்ன?.. ஆனா அந்த நல்ல மனுசன் இல்லூஷன்ல வந்து அட்வைஸுவார்...

7. காசு பணம் + கொஞ்சம் அறிவு இருந்தா போதும்.. எல்லாரையும் அடிமைப்படுத்தலாம் , மட்டுமல்ல , இஷ்டப்படி நடந்துக்கலாம்.. நல்லா உடுத்தணும் னு இல்லை.. தொழிலாளி கூட சேர்ந்து குடிக்கலாம்.. தானும் கெட்டு மத்தவனும் கெட்டாதானே நல்லது?..

இதே ஒரு ஏழையென்றால்?.... நோ . நோ.. கேள்விகேக்கப்டாது...மூச்...!!!!!.

1970 க்கு அப்புரம் குடிக்காதவனே இல்லையாம் - வாழ்க டாஸ்மாக்..( விளம்பரமோ ?. ) . வால்க டமில்நாட்.


8. அப்பனும் ஆத்தாவும் விட்டுபோட்டு போனப்புறம் வளர்த்து ஆளாக்கி ஆர்கிடெக்ட் ஆனப்புறம் , " கெழவி செத்து போகட்டும் .. ஏன்னா என்னை பார்த்தா கெழவிக்கு வாழ ஆசை வரும் " னு இன்னாமா பாச டயலாக்...?..

அதே கிழவி என்பவர் இவனை வந்து மருத்துவமனையில் பார்த்து வருந்துவார்...

ஆக மஹா சனங்களே , படிச்சு ஆளாக்கினவுகளை ஒரு காசுக்கு மதிச்சுராதீக...

-- மொத்தத்தில் ஆண் னா அப்படித்தான் இருப்பான்.. பெண் எல்லாத்தையும் தாங்கிக்கொண்டு அவனுக்கு சேவை செய்வதே வாழ்க்கையின் மிகப்பெரிய லட்சியமும் புண்ணியமும்...இன்ன பிறவும்...:)


தேடுங்க பெண்களே ஊரிலுள்ள அயோக்கியன் ஆனால் நேர்மையா அதை ஒத்துக்கிறவனை., ஆனா பணமுள்ளவன்.... ஏன்னா அதுக்கு மட்டும்தான் படைக்கப்பட்டார்கள் பெண்கள்..


படத்தில்
4 பெண்களையும் இதுக்கு மேல கேவலப்படுத்த முடியாது..

படத்துல நல்ல விஷயமே இல்லையா?.. இருந்தது.. குழந்தைகளை அழைத்து வீடு கட்டி விளையாடுவது... டெக்னிகல் விஷயம் உழைப்பு இல்லாமல் இருக்குமா?..

ஆனால் என்ன இருந்து என்ன மோசமான கரு எல்லாத்தையும் அழித்திடுதே..



மொத்தத்தில் பணம் இருந்துட்டா என்ன வேணா செய்யலாம் . எப்படி வேணா படம் எடுக்கலாம்..:). ஏன்னா பணத்துக்காக , புகழுக்காக நம்மை சுற்றி ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும்.. நோ ஒர்ரீஸ்... எஞ்சாய்...:)



பிரிவோம் சந்திப்போம் , பார்த்திபன் கனவு திரைப்படத்தினை எடுத்தவர் இவர் என்பதை நம்ப முடியலை...அது நான் ரசித்த படம்..


இன்னொரு மைனஸ் பாயிண்ட் உணர்ச்சியற்ற முகத்தை வைத்துக்கொண்டே நடித்த இயக்குனர்..

கொல்லாதீங்க சாமிகளா !!!.. டமில் மக்கள்ஸ் நாங்க ரொம்ப பாவமில்ல...


பெண் அடிமைத்தனம் இன்னும் ஒரு 100 ஆண்டுகள் தொடர வெச்சிடுவாய்ங்க..
... வாழ்த்துகள் ...அதை பார்த்து சில ஆட்டு மந்தை ஆண்களும் தந்திரமா சந்தோசப்படுவாங்க.

மந்திர புன்னகை...ஆணின் தந்திரபுன்னகை...:)




படம் : நன்றி கூகுள்


.




Wednesday, November 24, 2010

அம்மா புராணம் - 2. ( முதம் மனைவி இருக்கும்போதே இரண்டாம் கல்யாணம் )



































" அக்கா நான் இந்த வாரம் கிளம்பி வருகிறேன்..திருமணம் நடக்குமா?..." பயத்தோடு கேட்டார் மாமா..

என் அம்மாவின் சொந்தக்கார தம்பி அவர்..பொறியாளர்.. கை நிறைய சம்பாத்யம்.. வசதியும்..

திருமணம் முடிந்து 10 வருடம் குழந்தையில்லை.. மனைவியிடம் கோளாறு..

அதுமட்டுமல்ல அந்த காலத்தில் பாருங்க பெண்ணுக்கு அதிக வயதிருந்தாலும் , தன் மத/ஜாதியில் மாப்பிள்ளை கிடைக்காவிட்டால் , மாப்பிள்ளை வயது குறைந்திருந்தாலும்

மணமுடித்துள்ளனர்.. இப்படி பல பேரை பார்த்துள்ளேன்..

அதே தான் இந்த மாமாவின் கதையும்..

அத்தையை பார்த்தால் மாமாவுக்கு அம்மா/அக்கா போல் வயதானவராய் தோன்றுவார்..வியாதியஸ்தரும் கூட..

ஆனால் இருவருமே அன்பான தம்பதிதான்.. சண்டை சச்சரவேதுமில்லை..

ஆனால் மாமாவுக்கு இல்வாழ்க்கை திருப்தியோ இல்லை , குழந்தையின்மை வருத்தமோ , ஏதோ ஒன்று இருந்துள்ளது பல வருடம்..

மனைவியை விவாகரத்து செய்ய பல காரணமிருந்தும் செய்ய மனமில்லை..

ஆனால் மறுமணம் செய்ய மட்டும் அனுமதி பெற்றார் ...

அம்மாவிடம் தன் குறையை சொல்ல , அம்மாவுக்கு தன் சொந்தத்தில் திருமணமாகாமல் இருக்கும் பெண் நியாபகத்துக்கு வந்தது..

அதை மாமாவிடம் சொல்ல , மாமா சம்மதிக்க , அம்மா அப்பெண்ணிடம் பேச , அவரும் விருப்பம் சொல்ல ...

ஆனால் அம்மாவின் சொந்தங்கள் அனைவருமே இதுக்கு எதிர்ப்பு...

மாமா வெளியூரிலிருந்து நெல்லைக்கு வருவதற்குள் அம்மா மற்ற விஷயங்களை ரகசியமாக கவனிக்கணும்...

என்ன அது.?..

அம்மாவின் அந்த அத்தை பெண் ஜாதக பலனால் திருமணம் ஆகாமலேயே இருந்தார் பல வருடம்..

அதற்கான முயற்சி எடுக்க பெற்றோரும் இல்லை..

சகோதர சகோதரிகளுக்கும் முடியவில்லை.. தட்டிக்கொண்டே போனது..

அந்நேரம் அம்மா இந்த மாமாவுக்கு அந்த பெண்ணை முடிக்க பேசியதும் பலத்த எதிர்ப்பு..

( உடனே என்ன சொல்வார்கள் தெரியுமா , அம்மாவிடம் . ? . உன்கிட்ட 4 பெண் இருக்கே.. அதை கட்டிக்கொடு.. )

10 வருட வித்யாசம்.. இரண்டாவது திருமணம் வேறு..ஆனால் அந்த அத்தைக்கு ( பெண்ணுக்கு ) மாமாவை கட்டிக்கொள்ள சம்மதம்..

மாமாவின் குணம் அப்படி. யாருக்குமே பிடிக்கும் ..பார்க்க கருப்பு சரத்குமார் போல இருப்பார்..

இப்ப அம்மாவை அந்த பெண்ணை பார்க்கவே அனுமதிக்க மாட்டேனென்கிறார்கள்..

அம்மாவோ அவ்வூரிலுள்ள இன்னோரு மாமா வீட்டுக்கு சென்று ரகசியமாக அப்பெண்ணை வரவழைத்து பேசுகிறார்..அவர்கள் வீட்டிலுள்ளவர் பாதி பேருக்கு கூடதெரியாமல் ரகசியமாக பேசணும்.. அங்கேயும் எதிர்ப்பு..

மாமா வந்தார்கள்.. நெல்லைக்கு..

அப்பெண்ணை ரகசியமாக சொந்தக்கார பெண்ணோடு எப்போதும் செல்லும் கோவிலுக்கு வர வழைத்தார்கள்..அம்மா...

நம்பிக்கைக்குறிய சிலரோடு சென்று கோவிலில் வைத்தே மாமா அத்தை திருமணம் நடந்தது..

திருமண செய்தி பரவியதும் அவ்வளவுதான்...

அம்மா மேல் காவல்துறையில் புகார் செய்துவிட்டனர்..அத்தையின் சகோதரர்..

கூடவே அம்மாவை பிடிக்காத சிலரும் கூட்டாளிகளாக.. :)

காவலர்கள் எங்கள் வீடு தேடி வந்தனர்.." உங்கம்மா பெண்ணை கடத்திக்கொண்டு போனதாக தகவல் வந்துள்ளது . விசாரிக்கணும் " என..

நாங்க பயந்துதான் போனோம்.. :)

ஆனால் சொந்தக்காரர் ஒருவர் இன்ஸ்பெக்டராக இருந்தார் அப்போது.. நெல்லையிலேயே

அம்மா தொலைபேசினார்.. தாங்கள் எல்லாரும் மிக பத்திரமாக காவல் நிலையத்துக்கு சென்று விளக்கமளித்துவிட்டு வந்தாச்சு

பயப்பட வேண்டாம் என..அப்புரம்தான் நிம்மதியானோம்..( முதல் அத்தையின் சம்மத கடிதம் இருந்தது.. அவரிடமும் தொலைபேசினர் காவலர் )

பின் மாமாவும் அத்தையும் எந்த உறவினர் வீட்டிலும் தங்காமல் விடுதியில் தங்கிவிட்டு அக்கம் பக்கம் ஊர்களுக்கு சென்றுவிட்டு

மாமா தான் வேலை பார்க்கும் இடத்துக்கு அழைத்து சென்றார்.

முதல் அத்தையும் இரண்டாவது அத்தையும் நட்பாக சில காலம் பிடித்தது..

ஆனால் இரண்டாவது அத்தை மிக நன்றாக சமைப்பதோடு வீட்டையும் நோயாளி அத்தையையும் பார்த்துக்கொண்டதும் குடும்பத்துக்கு திருப்பம் வந்தது..

அதோடு அத்தைக்கு இரண்டு குழந்தை பிறந்தது குடும்பமே மகிழ்ச்சியானது...குழந்தைகள் முதல் அத்தையை "மம்மி" என்றும் இரண்டாவது அத்தையை "அம்மா
" என்றும் அழைப்பார்கள்..

நெல்லைக்கு வந்தால் எங்க வீட்டுக்கு வருவதோடு சரி.. தன் சகோதரர் வீட்டுக்கு கூட அத்தை செல்லாமல் இருந்தார் சில காலம்..

முதல் அத்தை ஆசிரியராக இருந்ததால் படிப்பெல்லாம் அவர் கவனிப்பார்... பெருமையாக...

இரண்டாவது அத்தை கூட இப்ப ஸ்டைலா உடுத்த , மாற ஆரம்பித்தார்கள்..மாமாவின் பதவிக்கு பொருத்தமாக..

இன்று குழந்தை இருவரும் நன்று படித்து வேலையிலும்... பெற்றோர் மூவரையும் அருமையாக கவனித்துக்கொண்டு..

ஆனால் இன்று அந்த அத்தை மாமா நெல்லைக்கு வந்தால் அம்மாவை சந்திப்பதில்லை.. இடையில் பலரின் குசும்பு வேலைகளை சொல்லவும் வேண்டுமா என்ன?

இதுதானே உலகம்..?.. ஆனால் அம்மாவுக்கு அந்த மன திருப்தி போதுமே.. அவர்கள் இன்று மகிழ்ச்சியாக இருப்பதே இவரின் வெற்றி..

அதுதானே முக்கியமேயொழிய அவர்கள் கஷ்டப்பட்டுக்கொண்டு இருந்து தம்மோடு அவர்கள் நட்பாயிருப்பதை விட?..

அம்மாவுக்கு எத்தனை எத்தனை நல்ல நட்புகள் உண்டோ அத்தனைக்கு அத்தனை எதிராளிகளும்...உருவாகினர் ..:)

( சராசரி மனிதர் நட்பில்லாவிட்டாலும் , எதிரிகள் இருக்ககூடாது என்ற கவனத்திலேதானே நல்லது செய்யாமலும், தீமையை கண்டிக்காமலும் செல்கிறார்.? நமக்கெதுக்கு வம்பு என ?.. ) .

ஆக நட்புகள் எதிரியாவதும், எதிரிகள் நட்பாவதும் மாறி மாறி வந்தது அம்மாவுக்கு..

ஆக அவரது ஒவ்வொரு செயலும் ஒரு போராட்டமாகவே அமையும்..

அதே போல நன்மை செய்தவரெல்லாம் கூட பழி போட்ட காலமும்..

இது இயற்கையின் விதி என எடுத்துக்கொள்வாரேயொழிய அதனால் அவர் காரியம் எதுவும் தடை பட்டு நின்றதேயில்லை...

மிக மிக என்னை ஆச்சர்யப்படுத்தும் விஷயம் என்னவென்றால் , எதிரி எனப்படுபவர், சண்டையிட்டிருப்பார், அம்மாவை மோசமாக பேசியிருப்பார், ஆனால் அவர் பிள்ளைகளுக்கோ , அவருக்கோ ஒரு பிரச்னை என்றால் எவ்வித மனக்கச்சப்புமின்றி இவர் வலிய சென்று உதவுவார்...அவர்கள் வெட்கப்பட்டுக்கொண்டு தயங்கினாலும் கூட..

மனதில் வஞ்சம் வைத்து பார்த்ததில்லை.. ஏனெனில் அதை பற்றி நினைக்ககூட அவர் நேரம் செலவழித்திருக்க மாட்டார் என நினைக்கிறேன்..

She was always on the run to help someone .. She kept moving , occupied, busy always & a very active personality .... Never remained stagnant.. Never worried about comments or complaints..

அவர் எதைக்கண்டும் தன் ஓட்டத்தை உதவியை நிப்பாட்டியதில்லை.. உதவி செய்ய ஒரு சந்தர்ப்பம் மட்டுமே வேணும் அவருக்கு..

அம்மாவை யார் திட்டினாலும் எமக்கு கோபம் வரும்.. ஆனா அவர் கண்டுக்கிட்டதேயில்லை..

அதையே தன் வாழ்வின் வெற்றியாக , லட்சியமாக நினைத்திருக்கக்கூடுமோ?..


சொந்தமோ, நட்போ எப்போதும் ஒருபோதும் இருப்பதில்லை. அவரவர் சூழல் மாற , வட்டங்கள் மாற மனிதனும் மாறுவார்கள் என்பதை தெரிந்து வைத்து எமக்கும் கற்றுதந்தார்.. அதை ஏற்க பழக்கினார்...

படம் : நன்றி கூகுள்..

அம்மா புராணம் - 1 துணிவு படிக்க

அம்மா செய்துவைத்த மறுமணம் படிக்க





.

Tuesday, November 23, 2010

அம்மா புராணம் - 1. ( துணிவு )














































புரட்சி திருமணம் : 1


" நான் குடும்பத்தோடதான் தற்கொலை செய்யணும்." அழுதுகொண்டே வந்தார் எங்க சொந்தக்கார பெண்.. அம்மாவுக்கு அக்கா முறை..

கணவனை இழந்தவர்.. சொத்துக்கள் உண்டு.. ஆனால் கிராமம்...பொறுப்பில்லாத மூத்த மகன்..

வந்தவரை சாப்பிட வைத்து சாவகாசமாய் சமையல் வேலையெல்லாம் முடித்துக்கொண்டே பேசுகிறார் அம்மா..

எங்க வீடு முன்னறையிலேதான் அம்மா காய்கறி நறுக்குவார். அங்கேதான் தொலைபேசுவார்.. எல்லாமே அங்கேதான்..

ஆக மிக அலங்காரமெல்லாம் காண முடியாது..

என் தோழிகளின் வீடெல்லாம் மிக நேர்த்தியாக இருப்பதுபோல் ஏன் நம்ம வீடும் அப்படி இருக்கலாமே னு நினைப்பேன்..

ஆனா அதுக்கெல்லாம் முக்கியத்துவமே கிடையாது..

யார் வேணுமானால் எளிதாக அம்மாவை அணுகி பேசும்படியான வசதிகளை மட்டுமே கொண்டது..


அம்மாவோட அப்பா பெரிய காம்பவுண்ட் வீட்டில் 12 வீடுகள் கட்டும்போதும் அம்மாதான் கணக்குப்பிள்ளையாம்..

சில நேரம் செங்கல்கள் கூட வேலையாளோட சுமந்ததுண்டாம், ஆள் குறைவாய் இருந்தபோது..

பாட்டிக்கு பிள்ளை பெறுவதே வேலை.. அம்மாவுக்கு கீழ் 5 குழந்தைகள் .. ( இறந்தது தனி கணக்கு ) .

ஆக அம்மாதான் ஆண்பிள்ளை மாதிரி தாத்தாவுக்கு...அதோடு மாடுகள், கோழி , நாய் வளர்ப்பு, தோட்டம், வயல் வேலை, மாட்டுவண்டி,

என வீடு நிறைய ஆட்கள் விலங்குகளோடு வளர்ந்தவர்..எப்பவும் தானியங்கள் நெல், உளுந்து என காயும் மாடியில் முற்றத்தில்..


அதிலும் எங்க வீட்டு முற்றத்தின் வாசப்படிகளில்தான் அதிகம் அம்மா உட்கார்ந்திருப்பார்.... எதிர் வீட்டு மிகப்பெரிய வேப்பமரமும் அதன் சுகமான குளிர்ந்த காற்றும் ,

எங்க வீட்டு மாமரம் , அசோக மரம் , முருங்கை நிழலுக்கடியில்...

மிக சுகம் தரும்..

" என்ன பிரச்னை " என விசாரித்தார் அம்மா..

" திரும்பவும் அந்த பெண்கிட்ட பேசியிருக்கான் என் மகன்.. அவனை வெட்டுவேன் னு அலையுறாங்க அந்த சாதிக்காரங்க.."

" வேலை வெட்டி இல்லன்னா இப்படித்தான்.. சரி எங்க இருக்கான் உன் மகன்.?"

" தெரிஞ்சவங்க வீட்டில்..."

"என்ன முடிவு செய்திருக்க .?"

" அந்த தாழையூத்து பெண்ணை பேசி முடிச்சு வெச்சிருக்கேன்..அவங்க இவனுக்கு வேலையும் வாங்கி தருவாங்க.. பெண்ணுக்கு ஜாதகத்தில் ஏதோ தோஷமாம்.. அதனால வரன் அமையல... இவன் சம்மதிக்க மாட்டேங்கிறான்.. காதலிச்ச அந்த பெண்ணைதான் கட்டுவேன் னு சொல்றான்..

அந்த சாதிக்காரங்க இவனை கொலையே செய்திருவாங்க..எத்தனை நாள் இப்படி திரிவான்?.."

" சரி கிளம்பு.. "

" எங்க.?"

" தாழையூத்துக்கு முதல்ல போறோம்.. சம்பந்தம் பேசிட்டு.. அவனை கூட்டிட்டு நாளைக்கு கல்யாணத்த முடிச்சிரலாம்.. "

" நெசமாத்தான் சொல்றியா .?"

சென்றார்கள் . அண்ணாவோடு இரவு வந்தார்கள்..கூடி கூடி பேசினார்கள்..

விடிந்ததும்தான் தெரிந்தது அன்று எங்க வீட்டில் வைத்தே கல்யாணம் என்று..

அக்கா ,சின்ன அண்னாவிடமும் என்னிடமும் , அம்மா, அந்த அண்ணனை காண்பித்து ,

" இவன் வெளியே எங்காவது போகணும்னு சொன்னா போக விடக்கூடாது.. இந்த ரூம் விட்டு வெளியே அனுப்ப கூடாது , பாத்ரூம் தவிர.."

" எப்படீம்மா .?"

" நாங்க போய் தாலி வாங்கிட்டு சீக்கிரம் வந்திருவோம்.. .."

நானும் அக்காவும் , சின்ன அண்ணாவும் காவல்...

பெரிய அண்ணா, அப்பா எல்லாரும் சாப்பாடுக்கு சொல்ல போனார்கள்...

அண்ணி மாடியை தயார் செய்தார்.. தம்பதிகளுக்கு..

ஒரு பதினோரு மணியளவில் , அந்த அண்ணன் மெதுவா முன்னறைக்கு வந்தார்கள்..

அப்படியே முற்றம் வந்தார்கள்.. நாங்கள் மூவரும் ஒருவரையொருவர் பார்த்துகொண்டோம்..

" அண்ணே உள்ள வாங்க.." சின்ன அண்ணா.

" இருல.. வாரேன்.. மாங்கா நல்லா காய்ச்சிருக்கே.. "

சொல்லிக்கொண்டே இருந்தவர் தப்பி ஓடினார் பின் தெரு வழியாக..

அண்ணா துரத்திக்கொண்டு பின்னால் ஓட ,

அவரை தொடர்ந்து அக்காவும் ஓட ,

சிலர் வேடிக்கை பார்த்ததும் ,

அக்கா சம்யோசிதமாக , திருடன் , திருடன் , " என கத்த ,

மூன்றாம் தெருவிலுள்ளவர்கள் கூட ஓடி சென்று அண்ணாவை பிடித்தார்கள்..

அடி விழுமுன் , சின்ன அண்ணா விபரம் சொல்லி வீட்டுக்கு அழைத்துவந்தார்..

இப்ப எல்லா கதவையும் பூட்டி வைத்தோம்..பூட்டு போட்டு..:)

அம்மா வந்ததும் , கேள்விப்பட்டதும் , அந்த அண்ணாவை திட்டோ திட்டுன்னு அப்படி திட்டினார்கள் .

" ஒன்ணு செய். இப்பவே இங்கேயே உங்கம்மாவுக்கு விஷம் வாங்கி கொடுத்துவிட்டு நீயும் செத்துப்போ.. உன்னால தான் அவளுக்கு எத்தனை நாள் பிரச்னை..

கணவனும் இல்லை.. நீயும் தறுதலை..உனக்கு காதல் ஒரு கேடு..அம்மாவை காப்பாத்த வழியில்லை.. இதுல..%&*^&%^(%^(&**% " அப்படி இப்படின்னு..

அந்தம்மா அழ, அந்த அண்ணன் வெட்கி தலை குனிய....கொஞ்சம் நேரம் சோகமானது அந்த சீன்...

மதியம் எல்லாரும் சாப்பிட்டுவிட்டு தாழையூத்துக்கு சென்று பெண் அழைத்து வந்தார்கள்...

கூடவே சொந்தங்களும்.. எல்லாருக்கும் மாடியில் சாப்பாடு..

எங்களுக்கு தெரிந்த ஒரு பாதிரியார் அழைத்து ஆசீர்வதித்து , குத்துவிளக்கேற்றி திருமணம் நடந்தது வீட்டிலேயே சாமி படம் முன்பு..

சில பெரிய மனிதர்கள் சாட்சியோடு..

அப்புறம் அன்று எங்க வீட்டிலேயே மணமக்கள் தங்கினர் மாடியில்..

3 ஆண் குழந்தைகள் பெற்று , நல்ல நிலைமையில் வாழ்கிறார்கள்...இன்று..

இப்ப நினைத்து பார்த்தாலும் என்னால் நம்பவே முடியாது..

எப்படி ஒரே இரவுக்குள் அம்மாவால் அத்தனை காரியத்தையும் , அலைச்சலையும் அலுப்பின்றி செய்ய முடிந்தது..?

அதிலும் ரொம்ப ஆச்சாரமான இந்துக்களுக்கு , கோவிலில் சென்று கூட திருமணம் செய்யாமல் , அப்பவே , பெரியவர்கள் அழைத்து ,

புரட்சி திருமணம் செய்தார்கள் என்று.. ?.

உணவோ, உறக்கமோ எப்போதும் பெரிதாகவே தோன்றாது அவருக்கு..

எந்த நேரத்திலும் கூட சென்று உதவ தயாராயிருப்பார்.. எம்மையும் சில நேரம் , கிராமத்திலிருந்து வருபவர்கள் கூட பள்ளிகளுக்கு அனுப்புவார் அட்மிஷன் விஷயமென்றால்.. .எரிச்சலா இருக்கும்.. ஆனால் ஒருபோதும் மறுக்கவே முடியாது அம்மாவின் கட்டளைக்கு..

அதே போல மருத்துவமனைக்கும்.. எனக்கு அந்த வாடையே மயக்கம் தரும்.. ஆனா மாமாவிடம் அறிமுகப்படுத்த நான் கூட போவேன்.. விருப்பமேயில்லாமல்..

அம்மாவை திட்டிக்கொண்டே.. :).. அதிலும் கடைசியா பிறந்து தொலைச்சா அவ்வளவுதான்.. எல்லாருக்கும் எடுபிடி நாமதான்..:)

இதுல எனக்கும் சின்ன அக்காவுக்கும் அக்ரிமெண்ட் உண்டு..

அவளுக்கு வேண்டிய வெளி வேலைகள் நான் செய்து தரணும் வாங்கிக்கொடுக்கணும்.. அவள் எனக்கு இஸ்தரி போடுவது , படம் வரைந்து தருவது னு ஒப்பந்தம்..

இதில் வேற எங்க வீட்டில்தான் அந்த காலத்தில் தொலைபேசி இருந்தது..( இன்னும் சிலர் வீட்டில் ஆனா அனுமதி கிடையாது மற்றவருக்கு ) .. ஊர் முழுக்க எண் கொடுத்து வெச்சிருப்பாங்க.. யாருக்காவது தொலைபேசி அழைப்பு வந்தால் நாந்தான் ஓடி போய் சொல்லணும்..சில டிப்ஸ் மாதிரி பரிசும் கிடைக்கும்தான்.. :)

அதே போல செய்தித்தாள் பரிமாறலும்.. " ஏய் பொடிசு " னு எதிர் வீட்டு அங்கிள் கூப்பிட்டா " பேப்பர் வந்தாச்சா " னு அர்த்தம்,...

அவர்களுக்கு பெண் குழந்தை இல்லையென்பதால் என் மீது பிரியமும்.. விசேஷ கவனிப்பு உண்டு எனக்கு... அதனாலேயே அவங்க மகனுக்கும் எனக்கும் சண்டை வரும்..

அதனால எனக்கு உடம்பு சரியில்லாட்டி தெருவில் பலர் வந்து விசாரிப்பார்கள்.( எடுபிடியாச்சே ) . பெருமையாயிருக்கும்..:)

அதுவும் சரியா முழுப்பரிட்சையோடு ஏதாச்சும் ஒண்ணு வரும்.. அம்மை , டைபாய்டு , கை உடைத்தது.. என தொடர்ந்து 3 வருடம் தேர்வுக்கு போகவில்லை..

ஒருமுறை இப்படித்தான் எடுபிடி வேலையில் தவறு நடந்தது....ரொம்ப காமெடியா போச்சு... அது என்னன்னு கேட்கிறீங்களா?.. அடுத்த பதிவில்.....அதோடு இன்னொரு புரட்சி திருமணமும்...

முக்கியமா போலித்தனமற்றவராய் தன் சொந்தங்களை அக்கம் பக்கமுள்ளவர்களை அவர்கள் கஷ்டங்களை புரிந்து நேசித்தார்..

அதனால் அவருக்கு அலங்காரம் தேவையற்றதாய் இருந்திருக்கும் எதிலும்..

ஏற்கனவே அவர் செய்துவைத்த விதவை மறுமணம் பற்றி படிக்க

விதவை மறுமணம்





படம் : நன்றி கூகுள்..

Monday, November 22, 2010

கோ-ஹபிடேஷன் /லிவிங்-டுகெதர் என்ற இணைந்து வாழ்தல் - 3.

லிவிங்-டுகெதர்











































மனிதர்கள் பலவிதம்..சிலர் நாத்திகர் சிலர் ஆத்திகர்..சிலர் நடுவில்..

சில்ர் பிறந்தோம் வளர்ந்தோம் வாழ்வோம்..

சிலருக்கு பிறப்பே அற்புதம்.. நாம் அனுபவிப்போம்..அனுபவித்ததை பகிர்வோம்.

சிலருக்கு நான் வாழ்ந்ததுபோல் எல்லாரும் வாழட்டுமே...

சிலர் எதிர்மறை எண்ணம், சிலர் நேர்மறை எண்ணம் , மீதமுள்ளவர், நிதர்சன எண்ணம் கொண்டவர்கள்..

சிலர் எதிலும் துணிவு, சிலர் எப்போதும் பயம், சிலர் ஜாலி, சிலர் கோபம் .

இவற்றில் பல விஷயம் ஜீன்களிலேயே தீர்மானிக்கப்படுகிறது.. சிலது வளர்ப்பு முறையிலும் மீதம் சூழலிலும்..



இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்..இப்படி பலவேறு குணநலன்களும் ரச்னையும் உள்ளவன் மனிதன்..எல்லாரையும் ஒரே விதத்தில் கட்டுப்பாடிட்டு அடைக்க முடியாது...



திருமணம் என்பது இருவர் மனமொத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து பிள்ளைகள் பெற்று மகிழ்ச்சியை இன்னும் வளர செய்வது..

இந்த மகிழ்ச்சி என்பது பணமோ, புகழோ , அழகோ, படிப்போ, நல்ல குணமோ, வீரமோ ,காமமோ எதுவோ , ஒன்றோ , பலதோ அடிப்படையாக கொண்டிருக்கலாம்..

ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்தலில் பெண்ணே கரு சுமந்து பிள்ளை வளர்ப்பதில் அதிக பங்கேற்பதால் , அவளின் முதன்மையான தேவை பாதுகாப்பு..

பாதுகாப்பு என்பதிலும் பல விஷயத்தை அடிப்படையாக கொண்டது..

ஆனால் ஆணுக்கு திருமண பந்தத்தில் முக்கியமாக உடல்தேவை என்பது இயற்கையாகவே ஏற்பட்டது..


அதற்காக தன் வருங்காலத்தை , குழந்தை வளர்ப்பை சட்டை செய்யாதவனுமல்ல..

ஆக இருவர் இணைந்து இன்ப துன்பங்களில் பல்லாண்டு ஒரே இடத்தில் இருந்தும் , குழந்தைகள் பெற்றும் , அவர்கள் பிரச்னைகளை சமாளித்து வெற்றிகரமாக

, நிம்மதியாக வாழணும் என்றால் அவர்கள் பல விஷயங்களை முன்கூட்டியே திட்டமிடணும்..

எதிலெல்லாம் ஒத்து போகலாம் எதெல்லாம் அனுசரிக்கணும், விட்டுக்கொடுக்கணும் என இருவருமே இணைந்து திட்டமிடல் வேண்டும்..

ஆனால் இளவயதில் ஹார்மோன் தொந்தரவால் கண்டதுமே சிலருக்கு காதல் ஏற்படுகின்றது..


என்ன காரணம் என தெரியாமலேயே ஒருவரை பிடித்தும்விடுகின்றது..இவர்/ள் தான் தனக்கு பொருத்தமான துணை என மனம் நினைக்கின்றது..

திருமணம் செய்ய முடிவெடுக்கின்றார்கள்.. ஒன்றாக வாழ தொடங்குவார்கள்.. அப்போதுதான் இருவருக்குமான அன்றாட வேறுபாடுகள், ரசனைகள் , பழக்கவழக்கங்கள் புரிபடுகிறது..

ஆனாலும் ஏதோ ஒரு காரணி மிக உறுதியாக இருக்கும்பட்சத்தில் ஒத்து வராத ரசனைகளும்கூட , அனுசரித்தோ விட்டுக்கொடுத்தோ போக முடிகிறது..


இப்படி எல்லார் விஷயத்திலும் நடைபெறுவதில்லை..

ஒருவருக்கு உணவு மற்றொருவருக்கு விஷமாக இருக்கும்பட்சத்தில் அனுசரிப்புக்கே அங்கு இடமில்லை..

பிரிய முடிவு செய்வார்கள்.. செலவு செய்த திருமணம் முறிவடையக்கூடாதே என பலர் பிராயாசையால் சில திருமணம் கடனேன்னு தொடரும்.. சில பிரியும்..வலியோடு...

சில துணைகள் தமக்குள் ஒற்றுமை இல்லாவிட்டாலும் பிள்ளைகள், அவர்கள் வாழ்வுக்காக பொறுத்துக்கொண்டு தம் ஆசைகளை கனவுகளை தியாகம் செய்வதுமுண்டு..தவறில்லை.. நல்லதும் கூட.. கட்டாயத்துக்கன்றி , மனமொத்த அனுசரணையாக இருக்கும்பட்சத்தில்....


இப்படி திருமணங்களில் உள்ள பல தவறான விஷயங்களே கோ-ஹேபிட்டேஷன் என்ற முறைக்கு வழிவகுத்திருக்கணும்..

காதலில் விழுந்தால் மட்டும் போதாது , வாழ்ந்து பார்த்து பின் குழந்தை பெறுவதை முடிவு செய்கிறார்கள்..

வாழும்போது மட்டுமே போலித்தனமற்று நிதர்சனமான வாழ்க்கை தெரிய வரும்..அடுத்தவரின் குறைகள் புரியும்...


அதைக்கொண்டே முடிவுகளும் எடுக்கின்றார்கள்:..

இத்தகைய திருமணங்களில் பிரிவு அதிகம் என்பது உண்மை..

ஆனால் எத்தனை நல்லது முன்கூட்டியே பிரிந்துவிடுவது.?.

பிடிக்காத துணையோடு காலத்துக்கும் குழந்தைக்காக மல்லுக்கட்டி , குழந்தைகளையும் நிம்மதியில்லாமல் மனச்சோர்வுக்கு ஆளாக்கி மொத்தத்தில் அது ஒரு மோசமான சமூக சூழலுக்கு வித்திடுவதை விட?..

சில சமூக விரோதிகள் உருவாகுவதைவிட?..


எல்லா திருமணங்களுமே இப்படியான முடிவுதான் என சொல்லவரவில்லை.. காலப்போக்கில் ஒருவரையொருவர் புரிந்து நேசிக்க ஆரம்பித்து வெற்றி பெரும் திருமணங்கள் அனேகமுண்டு..அதுமட்டுமல்ல முன்பின் அறியாதவர்கள் இருவர் திருமணம் ஒரு சுவாரஸ்யமே சாதனைவிரும்பிகளுக்கு .. முக்கியமா இரு துணையும் நல்ல அனுசரணையாக , விட்டுக்கொடுப்பவராய் , அன்பானவர்களாய் இருந்துவிட்டால் அது எப்படியும் வெற்றி பெரும்..

ஆனால் வெளியே பார்க்க நல்ல குணமாய் அமைதியாய் யார் வம்புக்கும் போகாதவராய் இருப்பவரின் நிஜம் ( சைக்கோத்தனம் , கோபம், நோய், உடல்குறை , இத்யாதி ) கூட துணைக்கு மட்டுமே தெரிய வரும்...திருமணத்துக்கு பின்..


எனக்கு தெரிந்த ஒரு பெண் நல்ல அழகி , மென்மையானவர் என வரதட்சணையே வாங்காமல் ஒருவர் மணமுடித்தார். நல்ல வேலை கை நிறைய சம்பளம் என பெருமிதப்பட்டனர் பெற்றோர்.

ஆனால் காமக்கொடூரனாய் இருந்தார்.. எப்போதும் தேவை அவருக்கு.. ஆனால் கார் வாங்கி மனைவியை பெருமையா ஹோட்டலுக்கு அழைத்து செல்வதும் விலையுயர்ந்த பட்டுப்புடவை , நகை , சொத்து வாங்கிதருவதுமாய் வெளி உலகுக்கு நல்ல மனிதனாய் தெரிந்தார்..

முதல் குழந்தை பிறந்தது.. உடனே அடுத்த குழந்தை உருவானது.. அபார்ஷன் செய்தாள்..


அடுத்த சில மாதத்தில் அடுத்த குழந்தை.. அதையும் பெற்றார்

அடுத்து சில அபார்ஷன்கள்..

உடம்பும் மனதும் சீரழிந்து மன நோய் வந்தது.. கொஞ்சம் கொஞ்சமாய் மறதி வர ஆரம்பித்தது..உலகையே வெறுத்தாள்..


அப்பதான் அவள் சீரியஸ்நஸ் புரிந்து மருத்துவ உதவி நாடினர்..

வீட்டில் வேலைக்காரி வைக்க அனுமதியில்லை. ஏனெனில் வீட்டு விஷயம் வெளியே செல்லுமாம்..ஆனால் கணவர் உதவி செய்வார்தான்...

அப்பெண்ணின் அம்மா மட்டும் வந்து உதவ அனுமதி..

இப்படி எத்தனை எத்தனை கதைகள்? .வெளியில் சொல்ல முடியாமல்?..தெரியாமல்..?

ஆனால் இதுபோன்ற கதைகள் என்னதான் கலாச்சார மாற்றம் வந்தாலும் நடைபெறும்..

இது மன துணிவு சம்பந்தப்பட்ட விஷயமும் கூட.. வளர்க்கும்போதே கொடுக்கவேண்டிய துணிவும் தற்காப்பும்..



விவாகரத்தும் எல்லாராலும் செய்ய முடியாது.. பெண்ணுக்கு குழந்தைமேலுள்ள உரிமை ஆணுக்கும் உண்டே..

முக்கியமா குழந்தைகள் ஏன் அந்த பிரிவின் தண்டனையை அனுபவிக்கணும்..?


ஆக நல்ல இல்லறம் , நல்ல குழந்தைகள் , அதனொட்டி நல்ல சமூகம் அமையணும் என்றால் நல்ல திட்டமிடல் கண்டிப்பா இருக்கணும்..

கோ-ஹேபிட்டேஷன் என்ற முறையில் இது சாத்தியமாகிறது.. அதற்காக இதில் இருப்பவரெல்லாம் திருமணமே செய்ய விரும்பாதவரில்லை..


திருமணம் செய்வதர்கான முன்னேற்பாடுதான் இது பலருக்கு..

மற்றும் சிலருக்கு , ' வாழ போறது நாம் இருவரும், மனமொத்த பரஸ்பர நம்பிக்கையிலும் , அன்பிலும்.. இதுக்கெதற்கு ஒரு பேப்பர் ஒப்பந்தம்., செலவுகள்..பரபரப்புகள் ???" என்பதாய் கேள்வி..


இணைந்து வாழ்தல் என்றாலே உடனே காமம் மட்டும்தான் என்றால் அது அலுத்துபோகும் மனமொத்து போகாபட்சத்தில்...

இப்படியான வாழ்வில் பெண்ணுக்குத்தான் அதிக பாதிப்பு என்று பயப்படுகின்றனர் பலர்..

நிஜம்..

பெண்ணுக்கு பாதிப்பு எல்லாவற்றிலும் உண்டு.. திருமணத்திலும் இதே பாதிப்புகள் உண்டு..

இதிலிருந்து தப்பி தனியாகவோ குழந்தையோடோ வரும் பெண்ணுக்கு சட்ட ரீதியாக ஜீவனாம்சம் கிடைக்காதாமே?.. " ********* " , " ***********" , என பட்டம் சூட்டி அவளை அவமதிப்பார்களே?.. சமூகம் அவளை ஒதுக்கி வைக்குமே ?..

இதுபோன்றவற்றுக்கு பயப்படுபவர்கள் தாராளமாக திருமணம் செய்துகொள்ளலாம்..


இவற்றையெல்லாம் துச்சமென நினைப்பவர் மட்டுமே , எத்தனை குழந்தையென்றாலும் நான் வளர்ப்பேன் தனியாக என துணிபவர் ஈடுபடலாம்..

மேல் நாட்டில் இதற்கு சட்டமும் இருக்கின்றது .நம், நாட்டில் இதுவரை அனுமதி மட்டுமே உண்டு.. ஆனால் ஜீவனாம்சம் கிடைக்க வழி இல்லை ( மஹாராஷ்டிராவில் மட்டும் சில வழிவகை இருப்பதாக தெரிய வந்தது.. உறுதியா தெரியலை ) .


படிக்காமலோ, வேலைக்கு செல்லாமலேயோ கூட துணையை இழந்தவர், விவாகரத்து செய்தவர்கள் பலர் குழந்தை பெற்று வளர்க்கவில்லையா என்ன ?..

அப்படியிருக்கும்போது படித்து தன் சொந்தக்காலில் நிற்பவர்கள் தன் துணை வருங்காலம் பற்றி முடிவெடுக்க முழு உரிமை உண்டு..

அதனால் ஏற்படும் இன்ப துன்பங்களுக்கு அவர்களே முழு பொறுப்பு என்பதையும் அவர்கள் அறிந்தே இருக்கின்றார்கள்..


லிவிங்-டுகதெரிலிருந்து பிரிவது " ****** " த்தனமாக தெரியுமென்றால் , காதலித்து கைவிடப்பட்டு மற்றொருவனை/ளை மணமுடிப்பது எதில் சேர்த்தி.?

காதல் வயப்பட்டதுமே அவர்களோடு மனதளவில் வாழ்வதில்லையா?.. இல்லையென்றால் மருத்துவரை பார்க்கணும்...

சில போலித்தனமான கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு விதியேன்னு வாழ்வதை விட இவ்வுலகில் ஒருமுறை வாழப்போகிற நாம் நம் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ வழியிருக்குமானால் , அதனால் யாருக்கும் எவ்வித தொந்தரவும் இல்லையென்றால் அதை தேர்ந்தெடுப்பதில் தவறேதுமில்லை..

எல்லா விஷயத்திலும் பாதகமும் இருப்பதுபோல் இதிலும் பாதகமுண்டு.. இதை தன் இஷ்டத்துக்கு தவறாக உபயோகப்படுத்தவும் , ஏமாற்றவும் செய்ய வழியுண்டுதான்... ஏன் காதலிப்பது போல நடித்து ஏமாற்றுவதில்லையா?..


ஆனால் அதெல்லாம் விதிவிலக்குகள் மட்டுமே.. விதிவிலக்குகள் விதியாகாது...

இத்தனை சொல்லியும் எனக்கு திருமணம் என்பதிலும் சடங்குமுறைகள் , கல்யாண விழாக்கள் , சொந்த பந்தங்களிலும் ஒரு சுவாரஸ்யம் இருப்பதாகத்தான் தெரிகிறது..அது என் சொந்த கருத்து மட்டுமே..

இருப்பினும் லிவிங்-டுகெதர் ஒன்றும் மோசமான பயப்படும் விஷயமில்லை என்பதற்கே இந்த விளக்கம்..

லிவிங்-டுகெதரில் நுழைபவர்கள் 100% இல்லற வாழ்வை ஆயுசுக்கும் அதே நபரோடு தொடரணும் என்ற ஆவலில்தான் தொடங்குகின்றார்கள்.. விளையாட்டுக்கல்ல...

அதுமட்டுமல்ல 50 வயதுக்கு மேலுள்ளவர்கள் , விவாகரத்தானவ்ர்கள் ,துணையை இழந்தவர்கள் , பல காரணத்துக்காக மேல்நாட்டில் இணைந்து வாழ்கின்றனர்..

முக்கிய காரணிகள் ,

1. வசதி , எளிது , சிக்கலற்றது..

2. முன்கூட்டியே உறவுமுறை சரிவருமா என பரிசோதித்தல்..

3. சிக்கனம்.( விழா எடுத்து கொண்டாடவேண்டியதில்லை )

4. திருமண ஒப்பந்தத்தில் நம்பிக்கையின்றி தங்களை அதிகமாய் நம்புவது..

5. விவாகரத்து , அதுக்காக நேரம் , சட்டதிட்டம் , பணம் செலவழித்தல் , ஆகியவற்றை தவிர்க்க..

6. சமூக கேள்விகளை தவிர்க்க ( இது வயாதானவர், முக்கிய புள்ளி , போன்றோர் ) .

எனக்கு தெரிந்த ஒரு பெண்ணுக்கு விவாகரத்தாகவே 5 வருடம் ஆனது..:(. அதற்குள் அவர் குடும்பம் பட்ட கஷ்டம் சொல்லி மாளாது.

இக்கட்டுரை ஒரு அறிமுகம் மட்டுமே.. பலர் இது ஏதோ பேராபத்தை , கலாச்சார சீரழிவை ஏற்படுத்த வந்ததாய் நினைத்து வருந்துவதால் சில புரிதல்கள் மட்டுமே...


நிஜமான , பயத்துக்குறிய கலாச்சார சீரழிவுகள் தொலைக்காட்சியிலும் ஊடகத்திலும் இப்ப பதிவுலகிலும் ஆபாசம் என்ற பேரிலும் , நடனம் , சீரியல் , வன்முறை என்றும் வந்துகொண்டுதானிருக்கிறது...


அதுதான் நம் குழந்தைகளுக்கு ஆபத்து...நம் கலாச்சாரத்தில் ரிஸ்க் எடுக்க ஊக்குவிக்காமல்/பாராட்டாமல் பாசம் என்ற பயத்திலேயே குழந்தைகளை வளர்த்துவிடுகிறோம்..

புயலும் சீற்றமும் இருக்கும் கடலிலே கப்பலோட்டக்கூடிய மாலுமியே சிறந்தவன்.. நம் பெண்களுக்கு அதுதான் மிக தேவை..

தனியே நம் நாட்டில் கெளரவமாக வாழக்கூடிய சூழல் பெண்ணுக்கு வரணும்.. ஏனெனில் பெண்ணுக்கு மட்டுமே " **** , ****** " என்ற பட்டங்களை கொடுத்து பழகியுள்ளோம்.. அதையெல்லாம் சட்டை செய்யாமல் மற்றவருக்கு முன்னுதாரணமாக நம் பெண்களை வளர்ப்போம்..தேவையில்லாமல் பெண்களுக்கு பட்டம் கொடுத்தால் அதுக்கு மரியாதை இல்லாமல் போய்விடும்..கெட்ட வார்த்தைகளை கேட்டு கேட்டு பழகும் துணிவை வழங்குகின்றீர்கள்..அவ்வளவே..:)

பாலியல் தொழில் ஒழிக்கவே முடியாது.. உலகிலேயே மிக பாவப்பட்ட தொழில் அது.. கோடி கொட்டிக்கொடுத்தாலும் நம் வீட்டு பெண்கள் செய்வார்களா ?.. ஆசை துணைக்கே அலுத்துபோகும் பெண்கள் இருக்கையில் , பாலியல் தொழிலை கண்ட சாக்கடை ஆணுக்கும் பறிமாறுகிறாளே.. நோய் வாங்கி நோய் தீர்க்கிறாளே..? பாலியல் தொழிலாளி குழந்தைகளுக்கு நாம் ஒரு துரும்பாவது நகர்த்தியிருப்போமா?.. ஆனா வாய்கிழிய பேசுவோம் கேவலமாக ...!!

வாழ்நாளெல்லாம் அவளுக்கு ஒருவர் துணைக்கு இருந்தே ஆகணும் என்ற பயசூழலை தவிர்ப்போம்... பாலியல் ஆபத்துகளை , அதை எதிர்க்கும் துணிவை பெண் குழந்தைக்கு கொடுப்போம்...



மாற்றங்களில் உள்ள நல்லவற்றை சிந்தித்து ஏற்க பழகுவோம்... ஏனெனில் நமக்கு பிடிக்காவிட்டாலும் புதியன , மாற்றங்கள் வந்தே தீரும்...

சில குறிப்புகள் சங்க காலத்திலிருந்து .

" காந்தர்வம் என வைதிக மரபில் குறிப்பிடப்படுகின்ற திருமண முறை எந்தவித நிர்ப்பந்தமும் பொய்மையும் பாசாங்குகளுமற்ற உறவு முறையாகும். உத்தரகுரு என்றும் போகபூமி என்றும் புராணங்களில் குறிப்பிடப்படும் நாட்டில் இத்தகைய உறவுமுறை இருந்தது எனத் தெரியவருகிறது.6 தமிழ் மரபில் களவு மணம் எனக் குறிப்பிடப்படுவதை வைதிக மரபில் நிலவிய காந்தர்வ மணத்தோடு ஒப்பிடுவதுண்டு.7 களவு என்ற சொல்லே கள்ளத்தனமாக, பிறர் அறியாமல் மேற்கொள்ளப்படும் காதல் ஒழுக்கம் எனப் பொருள்படும். களவு மணமே தமிழ் நெறி என்று கூறும் அளவிற்குக் களவு மணத்திற்குச் சங்கப் புலவர்களிடையே குறிப்பிடத்தக்க அங்கீகாரம் கிட்டியிருந்தது. இந்நெறி காமன் வழிபாட்டோடு தொடர்புடையது என்பதற்குப் பிற்காலக் காப்பியமாகிய சீவகசிந்தாமணி அசைக்கமுடியாத சான்றாகத் திகழ்கிறது. சீவகனும் சுரமஞ்சரியாரும் காமன் கோட்டத்துக் கடியறை தன்னில் இரகசியமாகச் சந்தித்துக் கூடி மகிழ்ந்ததை ”இன்றமிழ் இயற்கை இன்பம்” நுகர்ந்தார்கள் எனச் சீவகசிந்தாமணி (பா. 2003,2055,2063) குறிப்பிடுகிறது. "

நன்றி : http://www.sishri.org/kaaman.html

----------------


பழங்குடியினர் திருமணத்தில் சில முறைகளைக் கடைபிடித்து வருகின்றார்கள். பொதுவாக ஆணோ, பெண்ணோ மணந்து கொள்ள விரும்பினால் அவர்கள் இருவரையும் ஒன்றாகப் பழகவிடும் பழக்கம் இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது. இருவரையும் காட்டிற்குள் அனுப்பிவிடுகிறார்கள். தங்களுக்குள் மனம் விட்டுப் பேசி தனியே தங்கி சில நாட்கள் பழகுகின்றனர். பின்னர் திரும்புகின்ற போது பெரியோர்களின் முன் நிறுத்தப்படுகின்றனர். இருவரும் மனம் ஒத்து மணந்து கொண்டால் மட்டுமே கணவன் மனைவியாகலாம். விரும்பாவிடில் இருவரும் பிரிந்து வேறு ஒருவரை (இருபாலரும்) மணக்கலாம்.

ஒரு பெண்ணை மணக்க விரும்பும் ஆடவனைப் பெண் வீட்டிற்கு அனுப்பி அங்கேயே இருந்து உழைத்து வர வேண்டும். சரியான தகுதியுள்ள மாப்பிள்ளை என்று பெண்ணும், பெண் வீட்டாரும் கருதினால் மட்டுமே பெண் கொடுக்கப்படும் இல்லையேல் பெண் கொடுக்க மறுத்து விடுவார்கள். ஆண்டுக்கணக்கில் உழைப்பவரும் உண்டு.


http://www.eegarai.net/-f15/-t7337.htm?theme_id=13515


படம் : நன்றி கூகுள்.

Saturday, November 20, 2010

லிவிங் - டுகெதர் + என் பயணமும். , ஜெனரேஷன் கேப்... பாகம் 2
































" நீ நல்லா இருப்பியா.?. உன் பெண்கள் நல்லா வாழ்ந்திடுவாங்களா?.. என் சாபம் உன்னை உன் குடும்பத்தை சும்மா விடாது..%$^*&*(&**"

என வீட்டு வாசலில் வந்து சபித்து விட்டு போனார்கள் ஒரு ஆண்ட்டி..

இது போதாதா ?. உடனே அக்கம் பக்கம் உள்ளவர்களெல்லாம் வரிசையா வந்து துக்கம் விசாரிக்க வந்தார்கள்..

எங்களுக்கே சங்கடமா இருந்தது .. அம்மாவுக்கு ஏன் எப்பவும் இந்த வீண் வேலைகள்..????????

அடுத்தவர் பிரச்னையில் ஏன் தலையிடுகிறார்கள்.. இதனாலேயே அப்பாவுக்கும் அம்மாவுக்கும் எத்தனை சண்டைகள்..?.

அம்மா மேல கோபமா வரும்....:((((

ஆனா அம்மா இதையெல்லாம் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் அண்ணாவை விட்டு மாங்காய் பறிக்க சொல்வதும் , முருங்கை காய் பறிப்பதும் , தெருவில் கேட்டு வந்தவர்களுக்கு கொடுத்து அனுப்புவதுமாய்..சாதாரணமாய் இருப்பார்..காய்கறி விற்பவர், நெல் சுமப்பவர், பூ விற்பவர், பால் காரர், தபால் காரர் அனைவரும் இளைப்பாறும் இடம் எங்க வீட்டு முற்றம்.. அந்த மாமர நிழல்.. எல்லார் சோகத்திலும் தன் சோகத்தை மறந்தவர்..

அப்படி என்னதான் நடந்தது.?. ஒரு அக்காவின் சோக கதை இங்கே..

புது வீடு கட்டும்வரை அந்த அக்கா வீட்டில்தான் நாங்கள் சின்ன வயதில் குடியிருந்தோம். எங்களையெல்லாம் வளர்த்தவர்கள்..

எங்களுக்கு வேதாகமம் , கதை சொல்லி தந்தவர்கள்..

நாங்க வீடு கட்டியதும் இடம் மாறினோம். அக்காவுக்கு திருமணம் ஆனது..ஒரு வயதில் ஒரு மகன் இருந்தபோது பேரூந்தில் செல்லும்போது விபத்து ஏற்பட்டு மூவரும் தூக்கி எறியப்பட்டு , கணவர் அந்த இடத்திலேயே மரணம்..

அடுத்த 9 ஆண்டுகள் எல்லா சோகத்தையும் சுமந்து கொண்டு தமிழ் ஆசிரியர் வேலைக்கு சென்றார் அக்கா.. கருப்பு என்றாலும் முத்துப்பற்கள் , முட்டு வரை கூந்தல் , இனிமையான பேச்சு கொண்ட பேரழகி அக்கா..

பார்க்கும் யாருக்குமே பிடித்து போகும் அக்காவை.. தமிழ் துள்ளி விளையாடும் கணீரென்ற குரலில்..

ஆக அவர் ஞாயிறுதோறும் குழந்தையை என் பக்கத்து வீட்டுக்கு ( அக்காவின் நெருங்கிய சொந்தம் ) அழைத்து வரும்போது அம்மாவிடம் வந்து கண்ணீர் சிந்துவார் எமக்கு தெரியாமல்..

இருவரும் ரகசியம் பேசுவார்கள் எம்மை வெளியே துரத்தி விட்டு..

அக்கா பூ வைக்க கூடாதாம் , ஆனால் அவர் அம்மா பூ வைத்து நகை போட்டுக்கொள்வார். கணவனோடு தனியறையில் படுப்பாராம்..

என்ன கொடுமை..?.. ( கலாச்சாரம் ? )

இவ்வேளையில் மனைவியை இழந்த ஒருவர் ( அவருக்கு 12, 10 வயதில் இரு குழந்தைகள் ) அக்காவை மணமுடிக்க ஆசைப்படுகிறாராம்..அக்காவை பள்ளியில் சந்தித்துவிட்டு ..

ஆனல் வீட்டில் பலத்த எதிர்ப்பு அக்காவுக்கு..எங்க பக்கத்து வீட்டினர் எங்களுக்கு ரொம்ப பிடித்தவர் மட்டுமல்ல ரொம்ப உதவியும் எல்லா விஷயத்திலும்..

ஆனால் அவர்களும் இதற்கு எதிர்ப்பு..மறுமணம் செய்ய கூடாது பையனுக்கு 10 வயதாகிவிட்டது என்று..( கலாச்சாரம் ?.. )

அம்மா உடனே தன் துணிவான இரு தோழிகளை ( ஒருவர் கவுன்சிலராக இருந்தார். மற்றொருவர் மலேஷியாவில் பல வருடம் வாழ்ந்தவர். ) அழைத்து ஆலோசித்து இத்திருமணத்தை மிக ரகசியமாக முடிக்க ஏற்பாடு செய்தனர்..

அப்பதான் என் இரண்டாவது அக்காவுக்கு பிரசவ நேரம்.. சம்பந்தி , நாத்தனார் என்ற கூட்டங்கள் வேறு..

மருத்துவமனையில் வைத்து ரகசிய கூட்டம் நடைபெறும்.. நான் அம்மா மடிமீது படுத்துக்கொண்டே கதை கேட்பேன்..

மேலும் நானும் ஒரு முக்கிய தூதுவர்...தகவல் அனுப்ப..:)

அக்காவை டிஸ்சார்ஜ் செய்துவிட்டு உறவினரையெல்லாம் வழியனுப்பி வைத்துவிட்டு , அம்மா ஒருநாள் காலையிலேயே கிளம்பி போனார்கள்.. எங்கேன்னு கேட்டா சொல்லலை... ஆனா போய்விட்டு வந்ததும் மகிழ்ச்சியா இருந்தார்கள்..

பக்கத்து வீட்டு ஆண்டி அங்கிளை பார்க்க மட்டும் வெட்கப்பட்டுக்கொண்டு இருந்தார்கள்..

(பக்கத்து வீட்டு ஆண்டி பற்றி " சந்தித்த அற்புதமானவர்கள் " பகுதியில் எழுதியிருக்கேன் பார்க்கலாம். அன்னை தெரசா அவர்..நாங்க நேரில் கண்ட தெய்வம்.. )

இரண்டு நாள் கழித்து அந்த அக்காவின் அம்மா வந்து மேலே சொன்னது போல அசிங்கமா கத்திவிட்டு போனதும் தான் தெரிந்தது , அக்காவுக்கு திருமணம் ஆன விஷயம்..

" ஏம்மா ஆண்டி இப்படி சபிச்சுட்டு போறாங்களே..?" னு நாங்க வருத்தப்பட்டா , அம்மா எளிதா சொல்வாங்க ,

" ஹ அடுத்த கிறுஸ்மஸ் க்கு பாரு .. எல்லாரும் குடும்பமா கேக் வாங்கிட்டு வருவாங்க... "

தீர்க்கதரிசியா அம்மா?.. இல்லை.. அவர் பார்த்த , சந்தித்த பிரச்னைகள் , அனுபவங்கள்..

அக்காவுக்கு திருமணம் ஆனதும் தான் பெரும் சோதனை காத்திருந்தது...

கணவனின் இரு குழந்தைகளும் தம் சொந்தங்களின் பேச்சை கேட்டு அக்காவை வெறுத்தனர்.. அக்காவின் மகனை ஏற்றுக்கொள்ளவில்லை.. அக்காவின் அன்பும் பொறுமையும் அவர்களையும் சில வருடங்களில் கரைத்தது..

And they lived happily ever after.. இப்ப பிள்ளைகள் மூவரும் அமெரிக்காவில்..

அப்புரம் ஒருநாள் அந்த ஆண்டி , எங்கம்மா கை பிடிச்சு அழுதுகொண்டே, '" சாந்தியம்மா , நீங்க மட்டும் அன்னிக்கு அப்படி ஒரு துணிச்சலான செயல் செய்யாவிட்டால் என் பொண்ணு நிலைமை என்னவாயிருக்கும்..? "

அப்பவே இப்படி பல புரட்சியை செய்தவர் சத்தமில்லாமல்.. இது ஒரு சாம்பிள் மட்டுமே..


பக்கத்து வீட்டு அங்கிள் கூட எங்க அம்மா மேல் கொஞ்ச நாள் வருத்தத்தோடு இருந்தாங்க..

ஆனா அம்மா சொல்வாங்க , ஒரு இளம் விதவையை வீட்டுக்குள் வைத்துக்கொண்டு பெற்றோர் மட்டும் எப்படி தனியறையில் வாழ முடிந்தது?..

ஊரில் எல்லாரும் சொன்னாங்க , உங்களுக்கு நான்கு பெண் பிள்ளைகள் இருக்காங்க .நல்ல சம்பந்தம் கிடைக்காது... எதுக்கு உங்களுக்கு வேண்டாத வேலை என..

" என் பிள்ளைக்கு இந்த நிலைமை வந்தால் என்ன செய்வேனோ அதைத்தான் நான் அவளுக்கு செய்தேன். யார் தடுத்தா என்ன என்ன சாபம் போட்டா என்ன.?. என் பிள்ளைகளை கட்டிக்க நான் , நீ ன்னு போட்டி போட்டு வருவாங்க.. யாரும் கவலைப்படவேண்டாம் " என வாயடைத்துவிடுவார்கள்..

பிரச்னை என வந்தபோது ஓடி ஒளிந்தவரெல்லாம் மெல்ல மெல்ல என் அம்மாவிடம் தத்தம் பிரச்னைகளை இப்ப துணிவா சொல்ல வந்தாங்க...

வீடே ஒரு பஞ்சாயத்து ஆல( மா ) மரம் ஆனது..

அக்கம் பக்க ஏழைகள் , கூலித்தொழிலாளிகள் எல்லார் வீட்டு பிரச்னைகளும் அம்மாவிடம்.. குடிகாரர்களின் மனைவி புகார் செய்தா அம்மா சென்று அதட்டி விட்டு வருவார்.. அப்போதைக்கு சரிம்மா சரிம்மா என பெட்டிப்பாம்பாய் அடங்கினாலும் நல்லா தண்ணி போட்டுவிட்டு வந்து இரவு கத்திவிட்டு போவான்.. :)).. அடுத்த நாள் மன்னிப்பு கேட்டு வேலைக்கு வந்தும் நிற்பார்..:)

ஏழைப்பிள்ளைகளை பள்ளியில் சேர்ப்பது , வேலை வாங்கி தருவது, திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்த்து தருவது என இஷ்டமாய் உதவுவார்கள்..

எந்த வீட்டில் மரணம் என்றாலும் எங்க வீட்டுக்கு முதல் தகவல் வரும் ...வந்ததுமே காஃபி பெரிய பானையில் தயாராகும்..

எங்க வீட்டு முற்றத்தில் நாற்காலிகள் போடப்படும்..


எங்கள் தெருவில் கிறுஸ்தவர்கள் அனேகர்..

பின் தெரு தேவர் இனத்தவர்கள்.. பாசக்காரர்கள்.. ( இதை எழுதலாமா னு தெரியவில்லை தப்பென்றால் நீக்கிடுவேன் ) . ஆனா அவர்களுக்குள் சண்டைன்னு வந்தால் அறுவாள் , டியூப்லைட் என கிடைத்த ஆயுதத்தை தூக்கிக்கொண்டு ஊரே வேடிக்கை பார்க்குமளவுக்கு நடக்கும்..எல்லாரும் எங்க வீட்டு மூன்றாவது மொட்டை மாடியில் ஆஜர்.. லைவ் ரிலே... தெரு முழுதும் பேர்ட்ஸ் ஐ வ்யூ..

பயமா இருக்கும் கொலை விழுமோ என.. அர்த்தமே புரியாத கெட்ட வார்த்தைகள் ..:))

அப்பவும் அம்மாவுக்குத்தான் தகவல் அனுப்புவாங்க..

" சாந்தியம்மா பேச்சுக்குத்தான் கட்டுப்படுவான்.. ஆள் அனுப்புங்க "

அப்பா இருந்தா அம்மாவால் போக முடியாது.. சில நேரம் பின்பக்கம் வழியா போவாங்க..சில வேளை அப்பா கண்டுக்கமாட்டாங்க..

நானும் முந்தானை பிடித்துக்கொண்டே அம்மாவுக்கு ஏதாச்சும் ஆகிடுமோ னு கூட போவேன்..

அப்பா வெளியூர் போயிருந்தா " என்னப்பா என்னாச்சு , னு மெதுவா பேசி சண்டையிட்டவரை வீட்டுக்கு அழைத்து வருவாங்க கையை பிடித்து .."

பார்க்கவே பயமா இருக்கும்..எங்க வீட்டு முன்னால் கூட்டம் கூடும்..வேடிக்க பார்க்க..எங்க அண்ணா இருவரும் கூட்டத்தை அனுப்புவார்கள்.. என் அண்ணா இருவரும் அமைதின்னா அமைதி அப்படி ஒரு அமைதி..:)). ( ஆனா எனக்கு போய் அமைதின்னு பேர் வெச்சுட்டாங்களே..:)) )

வீட்டுக்குள் பெண் பிள்ளைகள் இருக்காங்களே னு அம்மா ஒருபோதும் பயந்ததில்லை..

அந்த அண்ணாமார் எல்லாம் எங்களை எங்கே கண்டாலும் மிக மரியாதை செலுத்துவார்கள் அம்மா மேலுள்ள மரியாதையால்...

ஆக தேவர் வீட்டு விசேஷத்தில் அம்மா எப்பவும் முன்னால் நிற்பாங்க.. அனேகர் எங்களை தேவர் என்றே நினைத்திருந்தனர்.. :)).

( இப்ப என் பிள்ளைக்கு தான் எந்த சாதின்னே தெரியாது.. சாதின்னாலே என்னன்னு தெரியாது.. )

அதே போல் எங்க வீட்டு விசேஷம் அனைத்திலும் அவர்களும்..

இது பலருக்கு ஆச்சர்யமான விஷயம் அப்போது...

இத்தனைக்கும் அம்மா இந்து.. அப்பா கிறுஸ்தவர்.. ஆனாலும் கிறுஸ்தவ முறைப்படி ஞானஸ்தானம் பெற்று திருமணம் செய்ததால் கிறுஸ்தவ முறைப்படியே எம்மை வளர்க்க பிரியப்பட்டார் அம்மா.

ஏன்னா பெண்ணுக்கு கல்வி , உரிமை இங்கு அதிகம் என்பது அவர் எண்ணமாயிருந்திருக்கும்....

மனசுக்குள் அவர் இந்து என்பது மட்டும் அப்பப்ப வெளிப்படும்.. :)

இந்து கோவிலை தாண்டும்போது செருப்பை கழற்றிவிட்டு கன்னத்தில் போட்டுக்குவார்.. கையெடுத்து கும்பிடுவார்.. அப்பாவுக்கு தெரியாமல் வருடந்தோறும் குத்துவிளக்கு அனுப்பி வைப்பார் கோவிலுக்கு.. பின் தெருவில் கொடை விழாவுக்கு எங்க கிறுஸ்தவர் தெருவில் எங்க வீட்டிலிருந்து மட்டுமே பணம் தரப்படும்.. சாமியாடி வந்து எங்க வீட்டு முற்றத்தில் மட்டும் ஆடி விபூதி தருவார்..

எதையும் மறுக்காது ஏற்க பழக்கினார் அம்மா..


கிராமத்திலிருந்து பாளை பெரிய மருத்துவமனைக்கு யார் வந்தாலும் முதல் செய்தி தொலைபேசியில் அம்மாவுக்கு வரும்..

ரொம்ப தியாகி மாதிரி , " அதுக்கென்ன வர சொல்லு . தம்பியை வைத்து நல்லா பார்க்க சொல்வோம் . நம்ம வீட்டிலேயே இரவு தங்கிக்கலாம்.."

மாமாதான் பெரிய மருத்துவர் அப்போ..

விருந்தினர்களுக்கு என் தலையணை வரை நான் தானம் செய்யணும் ..முகத்தில் புன்னகை , அகத்தில் வருத்தம்..:)..

விருந்தினர் குளிக்க , தண்ணீர் வராத நாட்களில் 100 குடம் தண்ணீர் எடுக்கணும் அடி பம்பிலிருந்து..( ? ) அதெல்லாம் கஷ்டமாய் தெரிந்ததேயில்லை..

ஏன்னா பாராட்டு மழையில் நனைந்திருப்போம்.. மேலும் கிராமத்துக்கு போகும்போது பிரமாண்டமான வரவேற்பு இருக்கும்..


இதுக்கும் இடையில் நாங்க படிக்கணும்..தேர்வுக்கு .. வந்தவங்களுக்கு காஃபி போட்டு, டிபன் செய்து கொடுக்கணும்..

ஆக ஒரு காது வழியா சமூக பாடம் . மற்றொரு காதில் பள்ளி பாடம்...:).

இப்படிப்பட்ட அம்மாவை வெளிநாட்டில் கொண்டு வந்து வைத்தால் என்னாகும். பிரச்வத்துக்காக ஒரு வருடம் விசா எடுத்து வரவழைத்தால் குழந்தை பிறந்ததுமே என்னை அனுப்பிவிடு என அழ ஆரம்பித்தார்கள்..

அதே தான் அமெரிக்காவிலும் . ஒரு வருடம் என சென்றவர்கள் , மூச்சை பிடித்துக்கொண்டு மூன்று மாதம் இருந்தார்களாம்..அண்ணாவிடம்..

வாழ்நாளிலே அம்மாவுக்கு மிகப்பெரிய தண்டனை அதுதான்.. எது ?. ஆட்கள் இல்லாமல் இருப்பது..

அம்மா சென்னைக்கு சென்றாலே அக்கம் பக்கம் உள்ளவர்கள் தேட ஆரம்பித்திடுவார்கள்..

" தம்பி அம்மாவை சீக்கிரம் வர சொல்லுங்க ஒரு முக்கியமான பிரச்னை.." என அண்ணாவிடம் இன்றும் ஆட்கள் வருகிறார்கள்...


அம்மா பட்ட கஷ்டத்தை சொல்லணும்னா தனியா புத்தகம்தான் போடணும்..ஆனால் அதுதான் அவர் சக்தி..வசதியான வீட்டில் பிறந்து வசதியான வீட்டுக்கு மூத்த மருமகளாய் வந்து வேலை வேலை வேலைதான்...அம்மா திருமணத்தின் போது அவர் கடைசி தம்பி கைகுழந்தை.. அதே போல அப்பாவின் கடைசி தம்பியும்... ஒரே வீட்டில் மாமியார் மருமகள் , அம்மா, மகள் தொட்டில் .:))..

ஆனால் நிறைவான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார் என்பது மட்டும் உண்மை..

அவருக்கு தெய்வம் , பிடிமானம் , மகிழ்ச்சி எல்லாமே மிக சாதாரண மனிதர்களே..மனிதன் கஷ்டப்பட கலாச்சாரம் ஒரு தடைன்னா அதை தூக்கி எறியணும் னு நினைப்பவர்.. இலக்கியமோ , புரட்சி புத்தகமோ படித்ததில்லை..

தாம் செய்வது புரட்சியா , என்பதெல்லாம் தெரியாது.. ஆனா ஒருத்தரோட துயர் துடைக்கணும் அது மட்டும்தான் கண்ணில் தெரியும்..அதற்கான விமர்சனங்களை சட்டை செய்யாதவர்.மகிழ்ச்சியா தாங்கியவர்...எத்தனை எத்தனை திருமணங்கள் நடத்தி வைத்தார்.?. பணம் செலவு செய்தல்ல , தன் நேரம் , துணிவு , அறிவை செலவழித்து.

அவர் தூங்கியே நான் பார்த்ததில்லை.. ஆனால் பொத்தென்று விழுந்து பார்த்துள்ளேன் பலமுறை.. குறைந்த ரத்த அழுத்தம் உண்டு..

பேசிக்கொண்டிருக்கும்போதே மயங்கி விழுவார்.. ஆனாலும் மருத்துவரிடம் சென்று தன் உடம்பை காண்பிக்க மாட்டார்.. பிடிவாதம்..

மாமா அப்பப்ப திட்டி மருந்து கொடுப்பார்கள்.. அப்பவும் நக்கல் " என்னை பரிசோதித்தா 100 வியாதி லிஸ்ட் சொல்லுவாங்க.. எனக்கு தெரியாதா?.. " என ..

ஊரிலுள்ளவருக்கு மட்டுமல்ல டாக்டர் மாமாவுக்கு உடல்நிலை சரியில்லாட்டி கூட கைப்பக்குவ மருத்துவம் , சூப் ,ரசம், லேகியம்னு செய்துகொடுப்பார்..:)).

பிரசவத்துக்கு ,பாலூட்ட , வயற்று வலி , சளி இருமல் என பல்வேறு லேகியம் செய்ய ஆலோசனை வேறு..நாங்க அம்மா சொல்வதை கேட்காமல் மருத்துவரிடம் குழந்தை அழைத்து செல்வோம்.. கிண்டலடிப்பார்..

நான் சொல்றத கேட்டா 2 நாளில் சரியாகும்.. மருத்துவர் சொல்றத கேட்டா ஒரு வாரமாகும்.. குழந்தையை ஏன் இப்படி படுத்துற.? சாப்பாட்டை திணிக்காதே.. ஒரு நேரம் சாப்பிடாட்டி ஒண்ணும் செத்து போகாது.தன்ணி மட்டும் கொடு . என துணிச்சலாக பட்டினி போட சொல்வார்...

கல்லூரியிலோ பள்ளியிலோ எமக்கு ஒரு பிரச்னை என்றால் உடனே அங்கு இருப்பார்.. பருத்து சேலை என்றாலும் நேர்த்தியாக உடை அணிந்து கிட்டத்தட்ட எம்.எஸ்.சுப்புலஷ்மி மாதிரி மங்களகரமாக இருப்பார், அப்பா மரணத்துக்கு பின் எல்லாவற்றையும் இழந்தார் , அண்ணாக்கள் எத்தனை சொல்லியும்.. ( கலாச்சாரம் )


அவருடைய சக்தியே எளிமை.. சென்னையில் அக்காவிடமிருந்து தொலைபேசி வரும்.. அம்மா உடனே வாங்கன்னு..( அக்கா வீட்டுக்காரர் வெளிநாடு பயணம் செய்யும்போது ) ...இந்த 76 வயதிலும் ,

" அடுத்த டிரெயின் எப்ப தம்பி ?" னு ஒரு பையில் இரண்டு சேலைகளை எடுத்து வைத்து கிளம்பிடுவார்.. ரிசர்வேஷன் வேணுமே, படுக்கணுமே . என்ற கவலையெல்லாம் கிடையாது.. தாலி செயினை மட்டும் பையினுள் இரவு எடுத்து வைத்துக்கொள்வாராம்.. ".



ரயிலில் ஏறியதுமே எல்லாருடனும் சகஜமா பேசி அதுக்குள்ள நட்பாயிடுவாரே.. அவருக்கு என்ன கவலை.?..

சரி இந்த பதிவில் அம்மா பற்றி எழுதியதும் லிவிங்-டுகெதர் மறந்துட்டேன் மன்னிக்க..

( எடிட் செய்யாமல் அப்படியே போட்டிருக்கேன் . போரடிச்சா திட்டிருங்க.:) .)

அடுத்து அதை கொஞ்சம் பார்ப்போம்..


லிவிங்-டுகெதர் பற்றி




படம் : நன்றி கூகுள்..

Friday, November 19, 2010

லிவிங் - டுகெதர் னா என்ன.?.+ என் பயணமும். + , ஜெனரேஷன் கேப்... இத்யாதி






































லிவிங் - டுகெதர் னா என்ன.?.+ என் பயணமும். + , ஜெனரேஷன் கேப்... இத்யாதி..


25 வருசத்துக்கு முன்னால முதன்முறையா இருபாலினர் சேர்ந்து படிக்கும் கல்லூரியில் காலடி வைக்கும்போதே சொந்தங்கள் எல்லாம் வரிசையா வந்து

அறிவுறை என்ற பேரில் கலாச்சார அட்வைஸிட்டு போனாங்க..அதென்ன அப்படி?.

" நம்ம வீட்டு புள்ளங்க எல்லாம் இந்த பிகாம், பிஏ படிச்சா போதாதா?... பொறியியல்தான் படிக்கணுமா?.. படிச்சு என்ன செய்ய போறா ?..ஒருத்தனுக்கு பொங்கி ஆக்கி குடுக்க இதெல்லாம் தேவைதானா?..

அதிலும் ஆம்புள புள்ளங்க கூட சேர்ந்து படிக்கணுமாமே?.. "
கஷ்டப்பட்டு விடிய விடிய படிச்சு டியூஷனுக்கு எஸ்கார்ட்டோட போய் அதிக மதிப்பெண் எடுத்து அரசு பொறியியல் கல்லூரியில் சீட் கிடைத்ததை விட அன்னையிடமிருந்து கிடைத்த அந்த பெருமிதமான நெற்றி முத்தம்.. இதெல்லாம் வீணாகிடுமோ னு கவலை பட்டாலும், பல எதிர்ப்புக்கிடையில் அன்னை மட்டுமே துணிந்து சொன்னார்.

" நீ பொறியியல் படிக்கிற .. யார் என்ன சொன்னாலும் கவலைப்படாதே.நான் இருக்கேன்.."

ஆனா ஒரே ஒரு கட்டளை மட்டுமே..

" இப்ப எப்படி உன்னை அனுப்புறேனோ , அதே மாதிரி நல்ல பிள்ளைன்னு பெயர் எடுத்து வரணும்... " ( அதாங்க நல்ல புள்ளன்னா காதல் கீதல் னு விழாம )

" கண்டிப்பா மா. நீங்க பெருமை படும் அளவுக்கே வருவேன்.. இது சத்தியம்.. " ( சத்தியத்தை காப்பாத்தி பெருமையும் படுத்தினோம்..நாம யாரு கோடு தாண்டாத சீதை பரம்பரையாச்சே.. )

அப்பாவுக்கு கூட சம்மதமில்லை.. என்ன மதிப்பெண் வாங்கியிருக்கேன் என்ற கவலையுமில்லை.( கட்டிகொடுக்கபோர பொண்ணு என்ன படிச்சா என்ன ) . ஆனால் நல்ல மதிப்பெண் என்று பள்ளி வந்து கையெழுத்திடும்போது தெரிந்ததும் மகிழ்ந்து உடனே விலையுயர்ந்த ஐஸ்க்ரீம் பார்லர் அழைத்து சென்றாங்க...மனம் மாறினாங்க.. படிக்கும்போது விடியக்காலை 4 மணிக்கே எழுந்து பால்காரனை துரத்தி எனக்காக பால் வாங்கி வந்து காப்பி போட்டு நாங்க இருவர் மட்டும் குடித்துவிட்டு என்னை 5 மணி ரெட்டியார்பட்டி பஸ் சில் பிஸிக்ஸ் டியூஷனுக்கு ஏத்திவிடுவார்..

பஸ் ல் நான் மட்டுமே,.,. பஸ் ஓட்டுனரும் கண்டக்டரும் பழக்கமானர் அப்பாவுக்கு..

அதுமட்டுமல்ல , அதிகாலை வேளையில் அங்குள்ள டீக்கடை டீ மாஸ்டரிலிருந்து பழக்கடை தாத்தா வரை..

யாரும் " ஏன் பெண்ணை இந்த நேரத்தில் இப்படி படிக்க அனுப்பித்தான் ஆகணுமா " னு கேட்காமல் எனக்கு உதவுவதிலேயே இருந்தார்கள்..

பஸ் முந்தி வந்துவிட்டாலும் எனக்காக காத்திருக்கும்..

டியூஷன் வாத்தியார் வீட்டுக்கு தூரத்தில்தான் பஸ் ஸ்டாப் ஆனாலும் பஸ் வாத்தியார் வீட்டு பக்கமே நிற்கும்.. நான் வீடு நுழையும் வரை கூட சில நேரம் ஓட்டுனர் வண்டி எடுக்க மாட்டார்.. ( மார்கழி மாசம் விடிந்திருக்காது ) ..

எனக்கு உதவி செய்த இவர்கள் யார்?..எந்த விதத்தில் கடமைப்பட்டிருக்கின்றார்கள்..?

அதில் ஒருத்தருக்கு கூட பாலியல் வெறி இருந்திருக்குமானால் , நான் தப்பித்திருப்பேனா?..

சாயங்காலம் கெமிஸ்ட்ரி வகுப்புக்கு அக்ரகாரம் செல்லணும்.. கூடவே பாடிகார்ட் வாலிபர்கள் வருவார்கள்.. தொந்தரவோ கிண்டலோ கிடையாது.. ஆனா பின் தொடர்ந்து வருவதே எத்தனை எரிச்சல்.. வீட்டில் சொன்னால் பிரச்னையாகுமே , அய்யோ பாவமே அந்த பசங்கன்னு தோணும்.. ஆனால் ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் வீட்டிலும் சொல்லி வைத்தோம்..

அதிலிருந்து யாரோட அம்மாவாவது வந்து வாத்தியார் வீட்டில் காத்திருந்து கூட்டி செல்வார்கள்.. ( ஆனாலும் பசங்க விடாக்கொண்டன்கள்)

அப்புரம் அது யார் வீட்டு பசங்கன்னு விசாரிச்சு தகவல் அனுப்பி தடை போடப்பட்டது ஒரு கதை..

இப்படி ஒரு பெண் படிக்க செல்லவே ஏகப்பட்ட இடைஞ்சல்கள்..

இதையெல்லாம் நீங்க நம்புவீங்களோ இல்லையோ , என் பிள்ளைகள் நிச்சயம் நம்பமாட்டார்கள்.. ஏனெனில் அவர்கள் பார்க்கும் அம்மா இப்ப முற்றிலும் வேறு..

கிட்டத்தட்ட ஒரு லேடி ஜேம்ஸ்பாண்ட்..:)

எப்படி இத்தனை மாற்றம்.?.. நானும் உள்ளூரிலேயே இருந்திருந்தா கழுத்து நிறைய நகை போட்டுகிட்டு பழங்கதை பேசிகிட்டு ஜாலியா இருந்திருப்பேனாயிருக்கும்...

வெளிநாட்டு வாழ்க்கை என்னை முற்றிலும் புது கோணத்தில் சிந்திக்க வைத்தது..

காதல் என்ற சொல்லே சொல்ல முடியாது கதைக்குகூட டேஷ் டேஷ் போட்டே பேசிய காலம் அது...

ஒரு பையன் பெண்ணை பார்க்கிறான் என்றால் அது அந்த பெண்ணின் தவறே.. அவள் ஏன் இடம் தருகிறாள் என்றுதான் கேள்வி..

வருடத்துக்கு ஒரு படம் .. அதுவும் சங்கராபரணம் , அல்லது கடவுள் படம்.. அதுகூட இரண்டாவது காட்சின்னா பரவாயில்லை..

என் அன்னைக்கு படிக்கும் வாய்ப்பு 8ம் வகுப்போடு தடை பட்டதால் அவருக்கு தன் பிள்ளைகளை படிக்க வைக்கணும் என்கிற வெறி வந்தது..

அது மட்டுமல்ல , அப்பா குடும்பத்தில் ( படித்தவர்கள் ) எல்லாரும் சாப்பாட்டு மேசையில் அமர்ந்து ஆங்கிலத்தில் பேசியபோது தம் பிள்ளைகளும் அப்படி பேசணும் என ஆசைப்பட்டார்..

அதனால் நாங்கள் தப்பித்தோம்.. எல்லா கஷ்டத்திலும் இடைஞ்சலிலும் போராடி படிக்க வைத்தார்..

படிப்புக்காக யார் காலிலும் விழ தயாராக இருந்தார்.. ( இப்பவும் அதையே எமக்கும் சொல்லுவார்.. உங்களால் முடிந்த கல்வி உதவி செய்ய மறக்காதீர்கள்.. என்று )

பெண் பிள்ளைகளை படிக்க வைக்கணுமா என்ற கேலி பேச்சையெல்லாம் சட்டையே செய்யாதவர்..

கான்வெண்ட் கன்னியாஸ்திரிமார் அனைவருக்கும் நல்ல பழக்கம்.. அவர்களுக்கு சுகவீனம் என்றால் சூப் செய்து அனுப்புவார் என்னிடம்..

ஆக கான்வெண்டிலும் நாங்க பிள்ளைகள் 6 பேரும் கண்காணிக்கப்பட்டோம்.. அங்க இங்க திரும்பிட முடியாது கடிவாளம் போட்ட மாதிரி வளர்ப்பு..

பள்ளி அருகில் என்பதால் அனேக ஆசிரியர்கள் வீட்டை சுற்றி.. பலர் வீடு திரும்பும்போதே அன்னையிடம் வந்து பேசிவிட்டு காப்பி குடித்துவிட்டு செல்வார்கள்..

பிரசவம் வரை பார்த்ததும் உண்டு.. குழந்தைகளை விட்டு செல்வார்கள் எங்கள் வீட்டில்.. இப்படி பழக்கம் வைக்காதவரே இல்லை எனலாம்..

உதவின்னா ஓடி போய் முதலில் செய்வார்.. ஆக ஜாதி வித்யாசம் அதிகம் இருந்த எங்க ஊரில் இவர் எல்லோருடனும் பழகி வந்தார்..

அப்பவே எமக்கு ஜாதி மத வித்யாசமெல்லாம் பார்க்க கூடாது என கற்று தந்தார்..தன் செயல்கள் மூலம்..

படித்தவர்களோடு வலிய சென்று பழக்கம் வைத்துக்கொண்டார்.. ( அப்படியே ஜனாதிபதி வெங்கட்ராமன் அவர்களை சந்தித்ததும் தனி கதை )..

தினமும் செய்தித்தாளை வரி விடாமல் படிப்பார்.. அவர் மாதிரி அரசியல் , சமூகம் பேச முடியாது.. அப்படி ஒரு நியாபகசக்தி..

ஆக ஒரு நல்ல சூழலை உருவாக்கி தந்தார்..இப்ப அவரை தவறாக பேசியவர்களும் கூட தம் பிள்ளைகள் படிப்பு விஷயத்தில் அன்னையை பின்பற்றினர்..


இதெல்லாம் எதுக்கு சொல்கிறேன் என்றால் , தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் எது நல்லது என்பதில் மிக தெளிவாக இருந்தார் ..

சமூகம் என்ன சொல்லும் , கலாச்சாரம் என்னாகும் , குடும்ப பெயர் கெடுமா என நினைத்து பயப்படவில்லை...

முதன்முதலாய் 15 வருடமுன்பு என்னை வெளிநாட்டுக்கு மணமுடித்து அனுப்பும்போதும் பலத்த எதிர்ப்பு ..

வெளிநாட்டு பையன் னா எப்படி இருப்பானோ , என்னென்ன பழக்கமோ னு குழப்பு குழப்புன்னு குழப்புவார்கள்...

துக்க வீடு மாதிரி வந்து விசாரித்து " அய்யோ பாவம் நீ ..எப்படி சமாளிக்க போற " என்று பார்த்து சென்றவருண்டு..

ஆனால் அப்ப எதிர்த்தவர்கள் குடும்பத்தில் இப்ப அனேகர் அமெரிக்காவிலும் பல நாடுகளிலும்..:).

முதன்முதலில் நான் வண்டி ஓட்டியதும் , ஜீன்ஸ் போட்டதும் , நடனம் ஆடியதும் , வந்த எதிர்ப்பு எல்லாத்தையும் அன்னைதான் சமாளித்தார்..

தன் 4 பெண் பிள்ளைகளை பற்றி சுமையாக நினைக்காமல் பெருமையாக நினைத்தார்..

அன்னையோட வெற்றிக்கு முதல் காரணமாய் நான் நினைப்பது அவரின் தாழ்ச்சியும் மரியாதையும்..

சின்னவர்களை கூட ஐயா, அம்மா என சொல்லி வாங்க போங்க என்று தான்அழைப்பார்.. சின்னவர்களிடம் கூட நல்ல விஷயங்களை கற்றுக்கொள்ளும் ஆவல்..

என் பிரச்வத்துக்கு இங்கு வந்தபோது எனக்கே தெரியாமல் இருந்த அக்கம் பக்க இலங்கை தமிழ்ர்களிடம் மிக நட்பாகி

தினமும் அந்த பொடியன்கள் அம்மாவை தேடி வருவதும், தேநீர் அருந்த அழைப்பதும்.. அம்மாவிடம் கதைக்க வருவதும்..அப்படித்தான் இலங்கைத்தமிழர்களே எனக்கு

பழக்கமானார்கள்...( நான் அப்பல்லாம் ரொம்ப பயந்த சுவாபம்.. ரிசர்வ்டு.. )

தாய் பாஷை தெரியாவிட்டாலும் கூட வேலையாளிடம் சைகையாலேயே சமாளிப்பார்.. கற்றுக்கொள்வார்.. இருவரும் சிரிக்க வைப்பார்கள்...

அவரிடமிருந்தே கற்க முயன்றேன் இந்த " கலாச்சாரம் எனும் அன்பை.."..

ஆனா என் பிள்ளை வளரும்விதம்?.. எனக்கே பல விஷயம் சொல்லி கொடுக்கிறார்கள்..

மார்க்கெட் சென்றால் , அங்குள்ள ஊர்வன , பாத்து நான் முகம் சுழித்தால் திட்டுவான் . " அம்மா அப்படி செய்யாதீங்க.. அவங்க ம்அனசு கஷ்டப்படும்.."

' சாரி மா. நான் வேணும்னு செய்யலை.. என்னால் பார்க்க சகிக்க முடியல.. அருவருப்பா இருக்கு.. மன்னிச்சுக்கோ.."

" இதுக்கே இப்படின்னா இதை நான் சாப்பிட விரும்புகிறேன் எப்ப சமைக்க போறீங்கன்னு "அடுத்த குண்டை தூக்கி போடுறார்..

" அய்யோடா சாமி.. வெளில வாங்கி சாப்பிட்டுக்கோ. வீட்டுக்குள்ள கொண்டு வராத.."

"பாட்டி ரொம்ப நல்லவங்க கோழி சாப்பிடாட்டியும் உங்களுக்கெல்லாம் சமச்சி தந்தாங்கல்ல..."

" க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.."

இன்றும் கூட நாங்க தடுப்பதை பேரப்பிள்ளைகளுக்கு சாதகமா பேசுபவர்..


விட்டுப்பிடி என்பதே அவர் தத்துவம்..




தொடருவேன்..


படம் : நன்றி கூகுள்

Wednesday, November 17, 2010

கலாச்சார மாற்றம் - ஏற்பதும் மறுப்பதும்.


































கற்காலித்திலிருந்து மனிதன் தன் வாழ்க்கையை, முறைகளை கலாச்சாரம் , பண்பாடு என்ற பெயரில் மாற்றிக்கொண்டே வந்துள்ளான்.

புதிதாக ஒரு கலாச்சாரம் பரவும் போது ஏற்கனவே பழகிய கலாச்சாரத்திலிருப்பவனுக்கு அதை குறித்தான பயமே அவன் வெறுப்புக்கு முதல் காரணியாகிறது.

பயம் எதனால் ?.. முழுமையான புரிதல் இல்லாமை..

ஏன் புரிதல் இல்லாமை..?.. தீ என்றால் சுடும் என்று மட்டுமே நினைத்திருந்தால் தீயினால் அடையக்கூடிய நன்மையை யாரும் அடைந்திருக்க முடியாது..

கலாச்சாரம் கத்தி , தீ போன்றதுதான்.. ஆபத்துகள் நிறைந்தவைதான்..

நாம் விரும்பி இவ்வுலகத்துக்கு வரவில்லை.. விரும்பிய நாட்டில் பிறக்கவுமில்லை..

மனிதனின் மனமும் குணமும் அவன் வாழும் சூழலை ஒத்து தீர்மானிக்கப்படுகிறது..

இப்படியே ஒவ்வொரு இனத்துக்கும், நாட்டுக்குமான பண்பாடு கலாச்சாரம் அவர்கள் வசதிக்கேற்ப , சக மனிதனுக்கு தொந்தரவு செய்யாமல் வாழ ஏற்படுத்தப்பட்டது..

ஆக கலாச்சாரம் என்பது ஒரு ஒழுங்குமுறை..

நாம் பிறந்த நாட்டில் ஒருவிதமான கலாச்சாரத்தில் வளர்க்கப்படுகிறோம். பின் சூழலால் வேறொரு இடத்துக்கு புலம்பெயரும்போது அங்குள்ள கலாச்சாராம்

அதிக சுதந்திரத்தை தரக்கூடியதாகவும் எளிதாகவும் படுகிறது.. ஆக அந்த சூழலுக்கு நம்மை மாற்றிக்கொள்கிறோம்..

தவறில்லை.. நாம் நம் சுதந்திரத்தை தேர்ந்தெடுப்பதும் , நமக்கு மட்டுமே ஒத்துபோகக்கூடியதை தேர்ந்தெடுப்பதில் தவறில்லை..

ஏனெனில் பாதகமோ , சாதகமோ அதை நாம் தாங்க்கிகொள்ள நம்மை தயார்படுத்திக்கொள்வோம், அல்லது தயார்படுத்திக்கொள்ள வைக்கப்படுவோம்..

ஆனால் அதற்காக நாம் புழங்கும் ஒரு கலாச்சாரமே சிறந்தது என யாராலும் உறுதியாக கூற முடியாது..

குளிர் பிரதேசத்திலுள்ளவன் கோர்ட் போட்டால் அதையே வெயில் பிரதேசத்திலுள்ளவனும் பின்பற்றுவது எத்தனை முட்டாள்தனமோ அத்தனை முட்டாள்தனம் வேறொரு கலாச்சாரத்தை கண்மூடித்தனமாக அப்படியே பின்பற்றுவது..


நம் நாட்டு திருமண முறைகளிலும் சில தவறுகள் இருக்கத்தான் செய்கிறது.. மறுப்பதற்கில்லை..வரதட்சணை , சாதி , மதம் , இனம் , நிறம் என எத்தனை எத்தனை அழுக்குகளை தாண்டி ஒரு திருமணம் நடத்தவேண்டியுள்ளது..

அறிமுகமற்ற இருவரை அறையினுள் தள்ளி , " இன்றிலிருந்து நீங்கள் தம்பதிகள்... குழந்தை பெற்று அமோகமாக வாழுங்கள் . நாங்களும் பக்க பலமாய் இருப்போம்" என அனுப்பி வைப்பது காலங்காலமாய் தொடர்ந்து வருவது..

அவர்களும் வாழ தொடங்குகின்றார்கள் சுற்றத்தின் நம்பிக்கையில்..

அந்த தம்பதிகள் வாழவில்லையா வெற்றிகரமாக..?

அவர்களுக்குள்ளும் பிரச்னைகள் இருந்திருக்கும்.. ஆனாலும் அன்பு கொண்டு அனுசரித்தே போனார்கள்..

இடையில் பெண்கள் சுயமாக சம்பாதிக்க ஆரம்பித்ததும் தம் சுதந்திரத்தை நிலை நாட்ட தாமே துணையை தேடிக்கொள்ள ஆரம்பித்தனர்.

அதற்கும் சமூகம் வளைந்து கொடுத்தது சில எதிர்ப்புகள் வந்தாலும்..

பின்பு வேலைக்கு செல்லும் பெண்ணுக்கு பிரச்னைகள் வர ஆரம்பித்தது .. அதனால் ஆணுக்கும்தான்..

அதுவரை வீட்டிலிருந்து தன் அப்பாவை கவனித்துக்கொண்ட அன்னையையே பார்த்து வளர்ந்தவனுக்கு இதை ஏற்க கடினமாயிருந்தது..

அனுசரிப்பில் , புரிதலில் பிரச்னைகள்.. பொறுமையோடு , பிரச்னையை விவாதித்தவர்கள்: சுமூகமாக இருவரின் குறைகளையும் ஏற்றனர்..

முடியாதவர்கள் விவாகரத்தாகி பிரிந்தனர்..

இதில் கூட நகைச்சுவை என்னவென்றால் , பூதாகரமான பிரச்னை உடையவர்கள் கூட ஒன்று சேர்ந்து வாழ்ந்தனர்.. சின்ன விஷயத்தை கூட அனுசரிக்க முடியாமல் ஈகோவால் நான் சொல்வதுதான் சரி என்பவர்கள் பிரிந்தனர்..

ஆக எப்படி இருந்தாலும் சேர்ந்து தான் வாழணும் என்ற கட்டாயத்தில் இருந்து பிரிந்தும் வாழலாம் என்ற முறையை கலாச்சாராம் அனுமதித்தது.. அல்லது ஏற்றுக்கொண்டோம்.. மெல்ல மெல்ல..

பெண் தனியே முடிவெடுக்க, வாழ பழகிக்கொண்டாள்.. ஆணும் அப்படியே..

திருக்குறள் அருமையா சொல்லிதருது..


உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.
கலைஞர் உரை:
தம்முடைய வலிமையின் அளவை அறியாமல் உணர்ச்சி வயப்பட்டு ஒரு செயலைத் தொடங்கி இடையில் கெட்டுப் போனவர்கள் பலர் உண்டு..


இப்படித்தான் ஈகோவினால் அழிந்தவர்கள் உண்டு... வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை அறியாமல் , நான் நினைப்பதே, சொல்வதே சரி என்ற மனப்பான்மையில் அடுத்தவரை மதிக்காது அல்லது அடுத்தவரை இழிவுபடுத்தி மேலே வர நினைப்பது..

இவர்களுக்கு இல்லற வாழ்க்கை மட்டுமல்ல வாழ்க்கையே கசப்பாகத்தான் இருக்கும்..


"அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்."


திரு மு.வரதராசனார் உரை

பொருளின் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து கெட்டு விடும்.


தன்னுடைய சக்தி என்ன , என தெரியாமலே , புரியாமலே வாழ்பவர் ஏமாற்றமடைவர்..


தன் சக்திக்கேற்ற துணையை தேடுவதில்லை.. அனுசரிப்பதில்லை... தன் சக்திக்கு மீறிய துணை கிடைத்தால் எவ்வகையிலாவது அடிமைப்படுத்துவது.. இர்து இருபாலார்க்கும் பொருந்தும்..


அடுத்து இல்லறத்தில் மிக முக்கியமான நபர் குழந்தைகள் தான்..

நமக்கு பிடித்த துணை அமைகிறார்களோ இல்லையோ, குழந்தைகள், அவர்கள் நல்வாழ்வுக்காக சில தியாகங்கள் செய்துதான் ஆகவேண்டும்..

இப்படியான தியாகத்தினால்தான் நம் கலாச்சாரம் மேம்பட்டு சிறப்பாக உள்ளது..

குழந்தைகளின் முன்னேற்றம் குறித்தே தன் சுக துக்கங்களை மறைத்தவர்கள் பலருண்டு நம் நாட்டில்..முட்டாள்களா அவர்கள்.. இல்லை புத்திசாலிகள்..

மேல்நாட்டு கலாச்சாரம் என்றாலே மோசம் என நினைக்கிறோமே , அப்படியா?..

இல்லவே இல்லை.. நம் கலாச்சாரத்தில் உள்ள அழுக்குகள் ( வரதட்சணை , சாதி , மதம் , இனம் , நிறம் இத்யாதி ) அங்கில்லை.. அல்லது மிக குறைவாக..

அங்கேயும் திருமணங்கள் உண்டு..சட்டதிட்டங்கள் உண்டு.. சொல்லப்போனால் குழந்தைகளுக்காக மெனக்கிடுபவர்கள் அதிகம் அங்கே..

பொறுப்பற்ற குடிகார தகப்பன்களை இங்கே நாம் அதிகம் காணலாம்.. ஆனால் விவாகரத்தானாலும் , குழந்தைகளை அன்போடு கவனித்து அவர்கள் வாழ்க்கைக்கு உதவும் பெற்றோர் அனேகர் அங்கே..

பெண்ணடிமைத்தனத்திலிருந்து மெதுவாக எழுந்து வந்து கொண்டிருக்கும் சமூகம் நம்முடையது..

தன் தாய் ஒரு அடிமையான வாழ்வு வாழ்ந்ததை ஏமாற்றமாக நினைக்கும் , சொந்தக்காலில் நிற்கும் பெண்ணொருத்திக்கு இயல்பிலேயே திருமணம் /ஆண் என்ற வெறுப்பு இருப்பதில் ஆச்சர்யமொன்றுமில்லைதான்..அதே போல ஆணுக்கும் பலவிதமான அனுபவங்கள் இருக்கக்கூடும்..தன் சகோதரனை பணத்தால் அடிமைப்படுத்தி வைத்திருக்கும் பெண் என பலவாராக,...

அவர்களின் எதிர்மறை எண்ணத்தை மாற்றவேண்டியது இச்சமூகமும் அவர்களுக்கு கிடைக்கும் துணையும்..

ஏற்கனவே அடிபட்ட பாம்பாக இருக்கும் இவர்கள் சிறிது இடைவெளி கிடைத்தாலும் சுதந்திரமாக இருக்க எண்ணுவதில் தவறேதுமில்லை..

ஆனால் அதற்காக ஒட்டுமொத்த கலாச்சாரமுமே தோல்வி என முடிவு செய்யக்கூடாது.. அதுதான் தவறு..

கமலஹாசனையும் கெளதமியையும் பற்றி இழிவாக பேசுகின்றனர் சிலர்..

நாம் அவர்கள் நிலைமையில் இருந்து யோசித்தால் மட்டுமே அவர்களின் நியாயம் நமக்கு புலப்படும்..

இருவருமே முறைப்படி திருமணம் செய்தவர்கள்தான்.. அதில் அடிபட்டவர்கள்தான்..மேலும் பிரபலங்களின் வாழ்வு எல்லாராலும் ஈவு இறக்கமின்றி அலசப்படுபவை..நம் வீட்டில் நடந்தால் அதை பற்றி மூச்சு விடமாட்டோம்...

தற்போதைய முடிவும் அவர்களுக்கு சரியானதே.. அது அவர்கள் வாழ்க்கை..

எத்தனையோ விஷயத்துக்காக அவர்கள் இணைந்து வாழலாம் . காமம் மட்டுமே பிரதானம் என நாம் முடிவு செய்ய கூடாது..

அதேதான் லிவிங்-டுகேதரிலும் .. கூட சேர்ந்து வாழ்க்கை . காமம் மட்டும் என்றால் நிலைக்காது எதுவுமே..



இப்படி ஒருவர் இருவர் செய்வதால் ஒட்டு மொத்த கலாச்சாரமே சீரழிந்துவிட்டதாய் பரப்பரப்புறை செய்வதுதான் ஆரோக்கியமற்றது..

எனக்கு நம் இந்திய கலாச்சாரம்தான் பிடிக்கும்.. முன்பின் தெரியாத ஒருவரை மணப்பதும் அவர்களை மெல்ல மெல்ல அனுசரிப்பதும் , புரிந்துகொள்வதுமே ஒரு சுவாரஸ்யம்..ஆனால் ஒருவேளை என் பிள்ளைகள் லிவிங்-டுகெதர் என்ற முறையில் வாழ்வார்களேயானால் அதையும் ஏற்கும் மனப்பக்குவமும் உண்டு..ஏனெனில் அவர்கள் பிறந்து பார்த்து வாழ்வது முற்றிலும் வேறொரு கலாச்சாரம்.. அதையும் நாம் புரியணும்..

வீட்டுக்குள் மட்டும் இந்திய கலாச்சாரம்... படி தாண்டினால் வேறு பல நாட்டு கலாச்சாரம்..

இப்படி செய்தால் இது அனுகூலம், இது நஷ்டம் என சொல்லுவதும் , நம் கலாச்சாரத்தில் வெற்றிகரமாய் வாழ்பவர்களை காண்பிப்பதும் மட்டுமே என் பொறுப்பு..

தீ என்றால் சுடும் என சொல்வோம்.. மீறி சுட்டு காயப்பட்டு வந்தாலும் ஏற்போம்..

வெளிநாட்டிலும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இல்லற வாழ்வில் இணைவதோ, குழந்தை பெற்றுக்கொள்வதோ கிடையாது..

காமம் ஒரு பெரிய விஷயமே இல்லை..20 வயதுக்குள் காமத்தை பற்றிய அனைத்து புரிதலும் இருக்கிறது அவர்களுக்கு.. நம் நாட்டில்தான் காமத்துக்காக கல்யாணம் செய்பவர் உண்டு.. அதனாலேயே காமம் முடிந்ததும் திருமணமும் புளித்து போகிறது சிலருக்கு..

ஆக வெளிநாட்டில் திருமணம் வரை வருகிறார் என்றால் எல்லா பொறுப்புகளையும் சுமக்க தயாராகிறார்கள் என்றே அர்த்தம்..

இதிலும் சில விதிவிலக்குகள் இல்லாமல் இல்லை..

எந்த ஒரு திருமணத்திலும் குழந்தைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதாயிருக்கணும்..அது மட்டுமே வெற்றி பெறும்..

அங்கேயே அனுசரிப்புகள் , தியாகங்கள் , பொறுமைகள் தொடங்கும்..

அப்படி முடியாதவர்கள் , தயவுசெய்து குழந்தைகள் பெற்றுக்கொள்ளவேண்டாம்தான்..

நாட்டின் சட்டமே லிவிங்-டுகெதரை அனுமதிக்கிறது என்றால் அதிலும் உண்மையில்லாமலில்லை..

ஏதோ 10 வயது குழந்தைக்கான சட்டம் அல்ல. இது.

வயது வந்த இரு பெரியவர்களுக்கே இந்த அனுமதி.. அதன் பொறுப்புகளை அவர்கள் உணர்ந்தே அதில் ஈடுபடணும்..

ஆக அதிகமா பயந்து வெறுத்து ஒதுக்குவதை விட அதிலுள்ள லாப நஷ்டங்களை அவர்களுக்கு எடுத்து சொல்லலாம்..

பொறுப்புகளை தட்டிக்கழித்து ஓடாமல் பொறுப்புகளை சுமக்க பழக்கலாம்..

லிவிங்-டுகதரில் சம உரிமை இருப்பதாக நம்பலாம்..

காலம் மாறும் போது கலாச்சாரமும் மாறும் என்ற உண்மையை ஏற்கத்தான் வேணும் நமக்கு பிடிக்காவிட்டாலும் கூட..

ஏனெனில் உலகமயமாகிக்கொண்டு வரும் இந்நாளில் சிலவற்றை நாம் இழப்பதும் ஏற்பதும் தவிர்க்க முடியாதது...

அதிலொன்றுதான் முதியோர் இல்லங்களும்..

இருப்பது ஒன்றோ இரண்டோ பிள்ளைகள்...வேகமாக ஓடும் வாழ்க்கையில் உறவுகளை அறிமுகப்படுத்தக்கூட மற( று)க்கிறோம்..

பிள்ளைகளை வெளிநாடு அனுப்பணும் என்ற ஆசையோடு நாமும் மூட்டை முடிச்சுகளோடு முதியோர் இல்லம் செல்ல தயாராகிக்கொள்ளணும்தான்..:)


ஆனால் காலங்காலமாய் தொடர்ந்து வரும் நம் கலாச்சாரத்தை இழிவாக மட்டுமே பேசுபவர்களுக்கு , பார்ப்பவர்களுக்கு கீழே உள்ள குறள் பதில்..



அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.


கலைஞர் உரை:
மற்றவர்களை மதிக்காமலும், தன் வலிமையை உணர்ந்து கொள்ளாமலும், தன்னைத் தானே பெரிதாக விளம்பரப் படுத்திக் கொண்டிருப்பவர்கள் விரைவில் கெட்டுத் தொலைவார்கள்.


படம் : நன்றி கூகுள்..