Monday, December 3, 2007

யுத்தம் எமது வருத்தம்!
=====================
நித்தம் ஒரு போராட்டம்,

புத்தம் புது பிரச்சனைகள்,
சத்தமில்லா அழுகைகள்,
ரத்தம் உறையும் காட்சிகள்,
இத்தனையும் இனிய இலங்கையிலே..

பெத்தவர் ஒருபக்கம் வருந்திடவே,
மத்தவர் உறவினரானாராம்,
எத்தனை வசதிகள் வெளிநாட்டிலிருந்தும்,
அத்தனை தாய் மண்ணுக்கீடாகுமா?

பெற்றுக்கொண்டது போதாதென்போர்,
செத்துப்பிழைத்த அவரிடமிருந்து,
ஒத்துக்கொள்வோம் அவர் வாழ்க்கை கடினத்தை..
கத்துக்கொள்வோம் வாழ்க்கை பயணத்தை!..

---------சமர்ப்பணம் என் இனிய இலங்கைத்தமிழ் தோழர்,தோழியருக்கு!.

No comments: