Friday, February 29, 2008

முடிவு - 2 . பாகம் - 17- கல்யாணத் தேன் நிலா. =============================================
மதுவுக்கு அலுவலகத்துக்கு செல்வதே மிகவும் சோதனையாக உள்ளது .. வீட்டுக்கு வந்தால் ரகு.. அனேகமாக இந்த வாரத்துக்குள் பிரிவு உறுதி....

எந்த வித முன்னேற்றமுமில்லை ... நிம்மதியில்லாமல் ஆனால் வெளியில் சிரித்த முகத்துடனே...அதிக மனச்சுமை ஆளை வாட்டுது...
உடம்புக்கு முடியாமல் விடுப்பு எடுக்கிறாள்.., சரியாகிற மாதிரி தெரியவில்லை ஒரு வாரம்... ஆனால் வேந்தன் நம்பவில்லை.

அவள் வேண்டுமென்றேதான் வரவில்லை என்றே நினைக்கிறார்...
அவன் போன் நம்பர் வந்தாலே இவள் பதிலுரைக்காமல் யாரிடமாவது கொடுத்து பதில் சொல்கிறாள்...

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வேந்தனுக்கு மிகவும் வேதனையளிக்கிறது.. நம்மால் தான் மதுவுக்கு இந்த நிலைமை..வருத்ததுடன் நேராக ரகுவிடம் செல்கிறான்..ரகுவுக்கு அதிர்ச்சி..

" ரகு, என்னால மதுவோட நிலைமையை பார்க்க சகிக்க முடியலை...யார் சரி , யார் தவறுன்னு நான் பேச வரல....என்ன செய்தால் உங்களுக்கு விருப்பமோ அதை நான் செய்கிறேன்.. அவர்கள் 5 மனிக்குமேல் உங்கள் மனைவியாக உங்களுடன் இருப்பார்கள்... வீட்டிலேயே அலுவலகத்தை நான் அமைக்கிறேன்.. வெளிநாடு செல்லும் பொறுப்புகளை, மற்றும் அனைத்து அலைச்சல்களும் இனி நான் பார்த்துக்கொள்வேன்... கிட்டத்தட்ட வேலையை விட்டது போலவே... மதுவின், அறிவும், அன்பும் தான் எங்கள் தொழிலின் மிகப்பெரிய சொத்து... அதற்கு முதலில் மது சந்தோஷமாக இருக்கணும்.. அதுக்கு என்ன வேண்டுமோ அதை செய்ய நான் தயார்..."

ரகுவின் கைகளை பிடித்துக்கொண்டு..

" அய்யோ என்ன இது வேந்தன்.. இப்படியெல்லாம் ..." ரகு..

" நீங்கள் விருப்பப்பட்டால் மதுவுடன் கூட எங்கள் அலுவலகத்திலேயே வேலை செய்யலாம்..வெளிநாட்டு பயணம் இருவருமே செல்லலாம்... வழி இல்லாமலில்லை.. ரகு.. இதையெல்லாம் நான் ஏன் செய்ரேன்னா, நான் மதுவை விரும்பினேன், ரகு, ஆனால் அவள் மனது பூரா நீங்கதான் நீக்கமற நிறைந்துருக்கீங்க. அந்த அன்பு எனக்கு ஒருபோதும் கிடைக்காது கோடி கொடுத்தாலும்..என் ஆயுசுக்கும்.... ஆனா உங்ககூட சேர்த்துவைக்க என்னால் முடிந்ததை நான் பண்ணுவேன்..அதுவே என் சந்தோஷம்.."

ரகு யோசிக்கிறான்..

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

விவாகரத்து ஆக ஒரு வாரமுள்ளது.... ரகுவோ அன்னையிடம் தான் ஒரு பெண் பார்த்திருப்பதாக தெரிவிக்கிறான்... சாயங்காலம் பெண் வீட்டார் வருவதாகவும் சொல்கிறான்.. காதில் விழாததுபோல் காட்டிக்கொண்டாள் மது...அலுவலகமும் கிளம்பிவிட்டாள்..

சாயங்காலம் வீட்டுக்குள் வந்தால் , கீதாம்மா, அப்பா, நிஷா, டாக்டர், சுந்தர், எல்லோரும்... ஒஹோ, எல்லோரையும் கூப்பிட்டுள்ளாரோ, நல்லபிள்ளையாட்டம்... மரியாதைக்காக சிரித்து வரவேற்றுவிட்டு , மாடிக்கு செல்கிராள்..

" மது, நீயும் சீக்கிரம் வாம்மா.. நீ வந்துதான் சரி சொல்லணும்.."விசாலம் அம்மா.. நான் ஒரு பேச்சுக்கு ரகுவுக்கு பரிஞ்சா, ஏன் இப்படி, பெரியவங்களும்...

" இதோ...வரேன் மா.." கீழே வந்தால், ஆளாளுக்கு போட்டோவை வியந்து பேசுகிறார்கள்..

" பொண்ணு அழகுதான்.."

" கொஞ்சம் மூக்கு நீளம்.."

" சிரிச்ச முகம்.."

" ரெட்டை நாடியோ.??.. யோகக்காரி..." அய்யோ நிப்பாட்டமாட்டீர்களா என்றிருந்தது...மதுவுக்கு...

" மது நீயும் ஒருமுறை பார்த்துவிட்டு சம்மதம் சொல்லு...." ரகு... என்ன திமிர்... இருந்தாலும் எல்லோர் முன்னாலும் என்ன சொல்ல, தயங்கி.,

" ...ம்.. உ...ங்க....ளுக்கு ச....ரி......ன்னா, எ...ன.....க்கும்.. ர..கு.." " இல்ல ஒருமுறை பார்த்துவிடு..." நீட்டுகிறான் போட்டோவை...

வாங்கி பார்த்தவள்..,,ஒன்றுமே பேசமுடியாமல் , வெட்கமும், படபடப்பும் சேர்ந்துகொள்ள, கொஞ்சும் கோவத்துடன் , எல்லாரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு , வழிகிற புன்னகையுடன், நேராக சென்று, ரகுவின் சட்டயைப்பிடித்து முறைத்து, திட்டிவிட்டு செல்லமாக கோபித்துக்கொண்டு மாடி ஏறி சென்றுவிட்டாள்..... எல்லோரும் சிரிக்க , ரகுவும் மாடி ஏறுகின்றான்..

" நான் வேணுமின்னா துணைக்கு வரவா, மதுவை சமாதானப்படுத்த...?." டாக்டர்..சொல்லிக்கொண்டே மாடிப்படி ஏற முயல , எல்லாரும் அவரைப்பிடித்து இழுக்க,

----------------------------------------------------------------------------------------------------------

மது சமாதானமாகி புதுப்பெண் வெட்கத்தில் கீழே வர,

" இதுக்கெல்லாம் காரணம் யார்னு வெளியே பார் மது..." அங்கு அவள் அலுவலகம் அமைக்க பத்து எஞ்சினியர்களுடன் வேந்தன் மும்மரமாக... உள்ளே வருகிறார்..

' ரகு, எல்லாம் ரெடி, இன்னும் மூன்று மணி நேரத்தில் ஸ்விட்சர்லாந்து விமானம் கிளம்பிடும்...சீக்கிரம் கிளம்புங்க உங்க இரண்டாவது தேனிலவுக்கு... நேரமிருந்தா அப்படியே எங்கள் அலுவலக கண்காட்சியும் பார்த்து வாங்க...மது வந்ததும் எனக்கு பெண் பார்க்கும் வேலை இருக்கு, சீக்கிரம் .." என்று சிரித்துக்கொண்டே , டிக்கெட், பாஸ்போர்ட் அனைத்தையும் தருகிறார்.. இன்ப அதிர்ச்சியில் மது..

------------------------------------------------------------------------------------------------------------------------------

விமானத்துள், ரகுவுக்கு , மதுவுக்கு இருக்கை எண் , 18 A, 18 C .. ஒரே ஒரு ஆளுக்காக அனைவரும் காத்திருக்க, அப்ப்ப்ப்ப்பப்ப்பப்ப்பாபாபா..அலுத்துக்கொண்டே

" லொள்ளு தாங்க முடில ரசிகைங்ககிட்ட.." முனீஸ்.. விமானப்பணிப்பெண்கள், அவனிடம் ஆட்டோகிராப் வாங்குகின்றார்கள்..முனீஸ் இருக்கை எண்- 18 B முனீஸ் சீட்டை தேடி கண்டுபிடித்து ரகுவுக்கும் , மதுவுக்கும் நடுவில் வந்து அமர்கின்றான்.

" நீ.......யா.....????"''


" ரகு " " முனீஸ் " " மது "

இரக்கப்பட்டு, முனீஸ் இடம் மாறுகிறான்.......ரகுவின் பக்கத்தில்..

" முனீஸ் " " ரகு மது "

****************************************மு ற் று ம்....*****************************
பாகம் - 17- கல்யாணத் தேன் நிலா
=============================
மதுவுக்கு அலுவலகத்துக்கு செல்வதே மிகவும் சோதனையாக உள்ளது .. வீட்டுக்கு வந்தால் ரகு.. அனேகமாக இந்த வாரத்துக்குள் பிரிவு உறுதி....


எந்த வித முன்னேற்றமுமில்லை ... நிம்மதியில்லாமல் ஆனால் வெளியில் சிரித்த முகத்துடனே...அதிக மனச்சுமை ஆளை வாட்டுது...

உடம்புக்கு முடியாமல் விடுப்பு எடுக்கிறாள்.., சரியாகிற மாதிரி தெரியவில்லை ஒரு வாரம்... ஆனால் வேந்தன் நம்பவில்லை. அவள் வேண்டுமென்றேதான் வரவில்லை என்றே நினைக்கிறார்...

அவன் போன் நம்பர் வந்தாலே இவள் பதிலுரைக்காமல் யாரிடமாவது கொடுத்து பதில் சொல்கிறாள்... திடீரென்று பெரியவர் வீட்டிலிருந்து அழைப்பதாக ...மதுவும் செல்கிறாள்..

" எப்படிம்மா இருக்கே... எல்லா விஷயமும் எனக்குத் தெரிந்தது.. சந்தோஷப்படவா, வருந்தவான்னு தெரியலை... உன் விவாகரத்து என்னால் எவ்வளவோ முயன்றும் தடுக்க முடியவில்லை...எங்களால் உனக்கு எவ்வளவு கஷ்டம்.."

" அய்யா அப்படியெல்லாம் இல்லை.. எல்லாம் கடவுள் திட்டம் நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை.. நீங்கள் வருந்தாதீர்கள்.."

" எனக்கு இப்போது அடுத்த கவலை, வேந்தன்... உன்னிடம் பழகியதிலிருந்து குடியை விட்டவன், இப்போது மீண்டும் அதிகமாக..அருந்துகிறான். உன்னை சந்தித்தபின் தான் எத்தனை மாற்றம் அவனிடம்.எங்கள் இல்லமே ஒரு பூங்காவனமாக மாறியது அவன் கைவண்ணத்தில்.. அவன் திறமை வெளிவர ஆரம்பித்தது உன்னால்.இப்போது எல்லாம் மறுபடியும்..." வருந்துகிறார்.

' இப்ப என்னன்னா, அவன் நாளை மறுபடியும் அமெரிக்கா கிளம்புகின்றானாம்...."

" அய்யோ ஏன்..?.... என்ன இப்படி.. " பதறுகிறாள்...

" எல்லாம் உன் கையில்தான் உள்ளது மா. எனக்கு உன்னிடம் யாசிப்பது தவிர வேறு வழியில்லை... நீ எங்கள் மகளாக இந்த வீட்டுக்கு வரவேண்டும் . இப்போதைக்கு அவ்வளவே...."

" அய்யா என்ன இது.. பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிகிட்டு..." என்று பேசிக்கொண்டிருக்கும் போதே

" அதெல்லாம் தேவையில்லை அப்பா, என்னால் அவளுக்கு ஒரு தொந்தரவும் வேண்டாம்,, . அவளை கம்பெனிக்கு வரச்சொல்லுங்கள் மறுபடியும்... என்னை பார்க்கவோ , பேசவோ பிடிக்கவில்லையென்றால் நானே செல்கிறேன்.. அங்கிருந்தே அலுவல்களை கவனிக்கிறேன்..."

" வேந்தன் என்ன இது சிறுபிள்ளைத்தனமான பிடிவாதம்...நான் முடியாமல் இருந்ததால் பேசவில்லை.. சரி நாளை வருகிறேன் அலுவலுக்கு, அங்கு பேசிக்கொள்ளலாம்.. அய்யாவை குழப்ப வேண்டாம்..."

" நீங்கள் கவலைப்படாதீர்கள் அய்யா, மீண்டும் நாளை பார்க்கலாம்..." என்று வெளியே சென்றவளிடம் ஒரு புத்தகத்தை பரிசளிக்கிறார் வேந்தன்....

" நன்றி.. எல்லாத்துக்கும்.. அலுவல் சம்மந்தமாக என் உதவி எப்போதுமிருக்கும் உங்களுக்கு...வாழ்த்துகள்.." ஒரு பெருமூச்சுடன் ஏதும் பேச முடியாமல் விடைபெறுகிறாள்...

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

விவாகரத்து ஆகி ஒரு வாரமாகிவிட்டது... ரகுவோ அன்னையிடம் தான் ஒரு பெண் பார்த்திருப்பதாக தெரிவிக்கிறான்...

யாருக்கும் உடன்பாடில்லை.. மதுவுக்கோ அதை கேட்கக்கூடாது என்றாலும் மீண்டும் மீண்டும், அதுதான் நினைவுக்கு வருகிறது...

வெளிவேஷமிட்டாலும் உள்ளே வலிக்கிறதே... குழப்பத்திலிருந்தவளுக்கு தொலைபேசி அழைப்பு...பெரியவரிடமிருந்து...

" இதோ உடனே வருகிறேன் அய்யா" அங்கு சென்றால் வேந்தன் கிளம்பி ஏர்போர்ட்டுக்கு சென்றுவிட்டார்... போன் யாரும் பேச வேண்டாம் என்றும் தானே விமானம் கிளம்புமுன் பேசுவதாகவும் சொல்லிவிட்டதால் தொலைபேசி தொடர்பும் இல்லை..

வேறு வழியில்லை, அய்யாவையும் அழைத்துக்கொண்டு விரைவாக, ஏர்போர்ட் செல்கிறார்கள்..தடுத்து நிறுத்த , சிறப்பு அறிவிப்பு மூலம் வேந்தனை பெயர் சொல்லி அழைத்து வருவிக்கின்றார்கள். அப்போதும் தூரத்திலிருந்தே தொலைபேசி மூலமாகவே பேசுகிறார்...

" என்னை தடுக்காதீங்க.. மது சம்மதம் சொன்னால் மட்டுமே திரும்புவேன்... நேரமாகிறது.."

" மொதல்ல வெளியே வாங்க வேந்தன் , பின்னர் பேசிக்கொள்ளலாம்...'"

" இல்ல மது.. எனக்கு நேரமில்லை இன்னும் 10 நிமிடத்துக்குள் நான் உள்ளே சென்றாகணும்.. "

" தயவுசெய்து திரும்பி வாருங்கள் , அய்யாவுக்காக.."

" மன்னிக்கணும், உன் சம்மதம் என்ற ஒருவார்த்தை தவிர நான் வரப்போவதில்லை.."

" அய்யோ.. ஏன் இப்படி ஒரு பிடிவாதம்.."

' சரி பை.. நேரமாச்சு..."

" கொஞ்சம் பொறுங்கள்.. "

' . ம். சீக்கிரம்..."

" சரி திரும்பி வாருங்கள்.."

" அப்படின்னா?.."

" அப்படின்னா.. சரின்னு அர்த்தம்.."

" சம்மதம் னு சொல்லு..."

"சரி. சரி. சம்மதம்.. போதுமா. மொதல்ல வெளியே வாங்க.." சிரித்துக்கொண்டே அருகில் வேந்தன் வந்ததும் மது,

" எனக்கு உங்களைப் புரிந்து கொள்ள கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் என்னுடன் இருந்து. பிறகு என் முடிவைச் சொல்கிறேன்' எனச் சொல்ல, அதற்கு வேந்தன் 'லேசா லேசா' இது ஒரு நல்ல முடிவுக்கு வரும் என்று சம்மதிக்கிறார்..

" நான் வெளியே வரமுடியாது.. நீதான் இப்ப உள்ள வரணும்.. நாம இரண்டு பேரும் இப்ப அடுத்த கண்காட்சிக்காக ஸ்விட்சர்லாந்து போகிறோம்...உன் பாஸ்போர்ட், விசா, டிக்கெட் எல்லாம் சரிபார்த்தாச்சு.. சீக்கிரம்... அங்கே பார்.."

அங்கு விசாலம் அம்மா, தன் குடும்பத்தார், நிஷா, சுந்தர், டாக்டர், சீதாம்மா, அனைவரும் மலர்ச்சியுடன் "உன் சந்தோஷம் தான் பெரிது மது" , " நீயில்லாமல் வாழ்வது லேசா என்பதுபோல் பார்த்து கையசைக்க,

" நேரமாச்சு, கிளம்பலாம், " என்று சொல்லிவிட்டு அனைவரிடமும் ,ஆசீர்வாதம் வாங்கிவிட்டு மதுவிடம் விசாலம் அம்மா,

" இதுவரை என் மருமகளான நீ , இன்று என் மகளாக சந்தோஷமாக அனுப்பி வைக்கிரேன் மா. சென்று வா மகளே " என்று அணைத்துக்கொள்கிறார்.

" மது, ஒண்ணும் கவலைப்பாடாதே.. வேந்தன் சரியில்லைன்னா, கவலையில்லை, இன்னும் நானும் ரெடியாதான் இருக்கேன் இன்னொரு கல்யாணத்துக்கு..." டாக்டர் சங்கர் ..

" அய்யோ அங்கிள். என்ன இது...நீங்களுமா " மது வெட்கப்பட , நேரமாச்சு மது என்று அவளை அழைத்துக்கொண்டு வேகமாக, சந்தோஷமாக ,குசும்பாக வேந்தன்...

------------------------------------------------------------------------------------------------- விமானத்துள், வேந்தனுக்கு , மதுவுக்கு இருக்கை எண் , 18 A, 18 C .. ஒரே ஒரு ஆளுக்காக அனைவரும் காத்திருக்க, அப்ப்ப்ப்ப்பப்ப்பப்ப்பாபாபா..அலுத்துக்கொண்டே

" லொள்ளு தாங்க முடில ரசிகைங்ககிட்ட.." முனீஸ்.. விமானப்பணிப்பெண்கள், அவனிடம் ஆட்டோகிராப் வாங்குகின்றார்கள்..

முனீஸ் இருக்கை எண்- 18 B முனீஸ் சீட்டை தேடி கண்டுபிடித்து வேந்தனுக்கும் , மதுவுக்கும் நடுவில் வந்து அமர்கின்றான்.

" நீ.......யா.....????"''

" வேந்தன் " " முனீஸ் " " மது "

*************************************மு ற் று ம்....*****************************
பாகம் - 16 - நீ காற்று நான் மழை என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்

காலையில் எழுந்ததும் கணினியில் மெயில் பார்த்தால் ரகுவிடமிருந்து... ஆசையுடன் திறந்தவளுக்கு ஒரு வரியில்,

" வேந்தனுடன் உன் மறுமணத்துக்கு ,எனக்கு சம்மதம்..."அடக்கமுடியா கோபம் ..போனில் அழைக்கிறாள் அவளே

"ரகு, உங்களுக்கு, என்னை பிடிக்கலைன்னு சொல்ல உரிமையுண்டு, என்கூட வாழமுடியாதுன்னு சொல்லவும் உரிமையுண்டு,என்னைத் திட்ட, அடிக்க,உதாசீனப்படுத்த எல்லாத்துக்கும் உரிமையுண்டு.. ஏன்னா இன்னும் உங்க மேல் பாசமிருக்கு எனக்கு. ஆனா எனக்கு மாப்பிள்ளை பார்க்க உங்களுக்கு உரிமையில்லை...என்னை மறுமணம் செய்ய சொல்ல நீங்க யார்....???...""அழுகைவந்துவிடும் என பயந்து போனை வைத்துவிடுகிறாள்.

முதன்முறையாக அசிங்கமான வெறுப்பும் வருகிறது ரகுமேல்..ரகுவோ, உனக்கு அப்படி என்னை பிடித்திருந்தால்தான் வேலையை எனக்காக விட்டிருப்பாயே என்று பிடிவாதமாக நினைக்கிறான்

.------------------------------------------------------------------------------------------------------------------------------------

பல நாட்களாக தன்னிடம் எதுவும் பேசாமல் தன்னை உதாசீனப்படுத்துவது வேந்தனுக்கு வருத்தமாயுள்ளது.. இன்று ரகுவுடன் மீட்டிங் வேறு.. ரகு வந்ததும் அவனிடம் சிறிது நேரம் பேசிவிட்டு, மதுவை ஒரு நிமிடம் தன்னுடைய அறைக்கு வருமாறு அழைக்கிறார்..

வேண்டாவெறுப்பாக அறைக்குள் சென்றவளுக்கு அதிர்ச்சி , ரகுவுடன் வேந்தன்..

" தயவுசெய்து, அமருங்கள்..." வேந்தன்..இருவரையும் மாறி மாறி முறைத்துவிட்டு, கதவை படாரென்று சாத்திவிட்டு கோபத்தை காண்பித்துவிட்டு பேசாமல் வெளியேறுகிறாள்..

ரகுவிடம் மன்னிப்பு கேட்டு அவன் சென்றதும், மதுவின் அறைக்கு கோபமாக வேந்தன் வருகிறார்..

அவள் தன் வேலையை தொடர்கிறாள்.

" ரகு ஏன் வந்தார் னு கூட தெரிஞ்சுக்காம , நீயா கற்பனை பண்ணிகிட்டு ,எங்களை அவமானப்படுத்தினா எப்படி?..""......" பதிலில்லை..வேலையை தொடர்கிறாள், அவரைக் கண்டுகொள்ளாமல்..

" ப்ரீத்தியை அமெரிக்காவுக்கு அனுப்பி சிறப்பு டென்னிஸ் பயிற்சி கொடுக்கும் விஷயமாக,நான்தான் வரச்சொன்னேன்.அதுக்கு உன் சம்மதம் அறியவே.."கணினியிலிருந்து பார்வையை வேந்தனிடம் செலுத்துகிறாள்.

வெட்கி, ஆச்சர்யத்துடன் , புருவம் உயர்த்தி .எழுகிறாள்..

" ஓ .. மன்னிக்கவும்..." சொன்ன மதுவுக்கு பதிலேதும் கூறாது வேந்தன் வெளியே செல்கிறார்..தன் மீதே வெறுப்பு வருகிறது..

எல்லாம் தப்பாக தெரிகிறதே...இருந்தாலும் என்னிடம் முன்னரே சொல்லியிருக்கலாமே..!

--------------------------------------------------------

வார இறுதி மீட்டிங் அறையில் கூட இருவருடன் வேந்தன் . மதுவின் விளக்க உரை முடிந்ததும் கேள்விகளால் துளைக்கிறார்..

அப்படியாவது தன்னிடம் அவள் பேசட்டும் என்றும், தன் கோபத்தை காட்டிவிட்டோம் என்றும், மனதுக்குள் சிரிப்பு..மற்ற இருவரையும் போகச்சொல்லிவிட்டு, மதுவை மட்டும் இருக்கச்சொல்கிறான், தனக்கு சில சந்தேகம் இருப்பதாக,

" ஏன் என்னிடம் பேசாமல் உதாசீனப்படுத்துகின்றாய்..நான் உன்னை கட்டாயப்படுத்தவில்லை..நீ சாதாரணமாக பேசலாமே..எனக்கு மிகவும்வருத்தமளிக்கிறது உன் செயல்...இப்படி தொடர்ந்தால் நான் சீக்கிரம் அமெரிக்கா செல்ல வேண்டிவரும்....' அமைதியாகவே எச்சரிக்கிறார்.

" நீயும் ரகுவும் பிரிவதென்பது முடிவானது... ஆனாலும் நான் உன்னை கட்டாயப்படுத்தவில்லை உடனே மறுமணத்துக்கு...என்னிடம் எப்போதும் போல் பேசு..."

------------------------------------------------------------------------------------------------------

மிகுந்த கலக்கத்துடன் மது.. அடுத்த வாரம் விவாகரத்து முடிவுக்கு வரும்..எந்த வித முன்னேற்றமுமில்லை.. பெண்ணின் பெற்றோர் கூட்டத்துக்காக பள்ளிக்குச் செல்கிறாள்... தூரத்தில் ரகுவும்...

இவளைப்பார்த்ததும், கன்னியாஸ்திரி வேகமாக வந்து கட்டி அணைத்துவிட்டு அழைத்துச் செல்கிறார்... பெண்ணையும் அழைத்துவரச்சொல்கிறார்... பெண் தூரத்தில் வரும்போதே ரகு ஆசையுடன் காத்திருக்க, பெண்ணோ, அப்பாவை பார்த்து சிரித்துவிட்டு அம்மாவை நோக்கியே வருகிறாள்..

மது பதருகிறாள்.. ' மொதல்ல அப்பாகிட்ட போம்மா .."

" அம்மா..ஒரு நிமிடம்..."

' நீ அப்பாகிட்ட பேசிவிட்டு என்னிடம் வாம்மா...அவர் வருத்தப்படுவார் இல்லயா?.." கன்னியாஸ்திரி இரக்கத்தோடு பார்க்கிறார் மதுவை...

" என்னுடைய சிறந்த மாணவி நீ.. அதேபோல் உன் மகளும்... ஆனால் உன் வாழ்க்கையில் இப்படி ஒரு சோதனை...கடவுள் ஆசீர்வதிப்பார். கவலைப்பாடாதே.."

கன்னியாஸ்திரி ரகுவையும் அழைத்து தன் அறைக்குள் சென்று குடும்பத்தோடு பேசுகிறார்...டென்னிஸ் பயிற்சி பற்றியும், வேந்தனின் பங்கெடுப்பு குறித்தும்..பின் ப்ரீத்தியை அனுப்பிவிட்டு சமாதானம் பண்ண முயலுகிறார்...

இதுவும் மதுவின் ஏற்பாடோ என்று ரகு நினைத்து..

' மன்னிக்கணும், சிஸ்டர், அதை குறித்து நான் எதுவும் பேசுவதற்கில்லை.. எல்லாம் உறுதி ஆன நிலையில்.."

இனி வழியேயில்லை என்று மதுவுக்கு புரிகிறது.... ஆண்களில் தான் எத்தனை வகை??.


***************************************************************அடுத்து கடைசி பாகத்துடன் முற்றும்..***************************