Monday, December 3, 2007

வெட்கி வேதனைப்பட்டு அவர் வலியுணர்கிறேன். =========================================
படிப்பை பற்றி பேசிய போது தம்பி வெட்கப்பட,.

ரொம்ப வெட்கப்படாதே பின் அழைத்துச்செல்வர்
கூத்தாண்டவர் கோவிலுக்கே கூவாகத்திருவிழாவுக்கு
என நான் கூற அவன் சிரிக்க !ஒரு கணம் எனை மறந்தேன்.

பின்னிரவு தான் வலியுணர்ந்தேன் தூக்கமின்றி..
நகைச்சுவை என நினைத்து பேசிடலாம் அச்சமின்றி.
வெளிநாட்டில் எவரும் அவரை நினைப்பதில்லை துச்சமாக
நானோ என் பிள்ளையோ பிறந்துணர்ந்திருக்கலாம் மிச்சத்தை.
எவர் உறைப்பர் அவர் சலுகை, தேவை, துயரத்தின் உச்சத்தை???
மன்னிப்பாயா கடவுளே?. இவ்வாழ்க்கையில் நீர் எனக்களித்த பிச்சையை!!!..

இக்கவிதை அத்தோழர்களுக்கு சமர்ப்பணம்.

No comments: