Saturday, April 2, 2011

நடிகையும் ஒரு பெண் என மதிப்போம்..






நான் சமீபத்தில் படித்த கமெண்ட் சில எனக்கு ஏற்படுத்திய எரிச்சலை வலியோடு பகிர்ந்துகொள்கிறேன்..

யார் எழுதியது என்பது நமக்கு தேவையில்லை.. தெரியாமலே இவை பழக்கப்படுத்தியிருக்கலாம்.. இது தவறு என சொல்வதும் நம் கடமை அவ்வளவே.. கமெண்ட் நாலு பேர் கூட சேர்ந்து அடிக்கும்போது சுகமாத்தான் இருக்கும்.. ஆனால் அது நம் வீட்டு பெண்ணா இருந்தால் அடிப்போமா என எண்ணிப்பார்ப்போம்..

-------------------------

வடிவேலு அம்பிகாவை வச்சிருந்த கதையெல்லாம் மேடையில் நாறுமோ? :-)

அம்பிகா கதை மட்டும் இல்லை... ஷ்ரேயா கதை எல்லாம் கூட வெளி வரும்.

மதுரைக்குத் தி.மு.க. அனுப்பிவைத்த பிரசார பீரங்கி குஷ்பு!

XXXX : சிங்கிள் பேரலா மல்ட்டி பேரலா?...

அடுத்து கனிமொழியையும் ராசாவையும் இணைத்து..

அப்புரம் குஷ்பூவின் பழைய நீச்சலுடை படம் போட்டு அவரை இழிவுபடுத்துதல்..

ஜெயா அம்மையாரையும் நடிகை என்ற பார்வையில் அசிங்கப்படுத்துவது..

--------------------------------------------------

என்ன ஒரு ஆர்வம்??...இவர்களுக்கெல்லாம்.?..அப்பப்பா.. ஒரு நொடி அந்த பெண்களை நம் வீட்டு பெண்களாய் எண்ணியிருந்தால்..?..

அடுத்தவர் அந்தரங்கத்தை பொதுவில் அலச ஆர்வமுள்ளவர்கள் அதே ஒழுக்கமற்றவர்களாய் இருப்பார்கள்..

இது ஒரு கீழ்த்தரமான உத்தி..

நன்றாக நியாபகம் வைத்துக்கொள்வோம் , நாம் எல்லோரும் அதே சூழலில் , முக்கியமா நம் வீட்டு பெண்களும் அதே சூழலில் இருந்தால் அதையே செய்திருப்போம் என நினைவில் கொள்ளுவோம்..

( நாளை நம் வீட்டு குழந்தையும் இதே போல செய்ய மாட்டார் என எத்தனை பேர் நிச்சயமா சொல்வீர்கள்..?. எதுவும் நடக்கும்.. யார் கையிலும் இல்லை .)

அம்பிகாவை தொடர்பு படுத்தி அசிங்கப்படுத்தவேண்டி
யதன் நோக்கம்.?

நடிகை என்றால் என்னவேணா பேசலாம்னா பேசுபவர் அப்படியானவரே என்னைப்பொறுத்தவரையில்..

இதுக்கு பலத்த எதிர்ப்போ, கும்மியோ, கண்டனமோ தெரிவித்தாலும் இதுவே என் பதில்..

பாலியல் தொழிலை விட இப்படியான பேச்சுகள்தான் சமூகத்தின் முக்கியமான சீர்கேடு . இப்படி பேசுபவர்களை விட பாலியல் தொழிலாளிகளும், நடிகைகளும் உயர்ந்தவர்கள் என்னைப்பொறுத்தவரையில்..


யாரும் திருந்தணும்னு கட்டாயப்படுத்தல்.. ஆனால் இதுதான் என் கருத்து..

அரசை , ஊழலை , விமர்சிக்கணும்தான். மக்களுக்கு அவர்கள் தவறை வெளிச்சம் போட்டும் காண்பிக்கணும்தான்.. ஆனால் இதுவல்ல வழி.. அவர்களுக்கும் நமக்கும் வித்யாசமே இல்லை..உடனே மாற்றம் வர , கோபம் வர வழி தேடாமல் நிரந்தரமாக நம் நாடும் சமூகம் நல்லதொரு சூழல் அமைக்க பாடுபடலாம்.. எடுத்தேன் கவிழ்த்தேன் என்பதை விட்டு.. அது நீண்ட கால பயனளிக்காது. ..



எது சரி எது தவறு என்று கூட தெரியாத அளவுக்கு தமிழர்கள் சிலர் , பொதுவாழ்க்கையில் ஈடுபட்ட பெண்களை, முக்கியமா நடிகைகளை , அவர்களின் அந்தரங்கங்களை பொதுவெளியில் அலசுவது மிக சர்வ சாதாரணமாக போய்விட்டது..ஆனா அதே பெண்களிடம் ஆட்டோகிராப் வாங்கவோ , குத்துவிளக்கு ஏற்றவோ க்யூவிலும் நிற்போம்..புகைப்படம் எடுப்போம்.

அதுமட்டுமா அந்த நடிகையின் படத்தை போட்டு ஹிட்ஸ் சேர்ப்போம். ஓட்டு பிச்சை எடுப்போம்.. ஏன்னா நாம நல்லவர்கள்....

அதெப்படி வெளிநாடு வாழ் தமிழர்கள் கூட வெளிநாட்டில் பெண்கள் எவ்வாறு மதிக்கப்படுகின்றனர் என பார்த்தபின்பும் , தனிமனித உரிமைகள் அதற்கான சட்டங்கள் பற்றி அறிந்த பின்னும் , தமிழரோடான பேச்சில் தம்மை மறந்து , அந்தரங்க அலசலில் இத்தனை ஆர்வம் காட்டுகின்றனர்..?

அருவருப்பா இருக்கு.. :((((((((..

இவர்களெல்லாம் நாட்டை திருத்த போறாய்ங்களாம்.. போங்க போங்க போய் மொதல்ல உங்களை நீங்க திருத்திக்கோங்க.. அப்புரம் நாட்ட திருத்த வாங்க..


திருந்தவே மாட்டாங்க சில ஆணாதிக்கவாதிகள் , தன் வீட்டு கதவை அந்த பிரச்னை தட்டும் வரை.. திருந்தவாவது , சீக்கிரம் அதே சூழல் அவரவர் குடும்பத்தில் வரட்டும் என மட்டும் வாழ்த்துவோம்..:)

உடனே கேட்கத்தோணும், உங்க வாரிசுகளுக்கு வந்தால் பரவாயில்லையா?..

நிச்சயமாக .. ஏனெனில் நான் பாலியல் தொழிலாளிகளின் வாழ்வு மேம்படத்தப்படணும் என பல வருடம் முன்பே பேச ஆரம்பிச்சாச்சு..

1. அத்தொழில் முற்றிலுமாக ஒழிக்கப்படணும்.

2. முடியாத பட்சத்தில் அவர்களுக்கு அங்கீகாரம் கொடுத்து கெளரவமாக நடத்தப்படணும்...

ஏன்னா, உலகிலேயே மிகவும் பரிதாபத்துக்குறிய , மனமும் உடலும் தினம் செத்து பிழைக்கும் தொழில் அது..

ஒன்ணு அவர்கள் வலியை உணரணும்.. அல்லது தம் வாரிசுகள் அதை அனுபவிப்பதன் மூலமே அறியணும்.. இது எனக்கும் பொருந்தும்..


( இதுக்கு ஒரு 100 பேராவது ( ஆணாதிக்கவியாதிகள் ) எதிரியாகணும் எனக்கு .. ).

நடிகைக்கும், பாலியல் தொழிலாளிக்கும் , அரசியலில் ஈடுபடும் பெண்களுக்கும் குடும்பம், குழந்தைகள் இருக்கு.. ஒன்றுமேயறியாத அக்குழந்தைகளை பலிகடா ஆக்கி மன உளைச்சல் தரும் மன நோயாளிகளே அந்தப்பாவம் உங்கள் வாரிசுக்கு வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்..

அப்படி பேசுபவர்களுக்கு ஆதரவு தந்து அக்குற்றத்தை வளர்க்க உதவாதீர்கள்...தவறு என துணிவாக எடுத்து சொல்ல தயங்காதீர்கள்..


தேர்தல் நேரமென்பதால் எப்படியாவது அடுத்தவரை இழிவுபடுத்தியே தான் பெரியவனாக காண்பித்துக்கொள்ள கட்சியினர் தான் அடித்துக்கொள்கின்றனர் என்றால் பதிவுலகிலும் ..



இது வளர்ச்சி அல்ல வீழ்ச்சி நோக்கி போய்க்கொண்டிருக்கிறோம் என்பதற்கான சான்று ..


படம் : நன்றி கூகுள்..


.