Thursday, March 24, 2011

எண்ண அலைகள்..- நேர்மறை எண்ணம் வளர்ப்பதெப்படி..? -1




எண்ண அலைவரிசை பற்றி அப்பப்ப ஆர்வமா

படிப்பதுண்டு.. அது குறித்து எழுதணும் என்ற ஆர்வமும்

எப்போதும் உண்டு..

நிதானமாக உட்கார்ந்து எழுதணும். அதற்கான நேரமும்

வாய்ப்பும் இப்பதான் கிடைத்துள்ளது..

எனக்கு எல்லா விஷயமும் தெரியாது,... நானும்

பயணித்து உங்களுக்கு தகவல்கள் அளிக்க போகிறேன்..

சந்தேகம் வந்தால் கேளுங்கள். பதில்

கண்டுபிடிக்கிறேன்.. ஏனெனில் என் ஆர்வம் இதில்

அப்படியானது..

வாருங்கள் பயணிப்போம்..


------------







ஒரு கல்லை நாம் குளத்தில் எறிந்தால் அது எப்படி

அதிர்வுகளையும் அலைகளையும் உண்டாக்குகின்றதோ

அதே போலத்தான் மன அலைகளும்..ஆனால் ஒரு

வித்யாசம் உண்டு இங்கே..

நீரின் அலைகள் ஒரே தளத்தில் பயணிக்கும்.. ஆனால்

மன அலைகளோ ஒரு மையத்திலிருந்து பல்வேறு

திசைகளிலும் பயணிக்கும்...பூமியில் நாம் எப்படி காற்றால்

சூழப்பட்டிருக்கோமோ , அதே போல மன

எண்ணங்களின் கடலால் சூழப்பட்டிருக்கோம்.. ஆக

இந்த எண்ணங்களின் அலைவரிசை பிரயாணப்படும்

போது தூரத்துக்கேற்ப அவைகளின் சக்தி

வேறுபடுவதோடு , எதிர்படும் எல்லாவிதமான

அலைவரிசைகளிலும் முட்டி மோதியே செல்கிறது..

நம்மிடம் வரும் தேவையற்ற எண்ண அலைவரிசைகளும்

கூட எங்கிருந்தோ வரும் மிக சக்திவாய்ந்த

எண்ணங்களின் அலைவரிசையின் வெளிப்பாடே..ஆனால்

நாம் அந்த அலைவரிசையோடு ஒத்து போவது நம்

மனதை பொறுத்ததே.. எத்தனை முயன்றாலும் நாம்

அதை ஏற்காமல் அதை தவிர்க்கவும், விலகிக்கொள்ளவும்

செய்யலாம்..

அதனால்தான் பல நல்ல விஷயங்களை நல்ல நட்புகளை

, ஆன்மீகமோ, நல்லறிஞர் நூல்களோ படிப்பது , அதை

உள்வாங்கிக்கொள்வது , நம் சிந்தனைகளை உயர்வாக

வைத்திருக்க செய்யுது.. எப்படி.?.. நாம் நல்ல

விஷயங்களை மட்டுமே பேச பிரியப்படும்பொழுது , நம்

எண்ணமும் அதே அலைவரிசை உடையவர்களையே

தேடி அலையும்.. ஒத்த அலைவரிசையும்

நல்லெண்ணமும் கிடைக்கும்போது அதை

பற்றிக்கொள்ளும் மனதானது..

இதே தான் தீய சக்திக்கான அலைவரிசையும்..தீய

எண்ணம் கொண்டவரது அலைவரிசை , அல்லது

எதிர்மறை எண்ணங்கள் கொண்டவரது அலைவரிசை

அதே போன்றவர்களோடு ஒத்துபோவதும் ,

எண்ணங்களை தம்மையறியாமல் பறிமாறி

உள்வாங்கிக்கொள்வதும் நடக்கின்றது..

இதுவும் ஒருவிதமான டெலிபதியே..

அதனால்தான் நாம் எத்தனை உறுதியாக இருக்கவேண்டுமென சொல்வதும் நல்லெண்ணங்களை வளர்த்துக்கொள்வதும், நல்லவர்கள் துணையோடு இருப்பதும் மிக அவசியமானது.. என்னதான் கெடுதல் எண்ண எத்தனை பேர் நினைத்தாலும் நாம் நம் மன எண்ணங்களி மிக உறுதியாக நேர்மறையாகவே இருக்க பழகிக்கொண்டாமோனால் நம்மை எந்த கெட்ட அலைவரிசையும் ஒன்றுமே செய்யாது..


ஆனால் நம்மால் அப்படி இருக்க முடியுமா? இந்த உலகில்.. நம்மை சுற்றி பொறாமை, வெறுப்பு, கோபம் , பயம் , இயலாமை , என பல விஷயங்கள் எதிர்மறையாக விதிக்க காத்திருக்கு..

அதே சமயம் , அன்பு, இறக்கம் , தாழ்ச்சி, கருணை , அமைதி, சமாதானம் , ஊக்கம், போன்ற பல நல்ல அலைவரிசையுடையவர்களும் இருக்கிறார்கள்..


இப்ப நம்மிடம்தான் இருக்கிறது நாம் எதை தேர்ந்தெடுக்க போகிறோம் என.. எப்படி நம்மையே , நம் சிந்தனையையே நாமே மேம்படுத்த பயிற்சி செய்யப்போகிறோம் என..


எண்ணங்களையெல்லாம் ஒன்றுகூட்டி , ஒரே புள்ளியில் குவித்து , அதை மாபெரும் சக்தியாக்கி , அற்புதங்களை நிகழ்த்தியவர்கள் பற்றியும் காண்போம்..



இன்னும் அலைவரிசை அவைகளின் வகைகள் ( ஆல்ஃபா, பீட்டா, காமா, தீட்டா, டெல்டா ), குறித்தும் , அவைகளின் பயன்கள்குறித்தும் அடுத்த பதிவில் பார்ப்போம்..


அடுத்து விலாவாரியாக தொடர்ந்து பயணிப்போம்..





படம் நன்றி : கூகுள்



.

Tuesday, March 22, 2011

மனம் தளராமல் - பதிவுலக ஊக்க கட்டுரை. ( சேட்டைக்கரன், Karthik L(LK) அம்பலமும் )



எனக்கு அமைந்த நட்புகள் மிக மென்மையானவர்கள்.. நான் காயப்படக்கூடாது என விரும்புபவர்கள்..

உனக்கேன் இந்த வேலை . சமூகத்தை பற்றி நீ ஏன் கவலைப்படணும் என்கிறார்கள்..

அனேக கட்டுரை வருவதை நாம் பார்க்கிறோம்.. அன்பா இருப்பது , மகிழ்ச்சியா இருப்பது எப்படி என..

அன்பானவர்களால் சூழ்ந்து இருங்கள்.. அமைதி தருபவற்றை படியுங்கள் என.. நிச்சயமா செய்யலாம்தான்.. ஆனால் அழ்மனதில் ஒரு குறுகுறுப்பு இருக்கும்..

சமீபத்தில் தனலட்சுமி என்ற சிறுமையை நாய் கூண்டில் அடைத்து வைத்து சித்ரவதை , சூடு போடப்பட்டு கொலை செய்யப்படுகிறாள்..

நாம் வாழும் காலத்தில் நம் அருகில் தான் நடக்குது.. ஒரு கணம் சிந்தித்து பாருங்கள் அந்த சிறுமி பட்ட வேதனையை..

கேட்ட தினத்திலிருந்து இன்றுவரை தூங்க முடியவில்லை எனக்கு.. என் குழந்தையாய் தான் பார்க்கிறேன்..

இது போல் 5000 குழந்தைகள்.. அடிமையாக.. என்ன செய்ய போகிறோம் நாம்.?

நிம்மதி தேடி ஆழியாருக்கும் , ஆலயத்துக்கும் , காணிக்கை போட்டும் , யோகா செய்தும் மன அமைதி கிட்டியது என பரப்புவோமா?..நாமே நம்மை ஏமாற்றுவோமா.?.

ஜப்பானில் அழிவு என்றால் அதிர்வு நம் மனதிலும் தான்..


நாளையே நான் மரணித்து போகலாம்.. ஏன் இப்பவே கூட.. என்ன கொண்டு வந்தோம் என்ன கொண்டு போக..?. ஆனா ஒரு திருப்தி இருக்கணும் .. நம்மால் முடிந்த சிறு துரும்பை நகர்த்தினோம் .. அநீதியை எதிர்த்தோம். அதனால் அடி வாங்கினோம் என..நாட்டுக்கே விடுதலை வாங்கித்தந்த மஹானுக்கு கிடைத்த பரிசு துப்பாக்கி குண்டுதான்..

நமக்காக ஒரு வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிடணும்.. அதே போல் இன்பம் துன்பம் எல்லாம் அனுபவிச்சாச்சு என்ற நிறைவு நமக்கே வரணும்.. வாழ்வின் இறுதிவரை சுயநலத்தோடு " நான், " எனக்கு " என வாழணும் என நினைப்பவருக்கு எல்லாமே துன்பமயம் தான் என்னைப்பொறுத்த்வரை....இனி புகழ்ச்சி, இழிவு எல்லாம் எனக்கு சமமே..

சொல்லப்போனால் நான் சமூகத்துக்காக எடுக்கும் ஒவ்வொரு படியிலும் எனக்கு ஒவ்வொரு சவால்தான் காத்திருக்கு..அதிகமான இழிவுகளும் , மிரட்டல்களும்..
ஆனால் இவற்றையெல்லாம் வலி என்றே கணக்கிட கூடாது.. எது வலி.. இயலாமையில் தனலட்சுமி வெந்து மடிந்தாளே.. கொஞ்ச வேண்டிய
குழந்தையை மனம் செத்து அனுப்பி வைத்தாளே ஒரு தாய்..அவமானம் தாங்காது செத்து மடிந்தாளே திவ்யா.. அவள் தாய்க்கு இருக்குமே வலி. அதுதான் வலி.. ஈடு செய்ய முடியா இழப்பு..

இப்படி எத்தனை எத்தனை பேர் நம்ம மத்தியில் வாழ்ந்து மடிகிறார்கள் தினமும்?.. இதையெல்லாம் பார்த்துவிட்டும், " நான் " , " எனக்கு " என மன நிம்மதி தேடி அலைபவர்களை பார்க்க மிக கேவலமாக இருக்கு எனக்கு.. நிம்மதி, அன்பு, மகிழ்ச்சி எல்லாமே அருகில்தான் இருக்கு.. நம்மை சுற்றிதான் இருக்கு குப்பைகளும்.. அதை அகற்ற எவ்வித முயற்சியும் எடுக்காமல் , அல்லது எடுப்பவர்க்கு ஆதரவு தராமல் , இடைஞ்சல் தந்து தன் பலத்தால் எதிர்த்து இழிவாக பேசி திரிபவர்களை என்ன செய்ய?.. இன்னொரு முக்கிய விஷயம் தமிழருக்கு தமிழர் மீதான நம்பிக்கை மிக குறைந்து வருகிறது.. நண்டு கதை போல.. அதற்கு முக்கிய காரணம் தமிழக தலைமையும், ஊடகத்தின் ஆதிக்கமும் .. தமிழ் மக்கள் சந்தர்ப்பம் கிடைத்தால் தப்பிப்பதிலேயே இருக்கின்றார்கள்.. அப்படியான ஒரு சூழல் அமைந்துள்ளதும் சாபக்கேடு..





ரவுடியாக, அடாவடியாக இருந்தால் மட்டுமே பிழைக்க முடியும் என்பது எத்தனை கெடுதல்.. அதே தானே பதிவுலக அரசியலிலும் பார்க்கிறோம்?..ரவுடிக்கு ரவுடி பாஷையில் பதிலளித்தால் மட்டுமே பயம் வருது... சாபக்கேடுதானே?..

இருங்க அவர்கள் பாராட்டுகளையும் போடுறேன் பலரும் அறியணும்..

தினமும் என்னைப்பற்றி எழுதாவிட்டால் பொழுதே விடிவதில்லை அவர்களுக்கு.. :)

சேட்டைக்காரன் :-)))) • Mar 6, 2011 • Buzz
ரொம்ப நாளைக்கப்புறம் இங்கிட்டு வந்திருக்கோமப்பு! அதுவும் "தாய்"க்குலத்தின் தன்னிகரில்லா பிரதிநிதி, பெண்குலத்தின் விடியல் ஒருவர் சிலம்பில்லாம சலம்பிட்டிருக்கும்போது, அதாவது புலம்பிட்டிருக்கும்போது போய் ஒரு மைனஸ் ஓட்டுக்கூடவா போடாம இருப்பீங்க? ஷேம் ஷேம் பப்பி ஷேம்!


சேட்டைக்காரன் :-)))) - //கேன் இட் க்ளீன் தி சமுதாயம்//

சமுதாயம் என்பதில் சமு+"தாய்"+"அம்" என்று பிரித்து நோக்கிடில் நீங்கள் தாய்லாந்தில் இருக்கும் ஏதோ ஒரு அம்மணியைப் பற்றித்தான் எழுதியிருக்கிறீர்கள் என்று அவர் ஒரு இடுகை போடுவதாக காற்றுவாக்கில் தகவல் வந்திருக்கிறது.

Dhinesh Kumar (முகிலன்) - தாய்லாந்து வரைக்கும் ஓக்கே. அம்மிணியாங்கிறதுதான் டவுட்டா இருக்கு.


சேட்டைக்காரன் :-)))) - //அம்மிணி - மனிதர்களுக்கு மட்டுமே உரித்தானது. மாக்களை அம்மணி என்று அழைப்பதில்லை.//

அப்போ ஜிம்மிணி-னு அழைக்கலாம்.பிராணிகளுக்கு எல்லாரும் அந்தப் பெயரைத்தான் வைப்பாங்க





Karthik L (LK) - அப்படி இல்லை பிரபாகர். இது ஒருவகை மனவியல்.தன் இருப்பை காட்டிக்கொள்ள இடைவெளி விட்டு விட்டு செய்வது


ஜீவ்ஸ் :: Jeeves: கிருஷ்ணன் - வாட் யூ மீன் பை புரட்சி ? கேன் இட் க்ளீன் தி சமுதாயம்
Mar 6, 2011
Karthik L (LK) - புரட்சி மீன்ஸ் இன்டர்நெட் புரட்சி
Mar 6, 2011
சேட்டைக்காரன் :-)))) - புரட்சி = புரட்டு + சீ

அதாகப்பட்டது, சீ என்று சொல்லுமளவுக்கு மல்லாந்து படுத்துத் துப்புவதும், எம்புட்டு புரட்டிப் புரட்டி அடி வாங்கினாலும் திரும்பத் திரும்ப மூத்திரப்பெரைக்கு வந்து சேருவதும் தான் புரட்சி!
Mar 6, 2011
Dhinesh Kumar (முகிலன்) - //கேன் இட் க்ளீன் தி சமுதாயம்//

எங்க வீட்டு டாய்லெட்டைக் கூட க்ளீன் செய்யாது.

சேட்டைக்காரன் :-)))) - ஆமாம் ஜீவ்ஸ்! அதுலேயும் அவங்க தாய்லாந்துலேயே கோனார் கைடு எழுதுறவங்களாம். :-)
Mar 6, 2011
சேட்டைக்காரன் :-)))) - //அம்மிணியாங்கிறதுதான் டவுட்டா இருக்கு//

அப்படீன்னா, அவங்க அம்மிணியில்லே; கொஞ்சம் கம்மிணி-ன்னு சொல்றீங்களா முகிலன்?
Mar 6, 2011
Karthik L (LK) - /கோனார் கைடு // தேன்மொழி நோட்ஸ் எழுத மாட்டாங்களா # சந்தேகம்





இதில் மிகுந்த ஆச்சர்யம் என்னன்னா . எப்படி இவர்களுக்கு நாள் முழுதும் கும்மியடிக்க மட்டுமே நேரம் செலவழிக்க முடியுது?..

நமக்கு வாசிக்கவே பத்துவதில்லை.. இத்தனைக்கும் நான் ஒண்ணும் பெரிய பிரபலமோ இலக்கியவாதியோ இல்லை.. என்னையே இப்படி ?:))))))))

ஆனா இப்ப சிலர் கொஞ்சம் ஒதுங்கி இருக்காங்க நான் சுட்டி காட்ட ஆரம்பித்த பின்..

தொடரணும் அவர்கள் சேவை.. என வாழ்த்த மட்டும் செய்வோம்..


அடுத்து தோழி என்பவர் ,

----------------------------


४१ தோழி १४ - வந்துட்டேன்.. எங்க சண்ட எங்க சண்ட//
४१ தோழி १४ - வேணாங்க பதிவு போட்டு பிரபலமாக பாத்த ஒருத்தர இன்னிக்கு பஸ்ல தான் தொங்க போட்டு அடிச்சோம்..

४१ தோழி १४ - ஒரு திரில்லர் படம் போட்டிருக்காங்க. பெயரு "சாந்தி நிலையம்".ஆஹா, ஜெமினி என்னமா பாடுறாரு...இயற்கையென்னும் இளையகன்னி.. //

இதுக்குமுதல்ல இந்த பாட்டுதான் வரும்.. சேட்டைக்கார அண்ணாச்சி பொய் சொல்றாப்ல..

கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம்
கண்ணில் கண்ட மனிதனை எல்லாம் நலமா என்றாராம்

----------------------------------------------------------------

இவர் படிப்பதெல்லாம் ராமாயணம் இடிப்பதெல்லாம் பெருமாள் கோவில் கதை...:)) http://siththarkal.blogspot.com/


இப்படியானவர்களின் போலி வேஷங்களை பார்த்துதான் மத வெறுப்பு வருது பலருக்கு..:) . நல்லவர் கூட கெட்டவர் கூட சேருவதாலும் இருக்கலாம்..

----------------------------------------------

ஜீவ்ஸ் :: Jeeves: கிருஷ்ணன் • Mar 16, 2011 (edited Mar 16, 2011) • Buzz
மண்டையில மசாலாவே இல்லாம பிரபலமாவது எப்படி ?

296 more comments from Priya Siva, Karthik L (LK), Dhinesh Kumar (முகிலன்), KANNAN J NAIR and விஜி . and 10 others//

அலுவல் நேரத்தில் அடுத்தவரை பற்றி பேசி ஏசியே பொழுதை போக்கும் இவர்கள் திடீரென சமூக அக்கறையில் பதிவும் போடுவார்கள்..:)

--------------------------------------------------------------


இதையெல்லாம் போடுவதால் நான் அனுதாபம் தேடுகிறேன் என நினைக்கவேண்டாம்.. இவற்றையெல்லாம் தாங்க முடிந்தால் மட்டுமே நம் கருத்துகளை அழுத்தமாகவும் அதே சமயத்தில் நாகரீகமாகவும் சொல்லக்கூடிய துணிவு வரும் என்பதற்காகவே இந்த பகிர்தல்..


நாம் அனுமதிக்காமல் நம்மை யாரும் இழிவுபடுத்தவோ, வருத்தப்படுத்தவோ , பொறாமைகொள்ள செய்யவோ முடியாது என்பதை ஒவ்வொருவரும் புரியணும்..


அல்டிமேட் ஆக என்னதான் செய்ய முடியும் எத்தனை தூரம் போக முடியும் என வேடிக்கை பார்க்க கற்றுக்கொள்ளணும்.. அதுதான் அஹிம்சை.. அதுதான் வீரம்.. அதுதான் வள்ளுவர் சொல்லும் துறவு நிலையும்.. எல்லா இழிவுகளும் சொன்னவருக்கே அர்ப்பணம்.. என்ற மனம் வந்திடணும்.. எல்லா இழிவையும் தாங்கியும் நம் பக்கமிருந்து அநாகரீகமாக ஏதுவுமே சொல்லாமல் இருக்கும்போது நம் எதிராளியும் அதே நிலைக்கு வந்தாகணும்.. (சிலர் நிதானத்துக்கு வந்துள்ளார்கள் என்பதையும் இங்கே மகிழ்வோடு பகிர்கிறேன்.. ) ..

இல்லாவிட்டால் குழுமமெல்லாம் நடத்தவே முடியாது..ஒரு பெண்ணால்..:)

அதுதானே நம் எண்ணம் .?.. நோக்கம்..? நம் வெற்றியும்.?..


-----------------------------------------------

நஜீபா said...


"ஐயோ, எனஅ் கையைப்புடிச்சு இழுத்திட்டான். என்னை மின்னஞ்சலிலேயே வன்புணர்ச்சி பண்ணிட்டான்,’ என்று அவ்வப்போது பிலாக்காணம் பாடும் ஆயாக்களும் படு அமைதியாக இருக்கிறார்கள்.//


சாந்தி : இது யாருங்க?.. தெளிவா சொல்லலாமே.?

நஜீபா : அதை நீங்கள் தயங்காமல் செய்வீர்கள் என்று அறிவோம். உங்களைப் பற்றி யாரேனும் எழுதினால், உடனே அதில் மற்ற பெண்களையும் இழுத்து, உங்களோடு சேர்த்து மற்றவர்களையும் அசிங்கப்படுத்துவீர்கள் என்பதைத்தான் தமிழ் வலையுலகில் நேற்று வந்தவர்களும் சொல்கிறார்களே. ஆனால், நான் ஒரு பெண்ணின் பெயரை உபயோகிப்பதன் முன்னம் யோசிப்பேன். எனது சுயநலத்துக்காக இன்னொரு பெண்ணின் சுயகௌரவத்தைப் பலிகொடுக்க மாட்டேன்.-

----------------

சாந்தி :பிலாக்காணம் பாடும் ஆயாக்களும் ???? ஆரும்மா அந்த ஆயா?..
அத விட்டுட்டு பூசி மெழுகினா எப்படி?..

கடைசி வரை சொல்லவில்லை.. ஏன்?. சொல்ல முடியாது.. வம்பிழுப்பது மட்டுமே நோக்கமாயிருக்கும்போது.?.

வலிய உங்க பதிவில் வம்புக்கு இழுக்கும் உங்க செயலை அம்பலப்படுத்தவே அதையும் கேட்டேன்.. இப்ப கவலை வேண்டாம் நஜீபா என்பவர் யார் என பலருக்கும் தெரியும்.. உங்களுக்கும் புரிந்ததா நஜீபா யாரென...

உடனே நஜீபா க்கு வக்காலத்து வாங்கி சேட்டை பஸ் இல் இப்படி சொல்றார்
---------.

சேட்டைக்காரன் :-)))) - சொரணையிருக்கிற சென்மமாயிருந்தா நாண்டுக்கிட்டு சாகணும்! த்தூ.....!
Mar 18, 2011
Karthik L (LK) - அண்ணே அது கிலோ என்ன விலை ?
Mar 18, 2011
சேட்டைக்காரன் :-)))) - நமக்கெல்லாம் வேணாம் கார்த்தி. ஒரு ஷிப்மென்ட் தாய்லாந்து அனுப்பணும் போலிருக்குது.
Mar 18, 2011
Karthik L (LK) - அதுக்குதான் கேட்டேன்


----------------------------

நான் என் பஸ் ல் போட்ட பதில் கீழே.


//இப்படி வலிய வம்பு பேசி திரியும் புள்ளங்கள பெத்ததுக்காக சொரண அதிகமாயிருக்கும் உங்க அம்மா , உங்க வீட்டு பொண்ணுங்கள போய் நாண்டுகிட்டு சாக சொல்லு சேட்டைக்காரனே..:))..

Karthik L (LK).. ஓவரா இருக்கு உன்னோட அனாவசிய நக்கல்.. கவனிச்சுட்டுத்தான் இருக்கோம்.. என்னை சொல்ற அத்தனையும் உன் பெண்ணுக்கு சாபமா வரத்தான் செய்யும்.. நீயே அதை வரவேற்கிற.. அதை நீ புரிஞ்சுக்காத..பாவம் உன் பொண்ணு..

யார் யாருக்கு என்னென்ன சாபம் வேணுமோ அதை அடுத்தவங்களுக்கு சொல்லுங்க.. தாராளமா.. //

நாம் அடுத்தவர்களை சொல்வது நமக்கே திரும்பும்..என்ற பயம் இருக்கணும் . சும்மா இணையம் கிடைத்ததேன்னு எழுதி தள்ளக்கூடாது. வம்பு வளர்க்கும் இடமல்ல. வெத்து மிரட்டல்தான் இவையெல்லாம்.. நேரிலே போனால் காலில் விழும் ஜென்மங்கள் இவை..

இப்ப புரிந்தும் இருப்பீர்கள் என் பேரில் போலியாக வந்த நபர் யார் என்றும்..



சேட்டைக்காரன் , Karthik L (LK) பற்றி தகவல் இருந்தால் பகிரவும் தனிமடலில்.. இனி இப்படி பலரின் எழுத்துகள் அம்பலப்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கணும்.. பதிவுலகை ஒரு ஒழுங்குக்கு கொண்டு வர அனைவரும் பாடுபடணும்.. இல்லையென்றால் நல்லவர்கள் எல்லோரும் வெளியேறி கெட்டவர்கள் மட்டுமே மிஞ்சும் நிலை வரும்..

தமிழ் மீதான ஆர்வமும் குறையும்.. நானே 10 கட்டுரை வாசித்தால் 7 ஆங்கிலம்தான்.. தமிழ் பதிவுலகம் மீது அனேகருக்கு இப்படியானவர்களால் வெறுப்பு இருக்கிறது..

என்னிடம் ஒரு நண்பர் , " தாய்லாந்து பற்றி எழுதி தாருங்கள். புத்தகமாக இலவசமாகவே போடுகிறேன் " என்கிறார்,, என் ஆர்வம் அதிலெல்லாம் இல்லை.. என்னால் முடிந்தளவு நான் சமூகத்துக்கு குரல் கொடுக்கணும் என நினைத்தேன் செய்தும் விட்ட ஆத்ம திருப்தி இருக்கு..

பயமே வேண்டாம் திட்டுபவர் அலுத்து போகும்வரை திட்டட்டும்.. அவையெல்லாம் நம் சாதனைக்கான வாழ்த்து என மட்டும் எடுத்துக்கணும்.. தொடரணும் நம் நல்லெண்ணம் நாகரீகமான முறையில்..


திட்டுவதில் இல்லை வீரம்.. எல்லா இழிவையும் தாங்கிக்கொண்டும் , நம் கொள்கைக்காக நாகரீகமாக போராடுவதே வீரம்..


நான் இப்படி அம்பலப்படுத்த ஆரம்பித்ததும் கதிர் போன்றோர் பஸ் அழித்துள்ளனர்/அல்லது மூடியுள்ளனர்.. அதுவே நல்ல திருப்பம் தான்.. அந்த பயம் வரணும்.. எல்லாருக்கும் குடும்பம் இருக்கு.. நாம் காறி துப்பினா , செருப்பால் அடித்தா பலமடங்கு திருப்பி கிடைக்கும்னு இப்ப கதிருக்கும் , தண்டோராவுக்கு புரிந்திருக்கும்.. அவர்கள் கூட சேர்ந்தவர்க்கும்..

உங்க பதிவில் இப்படியானவர்களின் பின்னூட்டம் வரணுமா என யோசித்துக்கொள்ளுங்கள்.. அது உங்க மதிப்பையும், நல்லெண்ணத்தையும் கெடுக்கும்..


" என் தம்பிக்கு வேலை போயிடுச்சு . என் பாஸ் தாய்லாந்தில் அடிபட்டு கிடக்கிறார் " என சொல்லி உதவி கேட்டவரெல்லாம் எதிரணியில் சேர்ந்து கும்மியடிப்பார்கள்..எவ்வித முன்விரோதமுமில்லாமல்..:)

நல்லா யோசிச்சு பார்த்தா ஒருவித தாழ்வு மனப்பான்மை, அல்லது பயம்.. எங்கே நாம் கும்மியில் இணையாவிட்டால் ஒதுக்கப்பட்டுவிடுவோமோ என்ற மிக தவறான புரிதல்.. பாவம்..துணிவற்றவர்கள்... எது தரம் , நிரந்தரம் என அறியாதவர்கள்..


நான் நன்றி எதிர்ப்பார்ப்பதில்லை என்றாலும்.. உளவியல் படிக்க கல்லூரிக்கு போகவேண்டியதில்லை.. பதிவுலகம் வந்தா போதும்.:). இருந்தாலும் நன்மை செய்வது நம் பணி என தொடரணும்தான் எத்தனை ஏமாற்றம் வந்தாலும்...

எல்லோராலும் சமூகத்துக்காக எழுதவோ பேசவோ முடியாதுதான்.. தப்பேயில்லை..அவரவர்க்கு பிடித்த நல்ல விஷயங்களை எழுதட்டும்.நானும் பல நல்ல நகைச்சுவை பதிவுகள் ஆங்கிலத்தில் படிப்பதுண்டு.. நகைச்சுவையும் தனி நபரை காயப்படுத்தாமல் நாகரீகமாக இருப்பது தேவையே.. ஆனால் ஒருபோதும் இத்தகைய சமூக விரோத கும்பலுக்கு ஆதரவாய் இருந்து , நாமும் கெட்டு நம் சூழலையும் கெட்டுப்போக உதவியாய் இருந்துவிடாதீர்கள்..



இன்னும் அதிகமா சில சமூக விரோத கும்பல் இவர்களை தூக்கி வைத்தும் ஆடும்.. அதுவும் எதிர்ப்பார்க்கணும்.. என்றாவது ஒருநாள் வசமா மாட்டவும் செய்யும்போது கதறலாம் , " உன்னால் நான் கெட்டேன். என்னால் நீ கெட்ட " என.. அதுவும் சமீபத்தில் நடந்தது..:)


ஆணுக்கு இணையான பெரிய பதவி வகித்து , வாழ்வில் பல சவால்களை வேலையிலும் , வாழ்க்கையிலும் சந்தித்த எனக்கே நாகரீகமாக , கருத்து பகிர இத்தனை தொந்தரவு தருகிறார்கள் என்றால் , நினைத்துப்பாருங்கள் சாதாரண தமிழ் பெண்ணின் நிலைமையை.. இதில் பெண்ணுரிமை கிடைத்துவிட்டதென எழுதும் சிலரின் பதிவை பார்த்து சிரிக்கத்தான் முடியுது.. . தான் சுகமா இருந்தா உலகமே சுபிட்சமா இருக்கு என எண்ணும் அப்பாவிகள்.. வேறென்ன சொல்ல..?.:)

ஏமாற்றமோ, அவதூறோ, புரளியோ, இழிவோ நம்மை ஒருபோதும் காயப்படுத்தாது , பல தனலட்சுமிகளை , திவ்யாக்களை நாம் காப்பாற்ற நினைத்தோமானால்..தூசியென தட்டிவிட்டு தொடருவோம்..



( பஸ் buzz வசதியாக இருக்கிறது படிக்கவும் மனதில் தோணுவதை உடனே எழுதவும்.. ஆக நல்ல கட்டுரைகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் அங்கேதான் பகிர்கிறேன்.. நேரமும் மிச்சமாவதால்.. மேலும் பின்னூட்டமெல்லாம் எதிர்ப்பார்ப்பதேயில்லை எப்போதுமே நான்.. இப்பவும் அலுவல் சமயம் யாரும் பின்னூட்டம் போடவேண்டாம் தயவுசெய்து..பின்னூட்டம் முக்கியமேயல்ல.. நம் கருத்து போய் சேர்ந்தால் போதும்..)


பதிவுலகம்.. ஒரு ஆரோக்கியமான பார்வை....!

கழுகில் வந்த கட்டுரையையும் படிக்க.


படம்: நன்றி கூகுள்




.

Tuesday, March 15, 2011

என் பேரில் நடமாடும் போலிகள் கவனம்

என் பேரில் இப்ப ஆபாசமா கமெண்ட் போட ஆரம்பித்துவிட்டார்கள்..பதிவர்கள் என் புரோபைல் போட்டோ இருக்குதா என சரி பார்த்துக்கொள்ளவும்..

ஹேக் பண்ணி பார்த்தார்கள்.. வம்புக்கு இழுத்தார்கள்.. அடுத்து இப்படி..

நான் அநாகரீகமாக பேசுவதில்லை என எல்லாருக்குமே தெரியும்..

இதை யார் செய்வார்கள் என்பதும் உங்களுக்கும் எனக்கும் தெரியும்..

இதே போலத்தான் " ஏழர " என்பவருக்கும் செய்தார்கள்..

இருப்பினும் ஒவ்வொரு இடமாக சென்று நான் நிரூபிப்பது கடினம்..

அதனால் இந்த அறிவிப்பு.


இந்த பதிவில் வந்த போலி கமெண்ட் இது ,,
http://thanikaatturaja.blogspot.com/2011/03/blog-post_12.html?showComment=1300185531139#c3189545271944881904

பயணமும் எண்ணங்களும் சொன்னது…

உங்களி போன்ற கீழ்த்தரமான பதிவு போடுகிற ஆட்கள் மனநோயாளிகள் உன் மனைவியோ அம்மாவோ சுய இன்பம் செய்வதை உன்னிடம் சொன்னார்களா நீ சுய இன்பம் செய்வதை போட்டோ எடுத்து போடு
3:12 PM, March 15, 2011


என் மறுப்பு இங்கே..
---------------------------------


பயணமும் எண்ணங்களும் சொன்னது…

என் பேரில் போலி கமெண்ட் போட ஆரம்பித்துவிட்டார்கள் கவனமா இருங்க பதிவர்களே...

மேலே என் பேரில் போலிகள் கமெண்ட் போட்டுள்ளார்கள்..


அநாகரீகமாக நான் பேசுவதில்லை என்பது எல்லாருக்குமே தெரியும்..
4:08 PM, March 15, 2011
பயணமும் எண்ணங்களும் சொன்னது…

என்னுடைய புரொபைல் படம் இருக்குதா ன்னு பாருங்கள்..


வேறு என்ன வழி என தெரிந்தால் சொல்லுங்கள்.. நேர்மைக்கான விலை இதெல்லாம்..


4:08 PM, March 15, ௨0௧௧

அந்த பதிவர் புரிந்துகொண்டார்.. .

தனி காட்டு ராஜா சொன்னது…

//என் பேரில் போலி கமெண்ட் போட ஆரம்பித்துவிட்டார்கள் கவனமா இருங்க பதிவர்களே...
மேலே என் பேரில் போலிகள் கமெண்ட் போட்டுள்ளார்கள்..//

அப்படியா சேதி .....அது தானே பார்த்தேன் ....
நீங்கள் ஒரு முறை நான் கோபமாக பதிவு எழுதி இருந்தும் நாகரிகமாக பின்னுட்டம் இட்டு இருந்தீர்கள்.....


Any Way ..மேற்கண்ட பின்னுட்டம் உங்களுடையது இல்லை என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது....
எதோ ஒரு வலை யுலக முற்றிய மன நோயாளி யுடையது போல ....லீவ் இட்:))



Edit
6:07 பம்

என்னுடைய புரொஃபைல் எல்லாவற்றுக்கும் இந்த எண் வருகிறதா என கவனித்துக்கொள்ளுங்கள்..இனி என் பின்னூட்டம்

// எண்ணங்கள் 13189034291840215795 // என வரும்..

நட்புகள் கவனித்துக்கொள்ளுங்கள்..பின்னூட்டம் சந்தேகம் தருவதாக இருந்தால் மௌசை பெயரின் மீது நகர்த்தும் போது கீழே இந்த எண்களை காட்டும் ..அதைக் கொண்டு சரிபார்த்துக் கொள்ளலாம்.

இதே போல டோண்டு சார், ரோசா வசந்த் இன்னும் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிந்தேன் ..

பதிவுலகின் சாபக்கேடு.. :) . ஒற்றுமையாக களைவோம் இவர்களை..




.






..

Wednesday, March 9, 2011

உழைக்கும் வர்க்கத்தினரின் (பெண்கள் தின ) வாழ்த்துகள்






உலகத்தில் பெண்களின் உழைப்பு 66 சதவீதம் , ஆனால் அவர்கள் அடையும் பயன் 10% சதம் .

உலகின் மொத்த உணவு உற்பத்தியில் 50% பெண்ணின் பங்கு.. ஆனால் 1% நிலமே பெண்களுக்கு உரிமையாயிருக்கு..

உலக ஏழைகளில் 70% பெண்கள்.. மேலும் படிக்க
http://www.trust.org/trustlaw/womens-rights/womens-voices


??????.
பெண் விடுதலை பற்றி பலர் பேசணும் .. அப்படி ஒரு அவசர தேவை இங்கிருக்கு..




தாய்லாந்து மகளிர் பற்றிய கட்டுரை படிக்க ,










தாய்லாந்தின் புன்னகை அரசிகள்


சில கவிதை பெண் பற்றி .

----------------------------------

தும்மினால் தொண்ணூறும்
சிரிப்பானுக்கே சில நூறும்
மெளனத்துக்கு கூட மறுமொழியிட்டு
பதிவுக்கு பாராட்டுவிழாவே அரங்கேறுதென்றால்

அந்த நியாத்தின் வலிமை என்ன ?
ஆட்டுவிக்கும் வித்தை என்ன?.

மிரட்டலிட்டு கத்தி கதறி
மிஞ்சுகிறதாம் ஒப்பாரிவீடு
கூடி நின்று தொண்டை கிழித்தவர்கள்
ஆடி ஓய்ந்து அடங்கலாம் ஒருநாள்

தளராது முன்னேறுதாம் பெண்ணின் போராட்டம்
தந்த பரிகாசத்தையே பரிசாகக்கொண்டு..

கவிதை - 2

அஹிம்சை யை நாட்ட
ஆயுதமாய் எழுத்தை எடு
இகழ்வாரைக்கண்டால்
ஈயென :) இளித்துவிட்டுசெல்.
உதவாக்கரை பேச்சுக்கு
ஊக்கமளிக்காதே
எண்ணிய செயல்முடி
ஏசினாலும் பேசினாலும்
ஐயமா அப்டீனா என்னன்னு கேள்
ஒதுங்கினால் ஒடுக்கிடுவார்
ஓடட்டும் அவருன் கருத்தில்
ஒளடதம் என்பதிங்கு மாற்றம்
ஃதே படைத்திடு எழுத்தில்..

பெண் மொழிகள் : பெண்ணுக்கு மட்டும் .. ( மறைமுக மிரட்டலோடு சொல்லப்பட்டவை :) )
-----------------------------

அன்பா இரு ( அடி வாங்கு )
பண்பா இரு ( பகடி தாங்கு )
இரக்கப்படு ( இழிவை தாங்கு )
ஆறுதலாயிரு ( ஆசாபாசம் அடக்கு )
நாணப்படு ( நாட்டுநடப்பு அறியாதே )
வெட்கப்படு ( வெறுமை கொள் )
அச்சப்படு ( அடங்கிப்போ )
எனை நேசி ( எதிர்த்து பேசாதே )
கருத்தரி (கருத்துக்களை அறியாதே )
குத்துவிளக்கு ( எரிந்துகொண்டே இரு )


Some Quotes about women :
-----------------------------

Because I am a woman, I must make unusual efforts to succeed. If I fail, no one will say, "She doesn't have what it takes." They will say, "Women don't have what it takes."
~Clare Boothe Luce

I wish someone would have told me that, just because I'm a girl, I don't have to get married.
~Marlo Thomas


The thing women have yet to learn is nobody gives you power. You just take it.
~Roseanne Barr


Man endures pain as an undeserved punishment; woman accepts it as a natural heritage.
~Author Unknown


Men are taught to apologize for their weaknesses, women for their strengths.
~Lois Wyse




அனைவருக்கும் உழைக்கும் வர்க்கத்தினரின் ( பெண்கள் தின ) வாழ்த்துகள்..



படம் : நன்றி கூகுள்..



Saturday, March 5, 2011

ஈரோடு கதிர்மேல் காறி துப்பணுமாம். தண்டோராவுக்கு செருப்படி வேணுமாம்.











நான் பொதுவா யாரையும் குறிப்பிடாமல் கலையரசனின் இந்த கட்டுரையில் ( http://www.jaffnatoday.com/?p=6348



//எங்கேனாலும் பாதிப்புக்குள்ளாவது ஏழைகள்தான்.. வசதியுள்ள இணைய ஈழத்தமிழச்சிகள் சிலர் , கெட்ட வார்த்தை பேசிக்கொண்டும் , வம்புக்கு இழுத்துக்கொண்டும் , ஆபாசத்தை அங்கலாய்த்துக்கொண்டு நன்றாகத்தானிருக்கிறார்கள்..//



இப்படி செருப்பாலடிப்பேன், காறி துப்புவேன் , ஜாக்கிரதையா இருந்துக்கோ என பொதுவெளியில் மிரட்டல்..

கலகலப்ரியா வந்து அது தன்னைத்தான் குறிக்குது னு சொல்லி சண்டையும் இழுத்துசென்றார்.. ஏனெனில் சரமாறியாக கெட்ட வார்த்தை பேசுவார் பஸ் ல் ( உதாரணம் இப்படி பேசுவார் - Fucking cheap retards - Priya Siva ) ..

நான் யார் பெயரையும் குறிப்பிடாமலேயே வலிய வந்து வம்பிளுப்பதும் , கூட்டமாக சேர்ந்து கதறுவதும் பல நேரம் எனக்கு சிரிப்பைத்தான் வரவழைக்கும்.. :)

அதுக்கு இப்ப செருப்பால் அடிப்பேன் - தண்டோரா ( மணிஜி ), காறி துப்புவேன் என - ஈரோடு கதிர் சொல்லியிருக்காங்க..


இருப்பினும் நான் யாரையும் குறிக்காமல் என் பஸ் ல் கருத்து சொல்ல கூட எனக்கு உரிமை இல்லையா?.. ப்ரியா வந்து சண்டை இழுத்ததும் கதிர் ஜால்ரா அடிப்பார் என சொன்னதுக்கு காறி துப்புவேன் , ஜாக்கிரதையா இருந்துக்கோ என மிரட்டினால் பெண்கள் எழுதவே கூடாதா?..( கதிரின் அனாவசிய ஜால்ரா உலகம் அறிந்ததே.. தங்கச்சி நாய் கட்சுடுச்சு இழை பார்த்தவருக்கு புரியும் . இன்னும் பல )

இவர் வீட்டு பெண்ணா என்னை அதட்டி உருட்டி மிரட்ட..?


பொதுவெளியில் இப்படியான மிரட்டலுக்கு அஞ்சி , வெட்கப்பட்டுதானே பெண்கள் நியாயத்தை , கருத்துகளை எழுத வருவதில்லை..?..மற்றவர்களால் இப்படி தாங்கிக்கொள்ளமுடியாதே என்றுதான் நான் போராடுகிறேன் , யார் என்ன சொன்னாலும்..

நிதானமாகவேனும் இது போன்றவற்றை நாம் தடுத்திடணும்.. யாருமே பொதுவெளியில் மிரட்டப்பட அனுமதிக்கக்கூடாது.. கெட்ட வார்த்தைகள் பேசி , நல்ல கருத்து சொல்ல வரும் சாதாரண பெண்களை பயமுறுத்தி அவமானப்படுத்தி ஓடவிடக்கூடாது.. ஏன் ஆண்களையுமே.. பஸ் களில் கூட்டமாக சேர்ந்துகொண்டு இழிவுபடுத்துவது..

இவர்களைப்போல் தரம் குறைந்து பேச எனக்கு நொடிநேரமாகாது.. பதிலுக்கு பதில் காறி துப்பிக்கொண்டோ , செருப்பால் அடித்துக்கொண்டோ இருப்பதற்காகவா நாம் இங்கே வந்துள்ளோம்.. ஒருபோதும் வன்முறை வளர்ப்பதல்ல என் நோக்கம்..

இப்போதைக்கு கதிர் தன் மீது துப்ப அனுமதித்துள்ளார்.. தண்டோரா மணி செருப்படியும் வாங்கிக்கொள்ள அனுமதியளித்துள்ளார்.. அவ்வளவே..


இந்த எழுத்து வீரர்கள் அத்தனை துணிவிருந்தால் என்னிடம் நேரில் இதை சொல்லட்டும் ..:)..


கீழே தண்டோரா , கதிர் எழுதியது..

-----------------------------------------------------------------------------------------

தண்டோரா . - //எங்கேனாலும் பாதிப்புக்குள்ளாவது ஏழைகள்தான்.. வசதியுள்ள இணைய ஈழத்தமிழச்சிகள் சிலர் , கெட்ட வார்த்தை பேசிக்கொண்டும் , வம்புக்கு இழுத்துக்கொண்டும் , ஆபாசத்தை அங்கலாய்த்துக்கொண்டு நன்றாகத்தானிருக்கிறார்கள்..//

இவருக்கு பொறாமையோ..போறாமையோ..தெரியவில்லை..நிச்சயம் செருப்படி உண்டு.. சப்போர்ட்டுக்கு வர்றவனுக்கும் சேர்த்து..

தண்டோரா . - விலகி போலாம்னு பார்த்தாலும் மேலே விழுந்து பிராண்டுது..என்னை மட்டுமல்ல.. என்னை சார்ந்தவர்களை பிராண்டினாலும் செருப்பாலடிப்பேன்..எனக்கும் வார்த்தைகள் தெரியும்.

-------------------------------------------------------------------------


Kathir கதிர் - Buzz - Public - Muted
இது வரைக்கும் பிரச்சனைக்குப் போகல / பஞ்சாயத்து வைக்கல!


நான் என்ன மயிறுக்கு ஜால்ரா அடிக்கிறேனு அந்த சாந்தி சொன்னா சந்தோசப்படுவேன்....

அது சொல்லாம ஒளறினா…. காறி துப்புவேன்…:)))) சாந்தி ஜாக்கிரதையா இருந்துக்கோ!


-----------------------------

அப்ப இதுதானே அர்த்தம்.?.. " ஈரோடு கதிர்மேல் காறி துப்பணுமாம். தண்டோராவுக்கு செருப்படி வேணுமாம்."

வேணுமின்னா அடுத்த முறை ஈரோட்டில் யார் அதிகமா ஈரோட்டு கதிர் மேல் துப்புவதுன்னு போட்டி வைப்பாரோ?..


எல்லாரும் கேட்டாங்க " ஏங்க உங்ககிட்ட செருப்புக்கா பஞ்சம் ?. " னு..
தண்டோரா மணி யை அடிக்க என் செருப்பை பயன்படுத்தி என் செருப்பை அவமதித்துவிடக்கூடாதுதானே ?.. என்ன சொல்றீக?..நம் நோக்கம் அதுவல்ல.. அவருக்கு அடி வாங்க விருப்பம் என்றாலும்..


தரம் குறைந்தவருக்காக நாமும் தரம் குறைந்தா போவது?.. ஈரோட்டு கதிர் உன்ற குடும்பத்து பெண்களை சாக்கிரதையா இருக்க சொல்லிட்டீகளா அய்யா?..

பொதுவெளில மிரட்டல் விடும்போது கவனம்.. அது மிரட்டல் அல்ல.. அனுமதி உங்க வீட்டு பெண்களிடம் வம்பு செய்ய என நினைத்துக்கொள்ளுங்கள்..

எழுத இணையம் கிடைத்திருக்கு என துள்ளக்கூடாது.. சபை நாகரீகம் வரம்பு வேணும்.. எல்லாருக்கும் வம்பு செய்யவும் அன்பு செலுத்தவும் ஆள் இருக்கு இங்கே.. உங்க வீரத்தை இங்கே காண்பிக்கவேண்டாம்..



( இன்று என் அக்கவுண்டை முடக்கினார்கள்.. என் வீட்டு தொலைபேசிக்கு தொந்தரவு செய்கிறார்கள்.. ஆனால் எப்படியும் என் எண்ணத்தை மாற்ற முடியாது மட்டுமல்ல அதிக துணிவை வழங்குகின்றீர்கள்.. )




படம் : நன்றி கூகுள்..

தனிமனித தாக்குதல்


.

Wednesday, March 2, 2011

கள்ளன் பெரிசா காப்பான் பெரிசா?.:






சினிமாக்களில் அன்றிலிருந்து இன்றுவரை பெண்ணை வன்புணர்ச்சி செய்தாலோ , அவளை கள்ளத்தனமாக ஓட்டை வழியாக அவள் உடம்பை பார்த்துவிட்டால்லோ ஏனோ குடியே முழுகியதுபோல் வெட்கி , தலை குனிந்து , அவமானப்பட்டு ,விரக்தியடைந்து , மனநோய் வந்து ,பித்து பிடித்து , உண்ணாமல் உறங்காமல் , இறுதியில் பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை செய்வதாக காட்டுவது ஏன்.?..


அதற்கப்புரமே வீரம் வந்து பழிவாங்கி , எதிரியும் செத்து , தானும் செத்து சுண்ணாம்பு ஆவதுதான் கதை..


இது இன்று யுத்தம் செய் வரையிலுமே..


தன்னை ஒருவன் தவறாக பார்க்கிறான் என்றால் அந்த இடத்திலேயே அவனை எதிர்கொள்ள பழக்காமல் தடுப்பது எது?.


நம் ஊர்களில் , ஆறு , குளத்தில் குளித்து விட்டு அப்படியே அதே ஈரத்துணியோடு நடந்து செல்வார்கள் குடும்பப்பெண்கள்.. எத்தனை பேர் தப்பா பார்த்தார்கள்..அப்படி பார்த்தவர்களையும் , ஏதோ கெட்ட வார்த்தை போட்டு திட்டிவிட்டு சபித்துவிட்டு செல்வார்கள்.. எங்கே இருந்து வந்தது அந்த துணிவு..?..


பெண் உடம்புக்கு மட்டும் கற்பு என்ற ஒரு அபத்தமான விலை வைத்ததன் விளைவா இது.?


சட்டத்தை நம் கையில் எடுக்க வேண்டியதுதான் சில நேரம்.. ஆனால் எல்லாமே காத்திருந்து வன்முறையாகவும் கொலையாகவும் இருக்கவேண்டியதில்லை..


நிர்வாணப்படுத்திவிட்டான் என்றதும் தற்கொலை செய்யவேண்டியதுமில்லை என்று சொல்லி வளருங்கள் குழந்தைகளை.. என்னடா செய்த, ஏன் பார்த்த, என தெருவுக்கு இழுத்து வந்து தர்ம அடி வாங்கித்தர பழகுங்கள்.. சமூகம் என்ன சொல்லுமோ , பெண் பிள்ளைக்கு வரன் அமையாதே என்ற முட்டாள்தனமான கவலையை ஒதுக்கினால் மட்டுமே நம் சமூகம் முன்னேறும்.. இப்படி தினமும் ஒரு பெண்ணாவது நிமிர்ந்து நின்றாள் என்ற செய்தி வந்தால் தன்னாலேயே மாற்றம் வரும்..




அதைவிட்டுவிட்டு , ரூமுக்குள் போய் குமுறி குமுறி அழுதுவிட்டு உடனே யாரையோ பழிவாங்குவதாய் நினைத்து செத்து தொலைய சொல்லி படம் எடுக்காதீர்கள்.. தயவுசெய்து அப்படியான கோழைப்படங்களை உங்க குழந்தைகளுக்கு காண்பிக்கவும் செய்யாதீர்கள்.. ,


என் வீட்டில் காமிரா வை னு சொன்னதையே ஆணாதிக்கவாதிகள் எப்படியெல்லாம் திரித்து பேசி தன் வக்கிர உணர்ச்சிகளுக்கு பசியாற்றினார்கள்.. இன்னும் அதை பேசி பேசி இன்பம் காண்கிறார்கள்..

ஆனால் இவர்கள் மறந்தது இவர்கள் வீட்டு பெண்ணையே இவர்கள் வன்புணர்கிறார்கள் என்பதுதான்...சந்தர்ப்பம் கிடைத்தால் இப்படியான வக்கிர புத்தியுடையவர்கள் அதையும் கண்டிப்பாக செய்வார்கள்..


சபலம் தட்டுவது போல உடை உடுத்தக்கூடாதுதான்.. ஆனால் நம்மூர் பெண்கள் ( நம் , அம்மா, நம் அத்தை , சித்தி , அண்ணி , அக்கா ) ஆற்றில் குளித்துவிட்டு உடம்பை ஒட்டிய ஆடையோடு அரைகுறையோடு எத்தனை துணிவோடு நடந்துவந்தார்கள்.. இன்றும் நடந்து வருகிறார்கள் என்பதை நினைவு கொள்வோம்.. கிராமத்து பெண்களுக்கு இருக்கும் துணிவுகூடவா நகரத்து பெண்களுக்கு இல்லை..?????


டெலிவரி பார்க்கும் ஆண் மருத்துவரை நம்பி திருமணமான பெண்களே உடலை தயங்காமல் சிகிச்சைக்கு ஒப்படைக்கும் காலமிது.. எனக்கு டெலிவரி இரண்டு முறை பார்த்ததும் ஆண் மருத்துவர்தான்..


ஒவ்வொருமுறையும் நாம் பாதுகாத்துக்கொண்டே இருந்தாலும் கள்ளன் நிப்பாட்ட போவதில்லை.. காப்பான் எப்பவும் கடைசியில்தான் வரமுடியும்.. அதனால் அப்பப்போ , அங்கங்கே எதிர்கொள்ள செய்யுங்கள்..


இவர்களை விட முக்கிய எதிரி, ஆபாத்தானவர்கள் நம்மை சுற்றியிருப்பவர்கள் சிலர்... அவர்களை சமாளிப்பதுதான் பெரிய விஷயம் பலருக்கு.. நாகரீகமற்று இது குறித்து வருத்தத்தோடு பேசுவது போல் நாடகமாடி தகவல் கறந்து பரப்பும் வேலை செய்பவர்கள்.. இப்படியானவர்களை மொத்தமாக வாழ்விலிருந்தே தவிர்த்திடணும்..


சம்பவம் குறித்து பேச வந்தாலே முகத்தில் அடித்தாற்போல் , "வேற பேசலாமா .?" என சொல்லிடுங்கள்.. எப்படியும் கெடுதல் எண்ணமுடையவர்கள் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்க போவதில்லை.. வம்பழத்து குதூகலிக்கும் கூட்டமாய் சேர்ந்து.. தூசியென பலரை அற்பர்கள் என துணிவோடு ஒதுக்கினால் மட்டுமே நல்லவர்களை நாம் காண முடியும்..நல்ல பக்குவமடைந்தவர் பலர் இருக்கின்றனர் . பயம் வேண்டியதேயில்லை..

நல்லவர்கள் பலர் அமைதியாக இருப்பதால் கெட்டவர்களின் ஆட்டம் பெரிதாக தெரிகிறது சமூகத்தில்.. அவர்களின் பெரும்பான்மை குறித்து எவ்வித அச்சமும் தேவையேயில்லை..

எல்லாரும் வாழத்தான் வாழ்க்கை இங்கே என்பதை புரிந்துகொண்டு சொல்லிக்கொடுங்கள்.. உதவிக்காக காத்திருப்பதைவிட , உதவ முன்வருவதை பழக்கிடுங்கள்.. எங்கே தப்பு நடந்தாலும் தட்டிக்கேட்க துணிவு தாருங்கள்..


அதற்கு பலனாக ஆபாச வார்த்தைகள் என நினைத்து , விபச்சாரி , ( இன்னும் பல கெட்ட வார்த்தைகள் தெரியவில்லை ) , என பல பட்டம் தருவார்கள்தான். அவற்றையெல்லாம் ஒரு புன்னகையோடு கடந்து சென்று அவ்வார்த்தைகளின் மதிப்பிழக்க செய்திடுங்கள்.. ஏனெனில் பாலியல் தொழிலாளியும் மனிதர்தான் என்று மனிதாபிமானத்தை பழக்காதவருக்கே , ஆணாதிக்கவாதிகளுக்கே அவை ஆபாசமாகத்தெரியும்..


*உடலிலல்ல கற்பு.. எண்ணங்களில் இருக்கு ." .. துணிவை கொடுப்போம் பெண்ணுக்கு..

( மகளிர் தினத்துக்கான பதிவு. )

( இன்றும் 8 வயது குழந்தை அனுசூயா கோவையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.. ஆழ்ந்த அனுதாபங்களும் , கண்டனங்களும்.. ஆபாச பதிவும் , எழுத்தும் செய்யும் வீரர்கள் ,ஊடகங்கள் , சினிமாக்கள் , சரோஜாதேவி புத்தகத்துக்கு வக்காலத்து வாங்குபவர்கள் , தொடர்ந்து நடத்துங்கள் உங்க சேவையை , உங்க வீட்டு கதவுகளை தட்டும் வரையிலும் .. இது ஒரு பக்கமிருக்க , ஆபாச பதிவர்களை பல ஆண் பதிவர்கள் துணிவாக எதிர்க்க முன்வந்திருப்பது மகிழ்வான விஷயம்.. வாழ்த்துகள்.. )


[ என் கணினியிலும், தொலைபேசியிலும், மிரட்டலும் , தொந்தரவும் வருகிறது.. பின்னூட்டங்களையும் மாற்றுகின்றனர்.. எனக்கு மரணத்தையே தந்தாலும் என் மனதின் எண்ணங்களை ஒருபோதும் மாற்ற முடியாது என்பதை புரிவீரா?..தொடரும் என் கருத்துகள்..நிலைபெற்றும் நிற்கும்.. சமூகத்தில் மாற்றம் கொண்டு வர முன்பைவிட அதிக துணிவை தருவதற்கு நன்றிகளும்.. எதிரிகள் யாரென்று தனியா சொல்லவேண்டியதில்லைதானே?..:)) ]



படம் : நன்றி கூகுள்..




.