Tuesday, November 6, 2007









தீபாவளி வெடிகள்!!!

=================
பென்சில் வெடியில் ஆரம்பித்து, சண்டையும் சரமாய் வெடித்துவிட்டது..

விருட்டென்று அலுவல் சென்றுவிட்டார் தடித்த வார்த்தையுடன்,

தனியே இவளும், அணுகுண்டாய் குமுறினாள், கடிதத்தில் திட்டிதீர்த்தாள்.

பேசவோ, அழவோ கூடாது இனி என வீராப்பு , வெறுப்புடன்,

உண்ணாமல் உறங்காமல் தரைசக்கரமாய் தன்னையே தண்டித்தாள்.


மாலைதிரும்பினார் வெடிக்காத புஸ்வானம் போல் காட்டிக்கொண்டு,

அழக்கூடாதுன்னு நினைக்கும்போதே வருது கண்ணீர் முட்டிக்கொண்டு,
பரிமார விடாது கைபற்றினார் முகம் பார்த்துக்கொண்டு.

ஒத்திகையனைத்தும் வீணாகுது மனம் இழக்கம்கொண்டு.


ஏறுவானேன் பின் இறங்குவானேன் ?.. என்னால் முடியாது

என முறைத்தாள் கடிந்துகொண்டு.

அதுதான் பெண்ணே உன் கவர்ச்சி , போற்றினான்

கண்களால் மன்னிப்பு கேட்டுக்கொண்டு...


கடிதத்தை வாசித்து உன் அன்னைக்கு இதை அனுப்பவா??

என விளையாடினான் சிரித்துக்கொண்டு...

ஐயோ வேண்டாம் ! தடுத்த இரும்புக் கரங்களை

பிடித்துக் கெஞ்சினாள் மன்றாடிக்கொண்டு!!


வரட்டு கவுரவம், வீராப்பு தோல்வியோடு ராக்கெட்டாய்

வெளியேறியது பயந்துகொண்டு...

ஜெயித்தது நானே என காதல் மத்தாப்பாய்

சிதறியது வெட்கிக்கொண்டு.!

No comments: