Monday, November 8, 2010

பூச்சிக்கடியும், கடவுளும் , சூப்பர்மேனும் - குழந்தையின் கும்மி.





























நேற்று ஆலயம் முடியும் தருவாயில், விளையாட செல்கிறேன் என சொல்லிவிட்டு சென்ற சின்னவர் சிறிது நேரத்தில் அழுகையை அடக்கிக்கொண்டு வந்தார்..

கையில் ஏதோ பூச்சி கடித்துள்ளது சருக்கு விளையாடும்போது.

சின்ன சிவப்பு வட்டமும் நடுவில் ஒரு சின்ன கரும்புள்ளியும்..

ஆனால் முள் ஏதும் இல்லை..

அந்த இடத்தை பார்த்துவிட்டு பூச்சியை தேடினால் ஒன்றுமில்லை..

உடனே வீடு வந்து மருந்து போட்டதும் மறந்துவிட்டார்..நாங்களும்..

ஞாயிறு என்பதால் கொஞ்சம் பக்கோடா செய்வதில் பிஸியானேன்..

சின்னவர் தூங்கி எழுந்ததும் வெடி போடணும் என சொல்ல அருகிலுள்ள காலி இடத்துக்கு சென்று மத்தாப்பு மட்டும் கொளுத்தி வந்தோம்..

அப்பவும் வலி இல்லை.. வாந்தி , தலை சுற்றல், உண்ண , குடிக்க மறுத்தல் ஏதுமில்லை....ஆக பயமின்றி இருந்தோம்..

இன்று காலை எழுந்து பார்த்தால் கைவிரல் மூன்று வீக்கம் பெருவிரலோடு சேர்த்து..சிவந்தும் காணப்பட்டது..

உடனே ஐஸ் பேக் போட்டோம்..

வலி பிராதானமாக இல்லையென்ப்தால் பள்ளிக்கும் தகவல் அனுப்பிவிட்டு அனுப்பி வைத்தோம்..

வந்ததுமே வீக்கம் வற்றியபாடில்லை.. உடனே மருத்துவரிடம் அழைத்து சென்றேன்..

போகும் வழியில் ஆரம்பித்தாரே பார்க்கலாம் , கடவுள் பற்றி கேள்விகளை..

நான் சும்மா இருக்க கூடாதா, நீ ஆலய நேரத்தில் விளையாடியதால் ஜீஸஸ் குட்டி தண்டனை கொடுத்திட்டார் போல னு விளையாட்டாய் சொல்ல ,

வந்தது வினை..

" அம்மா ஜீஸஸ், பாயா, கேர்ல் ஆ?.."

" கடவுளுக்கெல்லாம் பாய் கேர்ல் இல்லை "

" ஜீஸஸ் கு அம்மா அப்பா இருக்காங்களா?. '

" ஆமா. அம்மா பெயர் மேரி.. அப்பா ஜோசப் . மாட்டுக்கொட்டகையில் பிறந்தார்.."

" அவரையும் ஏஞ்சல்தான் கொண்டு வந்து தந்தாங்களா என்னை மாதிரி,.? அவர் எப்ப கடவுள் ஆனார்.? " ஏன்.?"

" அவர் மனிதனா பிறந்து வந்தார்.."

" எங்கிருந்து ?"

" பிதாவால் அனுப்பி வைக்கப்பட்டார்."

" பிதா எப்படி பிறந்தார்.. யார் வயற்றில்.?"

" அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. போதும் கேள்வி கேட்டது.. என்னை ஒழுங்கா கார் ஓட்ட விடும்மா.. உனக்கு இப்ப புரியாது சொன்னாலும்."

" இல்ல சொல்லுங்க எனக்கு புரியும்.. முதல் கடவுள் எப்படி பிறந்தார்...அவங்க அம்மா அப்பா எப்படி பிறந்தாங்க.."

" அது பற்றி நாம யோசிக்க நமக்கு மூளை வைக்கல.."

" இல்ல எனக்கு இருக்கு .. சொல்லுங்க.."



" அய்யோ கடவுளே.. காப்பாத்துமய்யா."

" அம்மா உச்சா வருது.."

அப்பாட.. தப்பிச்சேன்.. இனி பேச்சை மாத்திடலாம்.. என மணி பார்க்க சொன்னேன்.. 4.01 .

"4.10 க்கு மருத்துவமனைக்கு சென்றிடலாம்.. கொஞ்சம் பொருத்துக்கோ...."

அப்புரம் காரை நிப்பாட்டியதும் ஓடிய வேகத்தில் நல்லவேளை மறந்துட்டார்..

மருத்துவமனைக்கு செல்வதென்றால் குஷி.. அவருக்கு பிடித்தமான ஒரு திராட்சை ஜூஸ் இங்குதான் கிடைக்கும்.. ( புளிக்கும்.. அவருக்கு இனிப்பே பிடிக்காது ) .

வீக்கம் பார்த்து உடனே ஸ்பெஷலிஸ்ட் வர வைத்தார்கள்..

பயப்படும் சிம்டம்ஸ் இல்லையென்பதால் மருந்துகள் தந்தார்.

ஏகப்பட்ட மாத்திரை மருந்துகளை அள்ளிக்கொண்டு வந்தோம்.. ( ஆண்டிபயாடிக், இன்ஃப்ளமேஷனுக்கு, அலர்ஜிக்கு, காய்ச்சல்+வலிக்கு என . நான் எப்போதும் எல்லாம் கொடுப்பதில்லை... குழந்தை உடல்நலம் பொருத்து நிப்பாட்டுவேன் ..ஆண்டிபயாட்டிக் தவிர..)

வீடு வந்ததும் யு- டியூபில் சில பைபிள் கதைகளை போட்டுவிட்டேன் வீட்டுப்பாடம் செய்து முடித்ததும்..

இருந்தாலும் அந்த கேள்விகள் பெண்டிங் இருக்கு... எனக்கு அசைன்மெண்ட் ஆக..!!!!!!!!:(

இதற்கிடையில் அகதிக்குழந்தைகளுக்கு பாடம் எடுக்கும் வாய்ப்பொன்று வந்தது..( வாலண்டியர் பணிதான் )/ முடிந்தால் ஜனவரியில் வருவதாய் சொல்லியுள்ளேன்..

( முக்கியமா தமிழ் குழந்தைகள் )

குழந்தைகளோடு வேலை செய்வது மிக பிடித்தமான ஒன்று.. அவர்களின் கள்ளங்கபடமற்ற உலகமும் ,கேள்விகளும் , சிரிப்பும்..( ஆனா இப்படி எடக்கு மடக்கா கேள்வி கேட்டா என்ன செய்ய ?... )

முக்கியமா சொல்ல வந்த விஷயம் என்னன்னா ,

நாங்க சின்ன பிள்ளைகளா இருக்கும்போது ஓடி விளையாடாத இடமேயில்லை.. அப்பப்ப கட்டெறும்புகள் , தேனிக்கள், குழவிகள் என கடித்ததும் , கொட்டியதுமுண்டு..

ஒரு வீட்டில் மொசுக்கட்டான் பூச்சு வந்தால் அந்த தெரு முழுதும் பரவிடும்.. ( இன்றும் அலர்ஜி அதை நினைத்தாலே )

அதிகபட்சம் சுண்ணாம்பு தடவுவார்கள்..( சாவதற்குள் சரியாயிடும் என பாட்டிமார் கிண்டல் வேறு.. சுண்ணாம்புக்கு அவங்ககிட்டதான் போய் கெஞ்சணும் .:)) .)

ஆனால் ஒருமுறை ஒரு மரத்தில் கூடு கட்டியிருந்த குழவி ஒன்று 3 சிறுவர்களை கடித்ததில் ஒரு சிறுவன் மரணம் அடைந்துவிட்டான்..

அத்தனை விஷமாம்..

நாங்க காடு மேடெல்லாம் சுற்றிய போது கடிக்காத பூச்சு இப்ப மிக ஆரோக்கியமான இடமான ஆலயத்தில் குழந்தையை கடித்துள்ளது..

என்ன கடித்தது என்றும் தெரியவில்லை.. ( "அம்மா சூப்பர்மேன் கிட்ட சொன்னா கண்டுபிடிச்சுருவானா ?.." -" நான் சூப்பர்மேன் ஆகணும்னா என்ன செய்யணும்.?, என்ன படிக்கணும்...?" அந்த நேரமும் இந்த கேள்விதான் குழந்தைக்கு.. )


எல்லார் கிட்டேயும் , " என்னை பம்பிள் பீ ( Bumble bee ) கடிச்சிருச்சு னு சொல்லிட்டார்..

மருத்துவர் என்னிடம் பேசும்போது , நான் எனக்கு சரியா தெரியலனு சொன்னா, இவர் , " என்னை பம்பிள் பீ தான் கடிச்சிருச்சு " னு சொல்றார்..

" நீ பார்த்தியா?.எப்படி இருந்தது னு அவர் கதை கேட்கும் ஆர்வத்தில் கேட்க ,

" ப்ளூ கலர்ல இருந்தது...டூ விங்க்ஸ்...அப்புரம்..., அம்மா 'ப்ளூ கலருக்கு' தாய் பாஷை ல என்ன ?.."

" ஏய் குட்டி கத வுடாத..கதை இரவு வெச்சுக்கலாம் " னு சொல்லி கதையை முடித்தேன் ஒரு வழியா..

இதுபோன்ற சில விபத்துகளை தவிர்க்க முடியாதென்றாலும் , முதலுதவி தெரிந்துவைத்துக்கொள்ளணும்...

நான் பார்த்தவை இதோ உங்கள் பார்வைக்கும்...



Reactions that stay localized to the sight of the bite or sting are usually not serious.

More serious signs and symptoms of anaphylaxis, a type of life threatening reaction, can include trouble swallowing, throat and chest tightness, low blood pressure (hypotension), diaphoresis (sweating), dizziness, weakness, itching, hives, wheezing and difficulty breathing. These symptoms usually develop fairly quickly and usually within 30 minutes of being stung. You should seek immediate medical attention or activate your local emergency services if your child has these symptoms following an insect bite or sting.


http://pediatrics.about.com/cs/safetyfirstaid/a/dnt_lt_bugs_bte.htm

http://pediatrics.about.com/cs/safetyfirstaid/a/dnt_lt_bugs_bte_3.htm


What to Do About:

Bee and Wasp Stings

http://kidshealth.org/parent/firstaid_safe/emergencies/insect_bite.html


Should Your Child See a Doctor?
Insect Bites


http://www.seattlechildrens.org/medical-conditions/symptom-index/insect-bites/



------------------------------

படம் : நன்றி கூகுள்..