Tuesday, August 25, 2009

குழந்தையின் கும்மி.தொடர்ச்சி..













அம்மா
, அப்பா கூட ஒத்தையா ரெட்டையா மாதிரி கைக்குள் சின்ன குட்டி ரப்பர் பந்தை
ஒளித்து வைத்துக்கொண்டு விளையாடுவான்..

நாம கரீட்டா சொல்லணும் எந்த கைக்குள் பந்து இருக்குன்னு..
தப்பா சொல்லிட்டா ஒரே ஜாலிதான் போங்க...

இல்லையே னு சொல்லி இன்னொரு கையை திறப்பார்..
நம்ம ஆச்சர்யப்படணும், அதிசயப்படணும் , ணும்..ணும்...

ஆனா இதெல்லாம் அப்பாக்கு மட்டும் தான்..

என் முன்னால கையை நீட்டி காண்பிக்கும்போதே நான் , " பிங்கி பிங்கி பாங்கி..." சொல்ல ஆரம்பிப்பேன் ராகத்தோட..

சொல்லி முடித்தும் என்னால எளிதா முடிவெடுக்க முடியாம திணறுவேனாம்..பயத்தோட..


அந்த பிஞ்சு மனசு கேக்குமா.?.. அம்மா தோக்கலாமா..?


பந்து இருக்கும் கையை மட்டும் என் விரல் தொடும்படி வெகு அருகில் நீட்டுவார்..
நான் அதை சரியா தொடணும்.

தொட்டதும் ஒரே குஷி...
ஹே.. அம்மா சரியா சொல்லிட்டாங்க.. னு..

நான் வேணுமுன்னே தப்பா தொட்டாலோ , உடனே முகத்தை சோகமா வெச்சுக்கணும்.


அதுக்கு வருகிற ஆறுதல் இருக்கே...அப்பப்பா..
"

பரவால்ல மா.. நெக்ஸ்ட் டைம் நீங்கதான் வின்.."னு கன்னத்தை வருடி கேட்காமலே முத்தம் கொடுத்து..


இதுக்காகவே தோத்து போகலாம்தான்..



பார்த்துக்கொண்டிருக்கும் அப்பாவோ , " நான் தோற்றபோது எனக்கு மட்டும் முத்தம் தரல நீ.?"

" பாவம் அம்மா.. அவங்க கேர்ல்.. கேர்ல்ஸ் ஆர் ஸாப்ட்.." னு சொல்லி தப்பிச்சுடுவார்..


இத்தனைக்கும் அந்த பந்து விரல்களுக்கிடையில், என்னைப்பார் என் அழகைப்பார் னு பளீச் கலரில் மின்னிக்கொண்டிருக்கும்...என்பதை நான் சொல்லித்தான் தெரியணுமா?..

அடுத்து தட்டாமாலை சுற்றணும் ..அலுவல் விட்டு வீடு நுழைந்ததும்..
ஒருவாட்டி சுற்றி முடிந்ததுமே , யார் யார் எங்க இருக்கா னு தெரியாது..வீடே சுற்றிக்கொண்டிருக்கும்..

ஆனா சின்னவர் அலட்டிக்கொள்ளாமல், இன்னொருவாட்டி ன்னு சொல்லி சொல்லி 10 முறையாவது சுற்ற வெச்சுட்டு , " வேண்டாம் தலை சுற்றும் " னு சொன்னா , " இல்ல பரவால்ல , ஒண்ணும் செய்யலை" னு சொன்னா என்ன செய்ய..

தலை அவருக்கா சுற்றும் நமக்குல்லா சுற்றும்...அத பத்தி அவருக்கு என்ன கவலை .. அதானே?..

---------------------------------------------


ஷாப்பிங் சென்ற போது ஒவ்வொரு ரேக் இடையில் சென்று அடிக்கடி காணாமல் போவான்..


ஆனா நம்ம கிட்ட வந்து ,
" ஏன் டேனியை காணாம போட்டீங்க..?" னு அதட்டல்..

" காணாம போடுறதுக்கு நீ என்ன சாமானா?.. எங்க காணாம போய்டீங்க னு சொல்லணும் . சரியா.?"


----------------------------------------------


" அப்பா உன்னை பேர் சொல்லிதானே கூப்பிடுறாங்க..?"
" ஆமா." நான்.. "
அப்ப நீங்க ஏன் அப்பாவை பேர் சொல்லி கூப்பிடல.?"


" அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.." நல்ல கேள்வி...
---------------------------------------------

காரில் சென்ற போது ஒரு பூனை அடிபட்டு குற்றுயிராய் கிடந்தது...
நான் பார்த்துவிட்டு சட்டென்று அடுத்த லேனுக்கு மாறினேன்
அலறி..பின்னால் வந்த கார் முழுதுமாய் ஏறி சென்றது..

அதை முன்சீட்டில் உட்கார்ந்து பார்த்தவனுக்கு தாங்க முடியாத கோபமும் சோகமும்..
எத்தனையோ பேச்சு கொடுத்து மாற்ற பார்த்தாலும் முடியவில்லை.

" ஏன் அந்த பூனை அடிபட்டது?.."


" அது ஒடி விளையாடும்போது ரோட்டுக்கு வந்தது..தெரியாமல்."


" அந்த கார் ஓட்டின ஆள் லூஸா..?"

" அப்படியெல்லாம் பேசக்கூடாது மா. அது ஏன் குறுக்கே வந்தது..?"

" அவர் பிரேக் போடலாமே..?"
"ம்.."

" ஏன் செத்தது..?.. இப்ப என்னாகும் செத்ததும்..? "


" பரவால்ல அது செத்ததும் ஜீஸஸ் கிட்ட போயிருக்கும்...அவர் பாத்துப்பார் இனி.."

" எனக்கு ஒரு செத்த புஸி கேட் வாங்கித்தாங்க.."
" அட .. அதெப்படி..." கொஞ்ச நேர யோசனைக்குப்பின் ,

" ம்.சரி அலுவலில் சொல்லி வைக்கிறேன் .. வந்ததும் வாங்கித்தருகிறேன்.." இப்ப தினமும் கேட்கும் கேள்வி

" செத்த புஸி கேட் எப்ப வரும்..?"

"அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.."

*********************************தொடரும்*******************************************

மீன் பிடித்தலும் பிள்ளை வளர்ப்பும்..- பாகம் 2

மீன் பிடித்தலும் பிள்ளை வளர்ப்பும்..- பாகம் 2


ஒருவழியாக அந்த நண்பர் முன்னால் பைக்கில் செல்ல நாங்கள் பின்தொடர்ந்தோம்..

பின்தொடர்வது எம்புட்டு ரிஸ்க் அதுவும் ஹைவேயில்.?

அவர் பாட்டுக்கு சிக்னல் கிராஸ் பண்ணிவிட்டால் அவரை தேடோ தேடுன்னு ஆளாளுக்கு

ஒட்டகச்சிவிங்கி போல கழுத்தை நீட்டி " அதோ அவர்தான் நீல சட்டை.."

" இல்லை இங்கே போறார் " னு கன்னா பின்னான்னு லேன் மாறி மன்னிப்பு கேட்டு அசடு வழிந்து

ஒருவழியா போனால் நாங்க ஏற்கனவே சென்றுள்ள ஒரு பெரிய விளையாட்டு மால் பக்கம்..

இத மொதல்லே சொல்லிருக்கப்டாதா?.. இங்க சந்திச்சுருக்கலாமே..

அத தாண்டி இப்ப சிட்டிக்கு வெளியே சென்றார் சுமார் 10 கிமீ..

அட இதுதான் நான் ஓட்டுனர் உரிமம் வாங்கிய இடம் .. இதுவும் எனக்கு தெரியுமே...ப்ச்ச்...

அப்புரம் சின்ன சின்ன சந்துக்குள் புகுந்து ஒரு கடை முன் நிப்பாட்டினார்.. மீனுக்கான உணவு வாங்க...

ஒருவழியாக அந்த மீன் பிடிக்கும் இடம் அடைந்தோம்...

ஆங்காங்கே உப்பளம் போல தண்ணீர் தேக்கி வைத்து மீன் வளர்க்கிறார்கள் .. பெரிய பாத்தி கட்டி, தென்னை மர நிழலில் குடில் ( குடிசை )

போட்டுள்ளார்கள்.. அங்கே குடும்பம் குடும்பமாய் வந்து அமர்ந்து மீன் பிடிக்கின்றார்கள்..பெரிய பெரிய கார்களில் வந்து..

பார்த்ததும் ஆச்சர்யம்.. கார் பார்க் செய்ய இடமில்லாத அளவுக்கு கார்கள்... அட இப்படி கூட பொழுது போக்குவார்களா என்ன?..

ஒவ்வொரு தோட்டத்திலும் ஸ்பீக்கர் வைத்து மென்மையான இசையோடு பாடல்கள் வேறு..

தென்னை தோப்பில் அடிக்கும் காற்றுக்கு படுத்தால் தூக்கம் வந்துடும் .. அவ்வளவு சுகம்..( ஐயா கொஞ்சம் படுக்கலாம் னு பார்த்தாரே.. விடல்லையே..)

வரப்போரம் பல பூச்செடிகள், கத்திரி , மிளகாய் கீரை என பாத்தி போட்டிருந்தார்கள் வேறு..

முதலில் நுழையும்போது இவர் கடிந்து கொண்டார்தான்.. ஏன் இப்படிப்பட்ட இடங்களுக்கு வரணுமா என..

நாம் வளராத சூழ்நிலையா...?வாய்க்கால், வரப்பு என...

அதுக்கில்லை , இவர்களுக்கு புதிதாக பழகும்போது ஒத்துக்கொள்ளாதே என்ற கவலை.. ( சொன்னதுபோல்

வீடு வந்தததுமே தொடர்ந்து இருவருக்கும் வயற்று வலி..மருத்துவமனை, வாந்தி..இத்யாதி.)

தன்னுடைய உபகரணங்களை எடுத்து வைத்து அவர்கள் இருவரும் ஒரு குடிலில் செட்டில் ஆனார்கள்..

நாங்களும் அமர்ந்தோம்.. ஒரு நடை போய்விட்டு வந்து..

ஆனா எல்லோரும் ( சுமார் 50 பேர் ) பொறுமையா ஏதும் பேசாமல் மீன் பிடிப்பதை

பார்த்தால் எனக்கு சிரிப்பாய் வருது.. என்னாலையும் டேனியாலும் இப்படி சும்மா உட்காரெல்லாம் முடியாதே..

பெரியவன் புரிந்துகொண்டான்.. " அம்மா நீங்க அந்த மால் க்கு தம்பியை கூட்டி சென்று விளையாட வையுங்கள்..

சாயங்காலமா வந்து என்னை கூட்டி செல்லுங்கள் என்று..

எங்களுக்கு பயம். அவனை தனியே அந்த ஆளோடு விட்டு செல்ல..

நல்ல அன்பானவராய் தான் தெரியுது.. பொதுவாகவே தாய் மக்கள் குழந்தைகளை

மிக நேசிப்பவர்கள்.. இருப்பினும் நாமும் கவனமாய் இருக்கணுமே..

தொலைபேசியை கொடுத்துவிட்டு பாதி மனதாக வெளி வந்தோம்..அடிக்கடி தொலைபேசச்சொல்லி..

அங்கேயே உணவு விடுதியும் இருக்கு..அதனால் உணவு பிரச்னையில்லை..

கிளம்பி வரும்போது அவர் சொன்னார் அருகில் ஒரு குரங்கு தோப்பு இருப்பதாக..

அதை பார்த்துவிட்டு செல்ல கிளம்பினோம்..

அப்பதான் முருங்கை மரம் ரோட்டோரமாய் கண்ணில் பட்டது...

மின்னலைக்கண்ட பிரகாசம்.. அடடா.. எத்தனை நாளாச்சு முருங்கை கீரை சாப்பிட்டு...

ஆனா இது யாருக்கு சொந்தம்..? ஆள் அரவமே இல்லையே.. ரோட்டில் இருக்கு.

பறிக்கலாமா கூடாதா என பல கேள்விகள்.. ஆனா கண்டிப்பா பறிக்கணும்னு மனம் சொல்லுது..

இங்கு முருங்கை கீரை சாப்பிட மாட்டார்கள்.. மார்க்கெட்டிலும் கிடைக்காது...

எனக்கோ எங்க வீட்டு மரம் நியாபகத்துக்கு வந்துவிட்டது.. அதுவும் அம்மா கை பக்குவ சமையல் வாசனையும்..

விட முடியுமா?.. வண்டியை ஓரமாக நிப்பாட்டி அக்காம் பக்கம் பார்த்தா ஒருவரையும் காணோம்..

சரி அப்படியே வந்தாலும் பணம் தரலாம் என முடிவோடு பறிக்க சொன்னேன்..

ஒரு ஐஸ் வண்டி வந்தது அவனிடம் கேட்டோம்.. பரிச்சுக்கோங்க என்றான்..

( அதனால அவன்கிட்ட நன்றியோடு ஐஸ் வாங்க வேண்டியதா போச்சு பாருங்க..)

அவரோ ஒரு சின்ன கொப்பை பறித்துவிட்டு சட்டென்று காரி ஏறி உட்கார.,

" அட இம்புட்டுதானா ?"

" பத்தாதா?. நீ உனக்கு மட்டும் கேட்கிறாய இல்லை உன் தோழிகளுக்குமா..?"

" அதெல்லாம் உங்களுக்கெதுக்கு..? கூட கொஞ்சம் பறிச்சா என்னவாம்..?"

" ம். என்னை மாட்டிவிடாம இருக்க மாட்ட.. " னு சொன்னாலும், ஏதோ வைர நகையே வாங்கி தருவது போல்

ரொம்ப பெருமையா பறிச்சுட்டார்..கொஞ்சம் அகத்து கீரையும் கிடைத்தது..

முருங்கை காயெல்லாம் முற்றி போய் இருக்க பரிதாபமாக பார்த்தேன்..

பேருக்கு 4 காய் மட்டும் கிடைத்தது..:(

அதை முடித்து குரங்கு பார்க்க சென்றோம்..அதோடு விளையாடிவிட்டு

மால் போய் குழந்தையை விளையாட விட்டு, உணவருந்திவிட்டு .. ( இப்ப தூக்கம் வருது..)

இதுல இடையில் அரைமணிக்கொருமுறை ரன்னிங் கமெண்ட்ரியாய் மீன் வந்துச்சா, னு விசாரிப்பு வேற..

சரியாக மணி 4 க்கு திரும்பி வந்தோம்..அவர்களுக்கும் உணவு வாங்கிக்கொண்டு.

மகன் மகிழ்ச்சியா சொன்னார் " அம்மா 3 மீன் பிடிச்சேன்" னு..


( யார் அதிகமா மீன் பிடிக்காங்காளோ அவர்களுக்கு பரிசும் உண்டாம்.. )

அப்பாடா வந்த வேலை நல்லபடியா முடிந்ததே..

இல்லாவிட்டால் அடுத்த நாட்டில் மீன் கிடைக்கும் அங்கே போகலாம்னு ஒரு புது பிளான் போடாமல் இருந்தானே..

மீனையும் அழகாக ஒரு பையில் நீரோடு போட்டு தந்தார்கள்..

கொடுத்த காசுக்கு ஏதோ..

அவன் மகிழ்ச்சியா அதை உள்ளே வைக்க போனான்..

நான் கத்தினேன்.." அதையேன் கொண்டு வார..? அத அவர்கிட்டயே கொடுத்திடு." னு

அவனுக்கு அதிர்ச்சி..

அட அது என்ன நீரோ அதெல்லாம் வேண்டாம்னு விளக்கம் அளித்ததும் ஏற்றான்.

ஆனாலும் கொஞ்சம் வருத்தம் அவனுக்கு..

திரும்ப வரும்போதும் முருங்கை கண்ணில் பட்டதே.. பக்கத்து வீட்டு

தோழிக்கு" என வாய் எடுப்பதற்குள் மகன் அட்வைஸ் ஆரம்பித்துவிட்டான்..

" அம்மா தப்பு " என..

ஆசையை அடக்கிக்கொண்டு , சோகமா ஒரு பார்வை மட்டும் பார்த்துவிட்டு

திரும்பினோம்..


அடுத்த 2 நாள் அகத்து கீரை சமையல்..முருங்கைக்காய் சாம்பாரோடு.

ஆனா முருங்கை கீரை வரவே இல்லை.. 4 வது நாள் கேட்டால்,

" பாபி அந்த கீரை வாடி விட்டது தூக்கி போட்டேன் " னு வேலையாள் குண்டை போட்டா பாருங்க..

அதிர்ச்சியில் என் முகத்தை பார்த்தவர்,

" சரி விடு நான் அலுவலில் இருந்து வரும்போது ஒரு இடத்தில் பார்த்தேன் எப்படியாவது கேட்டு வாங்கி வருகிறேன்"

என
.

தோழிக்கு போன் பேசினால் ,

" கவலை படாதீங்க நான் ஒரு ரகசிய இடம் பார்த்து வெச்சுருக்கேன் .
உங்களை கூட்டி செல்கிறேன் . ஆனா யார்கிட்டயும் சொல்லிடாதீங்க " என

முருங்கைக்கு வந்த மவுசைப்பார்த்தீங்களா.?

எப்படியோ ஒரு வழியா மீன் பிடிக்க கத்துகிட்டான்...

இனி படிக்காட்டி எனக்கு திட்ட ஒரு வாக்கியம் கிடைச்சாச்சு..

மாடு மேய்க்க போக சொல்லாட்டியும் , நீ மீன் பிடிக்க தான் லாயக்குன்னு திட்டலாம் பாருங்க..


ஆனா ஒரு நாள் முழுதும் பொறுமையாய் தவம் போல மீன் பிடிப்பதை பார்ப்பதே ஆச்சர்யமாய் தான் இருக்கு.. நானெல்லாம்.. ம்ஹூம் .விடு ஜூட்...

மீன் பிடித்தலும் பிள்ளை வளர்ப்பும். 1


நகர்ப்புற வாழ்க்கையில் எவ்வளவு இழக்கிறோம் என்பது கிராமப்புரத்தில் வாழ்ந்தவர்களுக்கே புரியும்..

விசாலமான தெருக்கள் , அருகிலேயே வாய்க்கால் , அதைத்தாண்டி வயல்வெளி , தோப்புகள் , என இயற்கையோடு குளிர்ச்சியாய் ஒன்றி வாழ்ந்தவருக்கு செயற்கையாய் கான்கிரீட் காடுகளின் வெப்பத்தில் , குழந்தை வளர்ப்பென்பது ஒரு சவாலாகவே இருந்து வருகின்றது..

இங்கு வீட்டை ஒட்டியே பிரமாண்டமான சவ் பிரயா ( Chao-phraya )ஆறு அமைதியாக கப்பல்களையும் சுமந்து கொண்டு அசடுகள் ஏதுமின்றி ரம்மியமாக
பாய்ந்தோடுவதை பார்ப்பதே மிகச்சிறந்த பொழுதுபோக்கு..

எனக்கு
இரவு வந்தால் அதன் மீது பட்டுத்தெறிக்கும் விளக்கொளிகள் , நிலவு ஒரு சங்கீதம்..

பார்க்கும்போதே அதில் குதித்து நீந்தி அக்கறை சென்றிடமாட்டோமா என ஆவல் பிறக்கும்.


குட்டி குட்டி விசைப்படகுகள் மட்டுமே சீறிக்கொண்டு செல்வதும் , சில பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்லும் கொஞ்சம் பெரிய படகுகளும்
கப்பலில் வந்து சரக்குகள் இறக்கி வைக்கும் குடோன்களும் , ஆற்றின் அக்கறையில் இருந்து பாடலோடு எமை எழுப்பும் புத்த கோவில்களும் ஏதோ கனவு போல் தோன்றுவதோடு இக்காட்சியை பார்க்கும் ஒவ்வோரு பொழுதும் மறக்காது நன்றி செலுத்த தோணும் படைத்தவனுக்கு.

சரி ஏன் இவ்வளவு பில்டப் என கேட்டால் , ?
இப்படி ஒரு ஆறு பக்கம் இருக்கும்போது யாருக்குத்தான் மீன் பிடிக்க ஆசை வராது..?

வரக்கூடாதே என நான் தவித்திருந்த வேளையில் வந்துவிட்டது அந்த மீன்பிடிக்கும் கம்புகள் கடையில் மகன் கண்ணில் பட்டதுமே..


தொடர்ந்து 2 வாரம் தொணதொணப்புகள், கெஞ்சல்கள், கொஞ்சல்கள், மிரட்டல்கள், பேசாவிரதங்கள்... அப்பப்பா..
கணவர் பதில் எப்போதும் ரெடியாக "நோ" :)) ஒருவழியாக வாங்கியாகிவிட்டது..

வீடு வந்து பார்த்ததும் தான் அதன் கைப்பிடி உடைந்து போயிருப்பது தெரிந்தது..( அப்பாகிட்ட சொல்லலையே..)
சரி என தாமே வேறொரு கடைக்கு சென்று தனியே வாங்கி வருவதாக சொன்னார் மகன்..

எங்குமே தனியாக ( பள்ளி தவிர ) செல்லத்துணியாதவன் மீன் பிடிக்க என்றதும் தனியாக பஸ் ஏறி செல்வதென்றால்..?.

பயத்தோடு அனுப்பி வைத்தேன் .மகிழ்வோடு வாங்கியும் வந்தாச்சு...
சாயங்காலமாய் அருகில் உள்ள கறைக்கு சென்று மீன்பிடிப்பவரோடு இவனும் உட்கார்ந்துகொண்டான்..

முதலில் அப்பாவை மட்டும் அழைத்து சென்றான்.. 3 மணி நேரம் செலவிட்டும் ஒரு மீனும் மாட்டவில்லை.

ஆனால் அதற்குள் அங்குள்ளவர்களோடு நட்பாகி பல விஷயம் தெரிந்துகொண்டானாம்.. ( பின்ன , முள்ளில் புழுவை மாட்ட ஆள் வேண்டாமா?.. அதை தொடமாட்டாராம்..:).

அப்பா தான் செய்யணும் )


இப்படியே அடுத்த 3 நாளும் சென்றும் பொறுமையாக நாள் முடுதும் அமர்ந்தும் மீன் கிடைத்தபாடில்லை..


நாங்களும் ஒரு நாள் இரவு நிலா வெளிச்சத்தில் க்உடும்பத்தோடு சென்றோம்.. ம்ஹூம். எல்லோருக்கும் கிடைக்குது ஒன்றோ இரண்டோ ஆனால் இவனுக்கு மட்டும் கிட்டவில்லை..

அதற்குள் அங்குள்ள ஒருவர் இவன் மேல் பரிதாபம் கொண்டு நகர் விட்டு வெளியே ஓரிடத்தில்
மீன் பிடிக்க என்றே பொழுதுபோக்க பல இடங்கள் கடற்கரையை ஒட்டி இருப்பதாகவும் தானே அழைத்து செல்வதாகவும் சொல்ல அடுத்த கெஞ்சல் ஆரம்பமானது..

பள்ளி விடுமுறை தானே என நான் கொஞ்சம் விட்டுக்கொடுத்தாலும் மொத்தமாக இப்படி ஈடுபடுவது ஏற்கமுடியவில்லைதான்.
அதற்குள் கூகிளில் தேடி தாய்லாந்தில் மீன் பிடிக்கும் இடங்களையும் வித்தைகளையும் கற்றதுதான் மிச்சம்.

வீட்டுக்குள் நுழைந்ததுமே பேச்சு மீன் பற்றியதாகத்தான் இருக்கும்.
( அடேய் நெல்லைக்கு போகும்போது மாமா , மச்சான்ஸ் கிட்ட சொல்லப்டாதா ஜாலியா செய்வாங்களே, என்னை ஏண்டாப்பா படுத்துற..? )

என் வாயில் இருந்து சரி என சம்மதம் சொல்லும்வரை என்னை ஒரு வேலை செய்யவிடாமல் பின் தொடர்கிறான்.எல்லா அறைக்கும். இதுக்கு தம்பியையும் துணைக்கு அழைத்துக்கொண்டு.. ( அம்மா , சிங்கு பாவம் மா , பிளீஸ் மா- தம்பியார்.)

ஒருவழியா கடந்த ஞாயிறன்று சர்ச்சுக்கு கூட போகாமல் அந்த நண்பர் வழிகாட்ட நாங்கள் பின்தொடர்ந்தோம் அவரை , மீன் பிடிக்கும் இடத்துக்கு..

-------------------தொடரும்..--
--------------------------------------------------------

ஒதுக்கப்பட்ட கல் - பாகம் 15முற்றும்

ஒதுக்கப்பட்ட கல் - பாகம் 15.


மாடிப்படியேறி சென்ற மலரை உள்ளே வர விடாமல் கதவை தாளிட்டுக்கொண்டான் ராஜ்.

" ராஜ் இதென்ன பிடிவாதம் சின்ன குழந்தைபோல்.? எவ்வளவு பெரிய கம்பெனி நிர்வாகி நீங்கள்.?"

" ஆமா . எல்லாம் எதுக்காக மலர்..?.. இந்த பணம் , பதவி எல்லாம் எதுக்காக..?.. என் சொந்த வாழ்க்கையில் நான் தோற்றுவிட்டேனே..நீ என் அன்பை புரிஞ்சுக்கிற மாதிரி நான் நடந்துக்கலையே?."

" அய்யோ இல்லை ராஜ்..உங்க மேல எந்த தப்புமில்ல.. என்னோட எண்ணமே வேறு.. சரி. இப்ப கதவை திறங்க முதலில்.."

அவள் மீண்டும் மீண்டும் வற்புறுத்தியதால் கதவை திறந்தான்..

இருவரும் மெளனமாக இருந்தனர்..சிறிது நேரம்...

" என்னை தயவுசெய்து கட்டாயப்படுத்தாதீங்க , செத்துருவேன்னு மிரட்டாதீங்க.. நாம நிதானமா பேச வேண்டிய விஷயம் இது ..ஒத்திபோடலாம்.. சரி இப்ப வாங்க கீழே போகலாம்.."

" அப்ப என்னையும் கட்டாயப்படுத்தவோ என் சாவை தடுக்கவோ வேண்டாம்.. அந்த உரிமையும் யாருக்குமில்லை.." எங்கோ பார்த்துக்கொண்டே கூறினான் விரக்தியாக...

சிரிப்பும் எரிச்சலும் ஒரே நேரத்தில் மலருக்கு..

" எப்படி புரிய வைக்க இவர்களுக்கு.. நான் தோற்கத்தான் செய்யணும் போல.." என எண்ணினாள்..

மீண்டும் நீண்ட மெளனம் நிலவியது..

------------------------------
-----------------------------------

2 ஆண்டுகள் கழித்து...

மாடியில் ஒரு குழந்தையுடன் ராஜும், கீழே அண்ணியார் ஒரு குழந்தையுடனும் இருக்க , வாசலில் கார் வந்து நிற்கிறது.

" வாங்க வாங்க... மலர் இதோ ரெடி ஆயிட்டா.. ஒரு 10 நிமிஷம்..உள்ளே வாங்க.."

" இரட்டைக்குழந்தைக்கு அம்மா அவள்.. எனக்கு புரியாதா அவளின் வேலைகள்,..? சரி ஐயா எப்படி இருக்கிறார்..?" நளினா..

" நீங்களே போய் பாருங்களேன் ..மாடியில்.."

கையில் குழந்தையையும் வாங்கிக் கொஞ்சிக்கொண்டே படியேறினாள்...

கோப்புகளுடன் அமர்ந்திருந்தவர் , இவள் வருகையை பார்த்ததும் எழுந்தார்..

கண்களோடு பேசிக்கொண்டே நலம் விசாரித்தனர் இருவரும் .

அதிக காதலில் , பாசத்தில் ஏதும் பேச விரும்பாமல் கொஞ்ச நேரம் மெளனமே நிலவியது..

காற்றில் பரவிய காந்த அலைகளிலேயே எண்ணங்களின் வாயிலாக இருவர் மனமும் பேசிக்கொண்டது..

" அப்ப நான் கிளம்பவா.." மனமேயில்லாமல்..

" ம்.இனி அடுத்து எப்ப..?"

" நீங்க கொஞ்சம் வெளியேயும் வரணும் .. இப்படி அடைஞ்சு கிடைக்காமல்.. மகன் ராகவ் பெரிய கம்பெனி ஆரம்பித்துள்ளான்.. அவனுக்கு உங்க அறிவுறைகள் , ஆசிகள் தரணும்.."

" எப்பவும் உண்டு.. அவன் திருமணத்துக்கு வருவேன் கட்டாயம்.. அதான் என் குடும்பத்தையே உங்கள் இருவர் வசமும் ஒப்படைத்துள்ளேனே.... நீயும் மலரும் இந்த குடும்பத்தை மட்டுமல்ல, நம் சமுதாயத்தையும் செழிக்க வைப்பது குறித்து மட்டில்லா மகிழ்ச்சி எனக்கு..." சொல்லிவிட்டு குழந்தையை வாங்கி முத்தம் ஒன்றை கொடுத்து மகிழ்ந்தார்..

" நீங்க போட்ட கோடு எல்லாம்.. நாங்க உங்க வேலையாட்கள் அவ்வளவுதான்.." என்றாள் நளினா தன்னடக்கத்தோடு..

" நான் உள்ளே வரலாமா..?" கேட்டாள் மலர்..

மலர் நுழைந்ததுமே அமைதியாய் இருந்த இடம் கலகலப்பாய் ஆனது..

" உனக்கெதுக்கம்மா அனுமதியெல்லாம்..உன் அனுமதிக்காக இந்த நாடே காத்திருக்கையில்..பத்திரிக்கை துறையே பயம் கொள்ளுது உன் பேர் சொன்னால்.." சிரித்தார்..

" எல்லாம் உங்க ஆசீர்வாதம் அண்ணா.." என அவரின் பாதம் தொட்டு வணங்கினாள்..குழந்தையையும் வாங்கிக்கொண்டு.


பின் இருவருமாய் குழந்தையை கொடுத்துவிட்டு காரில் கிளம்பி சென்றனர் சமூக சேவை செய்ய..

குடும்பமே வந்து வழியனுப்பியது மகிழ்வோடு.

விதியின் வசத்தால் சமூகத்தால் ஒதுக்கப்பட்ட கல் இன்று சமுதாயத்தின் மூலைக்கல்லானது விடாமுயற்சியால் , நல்லெண்ணத்தால்...

--------------------------------------முற்றும்------------------------------------------------

ஒதுக்கப்பட்ட கல் - பாகம் - 14.

ஒதுக்கப்பட்ட கல் - பாகம் - 14.



சிறுநீரக தானம் நளினாதான் வழங்கியுள்ளாள் என தெரிந்ததும் பலவகையான கேள்விகள் அதிர்ச்சிகள்..

அவர்கள் இருவரிடையேயான உத்தமமான அன்பை கண்டு பிரமித்துபோனாள்...

வாழ்க்கையின் மேலுள்ள பிடிமானம் அதிகரித்தது...

தன் நாவலின் இறுதிக்கட்ட பேட்டியை எடுத்துக்கொண்டாள் மலர்...நளினாவின் ஒவ்வொரு வார்த்தையும் அர்த்தம் பொருந்தியனவாக அனுபவ

வார்த்தைகளாக இருந்தன...

" பாலியல் தொழில் அங்கீகரிக்கப்படவேண்டும்.. அப்படி செய்யும்போது பலவித பிரச்னைகள் குறைய வாய்ப்பிருப்பதாகவும் , கற்பழிப்பு போன்ற

சம்பவங்கள் குறையலாம் என்பதை கேட்டதும் மலருக்கு மருத்துப்பேச தோன்றியது...ஆனால் சில சந்தேகம் மட்டுமே கேட்டாள்..

மேலும் ஒரு மனைவி நினைத்தால் மட்டும் தன் துணையை இப்படியான இடங்களுக்கு செல்வதை ஒருபோதும் நிறுத்திட முடியாது..

ஆனால் குறைக்கலாம்....என்னதான் ஆணுக்கும் பெண்ணுக்கும் உணர்ச்சிகள் ஒன்று என வாதிட்டாலும், சந்தர்ப்பம் கிடைத்தாலும்

பெண்கள் இப்படி செல்வார்களா , மாட்டார்கள்தானே ?..என்றும் வாதிட்டார்..

அதிலிருந்து என்ன தெரிகிறது ஆணுக்கு இது அவசியமான ஒன்று ஆதி காலந்தொட்டே...

பல வெளிநாடுகளில் இருப்பதுபோல வெளிப்படையாக இருந்துவிட்டால் பொதுஜனங்களின் மத்தியில் பாலியியல் தொந்தரவுகள் கணிசமாக குறையும்...

பல நாடுகளில் இதில் ஈடுபடும் பெண்களே, தாதாக்களிடமிருந்து விடுதலை பெற்று சில காலம் இத்தொழிலுக்குப்பின்,

தமக்கென ஒரு வாழ்வை அமைத்துக்கொள்கின்றனர்..குழந்தை
களை உயர்கல்வி படிக்க வைக்கின்றனர் முற்றிலுமாக விடுதலை கிடைக்குது..

யாரும் இவன்/ள் பெற்றோர் ஒரு பாலியல் தொழிலாளி என மோசமான பார்வை பார்ப்பதில்லை...

அந்த நிலைமை வரணூம் இங்கும்...

....ஆனால் இங்கு எதிராக இருப்பது வருத்தத்துக்குறியது..

இப்ப பல சமூக அமைப்புகள் இதை குறித்து பல கவுன்சிலிங் நடத்தி மறுவாழ்வு தருகிறார்கள்... இருப்பினும் அது நிரந்தரமல்ல..

இத்தொழிலுக்கு யாரும் வரக்கூடாது.. ஆனால் சூழ்நிலையால் வந்தாலும் அவர்களையும் மனிதராக கருதி மனிதாபிமானத்தோடு நடத்தப்படவேண்டும்..."

இன்னும் பல விஷயங்களையும் கேட்டுக்கொண்டு விடை பெற்றவளிடம், பூங்கொத்து ஒன்றை நீட்டினான் ராகவ்..

" நன்றி " என மட்டும் எவ்வித உணர்ச்சியும் இல்லாது சொல்லிவிட்டு பெற்றுக்கொண்டாள்...

அவள் புன்னகையையே சம்மதம்னு ராகவ் தவறாக புரிந்துகொண்டான்....இன்னிக்கு எப்படியாவது அம்மாகிட்ட பேசணும் னு முடிவுசெய்தான்..

மலரோ, தன் கல்யாண நாள் இன்று , அது ராகவுக்கு தெரிந்திருக்குமோ ?..நான் தான் கொண்டாட வில்லையே...சரி அது முக்கியமில்லை..

வருங்கால முதலாளி.. அவ்வளவே என் எண்ணிவிட்டு ஆட்டோ ஒன்றை கைகாட்டி நிப்பாட்டினாள்..

தொலைபேசி அழைப்பு...

" உனக்காக இங்க, உங்க அண்ணியார் வீட்டில் எல்லோரும் காத்திருக்கோம்.. நீ எங்கம்மா இருக்க?." அம்மா

" எதுக்கும்மா.."

" என்ன கேள்வி இது.. வேலையில உன் திருமண நாள் கூட மறந்துடணுமா.. "

" எதுக்கும்மா இதெல்லாம்.. எனக்கு பிடிக்காதுன்னு உங்க எல்லாருக்கும் தெரியுமே..."

பல உறையாடலுக்கு பின் ஆட்டோவை வீடு நோக்கி திரும்ப சொன்னாள்....

உள்ளே சென்றவளுக்கு அதிர்ச்சியாக எல்லா உறவினரும் கூடி இருக்க , நடு மேசையில் பெரிய கேக் ஒன்று வைக்கப்பட்டிருந்தது..

சாதாரண சுடிதாரில் இருந்தவளை அழகான கிளிப்பச்சையில் மஞ்சள் பார்டர் போட்ட சேலை கொடுத்து கட்டி வரச்சொன்னார் அண்ணியார்...

சக்கர நாற்காலியில் அவர் கணவரும்..புன்னகையோடு..பக்கத்தில் குழந்தைகள் தட்டில் , மிட்டாய் , பூ , பழங்களோடு...

இந்த வாரம் எப்படியாவது சொல்லிடணும் தனக்கு இத்திருமண வாழ்வில் விருப்பமில்லை னு என எண்ணிக்கொண்டிருந்தவளுக்கு மேலும் அதிர்ச்சியாய்..

ஏதோ கல்யாண வீடு போல களை கட்டிக்கொண்டிருந்தது....ஒரு பக்கம் சமையலும்...

" நம்ம வீட்டுல விசேஷம் நடத்தி சொந்தங்களை அழைத்து வெகு நாளாயிற்று.. அதான் இந்த ஏற்பாடு...மேலும் கம்பெனி நிர்வாகத்தை இனி தம்பியின் பொறுப்பில்

இன்றிலிருந்து முழுவதுமாய்.." என அவர் சொல்லவும் அப்பொதுதான் கணவரை தேடினாள்...

அவரோ முக்கியமான புள்ளிகளுடன் அடுத்த அறையில் பேசிக்கொண்டிருந்தான்...இவளைப்பார்த்ததும் புன்னகையோடு அருகில் வந்தான்...

" வாழ்த்துகள்.. "

" ம்.." கண்ணாலேயே கேட்கிறாள் " இதெல்லாம் உங்க வேலைதானா..?" னு

அண்ணியார் தந்த புடவையையும் வாங்காமல் , தவிர்த்ததும் எல்லோருக்குமே ஒருமாதிரியாகிவிட்டது...

அம்மா ஒடி வந்து திட்டினார் போட்டார் மெதுவாக..

எப்படி சொல்ல என்ன வார்த்தை பேச, யாரெல்லாம் புண்படப்போகிறார்கள் என மனதில் ஒரு முன்னோட்டம் மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தாள்..

இவள் ஏதாகிலும் பிரச்னை பண்ணிடுவாளோன்னு பயந்து அப்பாவே,

" சரி அவ ரொம்ப அலுப்புல வந்திருப்பா, முதலில் கேக் வெட்டட்டும்.. விருந்தினர்கள் சாப்பிட நேரமாச்சு.. "

" ஹ். ஆமா.. நான் ஒரு அவசர வேலையாய் மறுபடி செல்லணும்.. மன்னிக்கணும் எல்லோரும்..."

ராஜுக்கு கோபம் வந்தது..

" என்ன பேசுற நீ.. நமக்காக , நம்மை ஆசிர்வாதம் பண்ண வந்திருக்காங்க.. நீ என்னன்னா..கிளம்புறேன்னு சொல்ற...?" கொஞ்சம் அதட்டலாய்...

இப்ப அவளுக்கும் எரிச்சல் வர ஆரம்பித்தது...


" எனக்கே தெரியாம என்னை எதுவும் கேட்காம ஏன் இப்படி செய்தீங்க.. எனக்கு இந்த திருமண வாழ்க்கையே பிடிக்கல.." னு சொல்லிட்டு அழ ஆரம்பித்தாள்

எல்லோரையுமே வீணா காயப்படுத்துறோமேன்னு தெரிந்து...

எல்லோருமே அதிர்ச்சி அடைந்தார்கள்...

" எனக்கு ராஜ் மேல எந்த கோபமுமில்ல.. ஆனா நான் சமுதாயத்துக்காக செய்ய வேண்டிய காரியம் பல இருக்கு... சிலருக்கு மட்டுமே அந்த வரம் இருக்கு.. அதில் நானுமொருத்தி.."

" சும்மா அதிகப்பிரசங்கியாட்டம் பேசாதே.." அம்மா...கைபிடித்து அழுத்தினாள்...

" அய்யோ அம்மா. உனக்கு ஒண்ணும் புரியாது.. உனக்கு வீடு மட்டும்தான் உலகம்.. எனக்கு உலகம்தான் வீடு..".. கையை விடுவித்துக்கொண்டு..

" சரி இப்ப என்னதான்மா சொல்ற.." அன்போடு கேட்கிறார், அண்ணியரின் கணவர்...

" அண்ணா, ராஜுக்கு வேறு திருமணம் செய்யுங்க..." னு சொல்லி அவர் நாற்காலி பக்கம் முட்டிக்கால் போட்டு கெஞ்சுபவள்போல்.




இதை கேட்ட ராஜ் இடி விழுந்தவன் போல, அப்படியே நெற்றியில் கைவைத்துக்கொண்டு

" என்னை அவமானப்படுத்தும் எண்ணம்தானே மலர்..? "னு சொல்லிவிட்டு ,


மாடிப்படி ஏறி உள்ளே சென்றான்.., அவள் அக்கா, " ராஜ், ராஜ்..இருப்பா.. " என்று கத்திக்கொண்டே

பின்னாலேயே...

" ஏம்மா நல்லா யோசித்துதான் பேசுறியா...?.. அதை இப்ப பேசணுமா என்ன..?" அப்பா..

" ஆமாப்பா, வேற வழியில்லை.. எத்தனை நாள் மனதுக்குள்ளேயே வைத்து புழுங்க..?ராஜ் ரொம்ப நல்லவர்... அவர் பொறுப்பான வேலைகள் நிறைய காத்திருக்கு... அவருக்கு அனுசரணையா, அவரை அன்பா பாத்துக்குற மாதிரி

ஒரு பெண் இருந்தா போதும்... ஆனா என்னோட எண்ணங்கள்லாம் நம்ம சமுதாயத்தின் மீதே இருக்கு..இதுக்கு என்னாலான உதவிகளை செய்யணும்...என் ஆயுசுக்குள்.."

" ஏம்மா எது வேணுமானாலும் தாராளமா நீ இப்படியே செய்யலாமே.. நான் உதவுறேன் உனக்கு.." அண்ணியாரின் கணவர்..

" இல்லண்ணா, ஒரு சாதாராண பெண்ணாய் , குழந்தை குடும்பம்னு என் வாழ்க்கை இருக்காது.. நான் முழுவதுமாய் சேவையில் ஈடுபடணும்னா , எனக்கு திருமண வாழ்க்கை ஒத்து வராது..

இதை கேட்டுகொண்டே வெளியே கோபமாய் வந்த ராஜ் மாடியிலேயே நின்று கத்தினான்...

" நீ இல்லாட்டி நான் செத்துருவேன் தெரிஞ்சுக்கோ... "

எல்லோரும் மேலே பார்க்க , மலர் கண்ணீரை துடைத்துக்கொண்டு நிதானமாக படியேறினாள்....ஒரு குழந்தையை சமாதானப்படுத்தும் விதமாய்.


அடுத்த தொடரில் முடியும்...

ஒதுக்கப்பட்ட கல் - பாகம் 13..

ஒதுக்கப்பட்ட கல் - பாகம் 13..

மருத்துவமனை லிஃப்டில் பார்த்த அந்த முகத்தை மீண்டும் மீண்டும் யோசித்து நியாபகப்படுத்த பார்த்தாள்

ஆனால் பத்திரிக்கை துறையில் பல்லாயிரம் பேரை சந்தித்துள்ளதில் சரியாக நியாபகம் வரவில்லை

சரி இனியும் மண்டையை குழப்ப வேண்டாம் என கிளம்பினாள்

--------------------------

ராகவிடமிருந்து தொலைபேசி அழைப்பு...

தொழிற்சாலை குறித்தும் , உதவியாளர் குறித்தும் பேசவேண்டும் வர முடியுமா என..

ஆனால் நாளைய அறுவை சிகிச்சைக்கு அண்ணியையும் குழந்தையையும் தயார் படுத்தணும்.. இன்னும் பல வேலை காத்திருக்கு...

நாளை சாயங்காலம் சந்திப்பதாக சொல்கிறாள்..ஆனாலும் ஏனோ பிடிவாதம்

----------------------------------------------------------------

அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்ததாக மருத்துவர் சொல்கிறார்... எல்லோருக்கும் பாரம் குறைந்த உணர்வும் மிக்க மகிழ்ச்சியும்.

அண்ணியார் தன் கணவனை கூட பாராமல் கிட்னி தானம் வழங்கிய நபரை பார்த்து எப்படியாவது தன் நன்றியை தெரிவித்தே ஆகணும்னு துடிக்கிறார்..கண்ணீரோடு..

சரி அவர் முகத்தை பார்க்காமல் அந்த அறைக்கு மட்டும் சென்று வர அனுமதி கொடுத்தார் மருத்துவர்...

உள்ளே சென்றதும் முன்பகுதி திரையினால் மறைக்கப்படிருந்தது...

அவரின் கால் பாதங்களை தொட்டு வணங்கிவிட்டு, அங்கேயே அழுதுவிட்டு நன்றியோடு வெளியேறினார் ...

வெளியே காத்திருந்த ,மலர், அண்ணியாரை அணைத்துக்கொண்டு அழைத்து சென்றார் அறைக்கு...

-----------------------------------------------------------------------------------

ஒரு வாரம் எங்கேயும் நகர முடியவில்லை...

அண்ணிகூடவே அவரது வீட்டில் உதவியாக இருப்பதும் குழந்தைகளை கவனிப்பதுமாய்...

அடுத்த வாரம் ராகவ் இடமிருந்து தொலைபேசி..கட்டாயம் சந்தித்தே ஆகணும் என..

கொஞ்சம் நெருடலாய் இருந்தது... இவன் ஏன் இவ்வளவு அவசரப்படுகிறான் என்று..

சரி எப்படியும் நளினாவையும் பார்த்து இந்த தொடரை முடிக்கவேண்டும் என கிளம்பினாள்..

எப்போதும்போல் நளினா வந்து வரவேற்கவில்லை...

அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என வேலையாள் சொன்னார்.

உள்ளே சென்றதும் , உட்கார முயற்சித்த நளினாவை கைத்தாங்கலாய் பிடித்தாள் மலர்..

விசாரிப்புகள் முடிந்ததும் தொலைபேசி அழைப்பு..

" உனக்காகத்தான்மா காத்துகிட்டிருக்கான் ராகவ்.. உன்னோட தொலைபேசி வேலை செய்யவில்லையா என்ன.?"

" ஒஹ்ஹ் .நான் கவனிக்கலை.. ஒருவேளை சார்ஜ் இல்லாது இருக்கும்.."

" சரி இந்தா மா நீயே பேசு.."

" ஹலொ.. ஹலோ.."

" சத்தமேயில்லையே.?"

" இங்க சிக்னல் கிடைக்காது.. வெளியே வெராண்டாவில் போய் முயன்று பாரும்மா.."

மீண்டும் தொலைபேசி அழைக்க...

வெளியே சென்று காதில் வைத்தவள்,

" என்ன ஆச்சர்யமா இருக்கா ?.. நான் பேசுவேன்னு எதிர்ப்பார்த்திருக்க மாட்ட இல்ல?.."

" .."

" எவ்வளவு பெரிய வேலை செஞ்சிட்டு இப்படி அமைதியா இருக்க நீ..?"

" ஒரு நிமிஷம்.. வந்து.."

" நீ ஒண்ணும் சொல்லவேண்டாம்... எனக்கு எல்லாம் தெரியும் எனக்கு கிட்னி குடுத்து என்னை பிழைக்க வைக்க இந்த உலகத்தில் உன்னை விட மேலான தெய்வம் யார் இருக்க முடியும்..?"

"..."


" ஒருநாளும் உன்னை நான் தொடக்கூடாது, நான் சுத்தமில்லாதவள்னு சொல்லிட்டே இப்ப உன்னோட உருப்பு என் உடம்பில்..இதுதான் கடவுளின் தீர்ப்பா?..

"அடுத்த ஜென்மம்னு ஒண்ணு இருந்தா உனக்கு நான் மகனாக பிறந்து இந்த கடனையெல்லாம் தீர்க்கணும்..."


அப்படியே அதிர்ச்சியில் சோபாவில் உட்கார்ந்தாள் மலர்... ஏதும் பேச முடியாமல்..

தன்னோட குடும்பத்துக்கும் நளினா சேவை செய்துள்ளாரா?.. அவர் தான் காதலித்ததாய் சொன்ன அந்த பெரிய மனிதன் தன் அண்ணியின் கணவரா... ?

மெதுவாக திரைச்சிலையை நகர்த்தி உள்ளே வந்தவள்,

தொலைபேசியை அப்படியே நளினா கையில் கொடுத்தாள் கண்ணீரோடு....

" என்னம்மா, என்னாச்சு.."

எதுவும் காதில் விழவில்லை அவளுக்கு.... அப்படியே நளினாவின் காலடியில் உட்கார்ந்துவிட்டாள்..

போனை வாங்கி காதில் வைத்த நளினாவும் , பதில் பேச வார்த்தையின்றி கண்ணீரை மட்டுமே சாரை சாரையாக வடித்தாள்...

அங்கே பெரும் அமைதி , மகிழ்வோடு நிலவியது, இருவர் மனதிலும் பல்லாயிரம் கேள்வியோடு,...

இவை ஏதும் புரியாமல் உள்ளே வந்த ராகவ் , மலரின் கண்ணீரை பார்த்து கலக்கத்தோடு...பரிதவிக்கிறான்...

ஒதுக்கப்பட்ட கல் - பாகம் 12.



அலுவலகத்தில் நடந்த சம்பவத்தை நினைத்து பலவாறு குழம்பிப்போனாள் மலர்.. அருகில் மட்டும் ராஜ் இருந்திருந்தால்

கட்டிப்பிடித்து அழுதிருப்பாள்... சுதிர் இருந்தாலாவது பொங்கித்தள்ளியிருக்கலாம் கோபத்தை குமுறலாய்...

ஆட்டோ பிடித்து தன் வீட்டுக்கே முதலில் சென்றாள்... உள்ளே நுழைந்தவளை அம்மாவின் கேள்வி சரமாரியாய்

வந்து விழுந்தன... எந்த ஒரு வினாவுக்கும் பதில் சொல்லாது மும்முரமாய் எதையோ தேடிக்கொண்டிருந்தவளை பார்த்து

ஆறுதலாய் கை பிடித்தார் அம்மா..அப்பாவும் பின்னால்..

" என்னம்மா நான் பாட்டுக்கு கேட்டுகிட்டே இருக்கேன்.. என்னாச்சு உனக்கு..ஏதாவது பிரச்னையா?"

என்ன சொல்ல அம்மாவிடம்.. கூட கொஞ்சம் பயம் காட்டுவதாய்த்தான் அமையும்..எதையும் காட்டிக்கொள்ளாது,

" அம்மா , எனக்கு தட்டுல சாதம் போட்டுட்டு வா.. நீயே ஊட்டி விடும்மா.. எனக்கு உடனே கிளம்பணும், அண்ணி வீட்டுக்கு..

குழந்தைகள் காத்திருப்பாங்க..அண்ணாவுக்கு கிட்னி டிரான்ஸ்பிளாண்ட் விஷயமா ஒரு தகவல் உள்ள கோப்பை தேடுறேன்.."

விருப்பமே இல்லாமல் அம்மாவின் மன திருப்திக்காய் நன்றாக சாப்பிடுவதுபோல் பாவனை காட்டிவிட்டு மீண்டும் ஆட்டோவில் ஓடினாள்..


"என்ன பெண் இவள்.?. உதவின்னா ஓடி ஓடி செய்யுறா..என் வயிற்றில்தான் பிறந்தாளா? " னு ஆச்சர்யமா அம்மா வாசலையே பார்த்துக்கொண்டிருந்தார்..
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
காலையில் எழுந்தவளுக்கு போன்... நளினாவிடமிருந்து..

9 மணிக்கு மகன் வருவதாகவும் அப்படியே நேராக ஏர்போர்ட்டிலிருந்தே இடம் பார்க்க செல்வதாகவும் சொன்னதோடு, மலரையும் முடிந்தால் வரச்சொன்னாள்..

சரி 1 மணி நேர வேலைதான்.. அப்படியே இந்த கட்டுரையையும் சீக்கிரமாக முடித்து முதலாளியிடம் கொடுத்துவிட்டு வேறு வேலை தேட வேண்டும்.

மலர் ஏர்போர்ட் சென்று சேரவும் ராகவ்- நளினாவின் மகன் வரவும் சரியாக இருந்தது...

ராகவுக்கு பாத்திருக்கும் பெண்ணில் ஒருத்தியை விமான நிலையத்துக்கே அழைத்து வருவதாக சொல்லியிருந்தார் நளினா..

ஆனால் அது முடியாமல் போனது...அன்று..

சம்பிராதயமாக மலரையும் அவள் வேலை பற்றியும் மட்டும் சொல்லி அறிமுகப்படுத்தினாள் நளினா..

ராகவுக்கோ இவள்தான் தனக்கு அன்னை பார்த்திருக்கும் பெண் நன் நினைத்து உள்ளூர ஒரே மகிழ்ச்சி...

அசடு வழிகிறான்...கை குலுக்கிக்கொண்டே...

இவை ஏதும் கண்டுகொள்ளாமல் மலர், அவனின் புது புராஜக்ட் பற்றியும், அவனுக்கு தேவையான வேலையாட்கள், பற்றியுமே

குறிப்பெடுக்கிறாள்... அப்போதுதான் தான் அவன் சொல்ல சொல்ல , அந்த வேலைக்கு தானே மிக பொருத்தமாக இருப்பதாய் உணர்ந்தாலும் நாகரீகம் கருதி அதை சொல்லாமல் தவிர்த்தாள்.

ஆனால் மேம்போக்காக தற்போதுள்ள வேலையை விடப்போவதாக சொல்ல ஏதோ லாட்டரியில் கோடி விழுந்ததைப்போல் மகிழ்ச்சியடைகிறான் ராகவ்.

" நீங்க உடனே வந்து சேர்ந்துடுங்க..ஐ அம் வெரி லக்கி...டுடே..."

" இல்லை எனக்கு முடித்துக்கொடுக்க கொஞ்சம் பாக்கி வேலையிருக்கு அலுவலில் இன்னும்..."

அம்மாவிடம் எப்படி சொல்ல தனக்கு அந்த பெண்ணை பிடித்திருக்கு என்று, அம்மாவே கேட்கட்டும் ,வந்த வேலையை முதலில் பார்ப்போம் என அவனும் தள்ளிப்போட்டான்..

அதற்குள் நளினாவுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வர, அவள் பேசிக்கொண்டே கலவரமடைகிறாள்...

என்ன ஏதுன்னு சொல்லாமல், தான் உடனே கிளம்புவதாயும், அவர்கள் இருவருமே அந்த இடத்தை பார்த்துவிட்டு முடிவெடுக்க சொல்லிவிட்டு விரைகிறாள்...

அந்த தொழிற்சாலைக்கான இடம் செல்லும்வரை ஏதும் பேசிக்கொள்ளவில்லை.. சேர்ந்ததும்தான் தெரிகிறது தன் அண்ணியாரின் தோட்டம் அருகில் என்று..

எதுவும் காண்பித்துக்கொள்ளவில்லை...

தான் சகஜமாக பேசுவதுபோல ராகவ் பேசாதது கண்டு கொஞ்சம் குழம்பினாள்.. சரி ஒருவேளை பயண அலுப்பாக இருக்கும் என நினைத்தாள்..

எல்லாத்துக்கும் ஒரு புன்சிரிப்பை மட்டுமே உதிர்த்தான்..அதிலேயே அவனின் அன்பான வளர்ப்பும் குணமும் நிறைவாகத்தெரிந்தது..

------------------------------------------------------------------

அலுவலகத்துக்குள் வேகமாக நுழைந்தவளை கண்டு எல்லோருமே வித்யாசமாய் பார்ப்பது கண்டு ஆச்சர்யப்பட்டாள்.

கண்ணாலே என்னாச்சு என கேட்டாள் ...

முருகனை அறைக்குள் வரச்சொன்னாள்.விசாரித்தாள்.

"ஐயா சொன்னாங்க.. ஏதோ பிரச்னை .அதனால நீங்க வேலை விட்டு நின்னுட்டீங்கன்னு.." தயக்கத்தோடு சொன்னான்.

அவனை அனுப்பிவிட்டு நேராக முதலாளி அறைக்குள் சென்றாள்.

அவர் பயத்தில் எழுந்து நின்றார்.. சைகையால் உட்கார சொன்னாள்..

" எனக்கும் பொறுப்பு இருக்கு.. அதை முடிச்சு கொடுத்துட்டுதான் நான் வேலை விட்டு நிப்பேன்.. அதுக்குள்ள இஷ்டப்படி

பொய் பிரச்சாரம் பண்ண வேண்டாம் ..புரியுதா?.." னு சொல்லிட்டு கிளம்ப,

" சரி.... மேடம்.. நீங்க என்ன சொன்னாலும் சரிதான்..." னு ரொம்ப பவ்யமா பேசினார் முதலாளி.

" என்ன கிண்டலா..?" இடுப்பில் கை வைத்து அதட்டினாள்..

" அய்யோ ..இல்லீங்க.. " நிஜமாகவே பயந்தார்...

" ஒழுங்கா முன்பு போல மலர் னு கூப்பிட்டா போதும் சரியா..?" எச்சரிப்போடு சொல்லி சென்றாள்.

-------------------------------------------------------------------------------------------------------

மருத்துவமனைக்கு சென்றதும் ராஜ் ஓடி வந்தார்..

கைகளை பிடித்துக்கொண்டே மகிழ்ச்சியுடன்,

" மலர், அத்தானுக்கு மாற்று கிட்னிக்கு ஆள் கிடைச்சாச்சு... அனேகமா எல்லா பரிசோதனையும் பண்ணியாச்சு.."

" அப்படியா?.. யாரது ராஜ்.?" மகிழ்வோடு கைப்பையை கிழேவைத்துக்கொண்டே, அவன் கையையும் விலக்கியவள்,

" அதுதான் தெரியலை மலர்.. அந்த பேஷண்ட் தன்னைப்பற்றி எந்த விபரமும் வெளியில் தெரியக்கூடாதுன்னு சொல்லிருக்காங்களாம்..."

" இதென்ன புதுசா இருக்கு..?.. 5 லட்சம் பணத்துக்கு சம்மதித்தாங்களா , இல்ல, ?/"

" பணம் பற்றியெல்லாம் பேஷண்ட் அலட்டிக்கொள்ளவில்லையாம்... ஐயா உயிர் பிழைத்தால் போதும்னு சொல்லிருக்காங்களாம்.."

": .அண்ணாவின் தொழிற்சாலையில் வேலை செய்பவரா?"

" தெரியலையேம்மா.." அண்ணியிடமிருந்து பதில்...

" நான் வணங்குற அந்த வெங்கடாசலபதி கை விடமாட்டார்னு எனக்கு தெரியும்மா.." .. பிடிக்காவிட்டாலும் ஒண்ணும் சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டினாள்

" சரி நீ ரொம்ப கேள்வி கேட்காதே. பதிலில்லை. நாம இப்ப செய்ய வேண்டியவேலைகள் ஏராளம் இருக்கு..அத்தானின் அலுவலில் கையெழுத்திடவேண்டிய முக்கிய கோப்புகளை

பத்திரமாக எடுத்து வரணும்... நான் செல்கிறேன்.. நீ வேணா சென்று மருத்துவரை பார்..அக்கா பக்கத்து தோட்டம் விற்கிறோம் அது விஷயமாகவும்.. ."

" ஓஹ் அந்த தோட்டமா..." சொல்ல வாயெடுத்தவள் அடக்கிக்கொண்டாள்..

" என்ன..?"

" ஒண்ணுமில்ல நீங்க கிளம்புங்க.."

" கடவுளே எல்லா நல்லபடியா முடிந்தால் திருப்பதிக்கு வந்து தங்கத்தால் எல்லாம் செய்யுறேன் " னு உணர்ச்சி வசப்பட்டு அண்ணி வேண்ட,

எப்பத்தான் இவங்கெல்லாம் திருந்துவாங்களோ ன்னு ஒரு பெருமூச்சு விட்டு மருத்துவரை பார்க்க சென்றாள் மலர்..

நாளையே அறுவை சிகிச்சைக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், முக்கியமான விலையுயர்ந்த மருந்துகள் வாங்கி வரும்படியும் பணிக்க,

கெஞ்சிக்கேட்டாள், அந்த கிட்னி தானம் வழங்குபவரை பார்த்து நன்றி சொல்ல..ஒரு வாய்ப்பு தருமாறு...

இது எங்க தொழிலுக்கே செய்யும் துரோகம் மாதிரி.. தயவுசெய்து இப்ப கேட்காதீங்க...

எல்லாம் நல்ல படியா முடியட்டும் பின்னால் நான் அவரிடம் பேசி பார்க்கிறேன் என்றார் மருத்துவர்...

யாராயிருக்கும் னு மனசுக்குள் ஆயிரம் குடைசல்.. நல்ல மனிதர் பல நல்ல மனிதர்களை சம்பாதித்து வைத்திருப்பதில் என்ன ஆச்சர்யம் இருக்கமுடியும்..?

என எண்ணிவிட்டு யோசனையிலேயே வந்தவள் எதிரில் வந்தவர்மேல் முட்ட, திரும்பிப்பர்த்தவள்,

" எங்கேயோ பார்த்திருக்கோமே...முன்பு...?" என எண்ணுவதற்குள் ஆள் கடந்து சென்று லிஃப்டுக்குள் நுழைய, பின்தொடர்ந்து ஒடி சென்றவள்

மூடிய லிஃப்ட், முட்டி நின்றாள்...வெகுவாய் குழம்பி...


-------------------------------------------------தொடரும்--------------------------------------------------------------------