Monday, November 22, 2010

கோ-ஹபிடேஷன் /லிவிங்-டுகெதர் என்ற இணைந்து வாழ்தல் - 3.

லிவிங்-டுகெதர்











































மனிதர்கள் பலவிதம்..சிலர் நாத்திகர் சிலர் ஆத்திகர்..சிலர் நடுவில்..

சில்ர் பிறந்தோம் வளர்ந்தோம் வாழ்வோம்..

சிலருக்கு பிறப்பே அற்புதம்.. நாம் அனுபவிப்போம்..அனுபவித்ததை பகிர்வோம்.

சிலருக்கு நான் வாழ்ந்ததுபோல் எல்லாரும் வாழட்டுமே...

சிலர் எதிர்மறை எண்ணம், சிலர் நேர்மறை எண்ணம் , மீதமுள்ளவர், நிதர்சன எண்ணம் கொண்டவர்கள்..

சிலர் எதிலும் துணிவு, சிலர் எப்போதும் பயம், சிலர் ஜாலி, சிலர் கோபம் .

இவற்றில் பல விஷயம் ஜீன்களிலேயே தீர்மானிக்கப்படுகிறது.. சிலது வளர்ப்பு முறையிலும் மீதம் சூழலிலும்..



இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்..இப்படி பலவேறு குணநலன்களும் ரச்னையும் உள்ளவன் மனிதன்..எல்லாரையும் ஒரே விதத்தில் கட்டுப்பாடிட்டு அடைக்க முடியாது...



திருமணம் என்பது இருவர் மனமொத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து பிள்ளைகள் பெற்று மகிழ்ச்சியை இன்னும் வளர செய்வது..

இந்த மகிழ்ச்சி என்பது பணமோ, புகழோ , அழகோ, படிப்போ, நல்ல குணமோ, வீரமோ ,காமமோ எதுவோ , ஒன்றோ , பலதோ அடிப்படையாக கொண்டிருக்கலாம்..

ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்தலில் பெண்ணே கரு சுமந்து பிள்ளை வளர்ப்பதில் அதிக பங்கேற்பதால் , அவளின் முதன்மையான தேவை பாதுகாப்பு..

பாதுகாப்பு என்பதிலும் பல விஷயத்தை அடிப்படையாக கொண்டது..

ஆனால் ஆணுக்கு திருமண பந்தத்தில் முக்கியமாக உடல்தேவை என்பது இயற்கையாகவே ஏற்பட்டது..


அதற்காக தன் வருங்காலத்தை , குழந்தை வளர்ப்பை சட்டை செய்யாதவனுமல்ல..

ஆக இருவர் இணைந்து இன்ப துன்பங்களில் பல்லாண்டு ஒரே இடத்தில் இருந்தும் , குழந்தைகள் பெற்றும் , அவர்கள் பிரச்னைகளை சமாளித்து வெற்றிகரமாக

, நிம்மதியாக வாழணும் என்றால் அவர்கள் பல விஷயங்களை முன்கூட்டியே திட்டமிடணும்..

எதிலெல்லாம் ஒத்து போகலாம் எதெல்லாம் அனுசரிக்கணும், விட்டுக்கொடுக்கணும் என இருவருமே இணைந்து திட்டமிடல் வேண்டும்..

ஆனால் இளவயதில் ஹார்மோன் தொந்தரவால் கண்டதுமே சிலருக்கு காதல் ஏற்படுகின்றது..


என்ன காரணம் என தெரியாமலேயே ஒருவரை பிடித்தும்விடுகின்றது..இவர்/ள் தான் தனக்கு பொருத்தமான துணை என மனம் நினைக்கின்றது..

திருமணம் செய்ய முடிவெடுக்கின்றார்கள்.. ஒன்றாக வாழ தொடங்குவார்கள்.. அப்போதுதான் இருவருக்குமான அன்றாட வேறுபாடுகள், ரசனைகள் , பழக்கவழக்கங்கள் புரிபடுகிறது..

ஆனாலும் ஏதோ ஒரு காரணி மிக உறுதியாக இருக்கும்பட்சத்தில் ஒத்து வராத ரசனைகளும்கூட , அனுசரித்தோ விட்டுக்கொடுத்தோ போக முடிகிறது..


இப்படி எல்லார் விஷயத்திலும் நடைபெறுவதில்லை..

ஒருவருக்கு உணவு மற்றொருவருக்கு விஷமாக இருக்கும்பட்சத்தில் அனுசரிப்புக்கே அங்கு இடமில்லை..

பிரிய முடிவு செய்வார்கள்.. செலவு செய்த திருமணம் முறிவடையக்கூடாதே என பலர் பிராயாசையால் சில திருமணம் கடனேன்னு தொடரும்.. சில பிரியும்..வலியோடு...

சில துணைகள் தமக்குள் ஒற்றுமை இல்லாவிட்டாலும் பிள்ளைகள், அவர்கள் வாழ்வுக்காக பொறுத்துக்கொண்டு தம் ஆசைகளை கனவுகளை தியாகம் செய்வதுமுண்டு..தவறில்லை.. நல்லதும் கூட.. கட்டாயத்துக்கன்றி , மனமொத்த அனுசரணையாக இருக்கும்பட்சத்தில்....


இப்படி திருமணங்களில் உள்ள பல தவறான விஷயங்களே கோ-ஹேபிட்டேஷன் என்ற முறைக்கு வழிவகுத்திருக்கணும்..

காதலில் விழுந்தால் மட்டும் போதாது , வாழ்ந்து பார்த்து பின் குழந்தை பெறுவதை முடிவு செய்கிறார்கள்..

வாழும்போது மட்டுமே போலித்தனமற்று நிதர்சனமான வாழ்க்கை தெரிய வரும்..அடுத்தவரின் குறைகள் புரியும்...


அதைக்கொண்டே முடிவுகளும் எடுக்கின்றார்கள்:..

இத்தகைய திருமணங்களில் பிரிவு அதிகம் என்பது உண்மை..

ஆனால் எத்தனை நல்லது முன்கூட்டியே பிரிந்துவிடுவது.?.

பிடிக்காத துணையோடு காலத்துக்கும் குழந்தைக்காக மல்லுக்கட்டி , குழந்தைகளையும் நிம்மதியில்லாமல் மனச்சோர்வுக்கு ஆளாக்கி மொத்தத்தில் அது ஒரு மோசமான சமூக சூழலுக்கு வித்திடுவதை விட?..

சில சமூக விரோதிகள் உருவாகுவதைவிட?..


எல்லா திருமணங்களுமே இப்படியான முடிவுதான் என சொல்லவரவில்லை.. காலப்போக்கில் ஒருவரையொருவர் புரிந்து நேசிக்க ஆரம்பித்து வெற்றி பெரும் திருமணங்கள் அனேகமுண்டு..அதுமட்டுமல்ல முன்பின் அறியாதவர்கள் இருவர் திருமணம் ஒரு சுவாரஸ்யமே சாதனைவிரும்பிகளுக்கு .. முக்கியமா இரு துணையும் நல்ல அனுசரணையாக , விட்டுக்கொடுப்பவராய் , அன்பானவர்களாய் இருந்துவிட்டால் அது எப்படியும் வெற்றி பெரும்..

ஆனால் வெளியே பார்க்க நல்ல குணமாய் அமைதியாய் யார் வம்புக்கும் போகாதவராய் இருப்பவரின் நிஜம் ( சைக்கோத்தனம் , கோபம், நோய், உடல்குறை , இத்யாதி ) கூட துணைக்கு மட்டுமே தெரிய வரும்...திருமணத்துக்கு பின்..


எனக்கு தெரிந்த ஒரு பெண் நல்ல அழகி , மென்மையானவர் என வரதட்சணையே வாங்காமல் ஒருவர் மணமுடித்தார். நல்ல வேலை கை நிறைய சம்பளம் என பெருமிதப்பட்டனர் பெற்றோர்.

ஆனால் காமக்கொடூரனாய் இருந்தார்.. எப்போதும் தேவை அவருக்கு.. ஆனால் கார் வாங்கி மனைவியை பெருமையா ஹோட்டலுக்கு அழைத்து செல்வதும் விலையுயர்ந்த பட்டுப்புடவை , நகை , சொத்து வாங்கிதருவதுமாய் வெளி உலகுக்கு நல்ல மனிதனாய் தெரிந்தார்..

முதல் குழந்தை பிறந்தது.. உடனே அடுத்த குழந்தை உருவானது.. அபார்ஷன் செய்தாள்..


அடுத்த சில மாதத்தில் அடுத்த குழந்தை.. அதையும் பெற்றார்

அடுத்து சில அபார்ஷன்கள்..

உடம்பும் மனதும் சீரழிந்து மன நோய் வந்தது.. கொஞ்சம் கொஞ்சமாய் மறதி வர ஆரம்பித்தது..உலகையே வெறுத்தாள்..


அப்பதான் அவள் சீரியஸ்நஸ் புரிந்து மருத்துவ உதவி நாடினர்..

வீட்டில் வேலைக்காரி வைக்க அனுமதியில்லை. ஏனெனில் வீட்டு விஷயம் வெளியே செல்லுமாம்..ஆனால் கணவர் உதவி செய்வார்தான்...

அப்பெண்ணின் அம்மா மட்டும் வந்து உதவ அனுமதி..

இப்படி எத்தனை எத்தனை கதைகள்? .வெளியில் சொல்ல முடியாமல்?..தெரியாமல்..?

ஆனால் இதுபோன்ற கதைகள் என்னதான் கலாச்சார மாற்றம் வந்தாலும் நடைபெறும்..

இது மன துணிவு சம்பந்தப்பட்ட விஷயமும் கூட.. வளர்க்கும்போதே கொடுக்கவேண்டிய துணிவும் தற்காப்பும்..



விவாகரத்தும் எல்லாராலும் செய்ய முடியாது.. பெண்ணுக்கு குழந்தைமேலுள்ள உரிமை ஆணுக்கும் உண்டே..

முக்கியமா குழந்தைகள் ஏன் அந்த பிரிவின் தண்டனையை அனுபவிக்கணும்..?


ஆக நல்ல இல்லறம் , நல்ல குழந்தைகள் , அதனொட்டி நல்ல சமூகம் அமையணும் என்றால் நல்ல திட்டமிடல் கண்டிப்பா இருக்கணும்..

கோ-ஹேபிட்டேஷன் என்ற முறையில் இது சாத்தியமாகிறது.. அதற்காக இதில் இருப்பவரெல்லாம் திருமணமே செய்ய விரும்பாதவரில்லை..


திருமணம் செய்வதர்கான முன்னேற்பாடுதான் இது பலருக்கு..

மற்றும் சிலருக்கு , ' வாழ போறது நாம் இருவரும், மனமொத்த பரஸ்பர நம்பிக்கையிலும் , அன்பிலும்.. இதுக்கெதற்கு ஒரு பேப்பர் ஒப்பந்தம்., செலவுகள்..பரபரப்புகள் ???" என்பதாய் கேள்வி..


இணைந்து வாழ்தல் என்றாலே உடனே காமம் மட்டும்தான் என்றால் அது அலுத்துபோகும் மனமொத்து போகாபட்சத்தில்...

இப்படியான வாழ்வில் பெண்ணுக்குத்தான் அதிக பாதிப்பு என்று பயப்படுகின்றனர் பலர்..

நிஜம்..

பெண்ணுக்கு பாதிப்பு எல்லாவற்றிலும் உண்டு.. திருமணத்திலும் இதே பாதிப்புகள் உண்டு..

இதிலிருந்து தப்பி தனியாகவோ குழந்தையோடோ வரும் பெண்ணுக்கு சட்ட ரீதியாக ஜீவனாம்சம் கிடைக்காதாமே?.. " ********* " , " ***********" , என பட்டம் சூட்டி அவளை அவமதிப்பார்களே?.. சமூகம் அவளை ஒதுக்கி வைக்குமே ?..

இதுபோன்றவற்றுக்கு பயப்படுபவர்கள் தாராளமாக திருமணம் செய்துகொள்ளலாம்..


இவற்றையெல்லாம் துச்சமென நினைப்பவர் மட்டுமே , எத்தனை குழந்தையென்றாலும் நான் வளர்ப்பேன் தனியாக என துணிபவர் ஈடுபடலாம்..

மேல் நாட்டில் இதற்கு சட்டமும் இருக்கின்றது .நம், நாட்டில் இதுவரை அனுமதி மட்டுமே உண்டு.. ஆனால் ஜீவனாம்சம் கிடைக்க வழி இல்லை ( மஹாராஷ்டிராவில் மட்டும் சில வழிவகை இருப்பதாக தெரிய வந்தது.. உறுதியா தெரியலை ) .


படிக்காமலோ, வேலைக்கு செல்லாமலேயோ கூட துணையை இழந்தவர், விவாகரத்து செய்தவர்கள் பலர் குழந்தை பெற்று வளர்க்கவில்லையா என்ன ?..

அப்படியிருக்கும்போது படித்து தன் சொந்தக்காலில் நிற்பவர்கள் தன் துணை வருங்காலம் பற்றி முடிவெடுக்க முழு உரிமை உண்டு..

அதனால் ஏற்படும் இன்ப துன்பங்களுக்கு அவர்களே முழு பொறுப்பு என்பதையும் அவர்கள் அறிந்தே இருக்கின்றார்கள்..


லிவிங்-டுகதெரிலிருந்து பிரிவது " ****** " த்தனமாக தெரியுமென்றால் , காதலித்து கைவிடப்பட்டு மற்றொருவனை/ளை மணமுடிப்பது எதில் சேர்த்தி.?

காதல் வயப்பட்டதுமே அவர்களோடு மனதளவில் வாழ்வதில்லையா?.. இல்லையென்றால் மருத்துவரை பார்க்கணும்...

சில போலித்தனமான கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு விதியேன்னு வாழ்வதை விட இவ்வுலகில் ஒருமுறை வாழப்போகிற நாம் நம் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ வழியிருக்குமானால் , அதனால் யாருக்கும் எவ்வித தொந்தரவும் இல்லையென்றால் அதை தேர்ந்தெடுப்பதில் தவறேதுமில்லை..

எல்லா விஷயத்திலும் பாதகமும் இருப்பதுபோல் இதிலும் பாதகமுண்டு.. இதை தன் இஷ்டத்துக்கு தவறாக உபயோகப்படுத்தவும் , ஏமாற்றவும் செய்ய வழியுண்டுதான்... ஏன் காதலிப்பது போல நடித்து ஏமாற்றுவதில்லையா?..


ஆனால் அதெல்லாம் விதிவிலக்குகள் மட்டுமே.. விதிவிலக்குகள் விதியாகாது...

இத்தனை சொல்லியும் எனக்கு திருமணம் என்பதிலும் சடங்குமுறைகள் , கல்யாண விழாக்கள் , சொந்த பந்தங்களிலும் ஒரு சுவாரஸ்யம் இருப்பதாகத்தான் தெரிகிறது..அது என் சொந்த கருத்து மட்டுமே..

இருப்பினும் லிவிங்-டுகெதர் ஒன்றும் மோசமான பயப்படும் விஷயமில்லை என்பதற்கே இந்த விளக்கம்..

லிவிங்-டுகெதரில் நுழைபவர்கள் 100% இல்லற வாழ்வை ஆயுசுக்கும் அதே நபரோடு தொடரணும் என்ற ஆவலில்தான் தொடங்குகின்றார்கள்.. விளையாட்டுக்கல்ல...

அதுமட்டுமல்ல 50 வயதுக்கு மேலுள்ளவர்கள் , விவாகரத்தானவ்ர்கள் ,துணையை இழந்தவர்கள் , பல காரணத்துக்காக மேல்நாட்டில் இணைந்து வாழ்கின்றனர்..

முக்கிய காரணிகள் ,

1. வசதி , எளிது , சிக்கலற்றது..

2. முன்கூட்டியே உறவுமுறை சரிவருமா என பரிசோதித்தல்..

3. சிக்கனம்.( விழா எடுத்து கொண்டாடவேண்டியதில்லை )

4. திருமண ஒப்பந்தத்தில் நம்பிக்கையின்றி தங்களை அதிகமாய் நம்புவது..

5. விவாகரத்து , அதுக்காக நேரம் , சட்டதிட்டம் , பணம் செலவழித்தல் , ஆகியவற்றை தவிர்க்க..

6. சமூக கேள்விகளை தவிர்க்க ( இது வயாதானவர், முக்கிய புள்ளி , போன்றோர் ) .

எனக்கு தெரிந்த ஒரு பெண்ணுக்கு விவாகரத்தாகவே 5 வருடம் ஆனது..:(. அதற்குள் அவர் குடும்பம் பட்ட கஷ்டம் சொல்லி மாளாது.

இக்கட்டுரை ஒரு அறிமுகம் மட்டுமே.. பலர் இது ஏதோ பேராபத்தை , கலாச்சார சீரழிவை ஏற்படுத்த வந்ததாய் நினைத்து வருந்துவதால் சில புரிதல்கள் மட்டுமே...


நிஜமான , பயத்துக்குறிய கலாச்சார சீரழிவுகள் தொலைக்காட்சியிலும் ஊடகத்திலும் இப்ப பதிவுலகிலும் ஆபாசம் என்ற பேரிலும் , நடனம் , சீரியல் , வன்முறை என்றும் வந்துகொண்டுதானிருக்கிறது...


அதுதான் நம் குழந்தைகளுக்கு ஆபத்து...நம் கலாச்சாரத்தில் ரிஸ்க் எடுக்க ஊக்குவிக்காமல்/பாராட்டாமல் பாசம் என்ற பயத்திலேயே குழந்தைகளை வளர்த்துவிடுகிறோம்..

புயலும் சீற்றமும் இருக்கும் கடலிலே கப்பலோட்டக்கூடிய மாலுமியே சிறந்தவன்.. நம் பெண்களுக்கு அதுதான் மிக தேவை..

தனியே நம் நாட்டில் கெளரவமாக வாழக்கூடிய சூழல் பெண்ணுக்கு வரணும்.. ஏனெனில் பெண்ணுக்கு மட்டுமே " **** , ****** " என்ற பட்டங்களை கொடுத்து பழகியுள்ளோம்.. அதையெல்லாம் சட்டை செய்யாமல் மற்றவருக்கு முன்னுதாரணமாக நம் பெண்களை வளர்ப்போம்..தேவையில்லாமல் பெண்களுக்கு பட்டம் கொடுத்தால் அதுக்கு மரியாதை இல்லாமல் போய்விடும்..கெட்ட வார்த்தைகளை கேட்டு கேட்டு பழகும் துணிவை வழங்குகின்றீர்கள்..அவ்வளவே..:)

பாலியல் தொழில் ஒழிக்கவே முடியாது.. உலகிலேயே மிக பாவப்பட்ட தொழில் அது.. கோடி கொட்டிக்கொடுத்தாலும் நம் வீட்டு பெண்கள் செய்வார்களா ?.. ஆசை துணைக்கே அலுத்துபோகும் பெண்கள் இருக்கையில் , பாலியல் தொழிலை கண்ட சாக்கடை ஆணுக்கும் பறிமாறுகிறாளே.. நோய் வாங்கி நோய் தீர்க்கிறாளே..? பாலியல் தொழிலாளி குழந்தைகளுக்கு நாம் ஒரு துரும்பாவது நகர்த்தியிருப்போமா?.. ஆனா வாய்கிழிய பேசுவோம் கேவலமாக ...!!

வாழ்நாளெல்லாம் அவளுக்கு ஒருவர் துணைக்கு இருந்தே ஆகணும் என்ற பயசூழலை தவிர்ப்போம்... பாலியல் ஆபத்துகளை , அதை எதிர்க்கும் துணிவை பெண் குழந்தைக்கு கொடுப்போம்...



மாற்றங்களில் உள்ள நல்லவற்றை சிந்தித்து ஏற்க பழகுவோம்... ஏனெனில் நமக்கு பிடிக்காவிட்டாலும் புதியன , மாற்றங்கள் வந்தே தீரும்...

சில குறிப்புகள் சங்க காலத்திலிருந்து .

" காந்தர்வம் என வைதிக மரபில் குறிப்பிடப்படுகின்ற திருமண முறை எந்தவித நிர்ப்பந்தமும் பொய்மையும் பாசாங்குகளுமற்ற உறவு முறையாகும். உத்தரகுரு என்றும் போகபூமி என்றும் புராணங்களில் குறிப்பிடப்படும் நாட்டில் இத்தகைய உறவுமுறை இருந்தது எனத் தெரியவருகிறது.6 தமிழ் மரபில் களவு மணம் எனக் குறிப்பிடப்படுவதை வைதிக மரபில் நிலவிய காந்தர்வ மணத்தோடு ஒப்பிடுவதுண்டு.7 களவு என்ற சொல்லே கள்ளத்தனமாக, பிறர் அறியாமல் மேற்கொள்ளப்படும் காதல் ஒழுக்கம் எனப் பொருள்படும். களவு மணமே தமிழ் நெறி என்று கூறும் அளவிற்குக் களவு மணத்திற்குச் சங்கப் புலவர்களிடையே குறிப்பிடத்தக்க அங்கீகாரம் கிட்டியிருந்தது. இந்நெறி காமன் வழிபாட்டோடு தொடர்புடையது என்பதற்குப் பிற்காலக் காப்பியமாகிய சீவகசிந்தாமணி அசைக்கமுடியாத சான்றாகத் திகழ்கிறது. சீவகனும் சுரமஞ்சரியாரும் காமன் கோட்டத்துக் கடியறை தன்னில் இரகசியமாகச் சந்தித்துக் கூடி மகிழ்ந்ததை ”இன்றமிழ் இயற்கை இன்பம்” நுகர்ந்தார்கள் எனச் சீவகசிந்தாமணி (பா. 2003,2055,2063) குறிப்பிடுகிறது. "

நன்றி : http://www.sishri.org/kaaman.html

----------------


பழங்குடியினர் திருமணத்தில் சில முறைகளைக் கடைபிடித்து வருகின்றார்கள். பொதுவாக ஆணோ, பெண்ணோ மணந்து கொள்ள விரும்பினால் அவர்கள் இருவரையும் ஒன்றாகப் பழகவிடும் பழக்கம் இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது. இருவரையும் காட்டிற்குள் அனுப்பிவிடுகிறார்கள். தங்களுக்குள் மனம் விட்டுப் பேசி தனியே தங்கி சில நாட்கள் பழகுகின்றனர். பின்னர் திரும்புகின்ற போது பெரியோர்களின் முன் நிறுத்தப்படுகின்றனர். இருவரும் மனம் ஒத்து மணந்து கொண்டால் மட்டுமே கணவன் மனைவியாகலாம். விரும்பாவிடில் இருவரும் பிரிந்து வேறு ஒருவரை (இருபாலரும்) மணக்கலாம்.

ஒரு பெண்ணை மணக்க விரும்பும் ஆடவனைப் பெண் வீட்டிற்கு அனுப்பி அங்கேயே இருந்து உழைத்து வர வேண்டும். சரியான தகுதியுள்ள மாப்பிள்ளை என்று பெண்ணும், பெண் வீட்டாரும் கருதினால் மட்டுமே பெண் கொடுக்கப்படும் இல்லையேல் பெண் கொடுக்க மறுத்து விடுவார்கள். ஆண்டுக்கணக்கில் உழைப்பவரும் உண்டு.


http://www.eegarai.net/-f15/-t7337.htm?theme_id=13515


படம் : நன்றி கூகுள்.