எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்
கனக்காம்புரம் பூ வெச்சு
கலகலன்னு பூவா நானும்
கலாய்ப்பு கலாட்டான்னு
கவுண்டரு அவரும்....
கொட்டாயி போகறச்ச
கொசுவம் வெச்சு சேலைகட்டி
கொய்யா, கடலை வாங்கியாயி
கொரிக்கத்தான் கொடுத்தாரே!..
பவுனு பவுன்னுன்னு
பாசத்த பொழிஞ்சாரே
பவுனெல்லாம் கழத்துவாருன்னா
பாவிமக கனவுகண்டேன்
சம்பளத்த வாங்கியாந்து
சக்களத்திக்கு தந்தாரே
சரக்குக்கே பாதிபோனா
சம்சாரம் வெளங்கிடுமா?
சாதகம் நாள் பாத்து
சமஞ்ச புள்ள அழகப்பாத்து
சாதிசனம் கூடி நீங்க
சகதியிலா தள்ளுனீக?
வெவரமில்லா வயசுப்புள்ள
வெட்கத்த வெலபேசி
வெறகுகட்ட வாழ்க்கைக்கு
வெற்றி வாக சூடுனீக?
வேதனைய ஒதுக்கிபுட்டேன்
வேற வேலை பாத்துகிட்டேன்
சோம்பேறிபய வீட்டுவாச
சோலிபாக்க போகமாட்டேன்
எப்படி இருந்த நான்
இப்படி ஆயிட்டேன்னு வருத்தமில்ல
படிப்படியா படிச்சுகிட்டேன்
அடுப்படினாலும் ருசிப்பேனுல்ல...:)))
ஆப்பக்கார ஆயா...
மரண தண்டனை ஒழிப்போம் ! - பேரறிவாளன் தாயார் (காணொளி)
4 months ago



No comments:
Post a Comment