Tuesday, August 25, 2009

ஒதுக்கப்பட்ட கல் - பாகம் 15முற்றும்

ஒதுக்கப்பட்ட கல் - பாகம் 15.


மாடிப்படியேறி சென்ற மலரை உள்ளே வர விடாமல் கதவை தாளிட்டுக்கொண்டான் ராஜ்.

" ராஜ் இதென்ன பிடிவாதம் சின்ன குழந்தைபோல்.? எவ்வளவு பெரிய கம்பெனி நிர்வாகி நீங்கள்.?"

" ஆமா . எல்லாம் எதுக்காக மலர்..?.. இந்த பணம் , பதவி எல்லாம் எதுக்காக..?.. என் சொந்த வாழ்க்கையில் நான் தோற்றுவிட்டேனே..நீ என் அன்பை புரிஞ்சுக்கிற மாதிரி நான் நடந்துக்கலையே?."

" அய்யோ இல்லை ராஜ்..உங்க மேல எந்த தப்புமில்ல.. என்னோட எண்ணமே வேறு.. சரி. இப்ப கதவை திறங்க முதலில்.."

அவள் மீண்டும் மீண்டும் வற்புறுத்தியதால் கதவை திறந்தான்..

இருவரும் மெளனமாக இருந்தனர்..சிறிது நேரம்...

" என்னை தயவுசெய்து கட்டாயப்படுத்தாதீங்க , செத்துருவேன்னு மிரட்டாதீங்க.. நாம நிதானமா பேச வேண்டிய விஷயம் இது ..ஒத்திபோடலாம்.. சரி இப்ப வாங்க கீழே போகலாம்.."

" அப்ப என்னையும் கட்டாயப்படுத்தவோ என் சாவை தடுக்கவோ வேண்டாம்.. அந்த உரிமையும் யாருக்குமில்லை.." எங்கோ பார்த்துக்கொண்டே கூறினான் விரக்தியாக...

சிரிப்பும் எரிச்சலும் ஒரே நேரத்தில் மலருக்கு..

" எப்படி புரிய வைக்க இவர்களுக்கு.. நான் தோற்கத்தான் செய்யணும் போல.." என எண்ணினாள்..

மீண்டும் நீண்ட மெளனம் நிலவியது..

------------------------------
-----------------------------------

2 ஆண்டுகள் கழித்து...

மாடியில் ஒரு குழந்தையுடன் ராஜும், கீழே அண்ணியார் ஒரு குழந்தையுடனும் இருக்க , வாசலில் கார் வந்து நிற்கிறது.

" வாங்க வாங்க... மலர் இதோ ரெடி ஆயிட்டா.. ஒரு 10 நிமிஷம்..உள்ளே வாங்க.."

" இரட்டைக்குழந்தைக்கு அம்மா அவள்.. எனக்கு புரியாதா அவளின் வேலைகள்,..? சரி ஐயா எப்படி இருக்கிறார்..?" நளினா..

" நீங்களே போய் பாருங்களேன் ..மாடியில்.."

கையில் குழந்தையையும் வாங்கிக் கொஞ்சிக்கொண்டே படியேறினாள்...

கோப்புகளுடன் அமர்ந்திருந்தவர் , இவள் வருகையை பார்த்ததும் எழுந்தார்..

கண்களோடு பேசிக்கொண்டே நலம் விசாரித்தனர் இருவரும் .

அதிக காதலில் , பாசத்தில் ஏதும் பேச விரும்பாமல் கொஞ்ச நேரம் மெளனமே நிலவியது..

காற்றில் பரவிய காந்த அலைகளிலேயே எண்ணங்களின் வாயிலாக இருவர் மனமும் பேசிக்கொண்டது..

" அப்ப நான் கிளம்பவா.." மனமேயில்லாமல்..

" ம்.இனி அடுத்து எப்ப..?"

" நீங்க கொஞ்சம் வெளியேயும் வரணும் .. இப்படி அடைஞ்சு கிடைக்காமல்.. மகன் ராகவ் பெரிய கம்பெனி ஆரம்பித்துள்ளான்.. அவனுக்கு உங்க அறிவுறைகள் , ஆசிகள் தரணும்.."

" எப்பவும் உண்டு.. அவன் திருமணத்துக்கு வருவேன் கட்டாயம்.. அதான் என் குடும்பத்தையே உங்கள் இருவர் வசமும் ஒப்படைத்துள்ளேனே.... நீயும் மலரும் இந்த குடும்பத்தை மட்டுமல்ல, நம் சமுதாயத்தையும் செழிக்க வைப்பது குறித்து மட்டில்லா மகிழ்ச்சி எனக்கு..." சொல்லிவிட்டு குழந்தையை வாங்கி முத்தம் ஒன்றை கொடுத்து மகிழ்ந்தார்..

" நீங்க போட்ட கோடு எல்லாம்.. நாங்க உங்க வேலையாட்கள் அவ்வளவுதான்.." என்றாள் நளினா தன்னடக்கத்தோடு..

" நான் உள்ளே வரலாமா..?" கேட்டாள் மலர்..

மலர் நுழைந்ததுமே அமைதியாய் இருந்த இடம் கலகலப்பாய் ஆனது..

" உனக்கெதுக்கம்மா அனுமதியெல்லாம்..உன் அனுமதிக்காக இந்த நாடே காத்திருக்கையில்..பத்திரிக்கை துறையே பயம் கொள்ளுது உன் பேர் சொன்னால்.." சிரித்தார்..

" எல்லாம் உங்க ஆசீர்வாதம் அண்ணா.." என அவரின் பாதம் தொட்டு வணங்கினாள்..குழந்தையையும் வாங்கிக்கொண்டு.


பின் இருவருமாய் குழந்தையை கொடுத்துவிட்டு காரில் கிளம்பி சென்றனர் சமூக சேவை செய்ய..

குடும்பமே வந்து வழியனுப்பியது மகிழ்வோடு.

விதியின் வசத்தால் சமூகத்தால் ஒதுக்கப்பட்ட கல் இன்று சமுதாயத்தின் மூலைக்கல்லானது விடாமுயற்சியால் , நல்லெண்ணத்தால்...

--------------------------------------முற்றும்------------------------------------------------

No comments: