Tuesday, August 25, 2009

ஒதுக்கப்பட்ட கல் - பாகம் - 14.

ஒதுக்கப்பட்ட கல் - பாகம் - 14.



சிறுநீரக தானம் நளினாதான் வழங்கியுள்ளாள் என தெரிந்ததும் பலவகையான கேள்விகள் அதிர்ச்சிகள்..

அவர்கள் இருவரிடையேயான உத்தமமான அன்பை கண்டு பிரமித்துபோனாள்...

வாழ்க்கையின் மேலுள்ள பிடிமானம் அதிகரித்தது...

தன் நாவலின் இறுதிக்கட்ட பேட்டியை எடுத்துக்கொண்டாள் மலர்...நளினாவின் ஒவ்வொரு வார்த்தையும் அர்த்தம் பொருந்தியனவாக அனுபவ

வார்த்தைகளாக இருந்தன...

" பாலியல் தொழில் அங்கீகரிக்கப்படவேண்டும்.. அப்படி செய்யும்போது பலவித பிரச்னைகள் குறைய வாய்ப்பிருப்பதாகவும் , கற்பழிப்பு போன்ற

சம்பவங்கள் குறையலாம் என்பதை கேட்டதும் மலருக்கு மருத்துப்பேச தோன்றியது...ஆனால் சில சந்தேகம் மட்டுமே கேட்டாள்..

மேலும் ஒரு மனைவி நினைத்தால் மட்டும் தன் துணையை இப்படியான இடங்களுக்கு செல்வதை ஒருபோதும் நிறுத்திட முடியாது..

ஆனால் குறைக்கலாம்....என்னதான் ஆணுக்கும் பெண்ணுக்கும் உணர்ச்சிகள் ஒன்று என வாதிட்டாலும், சந்தர்ப்பம் கிடைத்தாலும்

பெண்கள் இப்படி செல்வார்களா , மாட்டார்கள்தானே ?..என்றும் வாதிட்டார்..

அதிலிருந்து என்ன தெரிகிறது ஆணுக்கு இது அவசியமான ஒன்று ஆதி காலந்தொட்டே...

பல வெளிநாடுகளில் இருப்பதுபோல வெளிப்படையாக இருந்துவிட்டால் பொதுஜனங்களின் மத்தியில் பாலியியல் தொந்தரவுகள் கணிசமாக குறையும்...

பல நாடுகளில் இதில் ஈடுபடும் பெண்களே, தாதாக்களிடமிருந்து விடுதலை பெற்று சில காலம் இத்தொழிலுக்குப்பின்,

தமக்கென ஒரு வாழ்வை அமைத்துக்கொள்கின்றனர்..குழந்தை
களை உயர்கல்வி படிக்க வைக்கின்றனர் முற்றிலுமாக விடுதலை கிடைக்குது..

யாரும் இவன்/ள் பெற்றோர் ஒரு பாலியல் தொழிலாளி என மோசமான பார்வை பார்ப்பதில்லை...

அந்த நிலைமை வரணூம் இங்கும்...

....ஆனால் இங்கு எதிராக இருப்பது வருத்தத்துக்குறியது..

இப்ப பல சமூக அமைப்புகள் இதை குறித்து பல கவுன்சிலிங் நடத்தி மறுவாழ்வு தருகிறார்கள்... இருப்பினும் அது நிரந்தரமல்ல..

இத்தொழிலுக்கு யாரும் வரக்கூடாது.. ஆனால் சூழ்நிலையால் வந்தாலும் அவர்களையும் மனிதராக கருதி மனிதாபிமானத்தோடு நடத்தப்படவேண்டும்..."

இன்னும் பல விஷயங்களையும் கேட்டுக்கொண்டு விடை பெற்றவளிடம், பூங்கொத்து ஒன்றை நீட்டினான் ராகவ்..

" நன்றி " என மட்டும் எவ்வித உணர்ச்சியும் இல்லாது சொல்லிவிட்டு பெற்றுக்கொண்டாள்...

அவள் புன்னகையையே சம்மதம்னு ராகவ் தவறாக புரிந்துகொண்டான்....இன்னிக்கு எப்படியாவது அம்மாகிட்ட பேசணும் னு முடிவுசெய்தான்..

மலரோ, தன் கல்யாண நாள் இன்று , அது ராகவுக்கு தெரிந்திருக்குமோ ?..நான் தான் கொண்டாட வில்லையே...சரி அது முக்கியமில்லை..

வருங்கால முதலாளி.. அவ்வளவே என் எண்ணிவிட்டு ஆட்டோ ஒன்றை கைகாட்டி நிப்பாட்டினாள்..

தொலைபேசி அழைப்பு...

" உனக்காக இங்க, உங்க அண்ணியார் வீட்டில் எல்லோரும் காத்திருக்கோம்.. நீ எங்கம்மா இருக்க?." அம்மா

" எதுக்கும்மா.."

" என்ன கேள்வி இது.. வேலையில உன் திருமண நாள் கூட மறந்துடணுமா.. "

" எதுக்கும்மா இதெல்லாம்.. எனக்கு பிடிக்காதுன்னு உங்க எல்லாருக்கும் தெரியுமே..."

பல உறையாடலுக்கு பின் ஆட்டோவை வீடு நோக்கி திரும்ப சொன்னாள்....

உள்ளே சென்றவளுக்கு அதிர்ச்சியாக எல்லா உறவினரும் கூடி இருக்க , நடு மேசையில் பெரிய கேக் ஒன்று வைக்கப்பட்டிருந்தது..

சாதாரண சுடிதாரில் இருந்தவளை அழகான கிளிப்பச்சையில் மஞ்சள் பார்டர் போட்ட சேலை கொடுத்து கட்டி வரச்சொன்னார் அண்ணியார்...

சக்கர நாற்காலியில் அவர் கணவரும்..புன்னகையோடு..பக்கத்தில் குழந்தைகள் தட்டில் , மிட்டாய் , பூ , பழங்களோடு...

இந்த வாரம் எப்படியாவது சொல்லிடணும் தனக்கு இத்திருமண வாழ்வில் விருப்பமில்லை னு என எண்ணிக்கொண்டிருந்தவளுக்கு மேலும் அதிர்ச்சியாய்..

ஏதோ கல்யாண வீடு போல களை கட்டிக்கொண்டிருந்தது....ஒரு பக்கம் சமையலும்...

" நம்ம வீட்டுல விசேஷம் நடத்தி சொந்தங்களை அழைத்து வெகு நாளாயிற்று.. அதான் இந்த ஏற்பாடு...மேலும் கம்பெனி நிர்வாகத்தை இனி தம்பியின் பொறுப்பில்

இன்றிலிருந்து முழுவதுமாய்.." என அவர் சொல்லவும் அப்பொதுதான் கணவரை தேடினாள்...

அவரோ முக்கியமான புள்ளிகளுடன் அடுத்த அறையில் பேசிக்கொண்டிருந்தான்...இவளைப்பார்த்ததும் புன்னகையோடு அருகில் வந்தான்...

" வாழ்த்துகள்.. "

" ம்.." கண்ணாலேயே கேட்கிறாள் " இதெல்லாம் உங்க வேலைதானா..?" னு

அண்ணியார் தந்த புடவையையும் வாங்காமல் , தவிர்த்ததும் எல்லோருக்குமே ஒருமாதிரியாகிவிட்டது...

அம்மா ஒடி வந்து திட்டினார் போட்டார் மெதுவாக..

எப்படி சொல்ல என்ன வார்த்தை பேச, யாரெல்லாம் புண்படப்போகிறார்கள் என மனதில் ஒரு முன்னோட்டம் மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தாள்..

இவள் ஏதாகிலும் பிரச்னை பண்ணிடுவாளோன்னு பயந்து அப்பாவே,

" சரி அவ ரொம்ப அலுப்புல வந்திருப்பா, முதலில் கேக் வெட்டட்டும்.. விருந்தினர்கள் சாப்பிட நேரமாச்சு.. "

" ஹ். ஆமா.. நான் ஒரு அவசர வேலையாய் மறுபடி செல்லணும்.. மன்னிக்கணும் எல்லோரும்..."

ராஜுக்கு கோபம் வந்தது..

" என்ன பேசுற நீ.. நமக்காக , நம்மை ஆசிர்வாதம் பண்ண வந்திருக்காங்க.. நீ என்னன்னா..கிளம்புறேன்னு சொல்ற...?" கொஞ்சம் அதட்டலாய்...

இப்ப அவளுக்கும் எரிச்சல் வர ஆரம்பித்தது...


" எனக்கே தெரியாம என்னை எதுவும் கேட்காம ஏன் இப்படி செய்தீங்க.. எனக்கு இந்த திருமண வாழ்க்கையே பிடிக்கல.." னு சொல்லிட்டு அழ ஆரம்பித்தாள்

எல்லோரையுமே வீணா காயப்படுத்துறோமேன்னு தெரிந்து...

எல்லோருமே அதிர்ச்சி அடைந்தார்கள்...

" எனக்கு ராஜ் மேல எந்த கோபமுமில்ல.. ஆனா நான் சமுதாயத்துக்காக செய்ய வேண்டிய காரியம் பல இருக்கு... சிலருக்கு மட்டுமே அந்த வரம் இருக்கு.. அதில் நானுமொருத்தி.."

" சும்மா அதிகப்பிரசங்கியாட்டம் பேசாதே.." அம்மா...கைபிடித்து அழுத்தினாள்...

" அய்யோ அம்மா. உனக்கு ஒண்ணும் புரியாது.. உனக்கு வீடு மட்டும்தான் உலகம்.. எனக்கு உலகம்தான் வீடு..".. கையை விடுவித்துக்கொண்டு..

" சரி இப்ப என்னதான்மா சொல்ற.." அன்போடு கேட்கிறார், அண்ணியரின் கணவர்...

" அண்ணா, ராஜுக்கு வேறு திருமணம் செய்யுங்க..." னு சொல்லி அவர் நாற்காலி பக்கம் முட்டிக்கால் போட்டு கெஞ்சுபவள்போல்.




இதை கேட்ட ராஜ் இடி விழுந்தவன் போல, அப்படியே நெற்றியில் கைவைத்துக்கொண்டு

" என்னை அவமானப்படுத்தும் எண்ணம்தானே மலர்..? "னு சொல்லிவிட்டு ,


மாடிப்படி ஏறி உள்ளே சென்றான்.., அவள் அக்கா, " ராஜ், ராஜ்..இருப்பா.. " என்று கத்திக்கொண்டே

பின்னாலேயே...

" ஏம்மா நல்லா யோசித்துதான் பேசுறியா...?.. அதை இப்ப பேசணுமா என்ன..?" அப்பா..

" ஆமாப்பா, வேற வழியில்லை.. எத்தனை நாள் மனதுக்குள்ளேயே வைத்து புழுங்க..?ராஜ் ரொம்ப நல்லவர்... அவர் பொறுப்பான வேலைகள் நிறைய காத்திருக்கு... அவருக்கு அனுசரணையா, அவரை அன்பா பாத்துக்குற மாதிரி

ஒரு பெண் இருந்தா போதும்... ஆனா என்னோட எண்ணங்கள்லாம் நம்ம சமுதாயத்தின் மீதே இருக்கு..இதுக்கு என்னாலான உதவிகளை செய்யணும்...என் ஆயுசுக்குள்.."

" ஏம்மா எது வேணுமானாலும் தாராளமா நீ இப்படியே செய்யலாமே.. நான் உதவுறேன் உனக்கு.." அண்ணியாரின் கணவர்..

" இல்லண்ணா, ஒரு சாதாராண பெண்ணாய் , குழந்தை குடும்பம்னு என் வாழ்க்கை இருக்காது.. நான் முழுவதுமாய் சேவையில் ஈடுபடணும்னா , எனக்கு திருமண வாழ்க்கை ஒத்து வராது..

இதை கேட்டுகொண்டே வெளியே கோபமாய் வந்த ராஜ் மாடியிலேயே நின்று கத்தினான்...

" நீ இல்லாட்டி நான் செத்துருவேன் தெரிஞ்சுக்கோ... "

எல்லோரும் மேலே பார்க்க , மலர் கண்ணீரை துடைத்துக்கொண்டு நிதானமாக படியேறினாள்....ஒரு குழந்தையை சமாதானப்படுத்தும் விதமாய்.


அடுத்த தொடரில் முடியும்...

No comments: