Wednesday, November 11, 2009

காவ் சாம் லாய் யாட் - 300 சிகர மலைகள்...












தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலிருந்து சுமார் 400 கிமீ தொலைவில் உள்ளது காவ் சாம் லாய் யோட் ( 300 சிகரம் கொண்ட மலை ) .கடற்கரையை ஒட்டி அமைந்திருப்பதே இந்த இயற்கை பூங்காவுக்கான விசேச அழகும்.

மலைகளில்
காணப்படும் சுண்ணாம்புகல் பாறைகளால் கடற்கரையே வெண்மையாக காட்சியளிக்குது.
குகைகளுக்குள்ளே இந்த சுண்ணாம்புக்கல் வடிந்து அழகிய சிற்பமாக வடிவெடுத்து பார்ப்பவரை கொள்ளைகொள்ளச்செய்கிறது.

இங்கேயே சதுப்பு நிலமும், அலையாத்திக்காடுகளும் இருந்தாலும் முக்கியமானது தம் ப்ரயா நக்கோன் ( Tham Phraya Nahon) என்கிற மலைக்குகைதான்.. சுமார் 1.5 கிமீ செங்குத்தான மலை மீது ஏறி இறங்கி மலையின் அடுத்த பக்கம் செல்லலாம் அல்லது நடக்க , ஏற விரும்பாதவர்கள் , படகில் அடுத்த கறைக்கு செல்லலாம்..

மலைமீது
ஏற்பவர்கள் மலை உச்சியில் கடல் சூழ்ந்த இடங்களையும் , குட்டி குட்டியாய் தெரியும் படகுகளையும் கண்டு
வியக்கலாம்..
ஆனாலும்
கொஞ்சம் ஆபத்தானது மலையேற்றம்..



கரணம்
தப்பினால் மரணம் என்பதுபோல , கொஞ்சம் பயத்தில் ஆடினாலும் விழ வாய்ப்புள்ளது.


இந்த
சதுப்பு நிலக்காடுகளை தேடி பல பறவைகள் குடிபெயர்ந்து சரணாலயம் போல் ஆனது..கிட்டத்தட்ட 100 சதுர கிமீ.அளவு கொண்டது இந்த பூங்கா..
மலையின் அந்தப்பக்கம் அடைந்ததும் மீண்டும் செங்குத்தான பயணம் சுமார் 500 மீட்டர்..

முதல்
மலையிலாவது சிமெண்டால் ஆன பாதையும் கம்பியும் போட்டு ஏற நடக்க வசதியாக இருக்கும்.
ஆனால் இந்தப்பாதை இய்றகையாகவே கற்களால் அமைக்கப்பட்டுள்ளது..

முதல்
சிலபடிகளில் கால் வைத்ததுமே மூலிகைகளின் வாசனை நாசியை துளைக்கின்றது..
கிட்டத்தட்ட நார்த்தாங்காய் இலையின் மணம் . அல்லது லெமன் கிராஸ் எனப்படும் செடியின் மணம்.. , வெகு சுகமாக இருக்குது..

தினம் பெய்த மழையில் படிகளில் உள்ள மண் ஈரம் பிடித்து பிசுபிசுப்பாக வழுக்காகவும் இருந்தது.
நல்ல காலணி அணிந்திருந்தால் நடப்பதும் ஏறுவதும் எளிது. அல்லது காலை பதம் பார்க்கும் கற்கள்..

கிட்டத்தட்ட டார்சான் வாழ்ந்த காடுகள் போல செடிகளும் கொடிகளும் சுர்றிலும் சூழ அதை விலக்கி நடக்கணும்.. சின சின்ன ஒளிக்கீற்றுகள் அம்மர இடுக்கிலிருந்து எட்டிப்பார்ப்பதும் ,, பறவை, பூச்சிகளின் சத்தங்களும் , நலம் விசாரிப்பது போன்றதொரு அழகு..

பாதி தூரம் ஏறியதுமே தாகம் எடுக்கிறது.. மேலே சென்றவர் கீழே இறங்கிவர நம் ஆயாசத்தை பார்த்து அவர்களாகவே தண்ணீர் வேணுமா என கேட்க , மறுக்கமுடியவில்லைதான். இறுதியாக உட்கார்ந்து உட்கார்ந்து ஒருவழியாக குகைகளை சென்றடைந்ததும் , பிரமிப்பூட்டும் அந்த குகையும் அதன் உச்சியில் இருந்து விழும் ஒளியும், நடந்து வந்த அலுப்பை மறக்க செய்கிறது. காவலர் ஒருவர் தண்ணீர் தருகிறார் அனைவருக்கும் சிறு தொகை பராமரிப்புக்காய் பெற்றுக்கொண்டு...

வெளிநாட்டினர் கைக்குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு சிறுஅவர் சிறுமிகளை நடத்திக்கொண்டு வெகு லாவகமாய், ஆர்வமாய் செல்வதை பார்த்தாலே நமக்கும் ஆர்வம் தொற்றிக்கொள்ளுது. குகையின் நடுவில் புத்தர் கோவில் உள்ளது.. அதனை சுற்றி வித்யாசமான பெரிய பெரிய பாறைகளும்..


தாய்லாந்து வந்தால் பார்க்க வேண்டிய குகைக்கோவில்.

No comments: