Monday, February 18, 2008

வலி நிவாரணி...
===============

எண்ணாது விண்ணப்பங்கள் போட்டு
எதிர்பார்த்து காத்துகிடந்தபோது
எதிர்பாராவிதமாய் வருகிறது உனது
எண்ணங்கள் மடலில் வாழ்த்துக்களாய்...


வேலை கிடைத்து பின் ,
வேதனையோடு உறவுகள் , நட்புகள் விட்டு
வேதாளக்கூட்டத்தில் சிக்கி ,
வேரருந்த போதிலே நலம் வருடியது உன்
வேடமில்லாத தொலைபேசி அழைப்பு வசந்தமாய்.......


இயந்திர வாழ்க்கையில்
இடைவெளியில்லாது அசதிமட்டுமே
இருந்த நிலையில் நித்திரை எனும் திரையில்,
இனிய நினைவுகளாய் வருடுகிறாய் மயிலிராகாய்....


விடுமுறை கிடைத்த நிமிடம் முதல்,
விரைவாய் ஊர் வந்து உனை பார்க்கும் வரை,
விடுதியில் பட்ட கஷ்டமெல்லாம் ஓடி மறைகிறது ,
விளையாட்டாய் தண்ணீர் ஊற்றும் உன் புன்னகையில்
விஷமாய் ஏறுது காதல் காட்டாற்று வெள்ளமாய்.......


அனைத்துமாய் மனதில் இருந்துவிட்டு ,
அன்பரே , வலிநிவாரணி மட்டுமே நான் ,
அன்னைபோல் சுகமான வலி தருவாள் ஒருத்தியென ,
அகப்படாமல் ,என் காதலை தடுக்கிறாயே,
அடியே வலிக்கவில்லையா உனக்கு நடிப்பதற்கு.....?
அதிகாரமாய் வலி தரவா நீ உண்மை சொல்வதற்கு..?