Friday, August 29, 2008

ஆண்மகனுக்கோர் கவிதை

ரிமோட் எடுக்கும் உன் பிஞ்சு கைகளை
பிடித்து இழுத்து முத்தமிடுகிறேன்..

குளித்து முடித்து உடை உடுத்த ஒடி
ஒளிகின்ற உன் பாதம் எடுத்து கிச்சுமூட்டுகிறேன்..

சமையலறையில் அழிச்சாட்டியம் பண்ணும் உன்னை
இருக அணைத்தே பல்லைக்கடித்து கொஞ்சுகிறேன்..

அலுக்காமல் சேட்டை பண்ணி சலிக்காமல்
தண்டனையும் அன்பாலே பெறுகிறான் குழந்தை..

நான் செய்தால் இத்தண்டனை எனக்குண்டா என்கிறாய்..
தண்டனையில்தானே வந்ததிந்த பெருஞ்சேட்டை என்றறிந்தும்..

4 comments:

ரிதன்யா said...

மனிதர் உணர்ந்து கொள்ள
இது மனிதக்காதல் அல்ல
குழந்தை போல புனிதமானது....

டேனியே
தாலாட்டும் சாமியே
நீ தானெ தெரியுமா.

Yaani said...

nalla kavithai

dinagar
http://dhivyarajashruthi.art.officelive.com

Yaani said...

nalla kavithai

dinagar
http://dhivyarajashruthi.art.officelive.com

N Suresh said...

வார்த்தைகளால் சம்பவங்களை கண்முன்னே கொண்டு வருகிறீர்கள்.

நல்வாழ்த்துக்கள்
அன்புடன் என் சுரேஷ்