Friday, August 29, 2008

ஆண்மகனுக்கோர் கவிதை...

அதிசயமாய் தானிருக்குது இப்போதெல்லாம்
நீ உன் பைக்கில் என்னை அழைத்துச்சென்று
கல்லூரியில் விடுவதும்,பின்பு காத்திருந்து அழைத்து வருவதும்..

பெட்ரோலுக்கு காசு தருகிறேன் என்றா?.. இருக்காதே...???

ஆனால் ஒன்றுதான் புரியவில்லை ,
அடுத்த தெரு முனைக்கு சென்றதும்
தினமும் மக்கர் பண்ணுதே உன் பைக்கும் உன் மனம் போல..???

பின்பு நடுரோட்டில் வீரன் போல சரி செய்வதும்,
முடித்ததும் கண்ணாடிக்கு முத்தம் கொடுப்பதும்...
நான் வரவில்லையடா அண்ணா நாளையிலிருந்து ...!!!

No comments: