Friday, August 29, 2008

ஆண்மகனுக்கோர் கவிதை...

இன்றைய கவி:


இரவு கண்டு பயப்பட்டேன்..
உறங்காதிருப்பேன் அருகில் என்றாய்.

சைக்கிள் கற்க மாட்டேன் என்றேன்,
உபயோகம் சொல்லி கற்றும்தந்தாய்

அறிவியல் பாடம் பிடிக்காதென்றேன்
அறிவாளி என்தங்கை என சொல்லிதந்தாய்..

தண்ணீரென்றாலே பயந்தோடுவேன்,
தள்ளியே விட்டு நீச்சல் பழக்கினாய்..

எல்லாம் கற்றுத் தந்தாய், தந்தையாய்,
கணவரை, குழந்தையை சமாளிக்க கற்கவில்லையே ணா????

No comments: