Friday, August 29, 2008

ஆண்மகனுக்கோர் கவிதை...

இனி அண்ணா என்ற கோணத்தில்....

அது ஏன் அண்ணா என் தோழிகள்

நம் வீட்டுக்கு வரும்போது மட்டும்
உன் சாமான்கள் தொலைவதும்,
அதை அவர்கள் அமர்ந்துள்ள
அறைகளில் மட்டும் தேடுவதும்.
எப்போதும் கைபேசிக்கு வரும் அழைப்புகள்
வீட்டு தொலைபேசிக்கு வருவதும்
தொலைக்காட்சி அலறுவதும்,
ஒழுங்காய் உடற்பயிற்சி செய்பவன் போல
அதற்கான உபகரணங்களை எடுத்து செல்வதும்
நீ என்னை என்னடா, என்னம்மா

என செல்லமாக அழைப்பதும்...????

தாங்கத்தான் முடிவதில்லை...:-))

No comments: