Friday, August 29, 2008

ஆண்மகனுக்கோர் கவிதை...

பல வேலை பல சுமைகளோடு
பள்ளி செல்லும் குழந்தை அனுப்பி
பகட்டாய் உடுத்தி அலுவல் வந்து
படபடப்புடன் வேலையும் பார்த்து
பத்திரமாய் வாகனம் ஓட்டி
பசியோடு போக்குவரத்தில் சிக்கி
பதில்பேச முடியாது தொலைபேசி செயலிழக்க‌‌,
பயத்தில் நேரமானதால் கற்பனை கொண்டு ,

பட்டம்பூச்சியின் பரிதவிப்புடன் திட்டுகிறாய் நீ.
பரபரப்பிலும் உன் பாசத்தைமட்டும் காண்கிறேன் நான்.

No comments: