Friday, August 29, 2008

ஆண்மகனுக்கோர் கவிதை...

இனி அண்ணா என்ற கோணத்தில்....

வருகிற மாப்பிள்ளையெல்லாம் பிடிக்கவில்லை
என் நீ தட்டிக்கழிக்கிறாயே அண்ணா..

சந்தேகமாயிருக்கு, உன் நண்பரான,
சோடாபுட்டியின் பார்வையும்,
நம் வீட்டு ஜன்னலை அரை மணிநேரம்
கடக்கும் யானைக்குட்டி அவனும்,
தெருவில் நின்றே உன்னை எட்டிப்பார்க்கும்
ஒட்டகச்சிவிங்கியும்
எனக்கு மாப்பிள்ளையாய் முடிவு செய்திட்டாயோ என.

தொடர்ச்சியாய் என்னால் கொடுமைப்படுத்த முடியாதென்றும்,
உன் தங்கை உன்னைப்போல் பொறுமைசாலி இல்லையெனவும்
சொல்லிவை அவர்களிடம்...

No comments: