Friday, August 29, 2008

ஆண்மகனுக்கோர் கவிதை...

அதிக காரமாய் இருந்தாலும்
அதிராமல் சாப்பிட்டு
அளவோடு எடுத்துக்கொள்ள
அறிவுறைத்துவிட்டு
அருகேயே நின்ற பொழுதும் உரைக்கவில்லை

என் உறைப்புதாங்காமல்
தும்மும் போது
தலையில் தட்டி
தண்ணீர் கொடுக்கவே
நின்றாய் எனும்போது
கண்ணீர் வந்தது
உறைத்ததால் அல்ல, நீ உரைக்காத( காத)லால்

1 comment:

ரிதன்யா said...

ஆக மொத்தம்
அத்தான் மண்டைல கொட்டாம இருந்தாரே.