Tuesday, August 25, 2009

ஒதுக்கப்பட்ட கல் - பாகம் 12.



அலுவலகத்தில் நடந்த சம்பவத்தை நினைத்து பலவாறு குழம்பிப்போனாள் மலர்.. அருகில் மட்டும் ராஜ் இருந்திருந்தால்

கட்டிப்பிடித்து அழுதிருப்பாள்... சுதிர் இருந்தாலாவது பொங்கித்தள்ளியிருக்கலாம் கோபத்தை குமுறலாய்...

ஆட்டோ பிடித்து தன் வீட்டுக்கே முதலில் சென்றாள்... உள்ளே நுழைந்தவளை அம்மாவின் கேள்வி சரமாரியாய்

வந்து விழுந்தன... எந்த ஒரு வினாவுக்கும் பதில் சொல்லாது மும்முரமாய் எதையோ தேடிக்கொண்டிருந்தவளை பார்த்து

ஆறுதலாய் கை பிடித்தார் அம்மா..அப்பாவும் பின்னால்..

" என்னம்மா நான் பாட்டுக்கு கேட்டுகிட்டே இருக்கேன்.. என்னாச்சு உனக்கு..ஏதாவது பிரச்னையா?"

என்ன சொல்ல அம்மாவிடம்.. கூட கொஞ்சம் பயம் காட்டுவதாய்த்தான் அமையும்..எதையும் காட்டிக்கொள்ளாது,

" அம்மா , எனக்கு தட்டுல சாதம் போட்டுட்டு வா.. நீயே ஊட்டி விடும்மா.. எனக்கு உடனே கிளம்பணும், அண்ணி வீட்டுக்கு..

குழந்தைகள் காத்திருப்பாங்க..அண்ணாவுக்கு கிட்னி டிரான்ஸ்பிளாண்ட் விஷயமா ஒரு தகவல் உள்ள கோப்பை தேடுறேன்.."

விருப்பமே இல்லாமல் அம்மாவின் மன திருப்திக்காய் நன்றாக சாப்பிடுவதுபோல் பாவனை காட்டிவிட்டு மீண்டும் ஆட்டோவில் ஓடினாள்..


"என்ன பெண் இவள்.?. உதவின்னா ஓடி ஓடி செய்யுறா..என் வயிற்றில்தான் பிறந்தாளா? " னு ஆச்சர்யமா அம்மா வாசலையே பார்த்துக்கொண்டிருந்தார்..
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
காலையில் எழுந்தவளுக்கு போன்... நளினாவிடமிருந்து..

9 மணிக்கு மகன் வருவதாகவும் அப்படியே நேராக ஏர்போர்ட்டிலிருந்தே இடம் பார்க்க செல்வதாகவும் சொன்னதோடு, மலரையும் முடிந்தால் வரச்சொன்னாள்..

சரி 1 மணி நேர வேலைதான்.. அப்படியே இந்த கட்டுரையையும் சீக்கிரமாக முடித்து முதலாளியிடம் கொடுத்துவிட்டு வேறு வேலை தேட வேண்டும்.

மலர் ஏர்போர்ட் சென்று சேரவும் ராகவ்- நளினாவின் மகன் வரவும் சரியாக இருந்தது...

ராகவுக்கு பாத்திருக்கும் பெண்ணில் ஒருத்தியை விமான நிலையத்துக்கே அழைத்து வருவதாக சொல்லியிருந்தார் நளினா..

ஆனால் அது முடியாமல் போனது...அன்று..

சம்பிராதயமாக மலரையும் அவள் வேலை பற்றியும் மட்டும் சொல்லி அறிமுகப்படுத்தினாள் நளினா..

ராகவுக்கோ இவள்தான் தனக்கு அன்னை பார்த்திருக்கும் பெண் நன் நினைத்து உள்ளூர ஒரே மகிழ்ச்சி...

அசடு வழிகிறான்...கை குலுக்கிக்கொண்டே...

இவை ஏதும் கண்டுகொள்ளாமல் மலர், அவனின் புது புராஜக்ட் பற்றியும், அவனுக்கு தேவையான வேலையாட்கள், பற்றியுமே

குறிப்பெடுக்கிறாள்... அப்போதுதான் தான் அவன் சொல்ல சொல்ல , அந்த வேலைக்கு தானே மிக பொருத்தமாக இருப்பதாய் உணர்ந்தாலும் நாகரீகம் கருதி அதை சொல்லாமல் தவிர்த்தாள்.

ஆனால் மேம்போக்காக தற்போதுள்ள வேலையை விடப்போவதாக சொல்ல ஏதோ லாட்டரியில் கோடி விழுந்ததைப்போல் மகிழ்ச்சியடைகிறான் ராகவ்.

" நீங்க உடனே வந்து சேர்ந்துடுங்க..ஐ அம் வெரி லக்கி...டுடே..."

" இல்லை எனக்கு முடித்துக்கொடுக்க கொஞ்சம் பாக்கி வேலையிருக்கு அலுவலில் இன்னும்..."

அம்மாவிடம் எப்படி சொல்ல தனக்கு அந்த பெண்ணை பிடித்திருக்கு என்று, அம்மாவே கேட்கட்டும் ,வந்த வேலையை முதலில் பார்ப்போம் என அவனும் தள்ளிப்போட்டான்..

அதற்குள் நளினாவுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வர, அவள் பேசிக்கொண்டே கலவரமடைகிறாள்...

என்ன ஏதுன்னு சொல்லாமல், தான் உடனே கிளம்புவதாயும், அவர்கள் இருவருமே அந்த இடத்தை பார்த்துவிட்டு முடிவெடுக்க சொல்லிவிட்டு விரைகிறாள்...

அந்த தொழிற்சாலைக்கான இடம் செல்லும்வரை ஏதும் பேசிக்கொள்ளவில்லை.. சேர்ந்ததும்தான் தெரிகிறது தன் அண்ணியாரின் தோட்டம் அருகில் என்று..

எதுவும் காண்பித்துக்கொள்ளவில்லை...

தான் சகஜமாக பேசுவதுபோல ராகவ் பேசாதது கண்டு கொஞ்சம் குழம்பினாள்.. சரி ஒருவேளை பயண அலுப்பாக இருக்கும் என நினைத்தாள்..

எல்லாத்துக்கும் ஒரு புன்சிரிப்பை மட்டுமே உதிர்த்தான்..அதிலேயே அவனின் அன்பான வளர்ப்பும் குணமும் நிறைவாகத்தெரிந்தது..

------------------------------------------------------------------

அலுவலகத்துக்குள் வேகமாக நுழைந்தவளை கண்டு எல்லோருமே வித்யாசமாய் பார்ப்பது கண்டு ஆச்சர்யப்பட்டாள்.

கண்ணாலே என்னாச்சு என கேட்டாள் ...

முருகனை அறைக்குள் வரச்சொன்னாள்.விசாரித்தாள்.

"ஐயா சொன்னாங்க.. ஏதோ பிரச்னை .அதனால நீங்க வேலை விட்டு நின்னுட்டீங்கன்னு.." தயக்கத்தோடு சொன்னான்.

அவனை அனுப்பிவிட்டு நேராக முதலாளி அறைக்குள் சென்றாள்.

அவர் பயத்தில் எழுந்து நின்றார்.. சைகையால் உட்கார சொன்னாள்..

" எனக்கும் பொறுப்பு இருக்கு.. அதை முடிச்சு கொடுத்துட்டுதான் நான் வேலை விட்டு நிப்பேன்.. அதுக்குள்ள இஷ்டப்படி

பொய் பிரச்சாரம் பண்ண வேண்டாம் ..புரியுதா?.." னு சொல்லிட்டு கிளம்ப,

" சரி.... மேடம்.. நீங்க என்ன சொன்னாலும் சரிதான்..." னு ரொம்ப பவ்யமா பேசினார் முதலாளி.

" என்ன கிண்டலா..?" இடுப்பில் கை வைத்து அதட்டினாள்..

" அய்யோ ..இல்லீங்க.. " நிஜமாகவே பயந்தார்...

" ஒழுங்கா முன்பு போல மலர் னு கூப்பிட்டா போதும் சரியா..?" எச்சரிப்போடு சொல்லி சென்றாள்.

-------------------------------------------------------------------------------------------------------

மருத்துவமனைக்கு சென்றதும் ராஜ் ஓடி வந்தார்..

கைகளை பிடித்துக்கொண்டே மகிழ்ச்சியுடன்,

" மலர், அத்தானுக்கு மாற்று கிட்னிக்கு ஆள் கிடைச்சாச்சு... அனேகமா எல்லா பரிசோதனையும் பண்ணியாச்சு.."

" அப்படியா?.. யாரது ராஜ்.?" மகிழ்வோடு கைப்பையை கிழேவைத்துக்கொண்டே, அவன் கையையும் விலக்கியவள்,

" அதுதான் தெரியலை மலர்.. அந்த பேஷண்ட் தன்னைப்பற்றி எந்த விபரமும் வெளியில் தெரியக்கூடாதுன்னு சொல்லிருக்காங்களாம்..."

" இதென்ன புதுசா இருக்கு..?.. 5 லட்சம் பணத்துக்கு சம்மதித்தாங்களா , இல்ல, ?/"

" பணம் பற்றியெல்லாம் பேஷண்ட் அலட்டிக்கொள்ளவில்லையாம்... ஐயா உயிர் பிழைத்தால் போதும்னு சொல்லிருக்காங்களாம்.."

": .அண்ணாவின் தொழிற்சாலையில் வேலை செய்பவரா?"

" தெரியலையேம்மா.." அண்ணியிடமிருந்து பதில்...

" நான் வணங்குற அந்த வெங்கடாசலபதி கை விடமாட்டார்னு எனக்கு தெரியும்மா.." .. பிடிக்காவிட்டாலும் ஒண்ணும் சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டினாள்

" சரி நீ ரொம்ப கேள்வி கேட்காதே. பதிலில்லை. நாம இப்ப செய்ய வேண்டியவேலைகள் ஏராளம் இருக்கு..அத்தானின் அலுவலில் கையெழுத்திடவேண்டிய முக்கிய கோப்புகளை

பத்திரமாக எடுத்து வரணும்... நான் செல்கிறேன்.. நீ வேணா சென்று மருத்துவரை பார்..அக்கா பக்கத்து தோட்டம் விற்கிறோம் அது விஷயமாகவும்.. ."

" ஓஹ் அந்த தோட்டமா..." சொல்ல வாயெடுத்தவள் அடக்கிக்கொண்டாள்..

" என்ன..?"

" ஒண்ணுமில்ல நீங்க கிளம்புங்க.."

" கடவுளே எல்லா நல்லபடியா முடிந்தால் திருப்பதிக்கு வந்து தங்கத்தால் எல்லாம் செய்யுறேன் " னு உணர்ச்சி வசப்பட்டு அண்ணி வேண்ட,

எப்பத்தான் இவங்கெல்லாம் திருந்துவாங்களோ ன்னு ஒரு பெருமூச்சு விட்டு மருத்துவரை பார்க்க சென்றாள் மலர்..

நாளையே அறுவை சிகிச்சைக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், முக்கியமான விலையுயர்ந்த மருந்துகள் வாங்கி வரும்படியும் பணிக்க,

கெஞ்சிக்கேட்டாள், அந்த கிட்னி தானம் வழங்குபவரை பார்த்து நன்றி சொல்ல..ஒரு வாய்ப்பு தருமாறு...

இது எங்க தொழிலுக்கே செய்யும் துரோகம் மாதிரி.. தயவுசெய்து இப்ப கேட்காதீங்க...

எல்லாம் நல்ல படியா முடியட்டும் பின்னால் நான் அவரிடம் பேசி பார்க்கிறேன் என்றார் மருத்துவர்...

யாராயிருக்கும் னு மனசுக்குள் ஆயிரம் குடைசல்.. நல்ல மனிதர் பல நல்ல மனிதர்களை சம்பாதித்து வைத்திருப்பதில் என்ன ஆச்சர்யம் இருக்கமுடியும்..?

என எண்ணிவிட்டு யோசனையிலேயே வந்தவள் எதிரில் வந்தவர்மேல் முட்ட, திரும்பிப்பர்த்தவள்,

" எங்கேயோ பார்த்திருக்கோமே...முன்பு...?" என எண்ணுவதற்குள் ஆள் கடந்து சென்று லிஃப்டுக்குள் நுழைய, பின்தொடர்ந்து ஒடி சென்றவள்

மூடிய லிஃப்ட், முட்டி நின்றாள்...வெகுவாய் குழம்பி...


-------------------------------------------------தொடரும்--------------------------------------------------------------------

No comments: