Monday, December 3, 2007

சர்வதேச ஊனமுற்றோர் தினம் .
----------------------------------------
ஒவ்வொரு நாளும் வியக்கிறேன்

உன் ஊனமுற்ற கால்களால்
தவழ்ந்து நீ நடப்பதை இங்கே

உடம்பில் ஊனமானாலும்
கவலையின்றிதைரியமாக
உன் பணியை செய்யும் நீ எங்கே??
அனைத்துமிருந்தும் குறைபடும் நான் எங்கே?

ஊனமுற்றவர்க்கு இரக்கம் மட்டும் படாமல்
அவர்தம் தேவையை சரிசெய்வதும் எம்பங்கே!!

எதுலும் குறை குற்றம் பார்ப்போர் இவரிடம்
நமக்கிடைத்த ஆசீர்வாதத்தை உணர முடியும் அங்கே

ஊனம் என்பது உடம்பில் மட்டும் இல்லை
மனதில் இருந்தால் அதுதான் பெரும் தொல்லை
பெரியோர் அனுபவத்தில் தந்திட்ட ஒவ்வொரு சொல்லை
மனிதநேயம் கொண்டு வாழும் வாழ்க்கையே இன்பத்தின் எல்லை!

2 comments:

rahini said...

உண்மையின் வடிவம் உங்கள் கவிதை பாராட்டுக்கள்.

N Suresh said...

நல்ல கவிதை

பாராட்டுகள்
என் சுரேஷ்