Friday, September 21, 2007









தாய்மை


========



பள்ளி திரும்பிய மகனிடம் கேட்டேன்,
இன்று எப்படி என்று?


not bad என்றான்.
விளயாட்டு?



interesting என்றான்.
படிப்பு ?



so boring என்றான்.
வந்தது எரிச்சல் அடக்கிக் கொண்டேன்.



நண்பர் ?.
oh shit என்றான்.



விட்டேன் ஒர் அரை.
அம்மா என்றான்.



அணைத்துக் கொண்டேன் ,
மகனயும், மொழியையும் சேர்த்து ,
தாயல்லவா அவள்.

2 comments:

கண்ணண் said...

ம்ம்ம்ம்ம்
அருமை!

Unknown said...

தாய்த்தமிழை அமைத்துக்கொள்ளும் ஒரு தாயின் தமிழே வளர்க..